·   ·  20 posts
  •  ·  0 friends

விளாடிமிர் புடின் (உண்மைச்சம்பவம்)

இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்து, சில வாரங்களுக்குப் ஒரு பிறகு, ஒரு ரஷ்ய வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.

தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் வந்தடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துக் கொண்டார்.

பல நூறுக் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.

ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பொரு நாள் தனது மனைவிக்காக வாங்கி வந்த சப்பாத்து போல் இருந்தது.

உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பி வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியே தான். அதிர்ச்சியடைந்தார்.

பொது கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது. வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும் போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.

இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர். பெயர் என்ன தெரியுமா..?

விளாடிமிர் புடின்.

இவர்தான் ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி.

(ஹிலாரி கிளின்டன் தனது "Hard Choices" என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்)

  • 10
  • More
Comments (0)
Login or Join to comment.