·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1514
  • More

யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments (0)
Login or Join to comment.
  • 38
  • 41
·
Added article

குரல் அழகின் சுரப்பொருள் தமிழ் சினிமா இசை வரலாற்றில் தனிச்சிறப்புடன் ஒலிக்கும் குரல்களில் குரலும் ஒன்று. கம்பீரமும் இனிமையும் ஒருங்கே கலந்த அவரது பாடல் நடை, அவரை மற்ற பின்னணிப் பாடகிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

குரலில் ஒரு தனித்த கூர்மையும் வீரியமும் இருந்தது. சோகப் பாடல்களில் கண்ணீர் சொட்டும் உணர்வை வெளிப்படுத்தும் அதே குரல், அதிரடியான “கபாரே” பாடல்களிலும், நாட்டுப்புற பாடல்களிலும் வேறு பரிமாணம் கொண்டு ஒலித்தது. இந்த பல்துறை வல்லமையே அவரை இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகியாக ஆக்கியது.

வெறும் ஒரு பாடகி அல்ல தமிழ் சினிமா இசையின் ஒரு கால கட்டத்தின் குரலாக அவர் வடிவம் பெற்றார். பாடல்கள் இன்றும் “பழைய தமிழ் திரை இசை” ரசிகர்களின் இதயங்களில் வாழும் அழியாத சொத்தாக நிலைத்திருக்கின்ற

எல். ஆர். ஈஸ்வரி அம்மாவின் தற்போதைய புகைப்படம்

  • 44

தமிழகத்தின் முதல் அமைச்சர் மாண்புமிகு. ஜோசப் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....

  • 41

வாழ்க்கையில் எப்போதுமே

சந்தோஷமாக இருப்பது

ஒரு கலை

ஆனால் அதை

யாரிடமும்

கற்றுக் கொள்ள முடியாது...

  • 40
·
Added a post

கல்லூரி மாணவி ஒருவர் தன் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க அப்பாவிடம் பணம் கேட்டார். அப்பா, ‘‘எவ்வளவு வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘ஐந்து பேர் போகிறோம். 4 ஆயிரம் ரூபாய் கொடுங்கள்’’ என்றார் மகள்.

‘வெளியே சென்று செலவழிப்பதற்கு இவ்வளவு பணம் தேவையா?’ என்று வியந்த அப்பா, ‘‘என்னிடம் இப்போது இல்லை. ஒரு வாரம் பொறுத்துக்கொள். தருகிறேன்’’ என்று சொன்னார். மகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘‘எனக்கு இப்போதே பணம் வேண்டும்’’ என்று கேட்டார்.

‘‘அவ்வளவு தொகையை ஒருநாள் மதிய விருந்துக்கு செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன் படிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்று உனக்கே தெரியும். நம் குடும்ப நிலைமையை மீறித்தான் உன் படிப்பு செலவை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவசியமானதற்கு செலவழிக்கலாம். ஆனால், ட்ரீட் என்ற பெயரில் அனாவசிய செலவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நீ இந்தக் காலத்துப் பெண். உன் விருப்பத்தையும் மறுக்க என்னால் முடியாது. ஆகையால் குறைந்தது மூன்று நாட்களாவது பொறுத்துக் கொள்’’ என்று அப்பா சொன்னார்.

மகள் அதை ஏற்காமல் பதிலுக்குப் பேச, அப்பா அதற்கு விளக்கம் கொடுக்க, அது காரசாரமான விவாதமாகி விட்டது. கடைசியில் மகள், ‘‘நான் யாருக்கும் ட்ரீட் கொடுக்கலை. ஆனா நான் மட்டும் யாராவது ட்ரீட் கொடுத்தா வெட்கமே இல்லாம நல்லா தின்னுக்கிறேன். இப்ப உங்களுக்குத் திருப்தியா?’’ என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே போனார். அப்பாவின் குரல் பின்னால் கேட்க, அதை அலட்சியம் செய்துவிட்டு வெளியே போனார்.

நகரத்தில் இலக்கே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார். அவசரத்தில் மொபைல் போனையும் எடுத்து வரவில்லை. அது மாலைப் பொழுது ஆனதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. இங்கும் அங்கும் சுற்றியதில் பசித்தது. பைக்கை ஒரு டீக்கடை அருகே நிறுத்தினார். பெரிய சாலையின் ஓரம் பெரிய நடைபாதை. நடைபாதையை ஒட்டி டீக்கடை இருந்ததால் பலர் அந்நடைபாதையில் நின்று கொண்டு பொறுமையாக டீ குடிக்க வசதியாய் இருந்தது. இவர் ஒரு டீயும் வடையும் வாங்கிக் கொண்டார்.

அப்போது அங்கே மூன்று ஆட்டோக்கள் வந்து நின்றன. ஒவ்வொரு ஆட்டோவிலும் ஆண்களும் பெண்களுமாய் பலர் நெருக்கயடித்து அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தினர் என்று அவர்கள் பேசுவதை வைத்துத் தெரிந்து கொண்டாள்.

அதில் ஓர் இளைஞன் உற்சாகமாய் டீக்கடையில் வந்து தட்டு தட்டாக சமோசாக்களும், உளுந்து வடைகளும் வாங்கி வாங்கி ஆட்டோவில் இருப்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். சட்னியை அவர்கள் இருக்கும் இடத்துக்கே எடுத்து வந்து ஊற்றினான். சமோசாக்களுக்கு தொட்டுக்கொள்ள சாஸ் தேவைப்பட்டபோது எடுத்து வந்து ஊற்றிக் கொண்டிருந்தான். அவர்கள் அரட்டையடித்தபடி சாப்பிட்டார்கள்.

எல்லோரும் சாப்பிட்டபிறகு அந்த இளைஞன் பணம் கொடுத்தான். 500 ரூபாய்க்கும் குறைவாகவே ஆகியிருந்தது. கிட்டத்தட்ட 15 பேருக்கு 500 ரூபாய்க்குள் அவன் ட்ரீட் வைத்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். ஆனால் அவர்கள் அனைவரும் உற்சாகமாய் இருந்தார்கள்.

‘பணம் செலவழிப்பதற்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே உற்சாகமாய் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை’ என்பதை அவர் புரிந்து கொண்டார். ‘எவ்வளவு செலவழிக்கிறோம் என்பது முக்கியமில்லை. அதை எப்படி ஆழ்மனதில் இருந்து ரசித்து செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்பதையும் உணர்ந்தார். ‘நண்பர்களுக்கு பெரிய உணவகத்தில்தான் ட்ரீட் வைக்க வேண்டும் என்று போலித்தனமான கௌவுரவம் பார்த்து அப்பாவை வேறு மனக்கஷ்டப்படுத்தி விட்டோமே’ என்று வருந்தினார்.

அவசரமாக வீட்டுக்குத் திரும்பியவர், பைக்கை நிறுத்திவிட்டு அப்பாவிடம் ஓடிச் சென்றார். மகளைப் பார்த்து பதறிய அப்பா, ‘‘எங்கம்மா போனே? கவலைப்படாதே! நீ கேட்ட பணம் ரெடி பண்ணிட்டேன். ஆனா இனிமே எப்பவுமே இப்படி கோபத்துல பைக்கை எடுத்துக்கிட்டு கிளம்பாதே. அப்பாவுக்கு ரொம்ப பயமா இருக்கு’’ என்றார். அவர் அப்படிச் சொல்லும்போது ஒரு குழந்தையாகத் தெரிந்தார்.

‘‘இல்லப்பா! ட்ரீட்டுக்கு இவ்வளவு பணம் வேணாம். நான் என் ஃப்ரெண்ட்ஸை வீட்டுக்குக் கூப்பிடப் போறேன். நானே சமைச்சி நம்ம வீட்டு மொட்டை மாடில நண்பர்களுக்கு விருந்து வைக்கப்போறேன்’’ என்ற மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அப்பா.

‘உலகம் இவளுக்கு ஏதோ நல்லதாய் கற்றுக் கொடுத்திருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டார். ‘‘சாப்பிடுங்கப்பா, ருசியா இருக்கு’’ என்று அப்பாவுக்காக வாங்கி வந்திருந்த சமோசாவை நீட்டினார் அந்த அன்பு மகள்.

  • 46
·
Added article

"மக்களால் எப்படி நினைவு கூறப்படுகிறோம் என்பதே முக்கியம்!" தனது 35,000 கோடி சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்க அதிரடி முடிவு!

திரைப்படங்களில் ஸ்டண்டுகளால் நம்மை வியக்க வைத்த உலகப் புகழ்பெற்ற அதிரடி நாயகன் ஜாக்கி சான், நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் ரியல் ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் ஏழைகளின் நலனுக்காகத் தானம் செய்யப்போவதாக அவர் எடுத்துள்ள முடிவு ஒட்டுமொத்த உலகையும் நெகிழ வைத்துள்ளது!

தந்தையின் போதனையும்.. மகனின் அர்ப்பணிப்பும்:

நல்ல மனம் படைத்த தந்தை: "என் தந்தை ஒரு அழகான மனிதர் மட்டுமல்ல, மிக நல்ல மனம் படைத்தவர். நாம் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல; இறுதியில் இந்த உலக மக்கள் நம்மைக் குறித்து எப்படி நினைவு கூர்கிறார்கள் என்பதை எனக்குச் சொல்லிக்கொடுத்ததே அவர்தான்" என ஜாக்கி சான் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

35,000 கோடி ரூபாய் தானம்: தந்தையின் அந்த உன்னதமான போதனையைப் பின்பற்றி, தான் கடினமாக உழைத்துச் சம்பாதித்த சுமார் 35,000 கோடி ரூபாய் ($4.5 Billion+) மதிப்புள்ள ஒட்டுமொத்த சொத்துக்களையும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோரின் நலனுக்காகக் கொடுக்க அவர் முடிவெடுத்துள்ளார்.

வாரிசுக்குச் சொத்து இல்லை: "என் மகனுக்குத் திறமை இருந்தால் அவன் சொந்தமாகச் சம்பாதித்துக் கொள்வான்; திறமை இல்லையென்றால் நான் சேர்க்கும் பணத்தை அவன் வீணடித்துவிடுவான்" என்று ஏற்கனவே கூறி வாரிசு அரசியல், வாரிசு சொத்துரிமைக்கு அப்பாற்பட்டு சிந்திப்பவர் ஜாக்கி சான்!

திரையுலகில் பல சாதனைகளைப் படைத்தாலும், சாகும் போது நாம் கொண்டு செல்லப்போவது எதுவுமில்லை என்ற உயரிய தத்துவத்தை உணர்ந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றத் துணியும் ஜாக்கி சான் அவர்களின் இந்த பெருந்தன்மைக்கு உலகெங்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

"பணம் சேர்ப்பதை விட, மனிதர்களின் இதயங்களில் அன்பைச் சேர்ப்பதே உண்மையான மனிதநேயம்!"

  • 46
  • 43

ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது வரலாற்றில் ஒரு எண் மட்டுமே.

ஆனால்...

அவர் எத்தனை பேரின் மனதில் நம்பிக்கையை விதைத்தார்?

எத்தனை கனவுகளுக்கு சிறகுகள் கொடுத்தார்?

எத்தனை தோல்விகளை வெற்றியாக மாற்றினார்?

நேரம் நம்மை அளவிடுவதில்லை...

நாம் நேரத்தை எப்படி பயன்படுத்தினோம் என்பதுதான் நம்மை அளவிடுகிறது.

அதனால்தான் இந்த வரிகள் காலத்தை கடந்தும் உயிரோடு இருக்கின்றன:

"ஆண்டுகள் கடப்பதால் நேரம் அளவிடப்படுவதில்லை; நாம் சாதிப்பதாலும் உணர்வதாலும் தான் அளவிடப்படுகிறது."

ஒவ்வொரு நாளும் வெறும் காலண்டரில் ஒரு தேதியாக முடிந்து விடக்கூடாது.

ஒரு புதிய அனுபவமாக...

ஒரு சிறிய முன்னேற்றமாக...

ஒரு மறக்க முடியாத நினைவாக...

அல்லது யாரோ ஒருவரின் வாழ்க்கையில் ஒரு நேர்மறை மாற்றமாக மாற வேண்டும்.

✨ வாழ்க்கை நீண்டதாக இருப்பது முக்கியமல்ல.

அர்த்தமுள்ளதாக இருப்பதுதான் முக்கியம்.

  • 42
  • 42
  • 42
  • 42
·
Added a post

பணத்தை பற்றிய இந்த உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

  1. 💰 எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட எவ்வளவு மிச்சம் பிடிக்கிறோம் என்பதே முக்கியம்.
  2. 📊 10 ரூபாய் சம்பாதித்தால் 8 ரூபாய்க்கு மட்டும் வாழ பழகுங்கள்.
  3. 🚫 வரவுக்கு மீறி ஆடம்பரமாக வாழ்வது உங்களை கடனில் வைக்கும்.
  4. 🕊️ கடன் இல்லாத வாழ்க்கையே உண்மையான சுதந்திரம்.
  5. 📈 பணத்தை வீட்டில் வைத்திருந்தால் பணவீக்கத்தால் மதிப்பு குறையும்.
  6. 🏦 பணத்தை நல்ல இடங்களில் முதலீடு செய்யுங்கள்.
  7. 💎 தங்கம், மியூச்சுவல் ஃபண்ட், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள்.
  8. 🌙 நீங்கள் தூங்கும்போதும் உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும்.
  9. 🛡️ 6 மாத செலவுக்கு தேவையான பணத்தை அவசரகாலத்திற்கு வைத்துக்கொள்ளுங்கள்.
  10. 💳 கிரெடிட் கார்டில் பொருள் வாங்குவது உங்கள் வருமானத்தை உறிஞ்சிவிடும்.
  11. 🎯 ஆசைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.
  12. 🤝 பணம் உங்கள் கனவுகளை செய்யவும் பிறருக்கு உதவவும் ஒரு கருவி.
  13. 🏃 பணத்தை துரத்தாமல் பணத்தால் செய்யும் நன்மைகளை நோக்கி ஓடுங்கள்.
  14. 📚 உங்களை மேம்படுத்தும் செலவு பத்து மடங்காக திரும்பி வரும்.
  15. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள் - அறிவே உங்கள் பெரிய சொத்து.
  16. ⏰ சின்ன வயதிலேயே முதலீடு செய்ய ஆரம்பியுங்கள்.
  17. 📈 கூட்டு வட்டியின் மேஜிக் உங்கள் சிறிய முதலீட்டை பெரியதாக மாற்றும்.
  18. 👑 பணத்தை நீங்கள் ஆளுங்கள் - பணம் உங்களை ஆளக்கூடாது.
  19. 😌 பணக்காரராக இருப்பதை விட நிதி சுதந்திரத்துடன் நிம்மதியாக வாழுங்கள்.
  20. 🌟 பணத்தை சரியாக பயன்படுத்தினால் அதுவே உங்கள் பலம்.
  • 50
·
Added a news

நகராட்சி அரசாங்கங்கள் விரைவாக வீடுகளைக் கட்டுவதை ஊக்குவிக்கும் நோக்கில், அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாண்டுகளுக்குள், தங்களின் முதன்மையான வீட்டுவசதி கண்காணிப்பு இணையப் பக்கத்தை (housing tracker) தொடர்ந்து புதுப்பிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஃபோர்டு (Ford) அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது.

ஆகஸ்ட் 2023 இல், ஒண்டாரியோவில் உள்ள நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கட்டப்படும் புதிய வீடுகளின் எண்ணிக்கையிற்கான இலக்குகளை ஃபோர்டு அரசாங்கம் நிர்ணயிக்கத் தொடங்கியது. மேலும், அந்த இலக்குகளை எட்டும் நகராட்சிகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தது.

"ஒண்டாரியோ முழுவதும் கூடுதலான வீடுகளை விரைவாகக் கட்டுவதற்கான எங்கள் பணியில் நாங்கள் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். ஒண்டாரியோ மக்களுக்குத் தேவையான மற்றும் அவர்கள் தகுதியான வீடுகளை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயல்பட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று அப்போதைய வீட்டுவசதி அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் (Steve Clark) கூறியிருந்தார்.

நகரங்கள் தங்களின் இலக்குகளை அடைவதில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பகிர்ந்துகொள்வதற்கும், புதிய வீட்டுவசதிக்கான தங்களின் சொந்த வரையறைகளைச் சேர்ப்பதற்கும் அரசாங்கம் ஒரு ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பை (online tracker) உருவாக்கியது.

அடுத்தடுத்த மாதங்கள் மற்றும் ஆண்டுகளில், 2031-க்குள் 1.5 மில்லியன் புதிய வீடுகளைக் கட்ட வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக, முதியோர் பராமரிப்புப் படுக்கைகள், அடித்தளங்கள் (basements), தோட்டத் தொகுப்புகள் (garden suites), மாணவர் விடுதி அறைகள் மற்றும் ஓய்வூதிய இல்லங்கள் ஆகியவற்றை புதிய வீடுகளின் வரையறைக்குள் அரசாங்கம் சேர்த்தது.

ஆரம்பத்தில் இந்த கண்காணிப்புப் பக்கம் வழக்கமாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது. அத்துடன், தங்கள் இலக்குகளை அடைந்த — அல்லது அதற்கு நெருக்கமாக வந்த — நகரங்களுக்குப் பெரிய அளவிலான காசோலைகளும் நிதிகளும் பரிசாக வழங்கப்பட்டன.

ஆனால் காலம் செல்லச் செல்ல, புரோகிராசிவ் கன்சர்வேடிவ் (Progressive Conservatives) கட்சியின் தேர்தல் வாக்குறுதியான 1.5 மில்லியன் புதிய வீடுகள் என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாக மாறியதால், இந்தக் கண்காணிப்புப் பக்கம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக குளோபல் நியூஸ் (Global News) பெற்ற உள்நாட்டு ஆவணங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புதிய வீடுகளுக்கான தரவுகளை அரசாங்கம் பிப்ரவரி 2025-க்குள்ளேயே தயாரித்து முடித்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.

இருப்பினும், முதியோர் பராமரிப்பு மற்றும் மாணவர் படுக்கைகளைச் சேர்த்த பிறகும், அரசாங்கம் தான் நிர்ணயித்த இலக்கை எட்டத் தவறியதைக் காட்டும் அந்தத் தரவை வெளியிட அது ஆகஸ்ட் மாதம் வரை காத்திருந்தது.

தற்போது, அரசாங்கத்தின் ஆன்லைன் கண்காணிப்புப் பக்கம் எந்தவொரு புதுப்பிப்பும் இன்றி முடங்கிக் கிடக்கும் வேளையில், வீட்டுவசதி இலக்குகளை எட்டிய நகராட்சிகளுக்கு அரசாங்கம் மீண்டும் காசோலைகளை வழங்கி வருகிறது.

இன்னமும் 2024 ஆம் ஆண்டின் தரவுகளையே காட்டி வரும் இந்த கண்காணிப்புப் பக்கத்தை மீண்டும் புதுப்பிக்கும் திட்டம் உள்ளதா என்று குளோபல் நியூஸ் கேட்ட கேள்விகளுக்கு நகராட்சி விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் (Ministry of Municipal Affairs and Housing) பதிலளிக்கவில்லை.

"வீடுகளைக் கட்டுவதில் ஒண்டாரியோ கடைசி இடத்தில் உள்ளது. அப்படியிருந்தும், அதை மாற்றுவதற்கான எந்தவொரு திட்டமும் டக் ஃபோர்டிடம் (Doug Ford) இல்லை," என்று ஒண்டாரியோ என்டிபி (NDP) தலைவர் மரிட் ஸ்டைல்ஸ் (Marit Stiles) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், "முதலமைச்சர் இந்த எண்களை வெளியிட விரும்பவில்லை, ஏனெனில் வீட்டுவசதிக் கொள்கையில் அவரது முயற்சிகள் மீண்டும் தோல்வியடைந்துவிட்டன என்பதை ஒப்புக்கொள்ள அவர் தயாராக இல்லை. இதைச் சரிசெய்ய டக் ஃபோர்டுக்கு எட்டு ஆண்டுகள் அவகாசம் இருந்தது, ஆனால் அவர் முதன்முதலில் பதவியேற்றபோது இருந்ததை விட ஒண்டாரியோ இப்போது இன்னும் பின் தங்கியுள்ளது. இது வெட்கக்கேடானது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 49
·
Added a news

வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட ஒரு தாக்குதல் சம்பவத்தில், பெண்ணொருவரின் ஹிஜாப் (தலைக்கவசம்) அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த நபரைத் தேடி வருவதாக ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், உட்ரிட்ஜ் கிரசண்ட் (Woodridge Crescent) 100 வது பகுதியில் நடந்த இந்த தாக்குதல் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதிகாரிகளின் தகவல்களின்படி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எந்தவொரு காரணமும் இன்றி ஒரு பெண்ணை அணுகி, இனவெறி கலந்த அவதூறு வார்த்தைகளைக் கூறியதோடு, "அவரது ஹிஜாபை வலுக்கட்டாயமாக அகற்றி", அவர் மீது ஒரு குடையையும் வீசியுள்ளார்.

சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து நடந்து சென்று ஓடித் தப்பியதாகவும், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முன்பின் தெரியாதவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.

இந்த சம்பவத்தில் அந்தப் பெண் காயமடையவில்லை.

மேற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவும் (West Criminal Investigations Section) வெறுப்புக் குற்றத் தடுப்புப் பிரிவும் (Hate Crime Unit) இணைந்து இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 613-236-1222, எக்ஸ்டென்ஷன் (extension) 7300 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொண்டு, வழக்கு எண் 26-170255 ஐக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்களை ரகசியமாக வழங்க விரும்புவோர் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (Crime Stoppers) அமைப்பிடமும் தெரிவிக்கலாம்.

  • 51
·
Added a news

மொன்றியல் (Montreal) பிராந்தியத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்தடை ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றியும், சில குடியிருப்புப் பகுதிகளின் அடித்தளங்கள் (basements) தண்ணீரிலும் மூழ்கியுள்ளன.

சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) அமைப்பின் தகவல்படி, சனிக்கிழமை சில மணி நேரங்களிலேயே மாண்ட்ரியலின் வெஸ்ட் ஐலேண்ட் மற்றும் சவுத் ஷோர் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

"சூழ்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது," என்று மொன்றியலின் பியர்ஃபாண்ட்ஸ்-ராக்ஸ்போரோ (Pierrefonds-Roxboro) மாவட்ட மேயர் ஜிம் பீஸ் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் கனடா அமைப்பின் அறிக்கையை விட, தனது பகுதியில் அதிக மழை பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சுமார் இரண்டு மணி நேரத்தில் 150 முதல் 170 மிமீ வரை மழை பெய்திருக்கலாம் என மதிப்பிட்டுள்ளார். மேலும், "பல நூறு" வீடுகள் வெள்ளத்தில் கடுமையாக மூழ்கியுள்ளதாகவும், பியர்ஃபாண்ட்ஸ் மற்றும் டாலார்ட்-டெஸ் ஒர்மோக்ஸ் ஆகிய இரு பகுதிகளிலும் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் மேயர் தெரிவித்தார்.

இதர மாவட்ட மேயர்களின் தகவல்படி, பாயிண்ட்-கிளாரி மற்றும் டோர்வல் ஆகிய பகுதிகளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, சுமார் 4,500 வீடுகள் இன்னும் மின்சாரத் துண்டிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹைட்ரோ-கியூபெக் (Hydro-Quebec) நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொன்றியலுக்கு தென்மேற்கே உள்ள செயின்ட்-கான்ஸ்டன்ட் நகராட்சி, உள்ளூர் அவசரநிலையை அறிவிக்க வேண்டியிருந்தது. மேயர் காலை 10:40 மணியளவில் அவசரநிலையை வாபஸ் பெற்றார், இருப்பினும் குடியிருப்பாளர்களுக்குத் தேவையான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் தீயணைப்புப் பிரிவுத் தலைவர் மார்ட்டின் கில்போல்ட் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், சனிக்கிழமை மதியம் 3 மணி முதல் பியர்ஃபாண்ட்ஸ்-ராக்ஸ்போரோ மற்றும் டாலார்ட்-டெஸ் ஒர்மோக்ஸ் மாவட்டங்களில் இருந்து சுமார் 800 அழைப்புகள் வந்துள்ளதாகவும், 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

"தீயணைப்புத் துறையின் தற்போதைய முக்கிய நோக்கம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும், மின்சாரப் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதுமே ஆகும்," என்று கில்போல்ட் கூறினார்.

வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் மின்சாரத்தை நிறுத்துவதற்காக 'மெயின் சுவிட்ச்' பலகைகளை (electrical panels) அணுக வேண்டியிருந்தால் ஒழிய, மற்றபடி வீடுகளின் அடித்தளங்களில் உள்ள தண்ணீரைத் தீயணைப்புப் படையினர் வெளியேற்ற மாட்டார்கள் என்றும் கில்போல்ட் விளக்கினார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள், மேலும் சுமார் 3,000 பேருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுவிடும் என்றும், அதன் மூலம் மின்சாரம் இல்லாதவர்களின் எண்ணிக்கை சுமார் 1,000 ஆகக் குறையும் என்றும் கில்போல்ட் மேலும் தெரிவித்தார்.

சில மீட்புப் பணிகள் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், கார்களில் சிக்கியிருந்த சுமார் 15 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டதாகக் கூறினார். வீடுகளில் இருந்த எவருக்கும் வெளியேறுவதற்கு தீயணைப்புத் துறையின் உதவி தேவைப்படவில்லை.

குடியிருப்பாளர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத்தர பாடுபடுவதாக கியூபெக் பொது பாதுகாப்பு அமைச்சர் இயன் லாஃப்ரினியர் உறுதியளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • 51
·
Added a news

ஆர்க்டிக் பகுதியை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கான அதிநவீன, நீண்ட தூர ரேடார் அமைப்பைப் பெறுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையைக் கனடா எடுத்துள்ளது.

ஆர்க்டிக் ஓவர்-தி-ஹொரைசன் ரேடார் அமைப்பை (A-OTHR) வாங்குவதற்காக, ஆஸ்திரேலிய அரசு மற்றும் 'பிஏஇ சிஸ்டம்ஸ் ஆஸ்திரேலியா' (BAE Systems Australia) நிறுவனத்துடன் கனடிய பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தியது.

ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில், ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸுடன் இணைந்து, பாதுகாப்பு கொள்முதல் துறைக்கான அரசுச் செயலாளர் ஸ்டீபன் ஃபர் $2.5 பில்லியன் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

கூடுதலாக, இந்த ரேடார் அமைப்பு வெளிநாட்டில் தயாரிக்கப்படுவதால், கனடாவின் பாதுகாப்புத் தொழில் துறையில் முதலீடு செய்வதைக் கோரும் ஒரு விரிவான தொழில்துறை நன்மைகள் ஒப்பந்தமும் கையெழுத்தானது.

தொலைதூர வடக்குப் பகுதியில் உள்ள வான்வெளியில் விமானங்கள் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களைக் கண்காணிப்பதற்காக, நோராட் (NORAD) அமைப்பில் செய்யப்படும் மிக முக்கியமான முதலீடாக இந்த ஓவர்-தி-ஹொரைசன் ரேடார்கள் பார்க்கப்படுகின்றன. இதன் கடத்தும் மற்றும் பெறும் நிலையங்கள் (transmitting and receiving stations) தெற்கு ஒன்டாரியோவில் உள்ள கவார்த்தா லேக்ஸ் (Kawartha Lakes) பகுதியில் அமைக்கப்படவுள்ளன. இந்த ரேடார் அமைப்பு 2026-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஆர்க்டிக் பகுதியில் நடக்கும் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், புரிந்து கொள்ளவும், அதற்குப் பதிலடி கொடுக்கவும் கனடாவின் திறனை வலுப்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த ஆர்க்டிக் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்குவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியே இந்தத் திட்டம்" என்று ஃபர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"ஆஸ்திரேலியாவுடனான இந்த ஒப்பந்தம், கனடாவின் பாதுகாப்பு தொழில்துறை உத்தியின் மையமாக இருக்கும் கூட்டாண்மை அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. மேலும் இது கனடிய ஆயுதப் படைகளுக்குத் தேவையான முக்கியமான திறன்களை விரைவாக வழங்குவதைத் தொடரும் பாதுகாப்பு முதலீட்டு முகமைக்கு (Defence Investment Agency) ஒரு முக்கிய மைல்கல்லாகும்."

கார்னி கடந்த ஆண்டு பதவியேற்ற சில நாட்களிலேயே ஆஸ்திரேலியாவுடனான இந்தக் கூட்டாண்மையை அறிவித்தார். அந்த நேரத்தில், இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு $6 பில்லியன் இருக்கும் என்று அவர் மதிப்பிட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் (கனடிய நேரம்) கையெழுத்தான இந்த ஒப்பந்தம், ஆர்க்டிக் பகுதிக்காகத் திட்டமிடப்பட்டுள்ள இரண்டு ரேடார் பிரிவுகளில் முதலாவதாகும். 'போலார் ஓவர்-தி-ஹொரைசன் ரேடார்' (P-OTHR) என்று அழைக்கப்படும் இரண்டாவது பிரிவு, தொலைதூர வடக்குப் பகுதியில் இன்னும் பகிரங்கமாகத் தீர்மானிக்கப்படாத ஒரு இடத்தில் அமைக்கப்படும். அதன் துல்லியமான இருப்பிடக் குறியீடுகளும் (co-ordinates) கிராமங்களின் பெயர்களும் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

தெற்கு ஒன்டாரியோவில் உள்ள A-OTHR அமைப்பைப் போலல்லாமல், P-OTHR வலையமைப்பு கனடாவின் முக்கிய நிலப்பரப்பிற்கு வடக்கே அமைந்துள்ள 36,500 க்கும் மேற்பட்ட தீவுகளின் கூட்டமான 'கனடிய ஆர்க்டிக் தீவுக்கூட்டத்திற்குள்' (Canadian Arctic Archipelago) ஆழமாக அமைக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கனடாவில் இந்த ரேடார் அமைப்பு குறித்த நிபுணத்துவத்தை உருவாக்கவும், நாட்டின் பாதுகாப்புத் தொழில் தளத்தை வலுப்படுத்தவும் பிஏஇ சிஸ்டம்ஸ் ஆஸ்திரேலியா நிறுவனம் கனடிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

A-OTHR கட்டுமானப் பணிகள் மூலம் 2026 மற்றும் 2033 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுதோறும் 2,270 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

"இந்த முயற்சி இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து நிலைத்திருக்கும் கூட்டாண்மைக்கான ஒரு தெளிவான சான்றாகும்" என்று ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் மார்லெஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "இந்த ஏற்பாடு, ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கும் அதே வேளையில், மேம்பட்ட, உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான ஆஸ்திரேலியாவின் திறனை வெளிப்படுத்துகிறது. மேலும் நம்பகமான பங்காளிகள் ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்புகளால் பயனடையவும் இது வழிவகை செய்கிறது."

  • 53
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். பழைய பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை உருவாக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

ரிஷபம்

குழந்தைகள் வழியில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். கலை சார்ந்த பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்து வந்த பதற்றமான நிலைகள் குறையும். நண்பர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மிதுனம்

பொருளாதாரம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி

கடகம்

மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பனிப்போர் விலகும். விளையாட்டு போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். சகோதரர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நிதி நிலையில் இருந்த நெருக்கடிகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

சிம்மம்

சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன் பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கல்வி பணிகளில் ஆர்வம் மேம்படும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களால் அனுபவம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கன்னி

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். வாகனம் சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

துலாம்

நினைத்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதுமையான வாய்ப்புகள் உருவாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்

குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

தனுசு

பேச்சுகளில் தெளிவுகள் பிறக்கும். அலுவல் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வரவுகளில் இருந்த தாமதம் மறையும். வியாபாரத்தில் புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகரம்

வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். வாழ்க்கைத் துணையுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். கடனை அடைப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். மின்சாரம் பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வேளாண்மை தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உருவாகும். நெருங்கிய நண்பர்கள் மூலம் மன வருத்தங்கள் நேரிடலாம். எதிர்பார்த்திருந்த சில நிகழ்வுகள் இழுபறியாகி நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மீனம்

புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். இழுபறியான விஷயங்களுக்கு திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். போட்டிகளில் அனுபவம் வெளிப்படும். கணவன் மனைவியிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் புதிய அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 93
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 8 ஆம் தேதி திங்கட்கிழமை 22.6.2026.

இன்று இரவு 08.49 வரை அஷ்டமி பின்னர் நவமி.

இன்று மாலை 03.35 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

இன்று மாலை 03.40 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

இன்று காலை 08.58 வரை பத்திரை. பின்னர் இரவு 08.49 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று அதிகாலை 05.53 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=552&dpx=2&t=1782108071

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 98

Good Morning...

  • 95
  • 187
  • 189
·
Added article

இந்தி நடிகை மிருணாள் தாக்​குர், ‘சீ​தா​ராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்​தியா படங்​களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். அவரும் நடிகர் தனுஷும் காதலித்து வரு​வ​தாகக் கடந்த சில மாதங்​களாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்​தன.

சில விழாக்​களில் இரு​வரும் ஒன்​றாகக் கலந்​து​ கொண்​டதை அடுத்து இச்​செய்தி வேக​மாகப் பரவியது. இரு​வரும் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் கூறப்​பட்​டது. அதை மிருணாள் தாக்​குர் மறுத்​திருந்​தார். ‘எனக்கே தெரி​யாமல் என் திரு​மணம் பற்​றிய செய்​தி​கள் வரு​கின்​றன’ என்று கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் தற்​போது இரு​வரும் பிரிந்​து​விட்​ட​தாக புதிய தகவல் பாலிவுட்​டில் வெளி​யாகி இருக்​கிறது. எனினும், இதை யாரும் அதி​காரப்​பூர்​வ​மாக உறு​திப்​படுத்​த​வில்​லை.

  • 194
·
Added article

ஆர்யா, இந்​திரன்​ஸ், சுனில், நிகிலா விமல், ரெஜி​னா, போஸ் வெங்கட், அஞ்​சலி நாயர் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அனந்தன் காடு’.

ஜியேன் கிருஷ்ணகு​மார் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு அஜனீஸ் லோக்​நாத் இசை அமைத்​துள்​ளார். யுவா ஒளிப்​ப​திவு செய்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் சார்​பில் வினோத் தயாரித்துள்ள இந்த ஆக்‌ஷன் த்ரில்​லர் படம் தமிழ், மலை​யாள மொழிகளில் உருவாகியுள்​ளது. இதன் டீஸர் வரவேற்​பைப் பெற்றுள்​ளது. ஜூன் 25-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்தியாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடைபெற்றது.

நடிகர் ஆர்யா ​போது, “இது 2 வருட​மாக நடை​பெற்ற திரைப்படம். ‘எனிமி’ படப்​பிடிப்பு நடந்து கொண்​டிருந்​த​போது, முரளி கோபி ஒரு ஒன்​லைன் சொன்​ன​தாக தயாரிப்​பாளர் வினோத் என்​னிடம் சொன்​னார். அந்​த கதை​யில் பல அடுக்குகள் இருந்​தன. ‘லூசிபர்’ போன்ற படங்​களில் நாம் அதைப் பார்த்திருக்கிறோம்.

அத்​தகைய திரைக்​கதையை திரை​யில் அதே தரத்​தில் கொண்டு வரு​வது சவாலான விஷ​யம். இயக்​குநர் ஜியேன் கிருஷ்ணகு​மார் மற்​றும் தயாரிப்​பாளர் வினோத் எந்த சமரச​மும் செய்​யாமல், அந்த திரைக்கதை​யின் ஆழத்​தை​யும் வலிமை​யை​யும் திரை​யில் கொண்டு வந்​திருக்​கிறார்கள். எனது கதா​பாத்​திரம் எமோஷனலாக​வும், வலு​வான​தாக​வும் இருந்​த​தால் ஒப்​புக் கொண்​டேன். அரசி​யல் பின்​னணி​யில் உள்ள ஆக்ஷன் கதை இது. ஆனால், அரசி​யல் கதை இல்​லை.

திரு​வனந்​த​புரத்தை மைய​மாகக் கொண்​டு, கேரளா – தமிழ்​நாடு எல்லைப் பகு​தி​களில் நடை​பெறும் கதை இது. எனவே படத்​தில் தமிழ், மலை​யாள மொழிகள் இயல்​பாக இடம்​பெறும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞ​னாக நடித்​திருக்​கிறேன். டெக்னிக்​கலாக​வும் இந்​த படம் சிறப்​பாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

  • 199