சினிமா செய்திகள்
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
Ads
 ·   ·  1428 news
  •  ·  0 friends
  • 1 followers

காலநிலை மாற்றம் குறித்து தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், அபிவிருத்தி கண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று உலக சுற்றாடல் தின நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

”உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 ஆம் திகதிமுதல் தேசிய சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டில் காடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடளாவிய ரீதியில் பல விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சில அபிவிருத்தியடைந்த நாடுகள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த இலக்கை அடைய இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளன. மேலும் பெற்றோலிய உற்பத்தி செய்யும் நாடுகளும் உள்ளன.

இவற்றுக்கு மத்தியில் இலங்கை போன்ற சிறிய நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சிக்கித் தவிக்கின்றன. அதற்கு நாம் இப்போது புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பாக நிதி அமைச்சில் தனிப் பிரிவை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துடன் சுற்றுச்சூழல் கொள்கைகளும் கிராமத்திற்கு செல்கிறது. எனவே இந்த வேலைத்திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்துவோம்.

இங்கு ஒரு முக்கிய விடயமாக காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தை நிறுவ நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அந்தப் பணிகள் முடிந்ததும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் அதனை சட்டப்பூர்வமாக்க எதிர்பார்க்கின்றோம்.

காலநிலை மாற்றத்திற்கு முகங்கொடுப்பது தொடர்பான சர்வதேச அளவிலான ஆராய்ச்சிக்காக இந்தப் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான நிதியைப் பெறுவதிலும் இன்று சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்த ஆண்டு யுக்ரேன் யுத்தத்துக்கு பயன்படுத்திய பணத்தைக் காலநிலை மாற்றத்துக்கு

ஈடுகொடுக்க வழங்கியிருந்தால், அந்தப் பணம் இரண்டு ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ரஷ்யா செலவழித்த பணம் இன்னும் கணக்கிடப்படவில்லை.

மேலும், காஸா போருக்குப் பயன்படுத்தப்பட்ட பணமும், அதற்காக அனுப்பப்பட்ட ஆயுதங்களின் செலவையும் இந்த நடவடிக்கைகளுக்கு வழங்கியிருந்தால், உலகையே மாற்ற முடியும். ஆனால் இந்தப் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே, வெப்பமண்டலப் பிரதேசம் என்ற வகையில் எமக்குத் தேவையான பணத்தை நாமே தேடிக்கொள்ள வேண்டும்.

அதன்படி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலைக் கையாள்வதில் இலங்கையின் வகிபாகம் பாரம்பரியத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை.

நாம் இன்னும் முன்னோக்கிச் சென்று பொருளாதாரக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கையிலும் இதனைச் சேர்க்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

  • 458
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads