கல்சட்டியில் பழயது,
ஈயச்சொம்பில் ரசம்,
உருளியில் கீரை,
குமிட்டி அடுப்பில் சுட்ட அப்பளாம்,
வெங்கலப்பானையில் அரிசி உப்புமா,
அகன்ற வாணலியில் புளி உப்புமா,
டபரா டம்பளரில் குவிந்த நுரையுடன் திக் காஃபி,
இலுப்பச்சட்டியில் ரவை உப்புமா,
அந்த பொறுக்கு அடை அடையாக,
தொன்னையில் பாயசம்,
மூங்கில் கூடையில் பொறித்த அப்பளாம்,
பருப்பு தெறிக்க புஷ்டியான ‘ஆமை’ வடை,
அதை விண்டு ஒரு விள்ளலை பக்கத்திலுள்ள தயிர்ப்பச்சடியில் ஒரு செல்லப் புரட்டு,
ஒரு அழகிய பலாச்சுளை,
அதை மெல்ல கீறி நடுவில் தேனை கொஞ்சமாக விட்டு.......
மோருஞ்சாதத்துக்கு இலையின் எங்கோ ஓர் ஓரமாக மறைந்து இருக்கும் பச்சைமிளகாய் சட்னியில் ஆட்காட்டி விரலை பட்டும் படாமலும் தொட்டு, நாக்கின் நடுவில் ஒரு சின்ன இழுப்பு .........
*ஆஹா......... ஆஹா*......... * அந்த சுகம் கிட்டுமா!
பழைமையில்தான் எத்துணை நிறைவு!!
இவையெல்லாம்...........
பிளாஸ்டிக் டம்ளர்களாலும்,
மினரல் வாட்டர் பாட்டில்களாலும், பிரெஸ்டிஜ் குக்கர்களினாலும்,
டைனிங் செட்டுகளினாலும்
மறக்கடிக்கப்பட்டனவே!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது வெறும் கல்லும் மண்ணும் கலந்த ஆன்மீகத் தலம் மட்டுமல்ல
அது காலவெளியைக் கடந்த ஒரு மாபெரும் புதிராகவும், அறிவியலுக்குச் சவால் விடும் தொழில்நுட்ப அதிசயமாகவும் திகழ்கிறது.
பல கோடி மக்களின் நம்பிக்கையையும், பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள இந்த திருமலை திருப்பதி மலைகள் சுமார் 210 கோடி ஆண்டுகள் பழமையான 'பிரி-கேம்பிரியன்' காலத்தைச் சேர்ந்தவை. இது உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பே உருவான உலகின் மிகப்பழமையான மலைத்தொடர்களில் ஒன்று.
சங்க இலக்கியங்களில் 'வேங்கடம்' என்று போற்றப்பட்ட இந்தத் தலம், கி.பி. 830-ம் ஆண்டு பல்லவ மன்னன் விஜயதந்திவர்மன் காலத்திலேயே மிகப்பெரிய வழிபாட்டு மையமாக இருந்ததை அங்கிருக்கும் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் எனப் பல பேரரசுகள் இந்தக் கோவிலைச் செதுக்கினாலும், 16-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் தான் இதை ஒரு பொற்கோவிலாக மாற்றினார்.
ஆற்காடு நவாப்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கூட இந்தக் கோவிலின் நிர்வாகத் திறமையைக் கண்டு வியந்து, அதன் புனிதத்தைச் சிதைக்காமல் ஆவணப்படுத்தினார்கள்.
மூலவர் சிலையைச் சுற்றிப் பல மர்மங்கள் இன்றும் நிலவுகின்றன. சிலைக்குப் பின்னால் காதை வைத்துப் பார்த்தால் ஒரு பெரும் கடலோட இரைச்சல் சத்தம் கேட்பதாகவும், சிலையில் இருக்கும் முடி நிஜமான மனிதக் கூந்தல் போல மென்மையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவை ஒருபுறமிருக்க, எந்தக் கருங்கல்லையும் சிதைக்கக்கூடிய பச்சைக்கற்பூரத்தை பல நூற்றாண்டுகளாகத் தடவியும், சிலையில் ஒரு சிறு கீறல் கூட விழாமல் இருப்பது ஒரு பெரிய வேதியியல் மர்மம். மேலும், கருவறையில் எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலவுவதும், சிலையிலிருந்து வேர்வைத் துளிகள் அரும்புவதும் இன்றும் அர்ச்சகர்களால் சொல்லப்படும் ஒரு பெரும் வியப்பு.
இந்த அதிசயங்களை 'மூடநம்பிக்கை' என்று ஒதுக்காமல் அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இது ஒரு மாபெரும் Ancient Engineering மார்வெல்
திருப்பதி பாறைகளில் உள்ள குவார்ட்ஸ் தாதுக்கள் அழுத்தத்தின் மூலம் மின்னாற்றலை உருவாக்கும் தன்மை கொண்டவை. இதனால் அந்த இடமே ஒரு சக்தி வாய்ந்த காந்தப்புலமாக (Magnetic Field) மாறுகிறது.
கருவறையின் குறுகிய அமைப்பும், அங்கிருக்கும் விளக்குகளின் வெப்பமும் 'தெர்மல் இனர்ஷியா' (Thermal Inertia) விதியின்படி பாறையினால் உறிஞ்சப்பட்டு, மெதுவாக வெளியேற்றப்படுகிறது. இதனால்தான் சிலை எப்போதும் வெப்பமாக இருக்கிறது.
சிலையில் கேட்கும் அந்தச் சத்தம் 'அகௌஸ்டிக் ரெசோனன்ஸ்' (Acoustic Resonance) எனப்படும். பாறையின் இடுக்குகளில் காற்று புகுந்து சுழலும்போது ஏற்படும் அந்த எதிரொலிதான் கடல் ஓசை போலக் கேட்கிறது.
இன்று திருப்பதி என்பது உலகின் மிக அதிக வருமானம் கொண்ட ஒரு பிரம்மாண்டமான நிர்வாக மையம் (TTD). ஆண்டுக்குச் சுமார் 3000 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டும் இந்தக் கோவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய இலவச அன்னதானக் கூடத்தையும், மருத்துவமனைகளையும் நடத்துகிறது. சாதி, மதம் கடந்து அனைவரும் ஒரு புள்ளியில் சந்திக்கும் இடமாக இது இருப்பதால், இது ஒரு பெரிய 'சமூக சமத்துவ மையமாகவும்' திகழ்கிறது.
திருப்பதி ஏழுமலையான் சிலை என்பது கல்லால் செய்யப்பட்ட ஒன்றல்ல அது நம் முன்னோர்களின் கட்டடக்கலை, புவியியல் அறிவு மற்றும் வேதியியல் மேலாண்மை ஆகியவற்றின் சங்கமம். அறிவியலால் சிலவற்றை விளக்க முடிந்துவிட்டாலும், அந்தச் சூழலில் நாம் உணரும் அந்தப் 'பாசிட்டிவ் எனர்ஜி' தான் இன்றும் கோடிக்கணக்கான மக்களை அந்த மலையை நோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது. இது நம்பிக்கையும் அறிவியலும் கைகோர்க்கும் ஒரு அற்புதப் பயணம்
ஒரு நாட்டில் கண் பார்வை இல்லாத ஒரு மன்னன் ஆண்டு வந்தான்!
அவனுக்கு ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான்! ஒரு நாள் அவனை அழைத்து மகனே! இந்த தேசத்திற்கு நீ மன்னன் ஆகும் நேரம் வந்து விட்டது! நீ அரியணை ஏற்க வேண்டும் அதற்கு முன் உனக்கு திருமணம் செய்ய வேண்டும் உனக்கு எப்படி பட்ட துணை வேண்டும் என்று சொல்ல!
அதற்கு இளவரசன் அப்பா நம் நான்கு சிற்றரசன் மகள்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை நான் தேர்ந்து எடுக்க ஆசை படுகிறேன்! ஆனால் யாரை தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை!
நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் என்று சொன்னான். அதற்கு மன்னன் கவலை படாதே அந்த நால்வருக்கும் நான் ஒரு சோதனை வைக்கிறேன் அதில் யார் வெற்றி கொள்கிறார்களோ அவர்களை நீ திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை நீ அரண்மனையில் இரு! உனக்கு உடம்பு சரியில்லை வயிறு வலியில் துடிப்பதாக சொல்ல போகிறேன் என்றார்.
நான்கு இளவரசிகள் அழைக்கப்பட்டார்கள். மன்னன் அவர்களிடம் சொன்னான் பட்டத்து இளவரசன் உடம்பு சரியில்லை அவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு இருக்கு அதனால் நீங்கள் ஒரு சிறந்த சூப்பை தயார் செய்யுங்கள் முதலில் நாம் அதை சுவைத்து பார்ப்பேன்! எந்த உணவு நன்றாக இருக்கிறதோ அந்த உணவை சமைத்தவர் அடுத்த பட்டத்து இளவரசி ஆவார் என்று சொல்ல!
நான்கு இளவரசிகள் போட்டி போட்டு கொண்டு உணவை தயார் செய்ய ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் கழித்து மன்னரிடம் சுவைக்க எடுத்து வரப்பட்டது!
முதல் இளவரசி சிக்கனை கொண்டு நல்ல சூப் ஒன்றை தயார் செய்து இருந்தால்! மன்னர் சுவைத்து பார்த்தார் சுவை அலாதியாக இருந்தது.
இரண்டாம் இளவரசி காய்கறிகள் மற்றும் நிறைய மசாலாக்கள் சேர்த்து அருமையான சூப் தயாரித்து இருந்தார்! அதுவும் அமிர்தமாக இருந்தது.
மூன்றாவது இளவரசி வெண்ணெய் சேர்த்து மணக்கும் சூப் ஒன்றை தயார் செய்து இருந்தார்! அதுவும் சுவைக்க அமிர்தம் போல் இருந்தது!
ஆனால் நான்காம் இளவரசி செய்த சூப் உப்பு காரம் மசாலா இல்லாமல் சூடு அதிகம் இல்லாமல் இருந்தது சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை!
முதல் மூன்று இளவரசியும் நான்காவது இளவரசியை பார்த்து நகைத்தனர்!
கண்டிப்பாக முதல் மூன்றில் ஒருவர் தான் மன்னன் தேர்ந்து எடுப்பார் என்று முடிவு செய்து இருந்தனர்!
ஆனால் மன்னன் நான்காவது இளவரசியை தேர்ந்து எடுத்தார்!
அவையில் இருந்த அனைவரும் மன்னனிடம் ஏன் என்று கேட்க அதற்கு மன்னன் சொன்னார், முதல் மூன்று பேரும் எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் ஆனால் நான்காவது இளவரசி மட்டும் தான் இளவரசனுக்கு உடம்பு சரியில்லை வயிறு சரியில்லை அதனால் உப்பு, காரம், எண்ணெய் மற்றும் சூடு குறைவாக இருக்கும் சூப்பை தயார் செய்தார்!
அவர் தான் உண்மையில் குடும்பத்திற்கும் ஏன் நாட்டிற்கும் சிறந்தவராக இருப்பார் என்று தீர்ப்பை சொல்லி முடித்தார்.
சிறந்ததை கொடுக்க வேண்டும். ஆனால் அதுவும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றதாக இருந்தால் தான் சிறப்பென கருதப்படும்.
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் நோய்களை போக்கும் மருத்துவம் என்ன சாப்பிட்டு நோய்களை போக்கலாம். அந்தவகையில், சிறுநீர் எரிச்சலை தணிக்க கூடியதும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதும், சோர்வை போக்கவல்லதும், தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியதுமான மோரின் மருத்துவ குணங்கள், மோரை பயன்படுத்தி நீராகாரம் தயாரிக்கலாம்.
இரவு முழுவதும் சாதத்தை ஊற வைக்கவும். காலையில் இதை நன்றாக கரைக்கவும். இதோடு சிறுவெங்காய துண்டுகள், தேவையான அளவு உப்பு, மோர் சேர்த்து சாப்பிடலாம்.காலையில் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல்உஷ்ணம் குறையும். சிறுநீர் எரிச்சல் தணியும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
சோற்று கற்றாழையின் தோல் நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதையை 7 முறை நீர்விட்டு நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் கசப்பு சுவை போகும். கற்றாழையின் சதையை நன்றாக அரைத்து கொள்ளவும். இதனுடன் மோர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை காலையில் சாப்பிட்டுவர உடல் புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் குளிர்ச்சி அடையும். சோற்று கற்றாழையில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. இது, தீக்காயங்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும். மலட்டுத்தன்மையை போக்கும்.
மூட்டு வலி உள்ளவர்கள் குளுமையான உணவை உட்கொள்வதால் வலி அதிகமாகும் என அஞ்சுவார்கள். இவர்கள் கூட மோர் சாப்பிடலாம். மோருடன் சுக்கு, மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம். புளிப்பில்லாத மோரில் சிறிது உப்பு, சுக்குப் பொடி, மிளகுப் பொடி சேர்த்து சாப்பிட்டால் வாதம், கபத்தை சமன்படுத்தும்.
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் நீர் இழப்பு ஏற்பட்டு தோலில் வறட்சியை ஏற்படும். இதை சரிசெய்யும் முறையை காண்போம்.தேவையான அளவு மோர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாற்றை கலக்கவும். பின்னர், மெல்லிய துணியை மோரில் நனைத்து 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்து வந்தால், தோலில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். எரிச்சல் குறையும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட மோர் உடல் உஷ்ணத்தை தடுக்கவும், களைப்பை போக்கவும் பயன்படுகிறது. சிறுநீர் எரிச்சலை தணிக்கும். தோலுக்கு குளிர்ச்சி தருகிறது. மோரை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் எலும்புக்கு பலம் கிடைக்கும். மோரில் வைட்டமின் சி, இரும்பு சத்து உள்ளது. மோர் சரிவிகித உணவாக உள்ளது. எளிதாக கிடைக்க கூடியதும், சிறந்த பானமான மோரை கோடைகாலத்தில் பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கலாம்.
*குடிக்காரன் களை…பார்த்தா ஜனங்க ஏன் ஒதுங்கி போறாங்க தெரியுமாடா*…..
*தெரியாதே…..நீதான்சொல்லேன்*
நம்மளபார்த்தா…..அவ்வளவு பயம் டா*..,
*ஆமாமா…ரோடுலே போற…சொறி நாய்ங்க…குணம்எப்படி…இருக்குமுன்னுசொல்லமுடியாது…டபுக்குன்னு மேல..வுழுந்து புடுங்கி வைச்சிடுமே*….
35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்..
30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.
இதற்கு சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை
அவரே Post graduate degree முடித்து, வங்கி.. ஆசிரியை.. சென்னை, பெங்களூரீல் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.
குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.
பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுயதொழில் செய்து வருகின்றனர். சுயதொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்கள் விரும்புவதில்லை. பெண் வீட்டாரும் விரும்புவதில்லை..
வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.
அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய், அஜித், அவர்கள் போல் இருக்க வேண்டும்.
1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.
இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பதுதான்.
ஒரு கட்டத்தில் ஜாதக பொருத்தமும் திருமண தடங்கலாக இருந்து வருகிறது.
சரி இதன் விளைவு என்ன என்று பார்ப்போம்...
1960 முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலருக்கு 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் சர்வ சாதாரணமாக பெற்றுக்கொண்டார்கள்.
1980க்கு பின் 100ல் 80 குடும்பம் இரண்டு குழந்தைகள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு.
2000க்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது.
ஆனால், 2010க்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை. என்ற நிலையில் உள்ளோம்.
இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்..
1960 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம் உணவு: ராகி, கம்பு, சோளம்.
1975க்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22 உணவு: அரிசி .அரிச மா மரவள்ளி
1992க்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25 உணவு: பட்டை தீட்டப்பட்ட அரிசி.
2000க்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்.. உணவு: துரித உணவு.
2010க்கு மேல்
உணவு: மைதா மாவில் தயாரித்த உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம். தரம் குறைந்த எண்ணெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மை தாக்கத்தில் இருக்கிறோம்.
இந்நிலையில் 28க்கு மேல் 35 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.
ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள்.
வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.
திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ்பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்.
எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானம் செய்யாமல், நல்லதை மற்றும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யலாம்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் அதற்கு பணம் தேவைதான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது.
சரியான கல்வியறிவு, நல்லொழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மனமுடியுங்கள்...
வாழ்க்கை இனிமையாகும்...
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். பணப் பற்றாக்குறை நீங்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். சக ஊழியர்கள் மதிப்பர்.
ரிஷபம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மிதுனம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
கடகம்: வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் இருந்த அலைச்சல் நீங்கும்.
சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினை களுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். முன்கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
துலாம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்: பணவரவால் அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கி யிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வீர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும்.
தனுசு: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. வியாபாரத்தில் சலுகைகளை அளித்து வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். அலுவல கத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
கும்பம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதியுண்டு. பயணம் மகிழ்ச்சி தரும்.
மீனம்: பணவரவு திருப்தி தரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எளிதில் சமாளிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.6.2026.
இன்று இரவு 09.03 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று மாலை 04.25 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
இன்று பிற்பகல் 02.46 வரை வரீயான். பின்னர் பரிகம்.
இன்று காலை 08.56 வரை பாலவம். பின்னர் இரவு 09.03 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
குரல் அழகின் சுரப்பொருள் தமிழ் சினிமா இசை வரலாற்றில் தனிச்சிறப்புடன் ஒலிக்கும் குரல்களில் குரலும் ஒன்று. கம்பீரமும் இனிமையும் ஒருங்கே கலந்த அவரது பாடல் நடை, அவரை மற்ற பின்னணிப் பாடகிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.
குரலில் ஒரு தனித்த கூர்மையும் வீரியமும் இருந்தது. சோகப் பாடல்களில் கண்ணீர் சொட்டும் உணர்வை வெளிப்படுத்தும் அதே குரல், அதிரடியான “கபாரே” பாடல்களிலும், நாட்டுப்புற பாடல்களிலும் வேறு பரிமாணம் கொண்டு ஒலித்தது. இந்த பல்துறை வல்லமையே அவரை இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகியாக ஆக்கியது.
வெறும் ஒரு பாடகி அல்ல தமிழ் சினிமா இசையின் ஒரு கால கட்டத்தின் குரலாக அவர் வடிவம் பெற்றார். பாடல்கள் இன்றும் “பழைய தமிழ் திரை இசை” ரசிகர்களின் இதயங்களில் வாழும் அழியாத சொத்தாக நிலைத்திருக்கின்ற
எல். ஆர். ஈஸ்வரி அம்மாவின் தற்போதைய புகைப்படம்
கல்லூரி மாணவி ஒருவர் தன் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க அப்பாவிடம் பணம் கேட்டார். அப்பா, ‘‘எவ்வளவு வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘ஐந்து பேர் போகிறோம். 4 ஆயிரம் ரூபாய் கொடுங்கள்’’ என்றார் மகள்.
‘வெளியே சென்று செலவழிப்பதற்கு இவ்வளவு பணம் தேவையா?’ என்று வியந்த அப்பா, ‘‘என்னிடம் இப்போது இல்லை. ஒரு வாரம் பொறுத்துக்கொள். தருகிறேன்’’ என்று சொன்னார். மகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘‘எனக்கு இப்போதே பணம் வேண்டும்’’ என்று கேட்டார்.
‘‘அவ்வளவு தொகையை ஒருநாள் மதிய விருந்துக்கு செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன் படிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்று உனக்கே தெரியும். நம் குடும்ப நிலைமையை மீறித்தான் உன் படிப்பு செலவை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவசியமானதற்கு செலவழிக்கலாம். ஆனால், ட்ரீட் என்ற பெயரில் அனாவசிய செலவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நீ இந்தக் காலத்துப் பெண். உன் விருப்பத்தையும் மறுக்க என்னால் முடியாது. ஆகையால் குறைந்தது மூன்று நாட்களாவது பொறுத்துக் கொள்’’ என்று அப்பா சொன்னார்.
மகள் அதை ஏற்காமல் பதிலுக்குப் பேச, அப்பா அதற்கு விளக்கம் கொடுக்க, அது காரசாரமான விவாதமாகி விட்டது. கடைசியில் மகள், ‘‘நான் யாருக்கும் ட்ரீட் கொடுக்கலை. ஆனா நான் மட்டும் யாராவது ட்ரீட் கொடுத்தா வெட்கமே இல்லாம நல்லா தின்னுக்கிறேன். இப்ப உங்களுக்குத் திருப்தியா?’’ என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே போனார். அப்பாவின் குரல் பின்னால் கேட்க, அதை அலட்சியம் செய்துவிட்டு வெளியே போனார்.
நகரத்தில் இலக்கே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார். அவசரத்தில் மொபைல் போனையும் எடுத்து வரவில்லை. அது மாலைப் பொழுது ஆனதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. இங்கும் அங்கும் சுற்றியதில் பசித்தது. பைக்கை ஒரு டீக்கடை அருகே நிறுத்தினார். பெரிய சாலையின் ஓரம் பெரிய நடைபாதை. நடைபாதையை ஒட்டி டீக்கடை இருந்ததால் பலர் அந்நடைபாதையில் நின்று கொண்டு பொறுமையாக டீ குடிக்க வசதியாய் இருந்தது. இவர் ஒரு டீயும் வடையும் வாங்கிக் கொண்டார்.
அப்போது அங்கே மூன்று ஆட்டோக்கள் வந்து நின்றன. ஒவ்வொரு ஆட்டோவிலும் ஆண்களும் பெண்களுமாய் பலர் நெருக்கயடித்து அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தினர் என்று அவர்கள் பேசுவதை வைத்துத் தெரிந்து கொண்டாள்.
அதில் ஓர் இளைஞன் உற்சாகமாய் டீக்கடையில் வந்து தட்டு தட்டாக சமோசாக்களும், உளுந்து வடைகளும் வாங்கி வாங்கி ஆட்டோவில் இருப்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். சட்னியை அவர்கள் இருக்கும் இடத்துக்கே எடுத்து வந்து ஊற்றினான். சமோசாக்களுக்கு தொட்டுக்கொள்ள சாஸ் தேவைப்பட்டபோது எடுத்து வந்து ஊற்றிக் கொண்டிருந்தான். அவர்கள் அரட்டையடித்தபடி சாப்பிட்டார்கள்.
எல்லோரும் சாப்பிட்டபிறகு அந்த இளைஞன் பணம் கொடுத்தான். 500 ரூபாய்க்கும் குறைவாகவே ஆகியிருந்தது. கிட்டத்தட்ட 15 பேருக்கு 500 ரூபாய்க்குள் அவன் ட்ரீட் வைத்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். ஆனால் அவர்கள் அனைவரும் உற்சாகமாய் இருந்தார்கள்.
‘பணம் செலவழிப்பதற்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே உற்சாகமாய் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை’ என்பதை அவர் புரிந்து கொண்டார். ‘எவ்வளவு செலவழிக்கிறோம் என்பது முக்கியமில்லை. அதை எப்படி ஆழ்மனதில் இருந்து ரசித்து செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்பதையும் உணர்ந்தார். ‘நண்பர்களுக்கு பெரிய உணவகத்தில்தான் ட்ரீட் வைக்க வேண்டும் என்று போலித்தனமான கௌவுரவம் பார்த்து அப்பாவை வேறு மனக்கஷ்டப்படுத்தி விட்டோமே’ என்று வருந்தினார்.
அவசரமாக வீட்டுக்குத் திரும்பியவர், பைக்கை நிறுத்திவிட்டு அப்பாவிடம் ஓடிச் சென்றார். மகளைப் பார்த்து பதறிய அப்பா, ‘‘எங்கம்மா போனே? கவலைப்படாதே! நீ கேட்ட பணம் ரெடி பண்ணிட்டேன். ஆனா இனிமே எப்பவுமே இப்படி கோபத்துல பைக்கை எடுத்துக்கிட்டு கிளம்பாதே. அப்பாவுக்கு ரொம்ப பயமா இருக்கு’’ என்றார். அவர் அப்படிச் சொல்லும்போது ஒரு குழந்தையாகத் தெரிந்தார்.
‘‘இல்லப்பா! ட்ரீட்டுக்கு இவ்வளவு பணம் வேணாம். நான் என் ஃப்ரெண்ட்ஸை வீட்டுக்குக் கூப்பிடப் போறேன். நானே சமைச்சி நம்ம வீட்டு மொட்டை மாடில நண்பர்களுக்கு விருந்து வைக்கப்போறேன்’’ என்ற மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அப்பா.
‘உலகம் இவளுக்கு ஏதோ நல்லதாய் கற்றுக் கொடுத்திருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டார். ‘‘சாப்பிடுங்கப்பா, ருசியா இருக்கு’’ என்று அப்பாவுக்காக வாங்கி வந்திருந்த சமோசாவை நீட்டினார் அந்த அன்பு மகள்.
"மக்களால் எப்படி நினைவு கூறப்படுகிறோம் என்பதே முக்கியம்!" தனது 35,000 கோடி சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்க அதிரடி முடிவு!
திரைப்படங்களில் ஸ்டண்டுகளால் நம்மை வியக்க வைத்த உலகப் புகழ்பெற்ற அதிரடி நாயகன் ஜாக்கி சான், நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் ரியல் ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் ஏழைகளின் நலனுக்காகத் தானம் செய்யப்போவதாக அவர் எடுத்துள்ள முடிவு ஒட்டுமொத்த உலகையும் நெகிழ வைத்துள்ளது!
தந்தையின் போதனையும்.. மகனின் அர்ப்பணிப்பும்:
நல்ல மனம் படைத்த தந்தை: "என் தந்தை ஒரு அழகான மனிதர் மட்டுமல்ல, மிக நல்ல மனம் படைத்தவர். நாம் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல; இறுதியில் இந்த உலக மக்கள் நம்மைக் குறித்து எப்படி நினைவு கூர்கிறார்கள் என்பதை எனக்குச் சொல்லிக்கொடுத்ததே அவர்தான்" என ஜாக்கி சான் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
35,000 கோடி ரூபாய் தானம்: தந்தையின் அந்த உன்னதமான போதனையைப் பின்பற்றி, தான் கடினமாக உழைத்துச் சம்பாதித்த சுமார் 35,000 கோடி ரூபாய் ($4.5 Billion+) மதிப்புள்ள ஒட்டுமொத்த சொத்துக்களையும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோரின் நலனுக்காகக் கொடுக்க அவர் முடிவெடுத்துள்ளார்.
வாரிசுக்குச் சொத்து இல்லை: "என் மகனுக்குத் திறமை இருந்தால் அவன் சொந்தமாகச் சம்பாதித்துக் கொள்வான்; திறமை இல்லையென்றால் நான் சேர்க்கும் பணத்தை அவன் வீணடித்துவிடுவான்" என்று ஏற்கனவே கூறி வாரிசு அரசியல், வாரிசு சொத்துரிமைக்கு அப்பாற்பட்டு சிந்திப்பவர் ஜாக்கி சான்!
திரையுலகில் பல சாதனைகளைப் படைத்தாலும், சாகும் போது நாம் கொண்டு செல்லப்போவது எதுவுமில்லை என்ற உயரிய தத்துவத்தை உணர்ந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றத் துணியும் ஜாக்கி சான் அவர்களின் இந்த பெருந்தன்மைக்கு உலகெங்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
"பணம் சேர்ப்பதை விட, மனிதர்களின் இதயங்களில் அன்பைச் சேர்ப்பதே உண்மையான மனிதநேயம்!"
ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது வரலாற்றில் ஒரு எண் மட்டுமே.
ஆனால்...
அவர் எத்தனை பேரின் மனதில் நம்பிக்கையை விதைத்தார்?
எத்தனை கனவுகளுக்கு சிறகுகள் கொடுத்தார்?
எத்தனை தோல்விகளை வெற்றியாக மாற்றினார்?
நேரம் நம்மை அளவிடுவதில்லை...
நாம் நேரத்தை எப்படி பயன்படுத்தினோம் என்பதுதான் நம்மை அளவிடுகிறது.
அதனால்தான் இந்த வரிகள் காலத்தை கடந்தும் உயிரோடு இருக்கின்றன:
"ஆண்டுகள் கடப்பதால் நேரம் அளவிடப்படுவதில்லை; நாம் சாதிப்பதாலும் உணர்வதாலும் தான் அளவிடப்படுகிறது."
ஒவ்வொரு நாளும் வெறும் காலண்டரில் ஒரு தேதியாக முடிந்து விடக்கூடாது.
ஒரு புதிய அனுபவமாக...
ஒரு சிறிய முன்னேற்றமாக...
ஒரு மறக்க முடியாத நினைவாக...
அல்லது யாரோ ஒருவரின் வாழ்க்கையில் ஒரு நேர்மறை மாற்றமாக மாற வேண்டும்.
வாழ்க்கை நீண்டதாக இருப்பது முக்கியமல்ல.
அர்த்தமுள்ளதாக இருப்பதுதான் முக்கியம்.
பணத்தை பற்றிய இந்த உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!
- 💰 எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட எவ்வளவு மிச்சம் பிடிக்கிறோம் என்பதே முக்கியம்.
- 📊 10 ரூபாய் சம்பாதித்தால் 8 ரூபாய்க்கு மட்டும் வாழ பழகுங்கள்.
- 🚫 வரவுக்கு மீறி ஆடம்பரமாக வாழ்வது உங்களை கடனில் வைக்கும்.
- 🕊️ கடன் இல்லாத வாழ்க்கையே உண்மையான சுதந்திரம்.
- 📈 பணத்தை வீட்டில் வைத்திருந்தால் பணவீக்கத்தால் மதிப்பு குறையும்.
- 🏦 பணத்தை நல்ல இடங்களில் முதலீடு செய்யுங்கள்.
- 💎 தங்கம், மியூச்சுவல் ஃபண்ட், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள்.
- 🌙 நீங்கள் தூங்கும்போதும் உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும்.
- 🛡️ 6 மாத செலவுக்கு தேவையான பணத்தை அவசரகாலத்திற்கு வைத்துக்கொள்ளுங்கள்.
- 💳 கிரெடிட் கார்டில் பொருள் வாங்குவது உங்கள் வருமானத்தை உறிஞ்சிவிடும்.
- 🎯 ஆசைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.
- 🤝 பணம் உங்கள் கனவுகளை செய்யவும் பிறருக்கு உதவவும் ஒரு கருவி.
- 🏃 பணத்தை துரத்தாமல் பணத்தால் செய்யும் நன்மைகளை நோக்கி ஓடுங்கள்.
- 📚 உங்களை மேம்படுத்தும் செலவு பத்து மடங்காக திரும்பி வரும்.
- புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள் - அறிவே உங்கள் பெரிய சொத்து.
- ⏰ சின்ன வயதிலேயே முதலீடு செய்ய ஆரம்பியுங்கள்.
- 📈 கூட்டு வட்டியின் மேஜிக் உங்கள் சிறிய முதலீட்டை பெரியதாக மாற்றும்.
- 👑 பணத்தை நீங்கள் ஆளுங்கள் - பணம் உங்களை ஆளக்கூடாது.
- 😌 பணக்காரராக இருப்பதை விட நிதி சுதந்திரத்துடன் நிம்மதியாக வாழுங்கள்.
- 🌟 பணத்தை சரியாக பயன்படுத்தினால் அதுவே உங்கள் பலம்.









