·   ·  2119 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

புத்திசாலி மருமகள் (குட்டிக்கதை)

பூபேந்திரா அந்த ஊரில் மிகப் பெரிய தனவந்தர். தனது ஒரே மகன் உபேந்திராவிற்கு மிகுந்த ஆடம்பரமாகக் கல்யாணம் செய்து வைத்தார். யானையின் மீது மணமகன் ஊர்வலம். வாணவேடிக்கை. 18 வகைக் கூட்டு, பொரியல், இனிப்பு,விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள் என திருமணத்திற்கு வந்தவர்களை அமர்க்களப்படுத்தினார்.

திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்துத் தனது மருமகள் மங்களாவின் அறிவைச் சோதித்துப் பார்க்கும் எண்ணம் பூபேந்திராவுக்கு தோன்றியது. அதுவும் தனது மருமகளிடம் தான் நடத்திய ஆடம்பரத் திருமணம் பற்றிக் கேட்க நினைத்தார் இந்தத் திருமணத்திற்காக நான் எவ்வளவு செலவு செய்திருப்பேன்'' என்றார் மங்களாவிடம்.

"என்ன ஒரு மூட்டை அரிசியின் மதிப்பு இருக்கும்'' என்றாள் மருமகள்.

அதைக் கேட்டதும் மாமனார் அதிர்ச்சி அடைந்தார். "என்னது? ஒரு மூட்டை அரிசிக்குண்டான பணம் தான் செலவு செய்தேனா? முட்டாள் பெண்ணே!''

"நான் சம்பாதித்ததில் பாதியை என் மகன் திருமணத்திற்காகச் செலவு செய்தேன்'' என்று ஆவேசப்பட்டர்.

ஆனால் மருமகள் பதில் ஏதும் பேசவில்லை. "இவள் சரியான வெகுளியாக இருக்கிறாளே! என் மகனுக்கு இப்படியொரு பெண்ணையா திருமணம் செய்து வைத்தேன்?' என மாமனார் மனதுக்குள் புலம்பினார்.

சில வாரங்கள் கழித்து பூபேந்திரா மகன் உபேந்திரா, மருமகள் மங்களா மூவரும் ஒரு திருமணத்திற்காகப் பக்கத்து ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது வழியில் ஒரு சவ ஊர்வலம் வந்தது. ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் ""யார் இறந்தது?'' என்று விசாரித்தார் மாமனார் பூபேந்திரா.

அவர் கேள்வி கேட்ட அதே ஆணிடம் அவரது மருமகள் "இறந்தது ஓர் ஆளா? அல்லது நாலு பேரா?'' என்றாள். அதைக் கேட்டதும் பூபேந்திராவிற்கு மேலும் அதிர்ச்சி . மருமகளின் கேள்வி தன்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டது கண்டு நெளிந்தார். அதற்குள் இறந்தவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

அவர்கள் சென்ற வழியில் சிலர் வயலில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் "நல்ல அறுவடைதான்'' என்றார் பூபேந்திரா.

உடனே அருகில் இருந்த மருமகள் "சரி நீங்கள் போன ஆண்டு விளைச்சலை அறுவடை செய்கிறீர்களா? அல்லது இந்த ஆண்டு விளைச்சலை அறுவடை செய்கிறீர்களா?'' என்று கேட்டாள்.

அதைக் கேட்டதும் அருகில் இருந்த அவளது கணவன் உபேந்திராவிற்கு கோபம் தலை உச்சிக்கு ஏறியது." உனக்கென்ன பைத்தியமா? அப்பாவுக்கு எதிராக முட்டாள் தனமாகக் கேள்விகளையே கேட்கிறாயோ'' என்று மனைவியைக் கடிந்து கொண்டான்.

மனைவியோ மறுத்தாள். "நான் ஒன்றும் மாமாவுக்கு எதிராக முட்டாள்தனமாகக் கேட்கவில்லை. நீங்கள் தான் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்'' என்றாள்.

"என்ன புரிந்து கொள்ளவில்லை சொல்? சவ ஊர்வலத்தில் சென்றவனிடம் இறந்தது ஒரு ஆளா, நாலு பேரா என்று கேட்டது பைத்தியக்காரத்தனம் இல்லையா?'' என்றார் மாமனார்.

அதற்கு மருமகள் மங்களா அமைதியாகப் பதில் சொன்னாள்.

"ஒரு குடும்பத்தில் திடீரென்று ஒருவர் இறக்கும் போது அவரது குடும்பத்தினர் மட்டும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். ஆனால் சில குடும்பங்களில் அவருக்கு நெருங்கிய சொந்தம் பந்தம் என நூற்றுக்கணக்கானவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். எனவே தான் இறந்தது ஒருவரா, நாலு பேரா?'' என்று கேட்டேன்.

"ஆஹா நன்றாகச் சமாளிக்கிறாள். சரி இந்த ஆண்டு அறுவடையா, போன ஆண்டு அறுவடையா என்று வயலில் அறுவடை செய்து கொண்டு இருந்தவர்களிடம் கேட்டது முட்டாள்தனம் இல்லையா?'' மாமனார் தொடர்ந்து கேள்வியைக் கேட்டார்.

"சிறுவிவசாயிகள் பெரும்பாலானவர்கள் எப்போதும் கடனில்தான் இருப்பார்கள். முதல் ஆண்டு வாங்கிய கடனைத் திரும்பக் கட்டியிருக்க மாட்டார்கள். சிலர் கடன் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு அறுவடையாக இருக்கும். அதனால் தான் இப்போதைய அறுவடை கடனை அடைப்பதற்கா? அல்லது லாபம் தரும் அறுவடையா என்பதை அறிந்து கொள்ளத்தான் அப்படிக் கேட்டேன்'' என்றாள் மங்களா.

மருமகள் உண்மையிலேயே அறிவாளி என்பது இப்போது பூபேந்திராவிற்குப் புரிந்தது. ஆனால் அவரது சந்தேகம் தீரவில்லை.

"கடைசியாக ஒரு கேள்வி. சரி உனது கல்யாணத்தை எப்படி நடத்தினேன் என்று கேட்ட போது ஒரு மூட்டை அரிசி அளவிற்குத்தான் என்றாயே? அதற்கு என்ன அர்த்தமாம்?''

"அதாவது ஒரு மூட்டை அரிசிக்கு உண்டான பணமதிப்புதான் திருமணச்செலவு. மற்றதெல்லாம் உங்கள் கௌரவத்தை வெளிஉலகிற்குக் காட்டுவதற்காக நீங்கள் நடத்திய_ ஆடம்பரச் செலவு. அதைத் திருமணச் செலவு என்று எப்படிச் சொல்ல முடியும்?''

மருமகளின் பதிலில் வாயடைத்துப் போனார் பூபேந்திரா. உண்மையிலேயே தனக்குக் கிடைத்த மருமகள் புத்திசாலியான பெண் தான் என்று பூபேந்திரா சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

  • 417
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங