சினிமா செய்திகள்
அரவிந்த் சாமியின் மகன் அடுத்த ஹீரோவாக ரெடி
இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் அரவிந்த் சாமி. இவரைப் போல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா என ஏங்காத பெண்களே இல்லை.ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன
மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை என உறுதிப்படுத்திய நடிகர்
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அவரது மனைவி, இந்த முடி
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
Ads
 ·   ·  1454 news
  •  ·  0 friends
  • 1 followers

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை - எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சபையில் சுசில் பிரேமஜயந்த உறுதி

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (20) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களோடு கடந்த மூன்று மாதங்களில் 2 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றேன்.

கல்விசாரா ஊழியர்களின் பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களோடு கடந்த மூன்று மாதங்களில் 2 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றேன். பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவும் பேசியிருக்கின்றது. ஆசிரியர் குழாமும் பேசியிருக்கின்றது.

இதற்கான பதில் என்னவெனில் இங்கு இரண்டு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. 2018ம் ஆண்டில் அந்த சந்தர்ப்பத்தில் கல்விசாரா ஊழியர்களுக்கு 92 சதவீத அதிகரிப்பும் கல்விசார் ஊழியர்களுக்கும் 107 சதவீத அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இவற்றுக்கிடையில் உள்ள 15 சதவீத அதிகரிப்பை பெற்றுக்கொள்வதே கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கை.

இது தொடர்பில் இரு தடவை திறைசேரியோடும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோடும் கலந்துரையாடியிருக்கின்றோம்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான நிதியை ஒதுக்கி, இந்த ஏற்றத்தாழ்வில் சிக்கல்கள் வராதபடி தீர்வு வழங்க வேண்டும் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம். 

இந்த நிலையில் கல்விசாரா ஊழியர்களுக்கு மேலும் 22 சதவீத அதிகரிப்பு நடந்தது. அதன் பிறகு கல்விசாரா ஊழியர்கள் மேலும் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள். சீராக்கப்பட்ட ஒரு கொடுப்பனவினை வழங்க வேண்டும் என்பதுதான் அவர்களின் இரண்டாவது கோரிக்கை. இந்த 2 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

கல்விசாரா ஊழியர்கள் கல்வி சார் ஊழியர்களுக்கு அதிகரித்தது போலவே சீராக்கப்பட்ட கொடுப்பனவை கோருகின்றார்கள். அதற்கு குழுவொன்றை அமைத்து நாங்கள் பேச்சுவார்த்ததை நடத்தி வருகின்றோம்.

கல்விசாரா ஊழியர்கள் அது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்குமாறு கேட்டிருக்கின்றோம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நிதி இருந்தால் இந்த பிரச்சனையை ஓரளவு தீர்க்க முடியும். தனித்து இதை செய்யமுடியாது. எதை செய்யவேண்டுமானாலும் திறைசேரியின் அங்கீகாரம் அவசியம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 466
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads