beesiva
இந்த ஆண்டின் 15வது கொலை குறித்துச் சஸ்க்சடூன் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.வியாழக்கிழமை அதிகாலையில் அவென்யூ கியூ நார்த் மற்றும் 22வது தெரு டபிள்யூ மூலைக்கு அருகிலுள்ள ஒரு பங்களா அருகே முன் தெருவிலும் சந்திலும் காவல்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதிகாரிகள் வீட்டிலிருந்து வருவதும் போவதுமாக இருந்தனர்.யார் இறந்தார்கள், என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை. இரவோடு இரவாக அந்த வீட்டுக்கு பெரிய குற்றங்கள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் வந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஊடகவியலாளர் மாநாடுகளில் பயன்படுத்தப்பட்ட பிரபல உத்தியோகபூர்வ டிஜிட்டல் திரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவம் நீக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த திங்கட்கிழமை (15) முதல் பெரமுனவின் ஊடக சந்திப்புகளில் இத்திரை பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.முன்னதாக, டிஜிட்டல் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் பெரமுனவின் முக்கியஸ்தருமான பசில் ராஜபக்ஷ ஆகியோரின் முகங்கள் சுழற்சி முறையில் காண்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .
கொரோனா வைரஸ் தொற்று பரவல் எப்போது முடிவிற்கு வரும் என்பது இன்று பலர் மத்தியில் உள்ள கேள்வியாகும்.உலகம் முழுக்க கொரோனா பரவல் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. அதிகம் தடுப்பூசி ஏற்றப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட கொரோனா பரவல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. உலகம் முழுக்க 192,848,567 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் ஆதனாம் [Tudors Adhanom Ghebreyesus] இதற்கு பதில் அளித்துள்ளார்.4,142,769 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க தற்போது பல நாடுகளில் மூன்றாம் அலை, நான்காம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,341,682 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் ஆதனாம் கொரோனா பரவல் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு முக்கியமான அறிவிப்போடு உங்களை சந்திக்கிறேன். உலகம் முழுக்க கொரோனா பரவலை மொத்தமாக தடுக்க மக்கள் உதவ வேண்டும். கொரோனாவிற்கு எதிராக மக்கள் முறையாக செயல்பட்டால் புதிய அலைகளில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியும என்று தெரிவித்துள்ளார்.புதியதாக தொற்றுக்குள்ளாவோரை வேகமாக கண்டுபிடிக்க வேண்டும். உடனே கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா மேலும் பரவுவது தடுக்கப்படும். வேகமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரை கண்டுபிடிப்பதன் மூலம் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும்.
பயண கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.மாத்தறை பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலார்களை சந்தித்த உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், சமீபத்தில் நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் இடம்பெறும். பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டால் வழமை போன்று பொது போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.