சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  7897 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நாடாளுமன்றத்திற்கு சென்று உதயநிதி புகழ் பாடிக்கொண்டிருக்கின்றனர் - வானதி

ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அலட்சியப்படுத்துவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டுறவை அடிப்படையாகக் கொண்ட நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது, உண்மையில் தமிழக மக்களின் எதிர்காலத்தையும் புறக்கணிக்கும் செயலாகும். அனைத்து மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அதிகாரமிக்க திட்டக்குழுவான நிதி ஆயோக்கில் பங்கேற்று ஒத்துழைப்பதன் மூலம், நமது தமிழகத்தின் கருத்துக்களையும் தேவைகளையும் மத்தியக் குழுவில் பதிவு செய்து அதற்கான பலன்களைப் பெற முடியும். 

ஆனால், தேவையற்ற அரசியல் காரணங்களைக் காட்டி, இந்த நல்ல வாய்ப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அலட்சியப்படுத்துவது முறையல்ல, இது ஜனநாயகத்திற்கு எதிரானதும் கூட.இது ஒருபுறமிக்க, மத்திய அரசுடன் கைகோர்த்து மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடவேண்டிய, தமிழக எம்பி-க்களோ, கொடி பிடிப்பதற்கும் கோஷமிடுவதற்கும் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர். 

தமிழக மக்களின் தேவைகளைப் பற்றி விவரிப்பதை விட்டுவிட்டு, நாடாளுமன்றத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிரான போக்கை முன்னெடுக்கும் திமுக அரசு ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலன்களையும் தேவைகளையும் குழித்தோண்டி புதைக்க கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • 329
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads