·   ·  1 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 113
  • More

காளையிடம் பிடிபட்ட மனிதன்

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

கனடாவின் மில்டனில் ஸ்டீல்ஸ் அவென்யூ 1130-ல் அமைந்துள்ள “Massage Addict” கிளினிக்கில் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிபுணர் ஒருவர், ஒரு பெண் மீது மசாஜ் சிகிச்சை செய்யும் போது பாலியல் வன்முறை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் ஒரு வயது முதிர்ந்த பெண் எனவும், சிகிச்சை நேரத்தில் இந்த வன்முறை நடந்ததாகவும் புகார் செய்துள்ளார்.

மிசிசாகாவில் வசிக்கும் 52 வயதுடைய அய்மன் அல் காசம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் பொலிசாருக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 10
·
Added a news

இலங்கையின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை (30) காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

  • 11
·
Added a news

ஜூலை 1, 1867 அன்று, கனடா என்று அழைக்கப்படும் ஒரு டொமினியனில் 3 காலனிகளை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான சட்டத்தில் கையெழுத்திட்டதன் மூலம் நாடு சுதந்திரத்திற்கான முதல் படியை எடுத்தது.

கனடா முழுமையாக சுதந்திரமாகி இன்றைய நாட்டிற்கு வளர 1867 ஆம் ஆண்டில் அந்த அதிர்ஷ்டமான நாளுக்குப் பிறகு இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும், கனடா தினம் நாட்டின் தேசிய விடுமுறையாக கொண்டாடப்படுகிறது.

 கனடா தினம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. ஜூலை 1, 1867 இல், நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக் மற்றும் கனடா மாகாணம் - இப்போது ஒன்ராறியோ மற்றும் கியூபெக் - பிரிட்டிஷ் வட அமெரிக்கா சட்டத்தில் கையெழுத்திட்டன, பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தின் பெயர் மாற்றப்பட்டன.

ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, ஜூன் 20, 1868 அன்று, கவர்னர் ஜெனரல் லார்ட் மாங்க், கனடாவில் உள்ள அனைத்து ஹெர் மெஜஸ்டியின் அனைத்து பாடங்களையும் ஜூலை 1 அன்று கனடா தினத்தைக் கொண்டாடுமாறு ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.

  • 14

விருப்பத்தோடு பழகுவோரிடம்

விரும்பி நட்பு கொள்ளுங்கள்...

அது உங்களை இன்னும் இன்னும் அழகாக்கும்.

நல்வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்.

  • 16

எப்பேர்ப்பட்ட முதலாளி.... அட இவரைப்போல் முதலாளி கிடைப்பாரா?

  • 18
·
Added a post

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.

ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.

நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன்.

எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு,

ராணி“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”

அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன்.

பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான்.

எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.

அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று.

நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

மனித உணர்வுகளை

நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் .

நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும்.

இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.

அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும்.

அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள்.

அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.

யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.

  • 19
  • 19
·
Added a post

கம்பை ஊன்றியபடி தள்ளாடி உள்ளே வந்தார் சபேசன்.. வயது.90.

அவர் வீட்டு புரோகிதர்.. கிச்சாமி கம்பீரமாக நாலு சிஷ்யர்கள் புடை சூழ கூடத்தில் அமர்ந்திருந்தார்.

வாங்கோ சபேசன்..மாமா.. உங்க வீட்Lடுல சமீபத்துல எந்த ஸ்ரார்த்தமும் கிடையாதே.. என்ன விஷயம்?

ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்.. நீங்கோ செத்துப் போனவாளுக்கு 13 நாள் காரியம் பண்ண எத்தனை பீஃஸ் வாங்கறேள்..?

குறைஞ்ச பட்சம் சாதாரணமா செஞ்சா ஒன்னரை லட்சம் ஆகும். யாருக்கு?

எனக்குத்தான்.. என்று முகத்தை துடைத்துக் கொண்டார்.. சபேசன்..

சாஸ்த்திரிகளுக்கு தூக்கி வாரி போட்டது.. என்ன ஆச்சு உங்களுக்கு?

என்னோட ஜாதகம் பார்த்தேன்.. இன்னும் ஒரு மாசம்தான் இருப்பேன்..என் பையனும் ரிடையர் ஆயிட்டான்..பென்ஷன் கிடையாது சொற்ப வருமானத்தில் என்னை நல்லா பார்த்துக் கிறான்.. நான் இருக்கற வீடு ஒன்னுதான் சொத்து.. அவன் ஆத்துக்காரிக்கும் விவரம் பேறாது..கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு இருக்கா..நீங்கோ செலவை இழுத்துவிட்டுட்டா..பாவம் அவன் வீட்டுல மேல கடன் வாங்கி செய்வான்.. என் மேல அவனுக்கு பாசம் அதிகம்..

கண்களைத் துடைத்துக் கொண்டார் சபேசன்..

மஞ்சள் பையைதிறந்து ஒரு 500 ரூபாய் கட்டை எடுத்து அவர் முன்னால் வைத்தார். இது நான் சிறுக சிறுக சேமிச்சது.. நான் போயிட்டா என் பையனுக்கு பேரம் பேசத் தெரியாது.. பேரம்னு எடுக்காம ரிக்வஸ்ட்டா எடுத்துக் கோங்கோ.. இந்த ஐம்பதாயிரத்துலயே ஒரு மந்திரம் விடாம சொல்லி என்னை வழி அனுப்பிடுஙகோ.. உங்களுக்கு புண்ணியமாக போகும்..

கிச்சாமி சாஸ்த்திரிகள் ஆடிப்போய்விட்டார். இந்த பணத்தை உள்ள வையுங்கோ.. உங்க வீட்டு கல்யாணம் கிரகப்பிரவேசம் எல்லாம் பண்ணி வச்சிருக்கேன்.. அப்படி ஒன்னு நடந்தாகாரியத்தை சும்மாவே நடத்திக் கொடுத்துடறேன்.. என்றார்.

இல்லே..தட்சணை இல்லாம காரியம் பண்ணக் கூடாது.. என் ஆத்மா சாந்தியடையாது.. இந்த பணத்தை எடுத்துக்கோங்கோ..என் பையன்கிட்ட உங்கப்பா எல்லாம் தந்துட்டார்னு சொல்லிடுங்கோ. என்ன நல்ல படிடா.. அப்பத்தான் பெரிய உத்தியோக கிடைக்கும்னுசொன்னேன்.. கேக்கலை..

ஆனா அவன் என் செல்ல புள்ளை..கண்களை துடைத்தபடியே

மெல்ல எழுத்து தடியை ஊன்றி நடக்கத் தொடங்கினார். சபேசன்.

  • 20
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

ரிஷபம்

மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மிதுனம்

உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்ட காரியத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

பணிபுரியும் இடத்தில் அதிகாரிகள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலை காணப்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

சிம்மம்

எந்த ஒரு பணியிலும் விவேகத்தோடு செயல்படவும். சில நினைவுகளால் மனதில் இருக்கங்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் கோபப்படாமல் செயல்படவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் அணுகுவது நல்லது. அலுவலகத்தில் மறைமுக நெருக்கடிகள் தோன்றி மறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

தனவரவில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும், அன்யோன்யமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். மனை விஷயங்களில் இருந்து வந்த தடை, தாமதங்கள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சேமிப்புகள் மூலம் ஆதாயகரமான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி விஷயங்களில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பயணம் மூலம் புதுவிதமான அனுபவம், லாபமும் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மகரம்

மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாழ்க்கை துணைவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். பணி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கும்பம்

மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். நினைத்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும், ஒத்துழைப்பும் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மீனம்

எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. சூழ்நிலை அறிந்து செயல்படவும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

  • 42
·
Added a post

விசுவாவசு வருடம் ஆனி மாதம் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1.7.2025.

இன்று பிற்பகல் 01.49 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று பிற்பகல் 12.33 வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று இரவு 08.09 வரை வியதீபாதம். பின்னர் வரியான்.

இன்று அதிகாலை 01.29 வரை கௌலவம். . பின்னர் பிற்பகல் 1.49 வரை தைத்தூலம். பின்பு கரசை.

image_transcoder.php?o=sys_images_editor&h=34&dpx=1&t=1751349061

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 49

மெதுவடை

  • 102
  • 122
  • 123

முடிவை நினைத்து கவலை கொள்ளாமல் முயற்சியில் கவனம் செலுத்தினால் வெற்றி உறுதி...

இனிய காலை வணக்கம்

  • 124
·
Added a post

ஆப்பிள்:

ஆப்பிள் வாங்கும் போது அதன் நுனிப்பகுதியில் சுருக்கம் இல்லாமல் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும், இவ்வாறு இருப்பது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். இதுவே நுனிப்பகுதி சுருங்கி சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும் ஆப்பிள் பளபளப்பாக இருந்தால் அதில் மேலாக மெழுகு தடவப்பட்டிருக்கும் .அதனால் லேசாக கீரி பார்த்து வாங்க வேண்டும்.

மாதுளை;

மாதுளைகளில் கர்நாடகா மற்றும் திண்டுக்கல்லில் இருந்து விலையும் பழங்கள் சுவையாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பழங்கள் சுவை குறைவாகவும் இருக்கும் .மாதுளை அதிக பிங்க் நிறத்தில் இருந்தால் அதில் சாயம் கலக்கப்படுகிறது .மேலும் அதன் மேல் தோலில் கரும்புள்ளிகள் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அது உள்ளே விரைவில் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது.

திராட்சை;

கருப்பு திராட்சையில் அதிக அளவு பூச்சி மருந்துகள் தெளிக்கப்படுகிறது .இதனால் அதன் நிறம் சாம்பல் நிறமாக இருக்கும் அவ்வாறு இருந்தால் அவற்றை முடிந்தவரை வாங்குவதை தவிர்த்து விட வேண்டும் .

ஒருவேளை வாங்கி விட்டால் அதனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்த நீரில் நன்கு கழுவி மீண்டும் ஐந்து முறை கழுவி பிறகு சாப்பிட வேண்டும். மேலும் திராட்சையின் காம்புகள் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். திராட்சை பழத்தை தூக்கும் போது அதிலிருந்து பழங்கள் கீழே விழாமல் இருக்க வேண்டும்.

பப்பாளி பழம்;

பப்பாளி பழம் வாங்கும் பொழுது அதன் மேல் கீறல் இருக்கக் கூடாது. மேலும் விதை உள்ள பழங்களாக கேட்டு வாங்க வேண்டும்.

மாம்பழம்;

மாம்பழம் வாங்கும் பொழுது அதனை நுகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். மாம்பழத்தின் வாசனை வந்தால் அது இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது இல்லையெனில் அது கல் வைத்து பழுக்க வைத்த பழமாக இருக்கும் .அதேபோல் அதன் மேல் தோலில் ஆங்காங்கே சொரசொரப்பாகவும் , கருமை நிறமும் படிந்திருக்க வேண்டும் .முழுவதுமாக ஒரே நிறமாக இருக்கக் கூடாது.

தர்பூசணி;

தர்பூசணி பெரிதாகவும் இல்லாமல், சிறிதாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். அதில் வெடிப்பு, கரும்புள்ளிகள் ,கீறல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் . தட்டிப் பார்த்தால் சத்தம் வரவேண்டும்.

ஆரஞ்சு;

ஆரஞ்சு பழம் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது கமலா ஆரஞ்சு ஆகும். இந்த ஆரஞ்சை மேல் மற்றும் கீழ் பகுதியை அழுத்தினால் கடினமாக இருக்க வேண்டும்.

அண்ணாச்சி பழம்;

அண்ணாச்சி பழத்தை வாங்கும் போது அதன் அடிப்பகுதி கனமாகவும் அதன் இலைப்பகுதி ஆங்காங்கே பழுப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இவ்வாறு பழங்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

  • 244
  • 246
·
Added a post

ஒருவர் இறந்தார் என்பதை ஆங்கிலத்தில் Died அல்லது Passed away எனச் சொல்வார்கள்.* *அதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியாது.

தமிழ் மொழியில் மட்டும் சரியாகப் பேசினால்* *எழுதினால் அதனை அறிய முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

1) காலமானார் - வயதாகி இறப்பது

2) மரணமடைந்தார் - மாரடைப்பினால் இறப்பது

3) அகால மரணம் - விபத்துகளால் இறப்பது

4) உயிர் நீத்தார் - தற்கொலைச் செய்து கொண்டு செய்வது

5) கொலையுண்டார் - கொலையாகி இறப்பது

6) துயில் எய்தினார் -:தூக்கத்தில் உயிர் போகுதல்

7) இயற்கை எய்தினார் - பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல் தீ விபத்து , பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல் , காற்றுப் புயலில் மூச்சு விட முடியாமல் போகுதல், நீர் - ஜல சமாதி ஆகுதல் , ஆகாயம் - விமானம் , ஹெலிகாப்டர் போகும் போது விபத்து ஏற்பட்டு இறப்பது .

இதுதான் தமிழ் மொழியின் பெருமை.

  • 253
·
Added a post

பெரியாச்சி (அ) பேச்சிஅம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள்.

கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள்.

அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள்.

(முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள்.

அவர்கள் கர்ப்பம் அடைந்தவர்கள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து, குழந்தை நல்ல முறையில் பிறக்க கர்பிணிப் பெண்களின் வயிற்றில் எண்ணைத் தடவி உருவி விட்டு சுகப் பிரசவம் அடைய தேவையானவற்றை செய்து வந்தார்கள்.

அது மட்டும் அல்ல வீடுகளில் வயதான மூதாட்டியின் அறிவுரைகள் முக்கியம் என்பதினால் அவர்களை அன்புடன் ஆச்சிமார்கள் என்றும் அழைத்து வந்தார்கள்.

ஆச்சிமார்கள் கர்பிணிகள் எந்த முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றை முறையாக தெரிந்து வைத்துக் கொண்டு இருந்ததினால் அவர்களும் மரியாதையான பொருளில் ஆச்சிமார்கள் என்று அழைப்பார்கள். அவர்களை கர்ப்பமுற்ற பெண்கள் வீட்டில் உள்ளவர்கள் தம் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களது உதவியைப் பெற்றுக் கொள்வார்கள்.

பயங்கரமான உருவைக் கொண்டு தன் கையில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டும், தொடையில் தனது கைகளினால் ஒரு பெண்மணி வயிற்றைக் கீறிய நிலையிலும் , கால் பாதத்தின் கீழ் ஒரு மனிதன் மிதிபட்டுக் கிடக்கவும் தோற்றம் தரும் பெரியாச்சி பார்ப்பதற்குத்தான் பயங்கரமானவளே தவிர அவளை வணங்கித் துதிப்போருக்கு அவள் அபாரமான கருணை காட்டுபவள்.

அவளை வேண்டி வணங்குபவர்களுக்கு அளவில்லா உதவி செய்பவள்.

பெரும்பாலான அவளது ஆலயங்களில் அவளுக்கு காவலனாக மதுரை வீரன் போன்றவர் காட்சி தருகிறார்.

அவளது தோற்றம் பற்றியும், பூமிக்கு வந்ததைப் பற்றியும் ஒரு கிராமியக் கதை உள்ளது.

அந்தக் கதையின்படி ஒரு காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வல்லராஜா எனும் பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான்.

அவன் ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்களுக்கு மட்டும் அல்ல, ரிஷி முனிவர்களுக்கும் அவனால் பெரும் தொல்லைகள் தோன்றின.

அவன் ராக்ஷசர்களையும், அசுரர்களையும் தன் கையில் வைத்து இருந்தான்.

அதனால் அவனை யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அதே நேரத்தில் அவனுக்குத் துணையாக இருந்த அரக்கர்களும், அசுரர்களும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெரியாச்சி அம்மனை துதித்து வந்தார்கள்.

அப்படி வாழ்ந்து கொண்டு கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வந்தவன் ஒருமுறை ஒரு முனிவர் மூலம் ஒரு சாபத்தைப் பெற்றான். அவளுக்குப் பிறக்க இருந்தக் குழந்தை பிரசவம் ஆனதும் அந்தக் குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான்.

அவனது நாடும் அழிந்து விடும். மேலும் அவனது குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தித் தரும்.

மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால் அதற்குப் பிறகு ஒன்றும் ஆகாது.

அந்த மன்னனுக்கு வெகு காலம் குழந்தை பாக்கியமே இல்லாமல் இருந்தது.

ஒரு முறை மனைவி கர்ப்பவதி ஆயினாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டு விட்டால் தனக்கு மரணத்தை சம்பவிக்கும் என்றாலும், அந்த சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு ஆபத்து கிடையாது என்பதை தெரிந்து வைத்து இருந்தவன் என்ன செய்வது என தவித்தான்.

ஆனால் அவன் அழிய வேண்டும் என்ற விதி இருந்ததினால் அசுரர்களையும் அரக்கர்களையும் அடக்கி வைத்து இருந்த பெரியாச்சி அம்மன் அவன் நாட்டில் ஒரு வயதோகிய பெண்மணி உருவில் வலம் வந்து கொண்டு இருந்தாள்.

அந்த காலங்களில் கட்டில்கள் கிடையாது.

சொகுசான மெத்தைப் போன்றவையும் கிடையாது. பிரசவம் என்றாலே பிரசவத் தீட்டுப் படாமல் இருக்க பிரசவ வேளை வந்ததும் வீடுகளின் மூலைகளில் அவர்களை தனியாக இருக்கச் சொல்வார்கள்.

தரையில் பாயின் மீதுதான் இருந்து பிரசவிப்பார்கள்.

அத்தனைக் கட்டுப்பாடு இருந்த காலம் அது.

அதனால்தான் பிரசவம் பார்க்க என்றே அனுபவம் மிகுந்த வயதான ஆச்சிகளை கர்பிணிகளுக்குத் துணையாக இருக்க வைப்பார்கள்.

அரசன் தன்னுடைய படையினரை அனைத்து இடத்துக்கும் அனுப்பி மனைவிக்கு பிரசவம் பார்க்க தக்க துணையைத் தேடினான்.

ஆனால் யாரும் அவனுக்கு உதவ முன் வரவில்லை. ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது.

பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் எனக் கவலை அடைந்த மன்னன் உடனடியாகக் கிளம்பி தானே ஊருக்குள் சென்று நல்ல ஆச்சியை பிரசவத்திற்காக தேடிக் கொண்டு இருந்த போது மன்னனின் முன்னால் ஒரு வயதான பெண்மணியின் உருவில் இருந்த பெரியாச்சி அம்மன் தென்பட்டாள்.

பெரியாச்சி அம்மன் ஒரு தெய்வப் பிறவி என்பதை அறியாமல் அவளது உதவியை மன்னன் நாடினான்.

பெரியாச்சி அம்மனும் அவனது மனைவிக்கு பிரசவம் பார்த்து அவன் குழந்தையின் உடல் முதலில் பூமியில் படாமல் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டு அவனிடம் ஒரு நிபந்தனைப் போட்டாள்.

அந்த நிபந்தனையின்படி அவள் அவனுக்குப் பிறக்கும் குழந்தையின் உடல் பூமியில் படாமல் வைத்துக் கொண்டு இருந்து விட்டால் அவளுக்கு ஏராளமான பொருட்களைத் தருவதாக உறுதி அளித்தான்.

குழந்தைப் பிறந்தது.

மன்னனின் மனைவியின் அருகிலேயே அமர்ந்து கொண்டு இருந்த பெரியாச்சி அம்மனும் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

காலக்கெடு முடிந்ததும், அரசன் வந்து அந்த குழந்தையை தன் மனைவியிடம் தருமாறு கேட்டான்.

ஆனால் பெரியாச்சி அம்மனோ குழந்தையை தன் கையிலேயே வைத்துக் கொண்டு முதலில் தனக்குத் தர வேண்டிய பொருட்களைக் கொண்டு வருமாறு கூறினாள்.

ஆணவம் பிடித்த மன்னனோ, ஒரு வயதான பெண்மணியினால் தன்னை என்ன செய்ய முடியும் என இறுமாப்புக் கொண்டு அவளுக்குக் கூறியபடி ஒன்றும் தர முடியாது எனவும், குழந்தையைக் கொடுக்காவிடில் உன்னைக் கொன்று விடுவேன் என கோபமாகக் கூறிய வண்ணம் உருவிய வாளுடன் பெரியாச்சியின் அருகில் சென்றான். அவ்வளவுதான், ஆத்திரம் அடைந்த பெரியாச்சி நான்கு கைகளுடன், கோரமான உருவைக் கொண்டு பயங்கரமான கண்களுடன் தன் சுய உருவைக் காட்டியபடி அங்கு அமர்ந்தாள்.

ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பிடித்தாள்.

இன்னொரு கையினால் மன்னனின் மனைவியை தூக்கித் தன் தொடை மீது வைத்துக் கொண்டு அவள் வயிற்றைக் கிழித்து அவள் உடலின் உட் பாகங்களைக் கடித்துத் தின்றாள்.

அதற்கிடையில் தன் அருகில் உருவிய வாளுடன் வந்த மன்னனை தன் காலடியில் தள்ளி அழுத்திக் கொன்றாள்.

அவன் படையினரை அவளது அடிமைகளான அசுரர்கள் துரத்திக் கொன்றார்கள்.

இப்படியாக கொடுங்கோல் மன்னனின் கதையை அவன் வம்சத்தோடு முடித்ததும் ஆக்ரோஷமாக நின்ற அவளைக் கைகூப்பி வணங்கி நின்ற மக்கள் அவள் கோபத்தைத் தணித்துக் கொண்டு தம்மை காப்பற்றி அருளுமாறு வேண்டிக் கொள்ள அவளும் கோபம் தணிந்து தன்னைப் பற்றிய உண்மையைக் கூறினாள்.

தானே காளியின் அவதாரம் எனவும், இனி தன்னைத் துதித்து வணங்கி வந்தால் தான் குடிகொள்ளும் ஊரைக் காப்பேன் எனவும், அவரவர் வீடுகளில் உள்ள கர்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் தான் உதவுவேன் என்றும், அவர்களுடைய குழந்தைகளுக்கு தானே பாதுகாவலராக இருப்பேன் எனவும் உறுதி தந்தாள்.

இப்படியாக தன்னை அடையாளாம் காட்டிக் கொண்டவள் பல கிராமங்களில் கிராம தேவதையாகவும், நகரங்களில் நகர மக்கள் வணங்கும் பேச்சி அல்லது பெரியாச்சி அம்மனாகவும் விளங்கி வருகிறாள்.

அவள் ஆடி மாதத்தில் பெருமளவு ஆராதிக்கப்படுகிறாள்.

கர்பிணிகளை அவள் ஆலயத்தில் அழைத்துச் சென்று அவள் ஆசிகளை வேண்டுகிறார்கள்.

குழந்தைப் பிறந்ததும், தொட்டில் போட்டு பெயர் வைக்கும் முன் முதலில் அவள் சன்னதிக்கு எடுத்துச் சென்று குழந்தையை அவள் சன்னதியில் கிடத்தியப் பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து மற்ற சடங்குகளை செய்கிறார்கள்.

பெண் குழந்தைகளுக்கு காது குத்தல் மற்றும் மொட்டைப் போடுதல் போன்ற சடங்குகளையும் அவளை வேண்டிக் கொண்டு அவள் ஆலயத்தில் செய்கிறார்கள். அவளை சிலர் மாரியம்மனின் அவதாரமாகவும் பார்க்கின்றார்கள்.

கிராமப்புறங்களில் உள்ள அவளது சில ஆலயங்களில் அவளுக்கு மிருக பலிகள் தரப்படுகின்றன. ஆனால் நகர்புற ஆலயங்களில் சுத்த சைவப் பிரசாதங்களையே படைக்கின்றார்கள்.

  • 253
·
Added a post

காலையிலே எழுந்தவுடனே சில சிறந்த பழக்கங்களை கடைப்பிடித்தால், உடலும் மனதும் புத்துணர்ச்சியோடு செயல்படும். அத்தகைய சில வழக்கங்களைப் பார்ப்போம்:

1. உலர் திராட்சை ஊறவைத்த நீர்

இரவில் ஊறவைத்த சில உலர் திராட்சைகளை காலையில் வெறும் வயிற்றில் உள்ளடக்கிய நீருடன் அருந்துவது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தரும். இது இரும்புச்சத்து உறிஞ்சுவதை தூண்டி, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

2. அலைபேசி நோக்கத்தைத் தவிர்க்கும் பழக்கம்

எழுந்தவுடனே கைபேசி காணும் பழக்கம், மனதை சிதறடிக்கும். முதல் 30 நிமிடங்கள் தொலைபேசியைத் தவிர்த்து, மெதுவான மூச்சுவிடும் பயிற்சி அல்லது அமைதியான அமர்வு மன நலத்திற்கு உதவும்.

3. வெதுவெதுப்பான நீர் அருந்தல்

எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பான நீரை காலை நேரத்தில் குடிப்பது, உடலை சுத்தம் செய்து, நச்சு கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

4. சீரான காலை உணவு

முழுத்தானியங்கள், முட்டை, பழங்கள் போன்றவைகளை உள்ளடக்கிய காலை உணவு, அன்றைய நாளை சிறப்பாக செயல்படத் தேவையான சக்தியை அளிக்கின்றது. எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

5. மன அமைதி பயிற்சி

தினமும் 5 நிமிடங்கள் தியானம், நிசப்தம், அல்லது மென்மையான இசை மூலம் மனநிலையை நிலைநாட்டலாம்.

6. சிறிய உடற்பயிற்சி அல்லது யோகா

குறைந்தது 5 நிமிடங்கள் ஏதாவது உடல் இயக்கங்களைச் செய்வது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தினசரி செயல்பாடுகளில் உற்சாகத்தை ஊட்டும்.

7. மூன்று முக்கிய காரியங்களுக்கு முன்னுரிமை

அன்றைய நாளின் முக்கிய மூன்று செயல்களை முதலில் திட்டமிடுங்கள். இது திட்டமிட்ட செயல் வழியில் நாளை நடத்த உதவும்.

  • 257
·
Added a post

கிராமத்தில் பண்ணையார் வீட்டில் இழவு.

ஒன்றல்ல ! ஒரே நேரத்தில் இரண்டு.

சாவு ஊர்வலம் மிக செலவுடன் சென்று கொண்டிருந்தது...

பக்கத்து ஊர் பண்ணையார் ஒரு வேலை நிமித்தம் அந்த ஊர் வர இறுதி ஊர்வளத்தை பார்த்து சற்றே குழப்பம் அடைந்தார்...

இரண்டு பிணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல .

பண்ணையார் ஒரு நாயை கையில் பிடித்து கொண்டு செல்ல, .....பின்னே வரிசையில் செல்வந்தர்கள் செல்ல....

நேராக பண்ணையாரிடம் சென்ற அவர் என்ன செய்தி என்று கேட்க...

அவரோ ! ஒண்ணும் இல்லை! இந்த நாய் என் மனைவியை கோபத்தில் கடித்து குதறி விட்டது..

காப்பாற்ற சென்ற என் மாமியாரையும் கடித்து குதறி விட்டது ! ரெண்டு பேரும் ஸ்பாட் அவுட்...

அதான் அவங்க இறுதி ஊர்வலம் போய் கொண்டு இருக்கோம்!

என்று சொன்னவுடன்.

பக்கத்து ஊர் பண்ணையார்........

ஐயா ! எத்தனை லட்சம் வேண்டும் என்றாலும் தரேன்! அந்த நாயை என்னிடம் கொடுங்க என்று கேட்க!.

அதற்கு அந்த பண்ணையார் வரிசையில் நிற்கும் எல்லாரும் பண்ணையார்கள் தான் !

போய் நீங்களும் வரிசையில் நில்லுங்க!

  • 262
·
Added a post

யுரேனியம் (Uranium) என்பது ஒரு தனிமம். இது பளபளப்பான வெளிறிய சாம்பல் நிறத்தில் திண்ம நிலையில் இருக்கும் ஒரு பொருள்.

இதன் அணுவெண் 92, மற்றும் இதன் வேதியியல் குறியெழுத்து U ஆகும். இயற்கையில் கிடைக்கும் தனிமங்களிலேயே இதுவே அதிக அணுநிறை கொண்ட தனிமம்.

யுரேனியத்தின் பண்புகள்:

1.இது ஒரு கடினமான, வெள்ளி நிற கதிரியக்க உலோகம்.

2.இது அடர்த்தி அதிகம் கொண்டது.

3.மிகவும் குறைந்த மின்கடத்தும் திறன் கொண்ட நேர் மின்தன்மை கொண்ட உலோகம்.

4.காற்றின் தன்மையால் கருநீலமாக மாறும் தன்மை கொண்டது.

5.கதிரியக்க இயல்பு கொண்டது. அதாவது, இது ஆல்ஃபா, காமா, பீட்டா போன்ற கதிரியக்க கற்றைகளை வெளிப்படுத்தும்.

யுரேனியத்தின் பயன்கள்:

1.அணுசக்தி உற்பத்தி: யுரேனியம், குறிப்பாக யுரேனியம்-235, அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்க முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணுக்கரு பிளவு மூலம் ogromான ஆற்றல் வெளிப்படுகிறது.

2அணு ஆயுதங்கள்: யுரேனியம் அணு ஆயுதங்கள் தயாரிப்பதிலும் பயன்படுகிறது.

3.ஆராய்ச்சி: அணுக்கரு இயற்பியல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.

யுரேனியத்தின் கதிரியக்கம் மற்றும் பாதுகாப்பு:

யுரேனியம் ஒரு கதிரியக்கப் பொருள் என்பதால், அதைக் கையாளும் போதும், அதைப் பயன்படுத்தும் போதும் மிகுந்த கவனம் தேவை.

யுரேனியத்தில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. இதனால் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

யுரேனியச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு ரேடன் (Radon) எனப்படும் நச்சு வாயுவால் சுவாசப்பையில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

அணுக்கழிவு மேலாண்மை மிகவும் முக்கியமானது. யுரேனியம் பயன்படுத்தப்பட்ட பிறகு உருவாகும் அணுக்கழிவுகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் சேமிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

அணுசக்தி துறையில் யுரேனியத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும், அதன் கதிரியக்க தன்மையால் ஏற்படும் அபாயங்களை குறைக்கவும், பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவும் உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

  • 273
·
Added a post

ஒரு பிராடு சாமியார்,ஒரு அரசியல் வாதி,ஒரு இயற்பியல் பேராசிரியர் என்று மூவருக்கு கில்லட்டின் இயந்திரத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

முதல்ல பூசாரி -

சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?

நான் கும்புடுற சாமி என்னய காப்பாத்தும்.

மேடையிலே ஏத்தி லீவரை இழுத்தா கத்தி வேகமா இறங்கி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுருச்சு.எல்லாருக்கும் ஆச்சர்யம்.

சரி!இறங்கு.பொழைச்சுப்போ!

நெக்ஸ்ட்!

அரசியல்வாதி.

சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?

என் நாடும் என் தலைவனும் என் உசுரை காப்பாத்துவாங்க.

மேடையிலே ஏத்தி லீவரை இழுத்தா கத்தி வேகமா இறங்கி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுருச்சு.எல்லாருக்கும் ஆச்சர்யம்.

சரி!இறங்கு.பொழைச்சுப்போ!

நெக்ஸ்ட்!

சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?

யெஸ்!

சொல்லு?

ஏ முட்டாப் பசங்களா!அந்த கில்லட்டின் கத்தி இறங்குறப்போ முடிச்சு ஒரு இடத்துல லாக் ஆகி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுடுது.இதை பாக்க துப்பில்லே!

செக் பண்ணுங்கப்பா!

ஆமாங்க.உண்மைதான்.அவரு புத்திசாலி.

சரி செஞ்சாச்சு!

சரி!ஸ்டேஜ்ல ஏறு!

லீவரை இழு!

சக்ஸஸ்!

  • 274
·
Added a post

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்தரத்தசுத்தி –அருகம்புல் பொடி

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது –வில்வம் பொடி

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. –செம்பருத்திபூ பொடி

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. –சிறியாநங்கை பொடி

ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா –ஓரிதழ் தாமரை பொடி

ஆண்மை சக்தி கூடும். –முருங்கை விதை பொடி

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். –ஆவரம்பூ பொடி

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். –ரோஜாபூ பொடி

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். –வெள்ளருக்கு பொடி

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. –துத்தி இலை பொடி

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. –நன்னாரி பொடி

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். –சோற்று கற்றாழை பொடி

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. –பொன்னாங்கண்ணி பொடி

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. –திப்பிலி பொடி

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. –நாயுருவி பொடி

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. –கரிசலாங்கண்ணி பொடி

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். –கடுக்காய் பொடி

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். –மணத்தக்காளி பொடி

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. –வேப்பிலை பொடி

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். –பாகற்காய்பொடி

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். –பூலாங்கிழங்கு பொடி

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. –கறிவேப்பிலை பொடி

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். –மருதாணி பவுடர்பொடி

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. –லவங்கபட்டை பொடி

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். –கருஞ்சீரகம்பொடி

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. –நாவல் பொடி

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். –சிறுகுறிஞ்சான் பொடி

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. –சித்தரத்தை பொடி

சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. –வாழைத்தண்டு பொடி

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். –நெருஞ்சில் பொடி

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. –ஆடாதொடை பொடி

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. –குப்பைமேனி பொடி

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. –அமுக்கலா பொடி

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. –கோரைகிழங்கு பொடி

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். –கஸ்தூரி மஞ்சள் பொடி

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். –அதிமதுரம் பொடி

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். –ஜாதிக்காய் பொடி

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. –தூதுவளை பொடி

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. –வல்லாரை பொடி

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். –வெட்டி வேர் பொடி

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். –வாதநாராயணன் பொடி

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். –கருவேலம்பட்டை பொடி

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது –நெல்லிக்காய் பொடி

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். –வசம்பு பொடி

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. –பிரசவ சாமான் பொடி

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். –பொடுதலை பொடி

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. –கீழாநெல்லி பொடி

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. –கண்டங்கத்திரி பொடி

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். –நிலவாகை பொடி

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. –துளசி பொடி

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. –முடக்கத்தான் பொடி

வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். –திரிபலா பொடி

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. –வெந்தயம் பொடி

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. –சுக்கு பொடி

  • 275
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான பணிகளை துரிதமாக முடிப்பீர்கள். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

ரிஷபம்

சமூக பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். திறமைகளை வெளிப்படுத்தி ஆதாயம் அடைவீர்கள். விருப்பமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த தாமதங்கள் விலகும். கலைத்துறையில் பொறுமையுடன் செயல்படவும். மருமகன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை விலகும். அதிரடியான திட்டங்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகள் இடத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கடகம்

வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் அமையும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிக்கல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

சிம்மம்

பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் சற்று கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் வழியில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். கால்நடை வியாபாரத்தில் பொறுமை வேண்டும். திடீர் முடிவுகளை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். இனிமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

கன்னி

கடன் நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். சக ஊழியர்களிடம் சிறு சிறு வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். முத்த சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

துலாம்

பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். பயணங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். கால்நடை விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

விருச்சிகம்

தொழில் அபிவிருத்தி விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகளை புரிந்து கொள்வீர்கள். வீடு மாற்றம் சம்மந்தமான சிந்தனைகள் மனதில் தோன்றும். துணைவருடன் சிறு தூர பயணங்களை சென்று வருவீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் மேம்படும். தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

மகரம்

எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். சில பணிகளை நீங்களாக முடிப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அதிக உரிமைகளை கொள்ள வேண்டாம். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். புரிதல் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

 

கும்பம்

வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பலம் மற்றும் பலவினங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மீனம்

எதிர்ப்புகளால் இருந்த தடைகள் விலகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  • 281