சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8218 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தேநீர்க் கடை நடத்திக்கொண்டே 26 நாடுகளுக்குப் பயணம் செய்த முதியவர் காலமானார்

கேரளாவில் தேநீர்க் கடை நடத்தி அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் 26 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த முதியவர் கே.ஆர்.விஜயன் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71.

கேரளாவில் தேநீர்க் கடை நடத்தி உலகம் முழுவதும் சுற்றிய கே.ஆர்.விஜயன் அனைவராலும் அறியப்படக்கூடியவர். கொச்சின் நகரைச் சேர்ந்த கே.ஆர்.விஜயன், அவரின் மனைவி மோகனாவுடன் ஏராளமான நாடுகளுக்குச் சென்று கேரள மாநிலத்தில் பிரபலமானவர்.

சுற்றுலா செல்வதற்காகவே வங்கியில் கடன் பெற்று அந்தக் கடனையும் முறையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளார் விஜயன். அவரின் வங்கிக் கணக்குகளைப் பார்த்த வங்கி நிர்வாகம் தொடர்ந்து சுற்றுலா செல்லவும் கடன் அளித்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் ரஷ்யாவிலிருந்து விஜயனும், அவரின் மனைவி மோகனாவும் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கேரளா திரும்பினர். அடுத்ததாக, ஜப்பான், வியட்நாம், கம்போடியா நாடுகளுக்குச் செல்லவும் இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில் விஜயன் திடீரென்று காலமானார்.

விஜயன் தனக்குக் கிடைக்கும் தேநீர் விற்பனையின் வருமானத்தின் மூலம் இதுவரை 26 நாடுகளைக் கடந்த 14 ஆண்டுகளாகச் சுற்றிப் பார்த்துள்ளார். கே.ஆர்.விஜயன், மோகனா தம்பதியின் பெயர் இந்திய ஊடகங்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச ஊடகங்கள், சுற்றுலாவுக்கான பிரத்யேகத் தளங்கள், ஊடகங்களிலும் பிரபலமாகும்.

கொச்சியில் உள்ள சலீம் ராஜன் சாலைக்கு அடுத்ததாக கே.ஆர்.விஜயனின் தேநீர்க் கடை அமைந்துள்ளது. இதுவரை சென்ற 26 நாடுகள், 6 கண்டங்கள், அதன் புகைப்படங்கள், அங்கு விஜயன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் கடையில் வைத்திருந்தார். இதைப் பார்ப்பதற்காகவே இவரின் கடைக்கு ஒரு கூட்டம் வரும். முதன்முதலில் 2007-ம் ஆண்டு எகிப்து நாட்டுக்கு விஜயன், மோகனா தம்பதி சுற்றுலா செல்ல விரும்பி, வங்கியில் கடன் கேட்டனர். நீண்ட இழுபறிக்குப் பின் வங்கியில் கடன் கிடைத்தது. இருவரும் சுற்றுலா சென்றுவந்தபின், வங்கியில் பெற்ற கடனை விஜயன் முறைப்படி திருப்பிச் செலுத்தினார். இதனால் வங்கியில் கிடைத்த நற்பெயரைக் கொண்டு அடுத்தடுத்து நாடுகளுக்குச் சுற்றுலா செல்ல விஜயன் தொடங்கினார்.

விஜயனின் புகழ் கேரளாவில் பரவத் தொடங்கியபின், பலரும் விஜயன், மோகனாவுக்குச் சுற்றுலா செல்ல ஸ்பான்ஸர் செய்து உதவி செய்தனர். சிலர் டிக்கெட் எடுத்துக் கொடுப்பது, தங்குமிடம் வழங்குவது எனப் பல செலவுகளைச் செய்தனர். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ரஷ்யா நாடுகளுக்கு ஸ்பான்ஸர் மூலமே விஜயன் சுற்றுலா சென்றுவந்தார்.

விஜயனின் புகழைப் பார்த்த ஒரு சுற்றுலா நிறுவனம், தனது நிறுவனத்தின் தூதராக விஜயனை நியமித்து, தன்னுடைய விளம்பரங்களில் விஜயனைப் பயன்படுத்தியது.vஅதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு, "சாயா வீட்டு விஜயன்டேயும் மோகனாயுடேயும் லோக சஞ்சாரங்கள்" என்ற தலைப்பில் விஜயன், மோகனா தம்பதி புத்தகம் வெளியிட்டு, அதில் தங்களின் சுற்றுலா அனுபவங்களைத் தெரிவித்திருந்தனர்.

  • 622
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads