சினிமா செய்திகள்
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
Ads
 ·   ·  1428 news
  •  ·  0 friends
  • 1 followers

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 ஆண்டுகள் பூர்த்தி!

தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றுதான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொதுசன நூலகம், சிங்கள பேரினவாதிகளால் எரிக்கப்பட்ட நிகழ்வு.

உலகில் எங்கும் காணக்கிடைக்காத, பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள், நூல்கள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என பல பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டிருந்ததது யாழ்ப்பாண நூலகம். 1981 ஜூன் 04ஆம் திகதி இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேளை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர்.

1981 மே 31 ஆம் திகதியன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டுடிருந்த வேளை, மர்ம நபர்களால் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.

இதில் வெடித்த வன்முறையால், யாழ்ப்பாணத்தின் பல வணிக நிறுவனங்கள், கடைகள், ஈழநாடு தினசரி அலுவலகம் போன்றவை கொளுத்தப்பட்டன.

இதன்போதுதான் பல வரலாற்றுப் பொக்கிஷங்களின் இருப்பிடமான யாழ்ப்பாண நுலகத்தையும் சிங்களப் பேரினவாத கும்பல் எரித்துச் சாம்பலாக்கியது. இந்த பண்பாட்டு அழிப்பு இடம்பெற்று இன்றுடன் 43 அகவைகள் பூர்த்தியாகின்றன.

1930 களில் கே.எம்.செல்லப்பா என்பவர் தான் சேகரித்து வைத்திருந்த நூல்கள், பத்திரிகைகளைக் கொண்டு 1933ஆம் ஆண்டில் தனது வீட்டிலேயே வாடகை நூலகம் ஒன்றை தொடங்கினார்.

சிலரின் ஆலோசனையின் கீழ் 1934 ஒகஸ்ட் 1ஆம் திகதியன்ற யாழ்ப்பாண பொது மருத்துவமனை வீதியில் வாடனை அறையொன்றை ஏற்பாடு செய்து 844 நூல்கள், 36 பருவ வெளியீடுகளுடன் யாழ்ப்பாண பொது நூலகம் தொடங்கப்பட்டது. இட நெருக்கடியின் காரணமாக 1936ஆம் ஆண்டில் நகர மண்டபத்துக்கு நூலகம் மாற்றப்பட்டது.

இவ்வாறு தமிழ் பண்பாட்டின் அடையாளமாக திகழ்ந்த நூலக எரிப்பானது, தமிழர்களை உளவியல் ரீதியாக அடுத்தகட்டத்துக்கு நகர்த்திய ஒரு வரலாற்று நிகழ்வாக மாறியது.

2003 ஆம் ஆண்டு எரிக்கப்பட்ட நூலகக் கட்டிடத்தை புதுப்பித்து திறக்க முயன்றது இலங்கை அரசாங்கம். அதற்கு தமிழ் தேசிய தமிழ் அரசியல் தலைவர்கள்  கடும் எதிர்ப்புகளை வெளியிட்டனர் ஆனால் அதையும் மீறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடின முயற்சியால் மீள் கட்டுமாணம் செய்யப்பட்டு தற்போது யாழ்ப்பாண நூலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் 97ஆயிரம் நூல்கள் எரிக்கப்பட்டமையானது, வெறும் நூலக எரிப்பு மட்டுமல்ல, தமிழர்களின் ஆறாத வடுக்களில் ஒன்றாக தற்போது வரையில் காணப்படுகின்றது. இது தமிழ் வாசிப்புப் பண்பாட்டுக்குப் பேரழிவு. காலத்தால் அழிக்க முடியாத இந்த சோகம் நிகழ்ந்து 43 வருடங்கள் உருண்டோடிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

  • 886
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads