சினிமா செய்திகள்
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
Ads
 ·   ·  3000 news
  •  ·  1 friends
  • 2 followers

வேட்பாளர் வைப்புத்தொகை 43 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை - ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் சாத்தியமில்லை என அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை தொடர்பில் 43 வருடங்களாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பணத்தை மீதப்படுத்துவதற்கும், ஆதரவு வேட்பாளர்களை தடுப்பதற்கும் வைப்புத்தொகை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ;

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 50,000 ரூபாவை மட்டுமே வைப்பிலிட வேண்டும். அதேசமயம் சுயேற்சை வேட்பாளர் அல்லது வேறு ஏதேனும் கட்சி அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 75,000 ரூபாவை மட்டுமே வைப்பிலிட வேண்டும்.

இந்தத் தொகையை அதிகரிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த தொகையானது அரசியல் கட்சிகளுக்கு 2.5 மில்லியன் ரூபாவாகவும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு 3 மில்லியனாகவும் அதிகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு முன்மொழிந்தது.

இதுவொரு பொருத்தமான முன்மொழிவாக இருந்த நிலையில், கடந்த தேர்தலின் போது 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், முதல் இரண்டு போட்டியாளர்களைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் செலுத்திய வைப்புத்தொகை ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால், இம்முறைத் தேர்தலில் எந்தவொரு அடிப்படையும் இன்மையால் வேட்பாளர்களின் எண்ணிக்கை 80 அல்லது 85 ஆக இருக்கலாம்.

மேலும், வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்காகவும் பெரும் தொகை செலவிடப்படும்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முன்மொழியப்பட்ட திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றுகையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சில காலத்திற்கு முன்பு இந்த முன்மொழிவை முன்வைத்த போதும், ஒரு சட்டத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னதாக பல்வேறு நடைமுறைகள காணப்படுவதாகவும் அவர் இந்தபோது சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இல்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 574
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads