மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்

உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?

நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவர் சினிமாவுக்காக இந்தியா வந்து அதன் பிறகு அவர் அடைந்த சறுக்கல்கள், தொல்லைகள், சோகங்கள் மற்றும் சந்தோஷங்கள் ஆகியவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

நேபாள நாட்டின் ராஜகுமாரி மனிஷா கொய்ராலா. இவர் அரண்மனை வாழ்க்கையில் சொகுசாக வாழ்ந்தவர். படிப்பு முடித்தவுடன் இவர் 19 வயதில் சினிமாவில் நடிக்க விருப்பமடைந்து மும்பை வந்தார்.

மும்பையில் சில மாடலிங் செய்து வந்த மனிஷா கொய்ராலாவுக்கு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது படங்கள் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் வாய்ப்புகளும் குவிந்தன.

இந்த நிலையில் தான் மணிரத்னம் இயக்கிய ’பம்பாய்’ திரைப்படத்திற்காக மனிஷா கொய்ராலாவின் புகைப்படத்தை பார்த்து அவரை நடிக்க அழைத்தார். மணிரத்னம் ஆடிஷனில் கலந்து கொண்ட மனிஷா கொய்ராலா இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்பதை கேட்டவுடன் முடியாது என்று மறுத்துவிட்டு மீண்டும் மும்பை சென்று விட்டார்.

ஆனால் அவரது தோழிகள், நெருக்கமானவர்கள், திரை உலக நண்பர்கள் மணிரத்னம் படத்தில் கிடைத்த வாய்ப்பை யாராவது விடுவார்களா என்று திட்டியதை அடுத்து அவர் மீண்டும் மணிரத்னத்திடம் வந்து தான் நடிக்க சம்மதம் என்று கூறினார். அப்படித்தான் உருவானது பம்பாய் திரைப்படம்

அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு புகழை பெற்று தந்தது. அதன் பின் அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்று சொல்லலாம். அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் திரைப்படத்திலும் நடித்தார்.

அதனை அடுத்து கமல்ஹாசன் உடன் ’ஆளவந்தான்’, ’மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடித்த மனிஷா, கடைசியாக தனுஷின் மாமியாராக ’மாப்பிள்ளை’ படத்தில் நடித்தார்.

இந்நிலையில் மனிஷா கொய்ராலா புகழின் உச்சியில் இருந்த போது அவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக ’முதல்வன்’ படத்தில் நடித்தபோது அவர் மது அருந்திவிட்டு தாமதமாக படப்பிடிப்புக்கு வருவார் என்று கூறப்பட்டது.

இதனால் மன விரக்தி அடைந்த ஷங்கர் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தார். ஒரு பிரபல நடிகரின் மனைவி அவருக்கு கவுன்சிலிங் கொடுத்ததாகவும் கவுன்சிலிங் போது மனம் திருந்தி மனிஷா மதுப்பழக்கத்தை விட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. ஒரு வகையில் மனிஷா கொய்ராலா வாழ்க்கையின் திருப்புமுனைக்கு அந்த நடிகரின் மனைவியே ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து பட வாய்ப்புகள் குறைந்த பிறகு அவர் மீண்டும் நேபாளத்திற்கே சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர் தனது தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொது சேவை செய்தார். அதன் மூலம் அவர் உலக அளவில் புகழ் பெற்றார்.

அதன் பிறகு அவருக்கு திடீரென புற்றுநோய் ஏற்பட்டது. ஆனால் அவர் அதை கண்டு கலங்காமல் அதற்கான சிகிச்சை எடுத்தார். அவர் கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டு அதன் பிறகு குணமாகியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவர் நடிப்பு, மாடலிங், தொண்டு எதுவுமே வேண்டாம் என்று விட்டுவிட்டு மன அமைதிக்காக ஆன்மீகத்தில் சில காலம் இருந்தார். இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க வந்தார். அப்போதுதான் அவருக்கு ரஜினியுடன் ’பாபா’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் தான் தனக்கு மிகப்பெரிய சறுக்கல் என்றும், அந்த படத்தில் நடித்தது தனது மிகப்பெரிய தவறு என்றும் சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அதன்பின் மீண்டும் அவர் நேபாளம் சென்று தனது மன திருப்திக்காக பொது சேவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் விற்கப்படுவது சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் குற்றம் என்ற நிலையில் அதை முழுமையாக தடுக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனம் மற்றும் காவல்துறையினருடன் பல குற்றவாளிகளை அவர் பிடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இன்று நேபாள நாடு நாட்டில் பெண்கள் தைரியமாக தெருவில் நடந்து செல்கிறார்கள் என்றால் அதற்கு மனிஷா கொய்ராலாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

புகழின் உச்சத்தில் இருந்த மனிஷா கொய்ராலா மது பழக்கத்தினால் ஒரு கட்டத்தில் ஜீரோவாகி அதன் பின்னர் மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து திரையுலகில் தனது கொடியை நாட்டினார். தற்போது நிம்மதியாக அவர் தொண்டு மற்றும் சேவையில் ஈடுபட்டு இருக்கின்றார். மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • 615
  • More
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு