சினிமா செய்திகள்
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
Ads
 ·   ·  1421 news
  •  ·  0 friends
  • 1 followers

சர்வதேச சமுத்திர தினம் இன்று

சர்வதேச சமுத்திர தினம் இன்றாகும். இன்றைய நாளிற்கான தொனிப்பொருள் பெருங்கடலின் ஆழத்தைப் புதுப்பித்தல் என்பதாகும்.

1992 ஆம் ஆண்டு இது போன்று ஒரு நாளில் பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ நகரில் புவி மாநாடு இடம்பெற்றது.

இதன்போது சமுத்திரங்களினால் மனித சமூகத்திற்கு கிடைக்கப் பெறும் வளங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கனடா முன்வைத்தது.

பின்னர் இந்த கோரிக்கை 2008 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சர்வதேச பெருங்கடல் அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

அன்றுமுதல் வருடந்தோறும் ஜுன் 8 ஆம் திகதி சர்வதேச சமுத்திர தினமாக அறிவிக்கப்பட்டது.

பூமியில் சுமார் 70 சதவீதமான பகுதி சமுத்திரங்களினால் வியாபித்துள்ளதுடன் பூமிக்கு தேவைப்படும் 50 சதவீத ஒட்சிசனை சமுத்திரங்களே உற்பத்தி செய்கின்றன.

சமுத்திரங்களை நம்பி அன்றாடம் தமது வாழ்வாதாரங்களைக் கொண்டு செல்லும் மக்களின் தொகை எண்ணில் அடங்காதவை.

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு புரத உணவிற்கான ஆதாரமாகவும் முக்கிய போக்குவரத்துப் பாதையாகவும் சமுத்திரங்கள் அமைந்துள்ளன.

உலகில் நீர் வளம், மீன் வளம் மற்றும் இதர கடல்சார் செயற்பாடுகளுக்கும் மிக முக்கியமான ஆதாரமாக சமுத்திரங்கள் அமைந்துள்ளன.

ஆனால் மனிதனின் சுயநலத்தினால் சமுத்திரங்கள் தற்போது அழிவடைந்து வருகின்றன என்றால் மிகையாகாது.

கடல் கொந்தளிப்பு, காலநிலை மாற்றம் என்பவற்றிற்கு மனிதனின் பொறுப்பற்ற நடத்தைகளே காரணம்.

இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளினால் உருவாகும் வளி மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் வலுவானதோர் உடன்படிக்கையை ஐ.நா கொண்டு வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் புலனாய்வு நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

அத்துடன் பிளாஸ்டிக் பாவனையினால் பூமி கொடிய அபாயங்களை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

இந்த மாசுபடுத்தல் அலை கட்டுப்படுத்தப்படா விட்டால் 2040ஆம் ஆண்டளவில் கடலிலுள்ள மீன்களின் மொத்த அளவைவிட பிளாஸ்டிக் அளவு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 8.8 மில்லியன் டன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சமுத்திரங்களில் சேர்கின்றன.

உலக சமுத்திரத்தின் ஒவ்வொரு சதுர கிலோமீற்றரிலும் 18,000 பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பதுடன் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் மரணிக்கின்றன.

ஆழி சூழ் உலகு என்பதற்கு ஏற்ப இவ்வுலகில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இயற்கை நமக்கு அளித்துள்ள வளங்களிலே நீர் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.

நீர் வளப் பாதுகாப்பினை மேற்கொள்ளாவிடின் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

நீர் இல்லாத பாலை நிலத்தில் வாழ்க்கை எவ்வாறிருக்கும்? என்பதை நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் சமுத்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது எமது தலையாயக் கடமையாகும்.

000

  • 716
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads