முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என இலக்கு வைத்துள்ளதாக திரைப்பட நடிகர் விவேக் கூறினார்.
திருவள்ளூரை அடுத்த மெய்யூர் கிராமத்தில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா மடத்தின் கோசாலை மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் மையம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகி மகராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் திரைப்பட நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு வைத்து உரையாற்றும்போது சுவாமி விவேகானந்தர் குறித்து கிராம மக்களிடையே எடுத்துக்கூறினார்.
அவரது பொன்மொழிகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என வலியுறுத்தினார் இதை தொடர்ந்து பொங்கல் திருநாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றை நட்டு வைத்தேன். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அறிவுறுத்தலின் பேரில் இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன் மேலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் வைத்துள்ளேன் என்றார். இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் தேவி மற்றும் மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர் கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீ பிறந்த
மண்ணில்
நானும்
பிறந்தேன்
ஒன்றாக
படித்தேன்
என்னையும்..என்
தமிழையும்
நீ ஏன்
வெறுக்கிறாய்?
புறக்கணிக்கிறாய்?
உன் மொழியை..நான்
மதிக்கிறேன்
பேசுகிறேன்
நீ ஏன்
பேசவும்
மதிக்கவும்
முடியாமல்
வெறுக்கிறாய்?
ஆன்மீகம்
சொல்லித்தந்த
அன்பு,கருணை,இரக்கம்
உனக்கில்லையா?
எனக்குண்டே!
பெரும்பான்மை
இனத்துக்கு
பெருந்தன்மை
வேண்டும்
உன் கரங்கள்
என்னைத்தொட
வேண்டும்
நீயும் நானும்
சகோதரரே
சமத்துவம்
வேண்டுமே!
பலத்தோடு
இருக்கிறாய்
புதைத்த
பிணத்தை
புரட்டிப்பார்க்கிறாய்
மூடிய கல்லறையை
இடித்து தகர்க்கிறாய்
இத்தனை பீதியா?
உனக்கு
பயப்படாதே..வா
கைகோர்ப்போம்
சமாதானம்
செய்வோம்...
இறந்தோரை
கல்லறையில்
தூங்கவிடு
இறந்தோர்
தூபிகளை
வணங்கவிடு
இத்தனை
வர்மமா
உனக்கு
தர்மமே
போதித்த
புத்தரும்
நானும்
கண்ணீர்
வடிக்கிறோம்
நீயும் நானும்
இறப்பது நியதி
இதைவிட
ஏதுமுண்டோ
உண்மையான
செய்தி....
கருவில் சுமந்தாள் அன்னை
கருவிழியில் சுமக்கிறாய் நீயடி
என் உணர்வுகளுக்கு
உருவம் கொடுப்பவள் நீயடி
அன்பு ஊற்றெடுக்கும்
அருவி நீயடி
அதில் விழுந்து நீச்சலடிக்கும்
ஆசை தங்கை நானடி.
என் கனவுகளை
கவலைகளை மொழிபெயர்ப்பவளே
தொப்புள்க்கொடி தோழியடி நீ
துயரத்திலும்
தோள் கொடுப்பவள் நீயடி .
அணைக்க கைகள் இருந்தால்
அழுவதில் கூட சுகம் தான்
ஆத்மார்த்த அன்பு உனதடி
அதை உணர்கிறேன் தினமும் நானடி.
அன்றாடம் என்
அனுபவ பரிமாற்றம் உன்னோடு தானடி
அதனால் அழுக்குகள் இல்லை
என் மனதில் என்றால் உண்மை தானடி.
அத்திபூத்தாற் போல்
சில கோபங்களும்
உண்டாகும் தருணங்களிலேயே
மண்ணாக்கி விடுவாயடி
மனம் நொந்து
மன்னிப்பும் கேட்பாயடி .
புரிந்துணர்வின்
பொக்கிஷம் நீயடி
புன்னகைக்க கற்றுக் கொண்டேன்
உன்னால் நானடி .
எனக்காய் துடிக்கும்
இதயம் உனதடி
இன்னொரு தாய் தான்
நீயும் எனக்கடி .
என் விம்பத்தைக் காட்டும்
கண்ணாடி நீயடி
என் கண்களின் காயமெல்லாம்
கண்டுபிடிப்பாய் நீயடி.
வாழ விருப்பம் கொண்டேன்
உன்னால் தானடி
வலிகள் எல்லாம்
மறக்க வைத்தவளும் நீயடி .
மறுபிறப்பு ஒன்று
எடுத்து வந்தால் நீ
மகளாய் பிறக்க வேண்டுமடி
தாயாகி உன்னை
தாலாட்ட வேண்டும் நானடி.
சிறந்த வழிகாட்டி நீயடி
வாழ் நாள்வரை
சகியடி நீ எனக்கு
சகோதரியே!
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அண்மையில் ஒரு கூட்ட மேடையில் பேசும்போது போகிறபோக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை கேலி பேசுவதாக நினைத்து அருவறுப்பான சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாக பேசுவது தனக்கு கைவந்த கலை என்பதுபோல், தன் அருகில் இருந்தவர்களைப் பார்த்து அப்போது சிரிக்கவும் செய்தார். பெண்களை கண்ணியக் குறைவாக உதயநிதி பேசியது தமிழகம் முழுவதும் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த மகளிரணி தலைவிகளும், பெண்ணிய அமைப்பினரும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி அதிமுக மகளிர் அமைப்பினர் போலீசிலும் புகார் செய்துள்ளனர்.
ஒரு நாள் லீ லீ,அவள் தகப்பனாரின்
2021 ஆம் ஆண்டு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைகளுக்கு அழைத்து வருவதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்படவேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
பாடசாலைக்கு ஒரு மாணவன் வருகை தந்திருத்தால் கூட கல்விச் செயற்பாட்டினை முன்னெடுக்க ஆசிரியர்கள் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைகளுக்கு அழைத்து வருவதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்படவேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
பாடசாலைக்கு ஒரு மாணவன் வருகை தந்திருத்தால் கூட கல்விச் செயற்பாட்டினை முன்னெடுக்க ஆசிரியர்கள் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த 10 மாதங்களாக தியேட்டர்கள், மூடப்பட்டுள்ளன. இதனிடையே ஜனவரி 5 ஆம் தேதி முதல், 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார். அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த காலத்தில், அதற்கு கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு அரசு செவிசாய்க்காததால் தியேட்டர்களை திறக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை.
இதனால் கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். மலையாள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படங்களுக்கும் கேரளாவில் வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 553 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 2 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 199 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 4 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 689 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 22 ஆயிரத்து 553 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அமீரகத்தில் இதுவரை மொத்தம் 2 கோடியே 20 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சித்தர்கள் அருளியது
அனைவரும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டியவை
வாரம் ஒரு முறையில் கஷாயம் வைத்துக்குடித்து வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
#திங்கட்கிழமை:
வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.
#செவ்வாய்க்கிழமை:
கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.
#புதன்கிழமை:
தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.
#வியாழக்கிழமை:
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.
#வெள்ளிக்கிழமை:
வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.
#சனிக்கிழமை:
முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.
#ஞாயிற்றுக்கிழமை:
சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.
இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 20 ஆயிரத்து 460 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 39 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒருகோடியே இலட்சத்து 16 ஆயிரத்து 163 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 221 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 50 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது.
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய, வைரஸ் தொற்றினால் 16 ஆயிரத்து 233 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 159 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 6 இலட்சத்து 18 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது 41 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட VOC-202012/01 உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் ஆறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியங்களில் ஐந்தில் உள்ள 40 பிற நாடுகளில் அல்லது பிரதேசங்களில் அல்லது பகுதிகளில் குறைந்தளவிலான எண்ணிக்கையிலான நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட 501Y.V2 உருமாறிய கொரோனா வைரஸ் ஆறு நாடுகளில் அல்லது பிரதேசங்களில் அல்லது பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் முதல் முதலாக உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பல நாடுகளும் பிரித்தானியாவுக்கான பயணங்களை இடைநிறுத்தியிருந்தன.
ஆரம்பத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள புதிய வகை கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ·
- · beesiva
- · Celebrities
- · 265 views
- ·
- · beesiva