·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 126
  • More

KANIMAA Lyrical Video - RETRO

KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் உயரும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

ரிஷபம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளை அரவணைத்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபார போட்டிகளில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மிதுனம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலைப் பொருட்களால் லாபம் ஏற்படும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதுநிலை கல்வியில் இருந்த தாமதங்கள் விலகும். மறைமுக எதிர்ப்புகளை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். நாவல் மற்றும் இலக்கியங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

அனுபவ பூர்வமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உறவுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை தரும். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மதிப்புகள் உயரும். முயற்சிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

 

சிம்மம்

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில வரவுகள் கிடைக்கும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் மேன்மை ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

 

கன்னி

குடும்பத்தில் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் திருப்தியின்மையான சூழல்கள் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய நபர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் சார்ந்த செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனவருத்தம் குறையும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கோபம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

விருச்சிகம்

பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகள் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். கால்நடை பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கடன் பிரச்சனைகளில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பங்குதாரர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

கும்பம்

தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி கற்கும் நிலையில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

மீனம்

குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தோற்ற பொழிவு மேம்படும். திடீரென சில முடிவுகளை எடுப்பீர்கள். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். பற்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

  • 219
·
Added a post

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 18.7.2025.

இன்று மாலை 04.11 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று அதிகாலை 03.29 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று காலை 06.58 வரை சுகர்மம். பின்னர் திருதி.

இன்று அதிகாலை 05.22 வரை பாலவம். பின்னர் மாலை 04.11 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று அதிகாலை 03.29 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=54&dpx=1&t=1752802276

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 241
·
Added a post

அதென்ன.. மாட்டுப் பெண்?

நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் நடவு செய்வதற்காக, வயலில் ஒரு சிறு பகுதியில் நாற்று விடுவார்கள். குறிப்பிட்ட நாள்கள் சென்ற பிறகு அந்த நாற்றுகளைப் பறித்து, பக்குவப் படுத்தப்பட்ட வேறு வயல்களில் நடுவார்கள்.

நாற்றைப் பறித்து எடுத்துச் சென்ற பின்பு அந்த இடம் வெட்புலமாக (VACANT) இருக்கும் அல்லவா ? அந்த இடத்தைப் பக்குவப் படுத்திவிட்டு வேறு இடத்தில் விடப்பட்டிருக்கும் நாற்றைக் கொண்டு வந்து இங்கு நடுவார்கள். இது தான் வேளாண் பெருமக்கள் பின்பற்றும் நடைமுறை.

இங்கு என்ன நிகழ்கிறது ? ஒரு வயலில் வளர்ந்திருக்கும் நாற்றைக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் நடுகிறார்கள். அங்கு அது செழித்து வளர்ந்து பலன் தருகிறது. வளர்வது ஓரிடம்; நெல்மணியாம் வித்துக்களை விளைவிப்பது இன்னோரிடம்.

நம் வீட்டில் பிறந்து வளரும் நமது பெண்ணும் “நாற்று”ப் போன்றவள். வளர்வது நம்வீட்டில்; வாழ்வதும் பிள்ளைகளைப் பெற்றுக் குலம் தழைக்கச் செய்வதும் இன்னொரு வீட்டில். அவள் வளர்வது ஓரிடம்; வாழ்வது இன்னோரிடம். நம் வீட்டு நாற்றினைப் பறித்து இன்னொரு வீட்டில் நடுகிறோம். நாற்று அங்கு தன் வாழ்க்கையைத் தொடர்கிறது.

“நாற்றுப் பெண்” என்ற சொல்லின் பெயர்க் காரணம் புரிகிறதா ? “நாற்றுப் பெண்” என்ற சொல் ”நாட்டுப் பெண்” ஆகி பலரது நாவிலும் பொருள் புரியாமலேயே இன்னும் புழங்கி வருவது விந்தையிலும் விந்தை !

“நாற்று” போன்ற பெண் “நாற்றி” எனப்பட்டாள். ”நாற்றி” என்பது திரிந்து “நாத்தி” ஆகிவிட்டது. “நாற்று அன்னார்” என்றால் நாற்று போன்றவள் என்று பொருள். நாற்று + அன்னார் = நாற்றன்னார் = நாற்றனார் = நாத்தனார் “நாத்தனார்” பெயர்க்காரணம் இப்பொழுது விளங்குகிறதா ?

நம் வீட்டில் விளக்கேற்றிய நமது பெண் திருமணமாகி இன்னொரு வீட்டுக்கு வாழச் சென்றுவிட்டாள். நம் வீட்டில் விளக்கேற்ற ஒரு மாற்றுப் பெண் வேண்டாவா ? நாற்றாகிச் சென்றுவிட்ட நமது வீட்டுப் பெண்ணுக்கு மாற்றாக வேறொரு ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை நம் வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவருவது தானே முறை.

“நாற்று”ப் பெண் விளக்கேற்றிய வீட்டில், அவளுக்கு “மாற்று”ப் பெண்ணாக மருமகள் வருகிறாள். இந்த மாற்றுப் பெண்ணைத் தான் பலரும் “மாட்டுப் பெண்” ஆக்கி விட்டார்கள் !

சிலர் பேச்சுத் தமிழை எழுத்திலும் கொண்டு வருகிறார்கள். அதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இத்தகைய மொழிச் சிதைவை அனுமதித்தால், “நாட்டுப் பெண்”, “மாட்டுப்பெண்’ போன்ற பொருளற்ற சொற்கள் தமிழில் பல்கிப் பெருகிவிடும். தமிழ் ஆர்வலர்கள் புரிந்து கொள்வார்களாக !

  • 237
·
Added article

கேரளாவில் பிறந்த இவர், அந்த மாநிலத்தில் நீண்ட நாள் பதவி வகித்த முதல்வரும் பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஈ.கே.நாயனாரின் சொந்தக்காரர். மலையாள சினிமாவுக்குள் முதன் முதலில் கதாசிரியராக அறிமுகமான விஜயனின் கைவண்ணத்தில் உருவான 'சங்கு புஷ்பம்' படம் வசனத்துக்காகவே மலையாளத்தில் ஹிட். அப்படியே நடிப்பு, இயக்கம் என வளர்ந்த விஜயனை தமிழுக்கு அழைத்து வந்தவர், பாரதிராஜா. பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் விஜயனை பார்க்கலாம்.

1978ல் வெளியான 'கிழக்கே போகும் ரயில்', விஜயனை கேரள கரையில் இருந்து கோலிவுட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அடுத்த ஆண்டே 'முள்ளும் மலரும்' இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் 'உதிரி பூக்கள்'. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த படம் அதிரி புதிரி ஹிட். படத்தின் ஹீரோ விஜயன். அதாவது ஆன்ட்டி ஹீரோ.

2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னும் மனைவியை கொன்று விட்டு கொழுந்தியாளை அடைய துடிக்கும் வேடம், விஜயனுக்கு... (அஜித்தின் 'ஆசை' படத்தோட raw versionன்னு சொல்லலாம்) அந்த படத்தில் பின்னி எடுத்திருப்பார், விஜயன். அவரது உடல்வாகு, வில்லத் தனமான பார்வை அமைதியான தோற்றம் எல்லாம் அவரது கேரக்டரை ஹிட்டாக்கின. அதன் பிறகு, மலையாளம் கூடவே தமிழிலும் ஏராளமான படங்களில் விஜயன் நடித்தார்.

பாரதிராஜா, பாக்யராஜ், மகேந்திரன் என முன்னணி இயக்குர்களிடம் நடித்த இவர், 1980 ஒரே ஆண்டில் மட்டும் 11 படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். அவற்றில் பல லாபம் ஈட்டிய படங்கள். சின்ன பட்ஜெட்டில் நல்ல லாபம் என்றால் இவரும் சுதாகரும் தான் அன்றைய தயாரிப்பாளர்களின் சாய்ஸ். 1980களுக்கு பிறகுதான் தமிழில் ரஜினி, கமல் ஆதிக்கம் துவங்கியது. அதற்கு முந்தைய கால கட்டத்தில் இவருக்கும் அன்றைய நாளின் மற்றொரு ஹீரோவான சுதாகருக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. ஆரம்ப கால விஜயனிடம் கொஞ்சம் மம்முட்டி சாயலை பார்க்க முடியும்.

கதாநாயகன் வேடத்துக்கு பிறகு, 1992 வரை நிறைய கேரக்டர் ரோல்களிலும் விஜயன் நடித்தார். 'மண் வாசனை', 'நிறம் மாறாத பூக்கள்', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'பசி', 'ஒரு கைதியின் டைரி', 'கொடி பறக்குது', 'அன்புக்கு நான் அடிமை' (ரஜினியின் அண்ணன்), 'நாயகன்' (மும்பை குடிசை வாழ் மக்கள் இடத்தை வாங்கி தரும் புரோக்கர் துரை)... இப்படி அவரது படங்களின் பட்டியல் மிக நீளம்.

இதற்கிடையே, 'புதிய ஸ்வரங்கள்' மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அப்போதெல்லாம் பிலிம் ரோல் காலம். அந்த படம் முடிந்து லேபில் இருந்த பிலிம் சுருள் தீ விபத்தில் கருகியதால் அவரது இயக்குநர் கனவும் கருகிப்போனது. இப்படி, விஜயனின் வாழ்வில் துன்பியல் அதிகம்.

1992க்கு பின் 2002 வரை பத்து ஆண்டுகள் விஜயனின் திரை பயணத்தில் பிரேக்... இந்த கால கட்டத்தில் மது, புகைப் பழக்கம் என சொந்த வாழ்க்கையில் நிறைய சோகங்களை சந்தித்தார், விஜயன். முன்னணி இயக்குநர்கள் படத்திலும் ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடனும் நடத்தது மட்டுமல்ல... 1980களில் மிகப் பிரபலமாகவும் வலம் வந்த ஒரு நடிகர், யாருமே கண்டு கொள்ளாத நிலைமையில் இருந்தார்.

அவரை மறுபடியும் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த படம் 'ரமணா'. 2002ல் வெளியான அந்த படத்தில் விஜயகாந்துக்கு மெயின் வில்லனாக அதகளம் பண்ணியிருப்பார். அதே ஆண்டு மாதவன் நடித்த 'ரன்' படத்திலும் வில்லன் அதுல் குல்கர்னியின் வலதுகரமாக விஜயன் நடித்தார். இதுபோல, '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் நாயகனின் தந்தையாக, குண சித்திர நடிகராகவும் நிரூபித்திருப்பார்.

'உதிரிப்பூக்கள்' விஜயன், 'ரமணா' விஜயனாக இரண்டாவது சுற்று வலம் வர தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் அவரது வாழ்க்கையே முடிந்து போனது. 'ஆயுதம் செய்வோம்' படப்பிடிப்பில் மாரடைப்பால் மரணமடைந்தார். மறைந்தாலும் தமிழ் திரையுலக வரலாற்றில் 'உதிரிப் பூக்கள்' விஜயனுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

  • 243
·
Added a post
  • 246
  • 241
அமரர்
பரமனந்தம் பொன்னம்பலம்
  • 395
·
Added a news

ஈழத் தமிழரும் கனடிய பிரஜையுமான பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவர் மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

  • 487
·
Added a news

கனடாவின் கியூபெக்கில் வாழும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பேருக்கு லொட்டரியில் பெரும் தொகை பரிசாக கிடைத்துள்ளது.

Montérégieயில் வாழும் Jacques Deschamps மற்றும் மொன்றியலில் வாழும் Wilhelmina Van Leeuwen ஆகிய இருவரும்தான் அந்த அதிர்ஷ்டசாலிகள்.

அதாவது, அவர்கள் இருவருமே 70 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்த பரிசுச்சீட்டை வாங்கியுள்ளதால், அவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 35 மில்லியன் டொலர்கள் கையில் கிடைக்க உள்ளது.

Jacques, தனது 60 வயதுகளில் இருக்கிறார். சொந்தமாக கட்டுமானப்பணி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார் அவர்.

லொட்டரியில் பரிசு விழுந்ததைத் தொடர்ந்து, அவர் தனது பணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது நிறுவனத்தை தனது மகனிடம் ஒப்படைக்க உள்ளார் Jacques.

Wilhelminaவோ தனது 70 வயதுகளில் இருக்கிறார். அவர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்.

இருவருக்குமே பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை. 35 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளதால் உங்கள் சொந்த ஊருக்கே போய்விடுவீர்களா என Wilhelminaவிடம் கேட்டால், இல்லை என்கிறார். முன்பெல்லாம் வருடத்துக்கு ஒருமுறை என் சொந்த நாட்டுக்குச் செல்வேன், இனி இரண்டு முறை செல்வேன். அதுவும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்க ஆசை என்கிறார் Wilhelmina!

  • 485

தலைஆடி

ஆடி மாதத்தின் முதல் நாள் தலை ஆடி என்று அழைக்கப்படுகின்றது.

புதிதாக மணமான தம்பதியினர் மணப்பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவர்.

அங்கு மாப்பிள்ளைக்கு விருந்துடன் தேங்காய் பால் வழங்கப்படுகிறது.

சில இடங்களில் தலை ஆடிக்கு மணமக்களுக்கு புது ஆடைகள் பரிசாக மணப்பெண்ணின் தாய் வீட்டிலிருந்து வழங்கப்படுகிறது.

பின் மணப் பெண் மட்டும் தாய் வீட்டில் தங்கிவிடுகிறாள்.

தாயிடம் இருந்து பொறுமை, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், சூழ்நிலையை சமாளித்தல் போன்றவற்றை திருமணமான பின்பு கற்றுக் கொள்கிறாள்.

மேலும் ஆடியில் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.

சித்திரை வெயில் குழந்தைக்கும், தாயுக்கும் உடல் மற்றும் மனரீதியாக அசௌகரியத்தைக் கொடுக்கும். எனவே தான் தலை ஆடிக்கு வரும் புது மணப்பெண் தாய் வீட்டில் ஆடி மாதம் முழுவதும் தங்கிவிடுகிறாள்.

இதனால் தான் ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப்பிடி என்ற பழமொழி இன்றும் வழக்கத்தல் உள்ளது.

  • 486

தேவைப்படும் போது அறிவையும் ,

தேவையற்ற போது மெளனத்தையும் ,

சமநிலையில் பயன்படுத்தத் தெரிந்தால் ,

வாழ்க்கையில் எதையும் தேட வேண்டிய அவசியம் இருக்காது !

  • 487
·
Added a post

பள்ளிக்கூடங்களை திறந்தால் மட்டும் போதாதது. அவற்றின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கும் அவர்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் வேலை நாட்களை 180 லிருந்து 200 நாட்களாக உயர்த்தினார். இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி நலன் மேம்படும் என இதைச் செய்தார். அதோடு பள்ளிகளுக்கு விடப்படும் தேவையற்ற விடுமுறைகளும் குறைக்கப்பட்டன.

பள்ளிகளின் வேலை நாட்களை உயர்த்தியதோடு ஆசியர்களுக்கான சமூக நலத்திட்டங்களையும் அறிமுகம் செய்தார் காமராஜர். ஆசிரியர்களுக்கு பிராவிடண்ட் பண்ட், இன்சூரன்ஸ், ஓய்வூதியம் ஆகிய மூவகை சலுகை அளிக்கும் திட்டத்தை வழங்க உத்தரவிட்டார். 1955இல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைத்த இந்தப் பலன்களை 1958 முதல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்தார். அதன் பின்னர் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கல்விக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கும் போது அவர்களால் மாணவர்களுக்கு சிறப்பான கற்றல் செயல்பாடுகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை காமராஜர் பெற்றிருந்தார்.

தொடக்கக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்தினார். அவர்களின் பிள்ளைகள் இலவச கல்வி பெறுவதற்கு வசதி செய்தார். அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகளுக்கு சம்பளச் சலுகை அளித்தார். 100 ரூபாய் வருமானத்திற்கு குறைந்தவர்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது.

  • 507
  • 503
  • 503
·
Added a post

தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கூறிய உண்மைச் சம்பவம்....

'நீண்ட போராட்டத்திற்கு பிறகு நான் ஜனாதிபதியான பின், ஒருநாள் என் முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தேன்.

அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தோம். அப்போது என் எதிர் மேசையில் ஒருவர் தனியாக தன் உணவுக்காக காத்திருந்தார்.

என் படைவீரனை அனுப்பி அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன். அவரும் தன் உணவுடன் எமது வட்டத்தில் அமர்ந்தார். எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்.

அப்போது என் படை வீரனொருவன், "அந்த மனிதர் பார்க்க நோய்வாய்ப்பட்டவராக தெரிகிறார், உண்ணும் போது அவரின் கைகள் மிகவும் நடுங்கின." என்று என்னிடம் கூறினான்.

உடனே நான் குறுக்கிட்டேன். அது உண்மை அல்ல வீரனே... நான் முன்பு சிறையிலிருந்த போது இந்த மனிதர் தான் என் சிறைக்காவலராக இருந்தார். என்னை அடிக்கடி கொடுமைப்படுத்தும் போதெல்லாம் நான் கூக்குரலிட்டு, களைத்துப் போய் கொஞ்சம் நீர் அருந்த கேட்பேன்.

அப்போது இந்த மனிதர் என்னிடம் வந்து என் தலை மேல் சிறுநீர் கழித்து விட்டு செல்வது வழக்கம். அவர் தென் ஆபிரிக்க ஜனாதிபதியான என்னை இப்போது இனங்கண்டு விட்டார் போலும். நான் இப்போது அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று நினைத்தே அவர் நடுங்கியிருப்பார். ஆனால் அது என்னுடைய பழக்கம் அல்ல. பழிக்குப்பழி வாங்கும் மனநிலை ஒருபோதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதரையோ கட்டியெழுப்பாது. அதே நேரம் சில விஷயங்களில் மனதில் தோன்றும் சகிப்புத்தன்மை பெரிய சாம்ராஜ்யங்களையே உருவாக்கும்.' என்றார் மண்டேலா.

  • 506
·
Added a post

1983ம் ஆண்டு!

ஏர் கனடா விமானம் 143 (Air Canada Flight 143) பயணிகளுடன் விண்ணில் பறந்து கொண்டிருக்கிறது!. ‌ ‌ அதுநாள் வரை பவுண்டு/மைல் எனப் பழங்கால அளவை முறைகளுடன் இயங்கி வந்த ஏர் கனடா, மெட்ரிக் முறைக்கு மாறி கிமி/லிட்டர் என மாறியது

ஆனால் பணியாளர்களுக்கு இதில் போதுமான பயிற்சியைக் கொடுக்கவில்லை. 23,000 கிலோ பெட்ரோலை விமானத்தில் நிரப்புவதற்குப் பதில் 23,000 பவுண்டு பெட்ரோலை நிரப்பியிருந்தனர். விமானத்தில் எரிபொருளைக் காட்டும் மீட்டர் பாதி எரிபொருள் இருப்பதாகக் காட்ட, அதில் ஏதோ பிரச்சனை என நினைத்த பைலட் விமானத்தைக் கிளப்பிக் கொண்டு பறந்தார்.

பாதிவழியில் 41,000 அடி உயரத்தில் இருக்கையில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. இரு எஞ்சின்களும் செயலிழந்து நின்று விட்டன. பூமிக்கு மேலே 41,000 அடி உயரத்தில் பெட்ரோல் தீர்ந்தால் எப்படி இருக்கும்?

வின்னிபெக் நகர கண்ட்ரோல் டவரை தொடர்பு கொண்டு "பெட்ரோல் தீர்ந்து விட்டது. என்ன செய்ய?" எனக் கேட்க அவர்களுக்கும் தெரியவில்லை. உலக வரலாற்றில் யாருமே இப்படி ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டதில்லை. இரு எஞ்சின்களும் செயலிழந்து நிற்கையில் விமானத்தை எப்படி இயக்குவது என எந்த பிளைட் மேன்யுவலும் இல்லை.

தவிர விமானத்தின் அனைத்துக் கருவிகளும் மின்சாரம் இல்லாமல் செயலிழந்து நின்றன. விமானத்தின் சக்கரத்தையும் எஞ்சின் உதவியின்றி திறக்க இயலாது...இத்தனைப் பிரச்சனைகளை சொல்லி "என்ன செய்ய?" எனக் கேட்டால் கண்ட்ரோல் டவரால் என்ன பதில் சொல்ல முடியும்?

"அப்படியே ஆள் இல்லாத இடமா பார்த்து விழுந்து செத்துப் போயிடுங்க" எனத் தான் சொல்ல முடியும். கண்ட்ரோல் டவரில் திகைத்து நின்றார்கள். அதன்பின் "பக்கத்தில் ஒரு கார் ரேஸ் மைதானம் இருக்கு. அதில் இறக்க முடியுமான்னு பாருங்க" என்றார்கள். சொல்லி விட்டு கார் ரேஸ் மைதானத்தைத் தொடர்பு கொண்டு "விமானம் வருது. மைதானத்தைக் காலி பண்ணுங்க" என சொல்ல முயன்றால் அன்று ஞாயிற்றுகிழமை. போனை யாரும் எடுக்கவில்லை.

பைலட் பியர்சன் இந்த சூழலில் நிதானமாக சிந்தித்தார். விமானத்தில் பெட்ரோல் இல்லை என்றால் அது கிளைடர் மாதிரி தான்.. பட்டத்தை காற்றில் பறக்க விடுவது போல் விமானத்தை மெதுவாக கிளைட் செய்து பறக்க வேண்டியது தான். ஆனால் இது பட்டமோ, கிளைடரோ அல்ல. போயிங் 767 ஜெட் விமானம்.

அதன்பின் விமானத்தை இரு கைகளையும் விரித்து பேலன்ஸ் செய்வது போல் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஆட்டி அதை ரேஸ் டிராக் நோக்கி ஓட்டிச் சென்றார். 20 கிமி தொலைவு பெட்ரோல் இல்லாமல் மெதுவாக விமானம் சென்று கொன்டிருந்தது

ரன்வே கண்ணில் பட்டது. அங்கே குழந்தைகள் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.

கிளைட் செய்து விமானத்தை ரன்வேயை நோக்கி கொண்டு வந்தார். மேன்யுவலாக சக்கரங்களை விடுவித்தார். சக்கரங்கள் லாக் ஆக மறுத்து ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டு இருந்தன. விமானத்தைப் பக்கவாட்டில் ஒருக்களித்து இறக்க பின்சக்கரங்கள் ஒருவழியாகத் தரையைத் தொட்டன. முன்பக்க சக்கரம் தரையில் இறங்கவில்லை. விமானத்தின் மூக்கு தரையை உரசிக் கொண்டு இருந்தபடி விமானம் தரை இறங்கியது

குழந்தைகளும், கூட்டமும் சிதறி ஓட விமானம் லேண்ட் ஆகி, இழுக்கப்பட்டு சென்று நின்றது...கதவு திறந்து, எல்லாரும் சறுக்கியபடி வெளியே வந்தார்கள்.

கடைசி ஆளாக கேப்டன் பியர்சன் விமானத்தின் படியில் நின்றார். "எல்லாரும் இறங்கியாச்சா" என உறுதி செய்தபடி கடைசி ஆளாக சறுக்கியபடி கீழே இறங்கினார்.

பயணிகள் அவரை ஹீரோ மாதிரி ஆரவாரத்துடன் சூழந்தார்கள். ஒருவருக்கும் உயிர்சேதம் இல்லை.

இப்படி பெட்ரோல் இல்லாத விமானத்தை 41,000 அடி உயரத்தில் இருந்து கிளைடர் மாதிரி ஓட்டி, பக்கவாட்டில் இறக்க முடியும் என்பதை அன்று தான் உலகம் அறிந்தது..

எப்பேர்ப்பட்ட உயிரே போகும் பிரச்சனை என்றாலும் அதற்கு நிதானமாக சிந்தித்தால் இப்படி ஒரு வித்தியாசமான தீர்வு கிடைக்கும்.

  • 514
·
Added a post

முனிவர் ஒருவர் மிகவும் கர்வம் மிக்கவர். அவர் யமுனை நதிக்கரைக்கு வந்தார். அங்கே படகோட்டி காத்திருந்தான். அக்கரைக்குச் செல்ல வேண்டும் என்றார்.

படகு புறப்பட்டது.

"டேய், படகோட்டி! என்னடா இப்படி மெதுவா படகை செலுத்துறே! வேகமாக போ"

படகோட்டி தன் முழு பலத்தையும் காட்டி படகை தள்ளினான்.

முனிவருக்கு திருப்தி இல்லை .

"அடேய் முட்டாள், இன்னும் வேகமா போடா" முனிவர் கத்தினார்.

படகோட்டியால் அதற்கு மேல் படகை தள்ள முடியவில்லை.

முனிவர் அவனிடம் "படிக்காத உன்னால் என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. உனக்கு ராமாயணம் தெரியுமாடா! குகன் எவ்வளவு வேகமா படகோட்டினான் தெரியுமா?"

"தெரியாது சாமி, என்னாலே முடிஞ்ச வரைக்கும் வேகமா தான் போறேன்"

"ஒழிஞ்சு போ,

மகாபாரதமாவது தெரியுமாடா. அதிலே அர்ஜுனனின் அம்பு வேகமாக பாயுமே, அது மாதிரி சீறிக்கிட்டு ஓட்ட தெரியுமா?"

"அதெல்லாம் இந்த ஏழைக்கு தெரியாது சாமி. கோபப்படாதீங்க.... விரைவா போயிடுறேன்"

"அடேய் மடையனே!

உனக்கு என்ன தான் தெரியும். உங்கள் ஊரில் யாராவது கிருஷ்ணனை பற்றி கதை சொல்லியாச்சும் கேட்டிருக்கியா. அவன் கையில் உள்ள சக்கரம் மின்னல் வேகத்தில் பறக்குமே! அது மாதிரி படகை ஓட்டு"

"கதைக்கெல்லாம் போக நேரமில்லை சாமி"

முனிவர் முனகினார். திடீரென படகோட்டி கத்தினான். "சாமி, உங்களுக்கு எல்லாம் தெரியுமுனு சொன்னீங்களே!

நீச்சல் தெரியுமா?"

"எதுக்குடா கேக்கிற"

படகிலே ஓட்டை விழுந்துடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்திலே தண்ணீரில் மூழ்கிடும். எல்லாம் தெரிந்த உங்களுக்கு நீச்சல் தெரியாமலா இருக்கும். தப்பிச்சு போயிடுங்க"

படகோட்டி தண்ணீரில் குதித்து விட்டான்.

இப்போது புரிகிறதா! எல்லாம் தெரிந்தவர் உலகில் இல்லை.

  • 522

உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு முதலில், உங்கள் வேலையை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும். ஏனென்றால், ஒருவருக்குத்தான் செய்கிற வேலை பிடிக்கவில்லை என்றால் அவ்வேலையில் ஈடுபாடு ஏற்படாது.

ஈடுபாடில்லாமல் செய்கிற வேலை எதுவாயினும் அதில் வெற்றி பெறுவது இயலாது. ஆகவே, நீங்கள் செய்கிற வேலை உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை அல்ல.

அது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு. ஆம், அது ஓர் அதிசய அட்சய பாத்திரம். அதை உழைப்பு என்கிற கைகளால் எடுக்கின்றபோது வெற்றி என்கிற அமுதம் கிடைக்கும்.

  • 518
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்புகள் குறையும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். செயல்களில் இருந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். குண நலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கட்டுமான பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை எண்ணியபடியே செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் அறிமுகம் உண்டாகும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கடகம்

செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வம் இன்மை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் உதவியால் நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

சிம்மம்

செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு காரியங்களில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். தனம் சார்ந்த உதவிகளில் தாமதம் உண்டாகும். விவேகத்துடன் நடந்து கொள்வது நன்மதிப்பை ஏற்படுத்தும். அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கன்னி

புதிய நபர்களால் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமை வேண்டும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடி வரும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். துணைவர் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு

 

துலாம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை உண்டாகும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உழைப்பு குண்டான மதிப்புகள் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

விருச்சிகம்

மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். உல்லாச பயணம் செல்வது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடினமான நுட்பங்களையும் புரிந்து கொள்வீர்கள். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

 

தனுசு

தொழில் சார்ந்த அலைச்சல்கள் ஏற்படும். அரசு விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். சிந்தனை போக்கில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். மனை விற்பனையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

மகரம்

மனதளவில் தைரியம் பிறக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வுகள் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்புகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பாள் மேன்மை உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகளின் தேடல்கள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

கும்பம்

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். குடும்பத்தில் ஆதரவான சூழல் அமையும். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை குறையும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மீனம்

மனதில் இனம் புரியாத சோர்வு உண்டாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் திருப்தியான சூழல் அமையும். உடல்நலனில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் மந்தமாக நடைபெறும். குடும்பப் பெரியவர்களிடம் பொறுமையை கையாளவும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 672
·
Added a post

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை 17.7.2025.

இன்று மாலை 06.33 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று அதிகாலை 04.48 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று காலை 09.53 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.

இன்று காலை 07.38 வரை பத்தரை. பின்னர் மாலை 06.33 வரை பவம். பின்பு பாலவம்

இன்று அதிகாலை 04.48 வரை சித்த யோகம். பின்னர் அதிகாலை 05.59 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=52&dpx=1&t=1752719105

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 737
·
Added a post

ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென தன் தாயிடம் அடம்பிடித்தாள்.

“இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை" என்றாள் தாய்.

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் தாய்.

ஆனால் அச் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்...

அந்த சிறுமிக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது.

அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள் உடன் வைத்திருந்தாள்.

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ தாய் சொல்லியும் கூட கேட்கவில்லை. எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

அச்சிறுமியின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் குழந்தை படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “மகளே.. என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா...” என்றாள்.

"பரவால்லை குட்டிம்மா..." என்று புன்னகையுடன் பதில் சொன்னார் தந்தை.

இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “மகளே... என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க... முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்... அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அச் சிறுமி.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவால்லை குட்டி..” என்றார் தந்தை.

சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், தந்தை இரவு கதை சொல்ல வந்தபோது....சிறுமி ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா...” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து தந்தையின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்... சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட தந்தை, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். குழந்தை தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர்... அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை கொடுத்தார்.

"இதை உனக்கு தருவதற்காகத்தான்டா குட்டி... நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்..." என்றார் தந்தை.

இந்த தகப்பன் யாருமல்ல... நம் எல்லோரையும் படைத்த இறைவன்...

அந்த குழந்தைதான் நாம்.

ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை.

அத்தகைய போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான, நிரந்தரமான சொர்க்கத்தை நமக்கு பரிசளிப்பான்.

நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்,உறவுகள்... போன்ற எது வேண்டுமானாலும் நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்...

ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன.... அத்தகைய சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால்... போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை.

  • 756
  • 775
·
Added article

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ரஜினி கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான ஜெயிலர் 2 ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். மேற்கண்ட இரண்டு திரைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.

சினிமாவில் பிசியாக உள்ள கமல்ஹாசன், அரசியலிலும் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியின் தலைவராக உள்ளார். அக்கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்த பின்னர், அந்த கூட்டணியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். விரைவில் எம்பி-ஆக பாராளுமன்றத்தில் அமர உள்ள நடிகர் கமல்ஹாசன், இன்று காலை தன்னுடைய நண்பர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். எம் பி ஆக உள்ள கமல்ஹாசனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், அவருடன் சிறிது நேரம் உரையாடினார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  • 1075
·
Added article

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்கிற பழமொழிக்கு சிறந்த உதராணம் நடிகர் கிங் காங் தான். அவர் ஆள் சிறிதாக இருந்தாலும் மிகப்பெரிய திறமைசாலி. நடிப்பு, நடனம் என அனைத்திலும் அசத்தலாக நடித்திடுவார்.

கிங் காங்கின் மூத்த மகள் கீர்த்தனாவின் திருமணம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. திருமணம் கோவிலில் சிம்பிளாக நடைபெற்றாலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செம கிராண்டாக நடத்தி இருந்தார். திருமணத்துக்கு முன்னர் பிரபலங்களுக்கு கிங் காங் பத்திரிகை வைத்தது மிகவும் டிரெண்ட் ஆனது. முதல்வர் தொடங்கி நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என ஏராளமான முன்னணி நட்சத்திரங்களையும் நேரில் சந்தித்து அவர் பத்திரிகை கொடுத்தது இணையத்தில் வைரலானது.

திருமணம் முடிந்த பின்னர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வடிவேலு கொடுத்த மொய் பற்றி பேசி இருக்கிறார் கிங் காங். வடிவேலு சொந்த ஊரில் கோவில் கும்பாபிஷேக பணிகளில் பிசியாக இருந்ததால் அவரால் கிங் காங் மகள் திருமணத்துக்கு வர முடியாமல் போனதால். இதனால் தன்னுடைய உதவியாளரிடம் மொய் பணத்தை கொடுத்து அனுப்பிய வடிவேலு, கல்யாணம் முடிந்த பின்னர் போன் பண்ணி பேசினாராம். அப்போது இவங்க வரல, அவங்க வரலனு கவலைப்படாத கிங் காங், தமிழ்நாடு முதல்வரே வந்திருக்கிறார். அவர் வந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடே வந்த மாதிரி என சொல்லி இருக்கிறார். அதோடு வடிவேலு தனது மகளின் திருமணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மொய் செய்திருந்ததாக கிங் காங் தெரிவித்துள்ளார்.

  • 1080