யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பளிங்கு சிலை போல சினிமாத்துறையில் அறிமுகமான நடிகை கிரண், 'யாதீன்' என்கிற இந்தி படத்தில் முதன் முதலாக நடித்தார். அந்த படத்திற்கு பின் தமிழுக்கு வந்த இவர், சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் அன்பே சிவம், வின்னர், வில்லன் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்பு குறைய, திருமலை படத்தில் வாடியம்மா ஜெக்கம்மா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
நடிகை கிரண் அதன் பின் 'நியூ' படத்தில் எஸ்.ஜேசூர்யாவுடன் பல விவகாரமான காட்சியில் நடித்தார். அந்த படத்திற்கு பின் மொத்தமாக காணாமல் போன கிரண், வருமானத்திற்கு வழியில்லாததால், இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். எனக்கு யாரும் நடிக் வாய்ப்பு கொடுக்கவில்லை, பட வாய்ப்பு கேட்டால், அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைக்கிறார்கள் என கிரண் வெளிப்படையாகவே பேட்டி ஒன்றில் கூறினார். இதையடுத்து, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவரால் தாக்குபிடிக்க முடியாமல் போன வேகத்திலேயே வந்துவிட்டார். வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த கிரணுக்கு வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் 'சிவராத்திரி' பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
அந்த படத்திற்கு பிறகு கிரண் தனக்கு எதாவது படவாய்ப்பு வரும் என எதிர்பார்த்தார். ஆனால், எதுவும் வராததால், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோவை ஷேர் வெளியிடுவதை வேலையாக வைத்து இருக்கிறார். தற்போது இவர், மிகவும் கவர்ச்சியாக இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். சிலர் அந்த போட்டோவிற்கு லைக்குகளை போட்டாலும் சிலர், அவர் கண்டபடி திட்டி வருகின்றனர்.
வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளராக நடிகை பாவனா போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்த வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன, சில ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தன. தற்போது, தனது புதிய படமான 'அனோமி' வெளியீட்டிற்கு முன்னதாக, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாவனா இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது பாவனா, கதாநாயகியாக நடித்து, இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கும் 'அனோமி' திரைப்படம் ஜனவரி 30 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். மரத் எழுதி இயக்கியுள்ளார். 'அனோமி' பாவனாவின் திரையுலகப் பயணத்தில் 90வது படமாகும். மர்ம, த்ரில்லர் படத்தில் பாவனா, தடயவியல் ஆய்வாளர் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் ரஹ்மான், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன், மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிரிப்புதான் வருது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் முன் செய்தியாளர்களிடம் பேசினார் பாவனா, அப்போது செய்தியாளர் ஒருவர், கேரள சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடப்போவதாக பரவும் செய்து பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பாவனா, நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை. இப்படி ஒரு செய்தி எப்படி வெளிவந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இதில், துளியும் உண்மையில்லை. அந்த செய்தியைப் பார்த்தபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. அது ஒரு பெரிய நகைச்சுவை என்று பாவனா கூறியுள்ளார். நடிகை பாவனா கடந்த 2013ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் பொருட்கள் அனுப்ப சீனாவிற்கு கனடாவை ஒரு 'டிராப் ஆப் போர்ட்' ஆக மாற்றப் போகிறேன் என்று கவர்னர் மார்க் கார்னி நினைத்தால், அவர் மிகவும் தவறாக நினைக்கிறார்.
சீனா கனடாவை உயிருடன் சாப்பிடும், அதை முற்றிலுமாக விழுங்கும். அவர்களின் வணிகங்கள், சமூக கட்டமைப்பு மற்றும் பொது வாழ்க்கை முறை ஆகியவற்றை அழிக்க நினைக்கிறது.
சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக இருக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் ஜனாதிபதி ட்ரம்ப் கூறி வந்தார். தற்போது கனடா பிரதமர் மார்க் கார்னியைகவர்னர் என ட்ரம்ப் விமர்சனம் செய்து உள்ளார்.
கடந்த காலத்தில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவையும் கவர்னர் என குறிப்பிட்டு டிரம்ப் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பழைய முதலீடுகளால் சில சஞ்சலங்கள் ஏற்படும். போட்டி விஷயங்களில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகளால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வம் இன்மை ஏற்படும். மனதளவில் பற்றற்ற தன்மை ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
குழந்தைகளின் உணர்வுகளை அறிந்து கொள்வீர்கள். திடீர் பயணங்களால் நெருக்கடிகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மிதுனம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கைகூடும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் புதிய கண்ணோட்டமும் பிறப்பும். வியாபார தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வரவுகளில் சற்று கவனம் வேண்டும். அனுபவமான பேச்சுக்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல்கள் அமையும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
கன்னி
எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோக ரீதியாக அலைச்சல்கள் மேம்படும். அரசு வகையில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ளவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
உயர் அதிகாரிகளால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்த தன்மை குறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விருச்சிகம்
கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். தியானம் மற்றும் மன ஒருமைப்பாட்டு செயல்களில் ஆர்வம் ஏற்படும். எடுத்த காரியம் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உருவாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
தனுசு
பொழுது போக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். கடன் செயல்களில் பொறுமை காக்கவும். தந்தை வழியில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். மாமன் உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். நுட்பமான செயல்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். பூர்விக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதளவில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கும்பம்
வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
கணித துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். ஆடை ஆபரணம் சேர்க்கை சிலருக்கு சாதகமாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். அன்பு வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
விசுவாவசு வருடம் தை மாதம் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25.1.2026,
இன்று இரவு 09.19 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று பிற்பகல் 12.11 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.
இன்று காலை 10.42 வரை சித்தம். பின்னர் சாத்தியம்.
இன்று காலை 10.30 வரை கரசை. பின்னர் இரவு 9.19 வரை வணிசை. பின்பு பத்தரை.
இன்று காலை 6 34 வரை மரணயோகம். பின்னர் பிற்பகல் 12.11 வரை அமிர்தயோகம். பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
அருண் பள்ளிச் சீருடை அணிந்து எனக்காக வாசலில் காத்திருந்தாள். நான் அவனை பள்ளியில் விட்டு விட்டு அலுவலகம் போக வேண்டும். அவசரம் அவசரமாக புறப்பட்டு கொண்டிருந்தேன்.
வழக்கமான பல்லவியை ஆரம்பித்தாள் என் மனைவி மீனா.
“அப்பாடி இந்த சின்ன வயசிலேயே இந்த பெண்ணுக்கு இந்த கர்வம் கூடாது” என்றாள்.
உடனே நான் “என்ன விஷயம்” என்று கேட்டேன்.
“எதிர் வீட்டு சுமி கான்வெண்டுக்கு காரிலேயே போகிறாள்.
நம் அருணையும் உங்கள் பழைய ஸ்கூட்டரையும் கேவலமாக பார்த்துக் கொண்டே போகிறாள் என்ன திமிர் அவளுக்கு” என்றாள்.
தினமும் தான் அருணை ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு செல்லும் போது எதிர் வீட்டு பெண் சுமி காரில் இருந்தே பார்க்கும். அன்று ஒரு விசேஷத்திற்காக என் மனைவி
மீனாவை ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன், என் மகன் உடல் நலம் சரியில்லாததால் பள்ளிக்கு போகவில்லை. அப்பொழுது “அங்கிள் அங்கிள் என்னை ஸ்கூல்ல டிராப் பண்ணுகிறீர்களா?
எங்கள் வீட்டு கார் ரிப்பேர். ரிக்க்ஷாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினாள் சுமி.
என் மனைவியின் முகம் சிறுத்தது. இருந்தாலும் நாள் சுமியை ஸ்கூட்டரில் முன் பக்கத்தில் ஏற்றிக் கொண்டு கிளம்பினேன்.
வழியெல்லாம் சுமி ஹாரனை அழுத்தி அந்த சந்தத்தை அனுபவித்துக் கொண்டு வந்தாள்.
திருப்பங்களில் கை காட்டி சைகை செய்து கொண்டு வந்தாள்.
பள்ளி வத்ததும் “தேங்ய்யூ அங்கிள்” என்று எனக்கு டாடா காண்பித்துவிட்டு தன் நண்பர்களை அழைத்து, “இன்று நான் அந்த அங்கிளுடன் ஸ்கூட்டரில் ஜாலியாக வந்தேன்” என்று குதூகலித்தாள்.
நானும், என் மனைவியும் மீனாவின் முகத்தை பார்த்தோம்.
உடனே மீனா “அடப்பாவமே ஸ்கூட்டரில் போக வேண்டும் என்று இந்தப் பெண் எவ்வளவு ஆசைப்பட்டிருக்கிறாள். அதனால் தான் நம் ஸ்கூட்டரை தினமும் பார்த்து கொண்டு சென்றாளா?
நான்தான் இவளை தவறாக நினைத்துக் கொண்டேன்” என்று கூறினாள்.
நான் அதற்கு “அடி பைத்தியமே! குழந்தைகள் குழந்தைகளாக தான் இருக்கிறார்கள். நாம் தான் மற்றவர்களைப் பார்த்து பொறாமை படுகிறோம்” என்று சொல்ல மனைவியும் அதை ஆமோதித்து தலை ஆட்டினாள்.
அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்ட தினம் (1908).
அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம...!
பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று... ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?
அஜினோமோட்டோ என்பது நாம் நினைப்பதுபோல அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது.. உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,
இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்..
ஜப்பான் தலைநகர் டொக்கியோ,சிவோவை தலைமையிடமாக கொண்டு , கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,
அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும்.. முதலில் கிகுனே இகெடா, 1909ல் அவர் தனது வீட்டில் நடத்தி வந்த வைத்தியசாலையில் அதனை மருந்தாக பயன்படுத்தி வந்தார். பிறகு உணவுகளில் சேர்த்து அதில் ருசி கூட்டப்பட்டிருந்ததை அறிந்து பிறகு அதனை உபயோகித்து Seasoning, cooking oil,sweetener, amino acids வரை தயாரித்து பின் Pharmaceutical துறையிலும் இந்த உப்பை அறிமுகம் செய்தார்...
முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர்தரமானதாக இருந்தது.
ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்தோடு கைகோர்த்து வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில், Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும் அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..
Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரீயமாகும்..ஒருமுறை உண்டால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..
முதலில் இந்த glutamate ஐ உபயோகித்து Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர் பிறகு இதன் அபாயமறிந்து அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர் ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.
இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில் தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்..
சாலையோர கடைகள் தொடங்கி மல்டிகுஷன் ரெஸ்ட்டாரன்ட் வரை.. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும் இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை..முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான் அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய் தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்...
சரி இதை நாம வாங்கி பயன்படுத்த வேண்டாம் என நினைத்து புறக்கணித்தாலும் நாம் உபயோகிக்கும் அத்தனை வகையான பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களிலும் இது மறைமுகமாக கலக்கப்பட்டுள்ளது..
அது நாம் விரும்பியும் விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது, குறிப்பாககுழந்தைகள்...
அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ்,க்ரீம் பிஸ்கட், சாதாரணபிஸ்கட்,
நூடுல்ஸ்,இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன்,சிக்கன்,ரெடிமேடு சப்பாத்தி,பரோட்டா,
சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள் , சாக்லேட்கள், KFC, Pizza , Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,
அதனால் தான் இந்த Lays,Kurkure வகையறாக்களை உண்ணும் நம் வாண்டுகள் அதற்கு அடிமையாகிறார்கள்.
உண்பதால் வரும் பின்விளைவுகள்:-
1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி
2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால் அதிகமான பசி எடுக்கிறது, நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால் தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.
3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.
4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும் இதனை மருத்துவர்கள் Over Stimulation of Nerves System என்கிறார்கள்.
5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சிலநேரம் வலியும் உருவாக்கும்.
6. முகத்தில் எத்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும் சிலரது முகம் கருத்திருக்கும்.
7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு,ஆஸ்துமா , உணவு@a ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பினால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.
8. இவை எல்லாம் ஒரு நாள் நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..
ஆகவே அஜினோமோட்டோவை தவிர்ப்போம்.உடல் நலம் காப்போம்.
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு யோகா முத்திரைகள் முழுமையாக பலனை தருகிறது. இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கு மிக அவசியம். ஒரு மனிதனுடைய உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்க வேண்டுமெனில் உடலுக்கு தேவையான அளவில் ஓய்வு வேண்டும்.
இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடல் ஓய்வில் தூக்கத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் நன்றாக இயங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கினால்தான் சிறுகுடல் நன்கு இயங்கும். இதற்கு
இரவு தூக்கம் மிக முக்கியமாகும். இன்று நிறைய நபர்கள் இரவு வேலை பார்ப்பதால் இரவு தூக்கமில்லை, இதனால் அஜீரணக் கோளாறு, அல்சர், வயிற்றில் கட்டிகள் வருகின்றது. அது கேன்சர் ஆக கூட மாறிவிடுகின்றது. எனவே இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக, மிக அவசியம்.
இன்றைய பரபரப்பான உலகில் மனிதர்கள் மத்தியில் நிதானமாக செயல்படும் நிலை குறைந்து கொண்டே வருகின்றது. காலை முதல் இரவு படுக்கும் வரை ஒரு பதட்டமான மன நிலையில் வேகமாக ஓடுகின்றனர்.
நிதானம், பொறுமை இழந்து விடுகின்றனர். இதனால் இதயத்துடிப்பு சீராக இருப்பதில்லை. இதன் காரணமாகவும் ஜீரண மண்டலம் பாதிப்படைகின்றது. குடல் இயக்கம் பாதிப்பு அடைகின்றது.
நிதானமாகவும், பதட்டம் இல்லாமலும் நாம் வாழ வேண்டும். அதற்கு யோகா முத்திரைகள் நமக்கு முழுமையாக பயன்படுகின்றன.
இதற்கு மாதங்கி முத்திரையும், சூரிய முத்திரையும் காலை , மதியம், மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்
சூரிய முத்திரை
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிர விரலையும், கட்டை விரலையும் ஒன்றாக வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மக்கள் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் குறையும். கால்நடைகள் மூலம் லாபங்கள் மேம்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உண்மையானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் அமைதியற்ற சூழ்நிலைகள் காணப்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
வியாபார பணிகளில் திறமைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். நீண்ட நாள் கவலைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி உருவாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். செயல்பாடுகளில் புதிய உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் ஈடுபடுவீர்கள். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
கடகம்
உடன் இருப்பவர்கள் மூலம் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரமுகர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சிம்மம்
செயல்பாடுகளை சோம்பேறித் தனத்தின் மூலம் கால தாமதங்கள் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். பயணத்தால் அலைச்சலும் அனுபவமும் கிடைக்கும். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படுதல் நல்லது. பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
கன்னி
நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் பலரின் அறிமுகங்கள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
எதிர்பாராத தனவரவுகள் மூலம் பொருள் சேர்க்கை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நேசம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உருவாகும். கணவன் மனைவிக்கிடையே புரிதலும் ஒற்றுமையும் உருவாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பொழுது போக்கு செயல்களில் சிந்தித்து செயல்படவும். தன வரவுகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
தனுசு
விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தடையாக இருந்து வந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகரம்
மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதுவிதமான தெளிவுகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைந்து காணப்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஜவுளி பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். வியாபார பணிகளில் சிறு மாறுதல்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். புதுவிதவிதமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விசுவாவசு வருடம் தை மாதம் 10 ஆம் தேதி சனிக்கிழமை 24.1.2026.
இன்று அதிகாலை 12.51 வரை பஞ்சமி. பின்னர் இரவு 11.14 வரை சஷ்டி. பிறகு சப்தமி.
பிற்பகல் 01.19 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
இன்று பிற்பகல் 01.21 வரை சிவம். பின்னர் சித்தம்.
இன்று அதிகாலை 12.51 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 12.03 வரை. பின்பு இரவு 11.14 வரை தைதூலம். பிறகு கரசை.
இன்று பிற்பகல் 1 19 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
ஒரு மகன் தன் தந்தையிடம் சென்று அப்பா நான் இருக்கிற இடத்தில் எனக்கு மரியாதை இல்லை என்று சொன்னான். யாருமே என்னை மதிப்பதில்லை என்று வருத்தப்பட்டான்.
அவனிடம் அப்பா ஒரு வாட்ச் கொடுத்து இதை விற்று கொண்டு வா என்று சொன்னார்.
அவன் ஒரு வாட்ச் ரிப்பேர் கடைக்கு சென்று அதை காட்டிய போது அம்பது ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னார்கள்.. அவன் அதை அப்பாவிடம் வந்து சொன்னான். இதை ஒரு நகைக்கடையில் கொண்டு போய் கொடு என்று சொன்னார்.
நகைக்கடையில் அவர்கள் தம்பி இது பழைய தங்கம் அதனால் ஒரு 500 ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்கள்.. ஆச்சரியம் அவன் அப்பாவிடம் வந்து அப்பா இதற்கு 500 ரூபாய் தருகிறார்களே என்று சொன்னான்.
அவனப்பா சிரித்துக் கொண்டே இதை ஒரு மியூசியத்தில் கொடு என்று சொன்னார்... அவர்கள் தம்பி இது மிகவும் பழமையான வாட்ச் இதை நாங்கள் ஐம்பதாயிரத்திற்கு எடுத்துக் கொள்கிறோம்.. அதிகம் தேவைப்பட்டாலும் தருகிறோம் என்று சொன்னார்கள்.... அவன் அதை தன் அப்பாவிடம் வந்து சொன்னான்..
அப்பொழுது அவன் அப்பா சொன்னார் உனக்கு மதிப்பில்லை என்று நீ உணருமிடம் நீ இருக்க தகுதியில்லாத இடம் நீ இருக்கும் இடத்தை மாற்று உன் மதிப்பு தானாய் உயரம் என்று சொன்னார்.
மதிப்பு என்பது பொருளில் இல்லை அது போய் சேரும் இடத்தில் இருக்கு! உன் மதிப்பு எங்கே என்று நீ தான் தேடி செல்ல வேண்டும் என்றார்!
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
மூக்கடைப்பு: இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழா படுக்கவேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாச பாதயை சுத்தப்படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முந்தைய காலத்தில் உடலில் வரும் சிறு சிறு நோய்களுக்கு கூட வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தான் சரி செய்தனர்.
ஆனால் இன்றைய காலத்தில் பலர் சிறு வியாதி என்றால் கூட உடனடியாக மருத்துவநிலையங்களுக்கு சென்று வைத்தியரின் ஆலோசனை கூட இல்லாமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இது உண்மையில் சில சமயங்களில் ஆபத்தையே விளைவிக்கும்.
இதனை தவிர்த்து சில எளிய முறையில் வைத்தியங்களை மேற்கொண்டால் உடலுக்கு ஆரோக்கியத்தையே தரும்.
அந்தவகையில் சிறு சிறு நோய்களுக்கு தீர்வு அளிக்கும் சில சித்த மருத்துவ குறிப்புகளை இங்கே பார்ப்போம்.
• குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
• தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.
• தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
• ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும்.
• இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் சாப்பிடலாம்.
• பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
• அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.
• உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
• கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
• வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்...
1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர்.
இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது.
மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக அதாவது தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது.
இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை. இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.
இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் மதியால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு வெகுவாக குறையும்.
ஒரு சமயம் கைலாசத்தையும், திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய் விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது. இந்த இடத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள்.
என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில், கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும். இவ்வாறு பகவான் கூறி அருளிய தலம் இது.
அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்,
திருக்கோடிக்காவல்,(வழி)
நரசிங்கன் பேட்டை–609 802.
திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என வகைகள் கொண்டது.
வெற்றிலை சாற்றுடன் சிறிது அளவு நீர் மற்றும் பால் கலந்து குடித்தால் , சிறுநீர் பிரியும்.
கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்ட , மூச்சுத்திணறல்,இருமல் சரியாகும்.
வெற்றிலை சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.
வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் துளசி இலைகளை வைத்து, கசக்கி பிழிந்து சாறு எடுத்து, 10 மாத குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டு வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும்.
வெற்றிலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றிட சளி குறையும்.
கம்மாறு வெற்றிலைச்சாறு 15 மி.லி எடுத்து அதனுடன் வெந்நீர் கலந்து குடித்து வந்தால், வயிற்று உப்புசம், மந்தம், தலைவலி, நீரேற்றம், வயிற்றுவலி குணமாகும்.
வெற்றிலையில் ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, கட்டிகளின் மேல் வைத்து கட்ட கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும். இரவில் கட்டுவது நல்லது.
கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வர இரைப்பை குடல்வலி, செரிமானம், மலச்சிக்கல் குணமாகும்.
வெற்றிலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்ட,
குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்கவும், மார்பில் பால் கட்டுவதால் வரக்கூடிய வீக்கத்தை கரைக்கும்.
தேள் கடி விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு, அத்துடன் தேங்காய்த்துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிடவிஷ கடி குணமாகும். விஷப்பூச்சிகள் எது கடித்தாலும் குணமாகும்..
வெற்றிலை 4, வேப்பிலை ஒரு கைப்பிடி, அறுகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து, 500 மி.லி தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து 150 மி.லி ஆக வற்றியதும் வடிகட்டி, தினமும் மூன்று வேளை சாப்பிடும் முன் குடித்து வர சர்க்கரையின் அளவு குறையும்.
இயக்குநர் சுந்தர்.சி-க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது பிறந்தநாளில் நடிகையும் அவரின் மனைவியுமான குஷ்பூ தகவல் தெரிவித்தார். அவருக்கு என்ன ஆனது?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர் அண்மையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் ஒப்பந்தமான சில நாட்களிலேயே விலகிய அவர், ரஜினி படத்தை இயக்கப்போவதில்லை என்றும் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
தற்போது விஷாலை வைத்து ஒரு படமும், நயன்தாரா முன்னணி நாயகியாக வைத்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கி வருகிறார். இன்று சுந்தர் சியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
விஐபி பிரேக் தரிசனம் மூலம் வழிபட்ட குஷ்புவுக்கு, தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சாமி கும்பிட்ட பின் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய குஷ்பு, இன்று என்னுடைய கணவர் சுந்தர் சி பிறந்தநாள். சிறிய அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அவரால் வர இயலவில்லை. எனவே நான் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து ஏழுமலையானை வழிபட்டேன் என்று அப்போது கூறினார். ஆனால் அவருக்கு என்ன அறுவை சிகிச்சை என்ற விவரங்களை குஷ்பூ தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சுந்தர் சியின் பிறந்தநாளையொட்டி வீடியோ வெளியிட்டு அவரது அவ்னி மீடியா நிறுவனம், மூன்று தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்து வரும் பொழுதுபோக்கின் மன்னர் என்று புகழ்ந்துள்ளது.
ஆம்பள, ஆக்சன் படங்களைத் தொடர்ந்து விஷால், ஹிப் ஆப் தமிழா, சுந்தர் சி இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களின் இறுதி பயணத்தில் துணையாக நின்று, அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் அளிக்கும் மனிதன்தான் வினு.
அவர் ஒரு சாதாரண சவ அடக்கத் தொழிலாளி அல்ல; யாரும் தொடத் தயங்கும், அழுகிப் போனதும் சிதைந்ததும் ஆன உடல்களை இதயத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அவர்களின் உறவினர்களிடம் மரியாதையுடன் ஒப்படைக்கும் ஒரு புனித மனிதர். செய்தித்தாளில் வெளிவந்த அந்த நேர்காணலைப் பார்க்கும்போது, வினுவின் ஒவ்வொரு சொல்லும் நம்முள்ளத்தை உலுக்கி விடுகிறது.
சடங்கு செய்ய உரிய கூலியை கேட்டபோது, ஒரு கோடீஸ்வரன் ஒரு ரூபாய் நாணயத்தை வினுவின் முன் எறிந்த சம்பவம் நம்மை ஆழமாக காயப்படுத்தும். உலகம் முழுவதும் மதிக்கப்படும் அந்த பெரிய மனிதன் காட்டிய கொடூரத்தின் சின்னமாக அந்த நாணயத்தை வினு இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறார். அவமதிக்கப்பட்ட அந்த தருணங்களை நினைத்து பலமுறை அழுதிருந்தாலும், வினு தன் பாதையை ஒருபோதும் கைவிடவில்லை.
ரயில் மோதி சிதைந்த ஒரு முதியவரின் உடலை, யாரும் தொடத் தயங்கிய ஒரு அழுக்குக் கால்வாயிலிருந்து எடுத்து வந்ததும் வினுவே. இறுதிச்சடங்குகளுக்காக உடலை தயார் செய்தபோது, “இனி காபிர் தொட வேண்டாம்” என்று சொல்லி அவரை ஒதுக்கிய மதப் பண்டிதர்களுக்கு, அந்த மகன் சொன்ன பதில் உலகத்துக்கே ஒரு பெரிய பாடமாக இருந்தது. “என் அப்பாவை அந்த சேற்றிலிருந்து எடுத்து வந்தது இந்த காபிர்தான்; ஆகவே இவர் தொட்டாலே போதும், மீதிச் சடங்குகளை செய்யலாம்” என்று மகன் சொன்னபோது, அந்த அன்பின் முன் வினுவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.
தொழிலின் பெயரால் பலர் அவரை ‘பிணம் எடுப்பவன்’ என்று அவமதித்துள்ளனர். தன்னைத் துன்புறுத்தியவர்களும், தன் முகத்தில் துப்பியவர்களும் இறந்தபின், அவர்களின் உடல்களையும் வினுவே எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் அந்த உடல்களிடம், “இப்போது உனக்கு துணையாக நான் மட்டும்தானே இருக்கிறேன்?” என்று கேட்பார். பசிக்கும்போதும் உடலின் அருகில் உட்கார்ந்தே உணவு உண்ண தயங்காத வினுவுக்கு, எல்லா உடல்களும் ஒன்றே. தன் சொந்த மகளின் உடலையும் தன் கைகளாலேயே மண்ணில் ஒப்படைக்க நேர்ந்த தந்தை அவர்.
இன்று 40 வயதை கடந்த வினு, 25 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகிறார். மரணம் எப்போது வேண்டுமானாலும் தன்னைத் தேடி வரலாம் என்று அவர் நம்புகிறார். தன் மரணத்திற்கு முன்பாக, ஆதரவற்றவர்கள் திரும்பிச் செல்ல ஒரு ஆறு அடி மண்ணை எங்காவது ஒதுக்கி வைத்திருக்க வேண்டும் என்பதே வினுவின் ஒரே ஆசை. மனிதன் என்பவன் இவ்வளவுதான் என்பதை உலகத்துக்குக் காட்டும் ஒரு பெரிய பாடப்புத்தகமே வினு என்ற மனிதன்.

















