Quote of the Day

பழமொழி: அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
Senthuran 60
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
  • 127
  • 130
  • 128
·
Added a news

கனடாவில் வன்கூவரின் டவுன்டவுன் பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், வன்கூவர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ஹவ் தெருவில், இரவு 11.40 மணியளவில் வழியே சென்ற ஒருவர் 911-ஐ அழைத்ததினால் வெளியாகியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும், பிற அவசர சேவை ஊழியர்களும் சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வன்கூவர் பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் சார்ஜென்ட் ஸ்டீவ் அடிசன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்க முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து, ராப்சன் சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள தெருக்கள் காவல்துறையினரால் மூடப்பட்டன. இவ்வழக்கைச் சார்ந்த மேலதிக தகவல்களுக்கோ அல்லது உதவிக்கோ, வன்கூவர் காவல்துறையிரை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1166

டோரி தீவு, அயர்லாந்து

  • 1169
  • 1180
  • 1216
·
Added article

ஒருநாள், பாலசந்தர், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மூன்று பேரும் ஒன்றாக இருந்தபோது, நான் அங்கே போனேன்.

'வா, நாகேஷ்... உனக்கு தான் ஒரு, 'டூயட்' பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.

'துாத்துக்குடி பாஷை பேசுவியே, அதற்கு ஏற்றார்போல் ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன்...' என்றார், பாலசந்தர்.

'துாத்துக்குடியா...' என்று கேட்டு, பக்கத்தில் இருந்த, பஞ்சு அருணாசலத்திடம், 'பஞ்சு... பாட்டை எழுதிக்கோ...' என்று சொல்ல ஆரம்பித்தார், கண்ணதாசன்.

முத்துக் குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளா...

'அட... துாத்துக்குடின்னு மனுஷரிடம் சொன்ன மாத்திரத்தில், அதற்கு ஏற்றபடி பாடல் வரிகள் வந்து விழுகின்றனவே...' என்று, நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.

அத்துடன் விடவில்லை.

எம்.எஸ்.வி.,யிடம், 'நம்ம நாகேஷுக்கு, பாட்டுல ஸ்பெஷலா ஏதாவது செய்...' என்று, கவிஞர் கூறினார். தான் போட்டிருந்த, 'டியூனை' தாலாட்டு பாணியில் சற்றே நீட்டி, போட்டுக் காட்டினார்.

ஆளான பொண்ணுக பாக்கு வெக்கும் முன்னமே... என்று, தாலாட்டு வரிகளை சேர்த்து, இன்னும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

அனுபவி ராஜா அனுபவி படத்தில் நடித்து கொண்டிருந்த போது, கண்ணதாசனை சந்தித்தேன்.

'மெட்ராஸ் ரோடுல நடந்துகிட்டே பாடுறதா, ஒரு பாட்டு எழுத சொல்லியிருக்காங்க...' என்றார்.

'கவிஞரே... நான் தாராபுரத்துக்காரன்; மெட்ராஸ் வந்ததுலேர்ந்து, எனக்கு ஒரு பெரிய சந்தேகம்... எங்க ஊர்ல எல்லாம் கன்னு குட்டியை அவிழ்த்து, மாடுகிட்ட விடுவாங்க... அது ஓடி போய், பசு மாட்டு மடியில முட்டி முட்டி, பாலை குடிக்கும். அப்புறம் கன்னுகுட்டியை இழுத்து கட்டி விட்டு கறந்தால், மாடு, பால் சுரக்கும்.

'ஆனா, பாருங்கண்ணே... இந்த மெட்ராஸ்ல, கன்னு குட்டியோட தோலுக்குள்ளே வைக்கோலை அடைச்சு வெச்சிடறாங்க... அந்த வைக்கோல் கன்னு குட்டியை, மாடுகிட்ட எடுத்து போய், ரெண்டு நிமிஷம் காட்டறான்; மாடு பால் சுரக்க ஆரம்பிச்சிடுது... இது எப்படின்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு...' என்றேன்.

'நீ சொல்றது கூட சுவாரசியமா தான் இருக்கு... இதைக் கூட பாட்டுல வெச்சுக்கலாம்...' என்றார்.

'ம்... பஞ்சு, எழுதிக்க...' என்று சொல்லி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்... என்று ஆரம்பித்து, மடமடவென்று பாடல் வரிகளை சொல்லியபடியே வந்தவர், எனக்கு இனிய ஆச்சரியத்தை கொடுத்தார்...

வைக்கோலால கன்னுக்குட்டி, மாடு எப்போ போட்டது... கக்கத்துல துாக்கி வெச்சா கத்தலயே என்னது... என்று, அவர் சொன்னபோது, எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

'என்ன, நாகேஷ் நல்லா இருக்கா...' என்றார், கவிஞர்.

'அண்ணே... எனக்குள்ளே இருக்குற சந்தோஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியலை...' என்று சொல்லி, கை குலுக்கும் போது என் கண்ணில்

ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது. என்னால் மறக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் அவர்கள் என்று கூறினார் நடிகர் நாகேஷ்.

  • 1216
·
Added a post

இந்த தாவரங்கள் அனைத்தும் பெரிய அளவு மற்றும் அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறனுக்காக அறியப்படுகின்றன. அவை அனைத்தையும் பராமரிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது, அவை வீட்டுத் தோட்டங்களுக்கான சிறந்த தேர்வாக அமைகின்றன. 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதாகக் கூறப்படும் 5 தாவரங்கள் இங்கே உள்ளன.

1. பாம்பு செடிகள் பாம்பு தாவரங்கள் பிரபலமான உட்புற தாவரங்கள் ஆகும், அவை காற்றை சுத்திகரிக்கும் மற்றும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் திறனுக்காக அறியப்படுகின்றன.

2. கற்றாழை கற்றாழை ஒரு சதைப்பற்றுள்ள தாவரமாகும், இது இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது மற்றும் உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

3. வேப்ப மரம் வேப்ப மரங்கள் அவற்றின் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவை மற்றும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக நம்பப்படுகிறது.

4. பீப்பல் மரம் புனித அரச மரங்கள் என்றும் அழைக்கப்படும் பீப்பல் மரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக நம்பப்படுகிறது மற்றும் சில கலாச்சாரங்களில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

5. Pothos Pothos ஒரு பிரபலமான வீட்டு தாவரமாகும், இது இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் திறனுக்காக அறியப்படுகிறது.

  • 1227
·
Added a post

மருமகனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.

மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,

“என்னங்க, அம்மாவை காணோம்” என்றாள் பதற்றமாக மனைவி

கணவன் எழுந்தான். ஒரு பெக் விஸ்கியை போட்டுக் கொண்டு துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.

ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.

“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,

“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது உங்கம்மாகிட்ட இருந்து தப்பிச்சிடும்” என்றான்.

  • 1238
·
Added a post

பூண்டு:

5 அல்லது 8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.

ஆப்பிள்:

பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம்.

கொள்ளு:

ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும். கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

கறிவேப்பிலை:

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.

மிளகு:

வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

சீரகம்:

ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.

இஞ்சி:

ஏலக்காய்: இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

சோற்றுக் கற்றாழை:

சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து நன்கு கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்.

  • 1234

புவனகிரி ஒற்றை கற்கோட்டை

புவனகிரிக் கோட்டை அல்லது போங்கீர் கோட்டை என்பது, தெலுங்கானா மாநிலத்தின், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள புவனகிரி நகரில் அமைந்துள்ள ஒரு கோட்டை.

  • 1233
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்து தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே இருக்கும் அதிகரிக்கும். சோர்வு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

ரிஷபம்

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

மிதுனம்

உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். நினைத்த சில பணிகளை அலைச்சல்கள் ஏற்படும். சில நினைவுகளால் ஒரு விதமான இறுக்கங்கள் உண்டாகும். வியாபாரம் முதலீடுகளில் கவனம் வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். மறைமுகமான சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

கடகம்

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்கள் மேம்படும். அலுவல் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். பெருமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

சிம்மம்

முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும். பணி புரியும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

 

கன்னி

வெளியூர் வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். உலகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு செயல்களில் இருந்த இழுபறிகள் குறையும். உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உழைப்புகள் உண்டான மதிப்புகள் கிடைக்கும். மாமியார் உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். சமூக பணிகளில் ஆதாயம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

துலாம்

எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கணவன்–மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களின் அறிமுகம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

விருச்சிகம்

நினைத்த காரியத்தை முடிப்பதில் தாமதம் ஏற்படும். குழந்தைகளிடம் அனுசரித்து செல்லவும். சில உதவிகள் கிடைப்பதில் இழுபறிகள் ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பாராத சில இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சுமுகமற்ற சூழல்கள் அமையும். அலுவல் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். வழக்குகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பெரியவர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். சில பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படு நறுமண பொருட்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

  • 1410
·
Added a post

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 22.7.2025.

இன்று காலை 06.45 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று இரவு 07.52 வரை வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று மாலை 04.07 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று காலை 06.45 வரை தைத்தூலம். பின்னர் மாலை 05.21வரை கரசை. பிறகு வணிசை.

இன்று காலை 06.00 வரை அமிர்த யோகம். பின்னர் இரவு 07.52 வரை சித்தயோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=59&dpx=1&t=1753153943

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 1460

Good Morning....

  • 1479
·
Added a news

லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 1672
·
Added a post

சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

  • 1670
·
Added article

வாலி புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!

ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.

அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.

பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.

நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.

இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.

இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

"நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.

இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.

அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.

டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.

"கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

கதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.

"குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''

இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

திருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விரும்பினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.

சகுனத் தடைகள்

திருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி.

கோபாலகிருஷ்ணன்தான் காரை ஓட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

"ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.

குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, "குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.

"வாலி! இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே! மெட்ராசுக்கே திரும்பிடலாமா...?'' என்று கோபி என்னிடம் கேட்டார்.

"ஏன்? இதனால் என்ன?'' என்றேன் நான்.

"கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி.

"எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.

கோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது. அதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.

"சகுனம் சரியில்லை... வாங்க, வாலி! ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.

வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.

"இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.

"கோபி! எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ஆம் தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.

"ஏப்ரல் 7-ஆம் தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...?''

"அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.'' என் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.

கோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

திருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.

"ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.

"டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.

திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:

"எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ஆம் தேதி காலியாயிருக்கு...''

உடனே நான் கோபியிடம், "இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது!'' என்றேன்.

1965 ஏப்ரல் 7-ஆம் தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், "புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.

திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.

நான் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையுடையவன். சகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

தன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் "வாலி ரகசிய திருமணம்'' என்று செய்தி வெளியாகிவிட்டது.

அதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது. இதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.

  • 1682

கணவன் செய்து வைத்த வேலை.....

  • 1668
·
Added a post

படத்தில் இருப்பவர் ஜப்பானிய உடலியல் மூலக்கூறு உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி என்பவர். 2016 ஆம் ஆண்டில், அவர் உடலியல் மூலக்கூறில் "اAuto phagy" உடல் தன்னையே உண்ணுதல் பற்றிய மருத்துவ ஆய்வுக்காக நோபல் பரிசு வென்றார்.

அதாவது உடல் 8 மணி நேரத்திற்கு குறையாமலும் 16 மணி நேரத்திற்கு கூடாமலும் பசியுடன் இருக்கும்போது, அது தன்னைத்தானே உண்ணுகிறது, அல்லது உடல் செல்கள் தன்னைத்தானே உண்டு புதுப்பித்துக் கொள்கிறது என்ற மருத்து உண்மையை கண்டு பிடித்தார்.

மேலும் இந்த செயல்முறை பற்றி ஓசுமி கூறும் போது, உடல் பட்டினியாக இருக்கும் போது, உடலின் அனைத்து திசுக்களில்(இழையங்களும்) இருந்தும் விசேட புரதங்கள் சுரந்து, அவைகள் பெரும் துடைப்பங்கள் போன்று

சுற்றித் திரிந்து, உடலில் காணப்படும் இறந்த செல்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் சிதைவுற்ற செல்களை மறுசுழற்சி செய்து, புதுப்பித்துவிடுகின்றன.

இப்போதும் கூட மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை

வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உண்ணாமல் குடிக்காமல் பட்டினிக்கு உட்படுத்தி "பட்டினி சிகிச்சை"

அளித்து வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசின் கருப்பொருளும் இதுவாகவே இருந்தது.

நீங்கள் விரதம் இருங்கள் உங்களுக்கே நன்மையானதாகும்...

முழுமையாக நாள் முழுவதும் உண்ணாமல் இருப்பது என்பது சற்று எனக்கு சாத்தியம் இல்லை என்றாலும் பழ உணவை ஏற்று இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்

அது சரி ஏகாதசி என்று நீங்கள் முழுக்க முழுக்க உபவாசம் இருப்பவர்கள் என்றால் நிச்சயம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

  • 1684
  • 1671
·
Added a post
  • உலகிலேயே தலைநகரமே இல்லாத ஒரே ஒரு நாடு எது என்று பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
  • பொதுவாக, எந்தவொரு மாநிலத்திற்கும் அல்லது நாட்டிற்கும் ஒரு தலைநகரம் என்பது இருக்கும்.
  • அந்த நாட்டின் அல்லது மாநிலத்தின் முக்கியமான அரசு அலுவலகங்களும் அதன் தலைநகரில் நடத்தப்படுகின்றன.
  • உலகிலேயே தலைநகரமே இல்லாத அந்த ஒரே ஒரு நாட்டின் பெயர் நவ்ரு.
  • நவ்ரு மைக்ரோனேஷியாவின் தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய மற்றும் பெரிய தீவுகளின் குழுவால் ஆன ஒரு தீவுக்கூட்டம்.
  • இந்த நாடு 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து, இதுவரை எந்த தலைநகரமும் இல்லாத உலகின் ஒரே குடியரசு நாடு.
  • இங்குள்ள மக்களின் முக்கிய வருமான ஆதாரம் வனச் சுரங்கம். மேலும், தேங்காய் விளைவிப்பதன் மூலம் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
  • இந்த நாட்டின் தேசிய நாணயம் ஆஸ்திரேலிய டாலர். மேலும், இந்நாட்டின் முக்கிய நகரம் யாரென்.
  • குறிப்பாக, நவ்ரு நாடு ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது.
  • 1685
·
Added a post

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய மன்னர்கள் எவரும், ஒன்பது குதிரைகள் பூட்டிய வண்டியில் போகக் கூடாது என, சட்டம் இருந்தது. அதை மீறினால் தண்டனை விதிக்கப்படும்.

ஒருமுறை, இந்த சட்டத்தை மீறி, ஒன்பது குதிரைகள் பூட்டிய வண்டியில் ஏறிப் போய் விட்டார், குவாலியர் மகாராஜா. அதைக்கண்ட ஆங்கிலேய அரசு, அவர் மீது வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில் மகாராஜா சார்பில், ஜவஹர்லால் நேருவின் தந்தையான, அட்வகேட் மோதிலால் நேரு ஆஜரானார். முதலில், குதிரை வண்டியை ஓட்டியவனிடம் இருந்து சில விபரங்களை தெரிந்து கொண்டார்.

வழக்கு விசாரணையின் போது, குதிரை வண்டியை நீதிமன்றத்துக்கு கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஆங்கிலேய நீதிபதியும் அதற்கு அனுமதி வழங்கினார்.

வழக்கு விசாரணை வந்ததும், குதிரை வண்டி கொண்டு வரப்பட்டது. மோதிலால் நேரு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நீதிபதி வெளியில் வந்து, குதிரை வண்டியை பார்த்தார்.

'வண்டியில் ஒன்பது குதிரைகள் தான் பூட்டப்பட்டிருக்கிறது. ஆகவே, குற்றவாளிக்கு தண்டனை நிச்சயம்...' எனச் சொல்லி, தன் ஆசனத்தில் அமர்ந்தார்.

விசாரணை துவங்கியது.

'உங்கள் கட்சிக்காரரை நீங்கள் விசாரிக்கலாம்...' என, அனுமதி வழங்கினார், நீதிபதி.

தன் கட்சிக்காரரான, குவாலியர் மகாராஜாவை விசாரித்தார், மோதிலால் நேரு.

பின்னர், நீதிபதியை பார்த்து, 'யுவர் ஹானர்... என் கட்சிக்காரர் பயணம் செய்த குதிரை வண்டியில், ஒன்பது குதிரைகள் இருந்தது உண்மை தான். ஆனால், அந்த வண்டியில், பூட்டப்பட்டிருந்த, ஒன்பது குதிரைகளில், எட்டு குதிரைகள் ஆண். ஒன்று மட்டும் பெண் குதிரை.

'பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லாததை போல, பெண் குதிரையை கணக்கில் எடுத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லை. ஆகவே, என் கட்சிக்காரர் எட்டு குதிரைகள் பூட்டப்பட்ட குதிரை வண்டியில் தான் சவாரி செய்துள்ளார். அவர் குற்றமற்றவர். அவரை விடுதலை செய்ய வேண்டும்...' என கேட்டுக் கொண்டார், மோதிலால் நேரு.

மோதிலால் நேருவின், சமயோசித அறிவை எண்ணி வியந்த ஆங்கிலேய நீதிபதி, குவாலியர் மகாராஜாவை வழக்கிலிருந்து விடுவித்தார்.

  • 1689
·
Added a post
  • 1702
New People