- · 1 friends
-
Jinguchaa - Lyrical - Thug Life
Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman
வன்கூவரில் நடைபெறும் காமன்வெல்த் கற்றல் (COL) ஆளுநர்கள் வாரியக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை பிரதமர் அமரசூரிய செவ்வாய்க்கிழமை கனடா வந்தடைந்தார்.
கனடாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் “டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் ஒரு மாலை” என்ற சிறப்பு சமூக நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இலங்கை பிரதமர் அலுவலகத்தின்படி, இந்த நிகழ்வு மதத் தலைவர்களுக்கும் இலங்கை வம்சாவளி சமூக உறுப்பினர்களுக்கும் பிரதமருடன் தொடர்பு கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு, காமன்வெல்த் கற்றல் அமைப்பு மற்றும் ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், குளோபல் அஃபேர்ஸ் கனடாவின் ஒருங்கிணைப்பு குழுவினரும் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை அன்புடன் வரவேற்றனர்.
பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.
மருத்துவக் குணங்கள்:
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
அந்த நடிகருக்கு அப்படி ஒரு ரோல் யாரும் தந்ததில்லை. எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு.
அதுவும் ஒரு நீதிபதியின்வேடத்துக்கு.
தன் மெலிந்த உடலை வைத்து காமெடி காட்சிகள் தான் எடுப்பார்கள் என அவருக்குத் தெரியும். அவரை நிற்க வைத்து டேபிள் ஃபேனை திருப்பி விட்டு காற்றில் பறந்து விடுவது போலக்கூட காட்சி வைத்திருக்கிறார்கள். எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு நீதிபதி வேடத்தை தர...
ஓமக்குச்சி நரசிம்மன் சினிமாவுக்கு வரும் முன் நாடகத்தில் நடித்தார். 'நாரதரும் நான்கு திருடர்களும்' என்கிற நாடகத்தில் ஒரு கராத்தே மாஸ்டர் வேடம் அவருக்கு. ஜப்பானிய கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை வைத்து எழுத நரசிம்மனோ அதை 'ஓமக்குச்சி' ஆக்கி விட்டார்.
குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் ஓமக்குச்சி விசுவை பார்த்து சாப்பிட்டாச்சான்னு கேட்பார். சாப்பிட்டுட்டு சாப்பிடலைன்னு சொன்னா சாப்பாடு வாங்கித்தரப்போறியா..இல்லை...ன்னு விசு ஒரு குழப்பல் போடுவார். ஓமக்குச்சி தலைசுற்றி ஓடிவிடுவார். அடுத்த காட்சியில் விசு 'சாப்பிட்டியா'ன்னு கேட்டதும் "பதிலுக்கு சாப்ட்டியான்னு கேட்கமாட்டேனே"ன்னு சொல்லிட்டு "பைத்தியக்கார ஆஸ்பத்திரில வேலை செய்யற டாக்டருக்கு உடம்பு சரியில்லை"ன்னு சொல்லி மாட்டிக்குவார். உடனே விசு 'பைத்தியக்கார ஆஸ்பத்திரில வேலை பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார..." ஆரம்பிச்சு தொணதொணப்பார். ஓமக்குச்சி தலையை பிய்த்துக்கொண்டு ஓடி விடுவார்.
சூரியன் படத்தில் கவுண்டமணி புதைசேற்றில் மாட்டிக்கொள்வார். கவுண்டமணி விழுந்ததும் ஜாங்குசக்கு ஜஜக்குஜக்குன்னு ஓமக்குச்சி பாடிட்டு போவார்...செம...
பல படங்களில் ஓமக்குச்சியின் காமெடி வயிறு வலிக்க செய்யும். கவுண்டமணி ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்திருப்பார். ஓமக்குச்சி அங்கே வந்து "எச்சூஸ்மி...ஸ்கோர் என்ன?...ரேடியா இல்லைல்லா....கன்ட்ரி வில்லேஜ்..."ன்னு அவர் பேசுவதும் கவுண்டமணி தலைமுடியை பிடித்து அடிப்பதும்....
இப்படி காமெடியாகவே நடித்த ஓமக்குச்சி கடைசியாக நடித்த படம் தலைநகரம். அதில் வடிவேலுவை ஹீரோ மாதிரி போஸ் கொடுக்கச் சொல்வார் மயில்சாமி. அப்போது வடிவேலு எல்லாவற்றையும் உடைப்பார். அருகே நிற்கும் ஓமக்குச்சியை தலைக்கு மேலே சுற்றிகீழே போடுவார். அதில் ஓமக்குச்சி தலை சாய்ந்தது விடும்...நன்றாக ரசிக்கப்பட்ட அந்தக்காமெடி தான் கடைசி...அதோடு உடல்நலமில்லாமல் இரண்டு வருடத்தில் இறந்து போனார் நரசிம்மன். நரசிம்மன்0-கவுண்டமணி அட்டகாசமான காம்பினேஷன்.
என்றாலும் அவருக்கு அழகான அறிவுப்பூர்வமான பாத்திரமாக நீதிபதி பாத்திரம் தெலுங்கில் கிடைத்தது. சில காட்சிகள் தான். ஆனால் ஓமக்குச்சிக்கு அது பெரிய பாத்திரம் தானே.
பிரேமின்ச்சி சூடு என்கிற அந்தத்தெலுங்குப்படத்தின் தயாரிப்பாளரும் இதேப்போல நல்ல பாத்திரங்களுக்கு ஏங்கியவர் தான். தனக்கு கிடைக்காததை தானே உருவாக்கலாம் என இந்தப்படத்தை தயாரித்து நடித்தார். ராஜேந்திரபிரசாத், சந்திரமோகன், கோட்டா சீனிவாசராவ், போன்றோருடன் நாயகியாக நடித்த அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு நடிகை.
ஆம்....சில்க் ஸ்மிதா தான் அவர்.....
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.
காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்கிறோம்.
வெந்நீரில் குளிக்க கூடாது.
எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
எதற்கு இப்படி?
காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.
குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்..
வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??
உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
இது எதற்கு…? உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது. வியக்கவைக்கிறதா… ?
நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது. பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும்போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் , இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
குளிக்க மிக நல்ல நேரம் – சூரிய உதயத்திற்கு முன்
குளிக்க மிகச் சிறந்த நீர் – பச்சை தண்ணீர்.
குளித்தல் = குளிர்வித்தல்
குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.
இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்
ஒரு கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது.
ஒரு இரவு ஒரு பேய் கழுதையை கயிற்றை அறுத்து விடுவித்தது.
கழுதை சென்று ஒரு விவசாயியின் நிலத்தில் பயிர்களை நாசம் செய்தது.
இதனால் கோபமடைந்த விவசாயியின் மனைவி,
கழுதையைச் சுட்டு கொன்றாள்.
*கழுதையின் உரிமையாளர் இழப்பால் மிகவும் துயரமடைந்தார்.
பதிலுக்கு, விவசாயியின் மனைவியைச் சுட்டுக் கொன்றார்.
தன் மனைவியின் மரணத்தால் கோபமடைந்த விவசாயி, அரிவாளை எடுத்து கழுதையின் உரிமையாளரைக் கொன்றார்.
கழுதையின் உரிமையாளரின் மனைவி மிகவும் கோபமடைந்து, அவளும் அவளுடைய மகன்களும் விவசாயியின் வீட்டைத் தீக்கிரையாக்கினர்.
விவசாயி, தனது வீடு சாம்பலாக மாறியதைப் பார்த்து, மேலே சென்று அந்தக் கழுதையின் உரிமையாளரின் மனைவி மற்றும் குழந்தைகள் இருவரையும் கொன்றார்.
கடைசியாக, விவசாயி வருத்தத்தில் மூழ்கியபோது,
பேயிடம் அது ஏன் அனைவரையும் கொன்றது என்று கேட்டான்.
பேய் பதிலளித்தது,
"நான் யாரையும் கொல்லவில்லை.
கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஒரு கழுதையை நான் விடுவித்தேன்.
உங்களுக்குள் இருந்த பிசாசை விடுவித்தவர்கள் நீங்கள் அனைவரும் தான்,
இதன் விளைவாக நடந்த அனைத்தும் மோசமானவை." என்றது பேய்....
விஜய்காந்திடம் சேர்ந்து நடித்த ஒரு சமயத்தில் அருண்பாண்டியன் தனக்கு சினிமா இயக்கும் ஆசை இருப்பதை சொல்லி இருக்கிறார்.
"நிச்சயம் செய் அருண். நான் நடித்துக்கொடுக்கிறேன்" என அப்போது சொல்லி இருக்கிறார். சில வருடங்கள் கழித்து அருண்பாண்டியன் தனது நூறாவது படத்தை தானே தயாரித்து, நடித்து, இயக்கப்போவதாக சொல்ல தான் கொடுத்த வாக்குப்படி போலீஸ் ஆபிசராக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்கிறார் விஜயகாந்த். அந்தப்படம் தான் 'தேவன்.
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த வடிவுக்கரசி தான் சொந்தப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் விஜய்காந்த் நடிக்க வேண்டும் எனவும் கேட்கிறார். அது 'நூறாவது நாள்' படப்பிடிப்பு தளம். அங்கு மோகனும் இருந்திருக்கிறார். விஜய்காந்தோ வடிவுக்கரசியிடம் "மோகன் தான் இப்போ பீக்ல இருக்கார். அவர்க்கிட்ட கால்ஷீட் கேளுங்க" என ஐடியா சொல்ல மோகனோ படுபிஸி. கால்ஷீட் இல்லாமல் திரும்பவும் விஜய்காந்திடம் வர அவர்ரவடிவுக்கரசிக்கு நடித்துக்கொடுத்தப்படம் தான் 'அன்னை என் தெய்வம்'.
கலைஞரின் மருமகன் அமிர்தம். எம்.ஜி.ஆர் காலங்களில் படங்களை இயக்கியவர். ஜெய்சங்கர், மு.க.முத்து படங்களை இயக்கிய அவர் கடைசியாக இயக்கிய படம் 'தூக்குமேடை'. அவர் எண்பது கால இளைஞர்களோடு பணி புரிய ஆசைப்பட்டு விஜய்காந்திடம் ஒரு கதை சொல்கிறார். அந்தக்கதை அவருக்கு பிடித்து விடுகிறது. அப்போது பானுப்ரியா படம் தயாரிக்கக்கேட்க இருவரின் ஆசையையும் நிறைவேற்ற நடித்தது தான் 'சிறையில் பூத்த சின்ன மலர்.'
ஏவிஎம் சகோதரர்களில் எம்.குமரன் மட்டும் தனித்து வந்து படமெடுக்க ஆசைப்பட்டு விஜய்காந்திடம் கால்ஷீட் கேட்கிறார். குமரனுக்காக நடித்துக்கொடுத்த படம் 'வெள்ளைப்புறா ஒன்று'.
எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் மறைமுகமாக திரைப்படங்களில் பிரச்சார பீரங்கிகளாய் சில நடிகர்கள் இருந்தனர். ராதாரவி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், டி.ராஜேந்தர், சந்திரசேகர், ராமநாராயணன் இப்படி. இதில் நகைச்சுவை நடிகரான எஸ்.எஸ்.சந்திரன் படம் தயாரிக்க ஆசைப்பட்டு கேட்க ராம.நாராயணன் இயக்கினார். அதில் விஜய்காந்த் தானும் பங்கேற்பதாக ஒரு கௌரவ வேடத்தில் நடித்துக்கொடுத்தார். அதற்கு எஸ்.எஸ்.சந்திரனிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கிக்கொள்ள வில்லை. டி.ஆர் இசையமைத்த அந்தப்படம் 'எங்கள் குரல்'.
தாணு இயக்குனராக ஆசைப்பட 'தெருப்பாடகன்', மணிவண்ணன் தயாரிக்க ஆசைப்பட 'சந்தனக்காற்று', ஜெயப்ரதாவுக்கு கர்நாடக எம்.எல்.ஏ ரமேஷ் மூலம் 'ஏழைஜாதி', இயக்குனர் ரங்கராஜ் தயாரிக்க 'தர்மம் வெல்லும்', மணிரத்னத்துக்கு 'சத்ரியன், இளையராஜா-கங்கை அமரனுக்கு 'கோவில் காளை', பழ.கருப்பையாவுக்கு 'பொறுத்தது போதும்', சங்கிலி முருகனுக்கு 'கரிமேடு கருவாயன்', பெரியமருது, பாரதிராஜாவுக்கு 'தமிழ்செல்வன்', அவரது மைத்துனர் இயக்குனர் மனோஜ்குமார் தயாரிக்க 'ராஜ்ஜியம்',.......
தனது கூடவே இருந்த ரசிகர் மன்ற நிர்வாகியான ராமு.வசந்தனை 'தாயகம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக்கியதும் விஜய்காந்த் தான்.பல வருடங்களாக தனது உதவியாளராக இருந்த எஸ்.கே.சுப்பையாவை தயாரிப்பாளராக்கி அவர் நடித்தப்படம் தான் 'பெரியண்ணா'. அதில் கிடைத்த பணத்தை பணமாக கொடுத்தால் செலவாக்கி விடுவார் என வீடாக வாங்கிக்கொடுத்தவரும் விஜய்காந்த் தான்.
தனது சொக்கத்தங்கம் படத்தை இயக்க சேரன் சம்பளப்பிரச்சினையில் ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பின்றி இருந்த பாக்யராஜை அழைத்து மறுப்பின்றி இயக்க வைத்தார்.
இவ்வளவு ஏன்?....விஜய்காந்த் நடிக்க வந்த புதிதில் சண்டைக்காட்சிகளுக்காக ஆரம்பக்காலத்தில் மாடக்குளம் தர்மலிங்கத்திடம் சிலம்பம் கற்றுக்கொண்டிருந்தார். தன் சிலம்ப ஆசானையும் விடவில்லை விஜயகாந்த். அவரையும் தயாரிப்பாளராக்கி அவர் நடித்துக்கொடுத்தப்படம் தான்
'ஏமாறாதே...ஏமாற்றாதே.....'
150 படங்களில் நடித்தாலும் பல சிறிய ஆட்களை தயாரிப்பாளராக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் விஜய்காந்துக்கு இருந்தது.
ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான்.
அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.
அவனிடம் சங்கு ஒன்று இருந்தது.
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.
அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான்.
நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
“இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள்.
பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன்.
மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது.
உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன்.
தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான்.
அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல.
அதற்குத் திறமை வேண்டும்.
நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான்.
“எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.
நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன்.
நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.
“இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம்.
நீயும் வா,” என்றான் திருடர் தலைவன்.
இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர்.
இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
எங்கும் இருட்டாக இருந்தது.
அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.
திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர்.
அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.
திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.
ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு.
அது கத்தாது என்று சொல்ல நினைத்தான்.
கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம்.
“சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான்.
இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன்.
சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான்.
ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான்.
வலிமையாக ஊதினான்.
சங்கோசை எங்கும் கேட்டது.
அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.
பிறகு என்ன?
பிச்சைக்காரனை கூட்டுச் சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.
இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.
Tanga / Tonga என இந்தியில் அழைக்கப்படும் குதிரை வண்டியில் குதிரையை வண்டியுடன் பிணைக்க பயன் பட்ட தோல் வார் தான் (மாட்டுத் தோலால் ஆன பட்டையான கனமான பெல்ட் போன்ற ஒன்று) அழகு சென்னைத் தமிழில் டங்குவார் என்றாகியது…
குதிரையின் முழு பலமும் இந்த டங்குவாரின் மூலமே வண்டிக்கு கிடைக்கும்..
வண்டியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையங்களின் ஊடே இந்த டங்குவார் நுழைக்கப் பட்டு குதிரையின் உடலோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கும்.
இதல்லாமல் தோல் காலணிகளில், காலணியின் மோதிரம் எனப்படும் கட்டைவிரல் வளையத்தையும் காலின் நடுப்பகுதியையும் இணைக்கும் தோல் பட்டையையும் இதே பெயரால் அழைப்பர்.
காலின் இயக்கத்துக்கு ஏற்றார் போல் காலணியின் நெகிழ்வை கட்டுப்படுத்தும் முக்கிய இணைப்பு இது…
வண்டியோட்டி முன் புறம் பார்த்தபடி வண்டியோட்ட பயணிப்பவர்கள் பின்னோக்கி பார்த்தபடி அமர்ந்திருப்பர்..
பின்னர் ஆள வந்த ஆங்கில உயர் அலுவலர்களாலும் ஆங்கில மேட்டுக்குடி மக்களாலும் மிகுதியாக டோங்கா வண்டிகள் பயன்படுத்தப்பட்டன..
முறையான சாலைகளே இல்லாத வழிகளில் இந்த டோங்காக்கள் பயணிக்கும்..
தொடர்ச்சியாக ஓரே நாளில் பல மணி நேரங்களுக்கும் தொடர்ந்து பல நாட்களுக்கும் குதிரை ஓடும் போது இரும்பு வளையங்களின் இடையே உராய்ந்து உராய்ந்து இந்த டங்கு வார் தேய்ந்து வலிமை இழந்து விடும்..
சில சமயங்களில் ஒரே பயணத்திலேயே இந்த டங்கு வார்கள் அறுந்து போகும்..
அப்புறம் குதிரை வண்டிக் காரர்கள் கன்ட்ரோலில் இருக்காது. அப்புறம் பயணம்???
ஒரு கேள்விக் குறியாக மாறிவிடும்.
சில கடும் பயண வழித்தடங்களை குறிப்பிட..
"ஐயோ அந்த ஊருக்கு போகனுமா? டங்குவார் அறுந்துடுமே"
என குறிப்பால் பயண கடுமையை குறித்துப் பேச அதுவே…
ஓர் செயலை செய்ய பெரும் துன்பப்படும் நிலைகள் ஏற்படுகையில் அக்கால கட்டத்தில் வண்டியோட்டிகள் பயன் படுத்திய இச்சொலவடை வழக்கு எல்லாவற்றுக்கும் பயன்படுத்தப்படலானது..
காலணியின் டங்குவார் அறுந்து போவதும் பெரும் அலைச்சலையும் சரியாக நடக்க இயலாது சிரமமான நிலையையும் குறிக்கும்..
அதாவது ஒருவர், அவரது இயல்பு வாழ்க்கையில்...... பெரும் துயரங்களை பட்டால்தான் ஒரு சாதாரண வேலையையே முடிக்க முடியும் என்பதே..
டங்குவார் அறுந்துடும் என்பதன் பொருள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வீடு பராமரிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ரிஷபம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சவாலான பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபார மாற்றங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மிதுனம்
பணிவான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். கணித துறைகளில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதர வழியில் அனுகூலங்கள் பிறக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழல்கள் அமையும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சிம்மம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபார முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளால் சோர்வுகள் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
கன்னி
பூர்விக சொத்துக்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்களில் உள்ள தடைகளை அறிவீர்கள். பயணம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான செயல்களில் இருந்த சோர்வுகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும்.இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். உறவுகளுடன் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் ஒரு விதமான திருப்தி ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல்கள் அமையும். வழக்கு விஷயங்களில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
தனுசு
உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தொழில்நுட்ப கருவியால் விரயங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். சொந்த ஊர் சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். துணைவர் வழி உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த தாழ்வு மனப்பான்மை குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கும்பம்
பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மீனம்
குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களால் கையிருப்புகள் குறையும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.6.2025.
இன்று பிற்பகல் 02.26 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று காலை 10.09 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.
இன்று அதிகாலை 02.03 வரை துருவம். பின்னர் வியாகாதம்.
இன்று அதிகாலை 02.44 வரை பாலவம். . பின்னர் பிற்பகல் 02.06 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
இன்று அதிகாலை 05.54 வரை அமிர்த யோகம். பின்பு காலை 10.09 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது. குறித்த நபர் ஐந்து பெண்களுக்கு எதிராக 6 பாலியல் வன்முறைகள் செய்ததாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டதுடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஜோயல் எரிக் கார்ல்சன் என்பவர், 10 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய உயர்நீதிமன்றத்தில் கேம்லூப்ஸ் நகரில் வழங்கப்பட்டது.
இது மிகவும் கொடூரமான பாலியல் குற்றமாகும் என நீதியரசர் டபிள்யூ. பால் ரிலி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த நபரின் செயல், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
குபேர பகவானுக்குரிய கிழமையாக திகழ்வது வியாழக்கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல் குபேர பூஜை செய்யும் வழக்கத்தை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் செய்யக்கூடிய வியாபாரமும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த குபேர பகவானுக்குரிய பூஜையை செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் மிகவும் எளிதில் குபேர தீபத்தை ஏற்றும் முறையும் இருக்கிறது.
அமாவாசை முடிந்து வரக்கூடிய மூன்றாவது நாளை தான் மூன்றாம் பிறை தரிசனம் செய்வதற்குரிய நாள் என்று கூறுகிறோம். அந்த நாளில் நாம் என்ன செய்தாலும் அது பல மடங்கு வளரும் பெருகும் என்று பொருள்படும். அப்படிப்பட்ட ஆனி மாதத்தின் மூன்றாம் பிறை வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும்.
அப்படிப்பட்ட மூன்றாம் பிறையோடு சேர்ந்து வரக்கூடிய வியாழக்கிழமை அன்று நாம் மாலை 6:14 மணியிலிருந்து 7:30 மணி வரை ஒரு தீபத்தை ஏற்றி குபேர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் குபேர பகவானின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம். குபேர பகவானின் படம் இல்லை என்பவர்கள் மகாலட்சுமிக்கு முன்பாகவும் இந்த தீபத்தை ஏற்றலாம். எந்த விளக்கை பயன்படுத்தி வேண்டுமானாலும் இந்த தீபத்தை நாம் ஏற்றலாம்.
ஆனால் அந்த விளக்கிற்கு 5 எண்ணிக்கையில் மஞ்சள் குங்குமம் வைத்திருக்க வேண்டும். ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல் வாசனை மிகுந்த மலர்களை பரப்பி அந்த மலர்களுக்கு நடுவே ஒரு விளக்கை வைத்து அந்த விளக்கில் சுத்தமான நெய்யை ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். ஏதாவது ஒரு இனிப்பு பொருளை இந்த தீபத்திற்கு முன்பாக நெய்வேத்தியமாக வைத்துவிட்டு “ஓம் குபேர பகவானே சரணம் சரணம்” என்னும் மந்திரத்தை 54 முறை கூற வேண்டும். இப்படி ஏழு முப்பது மணி வரை இந்த தீபத்தை எரிய விட்டு இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது குபேர பகவானின் அருளால் நமக்கு தேவையான பண வரவு ஏற்படும். மேலும் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய பணமும் வந்து சேரும்.
முழு நம்பிக்கையோடு குபேர பகவானை நினைத்து இந்த நேரத்தில் ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து குபேர பகவானை வழிபாடு செய்ய அவரின் அருளால் நம்முடைய பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும்.
பொதுவாக பெரியவர்கள் சொல்கின்ற ஒரு விஷயம் என்னவென்றால் யாரையும் அவ்வளவு எளிதாக நினைத்துவிடக் கூடாது. நம்மைவிட சிறியவர்களோ பெரியவர்களோ அவர்களிடம் இருந்து என்ன நல்ல விஷயங்கள் இருக்கிறதோ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கும் பொழுது, ஜப்பானியர்களிடம் இருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது பற்றிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
நேர்மை:
மற்றவர்களைப் போல அல்லாமல் ஜப்பானியர்கள் தான் உலகில் அதிக அளவில் நேர்மையாளர்களாக இருப்பார்களாம். அதேபோல அதேஅளவு நேர்மையை மற்றவர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்களாம். பர்சனலாகவே பொய் சொல்வதைத் தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள்.
வேலை:
அடுத்தவர்களுடைய வேலையில் தலையிடாமல் தன்னுடைய வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
பொது_இடங்கள்:
பொது இடங்களில் செல்லுகின்ற பொழுது அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள். அதனால் பொது இடங்களில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
செல்போன்:
ரயில், பஸ் பயணங்களில் செல்போன் பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. சத்தமாகப் பேசினாலும் பிடிக்காது. முடிந்தவரையில் பேசுவதைத் தவிர்த்து அமைதியாகவே பயணங்கள் மேற்கொள்கிறார்கள்.
தாய்மொழி:
தங்களுடைய தாய்மொழியை அவர்களைவிடவும் அதிகமாக நேசிப்பவர்களாக இருக்கிறார்கள்.
பயணங்களின் போது:
ரயில் பயணங்களில் அல்லது பஸ்ஸில் போகின்ற பொழுது, கூட்டமாக இருந்தாலும் கூட்டமே இல்லாவிட்டாலும் சரி, இறங்குகின்ற பொழுது வரிசையாக நின்று யாரையும் இடித்துக் கொள்ளாமல் ஒருவர் பின் ஒருவராக வரிசையாகத் தான் இறங்குவார்கள்.
சரியான நேரம்:
நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராத ஒரு விஷயம் இதுதான். அலுவலகத்துக்கு மிகச் சரியான நேரத்துக்குச் சென்று விடுவது ஜப்பானியர்களின் பழக்கமாக இருக்கிறது.
வேலை நேரம்:
வேலை நேரத்தில் செல்போனைப் பயன்படுத்தவே மாட்டார்கள். எதை கத்துக்கிறோமோ இல்லையோ இத கட்டாயம் கத்துக்கணும்ப்பா. வேலை நேரத்தில் ஓபி அடிக்கும் பழக்கமே ஜப்பானியர்களுக்குக் கிடையாதாம். 12 மணி நேரம் வேலை இருந்தாலும் முறையாகவும் சரியாகவும் வேலை செய்து முடிப்பார்களாம். ரொம்ப சிஸ்டமேட்டிக்காக இருப்பார்கள்.
விடுமுறை நாட்கள்:
விடுமுறை நாட்களை பொழுது போக்கிற்காகவே பெரிதும் பயன்படுத்துவார்கள்.
மற்றவர்களுடைய பொருள்:
நம்மகிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்னு அவங்ககிட்ட இருக்கு. அடுத்தவர்களுடைய பொருளுக்கு எப்போதும் ஆசைப்பட மாட்டார்கள்.
சுற்றுப்புற சுத்தம்:
சுற்றுப்புறச்சூழல் மீது அக்கறையும் கவனமும் கொண்டிருப்பதில் உலக அளவில் ஜப்பானியர்களுக்கு நிகர் ஜப்பானியர்கள் தான். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, உதாராணமாக குப்பைகளையெல்லாம் மட்கும் மட்காத குப்பைகளாகப் பிரித்து தனித்தனி கவரில் போட்டு அப்புறப்படுத்துவது, சாலைகளில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்பது, பொது இடங்களில் அசுத்தங்களைச் செய்யாமல் இருப்பது, குறிப்பாக, சாலைகளில் பொது இடங்களில் புகைப் பிடித்தலைத் தவிர்ப்பது ஆகியவற்றைக் கடைபிடிக்கிறார்கள்.
உதவி செய்தல்:
அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் படிக்கட்டுகள் மற்றும் எக்ஸ்லேட்டர்களில் போகின்ற பொழுது, ஓரமாக நிற்பது, அவசரமாகச் செல்கின்றவர்களுக்கு வழிவிடுவது போன்ற நாகரீகங்களைப் பின்பற்றுகிறார்கள். மொழி தெரியாத வெளிநாட்டினர் யாராவது உதவி கேட்டால் சிறிதும் சளைக்காமல் அவர்களுக்கு உதவி செய்வார்கள். வழி தெரியவில்லை என்றால் அந்த இடத்துக்கு வழிகாட்டி அழைத்துக் கொண்டே செல்வார்கள்.