·   ·  2109 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

பேராசைக்கு கிடைத்த தண்டனை (குட்டிக்கதை)

அருணன் என்ற இளைஞன் வேலைதேடி கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்று கொண்டிருந்தான். காட்டு வழியில் அவன் போகும்போது ஒரு பை கீழே கிடப்பதைப் பார்த்தான். ஆவலுடன் அதை எடுத்துத் திறந்தான்.

அதற்குள் சிறியதாக நான்கு தங்கக் கட்டிகள் இருந்தன. “பாவம், யாரோ தொலைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. விசாரிப்போம்” என்று நினைத்தவன், பத்திரமாக அதை எடுத்துத் கைப்பைக்குள் கொண்டு நகரம் நோக்கி நடந்தான். நகரத்தில் அன்று சந்தை. அதனால் நல்ல கூட்டம் இருந்தது. அருணனும் ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்துக் கொண்டு சென்றான். சந்தையின் நடுவே ஒருவன் உரத்த குரலில் ஏதோ சொல்வதையும் அவனைச் சூழ்ந்து பலரும் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தவன் வேகமாக அங்கே சென்றான். “மக்களே, எனது பை இந்தச் சந்தைக்கு வரும் வழியில் எங்கோ தொலைந்து போய்விட்டது. அதில் தங்கக்கட்டிகள் இருந்தன. அதை யாரும் கண்டுபிடித்துத் தந்தால் அவர்களுக்கு நான் அதில் உள்ளதில் நான்கில் ஒரு பங் கைக் கொடுப்பேன். இது சத்தியம், நிச்சயம் என்றான்.அதைக் கேட்ட அருணன், “ஐயா உங்கள் பை இதுதானா என்று பாருங்கள். நான் வரும் வழியில் கிடைத்தது” என்று சொல்லிப் பையைக் கொடுத்தான்.

அதை வாங்கிப் பார்த்த அந்த மனிதன், அது தன்னுடையதுதான் என்பதை அறிந்து கொண்டான். தங்கக் கட்டிகளும் பத்திரமாக இருப்பதை எண்ணி மகிழ்ந்தான். ஆனால் உண்மையை ஒப்புக்கொண்டால் நான்கில் ஒரு பங்கான ஒரு தங்கக்கட்டியைத் தந்தாக வேண்டுமே என்று எண்ணினான். உடனே தந்திரமாக, “ஐயய்யோ! நான் இதில் பத்து தங்கக்கட்டிகள் வைத்திருந்தேனே. நான்குதானே இதில் இருக்கிறது. மீதம் எங்கே, சொல் உண்மையை!” என்று அலறினான்.

ஐயா, இதில் நான்கு கட்டிகள்தாம் இருந்தன. இது சத்தியம்” என்றான் அருணன். அந்த மனிதன் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கு நீதி மன்றத்துக்குச் சென்றது.

“ஐயா, இது என் பை. இதில் பத்து தங்கக் கட்டிகள் வைத்திருந்தேன். இவன் ஆறைத் திருடிவிட்டு மீதியை என்னிடம் கொடுக்கிறான். இவனை விசாரித்து மீதம் தங்கத்தை வாங்கித் தாருங்கள். இல்லாவிட்டால் இவனைச் சிறையிலடையுங்கள்” என்று நீதிபதியிடம் சொன்னான் அந்த மனிதன்.

அருணனோ, “ஐயா. இதனை நான் வழியில் கண்டெடுத்தேன். இதில் நான்கே நான்கு தங்கக்கட்டிகள் தாம் இருந்தன. எப்படியும் இதை இழந்தவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்து விடலாம் என்று நினைத்திருந்தபோது, இவர் சந்தைக்கு நடுவில் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். உடனே இவரிடம் அதை விசாரித்துவிட்டுக் கொடுத்தேன். அவ்வளவுதான். நான் தங்கக் கட்டிகளைத் திருடவில்லை. எனக்கு அப்படி ஒரு எண்ணமோ ஆசையோ இல்லவே இல்லை” என்றான். ஏற்கனவே அந்த மனிதனின் பேராசை பற்றி நீதிபதி நன்கு அறிந் திருந்தார். இது போலப் பொய்யான பல வழக்குகளை முன்னரே அவன் கொண்டு வந்ததையும் அவர் அறிவார். இந்த இளைஞன் திருடனாக இருந்திருந் தால் தங்கத்தை எடுத்துக் கொண்டு ஓடியிருப்பானே தவிர இவரிடம் தேடிவந்து தர வேண்டும் என்ற அவசியமில்லை என்பதையும் உணர்ந்தார். எனவே பணக்காரனிடம், “நீ சொல்வது உண்மைதான். நீ பத்து தங்கக் கட்டிகளைத் தான் அந்தப் பையில் வைத்திருந்திருக்கிறாய். ஆனால் இந்த இளைஞன் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவந்தது அந்தப் பையல்ல. இது வேறு. ஆகவே நீ சென்று அந்தப் பையைத் தேடு. இந்தத் தங்கக்கட்டிகளுக்கு யாரும் இதுவரை உரிமை கோராததால் இதனை இந்த இளைஞனே வைத்திருக்கும்படித் தீர்ப்பளிக்கிறேன்” என்றார்.

தீர்ப்பைக் கேட்ட பணக்காரன் திகைத்தான். “அடடா, நமது பேராசையால் உள்ளதும் போச்சே' என்று வருந்தினான். தங்கக் கட்டிகள் அருணனிடம் தரப்பட்டது. அருணன் அதை ஏற்க மறுத்தான். நீதிபதியிடம் அவன், “ஐயா. அடுத்தவருக்கு உரிமையான பொருளை நாம் எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும் அது திருட்டுத்தான். இது தேவையில்லை. என்னால் உழைத்துப் பிழைக்க முடியும். ஆகவே எனக்கு ஏதாவது ஒரு வேலை அளித்தாலே போதும். நான் மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன்” என்றான். நீதிபதி இதைக்கேட்டு மகிழ்ந்தார். பிறர் பொருள்மீது ஆசையற்ற இவனே அரண்மனையின் பொக்கிஷக் காப்பாளாராக இருக்கச் சிறந்தவன் என்று முடிவு செய்து மன்னருக்குக் கடிதம் எழுதி, அதை அவன் மூலமே அனுப்பினார். பொய்வழக்குத் தொடுத்தவனோ, “அடடா... இப்படிப்பட்ட ஒரு நல்ல இளைஞனைத் திருடன் என்று சொல்லி விட்டோமே!, இனிமேலாவது பொய் பேசாமல், ஏமாற்றாமல் உழைத்து வாழ முயற்சிப்போம்” என்று எண்ணியவாறு புறப்பட்டான்.

  • 506
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங