·   ·  156 posts
  •  ·  0 friends
  • 1 followers

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை - மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் குற்றச்சாட்டு

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை. மழையுடன் ஏற்படும் சிறிய நீரூற்றுக்களை காண்பித்து மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக மின்சக்தி மற்றும் வல சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க் கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக பூகற்பவியலாளர்கள் குழுவொன்று இன்று  (01) அப்பகுதிக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நெற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனைத் தெரிவித்திருந்தார்.

மேலும் மழைக்கு பின் தோன்றும் சிறிய அருவிகளை காட்டி இந்த வளர்ச்சி திட்டத்தை சீர்குலைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால் இந்த திட்டத்துடன் தொடர்புடைய மண்சரிவு அல்லது வேறு எந்த சம்பவமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க்கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக இன்று (01) பூகற்பவியலாளர்கள் குழுவொன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கெல்லாம் தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகள் உள்ளன என்பதை அரசாங்கம் என்ற வகையில் நாங்களும் பொறுப்புடன் கூறுகிறோம்.

அப்படி இருந்தால், அதை எப்படி தடுப்பது என்பது பற்றிய அனுபவம் உலகம் முழுவதும் உள்ளது. கடந்த காலங்களில் சிலரின் நாசவேலைகளால் நாடு இவ்வாறான பல அபிவிருத்தித் திட்டங்களை இழந்தது.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைக்க முன்மொழியப்பட்டது, ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகளால் அது இழக்கப்பட்டது.

மேலும், கெரவலபிடிய LNG ஆலை மற்றும் பல்வேறு சிறிய மின் உற்பத்தி நிலையங்கள் போராட்டங்கள் மூலம் இழக்கப்பட்டன.

இவ்வாறாக பொதுமக்களை அச்சுறுத்தும் மற்றும் தூண்டிவிடக்கூடிய செய்திகள் மூலம் பல அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டிற்கு இல்லாமல் போய்விட்டன. எனவே, உண்மை தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இதேநேரம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரங்களைப் பெற்று ஆலைகளை தொடங்காமல் காலதாமதம் செய்து, அந்த அனுமதிப் பத்திரங்களை அதிக தொகைக்கு ஏனைய தரப்பினர்களுக்கு விற்பனை செய்யும் மாபியாவையும் கண்காணித்து வருகின்றோம்.

எனவே, மின் உற்பத்தி நிலையங்களை விரைவுபடுத்துவதற்கான புதிய திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளோம். அதன்போது புள்ளி முறைமை மூலம் அனுமதி வழங்கி, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சரியான நேரத்தில் விரைவாக சேகரிக்கும் செயற்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 05 முதல் 500 மெகாவோர்ட் வரையிலான மேற்கூரை சோளார் பெனல் திட்டங்களால் கடந்த காலத்தில் மாதத்திற்கு சுமார் 22 மெகாவோர்ட்களை மட்டுமே பெற முடிந்தது.

ஆனால் இந்த நிலை குறித்து முறையான ஆய்வுகளைச் செய்த பிறகு மார்ச் மாதத்துக்குள் அந்த அளவை 40 மெகாவோர்ட்டாக உயர்த்த முடியும்” என்று மின்சக்தி மற்றும் வல சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 676
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்