யாழ் பண்ணை கடற்கரையில் ஒன்றுகூடிய அதிகாரிகள்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.இதனடிப்படையில் யாழ் பண்ணை கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இஞ்சியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் இருந்தாலும், அதை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதைப் பற்றி காண்போம்.
* தினமும் இஞ்சியின் சாற்றை, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாவதுடன், விரைவாக உடலின் எடையைக் குறைக்கலாம்
* வாரம் இரண்டு முறை, இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் மற்றும் சோர்வு பிரச்னைகள் குணமாகும்
* வாரம் ஒரு முறை, இஞ்சியை சுட்டு சாப்பிட, பித்தம் மற்றும் கபம் நோய்கள் விரைவாக குணமாகும். அதேபோல், இஞ்சி சாற்றில் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதக் கோளாறுகள் நீங்கி, உடலில் பலம் உண்டாகும்
* இஞ்சியை புதினா இலையோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை குணமாகும்
* காலையில் இஞ்சி சாற்றில், சிறிதளவு உப்பு கலந்து, மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், மலச்சிக்கல் விரைவில் குணமாகும்
* இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என, இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மார்பு வலி குணமாகும்.
* இஞ்சி சாற்றோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்
* இஞ்சி சாற்றில், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பசி உணர்வை ஏற்படுத்தும். அதேபோல் இஞ்சி, மிளகு ஆகிய இரண்டையும் அரைத்து சாப்பிட்டு வந்தால், அஜீரணம் ஏற்படாது
* இஞ்சியை வதக்கி, அதில் தேன் மற்றும் நீர் விட்டு, கொதிக்க வைத்து, காலை, மாலை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு விரைவில் குணமாகும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து, அதனுடன் துளசி இலையின் சாறை சேர்த்து, ஒரு வாரம் சாப்பிட்டால், வாய்வு தொல்லை குணமாகும்
* இஞ்சி சாற்றில் தேன் கலந்து, தினமும் காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
1. வாரம் ஒரு முறை வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கை, கால்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் நீங்கும். மேலும் அதிகாலையில், தினமும் 5 நிமிடம் கைகள் மற்றும் கால்களை மெதுவாக நீட்டி மடக்கும் பயிற்சியை செய்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
2. வாரத்தில் இரண்டு நாட்கள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தேங்காய் பாலுடன், கருப்பட்டி சேர்த்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அல்சர் போன்ற பிரச்சனைகள் வராது.
3. செவ்வாழைப் பழத்தை தினமும் இரவு நேரங்களில் உணவிற்குப்பின் சாப்பிட்டு வந்தால், பல்லில் ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு நீங்கும். பல் சொத்தை போன்ற பிரச்சனைகளும் வராது.
4. கருவேப்பிலையை துவையல் செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடுகள் சீராகும். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கவும் உதவி செய்யும்.
5. முகம் பளபளப்பாகவும், முகப்பறு மறையவும் சந்தன கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
6. மலக்குடல் பிரச்சனைகள் வராமல் தடுக்க, அகத்திகீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக அகத்தி கீரையை நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிடுங்கள்.
7. சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும், பாத எரிச்சல் சரியாகும்.
8. தேனில் ஊரவைத்த நெல்லிக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர இதயம் மற்றும் நுரையீரல் வலிமை பெறும்.
9. வேப்ப எண்ணெயை லேசாக சூடு செய்து கை மற்றும் கால்விரல் இடுக்குகலில் தடவினால் சேற்றுப் புண்கள் குணமாகும்.
10. வாரம் ஒருமுறை இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலோ (அல்லது) வாரம் ஒருமுறை திராட்சை சாறு குடித்துவந்தாலோ இரத்தம் சுத்தமாகும்.
ஒருவன் "என்னிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள்" என அறிவித்தான். மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர். அப்போது அங்கே வருகை தந்த அந்த கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.
"என்னிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது. ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள்" என்றான். உடனே அனைவரும் வரிசையாக நின்றனர். வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது.
அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன். அதாவது "முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும் ஆயிரமாவதாக நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்ச ரூபாயும்" என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான்.
முதலில் நின்றவர் இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டு ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர் டீ குடிக்க போறேன் என சென்று விட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து விட்டார். இப்படியே.. முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே கடைசியாக இணைந்து கொள்வோம் என்று பேசிக் கொண்டார்கள். இப்படியே யாருமே கடைசி வரையில் பணம் பெற வரவே இல்லை...
மனித மனம் கிடைப்பதில் ஒருபோதும் திருப்திப் படுவதே இல்லை..!!
வறுமைக்கோட்டில் குடும்பம் ஒன்று இருந்தது. வாழ்ந்து கெட்ட குடும்பம். தலைவன், தலைவி, மகன், மகள் என நான்கு பேர் இருந்தனர். சோம்பேறிகள் என எந்த வேலையும் கிடைக்கவில்லை. கால் வயிற்றைக் கூட தண்ணீரில்தான் கழுவிக் கொண்டனர். கண்ணீர் வடிக்கக் கூட தெம்பற்ற நிலை.
இவர்களின் நிலையைப் பார்த்து பரிதாப்பட்ட ஒருவர், அந்த ஊரின் மலையடிவாரத்தில் காலம் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாமியாரைப் போய் பாருங்கள். ஏதாவது அருள்வாக்கு சொல்வார் என்றார்.
சரியென்று அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பி சாமியை பார்க்க சென்றார். ஒரு ஓலைக் குடிசையில் சாமி சப்பணமிட்டு அமர்ந்து ஏதோ தியானம் செய்து கொண்டிருந்தார். தியானத்தை முடிக்கும் வரை காத்திருந்த அவர், "சாமி நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்" என்றார்.
"சொல் மகனே என்ன பிரச்சினை உனக்கு ? "
"சாமி ... எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து நாலு பேர் இருக்கோம். வசதியா வாழ்ந்து நொடிச்சுப் போனதால இந்த ஊருல எங்கள்ல யாருக்குமே வேலை கிடைக்கல. நல்லா சாப்பிட்டு பல மாசம் ஆகிப் போச்சு. உங்களை சந்திச்சா ஏதாவது நல்ல வழி சொல்வீங்கனு ஒருத்தர் சொன்னார். அதான் வந்தேன் சாமி " என்றார் பவ்யமாக.
"உனக்கு உழைத்து சாப்பிட ஆசையா, முன்பு போல் உட்கார்ந்து சாப்பிட ஆசையா? "
"உட்கார்ந்து சாப்பிட்டு கெட்டது போதும். இனி உழைத்து சாப்பிடத்தான் ஆசை சாமி "
"சரி அதோ அந்த மூலையில் ஒரு மூட்டை அரிசியும் அந்த அரிசி தீரும் வரைக்குமான மளிகைப் பொருட்களும் இருக்கின்றன. எடுத்துக் கொள் "
"சாமி நான் உட்கார்ந்து சாப்பிட விரும்பவில்லை. இது தீர்ந்த பின் மீண்டும் இதே நிலைக்குதான் வருவேன். நிரந்தர தீர்வு தாருங்கள் சாமி "
"அவசரப்படாதே மகனே. நான் சொல்வதை மட்டும் செய். ஆனால் ஒரு நிபந்தனை. இன்று கால் படி அரிசியை சமை. நாளை அதை இரட்டிப்பாக்கி அரை படி சமை. நாளை மறுநாள் அதையும் இரட்டிப்பாக்கி ஒரு படி அரிசி சமை. இப்படியே ஒவ்வொரு நாளும் முதல் நாளை விட இரட்டிப்பாக சமை. ஒரு அரிசி கூட வீணாக கூடாது. என்னைக் கேட்காமல் உன் வீட்டார் தவிர யாருக்கும் சாப்பாடு போடக் கூடாது"
"சாமி இதெப்படி நிரந்தர தீர்வாகும்? "
"நான் சொல்வதை மட்டும் செய்வதென்றால் இவற்றை எடுத்துப் போ. இல்லையென்றால் நீ இப்படியே போகலாம் "
"நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன். கோவப்படாதீங்க சாமி"
சாமி சிரித்துக் கொள்ள, அரிசியையும் மளிகைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
அன்று கால் படி அரிசி சமைத்து கொஞ்சமாய் குழம்பு வைத்து நான்கு பேரும் சாப்பிட்டார்கள். அனைவருக்கும் அரை வயிறு நிரம்பியது. அடுத்த நாள் அரைப்படி சமைத்து குழம்பு வைத்து வயிறாற சாப்பிட்டார்கள். மூன்றாம் நாள் ஒரு படி சமைத்து சாப்பிட்டது போக பாதி சாதம் மிஞ்சியது.
வீணாக்க கூடாதே என்ன செய்வது என யோசித்தவர், அடுத்த அரை மணி நேரத்தில் சாமியிடம் ஓடினார்.
"சாமி நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாக சமைத்தேன். ஆனால் இன்று பாதி மிஞ்சி விட்டது. என்னைக் கேட்காமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றீர்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும். எங்களுக்கு அரைப்படியே போதுமானது. அதை மட்டும் தினமும் சமைத்துக் கொள்ளவா? "
"அரிசி தீரும் வரை இரட்டிப்பாக சமைப்பதை நிறுத்தக் கூடாது என்பது நிபந்தனை. மிஞ்சியதை அக்கம் பக்கத்தினருக்கு கொடு"
"சரிங்க சாமி " கும்பிட்டு விட்டு கிளம்பினார். வீட்டிற்கு சென்றதும் மிஞ்சிய சாதத்தை அக்கம் பக்கத்தினர் நான்கு பேருக்கு கொடுத்தார். அவர்கள் சாப்பிட்டு விட்டு "ஆகா அருமையான சாப்பாடு" என புகழ்ந்தார்கள்.
மறுநாள் இரண்டு படி அரிசியைப் பொங்கி சாப்பிட்டது போக பதினைந்து பேர் அளவு சாப்பாடு மிஞ்சியது. இப்படியே போனால் அரிசி ஒருவாரத்தில் முடிந்து விடுமே என்ற கவலையில் மீண்டும் சாமியைப் பார்க்க ஓடினார்.
"சாமி இன்னைக்கு பதினைந்து ஆள் சாப்பாடு மிஞ்சி விட்டது. இப்படி சமைத்தால் ஒருவாரம் கூட அரிசி வராதே "
"நீ சுவையாக சமைக்கிறாயா? "
"ஆமாம் சாமி. நேற்று சாப்பிட்ட அனைவரும் எந்த ஓட்டல்லயும் இவ்வளவு ருசியான சாப்பாடு கிடைப்பதில்லைனு பேசிக்கிறாங்க "
"அப்படியானால் மீதமாகும் சாப்பாட்டை நீ விற்பனை செய்"
"சரிங்க சாமி " என்று சந்தோசமாய் வணங்கி வீட்டுக்கு வந்தவர் சாப்பாடு நாற்பது ரூபாயென விற்க ஆரம்பித்தார். பத்து சாப்பாடு மட்டுமே விற்றது. அஞ்சு சாப்பாடு மிஞ்சியது.
அடடா இன்னைக்கு பதினைஞ்சு சாப்பாடே விக்கல. நாளைக்கு எப்படி நாப்பது சாப்பாட்டை விக்கிறது என்ற கவலை வர அடுத்த அரைமணி நேரத்தில் சாமியின் முன் நின்றார்.
"சாமி பத்து சாப்பாடுதான் வித்துச்சு. இன்னைக்கே அஞ்சு மிஞ்சிருச்சு. நாளைக்கு நாலு படி பொங்குனா வீணாப் போகுமே சாமி "
"ஒரு சாப்பாடு எவ்வளவுனு வித்தே? "
"நாப்பது ரூபாய்க்கு வித்தேன் சாமி "
"ஒரு சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவாகும்? "
"ஒரு சாதத்துக்கு அஞ்சு ரூபா வச்சா குழம்பு மற்றும் தொட்டுக் கொள்ளும் வகையறாக்களுக்கு பத்து ரூபாயாகும். மொத்தம் ஒரு சாப்பாட்டுக்கு பதினைந்து ரூபாய் செலவாகும் சாமி "
"உன் உழைப்புக்கு அஞ்சு ரூபாய் சேர்த்து வச்சாலும் ஒரு சாப்பாடு தயாரிக்க ஆகும் செலவு இருபது ரூபாயை தாண்டாது. நீ அதையும் இரு மடங்காங்கி விற்றால் எப்படி விற்பனையாகும்? "
"அப்படி விற்றால்தானே நாளை ஏதோ ஒரு வகையில் நஷ்டம் வரும் போது சமாளிக்க முடியும் "
"இதுதான் நிறையப் பேர் செய்யும் தவறு. குறைந்த லாபம் அதிக விற்பனை என்பதே புத்திசாலிகள் கடைபிடிக்கும் அழகான வியாபார முறை. நாம் செய்யும் தொழிலில் அனைவருக்கும் பயன் இருக்க வேண்டும். நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமென நினைப்பவன் நல்ல வியாபாரி ஆக முடியாது "
"இப்போது நான் எவ்வளவு விலை வைக்க வேண்டும் சாமி "
"உன் குடிசையின் முன்னால், 'வீட்டுமுறை சாப்பாடு ரூபாய் இருபது மட்டும்' என்று ஒரு அட்டையில் எழுதி தொங்கவிடு "
"சரிங்க சாமி " என்று அரை மனதுடனே நகன்றார் அவர்.
அடுத்த நாளிலிருந்து இருபது ரூபாய்க்கு சாப்பாடு விற்பனை செய்ய சக்கை போடு போடத் தொடங்கியது வியாபாரம்.
நான்கே நாட்களில் அரிசி மூட்டை காலியாக, அதுவரை சேர்ந்த பணத்தை எடுத்துக் கொண்டு சாமியிடம் சென்றார். அவர் முகத்தில் பார்த்த சந்தோசத்தை கண்டு சாமி கேட்டார்.
"என்ன மகனே மகிழ்ச்சியாய் இருக்கிறாயா? "
"தங்கள் ஆசியாலும் ஆலோசனையாலும் மிக நலமாக இருக்கிறேன் சாமி. இந்தாங்க ... இதுவரை சாப்பாடு விற்ற பணம். இது உங்களைச் சேர வேண்டியது சாமி"
"அதை நீயே வைத்துக் கொள். அதில் மூன்று மூட்டை அரிசியும் மூன்று பை மளிகைப் பொருட்களும் வாங்கி, ஒரு மூட்டையை நீ வைத்துக் கொள் . நான் கொடுத்த மூட்டைக்கு இரட்டிப்பு கணக்கில் இரண்டு மூட்டைகளை எனக்குக் கொடுத்து விடு. இனி நீ உன் வியாபாரத்திலிருந்து எனக்கு எதுவும் தர வேண்டியதில்லை"
"உங்களுக்கு எதற்கு சாமி இரண்டு மூட்டை அரிசியும் மளிகையும் "
"உன்னைப் போல் இன்னும் பல தங்க மகன்களை உருவாக்கும் பணி இருக்கிறது மகனே "
"மகானே" என்று சாமியின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார் அவர்...
விசு படத்தில் வெயிட்டான கேரக்டர் : விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் : இவரை யார்னு தெரியுதா?
பழம்பெரும் நடிகை ஒருவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசு நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சரோஜினி கேரக்டரில் நடித்திருந்த நடிகை இளவரசியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குடும்பத்தின் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் விசு. இவர் இயக்கத்தில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதை வென்ற படம் தான் சம்சாரம் அது மின்சாரம். விசு, ரகுவரன், பாண்டியன், லட்சுமி, டெல்லி கணேஷ், மனோரமா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குடும்ப உறவுகளுக்குள் நடக்கும், பிரச்சனை, மனவருத்தங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காமெடி காட்சிகள் இல்லை என்பதால், மனோரமாவை படத்தில் இணைத்துள்ளனர். அதற்கு ஏற்றார்போல் காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் அசத்திய மனோரமான கண்ணம்மா என்ற கேரக்டரில் அசத்தியிருந்தார். குறிப்பாக ‘’கம்முனு கெட’’ என்று அவர் சொல்லும் வசனம் தற்போதுவரை பிரபலமாக உள்ளது.
அதேபோல் பிரிந்த கூட்டு குடும்பத்தை இணைக்க பாடுபடும் மருமகளாக லட்சுமி சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் அம்மையப்பன் முதலியார் கேரக்டரில் நடித்த விசுவின் திமிர் பிடித்த மகள் சரோஜினி கேரக்டரில் நடித்தவது நடிகை இளவரசி.
படத்தில் இவரை பார்த்தாலே பலருக்கும் கோபம் கோபமாக வரும். தமிழில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்த இவர், தமிழ் தவிர்த்து கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் 2001-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியாக சீரிவரும் காளை படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்திருந்தார்.
ஒரு வங்கி அதிகாரியை திருமணம் செய்துகொண்ட நடிகை இளவரசி, கணவர் மற்றும் குழந்தையுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.
எல்லா கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.
காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.
ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது,
அவனை மிகவே யோசிக்க வைத்தது.
அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான்.
ஆனால், காந்தியை அவ்வப்போது உற்றுப் பார்த்தான்.
இலேசாக புன்முறுவல் காட்டினான்.
ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்?
ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான்.
இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது.
ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான்.
மகழ்ச்சி எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி.
இன்று உங்களுக்கு விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி.
ஆனால், உங்களைப் பிரிய என்னால் முடியவில்லை.
இது வருத்தமான செய்தி என்றான் ஸ்மட்ஸ்.
காந்தி சொன்னார், "நானும் உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி, தான் சிறையில் தைத்த பூட்சை அவரிடம் கொடுத்தார்.
ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ் கேட்டான்,
"இவ்வளவு துல்லிமாகத் தைக்க, என் கால்களின் அளவு எப்படிக் கிடைத்தது" என்று கேட்க, சிரித்தபடி காந்தி தனது மார்புத் துண்டை அகற்றினார்;
ஆரம்பத்தில் ஸ்மட்ஸ் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன.
"இந்த வடுக்களை அளந்துதான் தைத்தேன்" என்று காந்தி சொன்னார்.
"தடால்" என்று சத்தம்;
ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக் கதறினான்.
"நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!!
என்னை மன்னித்து விடுங்கள். இனி யாரையும் அடிக்க மாட்டேன்" என்றார்.
ஒரு நிமிடத்தில், ஒரு கொடிய மிருகம், மென்மையான மனிதனாக மாறியது.
"கல்லையும் கனியாக மாற்றலாம்" என்று இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஸ்மட்ஸ் சத்தியம் செய்தான்.
"இந்த பூட்ஸ்தான் இனி எனக்குக் கடவுள்; இதை மட்டுமே வணங்குவேன்" அணியமாட்டேன்
என்று சொல்லி அந்த பூட்சை தன் பூஜை அறையில் வைத்து அப்படியே வணங்கினான்.
*"நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும்".* மன்னிக்கின்ற மனம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும்.
அன்பே சிவம்!!!கருணையே யேசு!!! நற்பண்பே நபிகள்!!!!
மனிதன் மகிழ்வுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்திட மாமனிதமே மிகச்சிறந்த பண்பு.
ரஷ்ய நாட்டு யூதர் ஒருவருக்கு இஸ்ரேலில் சென்று குடியேற அனுமதி கிடைத்தது.
ரஷ்ய விமான நிலையத்தில் அவரது பொதிகளை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரி, லெனினின் உருவச்சிலை ஒன்று அவரிடம் இருப்பதைக் கண்டார்.
இது என்ன?" என்று அவரிடம் அந்த அதிகாரி வினவினார். "தப்பு...சார்...! உங்கள் கேள்வியே தப்பு...! இவர் யார் என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்...! இவர்தான் கம்யூனிஸத்தின் தந்தை லெனின்! ரஷ்ய மக்களுக்கு நல்லது செய்தவர், நாட்டின் வளர்ச்சிக்கு தீபம் ஏற்றியவர். இந்த மாமனிதரின் ஞாபகர்த்தமாக இதை நான் என்னுடன் கொண்டுசெல்கிறேன்." என்று அந்த ரஷ்ய யூதர் பதிலளித்தார். "சரி, நீங்கள் போகலாம் " என்றார் அந்த அதிகாரி.
இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய போது அங்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
அங்குள்ள அதிகாரி "இது என்ன?" என்று வினவினார். "தப்பு...சார்...! இவன் யார்? என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்!
இவன்தான் பித்துப் பிடித்த மகா கொடியவன், லெனின்! இவனின் கொடுமையால்தான் நான் ரஷ்யாவை விட்டு வரவேண்டியதாயிற்று! நாள் தோறும் இவன் முகத்தைப் பார்த்து திட்டித் தீர்க்கவே இந்த உருவச்சிலையை என்னுடன் கொண்டுவந்தேன்." என்றார்.
இதைக் கேட்டு பெருமிதம் அடைந்த அதிகாரி "சரி, நீங்கள் போகலாம்." என்றார்.
தனது குடியிருப்புக்கு சென்ற ரஷ்ய யூதர், அந்த உருவச்சிலையை தன் வீட்டின் முன் மண்டபத்தில் தெரியும் படியாக வைத்தார். பின்னர் தான் இஸ்ரவேல் தேசத்தில் குடியேருவதை முன்னிட்டு தனது நண்பர்களை, உறவினர்களை அழைத்து விருந்து படைத்தார்.
அங்கே வந்த விருந்தினர்கள் அந்த உருவச்சிலையைக் கண்டு "இவர் யார்?" என்று வினவினார்கள். "தப்பு மக்களே...! இது என்ன?" என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்." இது 24 கரட் கொண்ட 10 கிலோ கிராம் தங்கம்! நான் இதை வரி ஏதும் கட்டாமல், சுங்கத்துறையிடம் சிக்காமல் சாதுரியமாக கொண்டு வந்தேன்." என பெருமையுடன் பதில் அளித்தார்.
கதையின் சுருக்கம்.
பித்தலாட்டம் என்பது: மக்களிடம் ஒரே விடயத்தை பற்பல விதமாக, அதுவும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் புரிய வைக்கும் சூட்சுமமாகும்!
பிரபல நடிகையான குஷ்பு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தனக்கும், கார்த்திக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பேசினார்.
அவர் பேசும் போது, “ நாங்கள் நடிகர் கார்த்தியை முரளி என்றுதான் அழைப்போம். அப்போது நான் ஒரு குறிப்பிட்ட பார்லருக்கு அடிக்கடி செல்வேன். அங்கு முரளியும் வருவார். அங்குதான் அவரை நான் முதல் முறையாக பார்த்தேன்.
அப்போது அவர் நடித்த அக்னி நட்சத்திரம், மௌன ராகம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. இதனால் அவரை பார்த்த அந்த கணம், நான் அப்படியே உறைந்து போய் நின்றேன். எங்களது நட்பு அங்கிருந்துதான் தொடர்ந்தது.
முதல் முறையாக நாங்கள் வருஷம் 16 திரைப்படத்தில் தான் ஒன்றாக இணைந்து நடித்தோம். எனக்கு அவருடன் இணைந்து வேலை செய்வது என்பது மிகவும் ஈசியாக இருந்தது. காரணம் நாங்கள் முன்னரே ஒருவருக்கொருவர் நன்றாக பழக்கமாகி இருந்தோம்
வருஷம் 16 திரைப்படத்திற்குப் பிறகு நாங்கள் பெரிதாக எந்த திரைப்படங்களிலும் ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை. கிழக்கு வாசல் திரைப்படத்தில் மட்டும் இணைந்து நடித்தோம். அந்த இடைவெளிக்கு, ஒரு சண்டை காரணமாக அமைந்தது. இதனால் நாங்கள் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தோம்.
அவரிடம் சென்று படத்தில் குஷ்பு தான் கதாநாயகி என்று சொன்னால், அவர் கதாநாயகியை மாற்றுங்கள் என்று சொல்வார். என்னிடம் யாராவது வந்து கார்த்திக் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டால், இல்லை இல்லை வேண்டாம் நீங்கள் வேறு கதாநாயகியை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்
அதன் பின்னர் விக்னேஸ்வர் திரைப்படத்தில் தான் நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தோம். அதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் ரகு. ரகு எங்களிடம் இது நண்பர்களுக்கு இடையே வந்திருக்கும் பிரச்சினை, இதனையும், தொழிலையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று சமாதானப்படுத்தினார்.
இதனையடுத்து நான் அப்படி என்றால் நீங்கள் முரளியிடம் சென்று சம்மதம் வாங்கி வாருங்கள் என்று சொன்னேன். முரளியோ, என்னிடம் சம்மதம் வாங்கி வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதனையடுத்து இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசுங்கள் என்று சொல்லி எங்களை உட்கார வைத்து பேச வைத்தார்கள். அதன் பின்னர்தான் நாங்கள் விக்னேஸ்வர் திரைப்படத்தில் இணைந்து நடித்தோம். அங்கு ஆரம்பித்த நட்பானது இன்று வரை தொடர்கிறது. கார்த்தி எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷல் தான். கார்த்தியிடம் ஒரு விதமான மாய சக்தி இருக்கிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமின்றி நடக்கும். எதிர்பார்ப்புகள் சில நிறைவேறும். தான தர்மங்களில் மனம் ஈடுபடும். பிரமுகர்களின் சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
ரிஷபம்
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
தாய் வழி உறவுகளிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
சிம்மம்
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
நினைத்த பணிகளில் தாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்ப்படுத்தும். சக ஊழியர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நற்செய்தி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
இனம் புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் வளைந்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வரும். விவசாய பணிகளில் அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களால் வருத்தங்கள் நேரிடும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
குடும்ப பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். வியாபாரம் சிறப்பாக அமையும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பெரிய மனிதர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
பண வரவு தாமதாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். பழைய சிக்கல்கள் சில குறையும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மீனம்
செய்யும் பணிகளில் சற்று கவனம் மீண்டும். ஜாமீன் விஷயங்களை தவிர்க்கவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவது நல்லது. நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை பெற்று தரும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கேலி என்ற பெயரில், தரமற்ற பேச்சுகளை பேசுவது, கீழ்நிலை குணம் கொண்டோரின் இயல்பு.
நல்லவர், கெட்டவர் என்று பாராமல், யோசியாமல் பேசும் அறிவற்ற பேச்சினால் ஏற்படும் விளைவை விளக்கும், சிலப்பதிகார நிகழ்வு இது:
மாதவியிடம் பொருளை எல்லாம் இழந்த கோவலன், மீண்டும் வணிகம் செய்து பொருளீட்டுவதற்காக, தன் மனைவி கண்ணகியுடன், மதுரை நகர் நோக்கி சென்று கொண்டிருந்தான்; வழியில், கவுந்தி அடிகள் எனும் தவ மூதாட்டியை சந்திக்க, அவர்களுக்கு வழித் துணையாக வந்தார், கவுந்தி அடிகள்.
மூவரும் பயணத்தை தொடர, வழியில், காமுகன் ஒருவன், தன் காதற் கிழத்தியோடு வந்தான். அவ்விரு வரும், கோவலன் - கண்ணகியின் கண்ணியமான அழகை கண்டு வியந்து, கவுந்தி அடிகளிடம், அம்மையே... மன்மதனும், ரதியையும் போன்றிருக்கும் இவர்கள் இருவரும் யார்? எனக் கேட்டனர்.
இவர்கள் என் மக்கள்... என்றார், கவுந்தி அடிகள்.
அதைக் கேட்டதும், இருவரும் நகைத்து, அம்மையே... ஒரு வயிற்றில் பிறந்தோர், கணவன், மனைவியாவது, நீர் கற்ற நீதி நூல்களில் உள்ளதோ... என சொல்லி, கேலி செய்து சிரித்தனர்.
இதைக் கேட்டு, செவிகளை பொத்தி, நடுங்கி நின்றாள், கண்ணகி. இதனால், கோபமடைந்த கவுந்தி அடிகள், முறை தவறி, இழிவாக பேசிய நீங்கள் இருவரும், நரிகளாகப் போகக் கடவது... என, சாபம் கொடுத்தார்.
உடனே அவர்கள் நரிகளாக மாறினர்.
அவர்களுக்காக மனம் இரங்கிய கோவலனும், கண்ணகியும், அம்மையே... நல்லொழுக்க நெறியிலிருந்து விலகிய இவர்கள், தமது அறியாமையில் இவ்வாறு பேசி விட்டனர்.
இவர்கள் தவறை மன்னித்து, சாப விமோசனம் அளிக்க வேண்டும்... என்று வேண்டிக் கொண்டனர். அதன் காரணமாக, 12 மாதங்கள் நரிகளாக திரிந்து, துன்பத்தை அனுபவித்து, பின், சுய உருவை அடைவர்... என, சாப விமோசனம் அளித்தார்,
கவுந்தி அடிகள். குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது என்பார், திருவள்ளுவர்.
நல்ல பண்புகளை உடைய பெரியோரின் சினத்திலிருந்து, ஒருவரை காத்தல் அரிது என்பதை உணர்ந்து, எதை அடக்குகிறமோ இல்லையோ, நாவை அடக்கி, வீண் பேச்சை தவிர்க்க வேண்டும்.
மறந்தும், அடுத்தவர்களை இழிவாக பேசக் கூடாது!
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை 15.12.2025.
இன்று இரவு 11.43 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று பிற்பகல் 02.09 வரை சித்திரை . பின்னர் சுவாதி.
இன்று காலை 10.55 வரை பவம். பின்னர் இரவு 11.43 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று பிற்பகல் 02.09 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண், இந்த முறையும் தனது புதிய புகைப்படங்களால் இணையத்தை கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான போட்டோஷூட் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.
எளிமையும் எலிகன்ஸும் கலந்த கருப்பு உடையில் கவர்ச்சியாக நடிகை ஸ்ரேயா சரண் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஒரே நேரத்தில் ஈர்த்துள்ளன. அதிக அலங்காரமின்றி, ஸ்டைலிஷ் மேக்கப், கூர்மையான பார்வை மற்றும் கிளாசியான உடைத் தேர்வு ஆகியவை இந்த புகைப்படங்களுக்கு தனி அழகை சேர்த்துள்ளன. "Black is always powerful" என்பதை நிரூபிக்கும் வகையில், ஸ்ரேயாவின் இந்த போஸ் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும். நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்' என பிரிட்டன் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின், 2022ம் ஆண்டு, செப்டம்பரில், பிரிட்டன் மன்னராக, அவரது மகன் மூன்றாம் சார்லஸ், 77, முடிசூட்டிக் கொண்டார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சார்லசுக்கு, புற்றுநோய் கண்டறியப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சூழலில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் கூறியதாவது: புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அந்நோய் பாதிப்பிலிருந்து எளிதாக மீள்வதற்கு உதவுகிறது.
புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும். நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். புற்றுநோய் பாதிப்பை விரைவாக அறிந்து, சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.
தொடக்கத்திலேயே புற்றுநோயை கண்டறிவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை நான் நேரடியாக பெற்றுள்ளேன். சரியான நேரத்தில் நோயை கண்டறிந்ததால்தான், இன்று நான் சிகிச்சையில் இருக்கும்போதும்கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.
புற்றுநோயியல் நிபுணர்கள், செவிலியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்களின் தன்னலமற்ற பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். இவ்வாறு மன்னர் சார்லஸ் கூறியுள்ளார்.
கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் ஒருமுறை முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் வந்து ' விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே 'என்று வேண்டினார்
அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்று பதில் கூற. கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றார் .
ஜெயப்ரதா - இந்திய சினிமாவில் அனைத்து மொழி சூப்பர் ஸ்டார் உடன் நடித்த ஒரே ஹீரோயின்.
இந்தியாவில் இருந்து ஹாலிவுட் மற்றும் சைனீஸ் படங்கள் வரை நடித்த ஒரே ஹீரோயின்.
இந்தியாவின் பேரழகி என்று சத்யஜித்ரேவால் வர்ணிக்கப்பட்ட ஒரே நடிகை.
தெலுங்கு பொண்ணு அப்பா சினிமா பைனான்சியர்.
அதிகமாக நடித்தது தெலுங்கு படங்கள் தான். ஜெயப்ரதாவின் கண்ணழகே போதும் தமிழ் சினிமாவில் மொத்த ஹீரோயின்களையும் பின்னுக்கு தள்ள.
இப்படிப்பட்ட பேரழகி டப்பிங் செய்யாத நேரடி தமிழ் சினிமாவில்.. நடித்த படங்கள் வெறும் 4 தான்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
நீண்ட தூர பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமான துறைகளில் லாபம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். உத்யோகத்தில் உயர்வுகள் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
எதிலும் தீர யோசித்து முடிவு செய்யவும். கடன் பிரச்சனை தீர ஆலோசனை கிடைக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். வியாபாரத்தில் ஒப்பந்தம் சாதகமாகும். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். உண்ணும் உணவில் கவனம் வேண்டும். பெரியோர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். அரசால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை பற்றிய புரிதல் மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
அரசு செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். துணைவர் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குழப்பம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விருச்சிகம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்வீர்கள். பழைய பிரச்சனை முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்புக்கான மதிப்புகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மகரம்
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எண்ணங்களில் சில மாற்றம் உண்டாகும். மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். மற்றவர்களை நம்பி செய்லபடுவதை தவிர்க்கவும். விருப்பம் இல்லாத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். அலுவலகத்தில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மீனம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திறமைக்கான மதிப்புகள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 14.12.2025.
இன்று இரவு 10.06 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று பிற்பகல் 12.06 வரை அஸ்தம் . பின்னர் சித்திரை.
இன்று பிற்பகல் 02.48 வரை சௌபாக்கியம். பிறகு சோபனம்.
இன்று காலை 09.28 வரை வணிசை. பின்னர் இரவு 10.06 வரை பத்திரை. பின்பு பவம்.
இன்று காலை 06.21 வரை மரண யோகம். பின்னர் பிற்பகல் 10.06 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
ஜீனியஸ் இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகாகி, தமிழில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். காதல் கொண்டேன், 7ஜி போன்ற படங்களில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2010-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அவர்களைப் பற்றிய விவாகரத்து சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கு காரணம் கீதாஞ்சலியின் செயல் தான். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து செல்வராகவனின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இதனால் தான் இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. அவர் எதற்காக செல்வராகவன் போட்டோக்களை நீக்கினார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தால் மட்டுமே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.





















