- · 5 friends
-
I

திடீர் பணக்காரர்கள் (குட்டிக்கதை)
எலி வைரத்தை முழுங்கிவிட்டது.எலி பிடிப்பவர் அழைத்துவரப்பட்டார்.
வியாபாரி எலி பிடிப்பவனைப் பார்த்து எப்படியாவது அந்த எலியை ஷூட் செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்…
எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி-யுடன் வந்து விட்டான்…எலியைச் சுட பார்த்தான்.
அது அங்கே,இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில், திடீரென ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன…
ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது.
எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது..
சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்…எனச் சுட்டான்…எலி spot out..
வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டான்…
ஆனால்,, ஒரு கேள்வியை எலி பிடிப்பவனை பார்த்து வைர வியாபாரி கேட்டான்…
ஆமா,…! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டு விட்டாய்…என்ன காரணம்? என்று கேட்டான்.
அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்..
" இப்படித்தான்….பல பேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு , மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே.,. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது… " என்றான்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·