இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வருமான வாய்ப்புகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனைப் பணிகளில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மிதுனம்
மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தோற்றப் பொலிவுகளில் மாற்றம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மறைமுகத் தடைகளை வெற்றிகொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். தடைப்பட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
வித்தியாசமான உணவுகளைத் தவிர்க்கவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். நாவல் விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுபம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
அனுபவம் வாய்ந்த செயல்களால் வாழ்க்கை சிறப்படையும். பணிபுரியும் இடத்தில் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். விலகி நின்றவர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் நிலவும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உயர்ரக வாகனங்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களின் இடத்தில் பொறுமை வேண்டும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டத்தில் அனுபவம் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
விருச்சிகம்
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வரவுகள் தேவைக்கு இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தவறிய சில வாய்ப்புகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். அவ்வப்போது சில விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்ட காரியத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தர்ம காரியத்தில் ஒருவிதமான ஈடுபாடு உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
மகரம்
உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அருள்தரும் வேள்விகளில் கலந்துகொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
உடன்பிறந்தவரிடம் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உயர்கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பொருளாதாரத்தில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயிர்த் தொழிலில் சிந்தித்துச் செயல்படவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
மீனம்
பிறமொழி மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தொலைதூரக் கல்வியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.6.2025.
இன்று மாலை 03.26 வரை துவிதியை. பிறகு திரிதியை.
இன்று இரவு 11.36 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
இன்று பிற்பகல் 01.53 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.
இன்று அதிகாலை 03.11 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.26 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று முழுவதும் ஈசித்த யோகம்.
நல்ல நேரம்:
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
Pratik Joshi என்பவர் கடந்த ஆறு வருடமாக லண்டனில் வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி வைத்தியர் Komi Vyas. 2 நாட்களுக்கு முன் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு லண்டனுக்கு குடிபெயரும் நோக்கத்தில் இன்று விபத்துக்குள்ளான விமானத்தில் புறப்பட்டுள்ளார்கள்.. 5 பேரும் இப்போது உயிருடன் இல்லை...
அவர்கள் இன்று விமானத்திற்குள் எடுத்த இறுதி selfie இது 💔
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை 🥲
குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது; பயணிகள் 242 பேர்!
இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆமதாபாத் விமான நிலையத்திற்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆமதாபாத் செல்ல இருந்த 3 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆமதாபாத்தில் 242 பயணிகளுடன் விபத்துள்ளான விமானத்தில் இந்தியர்கள் 169 பேர், பிரிட்டனை சேர்ந்தவர்கள் 53 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பேர் இருந்துள்ளனர். இரு விமானிகள், 10 பணியாளர்களும் விமானத்தில் பயணித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி பயணம் செய்துள்ளார் என்று சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கியதில் கரும்புகை வெளியேறி வருகிறது. விமான விபத்தைத் தொடர்ந்து, ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவாஜிக்கு வசனம் எழுதுவது என்றால் எழுத்தாளர்களின் பேனாக்கள் அதிக மையை செலவழிக்கும்.மற்ற நடிகர்களுக்கு எழுதுவதை விட அதிக வார்த்தைகளை அவர்கள் தேடவேண்டியிருக்கும்.
வார்த்தைகள் தான் வடிக்கப்படுகின்றன.சிவாஜி பேசும் போது
அனலாய் தெறிக்கப்படுகின்றன.
கஷ்டப்பட்ட தேடிய வார்த்தைகளுக்கு தங்கமுலாம் பூசியிருப்பார் நடிகர்திலகம் தன் நாவால்..
பராசக்தி ..
நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த என்ற சொல்லாடலில் அமைதியாக பயணிக்க ஆரம்பிக்கும் குணசேகரனின் நீதிமன்ற வாதம். பயனுள்ள அரசியல் தத்துவம் என்ற வார்த்தையை முடிக்கும் போது தமிழ்நாடு அதிர்ந்தது அன்றே.அந்த நீதிமன்ற காட்சியிலே சிவாஜியின் தனி மனித ஆட்சி தான்.இது சிங்கமடா! இதற்கு தீனி கொடுக்க புது மாமிசம்தான் படைக்க வேண்டும் என்று புறப்பட்டார்கள்
வசன கர்த்தாக்கள்.புதிது புதிதாய் யோசித்தார்கள். எழுதினார்கள்.இதற்கு அஸ்திவாரம் பராசக்தி...நீதிமன்ற காட்சியின் ஹைலைட் வசனம் ஓடினாள் ஓடினாள் ஓடினாள் ..இவர் பேசினார் பேசினார்..பேசித் தள்ளினார்.பார்த்தவர்களுக்கு மட்டுமன்றி கேட்டவர்களுக்கும் பற்றிக் கொண்ட நெருப்பு சிவாஜி பேசிய வசனங்கள்..
சேரன் செங்குட்டுவன்...
சிவாஜிக்கு எழுதிய வசனத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார் கலைஞர்.கோபித்துக் கொண்டார் சிவாஜி.சிவாஜியின் வருத்தம் , கோபம் பார்த்து கலைஞர் எழுதினார் சேரன் செங்குட்டுவனை.சிவாஜியை சாந்தப்படுத்த சளைக்காமல் எழுதித் தள்ளிவிட்டார் கலைஞர்.முடித்த போது பார்த்தால் 16 பக்கங்கள்.நீட்டினார் வசனங்களை சிவாஜியிடம் .
கலைஞர் ஏற்றிய வசனங்களை பார்த்து சிவாஜி, சவால் விடுவது போல இப்போது நான் என்ன செய்கிறேன் பார் என்று, 16 பக்க வசனங்களை ஒரே ஷாட்டில் ஊதி தள்ளுவது போல் பேசித் தள்ளினார் சிவாஜி ..
சிவாஜி பேசியதை பார்த்ததும் கலைஞர் நினைத்திருப்பார் ,இன்னும் பத்து பக்கங்கள் கூடுதலாக எழுதி இருக்கலாமோ என்று ...
இதுதான் ராஜா ராணி படத்தில் இடம்பெற்ற சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகம் ..
வீரபாண்டிய கட்டபொம்மன்...
பல காட்சிகள்..
ஒன்று மட்டும் இங்கே..
கட்டபொம்மனின் அரசவை. ஊர் தானியத்தை கொள்ளை அடித்தார் அவர் மந்திரி என்று ஒரு குற்றச்சாட்டு வருகின்றது. குற்றம் சொல்பவன் வெள்ளையன். மந்திரியை சிறை செய்ய தூதுவனை அனுப்புகின்றான்.
இந்தக் காட்சியில்தான்...
குற்றம் செய்தவர் மந்திரி என்று தெரிந்ததும் அவரை இடித்துரைப்பது போல் அவர் மூச்சு விடாமல் நம்மை பெருமூச்சு விட வைத்த அந்த வசனம், அதை அவர் பேசும் பாங்கு இருக்கின்றதே அதை என்னவென்று எழுத! தானாதிப்பதி பிள்ளை அவர்களே! நீவிர் சினம் காக்க ,என்று தொடங்கி ,ஏற்றமும் இறக்குமுமாக ,சீறாமலும் சினம் கொள்ளாமலும்,சிவாஜி பேசியதைக் கேட்டு நம் மார்பு ஏறும் இறங்கும்.ஒரு வித்தியாசமான வசனப் போக்கை தன் கற்பனை வளத்தால் ஆச்சர்யப்படுத்தியிருப்பார் சிவாஜி.
மனோகரா...
நீர் பொங்கும்.. அது கடல்..
சூறையாய் வீசும் ..அது காற்று..
மனோகராவில் அந்த தர்பார் வசனமும் அதே போல்தான்.அந்த இளம் காளையின் ஆவேச வார்த்தைகள் ஜல்லிக் கட்டுக் காளையின் ஆக்ரோசத்தை தான் நினைவு படுத்தும்.பொன்னும் மணியும் பூட்டி மகிழ்ந்து தங்கத்தாலான கட்டிலிலே சந்தனத் தொட்டிலிலே என்று தொடங்கி, குற்றமென்ன செய்தேன் கொற்றவனே, என்று முழக்கம் செய்ததும் ,வசனக் காட்சிகளின் உச்சங்களில் ஒன்று. அது சிவாஜிக்கு மட்டுமே ..
சிவாஜியால் மட்டுமே...
போர் புரியும் புரவல வேந்தன் போர்க்களத்திலும் பொருள் கொடுப்பான் பாணருக்கு.ஆனால் சிவனே பாணருக்கு பொருள் கொடுக்க கவிப்போர் புரிய நாடகமாட வருகிறான் பாண்டியன் அரசவைக்கு. புராணமான திருவிளையாடல் சொன்ன கதை ஒன்று இது..
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் சொல்லெடுக்க,
அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன் என சிவன் சினமாட, பார்க்கும் நாமோ பரவசத்தில் மெய்மறக்க
வாத வசனங்களில் தலையாதம் இது ..அந்த வசனங்களின் சொல் மறக்குமா?
சொன்னவனின் குரல் மறக்குமா?
சிவன் படைத்தான் சிவாஜியை ..
சிவாஜி மறக்கடித்தார் சிவனை ...
சிவனா? சிவாஜியா? தர்க்கப் போர்
வசனக் காட்சிகளின் உச்சம் நக்கீரன்-சிவாஜி
வசனக் காட்சிகள்....
பாசமலர்...
சிவாஜி ஜெமினி ,வசனங்களில் மோதும் காட்சி :
சீவிக் கொண்டிருப்பார் பென்சிலை ராஜசேகரன். அவர் பென்சிலையா சீவிக்கொண்டிருக்கிறார்? அடுத்து சொல்லப் போகும் வார்த்தைகளை தானே ? ஜெமினி கேட்கும் நியாயங்களும் சிவாஜி சொல்லும் பதில்களும் எந்த ஒரு பாசப்படைப்பிலும் காண முடியாத காட்சி, வசனங்கள் ..
தர முடியாது போ?
என்று ஒற்றைச் சொல்லில் காட்சியை முடித்திருக்கலாம் .சிவாஜி இருக்கும் போது அப்படிச் செய்ய முடியுமா? ஆரூர்தாசின் யோசனை கீறலில் விளைந்த வார்த்தைகளுக்கு கர்வம் கொள்ள வைத்தார் சிவாஜி..
ஒற்றை வார்த்தையில் கூற வேண்டுமானால் பாதுகாப்பு கருதி இவற்றிற்கு விமான நிறுவனங்கள் தடை விதித்து வருகின்றன. விமானங்கள் குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே பறக்கும்போது ஆக்சிஜன் மாஸ்க் அணிய வேண்டியிருக்கும். இந்த காரணத்திற்காகவே விமானிகளை தாடி வளர்க்க விமான நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.
12,500 அடிக்கு மேல் விமானங்கள் பறக்கும்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காற்றழுத்தம் குறையலாம். அந்த நேரத்தில் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டால் பெரும் ஆபத்து ஏற்படும். மேலும், தடையின்றி அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் தாடிகள் ஆக்சிஜன் வழங்குவதை தடைச் செய்யக்கூடாது என்ற ஒற்றை காரணமே எந்தவொரு விமான நிறுவனமும் அதிகளவில் தாடி வளர்க்க அனுமதிப்பதில்லை.
குறிப்பாக, தாடி அதிகம் இருந்தால், விமானிகளின் முகத்தில் மாஸ்க் இறுக்கமாக பொருந்தாது. இதனால் விமானிக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் வீணாகும் நிலை உருவாகும். இந்த வாதத்தை முன் வைத்தே பல நிறுவனங்கள் தாடி வளர்க்க விமானிகளை அனுமதிப்பதில்லை.
இந்த விஷயத்தில் அறிவியல் என்ன சொல்கிறது?
சமீபத்தில், கனடாவில் உள்ள சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம், தாடி வைத்திருக்கும்போது ஆக்ஸிஜன் முகமூடியைப் பயன்படுத்தினால் எத்தகைய விளைவுகள் உருவாகின்றன என்பதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது. இதற்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.
குழுவில் ஒருவருக்கு முக முடி அணிவிக்கப்படவில்லை. ஒருவருக்கு லேசான முக முடி இருந்தது. கடைசியாக ஒருவருக்கு தாடி போன்ற முக முடி அணிவிக்கப்பட்டது. ஆக்ஸிஜன் முகமூடியைப் பயன்படுத்தினால், ஆக்சிஜன் அளவு எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு சோதித்தனர்.
முகமூடிக்கும், தாடிக்கும் இடையில் வேறு ஏதேனும் எரிச்சலூட்டும் அனுபவம் ஏற்படுகின்றதா என்பது பற்றிய ஆய்வையும் அவர்கள் மேற்கொண்டனர். முடிவு, இல்லை என்றே தெரிய வந்தது. ஆமாங்க, தாடி வைத்திருப்பவர், தாடி இல்லாதவர் அனைவரும் ஒரே மாதிரியான அனுபவங்களை அனுபவித்திருக்கின்றனர்.
இருப்பினும், இந்த ஆய்வைக் கொண்டு அவ்வளவு எளிதில் பழங்காலம் தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் விதிகளை மாற்றிவிட முடியாது என விமானத்துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த விதிகளை மாற்றுவதைக் கருத்தில் கொள்வதற்கு முன்னர் கூடுதல் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். ஏனெனில் பாதுகாப்பு அவர்களின் (விமானிகளின்) முதன்மை அக்கறை என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தாடியை அனுமதிக்கும் விமான நிறுவனங்கள் இருக்கின்றதா?
விமானிகளை தாடி வைக்க உலகின் பல முன்னணி விமான நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. அதில் சில அமெரிக்க அல்லாத விமான நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே ஏர் கனடா. சில விமான நிறுவனங்கள் பிற நிறுவனங்களைச் சில தனித்துவமான விதிமுறைகள நடை வைத்திருப்பதும் குறிப்பிடத்தகுந்தது.
எந்த விமான நிறுவனங்கள் தாடியை அனுமதிக்கவில்லை?
அமெரிக்கா, தென்மேற்கு நாடுகள் மற்றும் யுனைடெட் போன்ற பெரிய நாடுகளில் எல்லாம் விமானிகள் தாடியை வைக்க அனுமதிப்பதில்லை.
எதிர்காலத்தில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணம் ஏர் கனடா. இந்த நிறுவனத்தை போல் இன்னும் பல நிறுவனங்கள் தங்களின் விமானிகளை தாடியை வளர்க்க அனுமதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பைலட்டுகள் தாரளமாக மீசையை வளர்க்கலாம் என்ற பல நிறுவனங்கள் கூறி வருகின்றன. இருப்பினும், பல விமானிகள் தங்களின் தாடியுடன் சேர்த்து மீசையையும் சரித்துவிடுகின்றனர். இருப்பினும், ஒரு சில விமானிகள் மீசை வைத்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.
சோப்பு குளியலுக்கு பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள். சிலர் இதை தினமும் 2 அல்லது 3 வேலை கூட பயன்படுத்துகிறார்கள். சோப்பு பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிடலாம். ஏனெனில் அவர்கள் சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயிறு குளியலுக்கு பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பயன்படுத்தும் சோப்பு உண்மையில் உங்களுக்கு நல்லதா? அல்லது நீங்கள் விளம்பரத்தை பார்த்து வாங்குகிறீர்களா? ஏனெனில் தற்போது சந்தையில் நூற்றுக்கணக்கான சோப்புகள் விற்பனையாகின்றன. எனவே உங்களது சருமத்திற்கு ஏற்ப சோப்பை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
உங்களது சருமம் அதிகமாக வறண்டு இருந்தால் சருமத்தில் எண்ணெய் சுரப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். ஆகவே, உங்களுக்கு கிளிசரின் சேர்ந்த சோப்புகள் தான் நல்லது. இது ஆட்டுப்பாலில் உள்ளன. எனவே வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆட்டு பாலில் தயாரிக்கப்பட்ட சோப்பு பயன்படுத்துங்கள். அது உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
உணர் திறன் சருமம் உள்ளவர்களுக்கு மருந்து கடைகளிலேயே பல சோப்புகள் கிடைக்கின்றன. இத்தகையவர்கள் வாசனை மற்றும் நிறம் இல்லாத சோப்புகளை தான் பயன்படுத்த வேண்டும். ஆகவே நீங்கள் சரும மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு சோப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள்.
சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக உள்ளவர்கள் ஆன்டி பாக்டீரியல் சோப்புக்களை வாங்கி பயன்படுத்துங்கள். குறிப்பாக கருவேப்பிலை சாலிக அமிலம் கொண்ட சோப்புகள் சருமத்தில் இருக்கும் அதிக எண்ணெய் பசையை போக்கும். இது தவிர, லாவண்டர் மற்றும் டீ ட்ரீ ஆயில் கலந்த சோப்பு கலையும் வாங்கி பயன்படுத்தலாம். வேண்டுமானால் நீங்கள் சோப்புக்கு பதிலாக பாடிவாஷ் கூட பயன்படுத்தலாம்.
உங்களது சருமத்தின் தேவைகளை பொறுத்து ஒரே செருப்பை பல வருடங்கள் பயன்படுத்தலாம். ஆனால் வயது, ஹார்மோன் மாற்றங்கள் காலநிலை ஆகியவை சருமத்தை மாற்றிவிடும். உதாரணமாக இளமையில் உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் அதற்கு ஏற்ப சோப்பை பயன்படுத்தியிருப்பீர்கள், ஆனால் வயதான பிறகு வறண்ட சருமத்திற்கு அந்த சோப்பு பொருந்தாது. எனவே உங்களது சருமத்தின் தேவைகளை அவ்வப்போது மதிப்பீடு செய்யுங்கள் மேலும் மருத்துவரின் ஆலோசையுடன் சோப்பை மாற்றுவது நல்லது.
மருந்து, மாத்திரை சாப்பிட்டு பக்க விளைவுகளை தேடிக் கொள்வதை விட தலைவலியை இயற்கையான முறையில் குணமாக்க வீட்டில் இருக்கும் சில கை வைத்தியங்களை பயன்படுத்தி பாருங்கள். விரைவான நல்ல பலன் கிடைக்கும்.
தலைவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நீரிழப்பு. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காதபோது, மூளை தற்காலிகமாக சுருங்கி, மண்டை ஓட்டிலிருந்து விலகி வலியை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, தலைவலி ஏற்படும்போது, உடனடியாக நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தலைவலியைத் தடுக்கவும் உதவும். வெறும் தண்ணீர் மட்டுமின்றி, இளநீர், மூலிகை தேநீர் மற்றும் பழச்சாறுகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களையும் அருந்தலாம்.
குளிர் ஒத்தடம்: டென்ஷன் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலிக்கு, நெற்றி, கண்கள் அல்லது கழுத்தின் பின்புறத்தில் ஒரு குளிர்ந்த ஒத்தடம் அல்லது ஐஸ் பேக்கை வைப்பது வலியைக் குறைக்க உதவும். குளிர்ச்சியானது இரத்த நாளங்களை சுருக்கி, வீக்கத்தைக் குறைத்து, வலி உணர்வைப் மழுங்கடிக்கும்.
சூடான ஒத்தடம்: சைனஸ் தலைவலி அல்லது தசை இறுக்கத்தால் ஏற்படும் தலைவலிக்கு, ஒரு சூடான ஒத்தடம் அல்லது சூடான நீர் கொண்ட பாட்டிலைப் பயன்படுத்துவது தசைகளைத் தளர்த்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் நிவாரணம் அளிக்கும்.
தூக்கமின்மை அல்லது தூக்கத்தின் தரம் குறைவது தலைவலியைத் தூண்டும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தினமும் 7-8 மணி நேரம் நிம்மதியான தூக்கம் பெறுவது தலைவலியைத் தடுக்க உதவும். படுக்கைக்குச் செல்லும் முன் நிதானமான வழக்கத்தைப் பின்பற்றுவது, இருண்ட மற்றும் அமைதியான படுக்கையறை சூழலை உருவாக்குவது, எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது போன்றவை சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
மன அழுத்தம் தலைவலிக்கு ஒரு பெரிய தூண்டுதலாகும். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், தியானம், யோகா அல்லது மன அமைதியை மேம்படுத்தும் பிற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து, தலைவலியைத் தடுக்க உதவும். தினமும் சில நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் செய்வது அல்லது வழிகாட்டப்பட்ட தியானம் செய்வது குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
இஞ்சி இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது குமட்டல் மற்றும் தலைவலி வலியைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தலைவலி வரும்போது, இஞ்சி தேநீர் குடிப்பது அல்லது புதிய இஞ்சித் துண்டுகளை மென்று சாப்பிடுவது நிவாரணம் அளிக்கும்.
மிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய் குளிர்ச்சியான உணர்வைத் தந்து, டென்ஷன் தலைவலியைப் போக்க உதவும். மிளகுக்கீரை எண்ணெயில் உள்ள மெந்தோல் இரத்த நாளங்களைத் தளர்த்தி, வலியைக் குறைக்கிறது. அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தும் முன், எப்போதும் கேரியர் எண்ணெயுடன் (தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்) நீர்த்துப் பயன்படுத்தவும்.
மிதமான அளவில் காஃபின் எடுத்துக்கொள்வது சில தலைவலிகளுக்கு நிவாரணம் அளிக்கும், ஏனெனில் இது இரத்த நாளங்களை சுருக்க உதவும். ஒரு கப் காபி, தேநீர் அல்லது சோடா குடிப்பது தலைவலியின் தீவிரத்தைக் குறைக்கலாம். இருப்பினும், அதிகப்படியான காஃபின் நுகர்வு தலைவலியைத் தூண்டலாம் அல்லது காஃபின் திரும்பப் பெறுவதால் தலைவலி ஏற்படலாம். எனவே, காஃபினை மிதமாகப் பயன்படுத்துவது அவசியம்.
மெக்னீசியம் குறைபாடு ஒற்றைத் தலைவலிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். மெக்னீசியம் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் நரம்பு செயல்பாடுகள் உட்பட உடலில் பல முக்கிய பணிகளுக்குத் தேவையான ஒரு கனிமமாகும். கீரைகள், பாதாம், அவகேடோ, டார்க் சாக்லேட், முழு தானியங்கள், பூசணி விதைகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது தலைவலியைத் தடுக்க உதவும்.
இந்த இயற்கை வைத்தியங்கள் தலைவலிக்கு உடனடி நிவாரணம் அளித்து, மருந்துகளைத் தவிர்ப்பதற்கு உதவும். இருப்பினும், தலைவலி தொடர்ந்து இருந்தால் அல்லது தீவிரமான அறிகுறிகளுடன் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.
குஜராத்தின் மேகனி நகரில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான காரணம் தெரியவரவில்லை. விமானம் விபத்துக்குள்ளான இடம் ஒரு குடியிருப்பு பகுதி என்று கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளானது அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் என்றும் விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பயணிகள் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதிக்கான அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. விமான நிலையத்திலும் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனை குஜராத் மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறையும் ஏர் இந்தியா நிறுவனமும் உறுதி செய்துள்ளன. பிற்பகல் 1.30 மணி அளவில் புறப்பட்ட விமானம், திடீரென வேகத்தைக் குறைத்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. விபத்துக்குள்ளானது போயிங் நிறுவனம் தயாரித்த போயிங் 787-8 விமானம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
உள்துறை அமைச்சர் அமித் ஷா விமான விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு, அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து வருவதாக அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார்.
தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், மீட்புப் பணிகள் பற்றி தொடர்ந்து தகவல்களைப் பெறுமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் ராம்மோகன் நாயுடுவின் அலுவலகம் கூறியுள்ளது.
90 பேர் கொண்ட மீட்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். சேதத்தின் அளவைக் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. விமானம் விழுந்த குடியிருப்புப் பகுதியில் இருந்து பிரமாண்ட தீப்பிழம்பு எழுவதையும், அதைத் தொடர்ந்து மிகப்பெரிய கரும்புகை கிளம்புவதையும் காண முடிகிறது.