·   ·  137 posts
  • 2 members
  • 2 friends

காட்டுக்கு நடுவே அதிசயங்கள் நிறைந்த ஹேமாச்சல நரசிம்மர்

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் மல்லூர் எனும் தலத்தில் காட்டுக்கு நடுவே அமைந்துள்ளது ஸ்ரீ ஹேமாச்சல லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். இக்கோயில் நரசிம்மரின் சிலை மற்ற சிலைகளைப் போல இல்லாமல், மனிதரின் சருமத்தைப் போன்று மிகவும் மென்மையாகக் காணப்படுகிறது. இந்த நரசிம்மர் சிலையை அழுத்தினால் சருமத்தில் ஒரு உள் தள்ளல் உருவாவது ஆச்சரியம்.

4000 ஆண்டுகள் பழைமையான ஹேமாச்சல லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் புட்டகொண்டா என்ற மலை உச்சியில் அமைந்துள்ளது. அகஸ்திய முனிவர் இந்த மலைக்கு ஹேமாச்சலம் என பெயரிட்டதாகவும், ராவணன் தனது சகோதரியான சூர்ப்பனகைக்கு இந்த இடத்தை பரிசாக அளித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சியின்போது இக்கோயில் செழித்து வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் 10 அடி உயரத்தில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி அழகுற வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். கோயிலின் கொடிமரம் 60 அடி உயரம் கொண்டது. கோயிலுக்கு அருகில் பாறை வடிவ உக்ர ஆஞ்சனேய சுவாமி சிலை உள்ளது.

இக்கோயில் வனப்பகுதியில் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளதால் இறைவனை தரிசிக்க150 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். புனித கோதாவரி ஆறு இங்குள்ள காட்டின் வழியாகப் பாய்கிறது. கோயிலுக்கு அருகில் நரசிம்மரின் பாதத்திலிருந்து நீரோடை ஒன்று ஓடுகிறது. இதற்கு, ‘சிந்தாமணி ஜலபதம்’ என்று பெயர். இந்த நீர் மிகவும் புனிதமாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது.

சுயம்புவான இந்த நரசிம்மர் சிலையிலிருந்து அவ்வப்போது இரத்தம் கசிவதால் இங்குள்ள அர்ச்சகர்கள் நரசிம்மரின் சிலையை சந்தனத்தைக் கொண்டு மூடி இரத்தப் போக்கை நிறுத்துவதாகக் கூறுகிறார்கள். மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாகப் போற்றப்படும் நரசிம்மர், இக்கோயிலில் உக்கிர நரசிம்மராகக் காட்சி தருகிறார்.

இக்கோயிலின் பிரம்மோத்ஸவ விழா வைகாசி மாதத்தில் (ஏப்ரல் / மே) வெகு சிறப்பாக நடைபெறும். 2003ம் ஆண்டு கோதாவரி புஷ்கரத்தின்போது இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. சுற்றிலும் பசுமை சூழ்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் தியானம் மற்றும் பிரார்த்தனை செய்ய நிறைய பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பத்ராசலத்திலிருந்து 90 கி.மீ. தொலைவிலும், வாரங்கல் நகரத்திலிருந்து 130 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கோயில் காலை 8.30 முதல் 1 மணி வரையும், மதியம் 2.30 முதல் 5.30 மணி வரை திறந்திருக்கும். காட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால் விரைவில் கோயில் நடையை சார்த்தி விடுகிறார்கள்.

  • 341
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்