அறிவோம் ஆன்மீகம்

  •  ·  Standard
  • 2 members
  • 2 followers
  • 739 views
Membership
Standard
Info
Who can post to my profile:
Error occurred
Organization Name:
அறிவோம் ஆன்மீகம்
Category:
Friends count:
Followers count:
Administrators
Achievements

Basic

Total points: 1556

3446 point(s) to reach
Comments (0)
Login or Join to comment.

ஆன்மீக கதைகள், ஆன்மீக செய்திகள், கோவில்கள் பற்றிய தகவல்கள்.

Joined Organizations
அறிவோம் ஆன்மீகம்
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர்.அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள்.பார்த்தேன்"என்றார் பரமன்.பார்த்த பிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை.அடஅவர் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவரிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்”ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.வணக்கம் முனிவரே!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்.முனிவர் நிமிர்ந்து பார்த்தார். “அடடே! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர். தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.சற்று நேரம்பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.மகிழ்ச்சியாய்போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலை தைக்க முனைந்தார் முனிவர்.அம்மைகுறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். “முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை.எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்.கொடுக்கிறோம்” என்றார்.முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.அப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.முனிவர்வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்.இதை கேட்டஅம்மையும் அப்பனும் திகைத்தனர்.ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?”என்று அம்மை பணிவாய்க் கேட்டார்.அதைத்தான் நானும் கேட்கிறேன். *நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே*.இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?”என்று கேட்டார் முனிவர்.முனிவரின்விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.இருள் நீங்கிஇன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு.-----வள்ளுவர்.இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”*நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது*.இறையே சரணம் சரணம் சரணம்.
  • 278
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்.வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார்.வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.பசுஞ்சாண விநாயகர் - நோய்களை நீக்குவார். கல் விநாயகர் - வெற்றி தருவார்.மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்.புற்றுமண் விநாயகர் - வியாபாரத்தை பெருக வைப்பார். மண் விநாயகர் - உயர் பதவிகள் கொடுப்பார்.ஓம் விக்னேஷ்வராய நமோ நமஹ
  • 277
ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் புனரமைப்புப் பணி நடந்து கொண்டிருந்தது. அதற்கான எல்லா விஷயங்களையும் காஞ்சி மகானின் ஆலோசனை கேட்டுக் கேட்டே செய்து கொண்டிருந்தார்கள், அந்தத் திருப்பணியைச் செய்து கொண்டிருந்த ஸ்தபதிகள்.அந்த சமயத்தில் ஒரு நாள், அந்தக் கோயிலின் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்யலாமா? என்று கேட்டுச் செல்வதற்காக வந்திருந்தார், தலைமை ஸ்தபதி. அவர் செய்யலாம் என்று சொன்ன மாற்றங்களை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்ட மகாபெரியவா, "நீ சொல்றதையெல்லாம் இப்படி வார்த்தைகளா இருக்கறதைவிட படமா இருந்தா தீர்மானம் செய்யறதுக்கு சுலபமா இருக்கும். நீ ஒண்ணு செய். அந்தக் கோயிலோட புராதன அமைப்பு எப்படி இருக்கு என்பதை ஒரு வரைபடமா வரைஞ்சு எடுத்துக்கோ. அதோட, இப்போ நீ சொல்ற மாற்றங்களை எப்படிச் செய்யப் போறே? அதை செய்த பிறகு அமைப்பு எப்படி இருக்கும்? என்பதை இன்னொரு படமா வரைஞ்சுக்கோ. ரெண்டு படத்தையும் பார்த்து மாற்றம் செய்யலாமா? வேண்டாமான்னு தீர்மானிக்கறது சுலபமா இருக்கும்!" என்று சொன்னார்.அப்படியே வரைந்து எடுத்து வருவதாகச் சொன்ன ஸ்தபதி, நாலைந்து நாட்களுக்குப் பிறகு மறுபடியும் வந்தார்.அவர் வந்த நேரம், மகாபெரியவா புனரமைப்புப் பணி நடந்துகொண்டிருந்த கோயிலுக்குப் பக்கத்தில், ஒரு அரசமரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்.வரைபடங்களை எடுத்து வந்த ஸ்தபதி, அதை மகாபெரியவாளிடம் கொடுத்தார். தமக்கு முன்னால் ஒரு வஸ்திரத்தை விரித்துப் போடச் சொல்லி அதில் அந்தப் படங்களை விரித்து வைக்கச் சொன்னார், மகான்.அப்படியே ஒரு தூய்மையான துணி விரிக்கப்பட்டு, அதன் மேல், வரைபடத்தைப் பிரித்து வைத்தார், ஸ்தபதி. சரியாக அதே நேரம், பொட் என்று ஒரு நீர்த்துளி ஸ்தபதி மேல் விழுந்தது. மேலே நிமிர்ந்து பார்த்த ஸ்தபதி, மழைத் தூறல் அது என்பதை புரிந்து கொண்டார். அதற்குள் மேலும் இரண்டு மூன்று துளிகள் மழை விழுந்தது. சட்டென்று வரைபடத்தைச் சுருட்ட ஆரம்பித்தார், ஸ்தபதி. அதற்குள் இன்னும் கொஞ்சம் வேகமாக மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன."என்ன, ஏன் வரை படத்தைச் சுருட்டறே. பிரிச்சு வை!" ஒன்றுமே தெரியாதவர்போல் சொன்னார், பெரியவா."இல்லை...சுவாமி...மழை வருது...படம் நனைஞ்சுட்டா, வீணாகிடும். அதான்...இதை உள்ளே கொண்டுபோய்ப் பார்க்கலாம்னு...!" இழுத்தார், ஸ்தபதி. இப்போது மழை இன்னும் கொஞ்சம் பெரிதாகப் பெய்யத் தொடங்கியிருந்தது."ஓ...அப்படியா சொல்றே? இப்போ இங்கே இந்த வரைபடத்தைப் பார்க்க முடியாதபடி மழை தடுக்கறதாச் சொல்றே...ஆனா, சுவாமியோட திருப்பணிக்கான காரியங்கள் எதுவும் இயற்கையால எந்தத் தடையும் வராதுன்னுதான் எனக்குத் தோணறது!" சொன்ன மகாபெரியவா, மெதுவாகத் தலையை உயர்த்தி, வானத்தைப் பார்த்தார். திருக்கரத்தை உயர்த்தி ஒருமுறை அசைத்தார்.அவ்வளவுதான் சட்டென்று நின்று போனது மழை. "இப்போ வரைபடத்தைப் பார்க்கறதுல எதுவும் பிரச்னை இல்லையே...!" மென்மையாகப் புன்னகைத்தார், மகான்.அடுத்து சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக, அந்த வரைபடங்களைப் பார்த்து, என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம், எவையெல்லாம் வேண்டாம் என்றெல்லாம் அறிவுரைகள் தந்த மகான், ஒரு கனியைக் கொடுத்து ஸ்தபதியை ஆசிர்வதித்தார். பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, வரைபடங்களை பாத்திரமாகப் பையில் வைத்துக்கொண்டு ஸ்தபதி புறப்பட்டார். அவர் சென்ற கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, இதுவரை தடுத்து நிறுத்தியதுபோல் நின்றிருந்த மழை, சரசர என்று பெய்யத் தொடங்கியது.வேகமாக தண்ணீர் வரும் குழாயை, அழுத்தமாகத் திருகி மூடினால்கூட இரண்டொரு துளி நீராவது வந்து பிறகுதான் நிற்கும். ஆனால், இங்கே இயற்கையாகப் பெய்து கொண்டிருந்த மழையை, ஒரே ஒரு கை அசைவில் நிறுத்திவிட்டார், மகான். அதுபோலவே ஸ்தபதி வரைபடத்தை பத்திரமாக எடுத்துக் கொண்டு நகர்ந்ததும், தடுத்து நிறுத்திய மழையை மறுபடியும் பெய்ய வைத்திருக்கிறார்.இயற்கையைக் கட்டுப்படுத்துபவன் இறைவன் என்றால், அந்த இறைவனுக்குச் சமமாக இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்த (செய்கிற) மகாபெரியவாளை அந்த தெய்வத்தின் அம்சம் என்றே பக்தர்கள் கொண்டாடுவதில் சந்தேகத்திற்கு இடமே இல்லைதானே!?
  • 303
அரிதான பெருமாள் திருக்கோலங்கள் கொண்ட கோவில்கள் :1. ஆசியாவிலேயே மிகப் பெரிய பள்ளி கொண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ள தலம் திருமயம். மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில் இது மட்டுமே.2. திருப்பதி ஏழுமலைக்கு மேல் நாராயணகிரி என்ற தலம் உள்ளது. இங்கு ஏழுமலையானின் பாதச்சுவடுகள் உள்ளன. இதனை ஸ்ரீவாரி பாதம் என்பார்கள். பெருமாள் திருமலையில் முதலில் தடம் வைத்த இடம் இது தான் என சொல்லப்படுகிறது.3. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவ மூர்த்தியின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.4. உடுப்பியில் உள்ள கிருஷ்ணருக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புடவை சாத்தி வழிபடும் முறை உள்ளது.5. ஆந்திர மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள ராமர் கோவிலில் உள்ள ஸ்ரீராமர், கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சி அளிக்கிறார்.6. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் இருக்கும் மூலவருக்கு தினமும் 3 லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பிறகு இந்த எண்ணெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.7. சிவ பெருமானைப் போலவே பெருமாளை மூன்று கண்களுடன் தரிசிக்க முடியும். சென்னை அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன.8. திருக்கண்ணபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார் கண்ணபுர பெருமாள்.9. திருச்சிக்கு அருகில் உள்ள வேதநாராயணன் கோவிலில் காட்சி தரும் பெருமாள் நான்கு வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். அதனாலேயே இவருக்கு வேதநாராயணன் என்ற பெயர் ஏற்பட்டது.10. கர்நாடகாவிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில், ரங்கநாதருக்கு படுக்கையாக இல்லாமல், குடைபிடித்தபடி காட்சி தரும் ஆதிசேஷனை தரிசனம் செய்யலாம். இங்கு ஆதிசேஷன் 7 தலைகளுடன் காட்சி தருகிறார்.11. திருமலை, கரூர் தான்தோன்றிமலை, கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருச்சி குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோவில்களிலும் தாயாருக்கு தனியாக சன்னதி கிடையாது.12. ஸ்ரீவைகுண்டத்தில் பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனிக்காமல், ஆதிசேஷன் குடைபிடித்து நின்ற கோலத்தில் காட்சி தருவதை காணலாம்.13. காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவிலில், பெருமாள் ஜோதி வடிவமாக இருப்பதாக ஐதீகம். இங்கு திருக்கார்த்திகை நாளன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடும் வழக்கம் உண்டு.14. தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பெருமாளை மூன்றடி உயரம் கொண்ட சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து வழிபடுகிறார்கள். இதன் இரு புறமும் சங்கு, சக்கரம் உள்ளது.15. மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில் பெருமாள் ஒரு கையை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சயனித்து இருக்கும் கோலத்திலும், சங்கு, சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார்.
  • 344
சாளக்கிராமம் வைத்து வழிபடுகின்ற வீட்டில் சகல தெய்வ சக்திகளும் அருள் செய்வதாக ஆசார்யர்கள் கூறுகின்றனர். சாளக்கிராமத்தை ஒரு நாளில் இருமுறை வழிபட வேண்டும்.சாளக்கிராமம் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டியது. அழகுக்காக ஷோ கேஸில் வைக்கக் கூடியது அல்ல. பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம், ஜலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். வலம்புரி சங்கை போல் பலமடங்கு மிகவும் அரிய பலன்களை தரக் கூடியது இந்த சாளக்கிராமம்.ஆனால், பூஜை அறையில் வைத்து வழிபடுவதாக இருந்தால், தினமும் நிச்சயமாக ஸ்நான சங்கல்பம் முடித்து, தூய்மையான கங்கை நீரினால் சாளக்கிராமத்தை அபிஷேகம் செய்ய வேண்டும்.உங்களால் அபிஷேகம் செய்ய முடியாத நாட்களில், உங்கள் குழந்தைகளை அபிஷேகம் செய்ய பழக்கப்படுத்துங்கள். நிச்சயம் உங்கள் வம்சத்துக்கே நல்ல பலன்கள் கிடைக்கும்.சாளக்கிராம பூஜை செய்பவன் உள்ளம் தூய்மையாகும். மஹா லஷ்மி கடாஷம் வீட்டில் குடிகொள்ளும். சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், பூஜை செய்பவர்களின் பாவங்கள் கழன்று ஓடும்.சாளக்கிராமத்தை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு. சாளக்கிராம பூஜை செய்பவர்களுக்கு எம பயம் ஏற்படாது.பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்ப காலம் பூஜை செய்த பலன்கள் ஒரே நாளில் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.
  • 293
ஆடி மாதத்தில் எத்தனையோ சிறப்புக்குரிய நாட்கள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு மட்டும் தனி சிறப்புகள் உள்ளது.ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும், அன்று விரதத்தை எப்படி இருப்பது, ஆடி வெள்ளியன்று என்ன செய்ய வேண்டும், ஆடி வெள்ளியில் எப்படி விரதம் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் மிகவும் சிறப்பான நாட்கள் என்றாலும், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி மிகவும் முக்கியமானதாகும். அதிலும் ஆடி வெள்ளி, பெண்களுக்கு மிக முக்கியமானதாகும். ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வரும். இந்த ஐந்து வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்பது சிறப்பானதாகும். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் ஏதாவது ஒரே ஒரு வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பானதாகும். ஆடி வெள்ளிக்கிழமைக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு உள்ளது என்பதையும், இந்த நாளில் எப்படி விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்த கொள்ளலாம்.பல விசேஷங்களைக் கொண்ட ஆடி மாதத்தில் இந்த ஆண்டு முதலில் வருவதே ஆடி வெள்ளி தான். இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஜூலை 19 ம் தேதி வருகிறது. ஜூலை 19, ஜூலை 26, ஆகஸ்ட் 02, ஆகஸ்ட் 09, ஆகஸ்ட் 16 ஆகிய 5 நாட்கள் ஆடி வெள்ளி வருகிறது. அதிலும் இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளி, சிவ பெருமானுக்குரிய பிரதோஷ நாளில் இணைந்து வருவது மிகவும் சிறப்பானதாகும். அம்பாளின் அருளையும், சிவனின் அருளையும் பெறுவதற்குரிய நாளாக இந்த நாள் அமைகிறது. அதனால் பிரதோஷ வழிபாட்டையும், அம்பாள் வழிபாட்டினையும் சேர்த்தே மேற்கொள்ளலாம்.சூரிய பகவான், கடக மாதத்தில் பயணிக்கும் மாதமே ஆடி மாதமாகும். வெள்ளிக்கிழமை என்பது செல்வத்திற்கும், சுக போகமான வாழ்க்கைக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமான கிரகமான சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும்.அதுவே ஆடி மாதத்தில் வரும் போது சுக்கிரனும், சந்திரனும் இணையும் நாளாக வெள்ளிக்கிழமை அமையும். இப்படி சுக்கிர, சந்திர சேர்க்கை ஏற்படும் போதும் பெண் தெய்வத்தின் சக்தி அதிகரித்து காணப்படும். அதனால் தான் ஆடி வெள்ளி அம்பிகைக்கு மிகவும் உகந்தது என சொல்லப்படுகிறது.திருமண தடை உள்ள பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் ஆடி வெள்ளியில் விரதம் இருக்கலாம். அதே போல், வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது, நிம்மதியே இல்லை, செல்வம் தங்கவேமாட்டேன் என்கிறது, தீராத கடன் பிரச்சினையில் சிக்கி இருக்கிறோம், கையில் பணமே தங்க மாட்டேன் என்கிறது, நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுகிறோம் என்கிறவர்கள் ஆடி வெள்ளியில் விரதம் இருந்து வழிபடலாம். கேட்ட வரங்களை தரக்கூடிய மகிமை மிக்கது ஆடி வெள்ளி விரதமாகும்.ஆடி வெள்ளி விரதம் இருப்பது மிகவும் சுலபமானதாகும். அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் விளக்கு ஏற்றுங்கள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றுவது சிறப்பு.கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள மகாலட்சுமியின் படத்திற்கு முன் அல்லது அம்பிகையின் படத்திற்கு முன் நெய் விளக்கு ஏற்றி வைக்கலாம். அம்பாள் படம் எதுவும் இல்லை என்றால் திருவிளக்கையே அம்பிகையாக பாவித்து விளக்கேற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.முடிந்தவர்கள் காலை, மதியம் இரு வேளையும் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் காலை ஒரு வேளை மட்டும் சாப்பிடாமல் விரதம் இருந்து, அம்பிகையை மனதார வேண்டிக் கொள்ளலாம்.அன்றைய தினம் அம்பிகைக்கு உரிய லலிதா சகஸ்ரநாமம், காமாட்சி அஷ்டகம், சௌந்தர்யலஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற அம்பாளுக்கு உரிய பாடல்கள் எதை வேண்டுமானாலும் படிக்கலாம்.பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்வதை விட ஸ்தோத்திரங்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
  • 652
'சிதம்பர ரகசியம்' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.நடராஜர் சன்னிதியில், மறைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைப் பற்றிய விளக்கமே இது.இந்த மறைவுப் பகுதி வழியாக பார்த்தால், வானமே எல்லையாகத் தோன்றும். இறைவன் எல்லையற்றவன்,புரிந்து கொள்ள முடியாதவன் என்பதற்காக, அமைக்கப்பட்ட சன்னிதி இது.இதுபோல், 'கணநாதர் ரகசியம்' என்ற அமைப்பை, தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் காணலாம்.சமீபகாலமாக, ராகு கோவில் என, இது பிரசித்தி பெற்றுள்ளது.இந்தக் கோவிலின் நுழைவு வாசலில், கொடி மரத்தை ஒட்டி, கணநாதர் ரகசியம் என, பெயரிடப்பட்ட சன்னிதி உள்ளது.பொதுவாக, சிவாலயங்களில் நுழைவு வாயிலின் இடதுபுறம் விநாயகர் சன்னிதி இருக்கும். இங்கே, விநாயகரின் இன்னொரு பெயரான கணநாதரின் பெயரில் சன்னிதி இருக்கிறது. இதன் வரலாறு அதிசயிக்கத்தக்கதாக உள்ளது.பகவான் பெரியவனா, பக்தன் பெரியவனா என்ற கேள்வியை ஆன்மிகத்தில் எழுப்புவதுண்டு.தன்னை விட பக்தனே பெரியவன் என, நமக்கு விட்டுத் தருகிறான், ஆண்டவன். இந்த தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது தான், இந்த சன்னிதி.ஒரு காலத்தில், இந்த கோவிலுக்குள் யாரும் நுழைய முடியாத நிலை இருந்தது. உள்ளே செல்ல முயன்ற பக்தர்கள், கீழே விழுந்து காயமடைந்தனர். இதற்கான காரணம் தெரியாமல் தவித்தனர்.கேரள நம்பூதிரிகளை அழைத்து வந்து, பிரசன்னம் (கோவில் தொடர்பான ஜோதிடம்) பார்த்த போது, கோவிலுக்குள் தீய சக்திகள் புகுந்துள்ளதும், பக்தர்களை உள்ளே வர விடாமல் தொல்லை செய்ததும் தெரிய வந்தது.அப்போது, நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மகான், அவ்வூருக்கு வந்தார். இவர், கும்பகோணம் அருகிலுள்ள திருவிசநல்லுாரில் பிறந்தவர். கரூர் அருகிலுள்ள நெரூரில் சமாதியானார். இதனால், நெரூர் மகான் என, அழைக்கப்பட்டார்.அவரிடம் பக்தர்கள் கோவிலின் நிலையை எடுத்துக் கூறினர். அவர் கோவிலுக்குள் வந்து, சிவ கணங்களுக்கு தலைவராக விளங்கும் விநாயகரையும், ஒரு யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்தார். ஆனால், இவை யார் கண்களுக்கும் தெரியாது. சன்னிதிக்குள் ஒரு விளக்கு ஏற்றப்பட்டது. உடனே, உள்ளே இருந்த தீய சக்திகளை நோக்கி, தீ ஜுவாலைகள் பாய்ந்தன. அவை, அலறியடித்து வெளியேறின.சமீபகாலமாக, ராகு தோஷ நிவர்த்திக்காக, மக்கள் இங்கு வருகின்றனர். இவர்கள், கணநாதர் சன்னிதியை வழிபட்டாலே போதும். சகல தோஷமும் நீங்கி விடும்.கும்பகோணத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் திருநாகேஸ்வரம் உள்ளது.
  • 663
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் கோவில் தான் அது. வேண்டுபவர்களுக்கு, விரும்பியதை வழங்கும் தலமாகக் இந்த கோயில் திகழ்கிறது.ஒவ்வொருமுறை நடை சாத்தும்போதும் பகலிலும் , இரவிலும் கோவில் அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்துயாரும் பசியாக இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு செல்கிறார்.அப்படி யாரேனும் பசியாக உள்ளேன் என்று சொன்னால் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவிட்டு பின் தான் கோவில் நடையை சாத்த வேண்டும். இதை ஈசனின் கட்டளையாகவே இன்றும் பின்பற்றுகின்றனர்.வியாக்ரபாதர் முனிவர் இங்கு பூஜை செய்து, இறைவன் கார்த்திகை - அஷ்டமியன்று காட்சி கொடுத்தார் . இறைவன் காட்சி கொடுத்த திதி இன்றும் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது. அன்றுமட்டும் சூரிய ஒளி சிவலிங்க திருமேனி மீது மாலையாக படும்.இந்தக் கோவில் கருவறையில் இரண்டு அடி உயரப் பீடத்தில், நான்கு அடி உயரமுடைய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது. மூலவரான இவரது பெயர் மகாதேவர் என்பதாகும். இருப்பினும் அனைவருக்கும் பரவலாக அறியப்பட்ட பெயர் வைக்கத்தப்பன் என்பதுதான். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் ‘வியாக்ரபுரீசுவரர்’ என்றும் இத்தல இறைவனை அழைப்பதுண்டு.இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.இடம் : வைக்கம் ( கோட்டயம் , கேரளா )இறைவன் : வைக்கத்தப்பன், வியாக்ரபுரீஸ்வரர்
  • 483
எல்லாமே 7 என்ற பெருமையைக் கொண்ட தலம் ஶ்ரீரங்கம்.7 பிராகாரம், 7 மதில்கள், ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் என ஏழு தாயார்கள், 7 உற்சவம், 7 திருவடி சேவை, 7 கண்டுகளிக்கும் சேவை என ஏகப்பட்ட 7 அதிசயங்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ளன. அதில் முக்கியமான 7 அதிசயங்கள் இன்றும் ஆச்சர்யத்தைக் கொடுப்பவை. அவை…1. வளரும் நெற்குதிர்கள்2. அசையும் கொடிமரம்3. ஸ்ரீராமாநுஜரின் திருமேனி4. தேயும் அரங்கனின் செருப்புகள்5. அரங்கனின் ஜொலிக்கும் திருக்கண்கள்6. ஐந்து குழி மூன்று வாசல்7. ரங்க விமானம்வளரும் நெற்குதிர்கள்20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நெல் சேமிப்பு கிடங்கிகள் வட்டவடிவமாக அமைந்தவை. மொத்தமாக 1500 டன் அளவுக்கு இந்த கிடங்கியில் நெல் சேமிக்க முடியுமாம். எந்தக் காலத்திலும் இந்த குதிர்களில் நெல் இல்லாமல் போனதே இல்லை என்ற பெருமையைக் கொண்டதாம் இவை. அதுபோல எத்தனை நெல் கொட்டினாலும் விரிவடைந்து ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்றும் அதிசயமாக இந்தக் குதிர்களைச் சொல்கிறார்கள்.அசையும் கொடிமரம்ரெங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தின் முன்பு விழுந்து வணங்கி உயர்ந்து நோக்கினால் அசையும் தோற்றத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் என்கிறார்கள். அப்படி அசையும் விதமாக காட்சி அளித்தால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.ஸ்ரீராமாநுஜரின் திருமேனிஸ்ரீராமாநுஜர் தமது 120-வது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள ஆண்டு மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் பகவத் சாயுஜ்யம் அடைந்தார். இவரது திருமேனி அரங்கனுடைய வசந்த மண்டபத்தில் அப்படியே பிரதிஷ்டை செய்யப்பட்டது. 884 ஆண்டுகள் கடந்தும் ஸ்ரீராமாநுஜரின் திருமேனி அப்படியே காட்சி தருவது திருவரங்கத்து அதிசயங்களில் ஒன்று. தானான திருமேனியில் இன்றும் தலைமுடி, கைநகம் போன்றவை இருப்பதையும் வளர்ந்திருப்பதையும் காணலாம்.தேயும் காலணிகள்திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள, பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் தேய்மானத்திற்கு பின் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரம் எனும் இடத்தில் தூணில் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை அங்கு சென்றவர்கள் கண்டிருக்கலாம்.இந்த காலணிகளைச் செய்வதற்காக காலம் காலமாக தனித்த தொண்டர்கள் இருக்கிறார்கள்.இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள். இரண்டுமே ஒன்றுபோலவே இருக்கும் என்பதும் அதிசயம்.6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த செருப்புகளை அரங்கனின் திருப்பாதத்தில் இருந்து கழற்றுவார்கள். அவை பயன்படுத்தப்பட்டவை போல தேய்மானம் கொண்டிருக்கும் என்பதும் அதிசயம்.ஸ்ரீரங்கனின் ஜொலிக்கும் திருக்கண்கள்ரங்கனின் திருக்கண்கள் விலை மதிப்பில்லாத வைரங்களால் உருவானவை என்றும், அவை விபீஷணானால் வழங்கப்பட்டவை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவை அயலார் காலத்தில் திருடு போய்விட்டன என்றும், இப்போது அவை ரங்கனின் திருக்கண்களில் இல்லை என்றும் சொல்கிறார்கள்ஐந்து குழி மூன்று வாசல்ஸ்ரீரங்கம் கோயிலின் தாயார் சந்நிதிக்கு வெளியே இருக்கும், ஐந்து குழி மூன்று வாசல் அற்புதமானது.இங்குள்ள ஐந்து குழிகள் வழியே, ஐந்து விரல்களை வைத்து தெற்கு பக்கம் பார்த்தால் பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிப்பதே ஐந்து குழி என்றும் மூன்று வாசல் என்பது பிரம்மத்தின் வழி என்பதும் பெரியோர்கள் வாக்கு.ரங்க விமானம்ஸ்ரீரங்கத்தின் பெருமைகளில் ஒன்றான ரங்க விமானம் சுயம்புவாக உருவானது. இந்த விமானத்தைச் சுற்றி 24 கி.மீ. தூரத்துக்குள் எங்கிருந்து வழிபட்டாலும் முக்தி நிச்சயம் என்கிறது ஸ்ரீரங்கத் தலவரலாறு.இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ஓம் என்கிற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது. இந்த தங்க விமானத்தில் உள்ள பரவாசு தேவர், கையில் அமுதக் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்த அமுதக் கிண்ணம் மெல்ல அவர் வாயை நோக்கி நகர்ந்து போவதாகவும், அது வாயருகில் சென்று சேர்க்கையில் இந்த உலகம் அழியும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.
  • 507
சனியின் கெடுபலன் தோஷம் குறைய , எந்தெந்த வழிபாட்டை ,எப்படி எப்படி செய்ய வேண்டும்?ஏழரைச் சனி, அட்டம சனி , பாவ தொடர்பு பெற்ற சனி திசை ,புத்தி கடுமையான கெடு பலனை கொடுக்கும்.சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அதன் கொடுமை தெரியும்.சனியால் பாதிக்கப்பட்டவர்கள் , கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்து வர நல்ல பலன்களை பெறலாம்.1. சனியின் குரு காலபைரவர்.சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சனியின் குருவான காலபைரவரை,தினசரி ராகு கால நேரத்தில் வழிபடுவது நல்லது. நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை தண்டிக்க காத்திருப்போம். ஆனால் நமக்கு குருவாக இருப்பவர்கள் , அவரை தண்டிக்காதே என கட்டளை இட்டால், வேறுவழியின்றி, நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், குருவின் வார்த்தையை மீறாமல் , தண்டிக்காமல் இருப்போம். அதுபோல் , சனியின் அதிபதியான கால பைரவரை வழிபடுவது, சனியின் தோஷத்தை நிச்சயம் குறைக்கும்.2.சனிக்கிழமை காலை, சனி ஹோரையில், காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, தோஷத்தைக குறைக்கும்.3. மண் அகல் விளக்கில் உபயோகப்படுத்தாத, காட்டான் சிவப்புத் துணியில், சிறிதளவு மிளகை கட்டி, நல்லெண்ணெய் ஊற்றி , சனிக்கிழமை, சனி ஓரையிலோ அல்லது சனிக்கிழமை ராகு கால நேரத்திலோ விளக்கேற்றி, காலபைரவர் காயத்ரி மந்திரத்தை 11 முறை கூறிவழிபட்டு, சிவன் கோயிலில் உள்ள சிவனையும் வழிபட்டு வர, தோஷம் நிச்சயமாக குறையும்.4.தினசரி விநாயகப் பெருமானை வீட்டிலும் ,கோயிலிலும் வழிபடுவது சனி தோஷத்தை குறைக்கும். சங்கடகர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.5. அனுமன் சாலிசா தினமும் படிக்கலாம்.6. தினசரி சுந்தரகாண்டத்தில் ஒரு சர்க்கம் (பகுதி) பாராயணம் செய்யலாம்.7.நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீராமஜெயம் மனதிற்குள் சொல்லலாம் அல்லது எழுதலாம்.8. பிரதோஷ பூஜையில் கலந்து கொள்பவர்களை, சனிபகவான் எந்தவிதத்திலும் பெரிய அளவில் துன்புறுத்துவதில்லை.9. குலதெய்வக் கோயிலுக்கு மாதம் ஒருமுறையோ அல்லது குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று வருவது நல்ல பலனைக் கொடுக்கும் .சனி தோசம் அண்டாது. தினசரி ஒரு நிமிடமாவது குலதெய்வத்தை பாராயணம் செய்பவர்களுக்கு, சனியின் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை தராது.10.முறையாக திதி தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவார்களையும், ஏழைகளுக்கும், வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், தங்களால் முடிந்த உதவிகளை செய்பவர்களுக்கு, சனி தோஷம் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது.11.எந்த உதவியும் மற்றவருக்கு செய்ய முடியாவிட்டாலும், கைப்பிடி அளவு அரிசியை, எறும்புப் புற்றில் தூவலாம். இது சனி தோஷத்தை நீக்க சக்திவாய்ந்த பரிகாரம்.12.நீதி நேர்மையுடன் வாழ்பவர்களையும், மனசாட்சிக்கு பயந்து வாழ்பவர்களையும், சனிபகவான் பெரிய அளவில் தண்டிப்பதில்லை. சுருக்கமாக சொன்னால் நேர்மையாக வாழ்பவர்களை, சனிபகவான் பெரிய அளவில் எந்தவிதத்திலும் தொந்தரவு படுத்துவதில்லை. லேசாக பட்டி ,டிங்கரிங் பார்த்து அனுப்பிவிடுவார்.தவறுகள் வாழ்க்கையில் கடுமையாக செய்திருந்தால், அவர்களை, சனி, அவருடைய ஆதிக்க காலத்தில், கரும்பு மிஷினில் ,அகப்பட்ட கரும்பை போல் பிழிந்து எடுத்து விடுவார்.கிட்னி, சட்னி ஆகாம இருக்க, Wanted வரக்கூடிய தேவையில்லாத ( மது,மாது,சூது) போன்ற கெட்ட பழக்கங்களை ,ஜோதிடரின் அறிவுரைப்படி ,ஆரம்பத்திலேயே அண்டவிடாமல், களை எடுப்பது நல்லது.இல்லைன்னா சனியின் ஆதிக்க காலத்தில், படுக்க வெச்சு, வாயில நெல்லு குத்திட்டு போயிரும்.பாவ தொடர்பு பெற்ற சனி, ராகு திசை, அட்டமாதிபதி திசையில் வரும் 71/2 ,அட்டம சனி, வேணாம்ம்ம் விட்டுறுறுறு உயிர்நாடிடிடி.அடே ரத்த ஓட்டமெல்லாம் நிக்குதுடா என்று சொல்வதைப்போல், சனியின் ஆதிக்க காலத்தில் ,உயிர் மட்டுமே உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த அளவு கஜகஜவென கசக்கி பிழிந்து விடுவார்.அதனால் வாழ்வும், தாழ்வும் உங்கள் கையிலே உள்ளது . உங்களை ,நீங்கள் தான் நெறிப்படுத்தி கொள்ள வேண்டும்.
  • 551
தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது.பழங்காலத்தில் தொண்ட மண்டலம், தொண்ட காருண்யம் என்ற காடுகளை திருத்தி நாடாக்கி அதனை பெளத்த மன்னர்கள் ஆண்டு வந்தனர்.கி.பி.3 ஆம் நூற்றாண்டில் இங்கு கல்விக்கூடம் சிறப்பாக இயங்கி வந்தது. வட இந்திய மாணவர்கள் இங்கு கல்வி பயின்றனர்.ஹிமசீதன மன்னர் அசுலங்கர் என்ற சமண அறிஞர் பொளத்தர்களை வாதிட்டு வென்று அவர்களை நாடு கடத்தினார் பின்னர் இங்கு சமண கல்வி கூடத்தை அமைத்தார். அப்போது இந்த ஊர் அறவழித்தாங்கி என அழைக்கப்பட்டது.பொற்காலத்தில் இந்த பகுதியை பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்த போது சிவனை போற்றும் சைவ நெறியானது வளம் பெற்றது.சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் {கி.பி.14ஆம் நூற்றாண்டில்} வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான் இருவருக்கும் இடையே பெரும்போர் மூண்டது.முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன் படைகள் நாசமடைவதைக்கண்டு வருந்தினர்.அன்று இரவு கால பைரவர் அவரது கனவில் தோன்றி நீ வருத்தப்படவேண்டாம் நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துனையிருப்பேன் என்றார்.அடுத்த நாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றான் அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூரை அழிபடைதாங்கி என பெயரிட்டார்.இந்த வெற்றியை அருளிய ஸ்ரீசொர்ணகாலபைரவருக்கு பெரியதொரு கோயிலையும் எழுப்பினார்.இக்கோயிலின் மகிமையானது திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலய ஸ்தலபுராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.ஸ்ரீபைரவப்பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல விதமான வெற்றிக்கும் வழியமைத்து தருகிறார்.சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே.தொல்லைகள் அகன்றிட மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகிட, மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபட, அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திட, தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்க, வம்பு வழக்குகளில் வெற்றி பெற்றிட, பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிட, தொட்டது துலங்கிட, எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட, பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.பைரவ பூஜைக்கு கைமேல் பலன் என்பது அனுபவ பூர்வ வசனம் ஆகிறது.சுமார் 500 வருடங்கள் பழைமையான திருக்கோயில். இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள்பாலிக்கிறார்.பொதுவாக பைரவரின் வாகனம் மேற்க்கு நோக்கி இருக்கும். காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம், தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது.ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன்வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும்.சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர்.பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர்.கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.பரிகாரங்களும்.... தீர்வும்....வெள்ளிக்கிழமை மாலை வில்வத்தினால் அர்ச்சனை செய்ய அஷ்ட தரித்திரம் விலகும்.பிள்ளைப்பேறு உண்டாகதேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து,செவ்வரளிப் பூவாள் 11 அஷ்டமிகளில் அர்ச்சித்தால் கைமேல் பலன்.வழக்குகளில் வெற்றி பெற, வியாபார லாபம் அடையபைரவருக்கு ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்து வடை, சர்க்கரைப் பொங்கல், தேன் முதலியன படைக்கவேண்டும்.இழந்த பொருட்களை திரும்ப பெற7 மிளகுகளை துணியில் மூட்டை கட்டி, நல்லெண்ணைய் தீபம் ஏற்ற இழந்தவற்றை திரும்ப பெறலாம்.திருமண தடை நீங்கஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன்.நவக்கிரக தோஷம் விலகசனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன்.ஸ்ரீ பைரவரை தொடர்ந்து இடைவிடாமல் வழிபடுவோருக்கு சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தன்னால் கிடைக்கும்.திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா அழிவிடைதாங்கி கிராமம் மதுரா பைரவபுரம்.தேய்பிறை மற்றும்.. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்...!வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்து அருளாசி பெறுவோமாக.....
  • 668
காளி தேவி பற்றிய ரகசியம்,சகல சித்தி அளிக்க கூடிய பத்ர காளி மந்திரம் மற்றும் வழிபாடு,கேட்ட வரம் தரும் காளிகா தேவி ஸ்லோகம்,மற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்:சோதிட ரகசியம் ..1. 3 காளி தேவியரை ஒரே நாளில் வழிபட 108 சிவ கோவில்கள் வழிபட்ட பலன் உண்டாம்.2. 9 காளி தேவியரை ஒரே நாளில் வழிபட 1008 சிவ கோவில்கள் வழிபட்ட பலன் உண்டாம்.3.ராகு பகவானின் கடுமையான தோசத்திற்க்கு உட்பட்டவர்கள்1.பெண் குழந்தைகளை பெற்றவர்கள் ......2.தீய பழக்கம் உடையவர்கள் .....3.பல நோய்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் .....இவர்கள் எல்லாம் கால பைரவனின் தாயான காளி தேவியை வழிபட ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபடுவர் ......தலைமுறை புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய சகல சித்திகளையும் அருளும்பத்ரகாளி மந்திரம்"ஓம் ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மிமஹா கன்யா ஸரஸ்வதீ தேவ்யை நமோ நமஹ"இந்தக் கலியுகத்தில் மேற்கண்ட காளி மந்திரத்தை இடைவிடாமல் இடையூறின்றி மனம் ஒன்றி ஜபித்தால் உடன் பலிதமாகும்.இதனை காளி எப்போதும் எதிர்நோக்கியுள்ளாள்,உபாசகனின்/தூய பக்தனின் கூக்குரலுக்கு உகந்த மிகவும் சக்தி மிக்க மந்திரம் ,இந்த காளி மந்திரம் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதை உபாஸிக்க, இந்த மந்திரம் ஏழு தலைமுறை புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.இதை தினமும் 1008 முறை ஜபம் செய்தால் சாதகனுக்கு உலகில் கிடைக்காத செல்வங்களே இல்லை என்று கூறுகிறது காளிகா புராணம்.செந்நிற ஆடை அணிந்து செந்நிறப்பூக்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற புஷ்ப மாலை அணிவித்து, சிவப்பு நிற மாலை அணிந்து, சிவப்பு நிற மணி மாலையால் (1008) ஜபம் செய்தால், பக்தனுக்கு எல்லா செல்வங்களையும் காளித்தாய் வழங்குவாள் என்று காளி புராணம் தெரிவிக்கிறது.நல்ல காரியங்களுக்கு மட்டுமே அன்னை காளி செவி சாய்ப்பாள். எனவே தூய மனதுடன், பக்தியுடன் நல்லவை நடக்க மட்டுமே இந்த மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.நிவேதனமாக பால் பாயசமும், தூய பசு நெய்யும் அன்னைக்கு படைக்க வேண்டும். காளிக்கு உகந்த நேரம் இரவு. இதை உபாசனை செய்தால் எதிரி அழிவான். வாக்கு பலிதம் உண்டாகும். அன்னையை உபாசிக்கும் பக்தன் புலமையும் செல்வமும் பெற்று பெரும் புகழ் அடைவான்.கேட்ட வரம் தரும் காளிகா தேவி ஸ்லோகம்"ஓம் காளிகாயை ச வித்மஹே ஸ்மசான வாசின்யை தீமஹிதன்னோ கோரா ப்ரசோதயாத்"இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் கேட்ட வரத்தை அளிப்பாள் காளிகா தேவி.காளிகா தேவி வழிபாட்டின் பலன்கள்-அமோக தைரியம், வாக்கு வன்மை, முன் கூட்டியறியும் தன்மை , நிகரற்ற செல்வம் , நோயற்ற நீண்ட வாழ்வு, ஞானம் பெறுதல்.காளிகா தேவியின் முக்கிய தலங்கள் :1. திருவெண்காடு - சுவேத காளி.2. அம்பகரத்தூர். (காரைக்கால் அருகில்).3. திருவக்கரை வக்கிர காளி, பாண்டிச்சேரி அருகில்.4. திருவாச்சூர் மதுர காளி.5. வெக்காளி அம்மன் - திருச்சி உறையூர்.6. மடப்புரம் காளி - திருபுவனம்.7. கல்கத்தா காளி, சென்னை மேற்கு மாம்பலம்.8. ஸ்ரீ காளிகாம்பாள், சென்னை.9. வெட்டுடையார் காளியம்மன் கொல்லங்குடி.காளிகா தேவியின் மூல மந்திரம் :"ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம்தக்ஷிணே காளிகேக்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும்" ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹாகாளிகா தேவியின் காயத்ரீ மந்திரம் :"ஓம் மஹாகாள்யை வித்மஹேச்மசான வாஸின்யை தீமஹிதந்நோ கோர ப்ரசோதயாத்"காளிகா தேவியின் மிகவும் சக்திவாய்ந்த மந்திரங்கள்!ஓம் காளி நமஹ; ஓம் மாகாளி நமஹ;ஓம் ஜெய காளி நமஹ; ஓம் உக்கிர காளி நமஹ;ஓம் உத்தண்ட காளி நமஹ; ஓம் ஓங்கார காளி நமஹ;ஓம் ஆஙகார காளி நமஹ; ஓம் ருத்ர காளி நமஹ;ஓம் நீலி நமஹ; ஓம் சூலி நமஹ;ஓம் திரிசூலி நமஹ; ஓம் முப்புரத்து நீலி நமஹ;ஓம் சங்கரி நமஹ; ஓம் பயங்கரி நமஹ;ஓம் பூரணி நமஹ; ஓம் காரணி நமஹ;ஓம் மோஹினி நமஹ; ஓம் யோகினி நமஹ;ஓம் வர்த்தினி நமஹ; ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;ஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;ஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ;ஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;ஓம் மந்தி தாரணி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;ஓம் காளி ! ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ!
  • 538
1. திருவாரூர் 2. திருவாரூர் அரநெறி 3. திருவாரூர்  பரவையுண்மண்டலி 4. திருக்கச்சி ஏகம்பம் 5. திருக்கச்சிமேற்றளி 6. திருக்கச்சி அனேக      தங்காவதம் 7. திருஒணகாந்தன் தளி 8. திருகச்சி நெறிக் காரைக்காடு9. திருஆமாத்தூர் 10. திருக்குரங்கணில் முட்டம் 11. திருமாகறல் 12. திருவோத்தூர் 13. திருவன்பார்த்தான் பனங்காட்டூர்14. திருவல்லம் 15. திருமாற்பேறு 16. திருஊறல் 17. திருஇலம்பையங் கோட்டூர் 18. திருவிற்கோலம் 19. திருவாலங்காடு 20. திருப்பாசூர் 21. திருவெண்பாக்கம் 22. திருக்கள்ளில் 23. திருவொற்றியூர் 24. திருவலிதாயம் 25. வட திருமுல்லைவாயில் 26. திருவேற்காடு 27. திருமயிலாப்பூர் 28. திருவான்மியூர் 29. திருக்கச்சூர்  30. திருஇடைச்சுரம் 31. திருக்கழுக்குன்றம் 32. திருஅச்சிறுப்பாக்கம்33. திருவக்கரை 34. திருக்கிளியனூர் 35. திருஅரசிலி 36. திருஇரும்பை மாகாளம் 37. திருநெல்வாயில் அரத்துறை 38. திருத்தூங்காணை மாடம் 39. திருக்கூடலையாற்றூர் 40. திருஎருக்கத்தம் புலியூர் 41. திருத்தினைநகர்42. திருச்சோபுரம் 43. திருவதிகை44. திருநாவலூர் 45. திருமுதுகுன்றம் 46. திருநெல்வெண்ணெய்47. திருக்கோவிலூர் 48. திருஅறையணி நல்லூர்49. திருஇடையாறு 50. திருவெண்ணெய்நல்லூர் 51. திருத்துறையூர் 52. திருவடுகூர்  53. திருமாணிகுழி 54. திருப்பாதிரிபுலியூர்55. திருமுண்டீச்சுரம் 56. திருப்புறவார் பனங்காட்டூர் 57. திருபுக்கொளியூர் அவிநாசி 58. திருமுருகன்பூண்டி 59. திருநணா 60. திருக்கொடிமாடச் செங்குன்றூர்61. திருவெஞ்ச மாக்கூடல் 62. திருப்பாண்டிக் கொடுமுடி 63. திருக்கருவூர் ஆனிலை 64. திருஆலவாய் 65. திருஆப்பனூர் 66. திருப்பரங்குன்றம் 67. திருஏடகம்  68. திருக்கொடுங்குன்றம் 69. திருவானைக்காவல்70. திருப்புத்தூர் 71. திருப்புனவாயில் 72. திருராமேச்சுரம்73. திருவாடானை 74. திருக்கானப்பேர் 75. திருப்பூவணம் 76. திருச்சுழியல் 77. திருக்குற்றாலம் 78. திருநெல்வேலி 79. திருவாட்போக்கி 80. திருக்கடம்பந்துறை 81. திருப்பராய்துறை 82. திருகற்குடி  83. திருமுக்கீச்சுரம் 84. திருச்சிராப்பள்ளி 85. திருஎறும்பியூர் 86. திருநெடுங்களம் 87. திருமேலை திருக்காட்டுப்பள்ளி88. திருஆலம்பொழில் 89. திருப்பூந்துருத்தி 90. திருக்கண்டியூர் 91. திருச்சோற்றுத்துறை 92. திருவேதிகுடி 93. திருத் தென்குடித்திட்டை 94. திருப்புள்ளமங்கை 95. திருச்சக்கராப்பள்ளி 96. திருக்கருக்காவூர் 97. திருப்பாலைத்துறை 98. திருநல்லூர் 99. திருஆவூர் பசுபதீச்சுரம்100. திருச்சத்திமுத்தம் 101. திருப்பட்டீச்சுரம் 102. திருபழையாறை வடதளி 103. திருவலஞ்சுழி104. திருக்குடமூக்கு 105. திருக்குடந்தை கீழ்கோட்டம் 106. திருக்குடந்தை காரோணம் 107. திருநாகேச்சுரம்108. திருவிடைமருதூர் 109. திருத்தென்குரங்காடுதுறை 110. திருநீலக்குடி 111. திருநல்லம் 112. திருவைகல் மாடக்கோயில் 113. திருக்கோழம்பம் 114. திருஆவடுதுறை 115. திருத்துருத்தி 116. திருஅழுந்தூர் 117. திருமயிலாடுதுறை 118. திருவிளநகர் 119. திருப்பறியலூர் 120. திருச்செம்பொன்பள்ளி 121. திருநனிப்பள்ளி 122. திருவலம்புரம் 123. திருதலைச்சங்காடு 124. திருஆக்கூர் 125. திருக்கடவூர் 126. திருக்கடவூர் மயானம் 127. திருவேட்டக்குடி 128. திருத்தெளிச்சேரி 129. திருத்தருமபுரம் 130. திருநள்ளாறு 131. திருக்கோட்டாறு 132. திருஅம்பர் பெருந்திருக்கோயில் 133. திருஅம்பர் மாகாளம்134. திருமீயச்சூர் 135. திருமீயச்சூர் இளங்கோயில் 136. திருத்திலதைப்பதி 137. திருசிறுகுடி 138. திருவண்ணாமலை 139. திருவீழிமிழலை 140. திருவன்னியூர் 141. திருக்கருவிலி 142. திருப்பேணு பெருந்துறை143. திருநறையூர் சித்தீச்சுரம்144. திருஅரிசில் கரைப்புத்தூர் 145. திருச்சிவபுரம்146. திருக்கலய நல்லூர்147. திருக்கருக்குடி 148. திருவாஞ்சியம் 149. திருநன்னிலம் 150. திருக்கொண்டீச்சுரம் 151. திருப்பனையூர் 152. திருவிற்குடி 153. திருப்புகலூர் 154. திருப்புகலூர் வர்த்தமானேச்சுரம் 155. திருஇராமனதீச்சுரம் 156. திருப்பயற்றூர் 157. திருச்செங்காட்டங்குடி 158. திருமருகல் 159. திருச்சாத்தமங்கை 160. திருநாகைகாரோணம் 161. திருச்சிக்கல் 162. திருக்கீழ்வேளூர் 163. திருத்தேவூர்164. திருப்பள்ளியின் முக்கூடல் 165. திருவிளமர் 166. திருகரவீரம் 167. திருபெருவேளூர் 168. திருத்தலையங்காடு169. திருக்குடவாயில் 170. திருச்சேறை  171. திருநாலூர் மயானம்  172. திருக்கருவாய் கரைப் புத்தூர்173. திருஇரும்பூளை 174. திருஅரதைப் பெரும்பாழி 175. திருஅவளிவநல்லூர் 176. திருப்பரிதி நியமம்177. திருவெண்ணி 178. திருப்பூவனூர் 179. திருப்பாதாளீச்சுரம் 180. திருக்களர் 181. திருச்சிற்றேமம் 182. திருஉசாத்தானம் 183. திருஇடும்பாவனம்184. திருக்கடிக்குளம் 185. திருத்தண்டலை நீள்நெறி 186. திருக்கோட்டூர் 187. திருவெண்டுறை 188. திருக்கொள்ளம்பூதூர்189. திருப்பேரெயில் 190. திருக்கொள்ளிக்காடு 191. திருத்தெங்கூர் 192. திருநெல்லிக்கா 193. திருப்பாம்புரம் 194. திருநாட்டியத்தான்குடி 195. திருக்கறாயில் 196. திருக்கன்றாப்பூர் 197. திருவலிவலம்198. திருக்கைச்சினம் 199. திருக்கோளிலி 200. திருவாய்மூர் 201. திருமறைக்காடு 202. திருஅகத்தியான்பள்ளி 203. திருவிடைவாய் 204. திருஈங்கோய்மலை 205. திருப்பாச்சிலாசிராமம்206. திருப்பைஞ்ஞீலி 207. திருக்காளத்தி 208. திருக்கோடியக்கரை 209. திருப்பாற்றுறை 210. திருமாந்துறை 211. திருஅன்பில் ஆலந்துறை212. திருக்கானூர் 213. திருப்பழூவூர் 214. திருமழபாடி 215. திருப்பெரும்புலியூர் 216. திருநெய்த்தானம்217. திருவையாறு 218 . திருபழனம் 219. திருக்குரங்காடுதுறை 220. திருவைகாவூர்221. திருவிசயமங்கை 222. திருப்புறம்பயம் 223. திருஇன்னம்பர்224. திருக்கொட்டையூர் 225. திருவியலூர் 226. திருந்துதேவன்குடி 227. திருசேய்ஞலூர் 228. திருஆப்பாடி 229. திருப்பனந்தாள் 230. திருமங்கலக்குடி 231. திருக்கோடிக்கா 232. திருக்கஞ்சனூர் 233. திருபந்தனை நல்லூர் 234. திருக்கடம்பூர்235. திருநாரையூர் 236. திருக்கானாட்டு முள்ளூர்237. திரு ஓமாம்புலியூர் 238. திருபழமண்ணிப் படிக்கரை 239. திருவாழ்கொளிப்புத்தூர் 240. திருகுரக்குகா241. திருக்கருப்பறியலூர்242. திருக்குறுக்கை 243. திருமணஞ்சேரி 244. திருஎதிர்கொள் பாடி 245. திருவேள்விக்குடி 246. திருஅன்னியூர் 247. திருநீடூர் 248. திருபுன்கூர்249. திருநின்றியூர் 250. திருக்கடைமுடி 251. திருக்கண்ணார் கோவில் 252. திருப்புள்ளிருக்கு வேளூர் 253. திருக்கோலக்கா 254. திருசீர்காழி 255. திருக்குருகாவூர் வெள்ளடை256. திருக்கீழைத் திருக்காட்டுப்பள்ளி 257. திருவெண்காடு 258. திருப்பல்லவனீச்சரம் 259. திருச்சாய்க்காடு 260. திருக்கலிக்காமூர் 261. தென்திருமுல்லைவாயில் 262. திருமயேந்திரப்பள்ளி 263. திருநல்லூர் பெருமணம் 264. திருக்கழிப்பாலை 265. திருநெல்வாயில்266. திருவேட்களம் 267. திரிகோணமலை 268. திருக்கேதீச்சரம் 269. திருக்கோகர்ணம் 270. திருஅஞ்சைக் களம் 271. திருப்பருப்பதம் 272. திருஇந்திர நீலபருப்பதம்273. திருஅனேக தங்காவதம் 274. திருக்கேதாரம்275. திருநொடித்தான் மலை 276. திருத்தில்லைதிருச்சிற்றம்பலம்
  • 456
ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!  இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலைகார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!பழனி முருகன் இரகசியம்அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப்பட்டுள்ளது.லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!அந்த வியர்வை பெருக்கெடுக்கும். அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது. அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.கீழே வைக்கப்பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப்படும். இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.  இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப்படுகிறது. அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள். கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.இப்பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப்படுகிறது.தற்போது, மலை மீது காணப்படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கோயில் கருவறையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார். அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.இந்த பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப்படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!
  • 351
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறையில் திருப்பணி செய்த சித்தர்களை நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர். உலகில் தீயவர்களை அழித்து நல்லவர்களை காத்திட முருகப்பெருமான் அவதரித்த தலமாக திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூர் முருகன் கோயில் புராண காலத்திலிருந்தே போற்றப்படுகிறது. இக்கோயிலில் இன்றளவும் பேசப்படும் ஐந்து சித்தர்களின் ஜீவ சமாதியை பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். அவர்கள் இறைவனின் கட்டளைக்கு இணங்கவே கோயில் திருப்பணி முடித்து ஜீவசமாதியாகி தங்கள் பிறவியின் பயனை அடைந்ததாக கூறப்படுகிறது.கடற்கரை மட்டமும் இக்கோயில் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மட்டமும் ஒரே அளவாக இருந்தாலும், கடல் நீர் இக்கோயிலின் உள்ளே புகாதவாறு ஞான நுட்பத்துடன் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் திருப்பணியை செய்தவர்களில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி, ஆறுமுகசாமி, வள்ளிநாயகம் சாமி ஆகிய ஐந்து சித்தர்களின் பக்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி ஆகிய மூன்று சுவாமிகளும் திருக்கோயிலின் உள் பிராகாரத்தில் குரு பகவான் சன்னிதிக்கு எதிரே மூன்று தூண்களில் நின்ற கோலத்தில் சிலை வடிவில் காட்சி அளிக்கின்றனர்.ஜீவசமாதி அடைந்த இம்மூவர் சமாதி திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக் கிணறு அருகிலும் கோயில் ராஜகோபுரம் வடக்கு டோல்கேட் அருகே வள்ளி நாயகம் சுவாமிக்கு ஜீவசமாதி உள்ளது.ராஜகோபுரம் திருப்பணி செய்த ஸ்ரீ தேசிக மூர்த்தி சுவாமி ஜீவசமாதி ஸ்ரீ வைகுண்டத்திற்கு அருகே உள்ள ஆழ்வார்தோப்பில் அமைந்துள்ளது. இந்த ஜீவசமாதியை திருவாவடுதுறை ஆதீனம் பராமரித்து வருகிறது.இந்த ஐந்து ஜீவ சமாதிகளிலும் நாள்தோறும் பூஜைகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு சுவாமிகளுக்கும் ஜீவசமாதியான நட்சத்திரத்தன்று குரு பூஜையும் நடத்தப்படுகிறது.திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து 67 மீட்டர் தொலைவில் உள்ளது. 133 அடி உயரமுள்ள திருக்கோயிலின் ராஜகோபுரம் கடற்கரையிலிருந்து 140 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இக்கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. திருச்செந்தூர் முருகன் கோயிலில் கல் மண்டபம், ராஜகோபுரம், கிரி பிராகாரம் போன்ற திருப்பணி செய்த அடியவர்களை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன. குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் இங்கு நம் கோரிக்கைகளை வைத்து இந்த ஜீவசமாதிகளில் உட்கார்ந்த மனதார தியானித்து வந்தால் நம் மனக்குறைகள் தீர்ந்து சிறப்பாக வாழலாம்.
  • 351