மார்க்கண்டேயர் என்ற ரிஷி ஒருவர் இருந்தார். அவர் இளம் வயதினர். பிரம்மச்சர்ய விரதத்தைக் கடைப்பிடித்து, மரவுரி தரித்து, புலன்களை அடக்கி மகாவிஷ்ணுவை மனதில் தியானித்து கடும் தவம் மேற்கொண்டார். ஆறு மன்வந்திர காலம் இவ்வாறு தவம் செய்துவந்தார். ஏழாவது மன்வந்திரத்திலும் தனது தவத்தைத் தொடர்ந்தார். அப்போது இந்திரன் கவலை அடைந்தான். மார்க்கண்டேயர் தொடர்ந்து தவம் செய்துவந்தால் தனது இந்திரப்பதவி பறிபோய்விடும் என்று நினைத்தான். அழகிய தேவலோகப் பெண்களை மார்க்கண்டேயர் இருக்குமிடம் அனுப்பி, அவரை மயக்கி, அவரது தவத்தை கலைக்க முற்பட்டான்.
அப்பெண்கள் தமது இனிய கானத்தாலும், மயக்கும் நடனத்தாலும், வசீகர தோற்றத்தாலும் மார்க்கண்டேயரை தமது வலையில் வீழ்த்த முயன்றனர். ஆனால் மார்க்கண்டேயர் தனது கவனம் சிதறாமல் தொடர்ந்து தவம் செய்தார். தனது உடல்ஒளியினால் அப்பெண்களை சுட்டெரிக்க முயன்றார். அப்பெண்கள் இதை உணர்ந்து பயம்கொண்டு தேவலோகத்திற்கு ஓடிவிட்டனர்.
தம்மை தியானித்து இத்தனை காலம் தவம் செய்த மார்க்கண்டேயருக்கு அருள் பாலிக்கும் பொருட்டு ஸ்ரீமன் நாராயணன் அவருக்கு காட்சியளித்தார். மார்க்கண்டேயர் மிக்க மகிழ்ந்து, அவருக்கு தக்க மரியாதை செய்து பூஜித்தார். ஸ்ரீமன் நாராயணன் மிக்க மகிழ்ச்சியடைந்து " மார்க்கண்டேயா ! உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் ! " என்று கூறினார்.மார்க்கண்டேயர் " பகவானே ! எனக்கு எந்தப் பொருளின்மீதும் ஆசையில்லை !எந்தப் பதவியும் எனக்கு வேண்டாம் !. நான் தங்களை தரிசித்துவிட்டேன் ! அதுவே போதும். ஆனால் தங்களுடைய மாயையை பார்க்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதை எனக்கு காட்டுங்கள் ! " என்று கூறினார்.( மாயை என்பது விஷ்ணுவின் ஒரு உருவம்). அதைக்கேட்ட பகவான் "அப்படியே ஆகட்டும் !" என்று கூறிவிட்டு பத்ரிகாசிரமம் சென்றுவிட்டார். மார்க்கண்டேயரும் தனது ஆசிரமம் சென்றடைந்து பகவானை தியானித்துவந்தார்.
ஒருநாள் திடீரென்று பெரும் காற்று வீசத்தொடங்கியது. மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளம். நான்கு கடல்களும் பொங்கியெழுந்து உலகை மூழ்கடிக்கத் தொடங்கின. நீர்வாழ் விலங்கினங்களும், நிலம்வாழ் உயிரினங்களும் தவித்தன.
இதைக்கண்ட மார்க்கண்டேயர் வருத்தமடைந்தார். தனது ஜடைமுடியை விரித்துக்கொண்டு மூடன்போன்று பற்பல இடங்களில் அலைந்து திரிந்தார்.இறுதியில் மேடான ஒரு இடத்தில் ஆலமரம் ஒன்று இருப்பதைக் கண்டார்.அம்மரத்தின் அருகில் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த ஓர் ஆலிலையில் குழந்தை ஒன்று படுத்திருப்பதைக் கண்டார். இருளைப் போக்கக்கூடிய ஒளி உடையதாய் அக்குழந்தை இருந்தது. அக்குழந்தை தாமரை மலர் போன்ற முகம் உடையது. சங்கு போன்ற கழுத்தினை உடையது. சுருண்ட தலைமுடி, மாதுளை பூக்களைப் போன்ற காதுகள், பவளம் போன்ற சிவந்த உதடுகளை உடையதாய் இருந்தது.
அந்த அழகிய குழந்தை தன் கைகளினால் கால் கட்டைவிரலை வாயில் வைத்து சப்பிக்கொண்டிருந்தது. பலவித அணிகலன்களை அணிந்து திவ்ய ரூபத்துடன் காட்சியளித்த அக்குழந்தையைக் கண்டு மார்க்கண்டேயர் ஆச்சரியம் அடைந்தார். "இதுபோன்ற குழந்தையை பார்த்ததில்லையே ! " என்று ஆனந்தமடைந்தார். மிகுந்த மகிழ்வுடன் அக்குழந்தையின் அருகில் சென்றார்.
அக்குழந்தையின் மூச்சுக்காற்றினால் இழுக்கப்பட்டு ஒரு கொசுவின் உருவில் மார்க்கண்டேயர் குழந்தையின் வாயில் நுழைந்தார். பின்னர் வயிற்றுப்பகுதிக்கு சென்றுவிட்டார். அக்குழந்தையின் வயிற்றில் பிரபஞ்சம் முழுவதும் இருப்பதைக் கண்டார். அங்கே ஆகாயம், பூமி, நட்சத்திரங்கள், மலைகள், ஆறுகள், கடல்கள், பலவித உயிரினங்கள் இருப்பதைக் கண்டார் தனது ஆசிரமும் அக்குழந்தையின் வயிற்றுள் இருப்பதைக்கண்டு மார்க்கண்டேயர் ஆச்சரியம் அடைந்தார். சிறிதுநேரத்தில் குழந்தையின் மூச்சுக்காற்றினால் வெளியே தள்ளப்பட்டு மார்க்கண்டேயர் பிரளய நீரில் வந்து விழுந்தார்.
நீரில் வந்து விழுந்தவுடன் ஆலிலையின்மேல் படுத்திருக்கும் வடபத்திரசாயியான அக்குழந்தைதையைப் பார்த்தார். அக்குழந்தையின்மேல் அன்பு பொங்கியது.அந்க் குழந்தையை தொட்டுத் தூக்கி அணைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார். அக்கணமே குழந்தையாகப் படுத்திருந்த பகவான் மறைந்தார். அந்த. ஆலமரமும் மறைந்தது. பிரளயநீரையும் காணவில்லை.மார்க்கண்டேயர் முன்புபோல் தனது ஆசிரமத்தில் அமர்ந்திருந்ந்தார்.
.அப்போது மார்க்கண்டேயர் பகவான் நாராயணின் யோகமாயையினால் இத்தகைய தோற்றம் தென்பட்டது என்பதை உணர்ந்தார். தனது வேண்டுகோளை ஏற்று நாராயணன் தனது மாயாவினோதங்களைக் காட்டி மகிழ்வித்ததை எண்ணி வியந்தார். "பெருமாளே ! உம்முடைய மாயையைக்காண மகரிஷிகள்கூட விரும்புகிறார்கள். நீர் உம்மை அண்டியவர்களின் பயத்தைப் போக்குபவர் ! அப்படிப்பட்ட உன் பாதகமலங்களை சரணடைகிறேன் ! " என்றுகூறித் துதித்தார்.
இதுதான் ஆலிலை கிருஷ்ணனின் (விஷ்ணுவின்) வரலாறு. இவர் மாயையை காட்டியதால் இவருக்கு மாயோன், மாயவன் என்ற பெயர்களும் உண்டு. (மார்க்கண்டேயர் சிவபெருமானை துதித்து தவம் புரிந்து " என்றும் பதினாறு வயதுடன் சிரஞ்சீவியாக இருப்பாய் ! " என்று வரம் பெற்றது புராணங்களில் கூறப்பட்டுள்ளது).
தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்திற்கு ஒரு இயந்திரம் வடிவு அமைத்துக் கொடுத்தார்.. அதற்கு என்ன விலை நிர்ணயம் செய்யலாம்? என்பது சற்றுக் குழப்பமாக இருந்தது.. எடிசனும்,அவரது மனைவியும் இது பற்றி விவாதித்தார்கள்.
எடிசன் மனைவி இருபதாயிரம் டாலர் கேளுங்கள் என்றார். எடிசனோ, "இந்தத் தொகை பெரிய தொகையாக இருந்தால் யாரும் வாங்காமல் போனால் என்ன செய்வது? என்று சிந்தித்துக் கொண்டு இருந்தார். பணம் தருவதற்காக நிறுவனத்தின் ஒரு மூத்த அதிகாரியை வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் அனுப்பி இருந்தது. இயந்த்திரத்துக்கான விலையை அதிகாரி கேட்டார். எடிசன் சில நிமிடம் மௌனமாக இருந்தார். எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தார்..
பொறுமை இழந்த அந்த நிறுவனத்தின் அதிகாரி''எடிசன் சார். "இதோ உங்கள் இய்ந்திரத்திற்க்கான விலை முதல் தவணையாக நூறு ஆயிரம் டாலர்கள்" என்று சொல்லி அதற்கான காசோலையைக் கொடுத்தார். மீதி எவ்வளவு என்று சொல்லி அனுப்புங்கள், காசோலையை அனுப்பி வைக்கின்றோம் என்று கூறி இயந்திரத்தை எடுத்துச் சென்றார். அவசரப்படாமல், பொறுமை காத்த எடிசனுக்கு நான்கு மடங்கு இலாபம் கிடைத்தது. அவசரப்பட்ட நிறுவனத்தின் அதிகாரியால் நான்கு மடங்கு நட்டம் நிறுவனத்திற்கு ஏற்பட்டது.
அவசரம் நமக்கு சிப்பிகளைத் தரலாம், ஆனால் பொறுமையே முத்துகளைத் தர முடியும். ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது அவரின் பொறுமையே ! பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு ! அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன் தரும்.
மேஜிக் ரைஸ் (Boka Saul)
போக்கோசால் (Boka Saul) இது மேஜிக் ரைஸ் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதனை சமைக்கவே தேவை இல்லை. வெறும் தண்ணிரை உற்றினாலே போதும் இந்த அரிசி சாதமாக மாறுகிறது. இப்படி ஒரு அரிசி ரகத்தை நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க கூட வாய்ப்பு இல்லை தான். ஆனால் உண்மையில், இந்த வகை பாரம்பரிய அரிசியும் நாம் நாட்டில் விளைவிக்கப்பட்டு வருகிறது.
பூர்விகம்:
அஸ்சாம்நிலத்தைபூர்வீகமாககொண்டுள்ளது இந்த பாரம்பரிய அரிசி.
இந்த அரிசி புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது.
இந்த அரிசியை அஸ்ஸாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆண்ட 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த அஹோம் வம்சத்தினர் பயன்படுத்தி வந்தனர்.
போக்கோசால் அரிசியின் சிறப்புகள்:
போக்கோசால்ரிசி நடவு செய்ததிலிருந்து 145 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
இந்த அரிசியில் ஆறிய தண்ணீரை உற்றினால் சாதாரண ஆறிய சாதமாகவும், வெந்நீரை ஊற்றினால் சூடான சாதமும் தயாராகி விடும்
இது நாம் சமைத்து உண்ணும் அரிசி போலவே இருக்கும்.
சமைக்கவே வேணாம்.. ஊறவச்சா போதும்
சத்துகள்:
இதில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருப்பதாகவும். மேலும் 10.73 சதவீதம் நார்ச்சத்து மற்றும் 6.8 சதவீதம் புரதம் இருப்பதாக இந்திய வேளாண் ஆரய்ச்சிக் கழகம் கூறி உள்ளது.
தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி... அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன... சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது... அந்த நூறு நாய்களும் பதிலுக்கு.... "உர்ர்.. உர்ர்.." என்றது.
அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது. இருந்தும் கோபம் தாளாமல்.. "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.
எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது. அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன் மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திக் கொண்டது.....
அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,
" வெறி பிடித்ததை" போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன...
இந்த நாய் பயத்தின் உச்சத்தில்... வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது....
இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது....
இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்கு புரிந்திருக்கும்.
1. தான் நுழைந்தது நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று...
2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள் தான் என்று....
3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல... தன் குரலின் எதிரொலி தான் என்று....
கதையின் நீதி:
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.... நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்..
அன்பு செலுத்தினால்... அன்பு கிடைக்கும்... நீ எதை விதைக்கிறாயோ...., "அதுவே முளைக்கும்"...
* குழம்பு அல்லது கூட்டுக்கு தேங்காய்க்கு பதிலாக, கசகச மசாலாவை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து போட்டு இறக்கலாம்
* பொரியலுக்கு பொரி அரிசி அல்லது சிறிது வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொள்ளலாம்
* போளி செய்யும் போது, பிசைந்த மைதா மாவை அப்பளம் போல் இட்டு, அதனுள் வெல்லம், தேங்காய் கலந்த பூரணத்தை நிரப்பி, மீண்டும் மூடும் போது, அதிகப்படியான மாவை நீக்கிவிட்டால், போளி மிருதுவாக இருக்கும்
* வற்றல் குழம்பில் ஒன்றிரண்டு மேஜைக்கரண்டி அளவு புளிக்காய்ச்சலை எடுத்து கலந்து விட்டால், சுவையும், மணமும் நிறைந்த வற்றல் குழம்பு தயார்
* சப்பாத்தி மாவோடு கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி, காரப்பொடி, பெருங்காயத்துாள், சீரகம் மற்றும் கறிவேப்பிலை கலந்து சுட்டால், சைடிஷ் இல்லாத சப்பாத்தி தயார்
* கொண்டைக்கடலையை ஊற வைத்து, அவித்தால், சில சமயம் ஒருவிதமான வாடை வரும். அதற்கு, கொண்டைக்கடலையை நன்றாக கழுவி ஊற வைத்த பின், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை மறுபடியும் கழுவி, தண்ணீரை மாற்ற வேண்டும்.
- பல வீடுகளில் அரிசியை மாதக்கணக்காக சேமித்து வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
- சேமித்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு மற்றும் மாவு போன்றவற்றில் சிறு சிறு பூச்சிகள் மற்றும் புழுக்கள் வரலாம்.
- எந்த ஒரு கெமிக்கல்களையும் பயன்படுத்தாமல் அரிசியை பாதுகாப்பதற்கு சில பாரம்பரிய முறைகள் பின்பற்றலாம்.
- உலர்ந்த வேப்பிலையை அரைத்து, சிறு உருண்டையாக கட்டி அரிசியின் நடுவில் வைக்கவும். இது பூச்சிகளைத் தடுக்கும்
- ஒரு சுத்தமான துணி அல்லது பெரிய ஒரு டிரே எடுத்து அரிசியை நன்றாக பரப்பி நேரடி சூரிய வெளிச்சத்தில் 2 முதல் 3 மணி நேரம் வைக்கவும்.
- பூச்சிகளால் ஈரமான சூழலில் மட்டுமே வாழ முடியும். எனவே இந்த செயல்முறை அரிசியை உலர்த்தி மீண்டும் பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ளும்.
- அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தின் மேற்புறம் அல்லது அடிப்பகுதியில் கல் உப்பை போடவும். உப்பானது அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி தானியங்களை உலர்ந்த நிலையிலும், பூச்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
- 2 அல்லது 3 பிரியாணி இலைகளை அரிசி இருக்கும் பாத்திரத்தில் போடலாம். இதே முறையை நீங்கள் பருப்பு மற்றும் மாவிற்கும் பயன்படுத்தலாம்.
- கிராம்பு வாசனைக்கும் பூச்சி வராது.
- தோல் உரிக்காத 5 - 6 பூண்டு பற்களை அரிசி இருக்கும் பாத்திரத்தில் போடவும். இதிலிருந்து வரும் வாசனை பூச்சிகளை விரட்டும். அரிசி உலர்ந்த பிறகு புதிதாக வேறு பூண்டை மாற்றுவதன் மூலமாக தொடர்ந்து அரிசியை நீங்கள் பாதுகாத்து வரலாம்.
ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள்.
"அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை."
கைதி பதில் எழுதினான்.
" குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.."
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். " அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?"
கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.
"அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!"
புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.
அம்மா உணவகத்தில் சாப்பாடு..அன்னையின் இறப்பு.. மரணத்திற்கு முன் நடிகர் அபிநய்
இறப்புக்கு முன் மன உளைச்சல் , பொருளாதார நெருக்கடி என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தார் மறைந்த நடிகர் அபிநய்
கடந்த சில வருடங்களாக கல்லீரல் பிரச்சனையால் சிகிச்சைப் பெற்றுவந்த நடிகர் அபிநய் உயிரிழந்துள்ள தகவல் தமிழ் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தை தொடர்ந்து ஜங்ஷன், சக்சஸ், சிங்கார சென்னை, தாஸ், பொன் மேகலை, தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச்சோலை, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களில் அபிநய் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பிரபல பிஸ்கட் நிறுவன விளம்பரம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
கைகொடுக்காத சினிமா
தனுஷ் மற்றும் அபிநய் இருவரும் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர்கள். இப்படம் வெளியானபோது அபிநய் தான் நாயகனாக நடித்திருக்க வேண்டும் தனுஷை ஏன் நடிக்க வைத்தார்கள் என பத்திரிகைகளில் கருத்துக்கள் வெளியாகின. அடுத்தடுத்து ஜங்ஷன் , சிங்கார சென்னை , பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார் அபிநய். மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றி அபிநய்க்கு கிடைக்கவில்லை. நடிப்பு தவிர்த்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல படங்களில் டப்பிங் பேசியுள்ளார். பிரபல வில்லன் நடிகர் வித்யூத் ஜமாலுக்கு துப்பாக்கி மற்றும் அஞ்சான் படங்களில் டப்பிங் பேசியுள்ளார்.
அம்மா உணவகத்தில் சாப்பாடு
பெரியளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாக அபிநய் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சரியான கதைகளை தேர்வு செய்யாததால் தனது படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்தன . இதனால் தனது சினிமா பாதை சறுக்கியது. அதே நேரத்தில் தனது அம்மாவின் இறப்பு தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்ததாகவும் அபிநய் தெரிவித்துள்ளார். இவற்றுடன் தனது பொருளாதார நெருக்கடியை சமளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த அபிநய்க்கு லிவர் ஸ்லெரோசிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக என அபிநய் வாழ்க்கையில் தொடர் போராட்டங்களை சந்தித்து வந்துள்ளார்.
கல்லீரல் நோயுடன் போராட்டம்
அபிநயின் உடல் நிலை கவலைக்கிடமாக கிடப்பது ஊடகத்தில் பெரியளவில் பேசுபொருளானது. கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு ரு 27 லட்சம் தேவைப்படுவதாக அபிநய் தெரிவித்திருந்தார். ஒரு சில மட்டும் அவருக்கு பண உதவி செய்துவந்தனர். நடிகர் பாலா அபிநயின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ 1 லட்சம் வழங்கினார். அபிநய் குணமடைந்து அவர் மறுபடியும் ஆரோக்கியமாக திரும்புவார் என பலர் எதிர்பார்த்து வந்த நிலையில் அவரது இறப்பு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. தமிழ் திரையுலகினர் நடிகர் அபிநயின் இறப்பு தங்கள் அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள்.
சிந்திப்போமா?
நம் பலத்தைப் பற்றி மட்டுமே யோசித்து, அதைப் பற்றிப் பேசி பிரஸ்தாபித்து பலவீனங்களைக் கண்டு கொள்ளாமலேயே இருந்துவிடுவதுதான் வாழ்க்கையாக இருக்கிறது.
சமூக ஊடகங்கள் வந்த பிறகு அது இன்னமும் அதிகம். நம்முடைய தாழ்வுணர்ச்சியை எல்லாம் மறைத்துக் கொண்டு அடுத்தவனைக் கலாய்த்துச் சிரித்து வெறுமனே எண்டர்டெயின்மெண்ட்டாக மட்டுமே வாழ்க்கையை முட்டுச் சந்துக்குக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். மெல்ல மெல்ல இதையெல்லாம் விட்டு தப்பித்து விட வேண்டும்.
பலம், பலவீனங்கள் என எல்லாவற்றையும் அப்பட்டமாகப் புரிந்து கொண்ட வாழ்க்கைதான் தேவையானதாக இருக்கிறது. குறைகளை மூடி மறைத்து வெறுமனே பலங்களை மட்டும் கடை விரிக்கிற அல்லது பலம் எனக் கருதி பாவனை செய்கிற வெர்ச்சுவல் உலகத்திலிருந்து விடுபடுவதுதான் சரி.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். விருந்தினர்கள் வருகைகள் உண்டாகும். நீண்ட நாள் தடைப்பட்ட சில பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். வாகன மாற்ற முயற்சிகள் ஈடேறும். சொத்து வழக்கில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பிள்ளைகளின் வருங்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். நட்பு வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மிதுனம்
தாய் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரித்தை நினைத்த படி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கடகம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். தனம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். அதிகாரிகளிடத்தில் நிதானத்துடன் செயல்படவும். வியாபார நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்களில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
துலாம்
பொறுப்புகளால் உடலில் சோர்வுகள் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு பின்பே ஆதாயம் உண்டாகும். எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விருச்சிகம்
சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். சகோதரர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
நண்பர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மகரம்
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். புதிய நபர்களிடத்தில் அமைதி வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
முடிவுகள் எடுப்பதில் தாமதம் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு விமர்சனங்களை தோன்றி மறையும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். பழைய பிரச்சனைகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மீனம்
புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி வியாழக்கிழமை 13.11.2025
இன்று அதிகாலை 04.57 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று அதிகாலை 12.52 வரை ஆயில்யம் . பின்னர் மகம்.
இன்று பிற்பகல் 12.39 வரை பிராம்மியம். பின்னர் ஐந்திரம்.
இன்று அதிகாலை 04.57 வரை கௌலவம். பின்னர் மாலை 04.38 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று காலை 6.11 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.00 முதல் 01.00 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘மை டியர் சிஸ்டர்’ படத்தினை தயாரித்துள்ளனர். இதில் அருள்நிதிக்கு நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றிவேல், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக வெங்கட் ராஜன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். முழுக்க காமெடி எமோஷன் பாணியில் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.
’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் இணையும் படம் இதுவாகும். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பூரி ஜெகந்நாத் படத்தினை முடித்துவிட்டு,அ தற்போது பாலாஜி தரணீதரன் படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
அட்லி தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் இருவருடன் வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.
’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் இணையும் படம் இதுவாகும். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பூரி ஜெகந்நாத் படத்தினை முடித்துவிட்டு,அ தற்போது பாலாஜி தரணீதரன் படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
அட்லி தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் இருவருடன் வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதனை ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்து வருகிறார்.
60களில் மெட்ராஸ் மகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் போராட்டம் குறித்த கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ஜி.வி.பிரகாஷ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பராசக்தி படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடலை பாடியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் 100 இன்னும் ஸ்பெஷலாகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஹால்டன் பிராந்திய காவல் துறை (Halton Regional Police Service) அவசரமற்ற தொலைபேசி அழைப்புகளை நிர்வகிக்க தானியங்கி செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
911 அவசர அழைப்புகள் தொடர்ந்தும் மனித முகவர்கள் (live agents) மூலம் மட்டுமே பராமரிக்கப்படும் எனவும், ஆனால் அவசரமற்ற அழைப்புகள் இனி “SARA (Smart Answering Routing Assistant)” எனப்படும் நுண்ணறிவு குரல் உதவியாளர் மூலம் நிர்வகிக்கப்படும் எனவும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அழைப்பாளர்களிடம் சில குறுகிய கேள்விகள் கேட்டு, அவர்களின் கேள்வி அமைப்பால் தீர்க்கக்கூடியதா அல்லது நேரடி அதிகாரிக்கு மாற்ற வேண்டியதா என்பதை SARA தீர்மானிக்கும். இந்த உரையாடல் நேரடியாக பதிவு செய்யப்பட்டு உரை வடிவில் மாற்றப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசரநிலை ஏற்படும் சூழ்நிலை, அழைப்பாளர் ஆங்கிலம் பேச முடியாதது, மொழிபெயர்ப்பு தேவைப்படுவது, அமைப்பு கேள்வியை புரிந்துகொள்ளாதது, அல்லது சந்தேகத்திற்கிடமான நடத்தை கண்டறியப்பட்டால் — உடனடியாக மனித முகவருக்கு (live agent) மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SARA அமைப்பின் செயல்திறனை நாங்கள் நம்புகிறோம். தற்போது ஆண்டுக்கு சுமார் 1,60,000 அவசரமற்ற அழைப்புகள் கிடைக்கின்றன. இந்த புதிய தொழில்நுட்பம் அவற்றை வேகமாக கையாள உதவும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டொரோண்டோவில் ஒரு பெண்ணுக்கு மசாஜ் செய்த பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பதிவு செய்யப்படாத மசாஜ் நிபுணர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் டொரோண்டோ மற்றும் மார்கம் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
முதல் சம்பவம் ஆகஸ்ட் 12 அன்று ரோஸ்மவுண்ட் அவென்யூ மற்றும் வியா இட்டாலியா பகுதிகளுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் சந்தேக நபரின் வீட்டிற்கு மசாஜ் பெறச் சென்றிருந்தார். மசாஜ் முடிந்த பின், சந்தேக நபர் அவரை பாலியல் ரீதியாகத் தொட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் சில வாரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1 அன்று, பாதிக்கப்பட்ட பெண் மார்கம் நகரின் வுட்பைன் அவென்யூ மற்றும் ஹைவே 407 அருகிலுள்ள நீச்சல் கழகத்தில் அந்த நபரை மீண்டும் சந்தித்தார்.
அப்போது சந்தேக நபர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் ரீதியாகத் தொட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் செப்டம்பர் 6 அன்று பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர், “சாம்” என்ற பெயரில் சந்தேக நபரை அறிந்திருந்ததாக தெரிவித்தார்.
விசாரணையின் போது, அந்த நபர் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிபுணர் (RMT) அல்ல என்பதும் தெரியவந்தது.
ஒண்டாரியோ மாகாணத்தில் பதிவு செய்யப்படாத நபர்கள் “மசாஜ் தெரபிஸ்ட்” என்று தங்களை அழைப்பதற்கும், தொழில்முறை மசாஜ் சேவைகள் வழங்குவதற்கும் அனுமதி இல்லை.
டொரோண்டோவைக் சேர்ந்த 49 வயதான குவோக் வின் ட்ரான் (Quoc Vinh Tran) என்பவருக்கு இரண்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவை நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் என்பதையும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதே நபரால் வேறும் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் து குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.























