சினிமா செய்திகள்
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
Ads
 ·   ·  1428 news
  •  ·  0 friends
  • 1 followers

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 27 ஆயிரம் பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை - கல்வி முறைமையில் பாரிய பின்னடைவு என அவதானிகள் சுட்டிக்காட்டு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 27,970 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை என பரீட்சைத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. .

அதன்படி, பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 10.04 வீதமானவர்கள் இவ்வாறு சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேநேரம் மூன்று பாடங்களிலும் 'A' சித்தியை 10,484 பரீட்சார்த்திகள் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இது 3.9 வீதம் எனவும் கூறியுள்ளார்.

விண்ணப்பித்தவர்களில் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இது 64.33 வீதம் ஆகும்.

இவ்வருடம் பரீட்சைக்கு தோற்றிய 190 விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 146 தனியார் விண்ணப்பதாரர்களும் 44 பாடசாலை விண்ணப்பதாரர்களும் உள்ளதாகவும் தெரிவித்துளார்.

இதேநேரம் 2023 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதம் ஆண் பரீட்சார்த்திகளின் வீழ்ச்சியையும் பெண் பரீட்சார்த்திகளின் அதிகரிப்பையும் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகளை ஆராயும் போது இது தெளிவாக உள்ளது எனவும் இது கல்வித்துறையில் உள்ள அனைவரும் அவதானம் செலுத்த வேண்டிய நிலை என குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல் நிலைமைகள் காரணமாக உரிய முறையில் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாமல் தவித்த மாணவர் குழுவொன்று இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாக அவர் கூறினார்.

மேலும், பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 27,000 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையாமை இலங்கைக் கல்வி முறைமையில் பாரிய பின்னடைவை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்தர மீள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக பரீட்சை திணைக்களத்தின் ஒன்லைன் முறையானது ஜூன் மாதம் 5 ஆம் திகதிமுதல் 19 ஆம் திகதி வரை திறக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 519
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads