·   ·  1021 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

பணக்காரன் (படித்ததில் பிடித்தது ---- குட்டிக்கதை)

அவர் ஒரு ஞானி. அதிகமாய் யாரிடமும் பேசுவதேயில்லை பேச்சு குறைவுதானே ஒழிய அவரைப்பற்றிப் பேசாதவரே அவ்வூரில் இல்லை. அந்த அளவினுக்கு அவர் புகழ் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்தது.

அவர் பாதம் பட்டால் பூமி பொன்விளையும், அவர் பார்வைப் பட்டால் நோய்கள் குணமடையும், அவர் வார்த்தைச் சொன்னால் வானம் பூச்சொரியும், அவர் வாழ்த்திச்சொன்னால் வாழ்க்கை நிறைவடையும்!

மொத்தத்தில் திரிகடுகம் தந்த நல்லாதனார் குறிப்பிடும் "கொண்டன செய்வகைச் செய்யும் தவசி"யாக விளங்கி வந்தார் அவர்.

தவச்சீலரான அந்த மகான் பார்வை தம்மீது பட்டுவிடாதா என்று எண்ணற்றோர் ஏங்கிக் கிடக்க... அவர்களுள் ஒருவராக இருந்தான் அந்த ஊரில் மிகப்பெரிய செல்வந்தனாக விளங்கி வரும் தனவந்தன். எந்த நேரத்தில் அவன் தந்தை அவனுக்கு அப்பெயர் சூட்டினாரோ எப்படிச் சூட்டினாரோ தெரியாது. ஆனால் பெயருக்கு ஏற்றார்போல் அவன் தனம் வந்தவனாக இருந்தானே ஒழிய ஒருபோதுமவன் தனமோ தானமோ தந்தவனாகவே இருந்ததில்லை. அப்படிபட்ட அவனுக்கு இந்த மகானை அழைத்து ஒரு வேளை உணவிட்டு அவர்தம் ஆசியை பெற்றுவிட வேண்டும் அப்படி செய்துவிட்டால் தன்னிடமிருக்கும் செல்வம் இன்னும் பன்மடங்கு பெருகும் என்பது அவனது பேராசையாக இருந்தது. அவனது இந்த எண்ணம் மகானின் புகழுக்கு மங்காத அளவினுக்கு அவ்வூரெங்கும் தெரிந்திருந்தது. இதுகுறித்துப் பலர் முதுகுக்குப்பின் முரண்பட்டு நின்றாலும் முகத்துக்கு முன் முறுவலோடு விரைவில் நடக்கும் என்றே கூறிச்சென்றனர் அவனிடத்தில்.

இந்த நிலையில்தான் அந்த செய்தி அவனது வேலைக்காரனான முருகன் வாயிலாக அவனுக்கு முன்னறிவிக்கப்பட்டது. அதை கேட்டதும் அவனுக்கு தலைகால் பிடிபடவில்லை. ஊர் மொத்தமும் அதையறிந்து ஒருபுறம் வியப்பிலும் மறுபுறம் தவிப்பிலும் ஆழ்ந்தது. அதற்கெல்லாம் காரணம் எத்துணைச் செல்வமிருந்தும் அவன் எவருக்கும் ஈந்தததில்லை. ஏன் பல்லாண்டுகாலமாக தன்னிடம் பணிபுரியும் வேலைக்காரனான முருகனுக்குக்கூட அவன் முகமிரங்கியவனில்லை என்பதாகத்தான் இருந்தது.

அவனது வேலைக்காரனான முருகனோ தனவந்தனுக்கு நேரெதிரான குணம்கொண்டவனாக இருந்தான். இருப்பதை கொடுப்பதில் ஈடற்றவனாக, உழைப்பதை கொடுப்பதில் உயர்ந்தவனாக, நன்றியை செய்வதில் நன்னெறியாளனாக இருந்தான். ஆனால் செல்வத்தில் மட்டும்

செய்வதறியா வறியவனாகவே அவனிருந்தான். இப்படிபட்ட நிலையிலும் நேர்மையும் வாய்மையும் தவறாதிருந்த முருகனிடத்தில் முனிவர் சொன்னது இதுதான்.

"நாளை நான் விருந்துண்ண வருகிறேன்... இதை உன் முதலாளியிடம் சொல்லிவிடு" என்பதுதான்.

தனவந்தனின் வீடு தயார் நிலையிலிருந்தது...

ஞானி தன் ஒற்றைச் சீடனான க கார்த்திக்கோடு தனவந்தன் வீட்டிற்கு வருகை தந்தார். தடபுடல் வரவேற்புக்குப்பின் விருந்துண்ண அமர்ந்தனர் இருவரும்.

இலைகளை விரித்து... படையலிடத்தொடங்கினான் முருகன் பார்வையாலேயே அதிகாரம் செய்துகொண்டிருந்தான் தனவந்தன். பசியாறி எழுந்தனர் இருவரும்.

இனி என்ன ஆசிபெற வேண்டுமல்லவா வாசல்வரை வந்து வழினுப்ப வந்தான் தனவந்தன். ஞானியோ பேசுவதாக இல்லை. வந்தவழியே திரும்பிச்செல்லத்தொடங்கிய ஞானியிடத்தில் சீடன் கேட்டான்.

"குருவே விருந்தைப்பற்றியும் விருந்தளித்தவர்பற்றியும் ஏதும் கூறாமல் திரும்பிவிட்டீர்களே?"

மெல்ல வாய்மலர்ந்தார் ஞானி...

"ஓர் ஏழையின் ஏற்பாட்டில்... ஒரு செல்வந்தனின் உபசரிப்பில் எல்லாம் நிறைந்தது"

"குருவே ஏற்பாடு செய்த தனவந்தனோ செல்வந்தன். உபசரித்த முருகனோ ஏழை! நிதர்சனம் இப்படியிருக்க தாம் இப்படி மாற்றி உரைப்பது சரியா?"

மெல்ல முறுவலித்து தொடர்ந்தார் ஞானி...

"வளர்வதும் தேய்வதுமான செல்வத்தைக்கொண்டு வறியவன் பெரியவன் என்கிற தீர்மானத்திற்கு வருவோர்க்கு அப்படித்தான் தெரியும்"

"எனில் வறியவர் பெரியவர் என்பதை எப்படி தீர்மானிப்பது குருவே?

"வளர்க்கவும் இயலா தேய்க்கவும் இயலா பெருஞ்செல்வம் நம் அனைவரிடத்தும் உள்ளது. அதுதான் காலம். கோடிகளால் நிரம்பிய தனவந்தனுக்கும் ஒருநாள் என்பது ஒருநாள்தான் தெருக்கோடியிலிருக்கும் முருகனுக்கும் ஒருநாள் என்பது ஒருநாள்தான் செல்வத்தால் நொடியைக்கூட கூடுதலாக மாற்ற இயலாதபோது காலத்தின் முன் அதன் மதிப்பு கடுகாகி சிறுத்துவிடும். ஆனால் அதே காலத்தை தன்னலத்தோடு மட்டுமின்றி பிறர் நலத்துகாக செலவு செய்கிற முருகன் போன்றவர்கள் ஞாலத்தில் ஏழையாக இருப்பினும் காலத்தாற் என்றென்றும் செல்வந்தர்களே"

"சிறப்பாக சொன்னீர்கள் குருவே சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்" என்றான் சீடன்.

  • 444
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்