·   ·  226 posts
  • 2 members
  • 2 friends

குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது? அதை போக்ககூடிய வழி என்ன?

சில பேருக்கு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். ஆராய்ந்து பார்த்தால், உங்கள் குடும்ப தெய்வம் கோபத்தில் இருக்கிறது. வீட்டிற்குள் குலதெய்வம் வசிக்கவில்லை, குலதெய்வம் நிலை வாசலில் நிற்கிறது என்று சொல்லுவார்கள். இதை பொதுப்படையாக குலதெய்வ சாபம் என்று சொல்லுவோம். ஒரு குடும்பத்திற்கு குலதெய்வ சாபம் எப்படி வருகிறது, எந்த தவறுகளை செய்தால் குலதெய்வ கோபத்திற்கு ஆளாவோம், குலதெய்வத்தின் கோபத்தை எப்படி குறைப்பது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்களுடைய குல தெய்வத்தை நினைக்காமல், குலதெய்வ கோவிலுக்கு செல்லாமல், குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருந்தால், குலதெய்வ கோபத்திற்கு ஆளாக கூடிய சூழ்நிலை ஏற்படும். தாய் தந்தையை மதிக்காமல் இருப்பது, அவர்களை வயதான காலத்தில் கைவிடுவது, முன்னோர்கள் இறந்த பின்பு அவர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை முறையாக செய்யாமல் விடுவது, போன்ற தவறுகளை நீங்கள் செய்தாலும் உங்கள் குடும்பத்திற்கு குலதெய்வ சாபம் ஏற்படும். பசுவை வதைப்பதாலும் குலதெய்வ சாபம் ஏற்படும்.

நீங்கள் செய்த தவறு என்ன என்று உணர்ந்து விட்டீர்கள். செய்த தவறை எண்ணி குலதெய்வத்திடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். மீண்டும் இப்படி ஒரு தவறை செய்ய மாட்டேன் என்ற உறுதி மொழியையும் குலதெய்வத்திடம் கொடுத்து விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து உங்களுடைய வீட்டில் சின்னதாக ஒரு பூஜையை செய்ய வேண்டும். 

பூஜைஅறையை அலங்காரம் செய்து குலதெய்வ படத்தின் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து, ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு தாம்பூல தட்டில், ஒரு மஞ்சள் துணியின் மேல் ஒரு கைப்பிடி அளவு சில்லறை காசுகளை முடிச்சு போட்டுக்கோங்க. பிறகு உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 27 முறை உச்சரிக்க வேண்டும். அடுத்து குலதெய்வ சாபம் நீங்குவதற்கு சித்தர்களால் அருளப்பட்ட மந்திரத்தை108 முறை மனமுருகி சொல்லுங்கள். குலதெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்கும்.

 

குலதெய்வத்தின் கோபத்தை தணிக்கும் மந்திரம்

ஓம் என் குலதெய்வமே வர வரஓம் வம் வம் உம் உம், என் படியேறி வா வா என் குல தெய்வமே

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் எடுத்து வைத்திருக்கும் சில்லறை காசு முடிச்சை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது அதை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். நம்பிக்கையோடு செய்தால் குலதெய்வத்தின் கோபம் குறைந்து, குலதெய்வ சாபம் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

  • 219
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங