- · 1 friends
-
2 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
ஒண்டாரியோவைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தனிநபர் மற்றும் வணிக வங்கி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.
இதற்காக அவர்கள் பிறப்புச் சான்றிதழ்கள், கடன் அட்டைகள், ஒண்டாரியோ ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் குடிவரவு ஆவணங்களைப் பயன்படுத்தியதாகப் பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
கணவர், வங்கியின் உண்மையான வாடிக்கையாளர் போல ஆள்மாறாட்டம் செய்து, புதிய கணக்குகளைத் தொடங்கி டெபிட் கார்டுகளைப் பெற்றுள்ளார். மோசடி கண்டுபிடிக்கப்படுவதற்குள் பல்வேறு வங்கி கிளைகளில் இருந்து அவர் பணத்தை எடுத்துள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட சுமார் 86,000 கனடிய டாலர் தொகையை, அவரது மனைவி தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றியதாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. குறித்த நபர் பிராம்ப்டனில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் மீது பிணை நிபந்தனைகளை மீறியது மற்றும் 5,000 டொலருக்கு மேலான மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே வங்கி ஆவணங்களை வைத்திருக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவில் இருந்தபோதே இவர் மீண்டும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். பென்டோவின் மனைவியான இவர் மே 6ம் திகதி கைது செய்யப்பட்டார். இவர் மீது குற்றச் செயல்கள் மூலம் சொத்து சேர்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் பணத்தை இழந்த வாடிக்கையாளர்களுக்கு அந்தந்த வங்கி நிறுவனங்கள் இழப்பீடு வழங்கிவிட்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த தம்பதியினரால் பாதிக்கப்பட்ட இன்னும் பல வாடிக்கையாளர்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருள் தவுன். ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.
மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள். 90 அடி உயரம் வளரக்கூடியது.
பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.
பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும். கொட்டைக்குள் உருவாகும் சீப்பை (தவுன்) குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். கொஞ்சநாள் விட்டால், பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
பனங்கொட்டையிலிருந்து கிடைக்கும் தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. குறிப்பிட்ட பருவத்துக்கு (60 நாள்கள்) கொட்டைகளை மண்ணில் புதைத்து, பின்னர் அவற்றை வெட்டி எடுத்து பெறப்படும் தவுணை, 25 ஆண்டுகளுக்குமுன்புவரை பலரும் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள்.
பனம்பழங்களிலிருந்து எடுக்கப்படும் கொட்டை என்று அழைக்கப்படும் பனம்விதைகளை சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக கொட்டைக்குழி என்றழைக்கப்படும் மண் குவியலில் இட்டு வைப்பார்கள் இது பொங்கல் நேரங்களில் பனங்கிழங்குக்காக வெட்டி எடுக்கப்படும் அந்த நேரங்களில் அரிவாள் வைத்து பனங்கொட்டைகளை பிளந்து அதன் உள்ளிருக்கும் தவுனைப் பெறலாம் இதை வெட்டுவது சற்று கடினம்தான் வெட்டினால் கிடைப்பது தின்ன தின்ன திகட்டாத சுவையுடய தவுன் எங்கள் ஊர் பனை மரங்கள் அதிகம் கானப்படுவதால் எங்களுக்கு இதை சாப்பிட அதிகம் வாய்ப்பு கிடைக்கும்.
கிராமத்தில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை மாதங்களில் தவுண் விற்பனை செய்யப்படுகிறது.
டாக்டர்கள் பலரும் இதை விரும்பி வாங்கி உண்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்னைக்கு இது அருமருந்தாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடல் சூட்டை தணிக்கவும், வயிற்று கோளாறுகளுக்கும் தீர்வாக இது இருக்கிறது. நுங்கு விற்பனை செய்யும்போது தவுனையும் கூடவே விற்பனை செய்கிறார்கள்.
தனது மனைவி மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் அழுக்கான துணி ஒன்றை துவைத்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.
விலையுயர்ந்த நாப்கின்களை வாங்க முடியாததால், அவள் அதே துணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்தாள்.
அவளுக்காக மலிவு விலையில் நாப்கின்களைத் தயாரிக்க அவர் முடிவு செய்தார்.
பருத்தியைக் கொண்டு ஒரு நாப்கினைத் தயாரித்து அவளிடம் கொடுத்தார். ஆனால் அதன் தரம் திருப்திகரமாக இல்லை. அவர் மீண்டும் சோதனைகளைத் தொடங்கினார். ஒவ்வொரு முன்மாதிரியையும் (prototype) சோதித்துப் பார்க்க அவருக்குத் தன்னார்வலர்கள் தேவைப்பட்டனர். மருத்துவக் கல்லூரி மாணவிகளோ வெட்கப்பட்டனர். இறுதியில், அவரே அதைச் சோதிக்கத் துணிந்தார்.
ஒரு கால்பந்து பிளாடரில் விலங்கு இரத்தத்தை நிரப்பி, அதை ஒரு செயற்கைக் கருப்பையாக மாற்றித் தனது ஆடைகளுக்கு அடியில் அணிந்து கொண்டார். அதன் உறிஞ்சும் தன்மையைச் சோதிக்க நடந்தார், ஓடினார், மிதிவண்டி ஓட்டினார். அவரது உடைகளில் நாற்றம் வீசத் தொடங்கியது. ஊரே அவர் பைத்தியமாகிவிட்டதாக முடிவு செய்தது.
அவரது மனைவி விவாகரத்து கோரினார். அவரது தாய் அவரை விட்டுப் பிரிந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
ஆனாலும் அவர் தனியாகத் தனது சோதனையைத் தொடர்ந்தார்.
பல ஆண்டுகளாக, சந்தையில் விற்கப்படும் நாப்கின்கள் எதைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பதை அவரால் கண்டறிய முடியவில்லை. ஒருநாள் அவர் வெளியே சென்றிருந்தபோது ஒரு பார்சல் வந்தது. அவரது நாய் அதைக் கடித்துக் குதறியிருந்தது. உள்ளே அமெரிக்காவிலிருந்து வந்த சில மாதிரிகள் இருந்தன. அவர் அந்த மூலப்பொருளை உன்னிப்பாகக் கவனித்தார்.
'பைன் மரப்பட்டையின் மரக்கூழ்' (Pine bark wood pulp). அதுதான் அந்த ரகசியம்.
அதைச் பதப்படுத்துவதற்கான ஒரு இயந்திரத்தை உருவாக்க அவர் நான்கு ஆண்டுகள் செலவிட்டார். வணிக ரீதியான நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களின் விலை 3.5 கோடி ரூபாய். ஆனால் அவர் வெறும் 65,000 ரூபாயில் ஒரு இயந்திரத்தை உருவாக்கினார்.
2006-ல் அதை ஐஐடி மெட்ராஸுக்கு (IIT Madras) கொண்டு சென்றார். தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை நடத்திய போட்டியில் 943 கண்டுபிடிப்புகளில் அவரது இயந்திரம் முதலிடம் பிடித்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் அவருக்கு விருது வழங்கிக் கௌரவித்தார்.
பல பன்னாட்டு நிறுவனங்கள் அவரது காப்புரிமையை (patent) விலைக்கு வாங்க முன்வந்தன. அவர் அவை அனைத்தையும் நிராகரித்தார். அந்த இயந்திரங்களை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மட்டுமே விற்றார். இன்று, 23 மாநிலங்களில் 1300-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
விவாகரத்து கோரி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் விருது வாங்குவதை சாந்தி தொலைக்காட்சியில் கண்டார். அவருக்கு அழைப்பு விடுத்தார். மீண்டும் அவரிடமே வந்து சேர்ந்தார்.
அவர் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அவளை ஏற்றுக்கொண்டார்.
இந்த கதையின் நாயகன் அருணாச்சலம் முருகானந்தம்.
முன்னோர்களை அடக்கம் செய்த இடத்தை (சமாதி அல்லது சுடுகாடு நிலம்) விலை கொடுத்து வாங்கி விட்டீர்களா?
அங்கே வீடு கட்டுவது என்பது ஆன்மீகம், வாஸ்து மற்றும் அறிவியல் ரீதியாகப் பல்வேறு கருத்துக்களைக் கொண்டது.
அது என்ன?
வாஸ்து சாஸ்திரப்படி, உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நிலம் 'சூன்ய நிலம்' எனக் கருதப்படுகிறது. அங்கு வீடு கட்டுவது மன அமைதியைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.
இறந்தவர்களின் உடல் மண்ணோடு கலந்த இடத்தில் ஒருவிதமான 'கனத்த' அதிர்வுகள் இருக்கும். இது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்குத் தேவையற்ற பயம் அல்லது பதற்றத்தை உருவாக்கலாம்.
அந்த நிலத்தில் வீடு கட்ட நேரிட்டாலும், அடக்கம் செய்த இடத்தின் மீது அஸ்திவாரம் போடவோ, அறைகள் அமைக்கவோ கூடாது.
சமாதி இருக்கும் பகுதியை வீட்டின் அஸ்திவாரத்திற்குள் கொண்டு வராமல், வீட்டைச் சுற்றியுள்ள தோட்டம் அல்லது காலியிடத்தில் தனியாக விட்டுவிடுவது நல்லது.
ஒருவேளை அடக்கம் செய்த இடமே வீட்டின் மையமாக வருகிறது என்றால், அடக்கம் செய்து அறுபது ஆண்டுகளைக் கடந்திருக்க வேண்டும்.
அஸ்திவாரம் அமைக்கும் முன் 'மகா சுதர்சன ஹோமம்', 'வாஸ்து சாந்தி' மற்றும் நிலத்தைச் சுத்தப்படுத்தும் பரிகார பூஜைகளைச் செய்வது அவசியம்.
நிலத்தின் எதிர்மறை ஆற்றலை நீக்க, பசு மாட்டையும் கன்றையும் அந்த நிலத்தில் சில நாட்கள் கட்டி வைத்துப் பராமரிப்பது சிறந்த தீர்வாகும்.
முடிந்தவரை இத்தகைய நிலங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில், முறையான ஆன்மீக வழிகாட்டுதலுடன் வீடு கட்டலாம்.
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நினைவுக்கு வரும். ஆனால், மதுரையின் காவல் தெய்வமாக, கோச்சடையில் வீற்றிருக்கும் வில்லாயுதம் உடைய ஐயனார் கோவிலில் நடக்கும் அதிசயங்களைப் பற்றித் தெரியுமா?
இந்த கோவிலின் சில சுவாரஸ்யமான தகவல்கள்:
பல்லி சொல்லும் உத்தரவு:
இங்கு புரட்டாசி திருவிழா நடத்த வேண்டுமானால், அந்த 2000 ஆண்டுகள் பழமையான புளியமரத்தில் இருக்கும் பல்லி சத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை ஊரே காத்திருக்கும்! ஒருவேளை பல்லி சத்தம் கொடுக்கவில்லை என்றால், அந்த ஆண்டு திருவிழாவே கிடையாது. இதுதான் ஐயனார் தரும் உத்தரவு.
2000 ஆண்டு காலத்து புளியமரம்:
இந்தத் தலத்தின் விருட்சமான புளியமரம் மிகவும் பழமையானது. திருமணத் தடை நீங்க தாலிக் கயிறும், குழந்தை வரம் வேண்டி தொட்டிலும் கட்டி பக்தர்கள் இங்கு மனமுருகிப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
கம்பீரமான வரவேற்பு:
கோவில் நுழைவாயிலில் ஐயனாரும், முத்தையாவும் குதிரை மீது அமர்ந்து பஞ்சபூதங்களுடன் நம்மை வரவேற்பது பார்ப்பதற்கே சிலிர்ப்பாக இருக்கும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கும் இங்கு சிலைகள் இருப்பது கூடுதல் சிறப்பு.
நீதி கேட்கும் தலம்:
மனக்குறைகளை முறையிடவும், நியாயம் கேட்கவும் மக்கள் இன்றும் நம்பி வரும் ஒரு சக்தி வாய்ந்த "முறைப்பாட்டுத் தலம்" இது.
நீங்களும் மதுரைப் பக்கம் போனால், கோச்சடை ஐயனாரைத் தரிசிக்கத் தவறாதீர்கள்!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். மனை தொடர்பான காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வெளிவட்டத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் மதிப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் காணப்படுவீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் இனம் புரியாத சில புதிய தேடல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்களிடம் வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கால்நடை பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆடம்பரமான பொருள்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர் பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விளையாட்டு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நயமான பேச்சுகள் நன்மையை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
அரசு வழியில் இருந்த தாமதம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மகரம்
புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனை விருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கும்பம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். செலவுகளை குறைப்பதற்கான சூழல்கள் அமையும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 12.5.2026
இன்று காலை 10.36 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று இரவு 09.26 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.
இன்று இரவு 07.42 வரை வைதிருதி . பின்னர் விஸ்கம்பம்.
இன்று காலை 10.36 வரை பத்திரை. பின்னர் இரவு 10.06 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று இரவு 09.26 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
ஒருமுறை, ஒரு நண்பருடன் நான் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றேன்.
அவருக்கு Tatkal முறையில் அவசரமாக பாஸ்போர்ட் தேவைப்பட்டது.
நீண்ட வரிசைகள்…
படிவங்கள்…
மணிநேரக் காத்திருப்பு…
சூரியன் சாயத் தொடங்கியபோது தான் எங்கள் முறை வந்தது.
கட்டணம் செலுத்தப் போன சமயத்தில், கிளார்க் ஜன்னலை மூடி,
“நேரம் முடிந்தது. நாளை வாருங்கள்” என்றார்.
நான் பணிவுடன் கேட்டேன்:
“நாங்கள் முழு நாளும் காத்திருக்கிறோம். கட்டணம் மட்டும் தான்.”
அவர் கோபமாக:
“நீங்கள் காத்திருந்தது என் தவறா? அரசாங்கத்திடம் போய் கூடுதல் பணியாளர்களை நியமிக்கச் சொல்லுங்கள். காலை முதல் நான் வேலை செய்கிறேன்.”
என் நண்பர் மனம் உடைந்து:
“விடு… நாளை வரலாம்” என்றார்.
ஆனால் என் உள்ளம் சொன்னது:
“இங்கே இன்னொரு கதவு திறக்கப் போகிறது. காத்திரு.”
அந்த அதிகாரி தன் பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார்.
நான் மெளனமாக அவரைத் தொடர்ந்து சென்றேன்.
கேண்டீனில் அவர் தனியாக அமர்ந்து, டிபன் பாக்ஸைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தார்.
நான் எதிரே உட்கார்ந்தேன்.
மெதுவாக சிரித்து கேட்டேன்:
“நாள்தோறும் முக்கியமான மனிதர்களை சந்திப்பீர்கள் இல்லையா?”
அவர் பெருமையுடன்:
“IAS, IPS, MLA… என் இருக்கையின் முன் பலரும் நிற்கிறார்கள்.”
நான் சிறிது மௌனம் காத்து, எதிர்பாராத கேள்வி ஒன்றை கேட்டேன்:
“உங்கள் தட்டிலிருந்து ஒரு ரொட்டி கொடுக்க முடியுமா?”
அவர் அதிர்ச்சியுடன் பார்த்தார்…
பிறகு:
“எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
ஒரு ரொட்டியை எடுத்தேன்.
காய்கறியுடன் சாப்பிட்டு சொன்னேன்:
“உங்கள் மனைவி அற்புதமாக சமைக்கிறாள்.”
பின்னர் மெதுவாகச் சொன்னேன்:
“நீங்கள் ஒரு முக்கியமான இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள்.
பல சக்திவாய்ந்தவர்கள் உங்களிடம் வருகிறார்கள்.
ஆனால்… அந்த பொறுப்பை நீங்கள் மதிக்கிறீர்களா?”
அவர் குழப்பமாக:
“என்ன அர்த்தம்?”
நான் அமைதியாக:
“உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை மதித்திருந்தால்,
மக்களை இப்படிப் பேசியிருக்க மாட்டீர்கள்.
நீங்கள் தனியாக சாப்பிடுகிறீர்கள்.
தனியாக அமர்கிறீர்கள்.
மக்களை உதவுவதற்குப் பதிலாக, அனுப்பி விடுகிறீர்கள்.
தூர இடங்களிலிருந்து, சோர்வுடன், நம்பிக்கையுடன் வரும் மக்களிடம்
‘அரசாங்கத்திடம் சொல்லுங்கள்’ என்பதே உங்கள் பதில்.
ஒரு விஷயம் யோசித்துப் பாருங்கள்…
கூடுதல் ஊழியர்கள் வந்தால்,
உங்கள் இருக்கையின் முக்கியத்துவம் குறையுமல்லவா?”
அவர் அமைதியானார்.
நான் தொடர்ந்தேன்:
“கடவுள் உங்களுக்கு பணம் சம்பாதிக்க மட்டுமல்ல,
உறவுகளை கட்டமைக்க ஒரு வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.
ஆனால் அதை நீங்கள் இழந்து கொண்டிருக்கிறீர்கள்.
பணம் இருந்தும்,
உறவுகள் இல்லையென்றால்,
அந்த பணம் எதற்கு?
நடத்தை சரியில்லையென்றால்,
வீட்டுக்குள்ளேயே மகிழ்ச்சி நிலைக்காது.”
அவர் கண்களில் கண்ணீர் தேங்கியது.
மெதுவாக சொன்னார்:
“நீங்கள் சொல்வது உண்மை, ஐயா…
என் மனைவி சண்டைக்கு பிறகு வீட்டை விட்டு சென்றார்.
என் குழந்தைகள் என்னிடம் அன்பாக இல்லை.
என் அம்மா பேசவே மாட்டாள்.
காலையில் சில ரொட்டிகள் செய்து வைக்கிறாள்.
நான் இங்கே வந்து தனியாக சாப்பிடுகிறேன்.
வீட்டுக்கே போக மனம் இல்லை.
எங்கே தவறு செய்தேன் என்று தெரியவில்லை.”
நான் அவர் தோளில் கை வைத்து:
“மக்களுடன் இணைந்திருங்கள்.
உதவ முடிந்தால், தயங்காமல் உதவுங்கள்.
நான் இங்கே என் நண்பருக்காக வந்தேன்.
எனக்கு ஏற்கனவே பாஸ்போர்ட் இருக்கிறது.
அதுதான் உறவுகளின் அடித்தளம்.
அதனால் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்…
உங்களுக்கு தனிமை.”
அவர் எழுந்து, கண்களைத் துடைத்து:
“வாருங்கள், ஜன்னலுக்கு.
இன்றே உங்கள் வேலை செய்து தருகிறேன்.”
வேலை முடிந்தது.
புறப்படும் முன் என் மொபைல் எண்ணைக் கேட்டார்.
பல ஆண்டுகள் கடந்தன.
ரக்ஷா பந்தன் நாளில் ஒரு அழைப்பு வந்தது.
“ரவேந்திர குமார் சௌதாரி பேசுகிறேன், ஐயா.
பல ஆண்டுகளுக்கு முன் பாஸ்போர்ட் அலுவலகத்தில்
நீங்கள் என்னுடன் ஒரு ரொட்டி சாப்பிட்டீர்கள்…”
என் இதயம் நின்றது போல ஆனது.
அவர் சந்தோஷமாகச் சொன்னார்:
“அந்த நாளுக்குப் பிறகு நிறைய யோசித்தேன்.
பணம் பலர் தருகிறார்கள்…
ஆனால் உட்கார்ந்து சாப்பிடும் மனிதன் ஒருவனும் இல்லை.
அடுத்த நாளே என் மனைவியின் தாய்வீட்டுக்குச் சென்றேன்.
அவள் வர மறுத்தாள்.
அவள் தட்டிலிருந்து ஒரு ரொட்டியை எடுத்து:
‘எனக்கு ஊட்டி விடுவாயா?’ என்று கேட்டேன்.
அவள் அழுதாள்…
என்னுடன் வீட்டுக்கு வந்தாள்.
குழந்தைகளும் வந்தார்கள்.
இப்போது நான் பணம் சம்பாதிப்பதில்லை,
உறவுகளை சம்பாதிக்கிறேன்.
என்னிடம் வரும் யாருடைய வேலையையும்
மகிழ்ச்சியுடன் செய்து தருகிறேன்.”
பின்னர் மெதுவாக:
“இன்று உங்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து சொல்ல அழைத்தேன்.
உறவுகளை கட்டமைக்க நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள்.
என் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம்.
நீங்கள் வந்து ஆசீர்வதிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு உறவை உருவாக்கிவிட்டீர்கள்.”
நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டே இருந்தேன்…
ஒரு ரொட்டி, ஒரு வாழ்க்கையை மாற்றும் என்பதை
அன்று உணர்ந்தேன். *மக்களை வெல்வது விதிகளாலும், அதிகாரத்தாலும், பணத்தாலும் அல்ல.*
*கருணை, மரியாதை, மனதோடு இணைதல் –*
*இவைகளால்தான் மனிதர்கள் வெல்லப்படுகிறார்கள்.*
நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.
நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.
கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .
ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.
ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.
நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான்.
உணவை மதியுங்கள். உணவை வீணாக்காதீர்கள். விவசாயி கஷ்டப்பட்டு வெயில்,மழை பாராமல் சேற்றில் கால் வைப்பதால் மட்டுமே நீங்கள் சோற்றில் கை வைக்க முடிகிறது என்பதை நினைத்துப் பாருங்கள். இதைப்படிக்க கொஞ்சம் வருத்தமாக இருக்கும், ஆனால், உண்மையை புரிந்துக் கொண்டு, மாற்றத்தை கொண்டு வாருங்கள்.
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் லோமசன் என்ற பூனை வாழ்ந்து வந்தது. அதே மரத்தின் பொந்து ஒன்றில் பலிதன் என்ற எலி வசித்து வந்தது. பூனைக்கு எலி என்றாலே இரை, எலிக்குப் பூனை என்றாலே எமன்.
சிக்கிய பூனை
ஒருநாள் வேடன் ஒருவன் அந்த மரத்தைச் சுற்றி வலை விரித்தான். எதிர்பாராதவிதமாக பூனை அந்த வலையில் சிக்கிக்கொண்டது. இதைக் கண்ட எலி, "அப்பாடா! இனி நமக்குத் தொல்லை இல்லை" என்று மகிழ்ச்சியுடன் வெளியே வந்து உணவைத் தேடியது.
இரட்டை ஆபத்து
ஆனால், எலிக்கு ஒரு புதிய ஆபத்து வந்தது. மரத்தின் மேலே ஒரு ஆந்தையும், தரையில் ஒரு கீரியும் எலியைச் சாப்பிடக் காத்திருந்தன. இப்போது எலிக்குப் பின்னால் பூனை, மேலே ஆந்தை, பக்கத்தில் கீரி என மூன்று பக்கமும் மரண பயம்.
சமயோசித தந்திரம்
எலி உடனே யோசித்தது. வலையில் சிக்கி உயிருக்குப் போராடும் பூனையிடம் சென்றது. "பூனை அண்ணே! உன்னை வேடனிடமிருந்து நான் காப்பாற்றுகிறேன். அதற்குப் பதிலாக நீ என்னை ஆந்தை மற்றும் கீரியிடமிருந்து காப்பாற்ற வேண்டும். நாம் இருவரும் இப்போது நண்பர்களாக இருப்போம்" என்று ஒப்பந்தம் போட்டது. பூனையும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டது.
எலி பூனையின் அருகில் அமர்ந்து வலையை மெதுவாகக் கடித்தது. எலி பூனையுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து ஆந்தையும் கீரியும் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டன.
வேடன் வரும் சமயம் பார்த்து, எலி கடைசிப் பச்சைக் கயிற்றைத் துண்டித்தது. பூனை தப்பித்து ஓடியது, எலியும் தன் பொந்துக்குள் பாதுகாப்பாக நுழைந்தது. சிறிது நேரம் கழித்து பூனை எலியைக் கூப்பிட்டது, "நண்பா! வெளியே வா, நாம் விளையாடலாம்" என்றது.
அதற்கு எலி புத்திசாலித்தனமாகச் சொன்னது, "பூனை அண்ணே! ஆபத்துக் காலத்தில் நாம் நண்பர்களாக இருந்தோம், அது தேவை. இப்போது நீ உன் இயல்புக்குத் திரும்பிவிடுவாய், நான் உனக்கு இரை ஆகிவிடுவேன். அதனால் பாதுகாப்பான தூரத்தில் இருப்பதே நம் இருவருக்கும் நல்லது" என்று கூறிவிட்டது.
இந்தக் கதையிலிருந்து நாம் அறிவது:
சந்தர்ப்ப நட்பு: சில நேரங்களில் எதிரிகூட நண்பராகலாம், ஆனால் ஆபத்து நீங்கியதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிபுத்திசாலித்தனம்: யாரை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டுமோ, அவ்வளவு தூரத்தில் வைப்பதே சுயமரியாதை உள்ளவர்களுக்கு அழகு.
சில நேரங்களில் சூழல் காரணமாக நாம் சிலருடன் பழக வேண்டியிருக்கும். அப்போது அந்த எலியைப் போல காரியம் முடிந்ததும், நம் எல்லையை (Boundary) வகுத்துக்கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை இந்தக் கதை காட்டுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: பழைய நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்திருந்த பழைய கடன் பாக்கிகள் வந்துசேரும்.
ரிஷபம்: உங்கள் பேச்சாற்றல், புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். வாகனப் பயணத்தின்போது கவனச் சிதறல் கூடாது.
மிதுனம்: தொழில் வளர்ச்சிக்காக பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் வரும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கடகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடல்சோர்வு, வயிற்றுப் பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும். பொருட்கள் சேரும்.
சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். புதிய நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
கன்னி: கடந்த 2-3 நாட்களாக இருந்த அலைச்சல், கோபம் குறையும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.
துலாம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள்.
விருச்சிகம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.
தனுசு: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். அலுவலகத்தில் சலசலப்புகள் ஓய்ந்து அமைதி திரும்பும். அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.
மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர உறவுகள், நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
கும்பம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறு விதமாக புரிந்துகொள்வார்கள். எனவே, பேச்சில் கவனம் தேவை. அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு. கேட்ட கடன் உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும்.
மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வீண் செலவைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 11.5.2026.
இன்று காலை 11.08 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று இரவு 09.28 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று இரவு 09.20 வரை ஐந்திரம் . பின்னர் வைதிருதி.
இன்று காலை 11.08 வரை கரசை. பின்னர் இரவு 10.52 வரை வணிசை. பிறகு பத்திரை.
இன்று இரவு 09.28 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
"தம்பி... ஒரு இட்லி... பசிக்குது தம்பி..." சென்னை. பாரிமுனை. மதியம் 2 மணி. வெயில் கொளுத்துது.
நடைபாதை கடை. இட்லி கடை.
ஒரு கிழவர். 80 வயசு. பேரு முருகன் தாத்தா. கிழிஞ்ச பனியன். கூன் விழுந்த முதுகு. கையில ஒரு மஞ்ச பை. கண்ணு மட்டும் பளிச்சுனு. கடைக்கார பையன பார்த்து கெஞ்சுறாரு.
கடை பையன் கணேஷ். 25 வயசு. முறைச்சான். "யோவ் காலைல இருந்து இதே பாட்டு தானா. காசு இருந்தா வா. இல்லனா நட."
தாத்தா தலை குனிஞ்சாரு. "தம்பி... நேத்துல இருந்து சாப்பிடல... ஒரு இட்லி... அரை இட்லி கொடுத்தா கூட போதும்..."
கணேஷ் தட்ட எடுத்து வீசினான். "போயா... பிச்சை எடுக்க வந்துட்டான்."
தாத்தா தட்ட எடுக்க குனிஞ்சாரு. முதுகு வலிச்சுது. மெல்ல எழுந்தாரு. நடந்தாரு.
பக்கத்து டீக்கடை. ராஜா. 35 வயசு. பார்த்துட்டு இருந்தான். ஓடிப்போய் தாத்தா கைய பிடிச்சான்.
"தாத்தா... வாங்க. உட்காருங்க."
பெஞ்சுல உட்கார வச்சான். ஒரு ப்ளேட் இட்லி. சாம்பார். சட்னி. ஒரு ஸ்ட்ராங் டீ.
"தாத்தா... மெல்ல சாப்பிடுங்க. புரையேற போகுது."
தாத்தா சாப்பிட்டாரு. கண்ணுல தண்ணி. "ராசா... நீ நல்லா இருக்கணும்... 40 வருஷம் இதே பாரிமுனைல நானும் டீக்கடை வச்சிருந்தேன்... பேரு முருகன் டீ ஸ்டால்."
ராஜா அதிர்ந்தான். "தாத்தா... முருகன் டீ ஸ்டால்... எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு... 'முருகன் கை டீ மாதிரி வராதுடா'னு..."
தாத்தா சிரிச்சாரு. பல்லு இல்ல. "ஆமா ராசா... நான் தான்..."
"என்ன தாத்தா ஆச்சு... கடை..."
தாத்தா மூச்சு விட்டாரு. "எல்லாம் போச்சு ராசா. ஒரே பையன். படிக்க வச்சேன். இன்ஜினியர். அமெரிக்கா அனுப்பினேன். கடன் வாங்கி. வீடு கடை எல்லாம் வித்து. அவன் போன மாசம் போன் பண்ணினான். 'அப்பா நான் அங்கயே செட்டில் ஆயிட்டேன். நீ இங்க வர வேண்டாம். தொந்தரவு பண்ணாத'னு."
"வீடு இல்ல. காசு இல்ல. இதோ... நடைபாதை தான் வீடு. பசிச்சா கை நீட்டுறேன்."
ராஜா கண்ணு கலங்கிருச்சு. "தாத்தா... இனிமே இங்கயே இருங்க. என் கூட. கடைல படுத்துக்கோங்க. சாப்பாட்டுக்கு கவலை வேண்டாம்."
தாத்தா அழுதாரு. "வேண்டாம் ராசா... உனக்கு எதுக்கு பாரம்..."
"தாத்தா... நீங்க பாரம் இல்ல. நீங்க பாடம்."
---
*6 மாசம் கழிச்சு.*
அதே பாரிமுனை. ஆனால் இப்போ புது போர்டு.
"முருகன் ராஜா டீ ஸ்டால் - 40 வருஷ பாரம்பரியம்"
கடைல கூட்டம். வரிசை. ஏன்னா டீ போடுறது முருகன் தாத்தா. 80 வயசு. ஆனா கைக்கு இன்னும் அதே ருசி.
ராஜா கல்லால பணம் வாங்குறான். தாத்தா டீ ஆத்துறாரு.
சுவத்துல ஒரு பெரிய போர்டு.
"இங்கு வயதானவர்களுக்கு டீ இட்லி இலவசம்.
பசிக்குதுனு சொன்னா போதும்.
காசு கேட்க மாட்டோம்."
தினமும் 50 தாத்தா பாட்டி வர்றாங்க. சாப்பிடுறாங்க. டீ குடிக்கிறாங்க. கதை பேசுறாங்க. சிரிக்கிறாங்க.
அன்னைக்கு ஒரு கார் வந்து நின்னுச்சு. கோட் சூட். ஒரு ஆள் இறங்கினான். 45 வயசு.
முருகன் தாத்தா பார்த்தாரு. கைல இருந்த டீ கிளாஸ் நழுவி விழுந்துச்சு.
அவன். மகன்.
அவன் ஓடி வந்தான். "அப்பா... அப்பா... நான் தப்பு பண்ணிட்டேன்... என்ன மன்னிச்சுருங்க... உங்கள தேடி தேடி..."
தாத்தா அமைதியா பார்த்தாரு. "தம்பி... நீ யாரு..."
மகன் அதிர்ந்தான். "அப்பா... நான்... உங்க மகன்... குமார்..."
தாத்தா சிரிச்சாரு. "தம்பி... எனக்கு இப்போ நூறு பிள்ளைங்க இருக்காங்க. தினமும் வந்து 'தாத்தா டீ'னு கேக்குறாங்க. என் மகன் அமெரிக்கால இருக்கான். நீ போலாம்."
ராஜா குறுக்க வந்தான். "சார்... தாத்தா இப்போ எங்க குடும்பம். 6 மாசமா எங்க கூட தான் இருக்காரு. உங்களுக்கு 40 வருஷம் தேட தோணல. இப்போ எதுக்கு வந்தீங்க."
குமார் முட்டி போட்டான். "அப்பா... காசு பணம் கண்ண மறைச்சுருச்சு... இப்போ எனக்கு பொண்டாட்டி புள்ளைங்க யாரும் இல்ல... தனியா... நான் அனாதை ஆயிட்டேன்... என்ன சேர்த்துக்கோங்க..."
தாத்தா அவன் தலைய தடவினாரு. "எந்திரி ராசா. நீயும் பசில தான் இருக்க போல. முதல்ல டீ குடி."
சூடா ஒரு டீ கொடுத்தாரு.
"இங்க பாரு ராசா... நான் உன்ன மன்னிச்சுட்டேன். ஆனா... நீ இனிமே என் மகன் இல்ல. நீயும் இந்த கடைக்கு வர்ற ஒரு வாடிக்கையாளர். பசிச்சா சாப்பிடு. டீ குடி. காசு வேண்டாம். ஆனா... உரிமை கொண்டாடாத."
"ஏன்னா... என் மகன் ராஜா... அவன் என்ன அப்பானு கூப்பிடல. தாத்தானு கூப்பிட்டான். ஆனா... எனக்கு சோறு போட்டான்."
குமார் அழுதுட்டே டீ குடிச்சான். கரிக்குது. கண்ணீரு.
---
*இன்னைக்கு.*
முருகன் தாத்தா இல்ல. போய் 2 வருஷம் ஆச்சு. 82 வயசு. சிரிச்சுட்டே போனாரு.
ஆனா கடை இருக்கு.
போர்டு மாறல. "முருகன் ராஜா டீ ஸ்டால்"
இப்போ நடத்துறது ராஜா. பக்கத்துல குமார். ரெண்டு பேரும் சேர்ந்து டீ போடுறாங்க.
சுவத்துல இன்னொரு போர்டு.
"அப்பா அம்மாவை தெருவில் விட்டவர்கள்...
உள்ளே வரலாம்.
டீ குடிக்கலாம்.
ஆனால்...
முதலில் வாசலில் இருக்கும் தாத்தா பாட்டிக்கு...
நீங்களே கையால சாப்பாடு பரிமாற வேண்டும்."
*இப்படியும் வாழலாம்.*
*_பெத்த மகன் கைவிட்டாலும்...
பக்கத்து வீட்டு பையன்...
அப்பானு கூப்பிடுவான்.__
__கடை போனாலும்...
கை ருசி போகாது.
மனசு இருந்தா...
வயசு ஒரு தடை இல்ல.__
__உன்ன பெத்தவங்க...
கடைசி காலத்துல...
ஒரு இட்லிக்கு கை ஏந்துறாங்கனா...
நீ வாழ்ந்து என்ன பிரயோஜனம்.__
__அதே நேரம்...
ரத்த சம்பந்தம் இல்லனாலும்...
பசிக்குதுனு சொல்ற கிழவனுக்கு...
ஒரு டீ வாங்கி கொடு.__
__அவர் வாய்...
உன்ன வாழ்த்தும்.__
__அந்த வாழ்த்து...
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.__
__முருகன் தாத்தா 80 வயசுல தெருவுக்கு வந்தாரு.
82 வயசுல ராஜா மாதிரி போனாரு.நடுவுல 2 வருஷம்...
100 பேருக்கு அப்பாவா வாழ்ந்தாரு.
மக்கள் திலகம் எம்ஜிஆர் கடந்த 1972 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கி முதலில் சந்தித்த தேர்தலிலே வெற்றி பெற்று முதலமைச்சரானார். அதன் பிறகு அவர் சாகும் வரை முதலமைச்சராகவே இருந்தார்.
ஆனால் அவர் முதல் முதலில் கட்சி ஆரம்பித்து, முதல் தேர்தலை சந்தித்தபோது அவருக்கு ஏராளமான பண நெருக்கடி இருந்ததாகவும், அதில் அவருக்கு பலர் உதவி செய்த நிலையில் அவரது கட்சிக்காக நடிகை லதா பணம் கொடுத்ததாகவும் தெரிகிறது.
இது குறித்து லதா ஒரு பேட்டியில் கூறிய போது எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை சந்தித்தபோது நிதி நெருக்கடியில் இருந்தார். அப்போது நான் சாகுந்தலம் என்ற நாடகத்தை நடத்தி அந்த நாடகத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 32 லட்சம் ரூபாய் கொடுத்தேன். 45 ஆண்டுகளுக்கு முன் நான் கொடுத்த 32 லட்சம் இன்று பல கோடிக்கு சமம் என்றும் அந்த பேட்டியில் லதா தெரிவித்திருந்தார்.
அந்த பணத்தை எம்ஜிஆர் என்னிடம் வாங்கும்போது நான் எத்தனையோ பேருக்கு பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறேன், ஆனால் நீ எனக்கு இப்போது கொடுக்கிறாயா? என்று கிண்டலாக கூறியதாகவும் அதை என்னால் இப்போதும் கூட மறக்க முடியாது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் தான் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த போது எம்ஜிஆர் தான் உதவினார் என்றும் அவர் செய்த உதவி நான் கொடுத்த 32 லட்சத்தை விட பெரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த 1986ஆம் ஆண்டு லதாவின் தாயார் உடல் நலம் இன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், லதாவின் அம்மா உடல்நிலை குறித்து கேள்விப்பட்டதும், உடனே மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். என்னிடம் ஏன் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று உரிமையுடன் கோபப்பட்ட எம்.ஜி.ஆர், உடனடியாக மருத்துவர்களை அழைத்து லதாவின் அம்மாவுக்கு தேவையான சிகிச்சைகளை செய்ய வேண்டும் என்றும், அதற்கு தேவையான செலவு முழுவதும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் லதாவின் அம்மா உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார். அப்போது லதாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருந்தது எம்ஜிஆர் தான் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் லதாவின் அம்மா சென்னையில் ஒரு பங்களா போன்ற வீட்டை கட்டிக் கொண்டு இருந்தார். அப்போதுதான் அவர் திடீரென இறந்து விட்டதால் அந்த வீட்டை எப்படி முடிப்பது? குடும்பத்தை எப்படி நிர்வாகம் செய்வது? என்று தெரியாமல் லதா இருந்ததாகவும், அந்த சமயத்தில் எம்ஜிஆர், நான் உதவி செய்கிறேன் என்று தானாகவே வந்து அந்த வீட்டை கட்டி முடிக்க தேவையான முழு பணத்தையும் கொடுத்ததகவும் லதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நான் 1977-ல் அதிமுக கட்சிக்காக கொடுத்த பணத்தைவிட அதிகமாக தான் எனக்கு திருப்பி அவர் வீட்டை கட்டி முடிக்க செலவு செய்தார் என்றும் வீட்டை கட்டி முடிக்க செய்த செலவு அவர் திருப்பி கேட்கவே இல்லை என்றும் லதா தெரிவித்ததாகவும் கூறப்படுவதுண்டு.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் லதாவை எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய நிலையில் அதன் பிறகு இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், உரிமை குரல், பல்லாண்டு வாழ்க, நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், நீதிக்கு தலைவணங்கு, உழைக்கும் கரங்கள், மீனவ நண்பன், நவரத்தினம் மற்றும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே கிட்டத்தட்ட சூப்பர் ஹிட் ஆகியது.
திருநெல்வேலி. பாளையங்கோட்டை. அரசு கல்லூரி. காலை 9 மணி.
வாசல்ல ஒருத்தன். பேரு கார்மேகம். வயசு 38. காவலாளி. கையில லத்தி. பாக்கெட்ல ஒரு பழைய பேப்பர். மடிச்சு மடிச்சு வச்சிருக்கான். தினமும் அத பார்ப்பான். முத்தம் கொடுப்பான். திரும்ப பாக்கெட்ல வச்சுருவான்.
காலேஜ் பசங்க கிண்டல் பண்ணுவாங்க. "ஏய் வாட்ச்மேன். என்ன அது. லாட்டரி டிக்கெட்டா. லவ் லெட்டரா."
கார்மேகம் சிரிப்பான். பதில் சொல்ல மாட்டான்.
---
*20 வருஷம் முன்னாடி.*
கார்மேகம் +2. கணக்குல புலி. 100க்கு 100. கலெக்டர் ஆகணும்னு கனவு. ஆனா அப்பா கூலி. அம்மா இல்ல.
+2 ரிசல்ட். 1178/1200. மாவட்டத்துல முதல் மார்க். பேப்பர்ல போட்டோ. "ஏழை மாணவன் சாதனை".
காலேஜ் அப்ளிகேஷன். http://B.Sc Maths. கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ். சேர்ந்துட்டான்.
முதல் நாள் காலேஜ். போனான். பிரின்சிபால் ரூம்.
பிரின்சிபால் பேரு ராஜகோபால். வெள்ளை வேட்டி. கோபக்காரர்.
"என்ன வேணும்."
"சார். நான் கார்மேகம் சார். மேத்ஸ் பர்ஸ்ட் இயர் சார். ஜாயின் பண்ண வந்தேன் சார்."
பிரின்சிபால் லிஸ்ட் பார்த்தாரு. "கார்மேகம்... ஹ்ம்ம்... அட்மிஷன் பீஸ் கட்டிட்டியா."
"இல்ல சார். ஸ்காலர்ஷிப் அப்ளை பண்ணிருக்கேன் சார். வர்ற வரைக்கும்..."
"முடியாது. பீஸ் கட்டாம காலேஜ் உள்ள வர முடியாது. 5000 ரூபா. இப்பவே கட்டு. இல்லனா வெளிய போ."
கார்மேகம் அழுதான். "சார். அப்பாக்கு காசு இல்ல சார். ஒரு வாரம் டைம் கொடுங்க சார். கூலி வேலை பார்த்து கட்டிடுறேன் சார்."
பிரின்சிபால் எழுந்தாரு. "டைம்லாம் கிடையாது. ஏழைனா படிக்க கூடாது. போ. போய் மாடு மேய்."
கார்மேகம் கால்ல விழுந்தான். "சார். நான் படிக்கணும் சார். கலெக்டர் ஆகணும் சார். என் கனவு சார்."
பிரின்சிபால் ஒரு பேப்பர எடுத்தாரு. வெள்ளை பேப்பர். A4 ஷீட். அதுல சிவப்பு இங்க்ல எழுதினாரு.
*"APPLICATION REJECTED. REASON: FEES NOT PAID."*
கீழ கையெழுத்து. சீல்.
பேப்பர கார்மேகம் மூஞ்சில விட்டு எறிஞ்சாரு. "இந்தா. இதான் உன் தலைவிதி. இத தூக்கிட்டு போய் கடலை வித்து பிழை."
கார்மேகம் அந்த பேப்பர எடுத்தான். மடிச்சான். கண்ண துடைச்சான். வெளிய வந்தான்.
காலேஜ் வாசல். திரும்பி பார்த்தான். "ஒரு நாள் இதே காலேஜ்க்கு வருவேன். ஆனா படிக்க இல்ல. வேலை பார்க்க."
அடுத்த 20 வருஷம். சுமை தூக்கினான். ஹோட்டல்ல பிளேட் கழுவினான். செக்யூரிட்டி. கடைசில இதே காலேஜ்ல வாட்ச்மேன் வேலை.
---
*இன்னைக்கு.*
காலை 10 மணி. காலேஜ் முன்னாடி கார் வந்து நிக்குது. கலெக்டர் கார். போர்டு: *"District Collector, Tirunelveli"*
உள்ள இருந்து ஒரு பொண்ணு இறங்குறா. வயசு 32. IAS யூனிபார்ம். பேரு *Dr. இலக்கியா IAS*.
கார்மேகம் சல்யூட் அடிச்சான். "வணக்கம் மேடம்."
கலெக்டர் கார்மேகத்த பார்த்தாங்க. நின்னாங்க. "அண்ணே. நீங்க..."
"மேடம். நான் வாட்ச்மேன் மேடம். கார்மேகம்."
இலக்கியா கார்மேகம் முகத்த உத்து பார்த்தாங்க. "அண்ணே. 20 வருஷம் முன்னாடி இந்த காலேஜ்ல... +2 முதல் மார்க்... கணக்கு..."
கார்மேகம் தலை குனிஞ்சான். "ஆமா மேடம். ஆனா பீஸ் கட்டல. பிரின்சிபால் துரத்தி விட்டுட்டாரு மேடம்."
இலக்கியா கண்ணு கலங்குச்சு. "அண்ணே. நான் யாரு தெரியுமா."
"தெரியல மேடம். நீங்க கலெக்டர் மேடம்."
"இல்ல அண்ணே. 20 வருஷம் முன்னாடி இதே காலேஜ். அதே நாள். நானும் அட்மிஷனுக்கு வந்தேன். B.A Tamil. என்கிட்டயும் பீஸ் இல்ல. அதே பிரின்சிபால் ராஜகோபால். என்னையும் துரத்தி விட்டாரு. நான் காலேஜ் வாசல்ல உட்கார்ந்து அழுதேன்."
"அப்ப ஒருத்தர் வந்தாரு. கிழிஞ்ச சட்டை. கையில புக். என் பக்கத்துல உட்கார்ந்தாரு. 'ஏம்மா அழுவுற'னு கேட்டாரு. நான் சொன்னேன். அவரு தன் பைல இருந்து 2000 ரூபா எடுத்தாரு. 'இந்தா மா. இது என் பீஸ். நான் அடுத்த வருஷம் சேர்ந்துக்குறேன். நீ படி மா'னு சொல்லிட்டு போய்ட்டாரு."
"அந்த 2000 ரூபா தான் அண்ணே என் வாழ்க்கை. நான் படிச்சேன். UPSC எழுதினேன். கலெக்டர் ஆனேன். 20 வருஷமா அந்த ஆள தேடுறேன் அண்ணே. பேரு கூட தெரியாது."
கார்மேகம் வாயடைச்சு போனான். "மேடம்... அது... அது நான் தான் மேடம்..."
இலக்கியா கார்மேகம் கால்ல விழுந்தாங்க. "அண்ணே..."
காலேஜ் முழுக்க கூட்டம். பசங்க. புரொபசர்ஸ். எல்லாரும் பார்க்குறாங்க.
கார்மேகம் பாக்கெட்ல இருந்து அந்த 20 வருஷ பழைய பேப்பர எடுத்தான். *"APPLICATION REJECTED"*. நடுங்குற கையில கொடுத்தான்.
"மேடம். இது தான் மேடம் என் காலேஜ் அட்மிஷன். 20 வருஷமா வச்சிருக்கேன் மேடம். ஏன்னா இந்த பேப்பர் தான் எனக்கு சொல்லி கொடுத்துச்சு. கனவு உடைஞ்சா இன்னொருத்தர் கனவ கட்டு."
இலக்கியா அந்த பேப்பர வாங்கினாங்க. கண்ணுல ஒத்திக்கிட்டாங்க. அப்புறம் கலெக்டர் பேனாவ எடுத்தாங்க.
அதே சிவப்பு இங்க்ல, அதே பேப்பர்ல, *"REJECTED"* வார்த்தை மேல கோடு போட்டாங்க. பக்கத்துல எழுதினாங்க:
*_"APPLICATION APPROVED.
REASON: HE TAUGHT ME HUMANITY BEFORE I LEARNT ADMINISTRATION.
NEW POST: HONORARY DEAN, PALAYAMKOTTAI GOVT COLLEGE."__
கீழ கையெழுத்து. *"Dr. Ilakkiya IAS. District Collector."*
கலெக்டர் சீல்.
பேப்பர கார்மேகம் கையில கொடுத்தாங்க. "அண்ணே. 20 வருஷம் முன்னாடி இந்த காலேஜ் உங்கள வெளிய அனுப்புச்சு. இன்னைக்கு இதே காலேஜ் உங்கள உள்ள கூப்பிடுது. டீன்-ஆ. உட்காருங்க அண்ணே. இந்த சேர்ல."
மைக் எடுத்தாங்க. காலேஜ் முழுக்க அறிவிச்சாங்க.
"இன்னைல இருந்து பீஸ் கட்டாத ஒரு பையன கூட காலேஜ விட்டு அனுப்ப கூடாது. யாருக்கு காசு இல்லயோ, அவங்க பீஸ நான் கட்டுறேன். ஏன்னா 20 வருஷம் முன்னாடி ஒருத்தர் என் பீஸ கட்டினாரு. அவர் பேரு கார்மேகம்."
"இந்த காலேஜ்ல இனிமே 'APPLICATION REJECTED' ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது. 'APPLICATION APPROVED' மட்டும் தான்."
கார்மேகம் அந்த பேப்பர மார்போட அணைச்சுக்கிட்டான். 20 வருஷ கண்ணீர் ஒரே நிமிஷத்துல கரைஞ்சுச்சு.
இன்னைக்கு காலேஜ் வாசல்ல ரெண்டு போர்டு.
ஒன்னு: *"பிரின்சிபால் அறை - Dr. ராஜகோபால் (Retd.)"*
இன்னொன்னு: *"டீன் அறை - கார்மேகம் அண்ணன்"*
கார்மேகம் ரூம்ல ஒரு பிரேம். உள்ள அந்த வெறும் பேப்பர்.
கீழ எழுதியிருக்கு:
__"ஒரு நாள் இந்த பேப்பர் என்ன காலேஜ விட்டு துரத்துச்சு.
20 வருஷம் கழிச்சு இதே பேப்பர் என்ன காலேஜ்க்கு கூட்டிட்டு வந்துச்சு.
வித்தியாசம் பேப்பர்ல இல்ல.
அத பிடிச்ச கையில."_*
*நண்பர்களே. உங்க கையிலயும் ஒரு "வெறும் பேப்பர்" இருக்கும்.*
*"REJECTED"னு எழுதியிருக்கலாம். "FAIL"னு இருக்கலாம். "NO"னு இருக்கலாம்.*
*தூக்கி போடாதீங்க. மடிச்சு வச்சுக்குங்க. ஏன்னா யாரோ ஒருத்தர் வருவாரு. அதே பேப்பர்ல "APPROVED"னு எழுத.*
*அன்னைக்கு தெரியும். தோல்வி கூட ஒரு அப்ளிகேஷன் தான். அப்ரூவலுக்காக காத்திருக்குற அப்ளிகேஷன்.*
ஒரு ஜோசியர் ஜாதகம் பார்க்க ஒரு வீட்டிற்கு செல்கிறார். அங்கே 8 வயது பையன் ஒருவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அவனுடைய ஜாதகத்தை பார்த்த ஜோசியரோ, 'இந்த பையனுக்கு படிப்பே வராது. இவன் கல் உடைக்கத்தான் லாயக்கு படிப்பிற்காக இந்த பையனுக்கு செலவழிக்காதீர்கள்' என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
இது அந்த பையனின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. அவர் சொன்ன வார்த்தைகாகவே அந்த பையன் கடுமையாக படிக்கிறான். 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்குகிறான். அவனுக்கு M.B.B.S சீட் கிடைக்கிறது. அந்த பையன் நன்றாக அதையும் படித்து முடிக்கிறான். நெப்ராலஜியில் மிகப்பெரிய மருத்துவராக ஆகி சொந்தமாக ஒரு மருத்துவமனை கட்டுகிறான்.
அவருடைய மருத்துவமனைக்கு ஒரு பெரியவர் வருகிறார். முப்பது வருடம் கழித்து அவருடைய கிட்னியில் ஏதோ பிரச்னை என்று மருத்துவம் பார்ப்பதற்காக வருகிற அந்த பெரியவருக்கு மட்டும் ஸ்பெஷலாக டிரீட்மெண்ட் கொடுக்க சொல்லி இந்த டாக்டர் சொல்லிவிட்டு செல்கிறார்.
அந்த பெரியவருக்கு நன்றாக மருத்துவம் பார்த்து அவர் குணமடைந்து போகும்போது அந்த மருத்துவரிடம் சென்று கேட்கிறார். 'எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஸ்பெஷலான டிரீட்மெண்ட் கொடுத்தீர்கள்' என்று கேட்கிறார். அதற்கு அந்த டாக்டர் சிரித்துக்கொண்டே சொல்கிறார், நான் 8 வயதாக இருக்கும்போது, நான் கல் உடைக்கத்தான் லாயக்கு என்று நீங்கள் கணித்து சொன்னீர்கள். ஆனால், அந்த கல் உங்கள் கிட்னியில் இருக்கும் என்பதை உங்களால் கணிக்க முடியவில்லையே? என்று சொன்னாராம்.
ஜோதிடத்தில் கணிப்பது அனைத்துமே உண்மையாக இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு இருந்திருந்தால், அந்த பையன் ஒரு சிறந்த மருத்துவராக ஆகியிருக்க முடியாது. நாம் என்னவாக வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது நம் கையிலேதான் உள்ளது. ஜோதிடம், ஜாதகம் ஆகியவை நம் வாழ்க்கையை தீர்மானித்துவிட போவதில்லை. நம்முடைய விதியையே மாற்றும் வலிமை விடாமுயற்சிக்கு உண்டு. இதை நினைவில் வைத்துக்கொண்டு உழைத்துப்பாருங்கள். உங்களுக்கும் நிச்சயம் வாழ்வில் வெற்றிக்கிட்டும்
கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல,
மூன்று சென்டுல ஒரு வீடு.
இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு.
அந்த வீட்ல
ஒரு வயதான தம்பதிகள். அவங்கள தேடி
யாரும் வந்த மாதிரி இல்ல.
பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல.
நாங்க புதுசா கல்யாணம் ஆன
இளம் ஜோடி.
இனிமே தான் குழந்தை.
வார நாட்களில்
எங்க ரெண்டு பேருக்கும்
வேலைக்கு போய்ட்டு வரவே
சரியா இருக்கும்.
எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி.
காபி குடித்து விட்டு ஒரு மணி நேரம் பேசிய பின்பு தான் வீடுதிரும்புவோம். நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும்.
அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு தனி சுகம்.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் அவங்க வீட்டுக்கு போகும் போது.
காபி டப்பா மூடியை திறக்க முடியாம அந்த பாட்டி, தாத்தா கிட்ட கொடுத்து திறக்க சொல்வாங்க.
தாத்தாவும் மீசையை ஸ்டைல முறுக்கி விட்டுகிட்டு ஒரு வெற்றி சிரிப்புடன் திறந்து கொடுப்பார்
பாட்டி ஒரு நமட்டு சிரிப்புடன் அடுப்பங்கரைக்கு போயிருவாங்க.
இத ரெண்டு மூனு வாரம் பாத்துட்டு, போன வாரம் போயிருந்தப்ப பாட்டிக்கு மூடியை ஈஸியா தொறக்குற மாதிரி ஒரு கருவி device வாங்கி கொடுத்தோம்.
இந்த வாரமும் வழக்கம் போல்
எங்கள் ஞாயிறு மாலை visit.
வழக்கம் போல்
காபி டப்பாவுடன் தாத்தாவை அணுகினார் பாட்டி. தாத்தாவும் இறுமாப்புடன்
திறந்து கொடுக்க,
பாட்டி உள்ளே சென்றார்.
பாட்டி உள்ளே செல்ல,
என் மனைவியும் பின் சென்று..
"பாட்டி, ஏன் அந்த கருவியை device use பண்ணி நீங்க டப்பாவை திறக்கல. மறந்துடீங்களானு"
கேட்க …
பாட்டி சிரித்துக்கொண்டே கூறியது தான் இந்த கதையின் ஹைலைட்!
"குழந்தே,
இந்த மூடியை திறக்க எதுவும் தேவை இல்லை.
நானே திறந்திருவேன்.
அவர நான் தெறக்க சொல்றதுனாலே அவருக்கு என்னைவிட பலசாலின்னு ஒரு பெருமிதம். சந்தோசம்.
இந்த வீட்டு ஆம்பிளைனு ஒரு கெத்து. இன்னும் நம்ம இந்த வீட்டுக்கு உபயோகமா இருக்கோம் என்ற
ஒரு மகிழ்ச்சி. நான் இன்னும்
அவரை சார்ந்து இருக்கேன்னு
அவருக்கு ஒரு ஆளுமை.
திருமண வாழ்க்கையின் அடிப்படையே ஒருமித்து வாழ்வது தானே.
இன்னும் வாழப்போறது
கொஞ்சநாள் தான்.
யாரும் யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கோமென்ற நினைப்பு இல்லாமல் ஒருமித்து சந்தோசமா வாழனும். அதுக்குத் தான் இந்த நாடகம்"னு சொன்னாங்க.
கொஞ்ச நேரம்
என்னால ஒன்னும் பேச முடியல.
இந்த மூடியில இவ்வளவு விஷயமா?
வயசானவங்களை underestimate பண்ணக்கூடாது.
அவங்க செயல்களிலும் அர்த்தம் இருக்கு. தன்னாலே யாருக்கும் பிரயோஜனம் இல்லைனு ஒரு நெனப்பு யாருக்கும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அழகா சொல்றாங்க. செய்றாங்க.
இந்த பாடம் எல்லாம்
எந்த பள்ளிக்கூடத்திலும் சொல்லிக்குடுக்க மாட்டாங்க.
இந்த மாதிரி தாத்தா பாட்டிகளை பார்த்து தான் கத்துக்கணும்.
அதுக்கு அவங்க
நம்மளோட இருக்கணும்.
தாத்தா,பாட்டியோடு வாழ்வது வரம் என்றால் பேரன்,பேத்தியோடு வாழ்வது கொடுப்பினை..*
பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாசத்துக்கு கொடுங்கள்..
வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் அலுவலக அக்கவுண்டன்ட் ஒருவர் தன் பக்கத்து டேபிள் நண்பரிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார்.
அவர் ரொம்பவும் சீரியஸாய் என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக்கொண்டிருந்தார்.
"வீட்ல எலி பொறி இருக்கா..?"
"இருக்கு..."
"அதுல ஒரு கருவாட்டுத்துண்ட மாட்டி வச்சிடு...!"
"நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..."
"ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..."
"மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..."
"சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..."
"கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..."
"அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..."
அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்கமாட்டேம்பா...!"
மிகுந்த டயர்டாகிப்போன அவர் அந்த அக்கவுண்டன்டிடம் கேட்டார்.
"கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல....
அப்புறம் அந்தப் பாழாப்போன எலி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?"
"இந்தப் பைத்தியம் இங்கே கண்ணை மூடிக் கொண்டு நிற்கிறதே! சரபோஜி மகாராஜா இங்கே வந்திருக்கிறார். கோயிலுக்கு வருவாரென்று தெரிகிறது. இந்தப் பைத்தியம் அம்பிகை சந்நிதியில் எதையாவது உளறிக் கொண்டிருக்குமே!" என்றார் ஒருவர்.
"உளறினால் உமக்கு என்ன? மகாராஜா வந்தால் யாராவது இவரைக் கழுத்தில் கைகொடுத்து நெட்டித் தள்ளுகிறார்கள். மகாராஜா வரும் வரையில் இவரை இங்கே நின்றிருக்கும்படி செய்வார்களா, என்ன?" என்றார் மற்றவர்.
திருக்கடவூரில் அபிராமியம்மையின் சந்நிதியில் தம்மை மறந்த நிலையில் நின்றுகொண்டிருந்தார் அபிராமிபட்டர். உடம்பில் பளிச்சென்ற திருநீறு; நெற்றியில் திருநீற்றுக்கு இடையே இரண்டு புருவத்துக்கும் நடுவில் அகலமான குங்குமக்கீற்று - இந்தக் கோலத்தோடு நின்றிருந்தார். அவரைப் பற்றியே அந்த இரண்டு பேர்வழிகளும் பேசிக் கொண்டிருந்தார்கள். அபிராமிபட்டர் காதில் அந்தப் பேச்சு விழவில்லை. அவர் தாம் இந்த உலக நினைவிலேயே இல்லையே!
தேவியைத் தீவிரமாக உபாசனை புரிவதில் சிறந்தவர் அபிராமிபட்டர் யந்திரங்களை வைத்து மந்திர பூர்வமாகத் தந்திரநெறியில் அம்பிகையை வழிபட்டு வந்தார். பரம்பரையாக அம்பிகையை உபாசிக்கும் குடும்பம் அது. அவரோ அந்த உபாசனையில் மிகவும் முறுகியவர். பூஜை செய்வதும், கோயிலுக்கு வந்து அம்பிகையைத் தரிசிப்பதும் அவருடைய வாழ்வின் முக்கியமான வேலைகள்.
கொஞ்சம் சோதிடம் பார்ப்பார். நாள் நட்சத்திரம் பார்த்துச் சொல்வார். சிலர் அவரிடத்தில் அன்பு வைத்துப் பழகினார்கள். சாதுக்களுக்கு அவர் சிறந்த பக்தர் என்பது தெரியும்.
அவர் யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை. அபிராமியின் திருவருளுக்கு இலக்காகி அத்தேவியினுடைய தியானத்தால் உண்டாகும் இன்பப்போதையிலே அவர் மிதந்து கொண்டிருப்பார். ஆகையால் யாராவது ஏதாவது கேட்டால் அதைக் கவனிக்காமல் வேறு எதையாவது சொல்வார். இதனால் சிலர் அவரைப் பைத்திய மென்று எண்ணிவிட்டார்கள். பலர், "ஏதோ தூர்த்தேவதையை வழிபடுகிறார். அதனால் தான் அப்படி இருக்கிறார்" என்றனர். அம்பிகையின் சந்நிதானத்தில் சில சமயங்களில் தம்மை மறந்து கூத்தாடுவார். சுலோகங்களை இசைப்பார். புதிய பாடல்களைப் பாடுவார். தமிழில் பக்திச் சுவை ததும்பும் பாடல்களை இயற்றும் ஆற்றல் அவருக்கு இருந்தது. யாராவது பார்த்து நகைப்பார்களே என்ற நினைவு அவருக்கு இல்லை. அம்பிகையை நினைந்து அலறுவார்; தேம்பித் தேம்பி அழுவார். நகரிகமாக வந்து நின்று சுற்று முற்றும் பார்த்துத் தீபாராதனை ஆகும்போது கன்னத்தில் அடித்துக்கொண்டு, அம்பிகையின் குங்குமப் பிரசாதத்தை வாங்கி இடது கையில் வைத்துக்கொண்டு, நுனிவிரலால் சிறிது எடுத்து நெற்றியில் நிதானமாகவும் ஒழுங்காகவும் இட்டுக் கொண்டு, பாக்கிக் குங்குமத்தை அருகில் உள்ள தூணின்மேல் தடவிவிடும் மகாஜனங்களின் இடையில் அவர் பைத்தியக்காரராகத் தோற்றியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
அபிராமிபட்டர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரை அவ்விடத்தை விட்டுப் போகும்படி சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. கடவுளின் சந்நிதானத்தில் வணங்கும் சுதந்தரத்தைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
சரபோஜி மன்னர் ஆலய தரிசனம் செய்யும் பொருட்டு வந்தார். அவர் வந்தால் தனியாகவா வருவார்? ஒரு பட்டாளம் ஜனங்களுடன் வந்தார். ஆலயத்தில் அப்போது ஒரு புதிய பரபரப்பு எங்கும் உண்டாயிற்று. குருக்கள் மார் சுறுசுறுப்பாக ஓடினார்கள். மாலை தொடுப்பவர்கள் படபடப்பாக இருந்தார்கள். வாத்தியக்காரர்கள் ஜாக்கிரதையாக இருந்தார்கள்.அரசர் சுவாமி சந்நிதிக்குப் போய் விட்டு அம்பிகையின் சந்நிதிக்கு வந்தார்.
இந்த அல்லோல கல்லோலத்துக்கு இடையே அபிராமி பட்டர் ஒன்றையும் உணராமல் ஒளியாய், ஒளிரும் ஒளிக்கு இடமாய், எண்ணில் ஒன்றும் இல்லா வெளியாய், வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மையின் அடித்தாமரையிலே ஈடுபட்டு நின்றார். அப்போது சரபோஜி மன்னர் அங்கே வந்தார். அவரைக் கண்டு யாவரும் வழிவிட்டு விலகி நின்றனர். இந்த அந்தணர் மாத்திரம் விலகாமல் நின்றார். அவர் இந்த உலகத்தில் இருந்தால் தானே? குருக்கள் முதலியவர்கள் அவரை உறுத்து உறுத்துப் பார்த்தார்கள். அவர் கண்ணை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர்கள் பார்த்த பார்வை அவருக்கு என்ன தெரியும்?
சரபோஜி மன்னர் உடன் வந்த ஒருவரிடம், ''இவர் யார்?" என்று கேட்டார். கொஞ்சம் ஜோஸ்யம் தெரிந்தவர். ஒருமாதிரி. ஏதோ சிறு தெய்வ உபாசனை உள்ளவர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்" என்று மெல்லச் சொன்னார் அந்த மனிதர். அதைக்கேட்ட சரபோஜி மன்னர் அபிராமி பட்டரை ஏற இறங்கப் பார்த்தார். அந்தப் பக்தசிரோமணி மன்னர் தம்மைப் பார்ப்பதை உணர்ந்தாரா? இல்லை.
விசேஷ அர்ச்சனை ஆயிற்று.மணி அடித்தார்கள். தீபாராதனை ஆயிற்று. யாவரும் ஆரவாரம் செய்து கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். அந்தக் கோஷத்தினால் அபிராம பட்டரின் தியானம் கலைந்தது. கண்ணை விழித்துப் பார்த்தார். அம்பிகை சந்நிதியில் ஒரேகூட்டம். எதிரே சரபோஜி மன்னர் நின்று கொண்டிருந்தார்.
விழித்தவுடன் அரசர் அவரிடம், "இன்று என்ன திதி?" என்று ஒரு கேள்வி கேட்டார். சந்திர மண்டிலத்தில் அமுதமயமாய் வீற்றிருக்கும் அம்பிகையைத் தம் அகக்கண்ணில் தரிசித்து அங்கே சூழும்சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்ற திருக்கோலத்தில் ஈடுபட்டிருந்த பட்டர் காதில் மன்னரின் வார்த்தைகள் அரைகுறையாகவே விழுந்தன. "பௌர்ணமி" என்ற வார்த்தைகள் அவர் வாயினின்று நழுவின. அவர் பூர்ண சந்திர மண்டிலத்தை உள்ளே கண்டவர் அல்லவா?
அன்று அமாவாசைக்கு மறுநாள்; பிரதமை. அபிராமி பட்டரோ பௌர்ணமி என்று சொன்னார்.
அப்படிச் சொன்னவுடன் பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டுச் சிரித்தார்கள். சரபோஜி அரசரும் சற்றுத் திகைத்தார். "அவர் ஒரு மாதிரி" என்று ஒருவர் சொன்னது உண்மை என்று எண்ணலானார்.
தரிசனம் செய்த மன்னர் தாம் தங்கியிருக்கும் மாளிகைக்குப் போய்விட்டார். அபிராமி பட்டருக்கு மெல்ல மெல்ல உலக நினைவு வந்தது. அப்போது தாம் தவறிப் போய்ப் பௌர்ணமி என்று சொன்னது தெளிவாயிற்று. 'அடடா என்ன காரியம் செய்து விட்டோம்! முன்பே பைத்தியக்காரப் பட்டம் கட்டியிருக்கிறார்கள். இப்போது அரசர் முன்பு அதை உறுதி செய்து விட்டோமே!' என்று வருந்தினார். அடுத்த கணம் அவர் மனம் அம்பிகையை நினைந்தது."தாயே! எல்லாம் உன் செயல். நன்றே செயினும் தீதே வரினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை. உன் சந்நிதியில் என்னிடம் தோன்றிய வார்த்தை என் முயற்சியால் வந்தது அல்ல. இதனால் வரும் நன்மை தீமைகள் என்னைச் சார்வன் அல்ல. எல்லாம் உன் திருவிளையாடல்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அவர் மனம் இன்னும் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த நிலை மாறுவதற்காக அபிராமியம்மையைத் துதிக்கத் தொடங்கினார். புதிய செய்யுட்களால் அந்தாதியாகப் பாமாவை தொடுக்கலானார். ஒவ்வொன்றாகப் பாடல் வந்து கொண்டிருந்தது.
ஆலயத்திலிருந்து சென்ற மன்னருக்கு அபிராமி பட்டரின் உருவம் மனசை விட்டுப் போகவே இல்லை. அவர் நெடுநேரம் புறவுலகத்தையே மறந்து நின்றதைக் கவனித்தவராதலின் அவரைப் பைத்தியமென்று துணியக்கூடவில்லை. இந்த நிலையில் அவருக்குச் சற்று உறக்கம் வந்தது. அந்த உறக்கத்தில் சின்னஞ் சிறிய கனவு ஒன்றை அவர் கண்டார். எங்கும் இருள் கவிந்திருக்கிறது. அமாவாசை இருட்டு. அப்போது திடீரென்று ஒரு சோதி தோன்றுகிறது. எதிரே அம்பிகையின் தோற்றம். அம்மை தன் காதுத் தோட்டில் ஒன்றை எடுத்து வானில் விசுறுகிறாள். அது நேரே கீழ்த்திசையில் சென்று நிற்கிறது. என்ன ஆச்சரியம்! பூரண சந்திரன் உதயமாகி விட்டான்.அம்பிகையின் தாடங்கம் சந்திரனைப் போல ஒளிவிடுகிறது.
உலகத்தை மூடியிருந்த இருள் இப்போது இல்லை. பால் போன்ற வெண்ணிலவு வீசுகிறது. குன்றும் மலையும், ஆறும் குளமும், காடும் மேடும், முள்ளும் மலரும், மரமும் செடியும் அந்த நிலவொளி யில் ஒரு மோகன சோபையைப் பெற்றுத் திகழ்கின்றன.
அமாவாசையாகிய அன்று பெளர்ணமி வந்துவிட்டதா என்ன? அரசர் கணநேரம் இந்த யோசனையில் ஆழ்ந்தபோது அவர் அருகே அபிராமி பட்டர் தோன்றுகிறார். "அதோ அதோ! பூர்ண சந்திரன்!" என்று வானத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
அம்பிகையைத் தரிசித்த ஆனந்தத்தில் மூழ்கி நின்ற மன்னர் அபிராமி பட்டரை அடி பணியச் செல்கிறார்.
கனவினிடையே மன்னர் விழித்துக் கொண்டார். கனவிலே கண்ட நிலவொளி இன்னும் தம்மைச் சூழ்ந்து விரிந்திருப்பது போன்ற பிரமை அவருக்கு இருந்தது. கனவேயானாலும் அம்பிகையைத் தரிசித்தார் அல்லவா? அதனால் உண்டான புளகம் இன்னும் அடங்கவில்லை. மெல்ல மெல்ல இந்த இன்ப மயக்கம் தெளிந்தது. எழுந்து அமர்ந்தார். அபிராமி பட்டர் ஒரு மகான் என்ற நினைவு அவருக்கு உண்டாயிற்று. கனவிலே பட்டரை வணங்கினார் அரசர். நனவிலும் வணங்க வேண்டும் என்ற கருத்து உண்டாயிற்று. அதில் வேகமும் இருந்தது. அரசர் அபிராமி பட்டர் வீட்டை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்.
அரசர் அந்தச் சிறுகுடிலில் நுழைந்தார். அவர் நுழைவதற்கும் அபிராமி பட்டர் 79-ஆவது பாட்டை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அந்தப் பாடலை மீட்டும் சொல்லித் துதித்தார்.
விழிக்கே அருள் உண்டு அபிராம
வல்லிக்கு; வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கு; அவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க
ளே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்
மோடுஎன்ன கூட்டு இனியே?
[அபிராம வல்லியின் விழியில் அருள் உண்டு; வேதம் சொன்னவாறு அத்தேவியை வணங்க எமக்கு மனம் உண்டு; அவ்வழி இருக்கவும் பழிதரும் வழிகளிலே திரிந்து கொடிய பாவங்களையே செய்து பாழான நரகக் குழியில் ஆழும் இழிதகை யோருடன் இனி நமக்கு என்ன உறவு வேண்டும்?]
என்ற பாடல் அது.
சரபோஜி மன்னர் உள்ளே வந்து நின்றார். அபிராமிபட்டர் எழுந்தார். "சுவாமி! தாங்கள் எழுந் திருக்க கலாகாது. இன்று தங்களை அவமதித்த பெரும் பாவத்தைச் செய்தேன். ஆனாலும் தங்களைத் தரி சித்த புண்ணியத்தால் அம்பிகையின் தரிசனம் கிடைத்தது" என்று சொல்லியபடியே அரசர் அபிராமிபட்டர் திருவடியில் பணிந்தார். பட்டர் ஒன்றுமே விளங்காமல் விழித்தார். உடன் வந்தவர்களும் திடுக்கிட்டுப் போயினர். அரசர் தாம் கண்ட கனவைச் சொன்னார். "உங்கள் பெருமையைக் கனவிலே கண் டேன். அம்பிகை உங்களுக்காக அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கினாள். இந்தப் பேதைக்கும் தன் காட்சியை நல்கினாள். என் உள்ளத்தில் படர்ந்த இருளை ஓடச் செய்தாள். நீங்கள் அதற்கு வழிகாட்டினீர்கள்" என்று கூறி உருகினார்.
அபிராமிபட்டர் அம்பிகையின் திருவருளை எண்ணி உருகினார். "தாயே ! நீ எப்படி யெல்லாம் என்னை ஆட்டுவிக்கிறாய்!" என்று துதித்தார்.
கூட்டிய வாஎன்னைத் தன் அடி
யாரில்; கொடியவினை
ஓட்டிய வாஎன்கண் ஓடிய
வா! தன்னை உள்ளவண்ணம்
காட்டிய வா! கண்ட கண்ணும்
மனமும் களிக்கின்றவா !
ஆட்டிய வாநடம்! ஆடகத்
தாமரை ஆரணங்கே!
[பொற்றாமரையில் எழுந்தருளிய தேவி, என்னைத் தன் அடியார்களில் ஒருவனாகச் சேர்த்தியவாறு என்ன வியப்பு!என் கொடிய பாவங்களை ஓட்டியவாறு என்ன ஆச்சரியம்! எனக்கு அருள் செய்யும் பொருட்டு என்னிடம் ஓடிவந்தவாறு என்னே தன்னை உள்ளபடி நான் தரிசிக்கும் வண்ணம் காட்டி யருளியது என்னே! அப்பெருமாட்டியின் தரிசனம் செய்த என் கண்ணும் மனமும் களிக்கின்றவாறு என்னே! என்னைத் தேவி கூத்தாட்டியவாறு என்ன வியப்பு! ]
என்று பாட்டு வந்தது. அரசர் அங்கேயே அமர்ந்து விட்டார். அபிராமியின்மேல் அதுகாறும் 80 பாடல்கள் நிறைவேறி யிருந்தன. "மற்றவற்றையும் நிறைவேற்ற வேண்டும். அவற்றை நான் கேட்கும்படி கிருபை பாலிக்க வேண்டும் '' என்று வேண்டிக் கொண்டார் மன்னர். அப்படியே அபிராமி பட்டர் மேலே இருபது பாடல்கள் பாடி அபிராமி அந்தாதியை முடித்தார்.
அரசர் விடைபெற்றுச் சென்றார்; பிறகு தஞ்சைக்குப் போனார். அபிராமி பட்டரும் அவருடைய பரம்பரையினரும் பெறும் வண்ணம் சில நிலங்களை வழங்கினார். அபிராமிபட்டர் அபிராமியின் தியானத்தில் மாறாமல் நின்றார். அவர் பாடிய அந்தாதி பக்தர்கள் உள்ளத்தில் இன்றும் நின்று நிலவுகிறது.



