சினிமா செய்திகள்
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவராஸ்ய தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
 ‘எல் 2: எம்புரான்’ படத்தின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டது
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கல
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன்
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவ
அமிதாப்பச்சன் சந்தித்த பணப் பிரச்சனை
நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார்.அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்க வேண்ட
நகைச்சுவை நடிகர் நாகேஷ்
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் க
பாரதிராஜாவிற்கு சிவாஜி கணேசன் கூறிய அறிவுரை
சிவாஜி கணேசன் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது சிவாஜி கணேசனை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா ந
Ads
 ·   ·  2805 news
  •  ·  1 friends
  • 2 followers

வேட்பாளர் வைப்புத்தொகை 43 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை - ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் சாத்தியமில்லை என அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை தொடர்பில் 43 வருடங்களாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பணத்தை மீதப்படுத்துவதற்கும், ஆதரவு வேட்பாளர்களை தடுப்பதற்கும் வைப்புத்தொகை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ;

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 50,000 ரூபாவை மட்டுமே வைப்பிலிட வேண்டும். அதேசமயம் சுயேற்சை வேட்பாளர் அல்லது வேறு ஏதேனும் கட்சி அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 75,000 ரூபாவை மட்டுமே வைப்பிலிட வேண்டும்.

இந்தத் தொகையை அதிகரிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த தொகையானது அரசியல் கட்சிகளுக்கு 2.5 மில்லியன் ரூபாவாகவும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு 3 மில்லியனாகவும் அதிகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு முன்மொழிந்தது.

இதுவொரு பொருத்தமான முன்மொழிவாக இருந்த நிலையில், கடந்த தேர்தலின் போது 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், முதல் இரண்டு போட்டியாளர்களைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் செலுத்திய வைப்புத்தொகை ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால், இம்முறைத் தேர்தலில் எந்தவொரு அடிப்படையும் இன்மையால் வேட்பாளர்களின் எண்ணிக்கை 80 அல்லது 85 ஆக இருக்கலாம்.

மேலும், வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்காகவும் பெரும் தொகை செலவிடப்படும்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முன்மொழியப்பட்ட திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றுகையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சில காலத்திற்கு முன்பு இந்த முன்மொழிவை முன்வைத்த போதும், ஒரு சட்டத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னதாக பல்வேறு நடைமுறைகள காணப்படுவதாகவும் அவர் இந்தபோது சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இல்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 553
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads