அறிவோம் ஆன்மீகம்

  •  ·  Standard
  • 2 members
  • 2 followers
  • 495 views
Membership
Standard
Info
Who can post to my profile:
Error occurred
Organization Name:
அறிவோம் ஆன்மீகம்
Category:
Friends count:
Followers count:
Administrators
Achievements

Basic

Total points: 1106

3896 point(s) to reach
Comments (0)
Login or Join to comment.

ஆன்மீக கதைகள், ஆன்மீக செய்திகள், கோவில்கள் பற்றிய தகவல்கள்.

Joined Organizations
அறிவோம் ஆன்மீகம்
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
Added a post 
நாம் விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும். இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும். ஆனால், அந்தக் கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே. பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. இதனால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும். மஹாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார்.
  • 448
Added a post 
நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை குடுமியுடன் பயன்படுத்த வேண்டுமா அல்லது குடுமியை அகற்றிவிட வேண்டுமா என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கும்.ஆனால் இதை யாரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது என்று என பலருக்கும் தெரிவதில்லை. நம் முன்னோர்கள் செய்தார்கள் நாமும் செய்வோம் என்று தான் பலரும் செய்கின்றனர்.தேங்காயை குடுமியுடன் பயன்படுத்துவதற்கு ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் காரணம் உண்டு. அது என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்.உடலின் ஓர் அங்கம்பண்டைய காலங்களில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் வேதம் ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை பரம்பரையாக குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் குடுமியானது உடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டது. அதுபோல தேங்காயின் ஒரு உறுப்பாக வருவதுதான் குடுமி. அதை அகற்றி விட்டால் தேங்காய் ஊனமாகிவிடும்.அதாவது இறைவனுக்கு படைக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அது ஊனம் அற்றதாக இருக்க வேண்டும். எனவே தான் தேங்காய் உடைக்கும்போது குடுமியுடன் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.உடைத்த பிறகுஉடைப்பதற்கு முன் தேங்காயில் உயிரோட்டம் உண்டு. உடைத்த பிறகு தேங்காய் உயிரற்றதாகிவிடுகிறது. உடைத்த பிறகு தான் குடுமியை அகற்ற வேண்டும். மேலும் தேங்காய் உடைத்த பிறகு இறைவனுக்கு படைக்கும் பிரசாதமாக கருதப்படுவதால் அவை குடுமி அகற்றி சுத்தமாக படைக்கப்பட வேண்டும்.இறைவனின் சிரசுஅதே போல கும்பாபிஷேகம், ஹோமங்கள் நடத்தும்போது கும்பம் வைத்து அதில் இறைவனை குடியிருத்துவர். குடமானது இறைவனின் திருமேனியாகவும், குடத்தின் மேல் வைக்கப்படும் தேங்காயானது இறைவனின் சிரம் அதாவது தலையாக கருதப்படுகிறது.தேங்காயில் இறைவனின் முகத்தை சந்தனத்தால் உருவாக்குவர்கள். அதற்கு தேங்காய் குடுமியுடன் இருக்க வேண்டியது அவசியம். எனவே தான் குடுமியுடன் கூடிய தேங்காயை கும்பத்தில் வைப்பது வழக்கம்.அறிவியல் காரணம்தேங்காயில் உள்ள குடுமியை எடுத்தால் அந்த தேங்காய் விரைவில் அழுகி பயனற்றதாகிவிடும். இதனால் நீண்ட காலம் வைத்து பயன்படுத்த முடியாது. இதனால் தான் தேங்காயில் உள்ள குடுமியை எடுக்க மாட்டார்கள்.
  • 604
Added a post 
கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்து சென்று தான் பழக்கம். சிலரைப் பார்த்திருப்போம். அகலமான படியாக இருந்தாலும் அதைக் கஷ்டப்பட்டு தாண்டி தான் செல்வார்கள். இது பற்றி சாஸ்திரங்களும் பெரியவர்களும் என்ன சொல்கிறார்? ஏறிச் செல்வது சரியா தாண்டிச் செல்வது சரியா என்று பார்ப்போம்.பெரியோர்களும் சரி, சாஸ்திரங்களும் சரி கோவில் நுழைவாயில் கதவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்.*கோவில்*கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கிற முதல் படிக்கட்டின் மேல் ஏறி நிற்கக் கூடாது. தாண்டி தான் செல்ல வேண்டும். அதாவது கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னால் ஆறோ குளமோ இருந்தாலும் சரி, அல்லது வெளியில் நிச்சயம் தண்ணீர் குழாய் இருக்கும். அதில் கால், பாதங்களைக் கழுவி விட்டு தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும்.கை மற்றும் கால்களைக் கழுவிய பின்னர், சில துளிகள் தண்ணீரை எடுத்து தலையில் சுற்றித் தெளித்துக் கொள்ளுங்கள்.*துவார பாலகர்*இப்போது தான் கடவுளை வணங்குவதற்கு நம்முடைய உடலைத் தயார்ப் படுத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக, கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, கோவில் கோபுரத்தையும் அவற்றில் உள்ள கலசங்களையும் பார்த்து முதலில் வணங்கிக் கொள்ள வேண்டும்.அதன்பின்னர், வாயிலில் காவலுக்கான நின்று கொண்டிருக்கிற துவார பாலகர்களை வணங்கி, அவர்களிடம் உள்ளே செல்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு, உள்ளே செல்ல வேண்டும்.*நுழைவாயில்*அப்படி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே செல்லுகிற போது, இருக்கின்ற நுழைவாயில் படியைக் கடக்க வேண்டும். அந்த படியை தாண்டிச் செல்கின்ற பொழுது, நாள் கொண்டு வந்திருக்கும் பாவங்கள், எதிர்மறை எண்ணங்கள், மனதுக்குள் இருக்கும் கவலைகள், வினையான காரியங்கள், ஆகிய கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு, கோவிலுக்குள் வெறும் சாதாரண மனிதனாக, எந்த எண்ண ஓட்டங்களும் இல்லாமல் தெளிவான நீரோடை போல தான் வருகின்றேன் என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த படியைத் தாண்டிச் செல்ல வேண்டும்.*நேர்மறை எண்ணங்கள்*அதேசமயம் அந்த படிக்கட்டுக்களின் மேல் ஏறி, மிதித்து உள்ளே செல்கிறீர்கள் என்றால், மனதுக்குள் இருக்கும் அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் மனதுக்குள் சுமந்து கொண்டே தான் கோவிலுக்குள் வருகிறேன் என்று அர்த்தம்.இறைவன் குடியிருக்கும் கோவில் என்பது, நாள் முழுவதும் கூறப்படுகின்ற மந்திரங்களினாலும் நாதஸ்வரம், கெட்டி மேளங்கள் போன்ற மங்களகரமான இசையினாலும் முழுக்க முழுக்க நேர்மறை அதிர்வுகளால் நிரம்பியிருக்கும். அதனாலேயே அந்த நுழைவு வாயிலைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது தான் ஐதீகம்.
  • 654
Added a news 
அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது கால் பகுதி மட்டும் ஒன்று காணாமல் போனது தெரிய வந்த நிலையில் 27 வயது மதிப்புமிக்க இளைஞர் ஒருவர் கையில் பெண்ணின் கால் பகுதியை வைத்திருந்ததாகவும் அவர் அதை கடித்து சாப்பிட்டு கொண்டு இருந்ததாகவும் தெரிகிறது இது குறித்த வீடியோவை ஒருவர் இணையதளத்தில் பதிவு செய்திருக்கும் போது அந்த இளைஞர் வீடியோ எடுப்பவரிடம் அந்த காலை அசைத்து அசைத்துக் காட்டி ருசித்து கடித்துக் கொண்டிருந்ததை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர்இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞரை தேடி கண்டுபிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் அந்த இளைஞருக்கு 27 வயது என்றும் அவர் இளம் பெண்ணின் காலை எடுத்து கடித்து சாப்பிட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவை எக்ஸ் தளத்திலிருந்து நீக்க அமெரிக்க காவல்துறை கேட்டுக் கொண்டதை எடுத்து அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.
  • 458
Added a post 
திருப்பதி திருமலைக்குக்குடை போல திருவாரூருக்குத் தீவட்டி சிறப்புண்டு. வேறெங்கும் காணமுடியாதது.ஐந்தடி உயரமும், நல்ல பருமனும் உடையது இத்தீவட்டி. இத்தீவட்டியில் நெய் உபயோகப்படுத்தப்படுகின்றது. தியாகேசரின் வலப்பக்கமும், இடப்பக்கமும் முன்னும் பின்னுமாக நால்வர் இத்தீவட்டிகளை ஏந்திச் செல்கின்றனர். தீவட்டி கொழுந்துவிட்டெறிய நெய் வார்க்க பின்னால் ஒருவர் வெள்ளியினால் செய்த பன்னீர் சொம்பு போன்ற பாத்திரத்துடன் தொடர்ந்து வருவார். இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தது திருவாரூர் தீவட்டிகள்.
  • 497
Added a post 
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பனிரெண்டாவது மாதமான பங்குனியும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே பங்குனி உத்திரமாகும்.நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தை செய்யும்போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த நன்னாளில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. தெய்வங்களின் திருமணங்கள் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.திருமணமாகாதவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்கு சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய நாளாக பங்குனி உத்திர நாள் விளங்குகிறது.விரதம் இருப்பது எப்படி ? பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். வரும் திங்கள் கிழமை பங்குனி உத்திர விரதம் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமையே இயல்பாக உண்பதைவிட குறைவாக உண்ண வேண்டும். மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் எடுத்துக் கொள்ளலாம். பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். மாலையில் முருகன், சிவன், பெருமாள் கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கும், உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து முடிக்க வேண்டும். இந்த விரதத்தால், விரைவில் திருமண யோகமும், செல்வச் செழிப்பும் உண்டாகும். பிறகு ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும்.வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும், பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும்.அன்று முழுவதும் சிவபுராணம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை படிக்கலாம். துளசி தீர்த்தம், பால், மோர்,  இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம்.கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.மேலும் 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.பலன்கள் :பங்குனி உத்திர நாளில் நம்மால் முடிந்த உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.இந்த நாளில் திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தால் திருமணம் கூடி வரும்.கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும் சிறந்த வேலையையும் பெற முடியும்.உத்தியோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
  • 506
Added a post 
பெளர்ணமி திதியும், உத்திர நட்சத்திரமும் மார்ச் 24ம் தேதியே துவங்கி இருந்தாலும் அன்று காலை சூரிய உதய நேரத்திற்கு பிறகே இரண்டும் துவங்குகின்றன. ஆனால் பஞ்சாங்க சாஸ்திரப்படி, ஒரு நாளின் சூரிய உதய நேரத்தின் போது என்ன திதி, நட்சத்திரம் உள்ளதோ அதுவே அந்த நாளுக்காக திதி மற்றும் நட்சத்திரமாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மார்ச் 25ம் தேதி சூரிய உதய நேரத்தின் போது தான் பெளர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் உள்ளன. இதனால் மார்ச் 25ம் தேதியை தான் பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு பக்தர்கள் விரதம் இருக்க வேண்டும்.
  • 499
Added a post 
பங்குனி உத்திரமானது தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில், கடைசி நட்சத்திரமான உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாள் - 25 .3. 2024. அன்றைய நாளில் பௌர்ணமியும் இணைந்து வரும் நாளை பங்குனி உத்திரமாக நாம் கொண்டாடி வருகிறோம்.பங்குனி உத்தரத்தில் பக்தர்கள் முருகப் பெருமானையும் சிவபெருமானையும் வழிபட்டு மகிழ்கின்றனர். அது மட்டும் இன்றி இந்த பங்குனி உத்திர திருநாளை கல்யாண நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. இதனால் பல ஆலயங்களில் அன்று இறை திருமணங்கள் விமர்சையாக நடக்கும்.உத்திர நாளில் சிவபெருமான் பார்வதிக்கு திருமணம் நடந்தேறியதாகவும், முருகப்பெருமான் தெய்வானையை மணந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால் பங்குனி உத்திர நாள் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் மிகவும் உகந்ததாகவும் திருமண வைபோக நாளாகவும் கொண்டாடப்படுகிறது.இத்தகைய சிறப்பு மிக்க நாளில் நம்முடைய பண பிரச்சனை தீர எப்படி வழிபாடு செய்வது என அறியலாம். இந்த வருடம் பங்குனி உத்திரம் 25 .3. 2024 திங்கட்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலே எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் முருகப்பெருமானையும் சிவபெருமானையும் நினைத்த தீபம் ஏற்றி விடுங்கள்.முருகப்பெருமான் படம் இருப்பின் நன்றாக துடைத்து மலர்களால் அலங்காரம் செய்து அவருக்கு உகந்த செவ்வரளி பூக்களால் மாலை அணிவித்து விடுங்கள். அவருக்கு அன்றைய தினத்தில் செய்யக் கூடிய நெய்வேத்தியம் தான் மிகவும் விசேஷமானது. முருகக்கடவுளுக்கு தினை மாவு மிகவும் பிடிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.முருகப்பெருமானை காண குறத்தி மகள் வள்ளி இந்த தினை மாவை தான் கொடுத்தாக சொல்லப்படுகிறது .ஆகையால் அன்றைய தினத்தில் இந்த தினை மாவை அவருக்கு வைத்து படைப்பது மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. திணை மாவை அப்படியே வைக்காமல் சுத்தமான தேன் கொண்டு அதை பிசைந்து மாவாகவோ அல்லது அதை உருண்டைகளாகவும் செய்து வைக்கலாம்அன்றைய தினத்தில் நீங்கள் முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் இந்த ஒரு தினை மாவு பிரசாதத்தை வைத்தால் போதும் அவர் மனம் மகிழ்ந்து பண பிரச்சனை முழுவதுமாக தீர்த்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் ஆலயத்திற்கு கட்டாயமாக செல்லுங்கள். அவருக்கு அபிஷேகப் பொருள்களான சந்தனம் பன்னீர் தேன் போன்றவற்றை அன்றைய தினத்தில் வாங்கித் தருவதும் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர கூடிய கந்தக்கடவுளை அன்றைய தினத்தில் இது போல வழிபட்டால் பரம ஏழையும் பணக்காரனாக கூடிய யோகத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கையுடன் செய்து கந்தன் அருளைப் பெறலாம்.
  • 537
Added a post 
ஸ்ரீ ராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கிட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக இதை எழுதுகின்றனர்.உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.‘ராம” என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி ‘மரா” என்றே முதலில் உச்சரித்தார் ‘மரா” என்றாலும், ‘ராம” என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள்.ஸ்ரீராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தானும் தாக்கிக் கொண்டாள். ‘ரமா” என்று அவளுக்கு பெயருண்டு. ‘ரமா” என்றால் ‘ஸ்ரீலட்சுமி”.ஸ்ரீலட்சுமி கடாட்சத்தை வழங்குவது ஸ்ரீராம மந்திரம்.ஸ்ரீராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி) உண்டாகும்.ஸ்ரீராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.‘ரா” என்றால் ‘இல்லை” ‘மன்’ என்றால் ‘தலைவன்’. இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.முதன் முதலில்ஸ்ரீ ராமநாமம் எழுதியவர் யார் ?ஸ்ரீராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் அனுமன் தான். அவருக்கு சீதையைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை.வெற்றிக் களிப்பில் தேவியின் முன்னர் பணிந்து அம்மா! என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார்.சீதையின் முன் மணலில் ‘ஸ்ரீராமஜெயம்” என்று எழுதிக் காண்பித்தார். அந்தக்குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டார்.முதன் முதலில் ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை எழுதியவர் அனுமன் தான்!அன்று முதல் லிகித நாமஜெபம் என்ற பெயரில் ராம நாமத்தை பனை ஓலை மற்றும் காகிதத்தில் எழுதும் பழக்கம் கொண்டனர்.ஸ்ரீராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும்.குறிவைக்கத் தைக்கும் ராமசரம் என்பார்கள்.ஸ்ரீராமபாணம் எப்படி இலக்கை நோக்கிப் பாயுமோ, அதுபோல ஸ்ரீராமநாமம் உங்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வல்லமை கொண்டது. நம்பிக்கை யுடன் செய்தால் பலன் நிச்சயம். குறைந்தது ஒருநாளைக்கு 108 முறை எழுதுவது அவசியம்.சீதையை அசோகவனத்தில் சந்தித்து வந்த அனுமன், ராமனிடம் கண்டேன் சீதையை என்று சொல்லியபடி தெற்கு நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கைகளில் சூடாமணியை பெற்றதும் ஸ்ரீராமரின் கண்களில் கண்ணீர் மல்கியது.பிரபு! தேவி கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களின் திருநாமத்தை மறந்தால் தான் கஷ்டம் வரும். பிராட்டியோ எப்போதும் தங்கள் பெயரையே, (ராமநாமம்) ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு கஷ்டம் என்பதே கிடையாது, என்று அனுமன் அவருக்கு ஆறுதல் அளித்தார்.ஸ்ரீராமர் அவரை ஆரத்தழுவி, அனுமான்! உன்னிடம் நான்பட்ட கடனை எப்படித் தீர்ப்பேன்?, என்றார்.அனுமனின் உடல் அப்படியே சிலிர்த்துப் போனது. பகவானே! என்ன சொல்லிவிட்டீர்கள்? என்னைக் காப்பாற்றுங்கள்! என்று ஸ்ரீராமரின் திருவடிகளில் சரணடைந்தார். அப்போது கருணையுடன் அனுமன் தலையை கோதியபடி ஸ்ரீராமர் ஆசி வழங்கினார்.
  • 558
Added a post 
முருகப்பெருமான் என்றாலே வேலும், மயிலும் வைத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், குறிப்பிட்ட சில தலங்களில் வித்தியாசமான கோலங்களில் காட்சி தருகிறார். அந்த வகையில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலங்களில் என்னென்ன வடிவில் காட்சி தருகிறார் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற இடத்தில் உள்ள கோவிலில் முருகப்பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாக காட்சி தரும் முருகப்பெருமானின் மூல விக்கிரகம் இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்து, இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி தருகிறார்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடன் வடிவ முருகன் சிலையில் இருந்து வியர்வை வருவது வியப்பான ஒன்றாகும். ஏலகிரி மலைக்கு அருகில் ஜலகாம்பாறை என்ற இடத்தில் உள்ள முருகன் கோவிலில் ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. முருகன் விக்கிரகம் இல்லை. இக்கோவில் வேல் வடிவில் முருகன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமாகும். சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள முருகன், இரண்டு முகங்களும் எட்டு கரங்களும் கொண்டு காட்சி தருகிறார். சென்னிமலை முருகன் கோவில் சந்நிதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.திருக்கடையூர் அருகில் உள்ள திருவிடைக்கழி முருகன் கோவில் சிவாலய வடிவில் அமைந்துள்ளது. இங்கு முருகன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலில் முருகன் சிலைக்கு முன்பு ஸ்படிக லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருகிறார்.மயிலாடுதுறைக்கு அருகில் திருவிடைக்கழி என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் இருக்கும் குமரன் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.கும்பகோணத்தில் உள்ள வியாழ சோமநாதர் கோவிலில் முருகன், காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப் பெருமான் மூன்று கண்கள் மற்றும் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறார்.மகாபலிபுரம் அருகே வளவன் தாங்கள் உள்ள கோவிலில் முருகன் கண்ணீர் வடித்த நிலையில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.கனக கிரி என்ற இடத்தில் உள்ள கோவிலில் முருகன் கைகளில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.மயிலாடுதுறைக்கு அருகில் நெய் குப்பை என்ற ஊரில் பாலமுருகன், அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார்.புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றை கண்ணனூர் என்ற ஊரில் மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. அக்கோவிலில் முருகன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும், மறு கரத்தில் சின் முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
  • 241
Added a post 
1. வாருண ஸ்நானம் :ஜலத்தில் அமிழ்ந்து தலை முழுகுவது. ஆற்றிலோ, குளத்திலோ, குழாயடியிலோ, கிணற்றடியிலோ தலையில் தண்ணீர் விட்டுக் கொண்டு செய்யும் குளியல் இது.2. பார்த்திவ ஸ்நானம் :‘ம்ருத்திகே ஹநமே பாபம்’ என்று தொடங்கும் மந்திரத்தால் தேஹம் முழுதும் சுத்தமான மண்ணைப் பூசிக்கொள்வது; அதாவது மண் குளியல். மேல் நாட்டிலும் கூட MUD BATH ‘மட் பாத்’ பிரசித்தம்.3. ஆக்நேயம் :அக்னிஹோத்ர பஸ்மத்தை ஈசாநம் முதலிய மந்திரங்களால் தேஹத்தில் பூசுவது (அதாவது திரு நீற்றுக் குளியல்)4. வாயவ்யம் :பசுக்களின் குளம்பு தூள்களை கோ ஸாவித்ரியால் ஜபித்து உடலில் பூசிக்கொள்வது; அதாவது பசுத் தூசி குளியல்; பசு நிற்கும் இடமும் அதன் கால் தூசும் அவ்வளவு புனிதமானது.5. திவ்ய ஸ்நானம் :உத்தராயண மத்யத்தில் வெயிலுடன் கூட மழை பெய்யும்போது அதில் நனைவது திவ்ய ஸ்நானம் என்று அழைக்கப்படும்.6. மந்த்ர ஸ்நானம் :பிராமணர்கள் தினமும் மூன்று காலங்களில் செய்யும் ஸந்தியாவந்தனத்தில் வரும் ‘ஆபோஹிஸ்டா’ என்ற மந்திரத்தைச் சொல்லி, மந்த்ரத்தின் ஒவ்வொரு பாதத்தால் கால், தலை, மார்பு, தலை, மார்பு, கால்,  மார்பு, கால், தலை என்ற வரிசையில் தீர்த்தத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். அதாவது இந்த மந்திரங்களால் உடலின் பாகங்களில் நீரைத் தெளித்துக்  கொள்ள  வேண்டும்7. மாநஸம் :சங்கு சக்ர தாரியாய் சூர்ய மண்டல மத்தியத்தில் தங்க நிறத்தில் பகவான் எழுந்தருளி இருப்பதாகவும் அவர் திருவடி பெரு விரலில் இருந்து கங்கை நதி ப்ரவாஹம் எடுத்து, ப்ரஹ்மரந்த்ரத்தின் வழியாக நம் தேஹத்தில் விழுவதாகவும், அதனால் உள்ளும் புறமும் உள்ள மலம் (அழுக்கு) யாவும் கழிந்து விட்டதாகவும் தியானம் செய்வதே மாநஸம்.இவை தவிர இரண்டு கால்களையும் கைகளையும் முகத்தையும் அலம்புவது பஞ்சாங்க ஸ்நானம் ஆகும்.ஈரத்துணியால் உடம்பு முழுவதையும் துடைத்துக் கொள்வது காபில ஸ்நானம் எனப்படும்வெற்றிக்கு உடலின் மற்ற பாகங்களுக்கு விபூதி அல்லது திருமணம் தரிப்பதும் ஒரு வகை ஸ்நானம் ஆகும் உடலின் 12 இடங்களில் இந்த அடையாளக் குறியீடுவர்.வெற்றிக்கு திலகம், பொட்டு, திருமண், திருநீறு இல்லாமல் ஈரத் துணியுடன் செய்வது வேறு காரியங்களாகும்; அதாவது சுப காரியங்கள் அல்ல.யாரும் ஈரத்துணியுடன் நல்ல காரியங்களை செய்யக் கூடாது. குளித்துவிட்டு உலர்ந்த வஸ்திரத்தை தரித்துக்கொண்டு (காய்ந்த ஆடையை உடுத்திக்கொண்டு) ஜப, தபங்கள் (தப=தவ) செய்யலாம். அவரவர் ஆசாரப்படியோ சம்ப்ரதாயப்படியோ நெற்றிக்குத் திலகமிட்டுக்கொண்டு செய்ய வேண்டும்.
  • 378
Added a post 
சிவனுக்கு உகந்த இரவு என்று சொல்லக்கூடிய சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருந்தால் நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும்.சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.மாத சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கியமான ஆறு அம்சங்கள் : சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலை குறிக்கும். லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் நல்லியல்பையும், நல்ல பலனையும் வழங்கும். நைவேத்தியம் கொடுத்தல் நீண்ட ஆயுளையும், விருப்பங்கள் நிறைவேறும் என்பதையும் குறிக்கும்.தீபமிடுதல் செல்வத்தை வழங்கும். எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானம் அடைதலைக் குறிக்கும். வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.ஐந்து சிவராத்திரி :மஹா சிவராத்திரி  :மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு "வருஷ சிவராத்திரி" என்ற பெயரும் உண்டு.யோக சிவராத்திரி :திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அதாவது பகல், இரவு சேர்ந்த அறுபது நாழிகை (இருபத்தி நான்கு மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி ஆகும்.நித்திய சிவராத்திரி :வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி திதி இடம் பெறும் இருபத்தி நான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி ஆகும்.பட்ச சிவராத்திரி :தை மாத தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினான்காம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.மாத சிவராத்திரி :மாதந்தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.
  • 378
Added a post 
மராட்டிய தேசத்து அவந்திபூர் நகரில் அன்று காலை, நாவிதர்களெல்லாம் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு முழுவதும் சேனாயி பற்றித்தான். ""இப்படியும் ஒருவன் இருப்பானோ? சேனாயிக்கு அரசவை நாவிதன் என்ற அந்தஸ்து கிடைத்தது கொஞ்ச காலம் முன்பு. அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிய வேண்டாமோ?'' எத்தனையோ நாவிதர்கள் அப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்கள். மன்னனோ முகமதிய மதத்தைச் சேர்ந்தவன். என்ன காரணத்தாலோ சேனாயியைப் பார்த்தவுடனேயே மன்னனுக்குப் பிடித்துவிட்டது. உடனடியாக சேனாயிக்கே ஆஸ்தான நாவித அந்தஸ்தைக் கொடுத்து விட்டான். பதவி சார்ந்து சேனாயிக்கு ஒரு பெரிய வீடு வழங்கப்பட்டது. மாதந்தோறும் கணிசமான ஊதியம் தரப்பட்டது. அவனது குடும்பப் பராமரிப்பை அரசாங்கமே ஏற்றுக் கொண்டது. இதைவிட வேறென்ன வேண்டும்? தினமும் காலைவேளையில் அரண்மனைக்குச் சென்று மன்னருக்கு முடிதிருத்தவேண்டும். அதுமட்டுமே பணி. ஆஸ்தான நாவிதன் என்பதால் வேறு யாருக்கும் அவன் முடி மழிக்கவும் கூடாது. பிறகென்ன! அதிக வேலையே இல்லாமல் நிறைந்த ஊதியம்! ஒவ்வொரு நாளும் தவறாமல் அரண்மனைக்கு சேனாயி போய்க்கொண்டுதான் இருந்தான். ஆனால், அவன் ஒரு பாண்டுரங்கப் பித்தன். பண்டரிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் கிருஷ்ணன் மேல் அவனுக்கு அபார பக்தி. செங்கல் மேல் நின்றுகொண்டு வரமருளும் கிருஷ்ணனைப் பற்றிய சிந்தனைதான் எப்போதும். சதா தியானத்தில் ஆழ்ந்து பரவச நிலைக்கும் போய்விடுவான். காலை வேளையில் மட்டும் அவன் மனைவி அவனை உலுக்கி அரண்மனைக்கு ஊழியம் செய்ய அனுப்பிவிடுவாள். இன்று வெளியூரிலிருந்து வந்த ஒரு பஜனை கோஷ்டி அதிகாலையில் கிருஷ்ண கானங்களை இசைத்தவாறு, அவந்திபூர் வழியாக பண்டரிபுரம் போயிற்று. பாடல்களைக் கேட்ட சேனாயி மெய்மறந்தான். தானும் அவர்களோடு பாடிக்கொண்டே பண்டரிபுரம் புறப்பட்டு விட்டான். மனைவியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவள் சொன்னதே அவன் காதுகளில் விழவில்லை. கிருஷ்ண நாமம் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு மற்ற எந்த ஓசையும் அவன் செவிகளில் விழாதவாறு செய்திருந்தது. அவந்திபூரில் வாழும் பிற நாவிதர்களாலும் சேனாயியை நிறுத்த முடியவில்லை. அவர்கள்தான் கூடிக்கூடி தெருக்களில் நின்று பதட்டத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள். ஒழுங்கு தவறி யாரேனும் பணிக்கு வராதிருந்தால், அவர்களைச் சிரச்சேதம் செய்யவும் தயங்கியதில்லை அந்த மன்னன். இனி சேனாயியின் நிலை என்னவாகும்!.நாவிதர்களில் ஒருவனுக்கு சேனாயி மேல் கடும் பொறாமை. இது சேனாயியைப்பற்றி அரசரிடம் கோள்சொல்ல அரிய சந்தர்ப்பமல்லவா! அவன் பதுங்கிப்பதுங்கி அரண்மனை நோக்கி நடந்தான். அரசனை சந்தித்தான். தணிந்த குரலில் பேசலானான்:""மகாராஜா! இன்று சேனாயி முடிமழிக்க வரமாட்டான்!'' ""ஏன்! நல்ல ஊழியனாயிற்றே அவன்!'' ""அவன் அடுத்தவர்களை ஏமாற்றுவதில் கெட்டிக்காரன். கிருஷ்ண பக்தன் என்று சொல்லிக்கொள்வான். இன்று தன் பணி பற்றிய பொறுப்பே இல்லாமல் பண்டரிபுரம் சென்றுவிட்டான். வெளியூர் போவதானால் உங்களிடம் சொல்ல வேண்டாமா? அரசவை வேலை என்ன கிள்ளுக்கீரையா? ராஜாவின் ஊழியர்கள் தங்கள் இஷ்டத்திற்கு நடக்க முடியுமா? திடீரென்று பணிக்கு வராமல் இருந்ததற்காக நீங்கள் அவனுக்கு மரண தண்டனை கூட அளிக்க முடியும். சாமான்ய குற்றமா இது? போகட்டும். தாங்கள் அனுமதி அளித்தால் இன்றிலிருந்து நான் உங்களுக்கு முடிமழித்து விடுகிறேன்!'' இந்தப் பேச்சைக் கேட்டதும், மன்னன் அவனைக் கூர்மையாகப் பார்த்தான். ""அடேய்! உனக்கு அரசவை வேலை கிடைக்காத பொறாமையால் இப்படிச் சொல்கிறாயா! சேனாயி உண்மையாகவே பண்டரிபுரம் சென்றுவிட்டானா என்று தெரியவில்லை. அவன் வருகிறானா என்று பார்க்கிறேன். அவன் பணிக்கு வராதிருந்தால் சட்டப்படி அவன்மேல் நடவடிக்கை எடுக்கப்படும். வேறு யார் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்பதைப் பின்னர் முடிவுசெய்வேன். நீ போகலாம்''. கோள்சொன்னவன் தளர்ந்த நடையோடு வெளியேறினான். பண்டரிபுரத்தில் செங்கல் மேல் இடுப்பில் கைவைத்து நின்று கொண்டிருந்த ருக்மிணி, தன்னருகில் அவ்விதமே நின்றுகொண்டிருந்த கண்ணனிடம், ""நீங்கள் சேனாயியைக் கைவிடலாமா?'' என்று கேட்டாள். ""இதோ புறப்பட்டுவிட்டேன்,'' என்றார் கிருஷ்ணர். அடுத்த கணம் சேனாயியாக உருமாறினார். புல்லாங்குழல், சிறிய மரப்பெட்டியாக மாறியது. சங்கு சக்கரம் இரண்டும் கத்தி, கத்திரிக்கோல் என நாவிதத் தொழிலுக்கான உபகரணங்களாக மாறி பெட்டிக்குள் புகுந்து கொண்டன. அவந்திபுரம் செல்வதற்காக கிருஷ்ணர் செங்கல்லை விட்டு இறங்கியபோது ருக்மிணி நகைத்தாள். ""நாதா! இந்த வேடம் அழகாகப் பொருந்துகிறது உங்களுக்கு. வாமனாவதாரத்தில் வருணாசிரமத்தின் முதல் வருணத்தைச் சேர்ந்த அந்தணராக உருமாறினீர்கள். ராமாவதாரத்தில் க்ஷத்திரியரானீர்கள். கிருஷ்ணாவதாரத்திலோ வைசியராக, இடையராக மாறினீர்கள். இப்போது நான்காம் வருணம் சார்ந்து நாவிதராக உருக்கொண்டிருக்கிறீர்கள். வர்ணாசிரமம் என்பது தொழில் சார்ந்த வேறுபாடே தவிர மற்றபடி எல்லோரும் சமமானவர்கள் தானே? ஜாதி ரீதியாக உயர்வு தாழ்வு பாராட்டுவது கொடுமையான பாவம் அல்லவா? உங்களின் அழகியநாவிதத் தோற்றத்தைப் பார்த்தால் உங்கள் கழுத்தில் இப்போதே ஒரு மாலையிட வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு!'' ""இந்தக் காலையில் மாலை வேண்டாம் ருக்மிணி. ஆண்டாள் மூலம் நிறைய மாலைகளைப் பற்பல காலை வேளைகளில் பெற்றுவிட்டேன். என் தொழில் முடிந்து நான் வந்த பிறகு, மாலையில் என் தொழில் நேர்த்தியைப் பார்த்து எனக்கு மாலை சூட்டு! சிரித்தவாறே சொன்ன கிருஷ்ணர் உபகரணப் பெட்டியைக் கையில் இடுக்கிக் கொண்டு ஒரே கணத்தில் அவந்திபுரம் சென்று அரசன் முன் நின்றார். ""மன்னா! தாங்கள் இன்னும் தயாராகவில்லையா?..மன்னர் வியப்போடு பார்த்தார். ""அட... சேனாயியே தான். அப்படியானால் இவன் வரமாட்டான் என்று அந்த நாவிதன் பொய் சொல்லியிருக்கிறான்! வழக்கமாகவே சேனாயியைப் பார்த்தால் மனத்தில் சாந்தி பிறக்கும். இன்றோ அளவற்ற ஆனந்தமும் சேர்ந்து பிறக்கிறதே! மன்னன் முடிதிருத்திக்கொள்ள அமர்ந்தான். கத்தியைத்தீட்டி தொழிலைத் தொடங்கினார் கிருஷ்ண சேனாயி. ""ஞானம் என்ற கத்தியால் ஆணவம் என்ற முடியை மழிக்க வேண்டும் அரசே! அப்படி வைராக்கியத்தோடு ஆணவத்தை நீக்கியவர்களுக்கு கடவுள் தரிசனமே கிட்டும். தாங்கள் மன்னராக இருந்தாலும் ஆணவமற்றவர்!'' முகச்சவரம் செய்தவாறே கிருஷ்ண சேனாயி உபதேசமும் செய்யலானார். மன்னர் பரவசத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். ""சேனாயி! நீ உயர்ந்த கருத்துகளைக் கூறுகிறாய். அதைக் கேட்டால் மனம் தித்திக்கிறது!'' ""அரசே! முன் ஒருமுறை இதுபோன்ற உயர்ந்த கருத்துகளைக் கூறினேன். அப்போது என் கையில் சாட்டை இருந்தது. அன்று நான் சொன்னவற்றைக் கேட்டவர் பின்னர் மன்னரானார். இன்று என் கையில் சாட்டைக்கு பதிலாக கத்தி இருக்கிறது. ஆனால், ஏற்கனவே நீங்கள் மன்னராகத் தான் இருக்கிறீர்கள்''. ""சேனாயி! நீ பேசுவது எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆனால் உன் குரல் புல்லாங்குழல் ஓசைபோல் காதில் தேனாய்ப் பாய்கிறது''. ""அரசே! தொடர்ந்து புல்லாங்குழலை வாசித்தால் குரலும் அப்படி ஆகுமோ என்னவோ?'' பேசியவாறே தொழிலை முடித்து புறப்படத் தயாரானார் கிருஷ்ண சேனாயி. ""இன்று உன் தொழில் வழக்கத்தை விட மிக நேர்த்தியாக இருந்தது. உன் பேச்சும் கூட மிக இனிமை. வழக்கமான சம்பளத்தோடு இந்தா இன்றைய உன் பணிக்கான விசேஷ சன்மானம்!'' மன்னர் மகிழ்ச்சியுடன் ஒரு பொற்கிழியை சேனாயி கையில் அளித்தார். நெஞ்சில் லட்சுமியையே வைத்திருப்பவன் கையில் இப்போது லட்சுமி! கிருஷ்ணசேனாயி புறப்பட்டார். அதற்குள் மன்னர் தலையில் தடவிக் கொள்வதற்காக வெள்ளிப் பேலாவில் எண்ணெய் கொண்டு வைத்தார்கள் ஊழியர்கள். எண்ணெயைப் பார்த்தார் மன்னர். அதில் சேனாயியின் பிரதிபிம்பம் தெரிந்தது. என்ன ஆச்சரியம்! சேனாயி தலையில் ஒரு மகுடம்! அதில் மயில்பீலி! சேனாயிக்கு எப்படி நான்கு கைகள் முளைத்தன! மன்னர் திகைத்துப் போய் நிமிர்ந்து பார்த்தார். கிருஷ்ண சேனாயி மனோகரமாக ஒரு முறுவல் பூத்தார். பின் விடைபெற்றுச் சென்றுவிட்டார். போகிற வழியில் உண்மையான சேனாயியின் உபகரணப் பெட்டியில், மன்னர் தந்த பொற்கிழியை வைத்துவிட்டுப் போனார் பாண்டுரங்கன். உண்மையான சேனாயி வீடு திரும்பியபோது உபகரணப் பெட்டியில் இருந்த பொற்கிழியைப் பார்த்து விதிர்விதிர்த்துப் போனான். ஓடோடிப் போய் தான் தொழிலுக்கு வராததற்கு மன்னரிடம் மன்னிப்பு வேண்டினான். மன்னர் கண்களில் கண்ணீர் வழிந்தது. நடந்ததை அவர் விவரித்தபோது சேனாயியின் விழிகளிலும் நீர் திரையிட்டது. தன் பக்தனைப் பராமரிப்பவருக்குத் தரிசனம் தந்த கண்ணன் தனக்கு என்று தரிசனம் தருவான் என சேனாயி ஏங்கியபோது, கண்ணன் நகைத்தவாறே சேனாயி முன் காட்சி தந்து அருளாசி வழங்கினார். அவர் கழுத்தில் அவரது தொழில் நேர்த்தியை மெச்சி ருக்மிணி அணிவித்த பூமாலை கமகமவென மணம் வீசிக் கொண்டிருந்தது.
  • 124
திருமலை திருப்பதி இரதசப்தமி தின ஒரேநாளில் மலையப்ப சுவாமி ஏழு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்த நிகழ்வு.
  • 144
Added a post 
நாம் குளிக்கும் நீரை எப்படி புனித கங்கை நீராக்கிக் குளித்து, இறைவனின் அருளைப் பெறுவது என அகஸ்தியர் கூறியுள்ளார்.குளிக்கும் போது நாம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று குளிக்க வேண்டும். இந்த இரு திசைகளும் உத்தம திசைகள் எனப்படும். நாம் கர்மம் செய்த பின் அல்லது மயானம் சென்று வந்தால் மட்டுமே தெற்கு நோக்கி நின்று குளிக்க வேண்டும். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் வலி அதிகரிக்கும்.கங்கா ஸ்நானம்ஒவ்வொருவரும் வீட்டிலேயே கங்கா ஸ்நானம் செய்ய முடியும். நீங்கள் குளிக்கும் முன், அதில் சிறிது நீரை கையில் எடுத்து கீழ் குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்தால் அந்த நீர் கங்கை நீராக மாறிவிடும். "கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீநர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு"குளிக்கும் முறை :பொதுவாக நாம் குளிப்பதற்கு முக்கிய காரணம் நம் உடலில் இருக்கும் அசுத்தங்களை போக்குவதற்கு மட்டுமின்றி, நம் உடலில் இருக்கும் அதிக வெப்பத்தை போக்குவதற்காகவும் தான். அக்னி பொதுவாக கீழிருந்து மேலாக எரியும். அந்த வகையில் நாம் குளிக்கும் போது ஓம் என எழுதி இறைவனை வணங்கிய உடன் சிறிது நீரை தலையில் தெளித்துக் கொள்ளவும். தண்ணீரை நம் கால் முதல் மேல் உடல் நோக்கி மெதுவாக நனைத்து வந்து கடைசியில் தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.இப்படி செய்வதால் உடலில் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் நோக்கி பயணிக்கும். நம் மண்டை ஓட்டுக்கு மட்டும் தான் எப்படிப்பட்ட வெப்பத்தையும்., அக்னியின் வேகத்தையும் தாங்கும் சக்தி உண்டு.தலையில் சிறிது தண்ணீர் தெளித்துள்ளதால் தலைக்கு வெப்பம் தாக்காமல், நம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் கண் மற்றும் காது வழியாக வெளியேறும்.வாயில் நீர் வைத்திருத்தல் :அதே போல் குளிக்கும் போது வாய் நிறைய எவ்வளவு நீர் வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் உடலில் மேலெழும் வெப்பம் சாந்தப்படுத்தப்பட்டு, தலையை தாக்காமல் இருக்கும். குளித்து முடிக்கும் தறுவாயில் அந்த நீரை துப்பிவிடவும்.குளித்த பின் :தலை முதல் கால் வரை உள்ள உடல் பாகத்தில் நம் முதுகு பகுதியான 'பிரஷ்டம்' தான் மிகப்பெரியது. இங்கு தான் அக்னியின் வேகம் கூடுதலாக பரவும். இதனால் குளித்த முடித்த உடன் இந்தப் பகுதியை தான் முதலில் துடைக்க வேண்டும்.நனைக்கப்பட்ட துண்டுநம்மில் பெரும்பாலும் குளித்த பின்னர் உலர்ந்த துண்டு தான் துவட்ட பயன்படுத்துவோம். ஆனால் அது சரியான முறை அல்ல. குளிக்கும் நீரிலேயே நாம் துவட்டும் துண்டை நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உகந்தது.உலர்ந்த துண்டு பயன்படுத்த துவட்டுவதால் நாம் உள் சூட்டை வேகமாக பரவ செய்யும், இதனால் உடலில் உள் வலிகளை ஏற்படுத்தும்.பேசக்கூடாது :நாம் வாய் திறந்து பேச கூடாத மூன்று முக்கிய நேரங்களில் ஒன்று குளிக்கும் நேரம். இந்த நேரத்தில் மௌனமாக மனதில் இறைவனை ஜெபிப்பது நல்லது.குளிப்பதன் மூலம் ஐம்புலன்கள் செய்த தவறுகளினால் நமக்கு ஏற்பட்ட கர்மாக்கள் களையப்படுகிறது.நீர் நிலைகளில் குளிக்கும் முறை :வீட்டில் தவிர குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் தேவர், தேவதைகள், மகான்கள், பெரியவர்கள் ஆரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறப்படுகிறது.'நாரம்' எனப்படும் தண்ணீரில் நாராயணம் வாசம் செய்கின்றான். அதனால் நீர் நிலைகளில் ஓடி சென்று குதிக்காமல், கரையில் நின்று சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்த பின்னர், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில், நீர் கலங்காமல் மெதுவாக இறங்கி குளிக்க வேண்டும்.அதேபோல் நீரில் காரி உமிழ்வதும், துப்புவதும் கூடாது. ஏனெனில் நீரின்றி ஒரு உயிரினமும் கிடையாது. இதனால் நீரை விரயம் செய்வது கூடாது. கடன் அதிகரிக்கும்.உப்பு நீரில் குளிப்பதால் நம் திருஷ்டி தோஷங்கள் அறுக்கும்.
  • 301