பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்
பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கடன் விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் வகையில் ஆதாயம் ஏற்படும். பயணங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றம் சிந்தனை கைகூடும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கடகம்
பழைய நினைவுகளால் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சிறுசிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
நண்பர்கள் இடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமீன் செயல்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ரகசியமான சில முதலீடுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
தந்திரமாக சில பணிகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகளும் மேம்படும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
சமூக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். செயல்படுகளில் இருந்து மந்த தன்மை குறையும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்பாடுகளில். சோதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
கணவன் மனைவி இடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். இழுபறியான சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளின் வருகையால் சில மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
மனதளவில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். பழைய உறவுகள் பற்றிய எண்ணங்கள் உருவாகும். வியாபாரத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். உத்தியோகத்தில் சில எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். புதிய முடிவுகளை தவிர்க்கவும். நேர்மறை எண்ணங்களோடு எதிலும் செயலாற்றவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களின் வருகை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மையை ஏற்படும். உத்தியோகத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கும்பம்
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் கூடும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.10.2025
இன்று மாலை 04.40 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று மாலை 05.43 வரை புனர்பூசம். பின்னர் பூசம் .
இன்று காலை 11.57 வரை சிவம். பின்னர் சித்தம் .
இன்று அதிகாலை 05.29 வரை பாலவம். பின்னர் மாலை 04.40 வரை வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 08.00 முதல் 09.00 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
உங்கள் செயல்களில் நேர்மையை மேலும் மேலும் வலுப்படுத்துங்கள். உண்மையையும் ஊக்கத்தையும் எந்த நிலையிலும் கை விடாதீர்கள்.
மனிதர்கள் மீதும், மானுடத்தின் மீதும் நம்பிக்கை இழக்காதீர்கள்.
உங்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகள் யாவும் மெய்யில்லை என்பதைக் காலம் ஒருநாள் கனிவோடு தக்கார்க்கு வெளிப்படுத்தும்.
ஒண்டாரியோ மாகாண வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டோ மேக்ஸ் (Lotto Max) பரிசான 75 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ்டனில் வசிக்கும் டேவிட் ஹாட் (David Hatt) என்பவர் இந்த பரிசுத் தொகையை வென்றுள்ளார். ஒண்டாரியோ லொத்தர் மற்றும் கேமிங் கழகம் (OLG) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி நடைபெற்ற லாட்டோ மேக்ஸ் சீட்டிலுப்பில் முதன்மை பரிசை வென்றுள்ளார்.
டிக்கெட் வாங்கியது முற்றிலும் தற்செயலாகத்தான். வழக்கம்போல பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது ‘ஒரு டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்’ என்ற உணர்வு ஏற்பட்டது. உடனே குயிக் பிக் டிக்கெட் வாங்கியதாகவும் பின்னர் அதனை மறந்துவிட்டதாகவும் ஹாட் தெரிவித்துள்ளார். பின்னர் OLG மொபைல் செயலியில் டிக்கெட்டைச் சரிபார்த்துள்ளார்.
முதலில் நான் 75,000 டொலர் வென்றிருக்கிறேன் என்று நினைத்தேன் – அதுவே பெரிய விஷயம் என்று மகிழ்ந்தேன். ஆனால் மீண்டும் பார்த்தபோது நிறைய பூஜ்யங்கள் இருப்பதை கவனித்தேன்!” என்று ஹாட் கூறினார்.
பரிசு வென்ற டிக்கெட் கிங்ஸ்டனிலுள்ள பையனியர்/ஸ்நாக் எக்ஸ்பிரஸ் பெட்ரோல் நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 75 மில்லியன் டொலர் வெற்றி, கனடாவில் இதுவரை வழங்கப்பட்ட இரண்டாவது பெரிய லொத்தர் பரிசாகும்.
கனடாவின் லாவல் பல்கலைக்கழகம் (Laval University) மேற்கொண்ட அண்மைய ஆய்வு ஒன்றின் மூலம் ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்லும் விடயம் தெரியவந்துள்ளது.
கனேடிய கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகள், ஆரோக்கியமான மாற்று உணவுகளை விட குறைந்த விலையில் கிடைக்கின்றன. “உணவுகளின் விலை காரணமாக உருவாகும் சுகாதார சமத்துவமின்மையை குறைக்க அரசியல் மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என இந்த ஆய்வை வழிநடத்திய இசபெல் பெட்டிக்ளெர்க் (Isabelle Petitclerc), கூறியுள்ளார்.
“பணக்காரர்கள் சிறிதளவு விலையுயர்ந்த ஆனால் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியமில்லை என்பதே உண்மை,” என அவர் குறிப்பிட்டார். பெட்டிக்ளெர்க் தற்போது அதே பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் முனைவர் பட்டக் (Ph.D) கற்கைநெறியை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு ஆகஸ்ட் மாதத்தில் பொதுச் சுகாதார ஊட்டச்சத்து என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் Health Canada-வின் “High-in” உணவு லேபிள் வழிகாட்டுதலின் அடிப்படையில் 2,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். இந்த லேபிள் ஒரு தயாரிப்பில் அதிக அளவில் சர்க்கரை, சோடியம் அல்லது கொழுப்பு உள்ளதைப் பொருளடக்கத்தில் குறிப்பிடுகிறது.
ஆய்வில் பகுதியாக்கப்பட்ட பண்டங்கள், காலை உணவு தானியங்கள், ஸ்நாக்ஸ், செயலாக்கப்பட்ட சீஸ், பிஸ்கட் மற்றும் கிராக்கர்கள் உள்ளிட்ட ஐந்து வகை தயாரிப்புகள் சேர்க்கப்பட்டன.
ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவன், விமான ஓட்டியின் அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி" என்ற புத்தகத்தை கண்டான்.
அவன் அந்த புத்தகத்தை பிரித்தான். முதல் பக்கத்தில், "இஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் 🔴 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவன் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினான், இஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது !
அவனுக்கு ஒரே குஷியாகி விட்டது.
இரண்டாவது பக்கத்தை புரட்டினான். "விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற 🔵 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவனும் அப்படியே செய்தான். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓட துவங்கியது.
இப்போது அவனுக்கு பறக்கும் ஆசை வந்தது. மூன்றாவது பக்கத்தை பிரித்தான். "விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் 🟢 பட்டனை அழுத்தவும்" என்று இருந்தது.
அவனும் பச்சை கலர் பட்டனை அழுத்தினான். விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது. அவனும் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தான்.
அவன் மிகவும் திருப்தி அடைந்தவனாக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் 4 வது பக்கத்தை பிரித்தான்.
அவ்வளவுதான், அவனுக்கு மயக்கம் வந்து கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.
காரணம், 4வது பக்கத்தில் எழுதி இருந்தது, "விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்பதை கற்றுக்கொள்ள இந்த புத்தகத்தின் இரண்டாவது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடையில் வாங்கி படியுங்கள்"!!!!
நீதி:
ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் இறங்காதீர்கள்.
அரைகுறை கல்வி ஆபத்தானது மட்டுமல்ல, அபாயகரமானதும் கூட.
தாசி குலப் பெண்ணான கண்டகி என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்னவென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை.
ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான். உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.
அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள். உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி. அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. வாலிபன் உயிரோடு இல்லை. இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறத் தயாரானாள்.
திகைத்த உறவினர்கள் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம்அற்புதம் நிகழ்கிறது.
இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு , சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயாணன் காட்சி அளிக்கிறார். கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய் சொல்கிறார்.
கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் ஒரு தாயாகவும் பெருமாள் மகனாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அது. அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார் ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார். சாபம் பெற்ற நாராயணன் மலையாக மாறக் கண்டகி அதே பேரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடும் கண்டகியின் வயிற்றில்தான் சாளக்கிராம கற்கள் கிடைகின்றது.
மேஷம்
சுபகாரிய நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். சிறு துர பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். சகோதரர்கள் வழியில் அலைச்சல் மேம்படும். அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழைய சிக்கலில் சில குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
மனதளவில் ஒரு விதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
நினைத்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாகனத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
சிம்மம்
மனதில் இருந்த கவலைகள் குறையும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபங்கள் மேம்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான கருவிகள் வாங்கி மகிழ்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
துலாம்
இழுபறியான சுப காரியம் பேச்சுகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வெளிநாட்டு பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். உடன் இருப்பவர்கள் இடத்தில் அளவுடன் இருக்கவும். எதிலும் பெறுமையுடன் செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களை தவிர்க்கவும். கால்நடை பணிகளில் விவேகம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
மனதளவில் இருந்த கவலைகள் மறையும். சுப காரிய எண்ணங்கள் கைவிடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் தனித்திறமை வெளிப்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
சாமர்த்தியமான செயல்பாடுகளால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் முன்னுரிமை ஏற்படும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும் உயர்கல்வியில் தெளிவுகள் ஏற்படும் நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும் எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள் வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும் உத்தியோகத்தில் பொறுமை வேண்டும் புதுவிதமான கனவுகள் பிறக்கும் கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பயணங்கள் கைக்கூடி வரும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் புரிதல்கள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 27 ஆம் தேதி திங்கட்கிழமை 13.10.2025
இன்று மாலை 06.18 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று மாலை 06.39 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.
இன்று பிற்பகல் 02.32 வரை பரிகம். பின்னர் சிவம் .
இன்று காலை 07.16 வரை பத்தரை. பின்னர் மாலை 06.18 வரை வரை பவம். பின்பு பாலவம்.
இன்று மாலை 06.39வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
போதிவனத்தில் தியானத்திலிருந்த புத்தரைத் தரிசிப்பதற்காக நடுத்தர வயதுடைய ஒருவன் காத்திருந்தான்.
புத்தர் தியானம் கலைந்து கண் விழித்தார்.
புத்தரை வீழ்ந்து வணங்கினான். புத்தர் அவனிடம், நீ யார்? என்று வினவினார்.
அவன் 'என் பெயர் அபிநந்தன்' என்றான்.
புத்தர், 'உனக்கு என்ன வேண்டும்'? என்று கேட்டார்.
அபிநந்தன், 'பெருமானே, நான் ஓர் ஏழை. எனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். நான் உலகப் பற்றிலும், உலக வாழ்க்கையிலும் உழன்று ஏராளமான துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து விட்டேன். என்னை சந்நியாசியாக்கிப் பந்த பாசங்களிலிருந்து விடுவித்து ஞானம் அருளுங்கள் என்றான்.
புத்தர் சிறிது யோசித்து அவனிடம், அபிநந்தா இந்த மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. காரணம் என்ன தெரியுமா? காற்று இலைகள் மீது மோதுவதால் மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. மனித மனங்கள் இந்த இலைகளைப் போன்றவை. மனித மனங்கள் மீது உலகப் பற்று என்கிற காற்று வந்து மோதுகிறது. அதனால் மனங்கள் ஆடுகின்றன. அலைபாய்கின்றன. முதலில் உன் மனத்திலுள்ள பந்த பாசங்கள் அனைத்தையும் உன்னால் நீக்கிவிட முடியுமா? என்று கேட்டார்.
அபிநந்தன், புத்த பெருமானே, என்னால் பந்த பாசங்களைத் துறந்து விட முடியும் என்றான். சரி அப்படியானால் நீ இன்று முதல் போதி வனத்திலேயே தங்கலாம், என்றார் புத்தர்.
சில நாட்கள் கடந்தன.
ஒரு நாள் புத்தர் அருகிலுள்ள குளத்திற்கு நீராடுவதற்காகச் சென்றார். அப்போது அவர் ஒரு மரத்தின் கீழே, அபிநந்தன் பக்கத்தில் ஒரு நாய்க் குட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.
புத்தர் அவனிடம், அபிநந்தா, இது ஏது? என வினவினார்.
அபிநந்தன், பெருமானே, இது என் நாய்க்குட்டி. இது என்னை விட்டு அகல விரும்புவதே இல்லை. எப்போதும் என்னுடனேயே இருக்க விரும்புகிறது. ஆதலால் இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். என்று கூறி இழுத்தான்.
புத்தர் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.
மேலும் சில நாட்கள் கடந்தன. புத்தர் முன்பு போலவே நீராடச் சென்று கொண்டிருந்தார்.
இப்போதும் அபிநந்தன் அதே மரத்தடியில் நின்றிருந்தான். அவன் அருகில் நாய்க் குட்டியுடன் ஒரு சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.
புத்தர்: அபிநந்தா, இந்தச் சிறுவன் யார்? எனக் கேட்டார்.
அபிநந்தன், ஐயனே, இவன் என் மகன். இவன் இந்த நாய்க் குட்டியுடன் எப்போதும் இருக்க விரும்புகிறான். இவனால் இந்த நாய்க்குட்டியை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவனையும் என்றான்.
புத்தர் மீண்டும் சிரித்தவாறு அங்கிருந்து சென்றார்.
மேலும் சில நாட்கள் கடந்தன. அன்றைய தினம் புத்தர் நீராடக் குளத்திற்குச் சென்று கொண்டிருந்தார். குளத்தின் கரையிலிருந்த அதே மரத்தடியில் முன்பு போலவே அபிநந்தன் நின்று கொண்டிருந்தான். அவனருகில் நாய்க்குட்டி, சிறுவன் ஆகியவர்களுடன் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தாள்.
புத்தர், அபிநந்தா, இவள் உன் மனைவி. இவளால் இந்தச் சிறுவனை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவளும் உன்னோடு இருக்கிறாள் அப்படித்தானே என்று புத்தர் சிரித்துக் கொண்டே இரண்டு காலிப் பாத்திரங்களை எடுத்தார்.
அபிநந்தா, இதோ பார் என்று சொல்லிக் கொண்டே அவர் ஒரு பாத்திரத்தில் கற்களைப் போட்டு நிரப்பினார். அதைக் குளத்து நீரில் விட்டார். அந்தப் பாத்திரம் குளத்தில் மூழ்கியது.
மற்றொரு காலிப் பாத்திரத்தைக் குளத்து நீரில் விட்டார். அது மிதந்து சென்றது.
அபிநந்தா கனமான பாத்திரம் குளத்தில் மூழ்கி விட்டது. காலிப் பாத்திரம் குளத்தில் மிதந்து செல்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்த பாசம் எனும் உலகப் பற்று நிறைந்த பாத்திரம். அது பிறவித் துன்பங்கள் என்ற கடலில் மூழ்குகிறது. காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது மூழ்காமல் மிதந்து செல்கிறது.
தலையிலிருந்து சில கேசங்கள் தாமாக உதிர்ந்து விடுகின்றன. அவ்விதம் உதிர விரும்பாத கேசங்கள், தலையில் இருந்து கொண்டே நரைத்து நம்மைக் கேலி செய்கின்றன. உதிர்ந்த கேசங்கள் ஓடி விடுகின்றன.
உலகப் பற்று இல்லாதவர்கள் உதிர்ந்த கேசங்களைப் போன்றவர்கள். பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டவர்கள் உதிர விரும்பாமல் தலையில் நரைத்து நம்மைக் கேலி செய்கிற கேசங்கள் போன்றவர்கள். விலக்க முடியாத பந்த பாசங்கள், உதிர விரும்பாத தலையில் உள்ள நரைத்த கேசங்கள் போன்றவை.
உனது மனம் உலகப் பற்றிற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு விலையாக நீ உலகத் துன்பங்களையும், சித்ரவதைகளையும் அனுபவித்தே தீர வேண்டும். அதை சுமையாக எண்ணாதே. அதுவும் வாழ்வில் தேவை. நீ இங்கிருந்து செல்லலாம், போய் வா என்றார் புத்தர்.
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (P.E.I.) செப்டம்பர் மாதத்தில் வேலை இழப்பு விகிதம் 1.6 சதவீதத்தினால் உயர்ந்ததுள்ளது. இது கனடாவில் மிகப்பெரிய உயர்வாகும் என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
கனடா முழுவதும் செப்டம்பரில் 60,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளன. இது இரண்டு மாதங்களாக நடந்த வீழ்ச்சிக்கு பின் 0.3% உயர்வாகும். இருப்பினும், தேசிய வேலை இழப்பு விகிதம் 7.1% என மாறாமல் காணப்படுகின்றது.
பல நேரங்களில் விண்ணப்பதாரர்களின் தகுதிகள் மற்றும் ஆரம்ப நிலை பணிகளுக்கான தேவைகள் பொருந்தாமல் இருக்கின்றன. இதனால் வேலை வழங்குநர்களும் தயங்குகிறார்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலானோர் தங்களின் விடுமுறைகளை கடற்கரையிலும் சுற்றுலா மையங்களிலும் கழிக்க விரும்பும் நிலையில், கனடாவின் எட்மண்டனில் வசிக்கும் ஜேரன் ரோசோ வீக்ஸ் (Jaron Rosso Wiigs) தைவானில் ஏற்பட்ட புயல் சேதங்களை அகற்ற உதவியுள்ளார். அவர் தைவானுக்கு சென்றபோது, கிழக்கு தைவானில் உள்ள குவாங்ஃபூ நகரில் கடும் புயலால் மண், தண்ணீர் மற்றும் சிதிலங்கள் தெருக்களில் அடித்துச் சென்றது பற்றிய தகவலை அறிந்து கொண்டார்.
“எனக்கு 21 நாட்கள் விடுமுறை இருக்கிறது. அதில் 10 நாட்களை ஹுவாலியென் மாகாணத்தில் உதவுவதற்கு செலவிடுவது பெரிய விஷயம் அல்ல. இது தைவானின் வரலாற்றில் என்றும் நினைவாக இருக்கும் தருணம்,” என வீக்ஸ் தெரிவித்தார்.
அவர் இதற்கு முன் கனடாவின் பான்ஃப் பகுதியில் உள்ள Bow Falls-இல் இருந்து 18 மீட்டர் உயரத்தில் விழுந்து உயிர் தப்பிய அனுபவம் உண்டு. “எனக்கு சில நேரங்களில் அதிர்ஷ்டம் உதவி செய்கிறது; அதற்காக பிரபஞ்சத்திற்கு திருப்பித் தரவேண்டும் என்ற உணர்வு வருகிறது,” என அவர் கூறியுள்ளார்.
தன்னார்வ அடிப்படையில் வீக்ஸ் இவ்வாறு பாதிக்கப்பட்ட தாய்வான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் களத்தில் இறங்கி உதவிகளை வழங்கியதன் மூலம் அனைவரினதும் பாராட்டைப் பெற்று வருகின்றார்.
சூர்யாவுடன் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா, மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அப்டேட் கொடுத்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘கருப்பு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘கருப்பு’ படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா, மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கிராமத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
சூர்யாவின் 50வது பிறந்தநாளில் ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ‘கருப்பு’ படம் தீபாவளிக்கு ரிலீசாகலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது இதுநாள் வரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே தான் படத்தின் வெளியீடு எப்போது என்பதை படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்.
தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசும்போது, "படம் முடிவடையும் நிலையில் உள்ளது. முதலில் ஆரம்பத்தில் தீபாவளிக்கு படத்தை வெளியிட இருந்தோம். ஆனால் வெளியீடு தள்ளிப்போவதற்கு காரணம், கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருந்ததே. அதனால், வெளியீடு தள்ளிப்போகிறது. படம் எனக்கும் சரி, இரண்டு நாட்கள் முன்பு படம் பார்த்த தயாரிப்பாளர்களுக்கும் சரி ‘கருப்பு’ படம் ரொம்பவே பிடித்துள்ளது. தீபாவளிக்கு படம் வெளியாகாவிட்டாலும், படத்தின் முதல் பாடல் வெளியாகும். தனது நடனத்தால் சூர்யா அசரடித்துள்ளார். படம் அடுத்த வருடமே ரிலீசாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய அவசர, மொபைல்/கணினி போன்ற திரை சார்ந்த உலகில், கண் சோர்வு, வறட்சி மற்றும் பார்வை தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. வழக்கமான பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பு பழக்கவழக்கங்கள் முக்கியமானவை என்றாலும், ஆரோக்கியமான பார்வையைப் பராமரிப்பதில் ஊட்டச்சத்து வகிக்கும் முக்கிய பங்கு குறித்து பலரும் அறியாமல் உள்ளார்கள். கண் சேதத்திலிருந்து பாதுகாக்கும் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் முதல் விழித்திரை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் கொழுப்பு அமிலங்கள் வரை, நாம் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நாம் எவ்வளவு தெளிவாகப் பார்க்கிறோம் என்பதைப் பாதிக்கும்.
வைட்டமின் ஏ: ஆரோக்கியமான பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இது இரவு பார்வையை ஆதரிப்பதோடு கண்கள் வறண்டு போவதைத் தடுக்கிறது. கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் காய்கறிகள் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் வழக்கமாக சேர்க்க வேண்டும்.
ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் துத்தநாகம்: வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவுக்கு (AMD) பங்களிக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. சிட்ரஸ் பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் இதன் சிறந்த ஆதாரங்கள். துத்தநாகம் விழித்திரை செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பீன்ஸ், முழு தானியங்கள் மற்றும் கடல் உணவுகளில் காணப்படுகிறது.
லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின்: கீரை, முட்டைக்கோஸ் மற்றும் சோளத்தில் காணப்படும் இந்த இயற்கை நிறமிகள், உட்புற சன்கிளாஸ்கள் போல செயல்படுகின்றன. அவை தீங்கு விளைவிக்கும் நீல ஒளியைத் தடுத்து, விழித்திரை சேதமடையும் அபாயத்தைக் குறைக்கின்றன. இந்த கரோட்டினாய்டுகள் நிறைந்த உணவுகள் AMD மற்றும் கண்புரை அபாயத்தைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் விழித்திரையை ஆதரிக்கின்றன மற்றும் வறண்ட கண்களின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன. சால்மன், மத்தி மற்றும் சூரை போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்கள். அதே நேரத்தில் சைவ உணவு உண்பவர்கள் சியா விதைகள் மற்றும் ஆளி விதைகளை டயட்டில் சேர்த்து பயனடையலாம்.
உங்கள் கண்களைப் பராமரிப்பதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறையே மிகவும் பயனுள்ள வழியாகும். சில சந்தர்ப்பங்களில் சப்ளிமெண்ட்ஸ் உதவக்கூடும் என்றாலும், முழுமையான உணவுகளே கண் பாதுகாப்புக்கான ஊட்டச்சத்துக்களின் சிறந்த கலவையை வழங்குகின்றன.
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்ற வழக்கில் உள்ள சொல்லுக்கு பகவான் கிருஷ்ணர் கூறும் விளக்கம்....
அந்த நாலு பேரு யார்னு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கின்றார்.
கடவுளை வழிபடும் பக்தர்கள் இருக்காங்களே அவங்க மொத்தம் நாலு பிரிவா இருக்காங்களாம்.
1.ஆர்த்தன், 2.ஜிக்யாசூ, 3.அர்த்தார்த்தி, 4.ஞானி அப்படின்னு இவங்களுக்கு பேரு வச்சிருக்காரு ஸ்ரீ கிருஷ்ணர்.
1.ஆர்த்தன்னு சொல்லப்படறவங்க... அவங்களுக்கு பிரச்சனை வந்தாதான் கடவுள் ஞாபகம் வரும். இவர்களுக்கு உடல் ஆரோக்கியம், வாழ்க்கையில் பிரச்சனைன்னு வந்தா சாமிக்கு வேண்டுதல் செஞ்சுட்டு அவங்க பிரச்சனை தீர்ந்ததும் திருப்தி அடைஞ்சுட்டு அடுத்த பிரச்சனை வரும் வரை சாமியை மறந்துடுவாங்க
2. ஜிக்யாசூனு சொல்லப்பட்றவங்க ...இப்படி வாழ்க்கை பிரச்சனையை பத்தி கேட்காம...கடவுளே எனக்கு நல்ல ஞானத்தை கொடு,ஆன்மீக எண்ணத்துடன் இருக்கவை,இதை எல்லாம் காட்டும் குருவை எனக்கு அறிமுகப்படுத்துன்னு வேண்டுவாங்க. இயல்பு வாழ்க்கையை கடந்த வேண்டுதல் இவங்களோடது.
3. அர்த்தார்தின்னு சொல்லப்படறவங்க...தனக்கு கடவுள் இதை கொடுக்கனும் அதை கொடுக்கனும்...சாமி நம்மை நல்லா காப்பாத்தனும்னு சொல்லி அவருக்கு எப்பவும் பிரார்த்தனையும் ஆராதனைகளையும் செய்யறவங்க. இவங்க வாழ்க்கையின் சந்தோஷத்தை மட்டுமே கடவுள் பார்த்துகிட்டா இவங்களுக்கு போதும்.
4.கடைசியா ஞானி....இவங்க எதையும் வேண்டுவதில்லையாம். அவங்க கடவுளை தெரிஞ்சுகிட்டவங்க. கடவுள் எதையாவது கொடுக்கறேன்னு சொன்னாலும் நீங்களே என்னோட இருக்கும் பொழுது வேற என்ன வேணும். உங்க புகழை வேணா எல்லாருக்கும் எடுத்து சொல்றேன்னு கடவுளுக்கே வரம் கொடுப்பாங்கலாம்.
இப்படி நான்கு நிலைகளில் எந்த நிலையில் பக்தன் இருந்தாலும் அவனை கொஞ்சம் கொஞ்சமா அடுத்த அடுத்த நிலைக்கு நான் கூட்டிகிட்டு போயிடுவேன்னு சொல்றார் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.
அனைவரும் எனக்கு சமமானவங்க தான். ஆனா ஞானியை மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் அவன் என் கிட்ட எதையும் எதிர்பார்க்கறது இல்லைனும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் சொல்றார்.
இந்த நாலு பேரு தான் நாலு விதமா பேசுவாங்க கடவுள் கிட்ட,அதனால இதையே பழமொழியா மாறி வந்திருக்கலாம்.
பேச வேண்டிய நேரத்தில்
பேச வேண்டியவன்
ஏன் பேசவில்லை
என்பது புரியவில்லை எனக்கு.
பேச வேண்டாத நேரத்தில்
ஏன் பேசுகின்றான் என்றும் புரியவில்லை.
காரண காரியமில்லாமல்
எப்போதுமே பேசிக் கொண்டிருப்பவனை
பொருட்படுத்தாமலேயே கடந்து விடுகிறேன்.
எப்போதுமே பேசாதவனை
புரிந்து கொள்வது
சுலபமாக இருக்கிறது எனக்கு.
-
நிதானம் தவறாமல்
அளந்து பேசுவது உத்தமம்
பேச்சு பேச்சாக இருந்தால் மட்டுமே அழகு