யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் க்யூபெக் மாகாணம், லோங்குவெயில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது நூரான் ரெசாய் உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் தந்தை ஷரிப் ரெசாய், மகன் எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறி, “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். “என் மகன் எப்போதும் சிரித்துப் பிறரைக் கவர்ந்த பையன். அவர் குழந்தை மட்டுமே. இந்தக் கொலை நியாயமல்ல” என தந்தை தெரிவித்துள்ளார்.
புத்தக பையை வைத்திருந்த மாணவன் மீது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 5 விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மொன்றியல் பொலிஸாரின் உதவியுடன் சம்பவத்தை விசாரணை செய்கின்றனர்.
மோகன்லால் நடிப்பில் உருவான ‘ஹிருதயபூர்வம்’ மலையாள திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மோகன்லால் நடிப்பில் வெளியான ‘துடரும்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘ஹிருதயபூர்வம்’. இந்தப் படத்தை மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ளார். படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.
சித்திக், பாபு ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் படத்தை தயாரித்துள்ளார். ரூ.12 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.80 பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை பெற்றது.
இந்தப் படம் வரும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம் தவிர்த்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லி இலைகளை அவித்த நீரினால் அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்கள் ஆறிவிடும்.
வாய்ப்புண் ஏற்பட்டால் மணத்தக்காளியைப் பச்சையாக தயிரில் போட்டுச் சாப்பிடுவது பலன் தரும். வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுக்கு முன் சாப்பிடுவதும் குணம் தரும்.
கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.
பொன்னாங்கண்ணி இலைச்சாறு (100 மிலி), கரிசலாங்கண்ணிச் சாறு (100 மிலி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
அதில் 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து கலந்துகொள்ளவும். அடுத்து அதை மெழுகு பதமாகக் காய்ச்சி இறக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், வாய்ப்புண் வயிற்றுப்புண் போன்றவை குணமாகும்.
அகத்திக்கீரை சாற்றில் (200 மிலி) 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து அரைத்து, அத்துடன் நல்லெண்ணெய் (250 மிலி) சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து தைல பதத்தில் இறக்கவும்.
இதைத் தினமும் அதிகாலையில் 5 மிலி (1 ஸ்பூன்) அளவுக்குச் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் குணமாகும். உதடு வெடிப்புக்கும் நிவாரணம் கிடைக்கும்.
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் (30 மிலி) நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், டான்சில், சைனஸ் போன்றவை குணமாகும்.
புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் விய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
பொதுவாக நம்மில் சிலருக்கு முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் அவர்களுடைய கைகளும் கால்களும் வெள்ளை நிறத்தில் இருக்காது.
சிலபேருக்கு கைகளும் கால்களும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும், ரொம்பவும் கடினமான தோலின் மூலம் சொரசொரப்பாக இருக்கும்.
இப்படிப்பட்ட எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் ஒரு சூப்பரான எளியவழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேவையானவை :
எலுமிச்சை பழச்சாறு
தக்காளி பழச்சாறு
பேக்கிங் சோடா
செய்முறை :
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச் சாறை ஊற்ற வேண்டும். அதன் பின்பு தக்காளி பழத்தில் இருந்து உங்கள் கைகளாலேயே பிழித்து 4 டேபிள் ஸ்பூன் அளவு சாறு எடுத்து கொள்ளுங்கள்.
இந்த இரண்டு சாறையும் கலந்து, இதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சோடா உப்பை போட்டு நன்றாக கலக்கவேண்டும்.
சோடா உப்பு கொஞ்சம் பொங்கி வரத்தான் செய்யும். அந்த நுரை அடங்கும் வரை நன்றாக கலக்கி விடுங்கள். அதன் பின்பாக இதை ஒரு காட்டன் துணியில் அல்லது பஞ்சில் தொட்டு உங்களது கையின் மேல் பக்கத்திலோ அல்லது பாதங்களின் மேல் பக்கத்திலோ தடவி விட வேண்டும்.
முதலில் லேசாக தடவி அந்த பஞ்சால் 5 நிமிடங்கள் மெதுவாக வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து கொடுங்கள்.
அதன் பின்பு 5 நிமிடங்கள் இந்த ஜெல் உங்களது தோலின் மேல் நன்றாக ஊறட்டும். அதன் பின்பு இரண்டு நிமிடங்கள் மெதுவாக தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.
அவ்வளவு தான். பத்து நிமிடங்களுக்கு முன்பு உங்களது கால் இருந்த நிறத்திற்கும், 10 நிமிடங்கள் கழித்து உங்கள் காலில் இருக்கும் நிறத்திற்கும் வித்தியாசத்தை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.
உங்களது காலில் அதிகப்படியான அழுக்குகள் இருந்தால் இந்த குறிப்பை பின்பற்றுவதற்கு முன், சுடு தண்ணீரில் கல் உப்பைப் போட்டு 10 நிமிடங்கள், உங்களது பாதங்களை ஊறவைத்து நன்றாக துண்டில் துடைத்துவிட்டு, அதன் பின்பு இந்த டிப்ஸை ட்ரை பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
குறிப்பு :
சிலபேருக்கு சோடா உப்பு, தோலில் பட்டால் ஒத்துவராது தோல் அரிக்க ஆரம்பிக்கும்.
உங்களுடைய கையிலோ கால் பகுதியிலோ சிறிய இடத்தில் கொஞ்சம் இந்த இந்த சிரப்பை அப்ளை செய்து பாருங்கள். அரிப்பு இல்லாமல் இருந்தால் மட்டும் உங்கள் சருமத்திற்கு இதைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
எக்காரணத்தைக் கொண்டும் இதை முகத்தில் போடாதீர்கள். முகச் சருமம் ரொம்பவும் நாசுக்கானது.
இது அந்தக்காலம்.. மனிதரை மதிக்கும் மனிதநேயமிக்க நிகழ்வு..
ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அருகே அமைச்சர் நெடுஞ்செழியன்...
விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது : முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாங்கி செல்கின்றனர்
இப்போது ராதா அவர்கள் விருதுவாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நாவலர் நெடுஞ்செழியனை வைத்து தரச் செய்கிறார். ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி.
ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!! மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!! குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி ...!!!
ராதா ஏதோ சொல்லமுயலும் போது. அவரை தடுத்த எம்.ஜி.ஆர் : "நான் ஆரம்பகாலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும். "தங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்....ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின... ஒரு மாநில முதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச்செய்து ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது?
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது.
துக்க வீடுகளில் ஒரு நோட்டு பணம் எழுதுவார்கள். அதனை இங்கே மொய் என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். அதன் உண்மையான காரணம் பணமுடை காரணமாக உதவுவது என்று இல்லை.
இறந்தவர்களின் உறவுக்காரர்கள் எத்தனை பேர் துக்க நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்? என்று கணக்கில் கொள்ளும் அட்டெண்டன்ஸ் வழிமுறை.
இதில் 16 அல்லது 30 நாட்கள் கழித்து பார்க்கும் சமயம் யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்? ஏன் துக்க நிகழ்வை விலக்கினார்கள்? என்றெல்லாம் ஒரு விசாரணையாக எடுத்துக் கொள்ளப்படும்.
துக்க வீடுகளில் ஒரு நோட்டு போட்டு இறந்தவரின் உறவினர் அல்லது சமூகத் தலைவர் ஒரு நோட்டில் எழுதும் சமயம் (ரொம்பவும் இல்லை. பத்து ரூபாய் எழுதுவார்கள்). விருப்பப்பட்டவர்கள் சற்று அதிகமாக எழுதுவார்கள்.
இந்த பணத்தை கொண்டுதான்எரியூட்டல் அல்லது நல்லடக்கம் முடிந்தபின் சமரசத்திற்கு- சலவைத் தொழிலாளிக்கு -மருத்துவருக்கு என்று பிரித்துக் கொடுக்கப்படும்..(மிகவும் ஏழ்மைப்பட்ட வீடுகளில் இந்த பணம் அவர்களுக்கு மிகவும் உதவும்!)
இந்தியா - தமிழ்நாட்டில் சாத்தூருக்கு அருகில் இருக்கும் இரண்டு கிராமங்களில் ஒரு வழக்கம் இன்றளவும் உண்டு. இந்த இரண்டு ஊர்களிலும் இன்றளவும் யாரேனும் இறந்து விட்டால் அந்த ஊர்காரர்கள் வெளியூருக்கு வேலைக்கு செல்ல மாட்டார்கள். அந்த துக்க நிகழ்வு அன்றைக்கு முடித்த பின் அடுத்த நாள் காலை தான் வேலைக்கு செல்லும் வழக்கம் உண்டு.
நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்
எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.
மெத்த படித்த விஞ்ஞானி ஒருவர்..
தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்…
வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..
கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..
கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.. அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்..
கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..
இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..
அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்..
அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.
அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது..
இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..
ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..
நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..
ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..
மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.
தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..
இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு
வெட்கி தலை குனிந்தான்..
நீதி:
யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். தேக நலனில் கவனம் வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிறு சிறு வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். சலனமான சிந்தனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
ரிஷபம்
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். கலை பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
மிதுனம்
நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கடகம்
இழுபரியான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். சிறு தூர பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உருவாகும். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். சூழ்நிலை அறிந்து வாக்குறுதிகள் கொடுப்பது நல்லது. செயல்களில் ஒருவிதமான ஆர்வம் இன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் காணப்படும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்புகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில அனுபவங்கள் கிடைக்கும். குண நலன்களின் சில மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு உண்டாகும். முன் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானத்தை கையாளவும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். நம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
காப்பீடு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைக்கூடி வரும். கற்றல் திறனில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அணுகு முறையில் சில மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
மகரம்
செயல்களில் இருந்த மந்த தன்மை விலகும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வேலை ஆட்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
வியாபாரத்தில் ஏற்ற இறுக்கமான சூழல் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமையை கையாளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும்.பூர்விக சொத்துக்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல் அதிகரிக்கும். புதுவித அனுபவங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.9.2025.
இன்று அதிகாலை 02.49 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று பிற்பகல் 02.17 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
இன்று இரவு 08.47 வரை பிராமியம். பிறகு ஐந்திரம்.
இன்று அதிகாலை 02.49 வரை பவம். பின்னர் மாலை 3.34 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு அவர்களுடைய வழக்கு ஒன்று உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தது..
அதை ஒரு வழக்கறிஞராக நின்று முடித்துக் கொடுத்தவர் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள்..
அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறையா பணத்தை கொண்டு போய் பாபாசாகேப்புக்கு கொடுத்திருக்கிறார் ஜி.டி.நாயுடு..
பாபாசாகேப் சொன்னாராம் “இந்தப் பணம் எனக்கு வேண்டாம்; அதற்கு பதிலாக நான் எப்போதும் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் என் பயணச்செலவையும்; அங்கே நான் தங்குவதற்கான செலவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறார்..
ஜி.டி.நாயுடு-வும் மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்..
பாபாசாகேப் டெல்லியிலிருந்து வருவதாக இருந்தால் தமிழகத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரூம் புக் பண்ணுவாராம் ஜி.டி.நாயுடு..
'பாபாசாகேப் என் விருந்தாளி, அத்தோடு அவரை வரவேற்று விருந்து உபசரிப்பதில் நாம் பெருமை கொள்கிறேன். அவரை நான் சிறப்பாக கவனிக்க வேண்டும்' என்று அருகே இருந்தே பார்த்துக்கொள்வாராம்..
ஒரு முறை நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தவரை ஹிந்து பத்திரிக்கை ரிப்போர்ட்டர் பேட்டி எடுக்க வந்திருக்கிறார்..
பேட்டி எடுக்கும் முன்னரே கேட்டிருக்கிறார்..
“டாக்டர் அம்பேத்கர், காந்திஜி அவர்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார், கதர் ஆடை உடுத்துகிறார், மேல் ஆடையே உடுத்துவதில்லை. ஆனால் நீங்களோ ஏன் இவ்ளோ ஆடம்பரமான இடத்தில் தங்கியிருக்கிறீர்கள்; அத்தோடு எப்போதுமே கோட் சூட் போட்டு வெள்ளைக்காரன் போலவே வலம் வருகிறீர்களே ஏன்?"
பாபாசாகேப் சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம்..
"காந்தி அவர்கள் பல்வேறு வகையில் உளவியலாக பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும் உளவியலாக தாக்குகிறார், காந்தியே சட்டை இல்லாமல் இருக்கிறார், நாம சட்டை போடாவிட்டால் என்ன என்று ஏற்கனவே சட்டை போடாத எம் மக்கள் அதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்; அப்புறம் எப்படி அவர்கள் அதிலிருந்து விடுதலை பெறுவார்கள்..
நான் கோட் சூட் போடுகிறேன், விலையுயர்ந்த ’டை’ மட்டும் ’சூ’ போடுகிறேன். மிகவும் ஆடம்பரமான இடத்திலிருந்து கொண்டு எம்மக்களை இங்கே வரச்சொல்லி சந்திக்கிறேன்; என்னை இந்த இடத்தில் பார்க்க வருகிறவன், நல்ல உடை உடுத்த முயல்வான், அதற்காக சம்பாதிக்க உளவியலாக அவனின் மனம் தயாராகும்; உழைப்பான்; சட்டையே போடாமல் திரிந்தவன் புத்தாடை உடுத்துவான் என்றிருக்கிறார். வெற்று உடம்பிலிருந்து நல்ல உடைக்கு மாறுவான்…"
வாயடைத்துப் போய் நின்றிருக்கிறார் அந்த பத்திரிக்கை ரிப்போர்ட்டர்..
தேவையானவை:
நீல நிற சங்குப்பூ 30,
செம்பருத்தி பூ 30,
தண்ணீர் 3/4 கப்,
காபித்தூள் – 1 ஸ்பூன்,
அவுரி இலை பொடி – 1/2 ஸ்பூன்
- எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு அடுப்பில் வைத்து 5 லிருந்து 7 நிமிடங்கள் போல நன்றாக கொதிக்க வைத்தால், சூப்பரான ஒரு மூலிகை தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும்.
- அடுப்பை அணைத்துவிட்டு இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு, இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- கருப்பு நிறத்தில் ஒரு தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும்.
- இது அப்படியே இருக்கட்டும். (கொஞ்சம் திக்காக இந்த தண்ணீரை தயார் செய்ய வேண்டும் ரொம்பவும் தண்ணீர் ஊற்றி விடாதீர்கள்.)
- அதன்பின்பு ஒரு சிறிய இலசான வாழைப்பூவை வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து இதையும் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். (முழு வாழைப்பூ அல்லது வாழைப்பூக்கு மேலே இருக்கக்கூடிய தோல் மட்டும் கிடைத்தாலும் பயன்படுத்தலாம்)
அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரில்
நொச்சி இலை – 1 கைப்பிடி அளவு,
மருதாணி இலை – 2 கைப்பிடி அளவு சேர்த்து அரைத்து வைத்திருக்கும் வாழைப்பூ சாறை இதில் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்.
- அரைத்த இந்த விழுதிலிருந்து சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். (நொச்சி இலை சேர்த்திருப்பதால் நமக்கு இந்த ஹேர் டை பயன்படுத்துவதன் மூலம் நிச்சயமாக தலைவலி, தலைபாரம் வராது.)
- முதலாவதாக காய்ச்சி வடிகட்டி வைத்திருக்கும் செம்பருத்தி பூ சங்குப்பூ தண்ணீர், அடுத்தபடியாக வாழை பூ சாறு ஊற்றி அரைத்து வடிகட்டி வைத்திருக்கும் மருதாணி, நொச்சி இலை சாறு , இந்த இரண்டு தண்ணீரையும் ஒன்றாக கலந்து ஒரு இரும்பு கடாயில் மீண்டும் ஒருமுறை வடிகட்டி ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தால் 15 நிமிடத்திற்குள் இந்த தண்ணீர் சுண்டி தல தலவென கருப்பு டை திக்காக கிடைக்கும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு மூடி போட்டு இரவு முழுவதும் அப்படியே கடாயோடு மூடி போட்டு விட்டு விடுங்கள். இது நன்றாக ஆறட்டும்.
- மறுநாள் காலை இந்த ஹேர் டை லிருந்து உங்களுக்கு தேவையான அளவு 1 ஸ்பூன் அல்லது 1/2 ஸ்பூன் ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து அப்படியே இரண்டு கைகளில் போட்டு தேய்த்து வெள்ளை முடி இருக்க கூடிய இடத்தில் தேங்காய் எண்ணெய் போல தடவினால் 5 நிமிடத்தில் முடியில் இந்த டை காய்ந்து விடும். (ஹேர் டை ப்ரஸும் பயன்படுத்தலாம்)
- வெள்ளை முடி கருப்பாகவும் மாறிவிடும்.
- தலைக்கு குளித்துவிட்டு தலையை காய வைத்த பின்பு இந்த ஹேர் டை அப்ளை செய்து கொள்ளுங்கள்.
- மீதம் இருக்கும் ஹேர் டை அப்படியே வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள். பொடியாக உங்களுக்கு கிடைக்கும்.
- இந்த பொடியை அப்படியே மிக்ஸி ஜாரில் அரைத்தால் பொடி நைசாகி விடும்.
- ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப்போகாது.
- தேவையான அளவு பொடியை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி கரைத்து தலையில் தேங்காய் எண்ணெய் போல தடவிக் கொள்ளலாம்.
- இதை பயன்படுத்தும் போது வெள்ளை முடி கருப்பாக மாறும்.
- ஆனால் மீண்டும் தலைக்கு குளிக்கும் போது இந்த கருப்பு நிறம் நீங்கதான் செய்யும்.
- தொடர்ந்து இந்த ஹேர் டை பயன்படுத்தி வர நிரந்தரமாக உங்களுடைய வெள்ளை முடி கருப்பாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
- செம்பருத்தி பூ, சங்கு பூ இவைகள் எல்லாம் பூவாக உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டு மருந்து கடைகளில் பொடியாக கிடைக்கிறது. அதை வாங்கி தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- ஒரு நாள் சிரமப்பட்டு இந்த பொடியை செய்து வைத்துக் கொண்டால் ஒரு வருடத்திற்கு நரைமுடி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
கனடாவின் தண்டர் பே பகுதியில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 116,000 டொலர் மதிப்புள்ள சந்தேகிக்கப்படும் போதைப்பொருள்களும், 15,000 டொலர்களுக்கும் மேற்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணையின் விளைவாக ஒன்டாரியோவைச் சேர்ந்த மூன்று பேரும் ஆல்பெர்டாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ம் திகதி பொலிஸார் பல இடங்களில் விசேட சோதனை நடத்தினர்.
முதலில், மேமோரியல் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு பார்க்கிங் லாட்டில் சந்தேக நபர்களில் இருவரை பொலிஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தப்பிக்க முயற்சி செய்ததுடன், கையிலிருந்த செல்போனை அழிக்க முயன்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கம்பர்லேண்ட் ஸ்ட்ரீட் நார்த், மாசார் அவென்யூ, விண்சோர் ஸ்ட்ரீட், கிராஸ்போ ஸ்ட்ரீட் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் பொலிஸார் சோதனை நடத்தினர்.அப்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். சோதனையின் போது போலீசார் கோகைன், கிராக் கோகைன், பென்டனில் உள்ளிட்ட போதைப்பொருட்களையும், ரொக்கப் பணத்தையும், போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 61 வயது ஆல்பெர்டா நபர், 49 வயது மிசிசாகா நபர், 57 வயது தண்டர் பே நபர், 45 வயது தண்டர் பே பெண் ஆகியோருக்கு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்களுக்கு குற்றம் மூலம் பெற்ற சொத்து வைத்திருக்கும் குற்றச்சாட்டும், பெண்மணிக்கு கூடுதலாக போதைப்பொருள் வைத்திருக்கும் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆதங்கத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ப்யூர் வெஜிடேரியனான நான் ஆர்டர் செய்த உணவில் சிக்கன் இருந்தது. அந்த உணவை இப்போது தான் தூக்கி எறிந்தேன். இதற்கு உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் பதில் சொல்லியே ஆக வேண்டும். எனது மத நம்பிக்கையை புண்படுத்தியதற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது உணவில் பன்னீருக்கு பதிலாக சிக்கன் துண்டுகள் இருந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு பன்னீருக்கு பதிலாக அசைவ உணவை வழங்கிய உணவகத்துடன் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் எச்ஆர்எக்ஸ் (HRX) என்கிற ஃபிட்னஸ் நிறுவனம் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இதனால் தனது பதிவில் ஹிருத்திக் ரோஷனையும் குறிப்பிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.
சாக்ஷி அகர்வாலை பொறுத்தவரை அவர், 2013-ல் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். அதன் பிறகு ‘யோகன்’, ‘திருட்டு விசிடி’, ‘ஆத்யன்’, ‘காதலும் கடந்து போகும்’, ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மணை 3’, ‘பகீரா’, ‘ஃபையர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக ‘தி கேஸ் டைரி’ மலையாள படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் ஆசிரியராக பணியாற்றியவர் அதன் பிறகு சினிமாவில் இணைந்து பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் தமிழிலும், நாகார்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் தெலுங்கிலும் நடித்துள்ளார்.
தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுஷ்கா, வேட்டைக்காரன், சிங்கம், தெய்வத்திருமகள், வானம், லிங்கா என பல படங்களில் நடித்துள்ளார். ‘அருந்ததி’ திரைப்படம் அனுஷ்காவுக்கு பரவலான அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது என்றாலும், 2015-ல் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் பான் இந்தியா ஸ்டார் என்ற அங்கீகாரத்தை அனுஷ்காவுக்கு கொடுத்தது.
எந்த நடிகையும் அவ்வளவு எளிதில் செய்ய துணியாத துணிச்சலான முடிவை எடுத்தார் அனுஷ்கா. ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படம் வெளியானது. அதுவரை ஹீரோக்கள் உடல் எடைகளை கூட்டி, குறைத்து நடித்து வந்த நிலையில் ஹீரோயின் ஒருவர் உடல் எடையை பெருமளவில் கூட்டியிருந்தார். மேலும், பருமனான உடல்வாகு கொண்ட பெண்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் வலியை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் அனுஷ்கா மிளிர்ந்தார்.
உண்மையில் அனுஷ்காவின் இந்த துணிச்சலான முடிவு வரவேற்பை பெற்றது என்றாலும், அதன் பிறகு அவரது சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அடுத்து ‘பாகுபலி 2’ அனுஷ்கா நடித்த படங்களில் அதிக வசூலை ஈட்டிய படமாக முத்திரை பதித்தது. அண்மையில் அனுஷ்கா நடிப்பில் ‘Ghaati’ திரைப்படம் வெளியானது.
40 வயதிலும் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வரும் அனுஷ்கா, சினிமாவில் நுழைவதற்கு முன்பு, பெங்களூருவில் உள்ள ஈஸ்ட்வுட் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இந்த தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு அவர் யோகா ஆசிரியராக பணியாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுவரை தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை அனுஷ்கா மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் மலையாளத்தில் ‘Kathanar: The Wild Sorcerer’ என்ற மலையாள திரைப்படம் உருவாகி வருகிறது. அனுஷ்கா அடுத்தடுத்த அழுத்தமான கதைகளை கொண்ட படங்களில் தேர்வு செய்து நடிப்பேன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா சமீபத்தில் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கும் அவரது புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் ஏற்பட்ட தனிப்பட்ட துயரம் காரணமாக படப்பிடிப்பு மேலும் தாமதமாகியுள்ளது. இந்த செய்தி, சூர்யா ரசிகர்களிடமும், தொழில்துறை வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றி பெற்ற இயக்குநராக இருந்துவரும் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம், சூர்யாவை ஒரு புதிய கதாபாத்திரத்தில் காட்டும் என்று கூறப்படுகிறது. முதல் லுக் மற்றும் தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்தே சில காரணங்களால் மெதுவாகவே முன்னேறிக் கொண்டிருந்தது. அட்டவணை பிரச்சினைகள், சில டெக்னிக்கல் சிக்கல்கள் போன்றவை காரணமாக, ரசிகர்கள் எதிர்பார்த்த வேகத்தில் வேலை நடைபெறவில்லை.
இந்த படத்தில் அனுபவம் மிக்க நடிகை ராதிகா சரத்குமார், சூர்யாவின் தாயாக நடிக்கிறார். சூர்யாவின் கதாபாத்திரத்துடன் அவர் பகிரும் திரைக் கெமிஸ்ட்ரி இப்படத்தின் உணர்ச்சி பூர்வமான ஹைலைட் ஆகும். ராதிகாவின் நடிப்பு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயம். இவர் சூர்யாவுடன் முந்தைய படங்களில் இணைந்ததில்லை என்பதால், இந்த கூட்டணி மீது சிறப்பு ஆர்வம் காணப்பட்டது.
ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய தூணாக இருக்கிறார். பல தசாப்தங்களாக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை தொடர்களிலும், OTT ப்ராஜெக்ட்களிலும் பிஸியாக உள்ளார். இந்த படம், அவருடைய திரைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். தாயாரை இழந்த துயரத்திலும், தொழில்முறை பொறுப்பை மறக்காமல் தொடர்வார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உள்ளது.
சூர்யாவின் புதிய படம் Box Office-ல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை ஏற்கனவே உள்ளது. வெங்கி அட்லூரியின் முந்தைய படங்கள் வெற்றியை பெற்றதால், இந்த கூட்டணியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தொழில்துறை வட்டாரங்களில், இந்த தாமதம் படத்தின் தரத்தை பாதிக்காது என்று கருதப்படுகிறது. மாறாக, இப்படம் சிறந்த குவாலிட்டியுடன் வெளிவரும் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது.
நவம்பர் 10ம் தேதி 1659ம் வருடம் தரமான சம்பவம் ஒன்று மராத்திய மண்ணில் நடந்தேறியது.
மராத்திய சிங்கம் சிவாஜியின் வளர்ச்சியை தடுக்க, அடில் ஷா தனது தளபதியான அஃப்சல் கானை பீஜாப்பூரில் இருந்து 40,000 படை வீரர்களுடன் அனுப்பி வைக்கிறான்.
சிவாஜியிடம் படைபலமோ அதில் பாதிக்கும் குறைவு.
தேவையில்லாத உயிர் சேதத்தை தடுக்க, நாம் இருவரும் சந்தித்து பேசலாம் என்று அஃப்சல் கானுக்கு செய்தி அனுப்புகிறார் சிவாஜி.
அட, வந்த வேலை இவ்வளவு சுலபமா முடியுதே! என்று அப்சலுக்கு குதூகலம். ஏற்கனவே சிவாஜியின் அண்ணனான சம்பாஜியை ஸ்கெட்ச் போட்டு தூக்கியவன் தான் இந்த அப்சல்.
பிரதாப்கட் மலையடிவாரத்தில்
- ஒரு கூடாரத்தில் அப்சல் இருக்க, தலா பத்து மெய்காப்பாளர்கள் மட்டும் துணைக்கு வரலாம் என்ற விதியுடன் சிவாஜி கூடாரத்தினுள் நுழைகிறார்.அப்சல் கான் ஆறு அடி ஏழு அங்குலம் - ஆஜானுபாகுவான ஆள்.
- சிவாஜி ஐந்தடிக்கும் கம்மியான உயரம்.
எதிரே வந்த சிவாஜியை வரவேற்கும் விதமாக கட்டிப்புடி வைத்தியம் செய்ய அப்சல் குனிந்து, தனது நீள அங்கியினுள் மறைத்து வைத்திருந்த கட்டாரியை சிவாஜியின் முதுகில் பாய்ச்சினான்.
கட்டாரியின் கூர் முனை உடைந்தது தான் மிச்சம்.
இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்த சிவாஜி, உள்ளே இரும்பில் கவச உடை அணிந்திருந்தார்.
தனது கை விரல்களில் புலி நகங்களை போன்ற ஒரு ஆயுதத்தால் - (பாக்(Bagh) நாஹ்) அப்சலின் வயிற்றை பஞ்சராக்கி விட, நிலைகுலைந்த அப்சல் அலறியபடி கூடாரத்தை விட்டு வெளியே வந்து அங்கிருந்த பல்லக்கில் ஏறிக் கொண்டான்.
விரட்டி வந்த மராத்திய வீரர்கள் அவனது மெய்காப்பாளர்களை சிதறடித்து, அவனது தலையையும் கொய்து எடுத்து சென்றனர். அதற்கும் ஒரு காரணம் உண்டு.
சிவாஜியின் தாய் ஜீஜாபாய் தன் கணவரையும், முதல் மகனையும் கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றவனின் தலையை(ஆளை அல்ல) என் கண் முன் காட்டுவாயா சிவாஜி? என்று கேட்டிருந்தாராம்.
அதன்பின் வரிசையாக 23 கோட்டைகளை மராத்திய படை வென்று, அடில் ஷாவை அலற வைத்தனர்.
ஒருநாள், ஒரு பணக்கார வியாபாரி பீர்பாலை சந்திக்க வந்தார். அவர் பீர்பாலை நோக்கி, “என் வீட்டில் ஏழு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என்னுடைய விலைமதிப்பற்ற முத்துக்கள் நிறைந்த பையைத் திருடிவிட்டார். தயவுசெய்து திருடனைக் கண்டுபிடியுங்கள்” என்றார்.
எனவே பீர்பால் பணக்காரரின் வீட்டிற்குச் சென்றார். ஏழு வேலைக்காரர்களையும் ஒரு அறையில் அழைத்தார். அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு குச்சியைக் கொடுத்தார். பின்னர் அவர், “இவை மந்திரக் குச்சிகள். இப்போது இந்தக் குச்சிகள் அனைத்தும் சம நீளம் கொண்டவை. அவற்றை உங்களிடம் வைத்துக்கொண்டு நாளை திரும்பி வாருங்கள். வீட்டில் ஒரு திருடன் இருந்தால், நாளைக்குள் அவனுடைய குச்சி ஒரு அங்குலம் நீளமாக வளரும்” என்றார்.
முத்து பையைத் திருடிய வேலைக்காரன் பயந்து போனான். “என் குச்சியிலிருந்து ஒரு அங்குல துண்டை வெட்டினால், நான் பிடிபட மாட்டேன்” என்று நினைத்தான். அதனால் அவன் குச்சியை வெட்டி ஒரு அங்குலம் சிறியதாக்கினான்.
மறுநாள் பீர்பால் வேலைக்காரர்களிடமிருந்து குச்சிகளை சேகரித்தான். ஒரு வேலைக்காரனின் குச்சி ஒரு அங்குலம் குறுகியதாக இருப்பதைக் கண்டான். பீர்பால் அவனை நோக்கி விரலைக் காட்டி, “இதோ திருடன்” என்றார். வேலைக்காரன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். முத்துக்கள் நிறைந்த பையைத் திருப்பிக் கொடுத்தான். அவன் சிறைக்கு அனுப்பப்பட்டான்.
காயத்ரி மந்திரம் வேதங்களில் மிக உயர்ந்த, தூய்மையான மந்திரமாக கருதப்படுகிறது. எல்லா மந்திரங்களுக்கும் தாயாகக் கருதப்படும் இம்மந்திரம், ரிக்வேதத்தில் இடம்பெற்றுள்ளது.
"காயத்ரி" என்பது ஒரு வேத சந்நிதி ஆகும். 24 அக்கரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அக்கரத்துக்கும் தனித்துவமான சக்தி உண்டு.
காயத்ரி தெய்வம் வேதமாதா என்றும் அழைக்கப்படுகிறாள். அவளது பல வடிவங்களில் சவித்ரி காயத்ரி, பிரம்ம காயத்ரி, விஷ்ணு காயத்ரி, ருத்ர காயத்ரி போன்றவை உள்ளன. அவற்றில் ஒன்று பிரம்ம காயத்ரி மந்திரம் ஆகும்.
பிரம்ம காயத்ரி மந்திரம்
பிரம்மனின் (உயர்ந்த பரமாத்மா – சிருஷ்டியின் காரணம்) தத்துவத்தை உணர்ந்து வழிபடப் பயன்படும் மந்திரம் இதுவாகும்:
ஓம் வேதாத்மனே வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம பிரசோதயாத்॥
மந்திரத்தின் பொருள்
ஓம் – பரம்பொருள், சிருஷ்டி, ஸ்ருஷ்டி, லயத்தின் மூல காரணம்.
வேதாத்மனே – வேதங்களின் ஆத்மா; அனைத்துக் கலைகள், ஞானத்தின் மையம்.
வித்மஹே – நாங்கள் தியானிக்கின்றோம்.
ஹிரண்யகர்பாய தீமஹி – பொன்னால் ஒளிரும் கர்ப்பத்தில் உலகத்தை சுமக்கும் பிரம்மனை நாங்கள் தியானிக்கின்றோம்.
தந்நோ ப்ரம்ம பிரசோதயாத் – அந்தப் பரம்பொருள் எங்கள் புத்தியைத் தூண்டி, ஞானத்தை அளித்து, சரியான பாதையில் நடத்துக.
றுநீரக கற்கள் கரைய மற்றும் இதயம் வலுப்பட எலுமிச்சை தோலும் சிறிதளவு இஞ்சியும் இருந்தாலே போதும்! எப்பேர்ப்பட்ட சிறுநீரக கற்களையும் 30 நாட்களில் கரைத்து விடும்.இந்த பதிவில் எலுமிச்சை தோலையும் இஞ்சியையும் எவ்வாறு பயன்படுத்தவது என்பதனை பார்க்கலாம்.
ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக அறிந்து அதன் சாறை பிழிந்து விட்டு பிறகு வெறும் எலுமிச்சை தோலை பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பின்ச் அளவு துருவிய இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இரண்டையும் ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.இந்த நீரானது ஒரு கொதி வந்தவுடன் அடிப்பினை அணைத்துவிட்டு இந்த நீர் குடிக்கும் அளவு சூட்டிற்கு வந்ததும் இதனை வடிகட்டி வெறும் வயிற்றில் 30 நாட்கள் குடித்து வர எப்பேர்பட்ட சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.மேலும் சிறுநீரகம்,கல்லீரல் சுத்திகரிக்கப்பட்டு இதன் திறன் மேம்படும்.இதயத்தை வலுப்படுத்தும். இதயத்தில் அடைப்பு உள்ளவர்களும் இதனை எடுத்துக் கொண்டால் நல்ல பலனை கொடுக்கும்.
குறிப்பு: எலுமிச்சை பழம் கரும்புள்ளி இல்லாமல் நல்ல சுத்தமான பழமாக இருக்க வேண்டும்.
வேதியியலாளராகவும் இயற்பியலாளராகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறார் மைக்கேல் ஃபாரடே. மின்காந்தவியல், மின்வேதியியல் துறைகளில் இவர் அளித்த பங்களிப்பின் காரணமாக, மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இவர் முயற்சியின் காரணமாகவே மின்சாரம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
1791, செப்டம்பர் 22 அன்று இங்கிலாந்தில் பிறந்தார் ஃபாரடே. தந்தை குதிரைக்கு லாடம் அடிப்பார். அந்த வருமானத்தில் தந்தையால் ஃபாரடேவுக்குக் கல்வியை அளிக்க இயலவில்லை.
அதனால் அவரே தன் கல்வியைப் பார்த்துக்கொண்டார். 14 வயதில் புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வேலை முடித்து வீட்டிற்கு வந்தால், படித்த அறிவியல் சோதனைகளைச் செய்து பார்ப்பார். இப்படி அறிவியல் அறிவைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டார்.
புத்தக விற்பனையிலிருந்து பைண்டிங் பிரிவுக்குப் பதவி உயர்வு கிடைத்தது. அங்கும் பைண்டிங்கிற்கு வந்த அறிவியல் புத்தகங்களைப் படித்தார். புரியாத சந்தேகங்களைக் குறித்துக்கொண்டார். புத்தகத்திற்கு உரியவர் வரும்போது, அவரிடமே சந்தேகங்களைக் கேட்டார். அப்படியும் தீராத சந்தேகங்கள் இருந்தன.
ஃபாரடேவின் அறிவியல் தாகத்தைத் தீர்க்க நினைத்தார் முதலாளி. ஹம்ப்ரி டேவி என்கிற வேதியியலாளர் ராயல் கழகத்தில் விரிவுரை ஆற்ற இருந்தார். அந்தக் கூட்டத்திற்கு நுழைவுச் சீட்டு வாங்கிக் கொடுத்தார்.
ஃபாரடே அதில் கலந்து கொண்டார். டேவி பேசிய அனைத்தையும் குறிப்பெடுத்தார். அதை பைண்டிங் செய்து அவருக்கே அனுப்பி வைத்தார். அதில் வேலை கேட்டு ஒரு கடிதத்தையும் வைத்திருந்தார். குறிப்புகளைப் படித்துப் பார்த்த டேவி, ஃபாரடேயின் விருப்பப்படி உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.
ஒரு வருடத்தில் டேவி தன் மனைவியுடன் ஐரோப்பா புறப்பட்டார். அதில் ஃபாரடேவையும் இணைத்துக்கொண்டார். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பல புகழ்பெற்ற விஞ்ஞானிகளைச் சந்தித்தனர்.
அவர்களின் திறனை அருகில் இருந்து கவனித்தார் ஃபாரடே. அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து நாடு திரும்பினர். ராயல் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்.
ஃபாரடே வேதியியல் பகுப்பாய்வுகள், ஆய்வக நுட்பங்களில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றார். டேவியின் ஆராய்ச்சிக்கு உதவி செய்து கொண்டே தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
புதிய கரிம சேர்மங்களைக் கண்டறிந்தார். வேதியியல் பகுப்பாய்வாளராகப் புகழ் பெற்றார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளால் விஞ்ஞானிகளை வழிநடத்தும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார்.
1821இல் மின்காந்த சுழற்சி பற்றிய கட்டுரையை வெளியிட்டார். அது பலருடைய கவனத்தைக் கவர்ந்தது. காந்தப்புலத்திலிருந்து மின்னோட்டத்தைத் தயாரித்தார். மின் மோட்டாரையும் டைனமோவையும் கண்டறிந்தார். மின்சாரத்திற்கும் ரசாயனப் பிணைப்பிற்கும் உள்ள தொடர்பை நிரூபித்தார். ஒளியில் காந்த விளைவைக் கண்டறிந்தார்.
1826 முதல் வெள்ளிக் கிழமைகளில் ராயல் கழகத்தில் சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்தார். அதே ஆண்டு கிறிஸ்துமஸ் விரிவுரையும் தொடங்கி வைத்தார். இன்று வரை இந்த இரண்டு பழக்கங்களும் தொடர்கின்றன.
1831இல் மின்மாற்றியைக் கண்டறிந்தார். அதைத் தொடர்ந்து ஜெனரேட்டரின் பின்னணியில் உள்ள மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தார். இந்தக் கண்டறிதல்தான் மின்துறையில் சக்திவாய்ந்த புதிய தொழில்நுட்பமாக மாறியது. மின்சாரம் பற்றிய கருத்துகளைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து மேம்படுத்தினார். மின் கட்டணத்திற்கும் மின் கொள்ளளவுக்கும் யூனிட்டைப் பயன்படுத்தினார்.
டிரினிட்டி ஹவுஸின் அறிவியல் ஆலோசகர், ராயல் மிலிட்டரி அகாடமியில் வேதியியல் பேராசிரியர் எனப் பல பதவிகள் ஃபாரடேவைத் தேடிவந்தன. ஒரு முறை விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியிடம் உங்கள் கண்டறிதலில் எதைச் சிறப்பாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு, ”மைக்கேல் ஃபாரடே” என்று பதிலளித்தார் ஹம்ப்ரி டேவி.
1867, ஆகஸ்ட் 25 அன்று 77-வயதில் ஃபாரடே மறைந்தார். எளிய முறையில் ஆரம்பித்த அவரின் வாழ்க்கை, அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எளிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது.
சாதனையாளராக உருவாக ஆர்வமும் விடா முயற்சியும் இருந்தால் போதும், வறுமையோ உயர்கல்வியோ தடையில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார் மைக்கேல் ஃபாரடே.
ஒரு காலத்தில் சோனி என்றால் எலக்ட்ரானிக்ஸ் உலகின் ராஜா என்ற பெயர் இருந்தது. சோனி மற்றும் பிலிப்ஸ் எலக்ட்ரானிக்ஸ் உலகை ஆட்சி செய்தன.
1946ல் உலகப் போருக்குப் பின் ஒரு சின்ன ரேடியோ கடையாகத் தொடங்கப்பட்டது தான் சோனி. பின்னாளில் தானே ரேடியோ தயாரித்தது. பின்னர் டிவி. அதன் Trinitron TV 1968இல் வெளியானது, 1970களில் உலகெங்கும் பிரபலமானது. 1979ன் Walkman அதை எங்கேயோ கொண்டு சென்றது.
1980க்களில் உலகை சோனியும், பிலிப்சும் ஆண்டன. தரத்தில் எந்த கம்பெனியும் அருகே கூட நிற்க முடியாது என்ற புகழைப் பெற்றன.
ஆனால் சோனி வீழ்ச்சியடைய காரணமே அதன் பிடிவாதம் தான் என சொல்லலாம்.
வீடியோ கேசெட்டுகளில் மற்ற கம்பெனிகள் VHS எனும் பொதுவான (open) வடிவை கொண்டு வந்தன. ஆனால் சோனி பிடிவாதமாக தன்னுடைய Betamax எனும் கேசெட் வடிவை மட்டும் பயன்படுத்தியது.
எல்லா கம்பெனிகளும் ஒரே வடிவில் VHS கேசெட்டை வெளியிட்டதால், எந்த வீடியோ பிளேயரிலும் போட்டு பார்க்க வசதியாக இருந்தது.
ஆனால் சோனியின் Betamax கேசெட்டை சாதாரண வீடியோ பிளேயரில் போட முடியாது; Betamax பிளேயரில் தான் போட முடியும். இதனால் Sony player–Betamax சந்தையில் மோனோபொலி ஆகலாம் என்று சோனி நினைத்தது.
ஆனால் தலைகீழாக நடந்தது. மற்ற எல்லா கம்பெனிகளின் வீடியோ கேசெட்டுகளையும் எல்லா பிளேயர்களிலும் பார்க்க முடிந்த நிலையில், Betamax மட்டும் பார்க்க முடியாததால் அதன் விற்பனை சரிந்தது. சோனி விழித்துக்கொண்டு VHS-க்கு மாற 1980களின் நடுப்பகுதிதான் ஆனது.
அதேபோல எல்லா கம்பெனிகளும் MP3 எனும் open standard முறையை பயன்படுத்த, சோனி பிடிவாதமாக MiniDisc எனும் வடிவை பயன்படுத்தியது. இதுவும் சோனியின் விற்பனை சரியக் காரணமாக இருந்தது.
தன் பிராண்டு மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, “ஏழு கடல், ஏழு மலைகளை தாண்டி வந்து வாடிக்கையாளர்கள் தன் பிராண்டை வாங்குவார்கள்” என்ற அதீத நம்பிக்கை தவறாகி முடிந்தது.
2005ம் ஆண்டு கடைசியாக அந்த மாபெரும் தவறைச் செய்தது சோனி.
தன் CD பிளேயர்களில் இருந்து இசையை மக்கள் சட்டவிரோதமாக டவுன்லோடு செய்வதைத் தடுக்க, CD-க்களில் ஒரு DRM software (rootkit)-ஐ இணைத்து வெளியிட்டது சோனி. அந்த software கணினியில் அமர்ந்து கொண்டு மக்களின் தகவல்களை திருடி சோனிக்கு அனுப்பியது. பின்னாளில் இதை பல ஹாக்கர்கள் பயன்படுத்தி பல தகவல்களை திருடினர்.
சோனியின் பெயர் சர்வதேச அளவில் கெட்டது. உலக அளவில் ஒரு கம்பெனி வாடிக்கையாளர்களின் கணினியில் வைரஸை ஏற்றுமா? அதுவும் நாம் நம்பும் சோனியா இப்படி செய்தது?
அதன்பின் சோனியின் பெயர் மெதுவாக சந்தையில் இருந்து மறைந்தது.
வாடிக்கையாளர் நம்மை விரும்பினாலும், அதற்காக அவர்களை அதிகமாக துன்புறுத்தக் கூடாது, சோதிக்கக் கூடாது.
சோனியின் வரலாறு உணர்த்தும் பாடம் இதுதான்.
(இது முகநூலில் வந்த பதிவு)