சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  1293 news
  •  ·  0 friends
  • 1 followers

வேட்பாளர் வைப்புத்தொகை 43 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை - ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் சாத்தியமில்லை என அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை தொடர்பில் 43 வருடங்களாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பணத்தை மீதப்படுத்துவதற்கும், ஆதரவு வேட்பாளர்களை தடுப்பதற்கும் வைப்புத்தொகை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ;

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 50,000 ரூபாவை மட்டுமே வைப்பிலிட வேண்டும். அதேசமயம் சுயேற்சை வேட்பாளர் அல்லது வேறு ஏதேனும் கட்சி அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 75,000 ரூபாவை மட்டுமே வைப்பிலிட வேண்டும்.

இந்தத் தொகையை அதிகரிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த தொகையானது அரசியல் கட்சிகளுக்கு 2.5 மில்லியன் ரூபாவாகவும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு 3 மில்லியனாகவும் அதிகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு முன்மொழிந்தது.

இதுவொரு பொருத்தமான முன்மொழிவாக இருந்த நிலையில், கடந்த தேர்தலின் போது 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், முதல் இரண்டு போட்டியாளர்களைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் செலுத்திய வைப்புத்தொகை ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால், இம்முறைத் தேர்தலில் எந்தவொரு அடிப்படையும் இன்மையால் வேட்பாளர்களின் எண்ணிக்கை 80 அல்லது 85 ஆக இருக்கலாம்.

மேலும், வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்காகவும் பெரும் தொகை செலவிடப்படும்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முன்மொழியப்பட்ட திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றுகையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சில காலத்திற்கு முன்பு இந்த முன்மொழிவை முன்வைத்த போதும், ஒரு சட்டத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னதாக பல்வேறு நடைமுறைகள காணப்படுவதாகவும் அவர் இந்தபோது சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இல்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 439
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads