சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  1293 news
  •  ·  0 friends
  • 1 followers

ஆயுத ஏற்றுமதியாளராக மாறிய இந்தியா - உலகின் முதல் 25 நாடுகளின் பட்டியலுக்குள் நுழைவு

ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா தற்போது ஆயுத ஏற்றுமதி நாடாக வளர்ச்சியடைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய, உலகின் முதல் 25 ஆயுத ஏற்றுமதியாளர்களின் பட்டியலில் இந்தியா தற்போது நுழைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை உற்பத்தி 74,054 கோடி இந்திய ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் 108,684 கோடி ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக மாறியது.

எவ்வாறாயினும் தற்போது முதல் 25 ஆயுத ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை, தனியார்துறை மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பாதுகாப்பு ஏற்றுமதியை அடைய பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அண்மைய கணக்கெடுப்பு காட்டுகிறது.

மேலும், பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் ஏற்றுமதி அனுமதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதன்படி, 2023 ஆம் நிதியாண்டில் இந்திய அரசு வழங்கிய ஏற்றுமதி அனுமதிகளின் எண்ணிக்கை 1,414 ஆகும். இந்த எண்ணிக்கை 2024 ஆம் நிதியாண்டில் 1,507 ஆக அதிகரித்துள்ளது.

டோனியர்-228, பீரங்கி, பிரம்மோஸ் ஏவுகணைகள், பினாகா ராக்கெட்டுகள் மற்றும் லாஞ்சர்கள், ரேடார்கள், சிமுலேட்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் போன்ற விமானங்கள் போன்ற பரந்த அளவிலான பாதுகாப்பு பொருட்கள் மற்றும் உபகரணங்களை சுமார் 100 உள்ளூர் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

  • 435
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads