·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 119
  • More

மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்

மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

Method 1

முளை கட்டிய வெந்தயம் ஒரு ஸ்பூன் ஒவ்வொரு வேளை உணவுக்கு பதினைந்தில் இருந்து முப்பது நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டும்.

வெந்தயம் குறைந்தது 36 மணி நேரம் முளை கட்டியதாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் முளை கட்ட முடியவில்லை என்றால் அரை கிலோ அல்லது ஒரு கிலோ வெந்தயத்தை ஒரு இரவு மட்டும் ஊற வைத்து மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி வெந்தயத்தை ஒரு துணியில் கட்டி தொங்க விட வேண்டும்.

குறைந்தது 36 மணி நேரம் முளை கட்ட வேண்டும். இரண்டு செ மீ அளவுக்கு முளை வந்து இருக்கும். அந்த முளை வந்த வெந்தையத்தை நிழலில் கவனிக்கவும் நிழலில் காயப் போட்டு நன்கு காய்ந்த பின் அரைத்து பொடியாக்கி சேமித்து வைத்துக் கொண்டு அந்த வெந்தயப் பொடியில் ஒரு ஸ்பூன் ஒவ்வொரு வேளை உணவுக்கு பதினைந்தில் இருந்து முப்பது நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் சர்க்கரை நோய் பாதிப்புகளும் படிப்படியாக விலகும். இது மருத்துவர் முனைவர் அன்புகனபதி அவர்கள் சொன்ன இயற்கை மருத்துவ முறை ஆகும்.

Method 2

இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்து கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அத்துடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வெந்நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.

இப்படி அரைத்துக் கிடைத்த விழுதை ஒரு குவளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அரை குவளையாக சுருக்கி இறக்கி வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்து வரவும் தேவைப்பட்டால் இரவு படுக்கப் போகும்போதும் குடிக்கலாம்.

இவ்வாறு தொடர்ந்து தினமும் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் சர்க்கரை நோய் பாதிப்புகளும் படிப்படியாக விலகும்.

நெல்லிக்காய் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நெல்லிக்காய் பொடி வாங்கி அந்த பொடியில் ஒரு ஸ்பூன் பொடி அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடி கட்டி குடிக்கலாம். இதை Golden Recipe for Diabetes..தங்க சாறு என்று சொல்வார்கள்

இது ஆயுர்வேத மருத்துவர் கவுதமன் அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் செய்து காட்டிய இயற்கை மருத்துவம் ஆகும்.

Method 3

தினமும் ஐந்து கோவைக்காய் சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

இந்த மூன்று இயற்கை வீட்டு மருந்துகளையுமே சாப்பிட்டு வரலாம். நீரிழவு கட்டுக்குள் வருவதைப் பொறுத்து மருந்துகளின் தேவையை படிப் படியாகக் குறைத்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தி நலம் அடைந்து நீங்கள் நலம் அடைந்ததை உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கும் சொல்லி அவர்களையும் நோயின்றி மகிழ்வுடன் வாழ உதவுங்கள்

  • 2
·
Added a post

மண்ணுக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகளில் அதிக அளவில் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரைச் சத்து இருக்கும் என்பதால், கிழங்கு வகைகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள்.

ஆனால் பனங்கிழங்கு மட்டும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.

பனங்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

அதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அதேபோல பனங்கிழங்கில் உள்ள சில நுண்ணூட்டச்சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

எனவே அச்சமின்றி இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

பனங்கிழங்கில் மிக அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது. இது மலச்சிக்கலை சரிசெய்து வயிற்றைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

பனங்கிழங்கில் அதிக அளவிலான புரதமும் நார்ச்சத்தும் இருப்பது மட்டுமல்லாது, நிறைய உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய உடல் எடை அதிகரிக்கும்.

இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினை தான் ரத்த சோகை.

உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும்.

ரத்த ஓட்டம் குறைவாக இருப்தே பல பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும் உண்டு.

உடல் பலவீனமாக உள்ளவர்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

பனங்கிழங்கை காய வைத்து பொடி செய்து அந்த மாவை எடுத்து, காலை நேரத்தில் கூழ் அல்லது கஞ்சி செய்து குடித்து வந்தால் உடல் வலிமை பெறும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  • 18
  • 37
·
Added a post

சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளி மூடப்பட்டது. ஆனால், இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் பொதுமக்களின் முயற்சியால், 3 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.

தற்போது, இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 42 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இருந்தாலும், மாணவர்களின் சேர்க்கையை மேலும் அதிகரிக்க, அப்பள்ளி ஆசிரியர்கள் நூதன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரை டெபாசிட் செய்வதாக உறுதியளித்து,வருகின்றனர்.

இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்த்தாலும் ரூ.5 ஆயிரமும்; ஏழாம் வகுப்பில் சேர்த்தால் ரூ.4 ஆயிரமும்; எட்டாம் வகுப்பில் சேர்த்தால் ரூ.3 ஆயிரமும்; ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தால் ரூ.2 ஆயிரமும் டெபாசிட் செய்யப்படவுள்ளது.

இதேபள்ளியில் பயிலும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு முடித்துச் செல்லும் போது, முதிர்வடையும் தொகையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • 42
·
Added a post

இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது.

இந்த தீவு எங்குள்ளது?

அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.

இந்த தீவானது பெரும்பாலான நாட்களில் அரபிக்கடலுக்கு அடியில் மறைந்திருக்கும். இந்த தனித்துவமான தீவானது குறைந்த அலைகளின் போது 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.

மேலும், இது இயற்கை ஆர்வலர்கள், சாகச ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களுக்கு ஈர்க்க கூடிய இடமாக அமைந்துள்ளது.

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் தேவ்பாக் கடற்கரைக்கு அருகில் சீகல் தீவு அமைந்துள்ளது. இதன் அற்புதமான அழகு மற்றும் தனித்தன்மை காரணமாக 'மினி தாய்லாந்து' என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளது.

சீகல் தீவு தினமும் அரை மணி நேரம் மட்டுமே கடலில் இருந்து வெளிப்படுகிறது. இது இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். கடலின் அலை குறையும் போது, ​​ஒரு சிறிய அழகிய மணல் திட்டு தோன்றும். இதனை சீகல் தீவு என்று அழைக்கின்றனர்.

சீகல் என்பது கடலில் வாழும் ஒரு பறவை இனம் ஆகும். ஏராளமான சீகல்கள் மற்றும் பிற பறவை இனங்கள் கூட்டமாக வருவதால் இந்த தீவு பறவை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக விளங்குகிறது.

சீகல் தீவை இன்னும் சிறப்புறச் செய்வது என்னவென்றால் அதன் அழகிய சுற்றுப்புறம். கடல் தொடர்ந்து அதன் மீது எழுவதால் குப்பைகள் எதுவும் இருக்காது. இங்கு வரும் பார்வையாளர்கள் மீன் பிடிக்கவும் செய்கின்றனர்.

இங்கு செல்லும் பயணிகள் சாலை அல்லது கொங்கன் இயில் வழியாக செல்லலலாம். மால்வானில் இருந்து, பார்வையாளர்கள் தேவ்பாக் கடற்கரைக்கு படகு சவாரி செய்ய வேண்டும்.

அங்கு உள்ளூர் மீனவர்கள் தீவிற்கு ரூ. 500-800 வரை கட்டணத்தில் சவாரி செய்கிறார்கள். இந்த தீவு, மும்பையிலிருந்து பயணிப்பவர்களுக்கு சுமார் 42.5 கிமீ தொலைவில் உள்ளது.

இதனை அருகிலுள்ள துறைமுகம் நவா ஷேவா ஆகும். அதேபோல அருகிலுள்ள விமான நிலையம் சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் விமான நிலையம் ஆகும்.

குறைந்த அலைகளின் போது மட்டுமே சீகல் தீவை பார்க்க முடியும் என்பதால் செல்வதற்கான சரியான நேரத்தை சரிபார்த்து விட்டு செல்ல வேண்டும். சரியான நேரம் தினமும் மாறுபடும் என்பதால் பார்வையாளர்கள் தீவிற்கு செல்லும் முன் திட்டமிட வேண்டும்.

  • 48
·
Added a post

ஜான்-பியர் ஆடம்ஸ் ஒரு பிரெஞ்சு கால்பந்து வீரர். ஒருசமயம் அவரது பழுதடைந்த தசைநாரை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவருக்கு மயக்கமருந்து கொடுக்கும் மருத்துவர் செய்த ஒரு தவறு காரணமாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்து வருகிறார்.

கோமா நிலைக்குச் சென்றபோது அவருக்கு வயது 34. அவருக்கு இப்போது 71 வயதாகிறது.

அவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சுயநினைவின்றி இருக்கிறார். அவர் கோமாவில் இருந்த காலம், தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும் அவர் அறிந்திருந்த காலத்தை விட அதிகம்.

இதில் மிக சோகமான மற்றும் அதிர்ச்சிகரமானது என்னவென்றால், இந்த தவறை செய்த மருத்துவர் மற்றும் அவரது சக ஊழியருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.

அத்துடன் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் பாழாக்கிய தவறுக்காக சுமார் 815 டாலர்கள் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

அவரது குடும்பம் ஒரு தந்தையையும் ஒரு கணவனையும் இழந்தது மட்டுமல்லாமல் உலகம் ஒரு பெரிய விளையாட்டு வீரரையும் இழந்துள்ளது,

1969 இல் அவரை திருமணம் செய்து கொண்ட அவரது மனைவி பெர்னாடெட் இன்று வரை அவரது படுக்கையில் இருந்து கவனித்து வருகிறார், அவருக்கு உணவளிக்கிறார், மேலும் செவிலியர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளின் உதவியுடன் அவரைக் குளிப்பாட்டவும் 24 மணிநேரமும் பராமரிப்பும் அளிக்கின்றார்.

எந்த ஒரு காதல் கதையும் இதை முறியடிக்க முடியாது.

- ஒரு காதல் கதை. கண்ணீர் கதை. அந்த பெண்ணின் மனவுறுதிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • 80
·
Added a post

உங்கள் பயணம் உள்ளூர் மற்றும் அருகில் உள்ள நகரங்கள் மற்றும் இடங்கள் என்று வைத்துக்கொண்டால், இரவில் வீட்டிற்கு அல்லது தங்கும் இடத்திற்கு நீங்கள் அன்றிரவே வந்து விடுவீர்கள். எனவே, உங்களுக்கு தேவை - கையிருப்பில் ஓரளவு பணம்; அவசர தேவைக்கு ATM கார்டு, குடிக்க தண்ணீர் பாட்டில். ஹோட்டல்களில் உணவை முடித்துக்கொள்ளலாம். வீட்டு சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள், பாத்திரங்களில் உணவை எடுத்து செல்வதை விட, சாப்பிட்டு விட்டு, குப்பை பெட்டியில் போடுமாறு, காகித பொட்டலம் அல்லது கடைகளில் உணவுகளை பேக் செய்வதற்கு உள்ள பெட்டிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் சுமை குறையும்.

நீங்கள் இரவில் வேறு இடங்களில் தங்குகிறீர்கள் - குறிப்பாக லாட்ஜுகளில் தங்குகிறீர்கள் என்றால், கண்டிப்பாக நீங்கள் ஒரு திட்டம் முதலில் தயார் செய்யவேண்டும். அதுவும், அதிக நாட்கள் தங்குகிறீர்கள் என்றால், அதற்கு தகுந்தவாறு உடைகளின் எண்ணிக்கை கூடும். இப்போது உங்கள் திட்டத்தில்(Checklist) இடம் பெறவேண்டிய பொருட்கள்:

- பல் துலக்க பிரஷ் மற்றும் பேஸ்ட் (சிறிய அளவு பேஸ்ட்) போதும். நீங்கள் தங்குகிற லாட்ஜுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். சில சமயங்களில் இவற்றிற்காக, நீங்கள் வெளியிடங்களில் கிலோமீட்டர் தூரம் வரை நடக்கவேண்டியது வரும்.

- உடலை சுத்தம் செய்வதற்கு வேண்டிய சோப் - சிறிய அளவு போதுமானது; அதை வைப்பதற்கு சோப் கேஸ்.

- உடலை துவட்ட ஒரு துண்டு.

- தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கடைகளில் கிடைக்கும் சிறிய எண்ணெய் பாக்கெட்டுகள். அதாவது ஒரு முறை பயன்படுத்திவிட்டு, வெளியேற்றிவிடக்கூடிய பாக்கெட்டுகள்

- அதே மாதிரி ஷாம்பு பாக்கெட்டுகள். தேவைக்கு ஏற்றவாறு.

- முகத்திற்கு தேவையான பவுடர்; பெண்கள் கூடுதலாக அழகு சாதன பொருட்கள் - இவற்றை தனியாக ஒரு எடுத்துச்செல்லும் வகையில் உள்ள ஒரு பெட்டியில் வைத்துக்கொள்ளவும். கடைகளில் 30 ரூபாய்க்கு கூட இந்த துணி பெட்டிகள் கிடைக்கின்றன. இவற்றால் சுமை கூடாது. அதற்கு பதிலாக எடை கூடிய பெட்டிகள் என்றால், கார்களில் செல்பவர்களுக்கு மட்டுமே சரியாகும். பேருந்து, ரயில், விமானங்களில் செல்பவர்களுக்கு பொருந்தாது.

- உடைகள் - (வெளியூரில் தங்கும் நாட்களுக்கு தகுந்தவாறு) உள்ளாடைகள், சட்டைகள், பேண்ட்/வேஷ்டிகள் - அதே மாதிரி பெண்களும்.

- அறைகளில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் பயன்படுத்த தேவைப்படும் லுங்கிகள், நைட்டிகள் போன்றவை

- தேவையான கைக்குட்டைகள்

- ஆண்கள் என்றால், முகச்சவரம் செய்வதற்கு வேண்டிய சாதனங்கள் - shaving cream பிளேடுகள்/சிறிய கத்திரிக்கோல் உட்பட.

- தலை சீவுவதற்கு வேண்டிய சீப்புகள்

- பெண்கள் என்றால், தலைக்கு தேவையான கிளிப்புகள் போன்றவை

- ரயிலில் இரவில் படுக்கும்போது தேவைப்படும், சிறிய தலையணை (நம்முடைய லுங்கி போன்றவற்றை மடித்து கூட வைத்துக்கொள்ளலாம்), விரித்துக்கொள்ளவேண்டிய பெட்ஷீட்; போர்த்திக்கொள்ள போர்வை; குளிர் நேரம் என்றால், தலைக்கு குல்லா. ரயிலில் குளிர் சாதன வசதிகள் உள்ள பெட்டிகளில் பயணம் செய்யும்போது, இவற்றை குறைத்துக்கொள்ளலாம்.

- பெட்டிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தேவைப்படும் செயின் மற்றும் பூட்டு

- சிறிய நோட்டு புத்தகம் மற்றும் பேனா;

- தண்ணீர் பாட்டில்கள் - இவற்றை தங்கும் இடங்களில் கூட வாங்கிக்கொள்ளலாம்.

- வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள், தேவைப்படும் கதை புத்தகங்களை எடுத்து செல்லலாம்.

- மொபைல் போன் சார்ஜெர்

- ரயில்களில் உணவு உண்ணும்போது, இருக்கைகளின் மீது விரிக்க தேவைப்படும் பழைய தினபத்திரிகைகள்

- கைகளை சுத்தம் செய்வதற்கு தேவைப்படும் hand napkin

- மருந்துகள்/மாத்திரைகள் போன்றவை

- குழந்தைகள் என்றால், அவர்களுக்கு தேவைப்படும் இதர பொருட்கள்

- பெண்கள் என்றால், அவர்களுக்கு தேவைப்படும் இதர பொருட்கள்

- டார்ச் லைட்

- மெழுகுவர்த்தி வர்த்தி/தீப்பெட்டி

- பயன்படுத்திய உடைகளை தனியாக வைத்துக்கொள்ள தேவைப்படும் பைகள்

- வெளியூர்களில் இருந்து பொருட்களை வாங்கி கொண்டு வருவதற்கு தேவைப்படும் பெரிய அளவிலான பைகள்

- இவை தவிர வேறு தேவைப்படும் பொருட்கள்

பயணம் செய்வதற்கு முன்தினம், தனியாக ஒரு காகிதத்தில், இவற்றை குறித்துவைத்துக்கொள்ளவேண்டும்.

பிறகு பொருட்களை எடுத்து வைத்தால், பொருட்கள் விடுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்காது.

ஒன்றை நாம் கண்டிப்பாக புரிந்துகொள்ளவேண்டும்.

நாம் செல்லும் இடங்களில் இவை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதங்கள் கிடையாது. நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் வேண்டும் என்றால் தாராளமாக கிடைக்கலாம். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி போன்ற மலை வாசஸ்தலங்களில் இவற்றை வாங்குவதற்கு அதிகம் மெனக்கெடவேண்டியது வரும். (என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன்)

அதே மாதிரி பயணங்கள் முடிந்து லாட்ஜுகளில் உள்ள அறைகளை காலி செய்து விட்டு திரும்பும்போது, மறக்காமல், குறைந்த பட்சம் மூன்று நிமிடங்கள் செலவழித்து, அணைத்து இடங்களிலும் நம்முடைய பொருட்கள் உள்ளனவா என்று உறுதி செய்துகொள்ளவேண்டும்.

- குறிப்பாக பலர் அதிகம் தவறவிடுபவை இவைகளாக தான் இருக்கும் - மூக்கு கண்ணாடி; அதற்குண்டான பெட்டி ; கைக்கடிகாரம்; மோதிரம், சிறு சிறுகம்மல்கள் போன்றவை, மொபைல் சார்ஜெர், பர்ஸ்; பாஸ்போர்ட், டிக்கெட் இன்னும் பல.

- கைக்குட்டை/துண்டு/சோப்பு/ - போன்றவற்றை தவறவிடுவதால் அதிகம் இழப்பு இல்லை.

  • 84
·
Added a post

ஒரு ராஜா இருந்தார். அவரு பெரிய சக்கரவர்த்தி! அவர்தன் மந்திரியோட காட்டுக்கு வேட்டையாடப் போனார்.

மந்திரிக்கு வேட்டையாடறதுலே ரொம்ப இஷ்டம் இல்லே. ஆனா ராஜாவுக்கு மந்திரியோட எப்பவும் இருக்கணும்னு ஆசை. மந்திரிகிட்டே அவருக்கு ரொம்பப் பிரியம்! அதனாலே அவரையும் கூட்டிக்கிட்டு காட்டுக்கு வேட்டையாட வந்துட்டார்.

மந்திரி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை பக்தியோட சொல்வதை வழக்கமா வெச்சுக்கிட்டு இருந்தார்.

அதுலே அவருக்கு ஒரு நிம்மதி!

காட்டுலே ரெண்டு பேரும் ரொம்ப தூரம் அலைஞ்சாங்க! வேட்டையும் சரியா நடக்கலே!....

களைப்பாலே ராஜாவுக்கும் மந்திரிக்கும் உடம்பு சோர்வாப் போச்சு!

கையிலே கொண்டு வந்த தண்ணியும் தீர்ந்து போச்சு!

ராஜாவுக்கு ரொம்ப பசி! மந்திரிக்கும்தான்! .....

என்ன செய்யறதுன்னே தெரியலே.

அப்போ ரொம்ப தூரத்திலே சின்னதா ஒரு குடிசை தெரிஞ்சுது.

ராஜா மந்திரி கிட்டே, ""இப்போ நாம் ரெண்டு பேரும் ரொம்ப களைப்பா, பசியோட இருக்கோம்.வாங்க, ரெண்டு பேரும் தூரத்திலே இருக்கற அந்த குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம்!'' அப்படீன்னார்.

ஆனா மந்திரி ராஜா கிட்டே, ""எனக்கும் பசிதான்! ஆனா நான் வரலே.இங்கேயே இந்த மரத்தடியிலேயே நான் ராமநாமத்தைச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.அது என்னோட பசியை ஆத்திடும்!ராம நாமத்தைச் சொல்றவங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது.நீங்க போயிட்டு வாங்க.' அப்படீன்னார்.

ராஜாவுக்கு மந்திரி மேலே கோபமா வந்தது. இருந்தாலும் முதல்லே பசிக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்னு நெனச்சுக்கிட்டு தூரத்துலே தெரிஞ்ச அந்த குடிசைக்கு நடந்து போனாரு.

அது ரொம்ப ஏழ்மையான வீடு. அங்கே இருந்த ஒரு பாட்டி கிழிசல் புடவையைக் கட்டியிருந்தாள்! ஆனா நல்ல காலம்!

அந்த பாட்டி ஒரு பானையிலே நிறையச் சோறு வெச்சிருந்தாள். ராஜாவுக்கு ஒரு தட்டிலே சோறும், குழம்பும், பொறியலும் கொடுத்தாள்!

ராஜாவுக்கு அது தேவாமிர்தமா இருந்தது!

சாப்பிட்டுட்டு ராஜா தண்ணியும் குடிச்சாரு! ராஜாவுக்குப் பசி அடங்கிடுச்சு!

அவரு பாட்டிகிட்டே, "பாட்டி என்னோட கூட ஒருத்தர் வந்திருக்காரு.அவரும் பசியோடதான் இருக்காரு.ஒரு தட்டிலே அவருக்கும் கொஞ்சம் சோறு கிடைக்குமா?'' அப்படீன்னு கேட்டார்.

அதுக்கென்ன, தாராளமா எடுத்துக்கிட்டுப் போ!.

நான் வேறே சோறு வடிச்சுக்கறேன்!'' அப்படீன்னு சொல்லிட்டு, பாட்டி ஒரு தட்டிலே, சோறு, குழம்பு, பொறியல் எல்லாம் போட்டுத் தந்தாங்க!''

ராஜா அதை எடுத்துக்கிட்டு, ஓடோடி வந்து, பாட்டி வீட்டிலே நடந்ததை எல்லாம் சொல்லி, மந்திரிகிட்டே உணவுத் தட்டைக் கொடுத்தாரு. மந்திரியும் அதைச் சாப்பிட ஆரம்பிச்சார்.

ராஜா மந்திரியைப் பார்த்து, "நீங்க சொல்ற ராம நாமமா உங்களுக்கு சோறு கொண்டு வந்து கொடுத்தது?

என்னோட யோசனையால்தானே உங்களுக்கு இப்போ சோறு கிடைத்தது!'' அப்படீன்னார்.

மந்திரி ராஜாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "ராஜா, நீங்க சக்கரவர்த்தி!

ஆனா நீங்க ஒரு சாதாரண ஏழைப் பாட்டிகிட்டே கையேந்தி சாப்பாட்டுக்கு நின்னீங்க. அதனாலே உங்களுக்கு சாப்பாடு கிடைச்சுது!.

ஆனா எனக்கு என்னோட பிரபு ஸ்ரீராமன், சக்கரவர்த்தியான உங்க கையாலே, நான் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து கொடுக்கும்படியாச் செஞ்சுட்டார்!

இதுதான் ராமநாமத்தின் மகிமை!.'

அப்படீன்னார்.

சக்கரவர்த்தியும் தன்னோட

தப்பை உணர்ந்து தலை குனிந்தார்..!

  • 107
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வீடு, வாகன பழுதை சரி செய்வீர்கள். தந்தை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும். அரசு வழியிலான செயல்களில் சில தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் உழைப்புக்கான மதிப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சஞ்சலம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

ரிஷபம்

நண்பர்களிடையே இருந்த வேறுபாடுகள் விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மிதுனம்

நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை சிலருக்கு உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் அமையும். எதிர்பாராத சில மாற்றங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். அதிகாரிகளிடத்தில் மதிப்புகள் உயரும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கடகம்

மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். குழந்தைகள் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடியும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பணியாளர்கள் இடத்தில் வீண் விவாதங்கள் தோன்றி மறையும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

சிம்மம்

மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

கன்னி

மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிந்தனைகளில் புதிய பொழிவுடன் செயல்படுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

துலாம்

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவுகள் மேம்படும். பயணம் தொடர்பான செயல்களில் ஆர்வம் மேம்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் அமையும். தொழில் கல்வியில் மேன்மை ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

விருச்சிகம்

மனதில் புதுவிதமான தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். புனித தல பயணங்கள் கை கூடும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

தனுசு

நினைத்த பணிகளில் தடைகள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வேலை ஆட்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். எதிலும் முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் உருவாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். அயல்நாட்டு பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான சில முடிவுகள் பிறக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

கும்பம்

கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் குறையும். பழைய சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம்

நெருக்கமானவர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். பணி நிமித்தமான புதிய இலக்குகள் பிறக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். கலைப் பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

  • 167
·
Added a post

விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 2 ஆம் தேதி வியாழக்கிழமை 18.9.2025.

இன்று அதிகாலை 2.09 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று காலை 09.28 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

இன்று அதிகாலை 2.10 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று அதிகாலை 2.09 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 1.44 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று காலை 6.02 வரை சித்தயோகம். பின்னர் காலை 9.28 வரை அமிர்த யோகம். பின்பு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=263&dpx=1&t=1758179200

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 168
  • 170

Good Morning...

  • 169
·
Added article

நடிகர் தனுஷ் இட்லி கடை என்ற படத்தை இயக்கி, கதை எழுதி, நடித்து, தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இதில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவரப் போகிறது.இதற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் தனுஷ் சில விஷயங்களை உருக்கமாக பேசி கடந்து வந்த பாதையை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த டிடி, தனுஷிடம் கருங்காலி மாலை பற்றி ரகசியம் என்ன என்று கேள்வி கேட்டார். அதற்கான ரகசியத்தை சொல்லும் விதமாக தனுஷ் சென்டிமெண்டாக பதில் கூறியிருக்கிறார்.

அதாவது இது என்ன மாலை என்று எனக்கு சத்தியமாக தெரியாது, என்னுடைய தாத்தாவின் போட்டோவுக்கு முன்னாடி இந்த மாலை தொங்க போட்டு இருந்தது. அப்பொழுது என்னுடைய பாட்டியிடம் நான் இது என்ன மாலை என்று கேட்டேன். அதற்கு என்னுடைய பாட்டி, தாத்தா 30 வருஷமாக ஜபித்த மாலை என்று சொன்னார்.

உடனே எனக்கு இந்த மாலை வேண்டுமென்று கேட்ட பொழுது என்னுடைய பாட்டி என்னை கூட்டிட்டு போய் தாத்தா படத்துக்கு முன்னாடி நிற்க வைத்து அதை கழட்டி எனக்கு போட்டு விட்டார். அதைத்தான் நான் கழுத்தில் போட்டிருக்கிறேன். ஆனால் இந்த மாலை போட்டதற்கு பிறகு எனக்கு சக்தியும் நிதானமும் வெற்றியும் கிடைக்கிறது என்று ஒரு நம்பிக்கை.

அதனால் தொடர்ந்து போட்டிருக்கிறேன் என்று தனுஷ் அவர் போட்டிருக்கும் கருங்காலி மாலை பற்றி ரகசியத்தை அனைவரது முன்னாடியும் தெரியப்படுத்தி இருக்கிறார்.

தனுஷ் என்னதான் தாத்தா போட்டிருந்த மாலை என சொல்லியிருந்தாலும் பலரும் கருங்காலி மாலை போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு சீசன் என்று சொல்வதற்கு ஏற்ப சிவகார்த்திகேயன், லோகேஷ், விஷ்ணு விஷால் மற்றும் பலர் நடிகர்கள் போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • 338
·
Added a news

ஒண்டாரியோ மாகாணத்தின் பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் உள்ள டோரன்ஸ் பகுதியில் மர்மமான சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹார்டி லேக் சாலையில் சடலம் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, ஒன்டாரியோ மாகாண பொலிஸார் பிரேஸ்பிரிட்ஜ் பிரிவு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைக்குள் ஹார்டி லேக் சாலை பகுதியில் இருந்தவர்கள் யாரேனும் டாஷ்கேம் (Dashcam) காட்சிகள் அல்லது தொடர்புடைய தகவல்களை வைத்திருந்தால் பகிருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

  • 344
·
Added a post

சிறுநீர் நன்றாகப் பிரிய உதவும் சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள்.

  • போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தி, சிறுநீர் கழித்தலை சீராக்கும்.
  • பார்லி தண்ணீரில் உள்ள சத்துக்கள் சிறுநீரகக் கற்களைத் தடுக்கவும், சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகின்றன.
  • இளநீர் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.
  • தர்பூசணி இதில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • எலுமிச்சை சாறு உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்.
  • வெள்ளரிக்காய் சிறுநீர்ப் பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது.
  • வெங்காயம் இதில் உள்ள சத்துக்கள் சிறுநீரகங்களுக்கு நல்லது.
  • பூசணிக்காய் சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படுகிறது.

சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த உணவுகள் ஒரு வழிகாட்டுதல் மட்டுமே.

  • 354
  • 353

நன்றாக திரும்பவும் உற்றுப் பாருங்கள் இந்த படத்தை...

புரிகிறதா?

  • 354
·
Added a post

புரட்டாசி மாதத்தின் முதல் நாள். அன்றைய தினம் இந்தக் கதையை படித்தால், செய்த பாவங்கள் அத்தனையும் நீங்கி, உங்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.

இன்று புரட்டாசி மாதத்தின் முதல் நாள். இன்றைய தினம் இந்தக் கதையை படித்தால், செய்த பாவங்கள் அத்தனையும் நீங்கி, உங்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை வந்தால் சொல்லவே வேண்டாம். எல்லோரது வீட்டிலும் தளிகையும், கோவிந்தா கோவிந்தா என்ற நாமமும் நிச்சயமாக உச்சரிக்கும். வருடத்தில் 12 மாதங்கள் இருக்க, புரட்டாசி மாதத்தில் மட்டும் பெருமாளுக்கு எதற்காக இத்தனை சிறப்பு பூஜை புனஸ்காரங்கள். என்றைக்காவது நீங்கள் யோசித்து உள்ளீர்களா. இதற்கான வரலாற்று ரீதியான ஒரு கதையை இந்த நன்னாளில் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முன்பொரு காலத்தில் தொண்டைமான் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பெருமாள் பக்தன். தன்னுடைய அரண்மனையில் தங்கத்தால் செய்த பெருமாளை வைத்து, அனுதினமும் தங்க புஷ்பத்தால், வெள்ளி புஷ்பத்தால், அன்றாடம் பூஜித்து பெருமாளை வழிபடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்து வந்தது.

வழக்கம்போல ஒரு நாள் காலை எழுந்து மன்னன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, எப்போதும்போல் பெருமாள் சிலைக்கு முன்பு வந்து அமர்ந்து, தயாராக இருக்கும் பூக்களை எடுத்து பூஜை செய்ய தொடங்கினான். ஆனால், மன்னன் எடுத்துப் போடக் கூடிய தங்க புஷ்பங்களும், வெள்ளி புஷ்பங்களும் வாசனை மிகுந்த மலர்களும் திடீரென்று களிமண் பூக்களாக மாறின.

மன்னன் புஷ்பத்தை எடுத்து பெருமாள் பாதங்களில் முதல் முறை போடும் போது, அந்த பூ, களிமண் பூவாக மாறி பெருமாள் பாதங்களில் விழுகிறது. இரண்டாவது முறை சோதித்து பார்க்கின்றான். இரண்டாவது முறையும், தங்கம் வெள்ளி பூக்களும் களிமண் பூக்கள் ஆகவே மாறுகின்றது. இந்த மன்னனுக்கு ஒரே குழப்பம். சரி என்ன செய்வது. ஆரம்பித்த பூஜையை நிறைவு செய்ய வேண்டும் அல்லவா. பூஜையை அரைகுறை மனதோடு நிறைவு செய்கின்றான். காலையில் இந்த பூஜையை முடித்த மன்னனுக்கு மனதில் ஏகப்பட்ட குழப்பம். ‘தான் செய்த பூஜையில் ஏதாவது தவறு நடந்திருக்குமோ. பெருமாளுக்கு ஏதாவது குறை வைத்திருக்கின்றோமோ’ என்ற ஏகப்பட்ட கேள்விகள் மன்னனின் மனதில் எழுகின்றது.

அன்றைய நாள் முழுவதும் சரியாகவே செல்லவில்லை. மனக் குழப்பத்தோடு அரைகுறை வேலைகளை செய்து எப்படியோ நாளை கடத்தி விட்டான். இரவு தூங்கும்போது பெருமாளை வேண்டிக் கொள்கின்றான். என்னுடைய பூஜையில் ஏதாவது குறை இருந்தால் என் கனவிலாவது வந்து அதை தெரியப்படுத்த வேண்டும், நாராயணா! என்று கூறிவிட்டு தூங்க சென்றான் மன்னன்.

தன்னுடைய பக்தனின் வேண்டுதலுக்கிணங்க பெருமாள், மன்னனுடைய கனவில் தோன்றி ‘உன்னுடைய குழப்பத்திற்கு எல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால், நீ நாளை பீமாவை போய் காண வேண்டும்’. என்று கூறிவிட்டு, பெருமாள் மறைந்துவிட்டார். மன்னனுக்கு தூக்கமும் கலைந்துவிட்டது. இந்த பீமா யாராக இருக்கும் என்ற குழப்பமும் மன்னனின் மனதில் எழுந்தது.

மறுநாள் அதிகாலை வேளையிலேயே எழுந்த மன்னன் தன்னுடைய வேலை ஆட்களை அனுப்பி, தன்னுடைய நாட்டில் பீமா யார் என்று விசாரித்து, பீமையா வாழும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டான் மன்னன். இந்த பீமா என்பவன் வயது முதிர்ந்த ஒரு குயவன். குயவன் என்றால் மண்பானை செய்வார்கள் அல்லவா, அவர்களை தான் குயவன் என்று சொல்லுவார்கள்.

இந்த குயவனும் ஒரு பெருமாள் பக்தன் தான். ஆனால் இந்த குயவனால், வாசனை மிகுந்த பூக்களைக் கொண்டு கூட பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய முடியாது. மனதார தினம்தோறும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவன் தான் குயவன்.

குயவனை தூரத்தில் நின்று பார்க்கின்றார் மன்னன். அந்த குயவன் பானை செய்து கொண்டு இருக்கின்றான். பானை செய்யும் போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரித்துக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்கின்றான். அந்த சமயம் பார்த்து அவனுக்கு முன்னால் பெருமாள் காட்சி தருகின்றார். பெருமாளைப் பார்த்து அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் கையிலிருந்த களிமண்ணில், பூக்களை செய்து பெருமாள் பாதங்களில் போட்டு பெருமாளை வணங்கினான். அந்தக் குயவன்.

மன்னனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கோவில் கட்டி, தங்க பூக்களால் வெள்ளி பூக்களால் அர்ச்சனை செய்த என்னுடைய கண்ணுக்கு பெருமாள் தரிசனம் கொடுக்க வில்லை. ஆனால், சாதாரண குயவன் இவனுடைய பக்திக்கு பெருமாள் காட்சி தருகிறார் என்றால், அந்த குயவனுடைய பக்தியில் எவ்வளவு உன்னதம் இருக்க வேண்டும். என்று நினைத்து, பெருமிதம் அடைகின்றான் மன்னன்.

அந்த மன்னனுக்கு அப்போது தான் புரிந்தது. பக்தி என்பது நாம் இறைவனுக்கு கொடுக்கக் கூடிய பொருட்களில் அல்ல. நம்முடைய சுயநலம் இல்லாத உண்மையான மனதும், சுயநலம் இல்லாத வேண்டுதலுமே உண்மையான பக்தி கானா எடுத்துக்காட்டு என்பதை மன்னன் மனதார உணர்ந்து விட்டான்.

இறைவழிபாட்டிற்கு உண்மையான மனது தான் முக்கியம். ஜாதி மதம் இனம் பணம் காசு இவைகளைப் பார்த்து என்றுமே இறைவன் அருளாசியை கொடுப்பது கிடையாது. இந்த கதையை உணர்த்தும் வகையில், இன்றும் திருப்பதியில் மண்பாண்டங்களில் சில நைவேத்தியங்களை பிரத்தியேகமாக வைத்து பெருமாளுக்கு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

பெருமாள் தரிசனத்தைப் பெற்ற குயவனுக்கு அன்றைய தினம் மோட்சமும் கிடைத்தது. இந்த சம்பவம் நடந்த அந்த நன்னாள் புரட்டாசி மாத சனிக்கிழமை. புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று யார் பெருமாளை நினைத்து கொண்டு, பெருமாள் வழிபாடு செய்து கொண்டே இருக்கிறார்களோ, அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் கோவிந்தா கோவிந்தா நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.

  • 364
·
Added a post

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன.

குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். தோல் நோய்கள் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும்.

குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணிநேரம் ஊறவைத்து, கழுவி வரலாம். நீண்ட காலமாக உள்ள தோல் நோய்களுக்கு, குணமாகும்வரை பின்பற்றி வரவேண்டும்.

பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இதில் 2 அல்லது 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும்.

குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணிநேரம் சென்று குளித்து வர சொறி, சிரங்கு, படை குணமடையும். எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.

குப்பைமேனி செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.

  • 362
·
Added article

படம் ரிலீஸ் ஆனால் சேலை கட்டிக்கிறேன்; சவால் விட்ட மதுரை தி.மு.க பிரபலம், முதல் காட்சி அங்கேயே வெளியிட்ட எம்.ஜி.ஆர்!

மதுரையில் அவர் சேலை கட்டிக்கொள்வதாக பேசியதால், படத்தின் முதல் காட்சி மதுரையில் தான் திரையிடப்பட வேண்டும் என்று முடிவு செய்த எம்.ஜி.ஆர், மீனாட்சி தியேடடரில் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் நடித்த ஒரு திரைப்படம் வெளியானால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று தி.மு.க பிரமுகர் ஒருவர் சொல்ல, அவரை எதிர்த்து தனது படத்தை மதுரையிலேயே திரையிட்டு வெற்றி கண்டுள்ளார் எம்.ஜி.ஆர். இந்த படம் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது.

தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர், தொடர்ந்து 3 முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்த இவர், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பன்முக திறமையுடன் வலம் வந்தார், திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர், முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா இறந்தவுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பிறகு 1972-ம் ஆண்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

கட்சி தொடங்கினாலும், சினிமாவில் தனது இருப்பை வைத்திருந்த எம்.ஜி.ஆர், 1973-ம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட்டார். இந்த படத்தின் பணிகள் தொடங்கும்போது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தினர் படப்பிடிப்புக்கு தடையாக இருப்பார்கள் என்பதால், படத்தின் படப்படிப்பை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கிய எம்.ஜி.ஆர், அந்த படத்தை தானே இயக்கி தயாரித்து நாயகனாக நடித்திருந்தார். படம் பெரிய வெற்றியை பெற்றிருந்துது.

இந்த படத்திற்கு, பல சிறப்பு அம்சங்கள் இருக்கிறது, மதுரையில் முத்து என்பவர் மு.க.அழகிரியை போல் செல்வாக்கு மிகுந்தவர். அவர் ஒரு மேடையில் பேசும்போது, எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் ஆனால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று ஒரு மேடையில் பேசியுள்ளார். இதனால் படத்தை தடுக்க எதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், இதுகுறித்து விசாரித்தபோது, படத்தின் கலர் பணிகள் நடக்கும்போது அந்த நெகடீவ்களை எரிப்பதற்காக முயற்சிகள் நடப்பதாக தெரியவந்தது.

இந்த மேடைப்பேச்சு முடிந்து சில நாட்கள் கழித்து செய்தித்தாளின், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறி தியேட்டரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இதனால் மதுரை முத்து அதிர்ச்சியாகியுள்ளார். மதுரையில் அவர் சேலை கட்டிக்கொள்வதாக பேசியதால், படத்தின் முதல் காட்சி மதுரையில் தான் திரையிடப்பட வேண்டும் என்று முடிவு செய்த எம்.ஜி.ஆர், மீனாட்சி தியேடடரில் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிட்டுள்ளார்.

திரைப்படம் வெளியாக அரைமணி நேரத்திற்கு முன்பாக, மும்பையில் இருந்து தனி விமானத்தில் படப்பெட்டிகள் வந்துள்ளது. இந்த படப்பெட்டியை யாரும் கைப்பற்றிவிட கூடாது என்பதால், பவுன்சர்களை பாதுகாப்பாக வைத்துள்ளார். மேலும் இந்த படத்தை வெளியிட ஆளும்கட்சியே, தொல்லை கொடுக்கிறது என்பதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏதாவது ஒரு பாட்டு முதல் காட்சியில் வர வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் எம்.ஜி.ஆர். அதற்காக எழுதிய பாடல் தான் ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படி தோற்கின் எப்படை வெல்லும்’.

இந்த பாடல் ஓடும்போது திரையில் அதிமுக கொடி பறக்கும். இந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. தொடர்ந்து 216 வாரங்கள் திரையில் ஓடி வரலாற்று சரித்திரத்தை உருவாக்கியது. மேலும் இந்த படத்தை போஸ்டர் அடிக்காமல் நான் ரிலீஸ் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டதாகவும், நடிகர் பாண்டு டிசைன் செய்த, ஸ்டிக்கர் மூலம் தான் இந்த படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

  • 366
·
Added a post

மருதமலைப் பகுதியில் உள்ள வனங்களில் ஏராளமான விஷப் பாம்புகள் அப்போது இருந்தன. ஜோகி என்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அந்த இளைஞனுக்குச் சிறுவயதிலிருந்தே ஏனோ பாம்புகளின் மேல் ஓர் ஈர்ப்பு. பாம்புகளைப் பிடிப்பதும் அடிப்பதும் அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

ஊருக்குள் நுழைந்துவிடும் விஷப்பாம்புகளைப் பிடிப்பதில் அவன் கைதேர்ந்தவனாக விளங்கினான். மூலிகை வைத்தியத்தால் பாம்பு கடித்தவர்களைப் பிழைக்க வைக்கும் ஔடதமும் எப்படியோ அவனுக்குக் கைவரப் பெற்றது.

ஒரு பாம்புப் பிடாரனாக, பாம்புக் கடி வைத்தியனாக 'பாம்பாட்டி' என ஊர்மக்களிடையே அவன் பிரபலமாகியிருந்தான். பொதுமக்கள் மட்டுமன்றி மூலிகை ஆராய்ச்சிகளுக்காக அந்தப் பகுதிக்கு வரும் வைத்தியர்கள் மற்றும் சித்தர்களிடையேயும் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் பாம்பு விஷம், அதை முறிக்கும் மூலிகைகள் குறித்து செய்த மருத்துவ ஆராய்ச்சிகளுக்கென பாம்புகளைப் பிடித்துக் கொடுப்பது - அடர் காட்டுக்குள் கிடக்கும் மூலிகைகளை தேடிக்கொண்டு வந்து கொடுப்பது என அவன் அவர்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தான்.

கொடிய பாம்புகளை எளிதாக வசியம் செய்து அவன் பிடித்து விடுவதையும், ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் பாம்பு விஷத்தை முறையாக எடுத்துக் கொடுப்பதையும் பார்த்த அவர்கள் அவனிடம் ஏதோ ஒரு விசேஷ சக்தி இருப்பதாக தங்களுக்குள் வியப்பை ரகசியமாக வெளிப்படுத்திக்கொண்டனர்.

மருதமலை பாம்பாட்டியின் வசியத்துக்கு சில மலைப்பாம்புகளும் கட்டுப்பட்டது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒருநாள்...

பாம்பு விஷ முறிவு ஆராய்ச்சிக்கென அங்கு வந்திருந்த வைத்தியர் ஒருவர், பாம்பாட்டியிடம் ஒரு ஆச்சர்யமான தகவலைச் சொன்னார்:

"பிடாரா! மருதமலை உச்சியில் ஓங்கி வளர்ந்திருக்கும் நாகலிங்க மரத்தடியில் நவரத்ன பாம்பு ஒன்று வசித்து வருகிறது. உருவத்தில் மிகவும் சிறியதும் வயதில் மிகவும் மூத்ததுமான அந்தப் பாம்பு சாதாரணமாக மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாது. அதன் தலையில் ஓர் அபூர்வமான மாணிக்கம் உள்ளது. அந்த மாணிக்கத்தின் ஒளியில் இரவில் மட்டுமே அது இரைதேடி, தன் இருப்பிடப் புற்றை விட்டு வேட்டைக்கு வெளியே வரும்! பகலில் மறைந்து விடும்! அந்த நாகமாணிக்கம் பல அபூர்வ சக்திகளைக் கொண்டது! அதன் விஷமே அற்புத அருமருந்து! அதை பத்திரமாக உயிருடன் பிடித்து என்னிடம் கொடுத்து விட்டால் நீ கேட்கும் விலையை நான் கொடுக்கத் தயார்! பாம்பாட்டியான நீ மிகப்பெரிய செல்வந்தனாகி விடலாம்! ஆனால் ஓர் எச்சரிக்கை... கரணம் தப்பினால் மரணம்தான்! அந்த நாகம் சாதாரண பாம்பல்ல!"

பாம்புகளை தன் விளையாட்டுப் பொம்மைகளாகவே நினைக்கும் அவன் சிரித்துக்கொண்டே "அந்த மாணிக்கப் பாம்பை இன்று இரவே பிடித்து வருகிறேன். காத்திருங்கள்'' என்று கூறிவிட்டு, மலை உச்சியில் உள்ள நாகலிங்க மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அந்த மலை உச்சியை அடைந்து பக்கத்திலிருந்த ஒரு புதருக்குள் பதுங்கியபடி, பாம்பு வரும் இடத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்... பாம்பாட்டியின் நடமாட்டத்தை பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உணர்ந்து பழகிய பல பாம்புகளும், வழக்கம் போல் பயந்து நடுங்கி புதர்களில் பதுங்கத் தொடங்கின.

பூச்சிகளின் ரீங்காரமும் விலங்குகளின் சத்தமும் காட்டையே அதிர வைத்துக்கொண்டிருந்தன. அன்று அமாவாசை என்பதால் எங்கும் கும்மிருள் அப்பிக் கிடந்தது. புதரில் மறைந்த பாம்பாட்டி, நாகலிங்க மரத்தடியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது மரத்தடியிலிருந்து ஒரு சிறு வெளிச்சம் ஊர்ந்து வருவது தெரிந்தது. பாம்பாட்டி தன் பார்வையை இன்னும் கூர்மையாக்கினான். அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த பாம்பாட்டிக்கு சற்றே வியப்பும் பயமும் மேலிட்டன!

இப்போது அந்த மலைவனமே அதிரும்படி ஓர் உரத்த சிரிப்பொலி எழுந்து அடங்கியது! பாம்பாட்டி பயந்து ஒரு புதருக்குள் பதுங்கினான். சிறிய பாம்பு எப்படி இப்படிச் சிரிக்க முடியும் என்ற குழப்பம் அவனுக்குள் பயமாகப் பரவிக்கொண்டிருந்தது...

"பயம் வேண்டாம் பிடாரா! வெளியே வா! நான் மாணிக்க நாகம் அல்ல. உன்னைப்போல் ஒரு மானிடனே!" என்ற குரல் கேட்டு பயத்தில் உடல் நடுங்க மெள்ளக் கண் திறந்து பாம்பாட்டி அந்த உருவத்தைப் பார்த்தான். ஒளிப் பிழம்பாய் மின்னிய அந்தத் திருமேனியில் திருநீற்று வாசனை வெளியாகி பாம்பாட்டியின் நாசிகளைத் தீண்டியது. அவன் உடல் சிலிர்த்தான். "அய்யா! நீங்கள் யார்?" என்றான் அச்சம் நிறைந்த குரலில்.

"உன் அறியாமை இருளைப் போக்க வந்த வெளிச்சம் நான்! சரி, நீ யார்?" என்றார் அவர்.

"நான் ஒரு பாம்புப் பிடாரன். பாம்புக் கடி வைத்தியன். ஓர் அபூர்வ பாம்பைத் தேடி இங்கு வந்தேன்!"

"நீ தேடி வந்த பாம்பு கிடைத்ததா?"

"எப்படி கிடைக்கும்? நீங்கள் சிரித்த சிரிப்பில் சிங்கம் புலியே நடுங்கிப் பதுங்கியிருக்கும்!"

"உன் அறியாமையை எண்ணியே நான் சிரித்தேன்!"

"அபூர்வ சக்திகள் கொண்ட மாணிக்க நாகத்தைத் தேடி வந்தது அறியாமையா?"

"ஓர் ஒற்றை மாணிக்கக் கல்லைச் சுமக்கும் பாம்பைத் தேடி நீ வந்திருக்கிறாய். ஆனால் நவரத்னமும் சுமக்கும் ஓர் அற்புத நாகம் உனக்குள் இருப்பதை நீ இன்னும் அறியவில்லையே!"

பாம்பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. "அய்யா, இந்தப் பாமரனுக்குப் புரியும்படிச் சொல்லுங்கள்!" என்றான்.

"அந்த அபூர்வ நாகம் உனக்குள் மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்குள்ளும் உண்டு! ஆனால் உன்னைப்போலவே பலரும் அதை உணர்வதில்லை! அதை அறிந்து உணர்ந்து அனுபவித்தவர்கள் சித்தர்கள்! உனக்கு அந்தச் சித்தி கிடைக்கும் நேரம் இப்போது என் வழியாக வந்து விட்டது! இனி பாம்புகளைத் தேடி வெளியே ஓடாதே! குண்டலினி என்னும் அதி அற்புத நாகத்தைப் பிடிக்க உனக்குள்ளேயே பயணம் செய்! நான் உபதேசம் செய்கிறேன். கவனமாகக் கேள். இனி நீ சாதாரண பாம்பாட்டி அல்ல! பாம்பாட்டிச் சித்தன்! இது இறைக்கட்டளை! ஏற்றுக்கொள்!" என அவர் பேசியதைக் கேட்டு நெக்குருகி பாம்பாட்டி நெடுஞ்சான் கிடையாக அவர் பாதங்களைத் தழுவினான்.

அவனுக்கு அங்கேயே ஞானோபதேசம் செய்வித்த அவர், கடைசியாக இப்படிக் கூறினார்: ''பாம்பாட்டியே, இனி நீ பாம்பாட்டிச் சித்தன் எனப் போற்றப்படுவாய்! எம் பெருமானின் நாகாபரணத்தை அணிந்து குண்டலினி சக்தியின் மேன்மைகளை இந்த மானிட குலத்துக்குச் சொல்லும் பதினெண் சித்தர்களில் ஒருவனாக தனித்துவத்துடன் புகழ்பெறுவாய்! உனக்கு உபதேசம் செய்த இந்த எளியோனின் பெயர் சட்டைமுனி!" எனச் சொல்லிப் புன்னகை வெளிச்சம் அடிக்க சட்டென மறைந்தார் சித்தர் சட்டைமுனி!

திருக்கோகர்ணத்தில் பிறந்தார் என்றும் மருதமலையில் உள்ள பழங்குடியினர் மரபில் பிறந்தார் என்றும் பாம்பாட்டிச் சித்தரின் பிறப்பு பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. 'போகர் - 2000' என்ற நூலில் சித்தர் போகர், இவர் 'ஜோகி' என்ற இருளர் வம்சத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடுகிறார். 'சித்தர் ஞானக் கோவை' நூலோ இவர் 'கோசாயி' என்னும் மலைவாழ் பழங்குடி இனம் எனக் குறிக்கின்றது.

பாம்பாட்டிச் சித்தர் தவம் செய்த குகை 'ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் குகை' என்ற பெயரில் மருதமலையில் உள்ளது.

இவர் ஜீவசமாதி அடைந்த இடங்களாக துவாரகை, மருதமலை, விருத்தாசலம், சங்கரன்கோவில் ஆகிய நான்கு ஊர்களையும் இறுதி சமாதியாக ஐந்தாவது முறை சித்தி அடைந்த இடம் என திருக்கடவூர் மயானம் என்னும் ஆதிக்கடவூரும் குறிப்பிடப்படுகிறது.

பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள பாம்பாட்டிச் சித்தரின் சமாதி பீடத்தை விட்டு வெளியேறும்போது, நம் உடலையும் மனதையும் ஏதோ ஓர் இனபுரியா பேரமைதி ஆட்கொள்கிறது!

ஆழ்தியானத்தில் அமர்ந்து மனம் குவித்து செய்யப்படும் ஜீவசமாதி வழிபாடுகள், மிக மேன்மையான பலன்களை வாழ்வில் வழங்கும் என்கின்றனர் ஆன்மிகத்தில் திளைத்து அனுபவம் பெற்ற ஆன்றோர்!

சித்தர்களின் ஜீவசமாதியில் மனமொன்றி தியானிக்கும்போது மனிதர்களுக்குப் பரு உடல் மறக்கும் 'துரியாதீத நிலை' சம்பவிக்கிறது என்கின்றனர். பௌர்ணமி, ஏகாதசி, பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை போன்ற நிறை நாள்களில் செய்யப்படும் ஜீவசமாதி வழிபாடுகளுக்கு எண்ணற்ற நற்பலன்கள் உண்டெனச் சொல்லப்படுகின்றது.

குருபூஜை முடிந்து சமாதிக் குடிலில் பாம்பாட்டிச் சித்தரை வழிபட்டு, பக்கத்தில் உள்ள தியானக் குடிலில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு, வெளியேறிக்கொண்டிருந்தனர் பல பக்தர்கள். வேறு பலர் உள்ளே வந்துகொண்டிருந்தனர்.

நாம் அங்கிருந்து பிரம்மபுரீஸ்வரர் கோயிலைக் கடந்து நடந்து கொண்டிருந்தோம். 'அரவம் அசைத்த பெருமான்' எனப் போற்றப்படும் பெரிய பெருமானும் பாம்பாட்டி சித்தரும் நம் கண்முன்னே தோன்றி மறைந்தனர். 'சித்தன் வேறு சிவன் வேறு இல்லையே!'

ஒலிபெருக்கியில் பாம்பாட்டிச் சித்தரின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது !

  • 361
·
Added a news

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கில், அதாவது வரிகளை இறுதி செய்வது தொடர்பான வழக்கில் நாம் வெற்றி பெற்றால், உலகின் பணக்கார நாடாக நாம் இருப்போம். பேச்சுவார்த்தை நடத்த நமக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. வரிகளைப் பயன்படுத்தி, ஏழு போர்களைத் தீர்த்து வைத்தேன். ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர ஜெலென்ஸ்கி ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டியிருக்கும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நான் விரும்பவில்லை. மேலும் அவர்களுக்கு விதிக்கும் தடைகள் போதுமானதாக இல்லை. நான் மேலும் பொருளாதார தடைகளை செய்ய தயாராக இருக்கிறேன். டிக்டாக் தொடர்பாக எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது. நான் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.

வெள்ளிக்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங்யிடம் பேசி எல்லாவற்றையும் உறுதிப்படுத்தப் போகிறேன். நாங்கள் ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளோம். அது இரு நாடுகளுக்கும் பொருந்தும் என்று நம்புகிறேன். ஆனால் கடந்த காலத்தில் அவர்கள் செய்ததை விட மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம். அதை வாங்க விரும்பும் மிகப் பெரிய நிறுவனங்களின் குழு எங்களிடம் உள்ளது என டிரம்ப் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

  • 369
·
Added a news

ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் சாதனை படைத்த உசைன் போல்ட், 39, தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமப்படுவதாக வெளியான தகவலை ஒப்புக்கொண்டார்.

ஜமைக்கா தடகள வீரரான உசைன் போல்ட், 39, ஒலிம்பிக் தடகளத்தில் 8 தங்கம் வென்றார். தடகளத்தில் 100 மீ., (9.58 வினாடி), 200 மீ., (19.19) ஓட்டத்தில் உலக சாதனை படைத்து 'மின்னல் வேக மனிதன்' என புகழ் பெற்றார். உலக சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் வென்றுள்ளார். 2017ல் சர்வதேச தடகள அரங்கில் இருந்து விடை பெற்றார். இப்படி பல சாதனை படைத்த உசேன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமப்படுகிறார் என செய்திகள் வெளியாயின. இதனை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''நான் இளமையாக இருந்தபோது அது உண்மையில் ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. இப்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது மூச்சு விட சிரமமாக இருக்கிறது. ஒட்டப்போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றதால் உடற் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது,'' என்றார்.

  • 371
  • 385