Support Ads
 ·   ·  2119 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

அருகம்புல் ஜூஸ்

நோய்கள் அதிகரித்துவரும் நிலையில் அதை வராமல் தடுக்கவும், வந்தால் உணவுகள் மூலம் கட்டுப்படுத்தவும், எப்படியெல்லாம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம்.

முக்கிய அம்சங்கள்:

  • நோயாளிகள் மட்டுமல்ல உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும் இதை குடிக்கலாம்.
  • பெண்கள் மாதவிடாய் மற்றும் இது குறித்த குறைபாடுகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தினமும் காலை எழுவதில் தொடங்குகிறது உடல் ஆரோக்கியம். காலை வெறும் வயிற்றில் இதை குடித்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லும் பானங்களின் மீதான ஆர்வம் அதிகரித்துவிட்டது. இன்று பெரும்பாலும் காபி, டீ பானங்களுக்கு மாற்றாக பலரும் இந்த பானங்களை நாட தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக தீரா நோயான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் அந்நோயை உணவு முறையில் கட்டுக்குள் கொண்டு வர அதிக அளவில் சிரமபடுகிறார்கள். ஆனால் எல்லா நோயையும் கட்டுக்குள் வைக்க ஒரு பானம் உண்டு என்றால் அது அருகம்புல் பானம் தான்.

தற்போது இயற்கை சத்துபானங்கள் என்று விற்பனை செய்யும் பல சாலையோர கடைகளில் அருகம்புல் ஜூஸ் நிச்சயம் இடம்பிடித்துள்ளது. இவை தற்காலிகமாக கண்டறியப்பட்ட இயற்கை பானம் அல்ல. மூதாதையர்கள் காலம் முதலே இதை அருந்திவந்தார்கள். தினமும் காலை வேளையில் காய்சாத ஆட்டு பாலில் அருகம்புல் சாறை கலந்து ஒரு மண்டலம் வரை பயன்படுத்தினால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருந்தால் அவை குணமடையும். இதை இன்றும் கிராமங்களில் கடைபிடித்துவருகிறார்கள்.

அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளால் வயிற்றை புண்ணாக்கி வைத்திருக்கும் பலருக்கும் அல்சர் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. இதன் ஆரம்ப அறிகுறியாக வயிற்றிலும் வாயிலும் புண் உண்டாகும் போதே அருகம்புல் சாற்றின் மூலம் அதை சரிசெய்யலாம். தினமும் காலை அரை டம்ளர் அருகம்புல் சாறை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுபுண் காணாமல் போகும்.

அருகம்புல் இயற்கையிலேயே குளிர்ச்சித்தன்மை கொண்டது என்பதால் உடல் உஷ்ணம் இருப்பவர்கள் கோடையின் உஷ்ணத்திலிருந்தும் தப்பிக்க தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து குளிர்ச்சியாக இருக்கலாம். இவை உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்காது என்பதோடு உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது.

உடலில் வாதம் பித்தம் கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் எதுவுமே அண்டாது. அருகம்புல் சாறு உடலில் இருக்கும் பித்தத்தின் அளவை சரிசெய்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தமுடியாமல் இருப்பவர்கள் அருகம்புல் சாறை நம்பி எடுக்கலாம். இது இரத்தக்குழாய்கள் தடிமனாகாமல் செய்கிறது. குழாய்கள் சுருக்கமடைவதையும் தடுக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் தடையின்றி சீராக செல்ல உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் குறை இரத்த அழுத்தம் இரண்டுமே சரிசெய்யப்படுகிறது. கட்டுக்குள் இருக்கிறது.

அருகம்புல்லில் வைட்டமின் சத்துகளும், தாதுசத்துகளும் நிறைந்திருக்கின்றன என்பதோடு நீரிழிவு நோயாளிகள் தினமும் இதை எடுத்துகொள்வதன் மூலம் நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம். கட்டுப்படாத நீரிழிவால் கால் மற்றும் பாதங்கள் எரிச்சல், உடல் எரிச்சல், சோர்வு, கை கால் நடுக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதை குணமாக்கும் வல்லமை ஒரு டம்ளர் அருகம்புல் சாறுக்கு உண்டு. இதை பயன்படுத்திய சில நாள்களில் உடல் பிரச்சனைகள் குறைவதை உணர்வீர்கள்.

நோயாளிகள் மட்டுமல்ல உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும் இதை குடிக்கலாம். மலச்சிக்கல் தீர்க்கும் மருந்தாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் இவை செயல்படும். பெண்கள் மாதவிடாய் மற்றும் இது குறித்த குறைபாடுகளிலிருந்து நிவாரணம் பெறவும், வளரும் பிள்ளைகள் உடலுக்கு வேண்டிய சத்தை பெறவும் இதை குடிக்கலாம். ஆய்வுகளிலும் அருகம்புல்லின் நன்மைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவை கிடைக்கபெறாத அரிய வகையான மூலிகை அல்ல.சாலை ஓரங்களிலும் வெப்பமான பகுதியிலும் எளிதாக வளரக்கூடியதுதான். கைப்பிடி அளவு அருகம்புல் எடுத்து சேகரித்து சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். கைப்பிடி அளவுக்கு 4 அல்லது 5 டம்ளர் நீர் விட்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு டம்ளராக ஆகும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டி அதில் மிளகுத்தூள் ,சிட்டிகை உப்பு சேர்த்து இனிப்பு தேவையெனில் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர வேண்டும்.

அருகம்புல்லை சுத்தம் செய்து நறுக்கி தண்ணீரில் நன்றாக கழுவி, மிக்ஸியில் மைய அரைத்து சாறைவடிகட்டவும். இதனுடன் இனிப்புக்கு தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து குடிக்கலாம். அதே போன்று மிளகுத்தூள், உப்பு சேர்த்தும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜ்ஜில் குளிர வைத்துகுடிக்க கூடாது.

தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் பல் துலக்கிய பிறகு ஒரு டம்ளர் அருகம்புல் சாறு அல்லது அருகம்புல் கொதிக்கவைத்து வடிகட்டிய நீரை குடிக்க வேண்டும். டானிக் போன்று வேகமாக குடிக்காமல் சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து குடிக்க வேண்டும். இதை குடித்த பிறகு அரைமணி நேரம் வரை வேறு எந்த பானத்தையும் கூட குடிக்கவேண்டாம்.

தொடர்ந்து குடித்துவந்தால் 10 நாட்களில் உங்கள் உடலில் மாற்றத்தை உணர்வீர்கள். நோய்கள் இருந்தால் கட்டுக்குள் இருப்பதையும் நோய் பாதிப்பு குறைவதையும் உணர்வீர்கள். இவையெல்லாம் விட உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கூட குறைந்துவிடும். எடை குறைவதையும், உடல் இலேசாக இருப்பதையும் பலமாக உணர்வீர்கள். குடித்துபாருங்கள்.

  • 364
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங