Feed Item
·
Added article

திரைபடக் கலை, ஒளிப்​படக் கலை, இசை, எழுத்து எனப் பன்​முகத் திறமை வாய்ந்​தவர் இயக்குநர் செழியன். தனது ‘த பிலிம் ஸ்கூல்’ மூலம் சுயாதீனத் திரைப்​படங்​களை எடுப்பது தொடர்​பாக, திட்​ட​வட்​ட​மான பயிற்​சியை உரு​வாக்​கி, அதற்​கான மாணவர்​களைத் திரட்டி தீவிர​மாக உழைத்​துக் கொண்டிருந்​தார். நிறு​வனங்​கள் செய்​ய​வேண்​டிய பணியை தனிநபராகச் செய்​தார்.

புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்த செழியன் சிகிச்சை பலனின்றி நேற்​று​ காலை கால​மா​னார்.

நாம் தமிழர் கட்​சி​யின் கலை இலக்​கிய பண்​பாட்​டுப் பாசறை​யின் மாநில ஒருங்​கிணைப்​பாள​ரான, ஒளிப்பதிவாளர் செழியனின் உடல் நாம் தமிழர் கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில், அஞ்சலிக்காக வைக்​கப்​பட்​டது. அங்கு திரைத்​துறை​யினர், பொது​மக்​கள் அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் போரூர் மின் மயானத்​தில் நேற்று மாலை அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்​யப்​பட்​டது. மறைந்​த செழியனுக்​கு பிரே​மா என்​ற மனை​வி, அஜி​தா என்​ற மகள்​ உள்​ளனர்​.

  • 51