சினிமா செய்திகள்
வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப
சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை
பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்
அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
1987.எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச்
ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.இவர் வ
புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந
அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படமாக்கப்பட்ட கார் காட்சி ஒன்றின் வீட
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இ
சிவப்பு நிற உடையணிந்து  முன்னழகு தெரிய புகைப்படம் வெளியிட்டார் ரைசா வில்சன்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
சல்மான் கான் மற்றும் முருகதாஸ் இணையும் சிக்கந்தர் படம்
முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 40
அரவிந்த்சாமி அவர்களின் 54 வது பிறந்தநாள் இன்று.
நடிகன் என்ற ஸ்டார் அந்தஸ்து வந்த பின்னர், எனக்கு இந்த அந்தஸ்து எல்லாம் தேவையற்றது என்று விலகி செல்ல முடியுமா? சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து என்பது அரசியல
மார்பின் மீது ஐஸ்கிரீம் வைத்துக் கொண்டு தமன்னா
அயன் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று கொடுத்ததை அடுத்து தமன்னாவும் அதிக வரவேற்பை பெற துவங்கினார். இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தமன்னா நடித்து வெளிவந்த
Ads
 ·   ·  522 news
  •  ·  0 friends
  • 1 followers

கைத்தொழில் துறையை மீளக் கட்டியெழுப்ப சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளருக்கு சலுகைக் கடன் திட்டம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன

வீழ்ச்சியடைந்துள்ள கைத்தொழில் துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினருக்கும் தொழில் முயற்சியாலர்களுக்கும் சலுகைக் கடன்களை வழங்குவதற்காக 2,000 கோடி ரூபாவில் நான்கு கடன் வழங்கும் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

மிகக் குறைந்த வட்டி வீதத்துடன் இலகுவான நிபந்தனையின் கீழ், இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு ஆகியன இணைந்து நாட்டின் 16 முன்னணி வங்கிகள் ஊடாக இந்த நான்கு கடன் திட்டங்களில் இரண்டை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற சர்வதேச கைத்தொழில் கண்காட்சியுடனான மாநாட்டில், உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

200 ஊழியர்களுக்கு குறைவாக தொழில் புரியும் உற்பத்திக் கைத்தொழில் துறை மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் முதலாவது கடன் திட்டத்தில் ஆகக் குறைந்தது 150 இலட்சம் ரூபாவை கடனாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 7வீத வட்டி அறவிடப்படவுள்ளது

அத்துடன் பத்து வருடங்களில் கடனை மீள அறவிட எதிர்பார்க்கப்படுவதுடன் அதனை வழங்க ஆரம்பிப்பதற்காக ஒரு வருட கால அவகாசமும் வழங்கப்படவுள்ளது. இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் பிரிவில் 16 வங்கிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வங்கிக்கும் 750 மில்லியன் ரூபா பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவேளை, தற்போது இலங்கை கடன் தகவல்கள் பணியகத்தில் தடை செய்யப்பட்ட பட்டியலில் பெயர்களைக் கொண்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கும் குறைந்தபட்சம் 50 இலட்சம் ரூபா கடனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான வட்டி 8 வீதமாகும். அந்தக் கடனை மீள செலுத்துவதற்காக 05 வருடங்கள் வழங்கப்படுவதுடன் கடனை மீள செலுத்துவதை ஆரம்பிக்க மூன்று வருட கால அவகாசமும் வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக கைத்தொழில் அமைச்சின் நேரடி நிதியத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி வழங்குவதற்கான திட்டம் smile மற்றும் e pend ஆகிய இரண்டு முறைமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாத்து ஆரம்பிக்கப்படும்

இந்தத் திட்டங்களுக்கு 30 மில்லியன் ரூபா இதன் மூலம் வழங்கப்படுகிறது. அதற்காக 6.5வீத வட்டி அறுவிடப்படுவதுடன் கடனை மீள செலுத்தும் காலம் 10 ஆண்டுகளாகும். அத்துடன் சிறு வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 10 இலட்சம் ரூபா நிதியை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீள செலுத்தும் காலம் 10 வருடங்களாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த கடனை பெற்றுக் கொள்வதற்கு கைத்தொழில் அமைச்சின் பரிந்துரையை பெற்றுக் கொள்வது அவசியமானால், வார நாட்களில் ஐந்து தினங்களும் அதனை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 255
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads