·   ·  147 posts
  • 2 members
  • 2 friends

கமலாலயம் குளத்தில் கங்கையின் புண்ணியம்

தமிழ்நாட்டில் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் கமலாலயம் குளத்தில் கங்கையின் புண்ணியம் இங்கு கிடைக்கும்!

முசுகுந்த சக்கரவர்த்திக்காக பூவுலகம் வந்த தியாகவிடங்கரை தரிசிக்க ஆவல் கொண்டாள் தேவி சக்தி. அதனால் திருவாரூருக்கு வந்தவள், இந்தக் குளத்தை உருவாக்கி குளக்கரையில் பர்ண சாலை அமைத்து வழிபட்டாள் என்கின்றன புராணங்கள்.

சக்தி கமலாம்பிகை என்ற திருநாமத்தில் இங்கு எழுந்தருளியதால், அவளின் பெயரால் இந்தக் குளமும் கமலாயலயம் என்று பெயர் பெற்றதாம். திருக்குளமே கோயிலாகவும் திகழ்வதால் கமலாலயம் எனும் திருப்பெயர் மிகப் பொருத்தமே.

திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மேற்கு திசையில் இத்திருக்குளம் அமைந்துள்ளது. கமலாலயக் குளத்தை ஆதி தீர்த்தம் எனப் போற்றுகின்றன ஞான நூல்கள். `கோயில் ஐந்து வேலி; குளம் ஐந்து வேலி’ எனும் வாக்குக்கு இணங்க, திருவாரூர் கோயிலின் பிரமாண்டத்துக்கு இணையாகத் திகழ்கிறது கமலாலயம்.

காசியின் கங்கையை விடவும் மேலான புண்ணியம் தரவல்லது இந்தத் தீர்த்தக்குளம் என்பது பெரியோர் வாக்கு. ஆம், காசி - கங்கை தீரத்தில் 63 தீர்த்தக் கட்டங்களே உள்ளன. ஆனால், திருவாரூர் கமலாலயத்தில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன.

இதன் பெருமையைப் பலவாறு போற்றுகிறது கமலாலய மகாத்மியம் எனும் ஞானநூல். தமிழில் அருளப்பட்ட `தியாகராஜ சுவாமி திருக்கோயில் தல புராணம்’ நூலின் தேவதீர்த்த சருக்கத்தில், கமலாலயம் குறித்து 40 பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

பங்குனி உத்திரத் திருநாளன்று, குளத்தின் தேவ தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வணங்கிட, இந்திரனுக்கு இணையான வாழ்வு கிட்டும். இந்தத் தீர்த்தத்தில் வாழ்வில் ஒரு முறை நீராடிய அன்பர்கள், வேறு எந்த இடத்தில் மரித்தாலும் அவர்களுக்கு சிவலோக வாசம் நிச்சயம் என்கிறது புராணம்.

சுந்தரர், தண்டியடிகள், நமிநந்தி அடிகள் ஆகிய மூன்று நாயன்மார்களோடு தொடர்புடையதாகத் திகழ்கிறது கமலாலயக் குளம். நமிநந்தியடிகள் அறநெறியப்பர் சந்நிதியில் நீரால் விளக்கேற்றுவதற்காக, இந்தக் குளத்தின் நீரையே பயன்படுத்தினார்.

பிறவியிலேயே பார்வையற்ற தண்டியடிகள், சமணர்களின் சவாலை ஏற்று, இந்தக் குளத்தை தூர்வாரி திருத்தொண்டு புரிந்து, இறை அருளையும் கண்பார்வையையும் பெற்றார்.

சிவபெருமான் கொடுத்த தங்க ஆபரணங்களைக் கள்வருக்குப் பயந்து விருத்தாசலம் ஆற்றில் விட்டார் சுந்தரர். பிறகு அவர் திருவாரூருக்கு வந்து இந்தக் குளத்திலிருந்து அந்த நகைகளை எடுத்ததாக பெரியபுராணம் விவரிக்கிறது. அந்தத் தங்கத்தின் தரத்தை மாற்றுரைத்து சொன்ன விநாயகரும், குளத்தின் வடகிழக்கு மூலையில் மாற்றுரைத்த விநாயகராக அருள்கிறார்.

மூன்றரை கோடி தீர்த்தங்களின் சங்கமம் எனவும் வற்றாத குளம் எனவும் இத்திருக்குளம் போற்றப்படுகிறது. துர்வாசர், சப்த மகரிஷி உள்ளிட்டோர் இதில் நீராடி பேறு பெற்றனர். சங்கீத மும்மூர்த்திகளான தியாகபிரம்மம், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் இந்தக் குளத்தின் கரைகளில் பாடிய கீர்த்தனைகள் அற்புதமானவை.

பங்குனி உத்திரத்தில் தியாகராஜரும், ஆடிப்பூரத்தில் மனோன்மணி அம்மையும் இந்தக் குளத்தில் தீர்த்தவாரி வழங்குவர்.

தெப்பத்திருவிழா இந்தக் குளத்தில்தான் நடைபெறும். ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாள்களில், இந்தத் தீர்த்தத்தில் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்புக்குரியது

  • 540
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்