
உயிர் தமிழுக்கு படத்தின் உரிமையை கைப்பற்றிய சுரேஷ் காமாட்சி
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வரும் நாற்காலி படத்தை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய வி. இசட். துரை இயக்கியுள்ளார். நீண்ட காலமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
இப்போது அந்த படத்தின் பெயர் “உயிர் தமிழுக்கு” என மாற்றப்பட்டுள்ளது. மேலும் இயக்குநராக தயாரிப்பாளர் ஆதம் பாவாவே இயக்கியுள்ளதாகவும் புதிய போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார்.















































