- · 1 friends
-
1 followers
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி, இணைய வழியில் வன்முறையைத் தூண்டும் அமைப்புக்களை தீவிரவாத பட்டியலில் இணைப்பதாக அறிவித்துள்ளார்.
இணையத்தின் ஊடாக இளையோர் மத்தியில் வன்முறையைத் தூண்டும் 764 என்ற அமைப்பினை தீவிரவாத இயக்கமாக கனடா அறிவித்துள்ளது.
இந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்த உலகின் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.
கனடிய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அமைப்புடன் மேலும் நான்கு அமைப்புகள் கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன:
764, மெனியக் மெர்டர் கல்ட், டெரோகிராம் கலக்டிவ், இஸ்லாமிய ஸ்டேட் மொசாம்பிக் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு தீவிரவாத இயக்கப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
அரசின் அறிக்கையில், 764 உள்ளிட்ட தீவிரவாத பட்டியலில் இணைக்கப்பட்ட அமைப்புக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களை பயன்படுத்தி ஆட்சேர்ப்பு நடடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த அமைப்புகள் தீவிரவாத சிந்தனைகளை பரப்புதல், மற்றும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வன்முறையைத் தூண்டுவது என்பனவற்றில் ஈடுபடுகின்றன என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவில் பொலிஸார் பலமுறை பெற்றோர்களுக்கு இந்த வலைப்பின்னலின் அபாயங்களை எச்சரித்துள்ளது. 764 அமைப்பு குழப்பம் மற்றும் வன்முறையின் மூலம் நாகரிக சமுதாயத்தை அழிக்க முயல்வதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த அமைப்புகள் குழந்தைகளை குறிவைக்கின்றன
அவற்றைத் தடுப்பதற்கு சட்ட அமலாக்கத்துக்கு மேலும் அதிகாரங்கள் தேவை. இந்த புதிய அறிவிப்பு அதை வழங்குகிறது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தெனாலி என்ற ஊரில் ராமன் என்பவன் வசித்து வந்தான். ராமன் சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். பிறரிடம் உள்ள தவறுகளைக்கூட நைச்சியமாகச் சொல்லக்கூடியவன். அவன் கிருஷ்ணதேவராயர் சபையில் விதூஷகனாக இருந்தான்.
ஒரு நாள் சபையில் காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருந்தது. "பால் வேண்டாத பூனையும், பழம் தொடாத குரங்கும் உண்டோ? அதுபோல் பணத்தை விரும்பாத மனிதரும் கிடையாது
பணத்தைக் கொடுத்துக் காரியத்தை முடி" என்றார் ஒருவர்.
தெனாலிராமன் குறுக்கிட்டு, "உலகில் கிடையாது என்பதே கிடையாது. தேடினால் பால் குடிக்காத பூனையும், பழம் விரும்பாத குரங்கும், பணம் வேண்டாத மனிதரும் நிச்சயம் கிடைப்பர்" என்று சொன்னான்.
அரசர் எரிச்சலுடன் "ராமா! மறுத்துப்பேச வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லாதே!" என்றார்.
"இம்மூன்றையும் நான் நிரூபித்தால் எனக்கென்ன பரிசு?" என்று சவாலாகக் கேட்டான் ராமன்.
"ஆயிரம் பொன் தருகிறேன். முடியவில்லை என்றால் பதவியிலிருந்தே நீக்கப்படுவாய்" என எச்சரித்தார் ராயர்.
ராமன் ஒப்புக்கொண்டு புறப்பட்டான்.
ஒரு பூனைக்குட்டியைக் கொண்டுவந்து அதற்கு சாதம் போட்டான். பாலைக் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி அதன் முன்வைத்தான். ஆவலாக வாயை வைத்த பூனை வாயைச் சுட்டுக்கொண்டு ஓடியது. தினமும் இப்படியே செய்துவந்ததால் பூனை வெள்ளையாக எதைப் பார்த்தாலும் மிரண்டு ஓடியது.
அடுத்து குரங்காட்டியிடமிருந்து ஒரு குரங்குக் குட்டியை வாங்கி அது தன்னிடம் நன்கு பழகியபின் ஒரு நல்ல பெரிய வாழைப்பழத்துக்குள் ஒரு நீளமான இஞ்சியை வைத்து அதற்குக் கொடுத்தான். அதுவும் ஆசையாகச் சாப்பிட்டது. ஆனால், சற்று நேரத்துக்கெல்லாம் தொண்டை எரிய ஆரம்பிக்கவே, அது தரையில் புரண்டு அலறியது. காறி உமிழ்ந்தது. தினமும் ராமன் அதற்குப் பச்சைவாழை, செவ்வாழை, மொந்தன், ரஸ்தாளி, மலைப்பழம் என்று விதவிதமாகக் இஞ்சிச் சொருகிக் கொடுத்ததால் அது வாழைப்பழத்தைக் கண்டாலே காததூரம் ஓடியது.
அடுத்து பரம ஏழையான ஒரு மனிதனை சினேகம் பிடித்துக் கொண்டான் ராமன்.
"அவனிடம் நீ இருபத்து நான்கு மணி நேரமும் என்னுடனேயே இருக்கவேண்டும். ஒரு வேளை சோற்றைக் கண்ணால் பார்க்காமலிருந்தால் பத்து பொன். நாள் பூராவும் பட்டினி கிடந்தால் முப்பது பொன். பட்டினி கிடப்பதாய் வெளியில் சொன்னால் நான் பொன் தரமாட்டேன். அது மட்டுமல்ல நீ எனக்கு முப்பது பொன் தரவேண்டும் அல்லது அதற்கு ஈடாக உழைக்க வேண்டும்.
இப்படி உன்னால் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் இருக்கலாம். முடியவில்லை என்றால் சொல்லிவிட்டு அதுவரை உள்ள வெகுமதியை வாங்கிக்கொண்டு செல்லலாம். திருட்டுத்தனமாக ஒரு பருக்கை சாப்பிட்டாலும் பரிசு கிடையாது. நீ உயிரோடிருக்க நான் குளிகைகள் தருவேன். உன்னால் முடியாது என்று சொன்ன பிறகு நான் உன்னை மன்னரிடம் அழைத்துச் செல்வேன்.
அரசர் பணம் தருவார். அதைப் பெற்றுக் கொண்டால் நான் தந்ததை மூன்று மடங்காகத் திருப்பித் தரவேண்டும். மறுத்தால் நீ பெற்றிருக்கும் வெகுமதியோடு நூறு பொற்காசுகள் சேர்த்துத் தருவேன்.என்ன சொல்கிறாய்?" என்று கேட்டான்.
ஏழை மனிதன் யோசித்தான்.
'வருமானமில்லாமல் தினமும் பட்டினி கிடக்கிறோம். இங்கே ஒரு நாளைக்கு முப்பது பொன். பத்து நாள் பட்டினி கிடந்தால் முந்நூறு பொன்னோடு கூடுதலாகவும் நூறு பொன் கிடைக்கும். கண்ணியமாக வியாபாரம் செய்து பிழைக்கலாம். எதற்காகவோ அரசரிடம் கூட்டிப் போகிறான். இவனில்லாமல் அரசரைப் போய் பார்த்தால் என்ன கிடைக்கும்? பத்தோ, இருபதோ, நூறோ பொன் கிடைக்கலாம்! கிடைக்காமலும் போகலாம்! அதனால் ராமன் சொன்னபடியே கேட்போம்' என முடிவெடுத்து ராமனிடம் சம்மதம் தெரிவித்தான்.
ராமன் இரவு தூங்கும்போதுகூட இருவரையும் சங்கிலியால் பிணைத்திருந்தான். பத்து நாட்கள் சென்றன. என்னதான் பசியாதிருக்கக் குளிகை சாப்பிட்டாலும் நா ருசியாகச் சாப்பிட மனம் ஆலாய் பறந்தது. அவன் தன் விரதத்தை முடித்துக் கொள்வதாகச் சொல்ல, ராமன் அவனோடு அரண்மனைக்குப் புறப்பட்டான்.
மன்னரை வணங்கி "இவரே பணம் வேண்டாத மனிதர்" என்றான் ராமன். ஒரு தட்டு நிறைய பொற் காசுகளும் ஆபரணங்களும் கொண்டு வரச்சொல்லி மன்னர் அவன் எதிரே வைத்தார்.
"தேவையானதை அள்ளிக்கொள்" என்றார். "இல்லை. இதில் ஏதோ சூதிருக்கிறது" என்று நினைத்த ஏழை, “அரசே! இதில் ஒரு பொற்காசுகூட எனக்கு வேண்டாம்" என மறுத்துவிட்டான்.
"என்னப்பா, அதிசயமாயிருக்கிறது. எல்லோரும் பணத்துக்கு ஆலாய் பறக்க, நீ ஏன் பெற்றுக்கொள்ள மறுக்கிறாய்?" என்று வியப்போடு வினவினார் வேந்தர்.
"பணத்தைத் தின்னமுடியுமா? பசி வந்தால் சோறுதான் வேண்டும். பணத்தைப் பார்த்தால் அதில் குழந்தையை, மனைவியை, அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா? என்னைச் சீக்கிரம் விடுங்கள். நான் போகவேண்டும்" என்று அவசரப்பட்டு ஓடினான்!
"தெனாலிராமா! ஏன் இவன் இப்படிப் பேசுகிறான்?'' என்று அரசர் கேட்க, "அதை அப்புறம் சொல்கிறேன். நீங்கள் பால் குடிக்காத பூனையையும் பழம் தின்னாத குரங்கையும் பார்க்கவேண்டாமா?" என்று இரண்டையும் காண்பித்தான்.
அரசரும் பார்த்தனர். அவையோரும் பிரமிப்போடு
ஒரு அகலமான பாத்திரத்தில் சுவையான பசுவின் பாலை எடுத்துவரப் பணித்தார் வேந்தர். பால் வந்தது.
தெனாலிராமனின் பூனைப் பாலைப் பார்த்தது தான் தாமதம்! நாலுகால் பாய்ச்சலில் எகிறி ஓடியது. பால் மட்டுமா? வெண்ணெய், தயிர் எதையுமே முகரவும் மறுத்தது.
குரங்கை ஒருவர் பிரியமாகத் தடவிக்கொடுத்து மலைவாழைப்பழத்தை உரித்துக் கொடுக்க, அவரை அது பிறாண்டிவிட்டு ஓடியது.
ஆயிரம் பொன்னை வாங்கிக்கொண்டு காரணத்தைச் சொன்னான் ராமன்
அரசே ! எதையும் எவருக்கும் வேண்டாததாக ஆக்கமுடியும்! காலமும் தேவையும்தான் ஆசையை உண்டாக்குகிறது. பசித்த மனிதனுக்குப் பணம் மட்டுமே முக்கியமாகாது. அம்மணமாக நிற்கும் மனிதன் ஆடையைத்தான் விரும்புவான். சும்மா பழமொழி சொன்னால் ஆயிற்றா?" என்றான்.
அரசர் அசந்து போனார்!
திரு சோ அவர்கள் ஓரெழுத்துப் பெயருடன் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா. அப்படி ஒரேழுத்தில் பெயரைக் கொண்டு, தமிழ் உலகிலும் நாடக உலகிலும் பத்திரிகைத் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் புகுந்து புறப்பட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை அள்ளியள்ளித்தந்தவர்... சோ!
இவரின் பெயர் என்னவோ ராமசாமிதான். தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ருபூதம் என மிகப்பெரிய வக்கீல் குடும்பம். அதனால்தானோ என்னவோ, சென்னை பி.எஸ். பள்ளியில் படிப்பைத் தொடங்கியவர், பிறகு சென்னை சட்டக்கல்லூரிக்குச் சென்று படித்தார் ராமசாமி. உயர் நீதிமன்ற வக்கீலாகப் பணியாற்றினார். முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். இவையெல்லாம்... குடும்பப் பாரம்பரியத்தின்படி அமைந்தது. அல்லது அமைத்துக் கொண்டார்.
பால்யத்தில், டீன் பருவம் முடிந்து 20-வது வயதில், நாடகங்களை அதிகம் பார்த்தார் ராமசாமி. சென்னை சபாக்களில் நாடகம் மேடையேறினால், அங்கே ராமசாமி, நாடகத்தைப் பார்க்க முதல் ஆளாக இருப்பார்.
பிறகு, நாடகத்தில் நடிக்க ஆர்வம் பிறந்தது. அதன்படி, ‘கல்யாணி’ எனும் நாடகத்தில் நடித்தார். இவரின் ‘பாடி லாங்வேஜ்’ வித்தியாசமாக இருந்தது. கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற மேனரிஸம் அனைவரையும் கவர்ந்தது. ’ராமசாமிக்கு நடிப்பும் நல்லா வருதே..’ என்று வீடு கொண்டாடியது. நட்பு வட்டமும் பாராட்டியது.
அதன் பிறகு, ‘தேன்மொழியாள்’ எனும் நாடகம். அதில் இவரின் கேரக்டர் பெயர் “சோ’. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த நாடகம். எஸ்.ராமசாமி எனும் பெயர் ‘சோ’ ராமசாமி என்றானது. பிறகு, தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். இயக்கி நடிக்கவும் செய்தார். இப்போது ‘ராமசாமி’ போய், ‘சோ’ எனும் பெயர் நிலைக்கத் தொடங்கியது.
சோவின் நாடகத்தில் அரசியல் இருக்கும். ஆனால் சீரியஸாக அதைக் கையாளமாட்டார். காமெடியும் நையாண்டியும் என நக்கலடிப்பார். சமூகத்தில் நடக்கிற அவலங்களையும் சட்ட மீறல்களையும் சாடி, பகடிகள் செய்வார். மக்களையே குற்றம் சுமத்தி, கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் ரசித்து கைதட்டினார்கள் ரசிகர்கள்.
’சம்பவாமி யுகே யுகே’ எனும் நாடகம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பிரபலம். ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை இருபது முறை முப்பது முறை பார்த்தவர்களெல்லாம் உண்டு. இந்த நாடகங்களெல்லாம் தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் என 1600-க்கும் மேல் மேடையேறிக் கலக்கின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சோ நாடகங்களை மேடையேற்றினார். இந்தப் பெயருக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார் சோ.
சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ நடிகர் சோ வின் முதல் படம். இதையடுத்து சிவாஜியுடன் ஜெமினியுடன் எம்ஜிஆருடன் ஜெய்சங்கருடன் என முன்னணி நடிகர்கள் பலருடன் தொடர்ந்து நடித்தார். இதேசமயத்தில், பத்திரிகைகளிலும் கதைகள் எழுதினார். நாடகங்கள் எழுதினார். நாவல்கள் எழுதினார். வக்கீல் பணியையும் பார்த்தார்.
’சோ சோர்ந்து போய் யாருமே பார்த்ததில்லை. எப்போதும் கலகலவென இருப்பார். எதிரில் இருப்பவர்களையும் சந்தோஷ மனநிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தாலும், அதைச் சிரித்துக் கொண்டே ‘டீல்’ செய்வதில் சோ சார், மிகப்பெரிய ரோல்மாடல் பலருக்கும்’’
இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்க, அவரின் சகோதரர் முக்தா வி.ராமசாமி தயாரிக்க, ‘முக்தா பிலிம்ஸ்’ எனும் பெயரில் ஏராளமான படங்கள் வெளிவந்தன. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் பல படங்களில் சோ நடித்திருக்கிறார். சில படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். வசனம் எழுதியிருக்கிறார். இப்படி நிறைய பங்களிப்புகளை திரையுலகில் செய்திருக்கிறார்
தனது சித்தி மீது சோவுக்கு மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உண்டு. நடிகை ரம்யா கிருஷ்ணனின் பாட்டிதான் சோவின் சித்தி. சித்தியின் மீது உயிரையே வைத்திருப்பார் சோ. தன் கதைகளை அவரிடம் படித்துக் காட்டி, சித்தியின் ரியாக்ஷனைக் கவனிப்பார் சோ.
நிறைகுடம்’ படம், இயக்குநர் மகேந்திரனின் கதை. சோ வசனம். முக்தா சீனிவாசன் இயக்கம். படத்தில், வாணிஸ்ரீயிடம் சிவாஜி, கவிதையாகப் பேசுகிற வசனக் காட்சி.
“இந்த சீன் முக்கியமான சீன். பிரமாதமா, கவிதை எழுதிடுறா’’ என்று சிவாஜி உட்பட எல்லோரும் சொல்ல, ‘’கவலையே படாதீங்க. கலக்கிடுறேன்’’ என்று சொன்னார் சோ. மறுநாள்... அந்தக் காட்சி எடுக்கிறார்கள். கவிதை பேப்பர், சிவாஜியிடம் வருகிறது. சோவை ஏற இறங்கப் பார்த்தார். அட்டகாசமாக நடித்துக் கொடுத்தார்.
‘’சோவை வரச்சொல்லுப்பா’’ என்றார். சோ வந்தார். முக்தா சீனிவாசனும் இருந்தார். ‘’இந்த வசனக் கவிதையை இவன் எழுதல. அநேகமா கவிஞர்கிட்ட (கண்ணதாசன்) கேட்டு வாங்கிட்டு வந்திருக்கான். என்ன சரியா?’’ என்று செல்லமான அதட்டலுடன் சிவாஜி கேட்க,
‘’ஆமாம், அதுக்கென்ன, ஜாலியா எழுதுறவன்கிட்ட கவிதையைக் கேட்டா என்ன அர்த்தம்?
அதான் நம்ம கவிஞர்கிட்ட காட்சியைச் சொல்லி அஞ்சே நிமிஷத்துல வாங்கிட்டுவந்துட்டேன்’’ என்று சோ சொல்ல, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
கர்மவீரர் காமராஜர் எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர். கைக்கடிகாரம்கூட கட்டமாட்டார். பாக்கெட்டில் மணிபர்சோ, பேனாவோகூட இருக்காது. ஒரு சிறு கைக்குட்டை மட்டும் வைத்திருப்பார். அதை எடுத்து முகம்கூட துடைக்கமாட்டார்.
"கடிகாரம்கூட இல்லாமல் இருக்கின்றீர்களே... நேரம் தெரியவேண்டுமானால் என்ன செய்வீர்கள்?" என்று எழுத்தாளர் சாவி அவரிடம் கேட்டார்.
அதற்கு காமராஜர் அவருக்கே உரிய பாணியில், "கடிகாரம் எதுக்குன்னேன், யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்கண்ணேன்” என்றார் காமராஜர்.
ஆடம்பரத்தையும், வீண் விளம்பரத்தையும் கட்டிக்கொண்டு பவனிவரும் இன்றைய தலைவர்கள் காமராஜர் போன்ற மாமனிதர்களையும் சற்று நினைத்துப் பார்ப்பது நல்லது!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம்
அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபங்களை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகன மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கடகம்
ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கவனம் வேண்டும். நெருங்கியவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனம் சாதகமாகும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். லாபம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்
சிம்மம்
தாய் வழியில் அனுசரித்து செல்லவும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தொழில்நுட்ப கருவிகள் விரயங்கள் உண்டாகும். அருகில் உள்ளவர்கள் பற்றிய புதிய அனுபவம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். சுயதொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
முன்பின் தெரியாதவர்கள் ஒத்தழைப்பாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். ண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உங்கள் மீதான வதந்திகள் மறையும். வியாபாரத்தில் புது முதலீடுகள் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
பிள்ளைகளின் விருப்பத்தைப் நிறைவேற்றுவீர்கள். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். குழந்தைகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலை பொருல்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மறதி பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தை விரிவு செய்யவதில் ஆலோசனை வேண்டும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமின் செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஒப்பந்த பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்
மீனம்
பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் நலனில் கவனம் வேண்டும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். பொது காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். பிடிவாதப் போக்கை குறைத்து கொள்ளவும். நிம்மதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை 11.12.2025
இன்று இரவு 07.43 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று காலை 08.44 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று மாலை 04.59 வரை விஷ் கம்பம். பிறகு பரீதி.
இன்று காலை 07.51 வரை பத்திரை. பின்னர் இரவு 07.43 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று காலை 6.19 வரை சித்த யோகம். பின்னர் காலை 8.44 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காமராஜர் படிக்காதவர். அவரால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? அவருக்கு பூகோளம் பற்றித் தெரியுமா?" என்றெல்லாம் பலர் பிரச்சினைகளைக் கிளப்பினார்கள்.
அதற்கு காமராஜர், "நான் கல்லூரியில் படிக்காதவன். பூகோளம் தெரியாதவன் என்றெல்லாம் சொல்கின்றார்கள். ஆனால் எனக்கும் பூகோளம் தெரியும். தமிழ்நாட்டில் உள்ள ஊர்களையெல்லாம் நான் பெரும்பாலும் அறிவேன்.
அவற்றிற்குப் போகும் வழி, இடையில் வரும் ஆறுகள், ஏரிகள், அவற்றின் பயன்கள் பற்றி எனக்குத் தெரியும். அவற்றின் மதிப்பு தெரியும். எந்தெந்த ஊரில் எப்படியெப்படி ஜீவனம் கிடைக்கின்றது, என்னென்ன தொழில் பிரதானம் என்பதையும் நேரில் பார்த்திருக்கின்றேன். வட இந்தியாவிலும் பல இடங்களைத் தெரிந்து வைத்திருக்கின்றேன். இதெல்லாம் பூகோளம் இல்லை கோடுகள் இழுத்து, படம் போட்ட புத்தகம்தான் பூகோளம் என்றால் அவை எனக்குத் தெரியாததாகவே இருக்கட்டும்" என்றார்.
அவருடைய உண்மையான பூகோள அறிவுதான் அவரைப் 'படிக்காத மேதையாக' உலகிற்குக் காட்டியது.
ஆட்டோவில் இருந்து இறங்கி இன்டர்வியூவுக்கு வந்ததாகச் சொல்லியும் அந்த செக்யூரிட்டிக்காரர் கேட்கவில்லை. கடிதத்தைக் காண்பித்தும் பலனில்லை. கடைசியில் என் விண்ணப்பத்தைப் பார்த்து அழைத்த அங்குள்ள ஊழியரிடம் விஷயத்தைச் சொன்னேன். அந்தப் பெண் பேசிய பிறகுதான் செக்யூரிட்டிக்காரர் என்னை உள்ளே போக அனுமதித்தார்.
என்னைத் தடுக்க என்ன காரணம் என்று அந்த சிறிய கண்களும் குறைந்த உயரமும் கொண்ட செக்யூரிட்டியிடம் நான் கேட்டிருந்தேன். ஆட்டோவில் வந்ததால்தான் உள்ளே அனுமதிக்கவில்லை என்று அவர் சொன்னார். மேலிருந்து வந்த உத்தரவாம். யார் இவ்வளவு இரக்கமற்ற இந்த மேலதிகாரி என்று நினைத்து நான் நடந்தேன்.
முதல் இன்டர்வியூவின் பதட்டமும் படபடப்பும் எனக்கு இருந்தது. என்னைப் பொறுத்தவரை இந்த வேலை எனக்கு மிகவும் அவசியம். அதற்காகக் கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை அழிந்துவிடாது. ஊரில் உள்ள அப்பாவின் டீக்கடையை நடத்திக் கூட நான் பிழைப்பேன்.
ஆனால் சிறிய பிரச்சனை ஒன்று இருந்தது. இன்டர்வியூ கார்டு கிடைத்தவுடனேயே நகரத்தின் பெரிய ஹோட்டலில் மகனுக்கு மேலாளர் வேலை கிடைத்ததாகக் கடைக்கு வருபவர்களிடம் எல்லாம் மிகவும் பெருமையுடன் அப்பா சொல்லத் தொடங்கிவிட்டார். அம்மாவோ ஏதோ கோவிலுக்குப் போய் தேங்காய் உடைத்தார் என்றெல்லாம் கேள்விப்படுகிறேன். முதல் சம்பளத்தில் அண்ணா எனக்கு ஒரு சைக்கிள் என்று தம்பியும் சொன்னான்.
என் மீதான அதீத நம்பிக்கை காரணமாகவோ, ஒரு வேலைவாய்ப்பு செயல்முறை பற்றிய அறியாமை காரணமாகவோ, இவர்கள் எல்லாம் ஏன் இப்படி என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. நான் வேலையுடன் வருவதையும் காத்து அந்த மனங்கள் எல்லாம் வீட்டின் முன் வாசலிலேயே இருக்கும்.
அதையும் தாண்டி ஒரு ஓய்வை அப்பா மிகவும் விரும்புகிறார். கடை திறக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற நம்பிக்கை அப்பாவின் இதயத்தில் என் பெயரில் இருக்க வேண்டும். எவ்வளவு என்று கேட்டால்... ஒரு குடும்பத்தின் முழு பாரத்தையும் தாங்கி ஒரு மனிதனால் வாழ முடியும்...!
'ஐ ஹேவ் அன் இன்டர்வியூ அப்பாயிண்ட்மென்ட்..'
ரிசப்ஷனில் சென்று சொன்னபோது விண்ணப்பதாரர்கள் காத்திருக்கும் ஹாலுக்குப் போகச் சொன்னார்கள். அங்கே இதே வேலையை எதிர்பார்த்து இருபது பேர் பொறுமையின்றி காத்திருந்தனர். அதில் நானும் ஒரு காத்திருப்பாக அமர்ந்தேன். அப்போதுதான் இன்டர்வியூ செய்ய உள்ளே இருக்கும் குழுவில் இந்த ஹோட்டலின் உரிமையாளரும் இருக்கிறார் என்று அருகில் இருந்தவர் ரகசியமாகச் சொன்னார்.
'ஓ.. அப்படியா...!'
என்றும் சொல்லி நான் கொஞ்சம் அசைந்தேன். வரிசைப்படிதான் உள்ளே அனுப்புகிறார்கள் என்று தெரிந்ததும் நான் வெளியே வந்துவிட்டேன். எப்படியும் ஒரு மணிநேரம் ஆகும் என் முறை வருவதற்கு. நான் நடந்து நடந்து மீண்டும் அந்த செக்யூரிட்டிக்காரர் பக்கமே வந்தேன். இந்த முறை பார்த்ததுமே அவர் எனக்கு சலாம் காட்டினார். நாங்கள் பேசினோம். பேச பேச மனிதத்தன்மையற்ற ஒரு பாவம் அவர் என்று எனக்குத் தோன்றியது.
அவர் நேபாளியர். மலையாளம் மற்றும் இந்தி பேசுகிறார். இரண்டரை வருடமாக வீட்டிற்குப் போகவில்லை! என்ன காரணம் என்று கேட்டபோது இரண்டு நாட்களுக்கு மேல் இங்கு விடுப்பு கிடைக்காதாம்! மேலும் அறிந்தபோது அவருக்கு ஒருவிதமான மன உளைச்சல் இருப்பதாக எனக்குப் புரிந்தது. அவர் ஒரு இயந்திரமாக மாறிவிட்டார். வாழ்க்கைகள் எல்லாம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கின்றன. இப்படி வேலையில் மூழ்கி மூழ்கி மனம் ஒரு மெழுகுவர்த்தி போல அணைந்துபோகும்.
தன் குடும்பத்தின் நல்ல வாழ்வுக்காகத் தெரிந்தே அடிமையாகுபவர்களும் இந்த உலகில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதற்கு அந்த நேபாளியர் ஒரு சான்று. வருடத்தில் ஒரு வாரம் கூட குடும்பத்துடன் செலவிட முடியாவிட்டால் அப்புறம் என்ன வாழ்க்கை! இருக்கும் வேலை போனால் வேறு ஒன்று கிடைப்பது மிகவும் கடினம் என்ற உண்மைதான் மனிதர்களை இப்படி ஆக்குகிறது. நானும் அடிமையாக வர வந்தேனா என்று எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
மீண்டும் அந்த இன்டர்வியூ ஹாலுக்கு நடக்கும்போது வேலையுடன் சற்றும் சம்பந்தமில்லாத வேறு எதையோதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எங்கேயும் ஜெயித்து வரும் மகனின் மேலாளர் வேலையையும் கனவு கண்டு ஒரு குடும்பம் அங்கே காத்துக் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கவே இல்லை. நினைத்தாலும் அதற்குப் பொருத்தமில்லை. இன்டர்வியூவுக்காக இங்கு வந்தடைந்த படபடப்புகளுக்கெல்லாம் நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. என் சிந்தனையில் முழுவதும் அந்த நேபாளியர் மனிதனைப் பற்றியதாகவே இருந்தது...
'ஷியாம்...!'
ஹாலுக்குள் வந்ததும் வெகு விரைவிலேயே என் முறை வந்தது. கோப்புடன் நான் உள்ளே நுழைந்தேன். கேள்விகளுடன் நான்கு பேர் இருந்தனர். என் சான்றிதழ்கள் அனைத்தையும் சரிபார்க்கும் இடையே ஒருவர் என்னிடம் பயமாக இருக்கிறதா என்று கேட்டார். எதற்கு என்று நான் திருப்பிக் கேட்டது அவருக்குப் பிடிக்கவில்லை.
'உங்களிடம் இருப்பதாகத் தோன்றும் மிகச்சிறந்த குணம் என்ன?'
ஏனோ அந்தக் கேள்விக்கு விடையாக 'அன்பு' என்று நான் சொல்லிவிட்டேன்.
'பி கைண்ட்... ரைட்!'
என்றும் சொல்லி நகைச்சுவை கேட்டது போல யாரோ சிரித்தார்கள். தொடர்ந்து கேள்விகள் இருந்தன. மிகவும் தன்னம்பிக்கையுடன் நான் அதையெல்லாம் எதிர்கொண்டேன்.
'கற்பனையில் நீங்கள் இந்த ஹோட்டலின் உரிமையாளர் என்றால் முதலில் என்ன செய்வீர்கள்..?'
கடைசி கேள்வி அது. அந்த ஆங்கிலக் கேள்விக்குச் சொந்தக்காரர்தான் இதன் உரிமையாளர் என்றும் நான் ஊகித்தேன். பதில் சொல்ல அப்போதும் நான் நீண்ட நேரம் யோசிக்கவில்லை.
'என் செக்யூரிட்டிக்காரருக்கு ஒரு மாதம் விடுப்பு கொடுப்பேன். வருடத்தில் ஒரு முறையாவது என் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சேர முடிகிறதா என்று உறுதி செய்வேன். நான் அந்தக் காதலைக் காட்டினால் நிச்சயமாக அவர்களின் உண்மையான ஒத்துழைப்பு என்னுடனும் இருக்கும். ஐ கேன் க்ரோ மை பிசினஸ்...'
கேட்டவர்கள் யாரும் எதுவும் பேசவில்லை. இரண்டரை வருடமாக சொந்த வீட்டிற்குப் போகக்கூட முடியாத ஒரு மனிதன்தான் இந்த ஹோட்டலின் பிரதான வாசலில் ஒரு காவலாளி என்றும் நான் சொன்னேன். அந்த நேரம் குழுவில் இருந்து ஒரு கோட் என்னைப் வெளியே செல்லும்படி ஆங்கிலத்தில் ஆணையிட்டது. நான் கீழ்ப்படிந்தேன்.
வெளியே செல்லும்போது பெரிய ஏமாற்றம் எதுவும் தோன்றவில்லை. ஏதோ ஒரு மகத்தான காரியத்தைச் செய்தது போல மனம் மகிழ்ச்சியடைந்தது. வீடு வந்து சேரும்வரை வேறு எதைப் பற்றியும் நான் சிந்திக்கவில்லை.
'எப்போது போகத் தொடங்க வேண்டும்...?'
அம்மா கேட்டாள். பதில் சொல்ல முடியாமல் நான் தவித்தேன். மாலையில் அப்பாவும் கேள்வியை மீண்டும் கேட்டபோது வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை என்று நான் சொன்னேன். நடந்ததை எல்லாம் விவரித்தேன். நல்ல காரியம்தானே என்று சொல்லி அப்பா பாராட்டினார். தொடர்ந்து கடைக்குச் சென்றார். சரியாக அந்த நேரத்தில்தான் போன் ஒலித்தது.
'ஷியாம்...! யு ஆர் செலக்டட். ப்ளீஸ் செக் யுவர் ஈமெயில்...'
ஹோட்டலில் இருந்து இன்டர்வியூவுக்கு அழைத்த அந்தப் பெண்மணிதான்.
கேட்டதும் திகைத்துப் போனேன். மிகவும் ஆவலுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று சொல்லத் தொடங்கும்போதுதான் மீண்டும் கால் வந்தது. எடுத்தபோது காதுகளுக்கு இரு மடங்கு இனிப்பு அனுபவிக்கப்பட்டது. கேட்டில் என்னை தடுத்த அந்த நேபாளிய செக்யூரிட்டிக்காரர் தான் மறுமுனையில். சம்பளத்துடன் ஒரு மாதம் விடுப்பு கிடைத்ததாம்!
குடும்பத்தினர் அருகில் போகக் கிளம்புவதாகவும் அதீத மகிழ்ச்சியுடன் தடுமாறித் தடுமாறி அவர் சொன்னார். கேட்டதும் என்ன சொல்வதென்றே தெரியாமல் கண்ணீர் ததும்ப நான் சிரித்துவிட்டேன். மிகுந்த சந்தோஷத்துடன் பேச்சை நிறுத்தி போனை வைத்தேன். எதுவும் சொல்லாமலேயே அம்மா அந்த நேரம் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
'என்ன சூத்திரம்டா நீ அங்கே போய்க் காட்டினாய்....'
கேட்டதும் என் சிரிப்பு மேலும் விரிவடைந்தது. அம்மாவுக்குப் புரியுமா என்று கூட யோசிக்காமல் அந்த காதுகளில் மெதுவாக நான் அந்த சூத்திரத்தைச் சொன்னேன்.
'பி கைண்ட்...!!!'
காலை செய்ய வேண்டியவை
✔ 1. ஸ்நானம்
அதிகாலையில் எழுந்து புனித ஸ்நானம் செய்துகொள்ளவும்.
✔ 2. விரத சங்கல்பம்
தீபம் ஏற்றி, முருகன் படத்தை முன்னிறுத்தி இப்படி மனதில் எண்ணிக்கொள்ளவும்:
“இன்றைய சஷ்டி விரதத்தை முருகப் பெருமானின் அருளுக்காக மேற்கொள்கிறேன்.”
✔ 3. உபவாசம்
இந்த மூன்று முறைகளில் ஒன்று :
முழு உபவாசம் (தண்ணீர் மட்டும்)
பலகாரம் (பழம், பால்)
ஏகபுக்தி (ஒரு நேரம் மட்டும் சைவ உணவு)
காலை – மாலை மந்திரங்கள் & பாராயணங்கள்
காலை ஜெபங்கள்
ஓம் சரவணபவா நம – 108 முறை
கந்த சஷ்டி கவசம்
சுப்பிரமண்ய புஜங்கம்
“வேல்முருகா ஹரஹரா” – தொடர்ந்து ஜெபிக்கலாம்
மாலை ஜெபங்கள்
தீபம் ஏற்றிய பின்
“சன்னதிக்கு போகும் பாதை” பாடல்
“சுரசம்ஹார பாடல்கள்”
“வள்ளி கல்யாணம்” பாடல்கள்
பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சஷ்டி நைவேத்யம்
மாலை வழிபாடு முடிந்த பின் :
வெல்ல சுண்டல், பனங்கருப்புப் பொங்கல், பழ நைவேத்யம் இதில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.
கார்த்திகை மாத தேய்பிறை (கிருஷ்ண பக்ஷ) அஷ்டமி திதி காலபைரவர் வழிபாட்டிற்கு மிகவும் சிறந்ததும் சக்தி நிறைந்ததும் ஆகும்.
இந்த நாளில் பைரவரின் கிருபை விரைவாகக் கிடைக்கும் என்றும், தடைநீக்கம், பாதுகாப்பு, அச்சமின்மை, கர்ம நாசனம் ஆகியவற்றிற்கான மிக வேகமான பலன் கிடைக்கும் என்றும் ஆகமங்கள், ஸ்தல புராணங்கள் கூறுகின்றன.
1. காலபைரவர் – யார் ?
காலத்தை, திசைகளை, பாதையை கட்டுப்படுத்தும் பரமசிவனின் உச்ச ரூபமே காலபைரவர்.
இவர்:
திசை காவலர்
பாவநாசகர்
ரக்ஷண மூர்த்தி
வெற்றி நாயகர் (வழித் தடைகளை அகற்றுபவர்)
யமனின் அதிகாரத்தையே கட்டுப்படுத்தும் தெய்வம்
அதனால் அஷ்டமி, குறிப்பாக தேய்பிறை அஷ்டமி, பைரவர் அருளைப் பெறும் மிகச் சரியான திதி.
2. ஏன் அஷ்டமி நாள் பைரவர் வழிபாட்டிற்கு மிகச் சிறப்பு ?
அஷ்டமி திதி சக்தி, ரக்ஷை, தடைநாசனம் போன்ற ஆற்றல்கள் அதிகரிக்கும் நாள்.
தேய்பிறை நிலையின் போது மனம் இலகுவாகி தியானம், மந்திரப் பீஜம் எளிதில் செரிகிறது.
இந்த நாளில் பைரவரின் “கால ஸ்தம்பன சக்தி” மிக மேம்பட்டு இருக்கும்.
அதனால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு :
✔ தீய சக்திகளை அகற்றும்
✔ வழக்குகள், எதிரிகள், போட்டியாளர்கள் தொல்லைகளை குறைக்கும்.
✔ திசை தோஷங்களை நீக்கும்
✔ வியாபாரம் & வேலை தடைகளை அகற்றும்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
ரிஷபம்
பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். கடன் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அதிரடி மாற்றங்களால் லாபத்தை மேம்படுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்த மந்தத் தன்மை விலகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
கடன்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். தள்ளி போன காரியங்கள் சில முடியும். குடும்பத்தில் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். வருமான வாய்ப்புகள் மேம்படும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களிள் கவனம் வேண்டும். உறவுகள் வழியில் அலைச்சல் உண்டாகும். புதிய முயற்சிகள் தாமதமாகி நிறைவேறும். தொழில் சார்ந்த பயணங்கள் உண்டாகும். சிந்தனைபோக்கில் கவனம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். துணை வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றம் ஏற்படும். மனம் தெளிவு பெரும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். துணைவர் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
மனதில் நினைத்த காரியம் கைக்கூடிவரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் கௌரவம் உயரும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். சமூக பணிகளில் மரியாதையும் உயரும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழிலில் மாற்றம் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்புகள் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பெருமை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகரம்
சந்தேக உணர்வுகளால் குழப்பங்கள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். அரசு காரியங்களில் நிதானம் வேண்டும். எதையும் இரு முறை சிந்தித்து செயல்படுத்தவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
குழந்தைகள் உங்கள் குணம் அறிந்து செயல்படுவார்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தன வருவாய் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மேஷம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
ரிஷபம்
பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். கடன் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அதிரடி மாற்றங்களால் லாபத்தை மேம்படுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்த மந்தத் தன்மை விலகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
கடன்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். தள்ளி போன காரியங்கள் சில முடியும். குடும்பத்தில் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். வருமான வாய்ப்புகள் மேம்படும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களிள் கவனம் வேண்டும். உறவுகள் வழியில் அலைச்சல் உண்டாகும். புதிய முயற்சிகள் தாமதமாகி நிறைவேறும். தொழில் சார்ந்த பயணங்கள் உண்டாகும். சிந்தனைபோக்கில் கவனம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். துணை வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றம் ஏற்படும். மனம் தெளிவு பெரும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். துணைவர் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
மனதில் நினைத்த காரியம் கைக்கூடிவரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் கௌரவம் உயரும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். சமூக பணிகளில் மரியாதையும் உயரும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழிலில் மாற்றம் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்புகள் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பெருமை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகரம்
சந்தேக உணர்வுகளால் குழப்பங்கள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். அரசு காரியங்களில் நிதானம் வேண்டும். எதையும் இரு முறை சிந்தித்து செயல்படுத்தவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
குழந்தைகள் உங்கள் குணம் அறிந்து செயல்படுவார்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தன வருவாய் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 24 ஆம் தேதி புதன்கிழமை 10.12.2025,
இன்று இரவு 07.58 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று காலை 08.36 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
இன்று மாலை 06.30 வரை வைதிருதி. பிறகு விஷ் கம்பம்.
இன்று காலை 08.20 வரை கரசை. பின்னர் இரவு 07.58 வரை வணிசை. பின்பு பத்திரை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
மேஷம்
செயல்பாடுகளில் இருந்த தடைகள் குறையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். செலவிற்கேற்ற வரவுகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மிதுனம்
தடைப்பட்ட சில காரியங்கள் முடியும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். புதிய நட்புகள் மலரும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். செயல்களில் உள்ள மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். மற்றவர்கள் பொருட்கள் மீது ஈர்ப்புகள் ஏற்படும். விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
சிம்மம்
நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். கடன் பிரச்சனைகள் குறையும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் இடத்தில் சுமுகமாக பழகவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பயனற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார அபிவிருத்திகன வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தியை அளிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்புகள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். ஆராய்ச்சி பணிகளில் மேன்மை ஏற்படும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
மனதளவில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். பழைய உறவுகள் பற்றிய எண்ணங்கள் உருவாகும். புதிய முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். நேர்மறை எண்ணங்களோடு எதிலும் செயலாற்றவும். வியாபாரத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்து தடைகள் விலகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கும்பம்
எதிர்பார்த்த சில வரவுகள் உண்டாகும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்த சிக்கல்கள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மீனம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 9.12.2025.
இன்று இரவு 08.41 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று காலை 08.55 வரை பூசம் . பின்னர் ஆயில்யம்.
இன்று இரவு 08.23 வரை ஐந்திரம். பிறகு வைதிருதி.
இன்று காலை 09.16 வரை கௌலவம். பின்னர் இரவு 08.41 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

















