·   ·  3047 news
  •  ·  1 friends
  • 2 followers

ஜிதேஷ் சர்மாவின் அதிரடி - RCB வெற்றி

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (27) நடைபெற்ற ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) நிர்ணயித்த 228 ஓட்ட இலக்கை வெற்றிகரமாக துரத்தி, அற்புதமான சேஸிங்கை மேற்கொண்டது.

6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் RCB அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பிடித்தது.

இதன் விளைவாக, மே 29 அன்று நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை RCB எதிர்கொள்ளும்.

இதற்கிடையில், மே 30 அன்று நடைபெறும் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை (MI) எதிர்கொள்ளும்.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 70 ஆவதும் லீக் சுற்றின் இறுதி ஆட்டமுமான இந்தப் போட்டி நேற்றிரவு 07.30 மணிக்கு லக்னோவில் அமைந்துள்ள ஏகானா மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ரஜர் பட்டிதர் தலைமையிலான அணியானது LSG அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு கேட்டுக் கொண்டது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய LSG அணி, ரிஷப் பந்த் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அற்புதமான இணைப்பாட்டத்தின் மூலம், RCB அணிக்கு ஒரு சவாலான இலக்கை பதிவு செய்தது.

இந்த இன்னிங்ஸில் LSG அணியின் தலைவர் ரிஷப் பந்த் ஐ.பி.எல். ஏல வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக ஏன் ஆனார் என்பதை வெறும் 54 பந்துகளில் சதம் அடித்து நிரூபித்துக் காட்டினார். அவர் 61 பந்துகளில் 118 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்கு பக்கபலமாக நின்றாடிய மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 67 ஓட்டங்களை எடுத்தார். இவர்களுக்கு இடையிலான இணைப்பாட்டம் 78 பந்துகளில் 152 ஓட்டங்களை அணிக்கு பெற்றுக் கொடுத்தது.

இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் LSG அணி 3 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்களை குவித்தது.

228 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்த வேண்டியிருந்த போதிலும், LSG அணியை எட்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது RCB அணி.

ஜிதேஷ் சர்மா 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களை எடுத்ததன் மூலம், ஐபிஎல் 2025 லீக் பட்டியலில் RCB அணி இரண்டாவது இடத்தைப் பிடித்ததுடன், குவாலிஃபையர் 1ல் ஒரு இடத்தைப் பிடித்தது.

228 ஓட்டங்களை துரத்துவது ஒரு கடினமாக விடயமாக இருக்கலாம். ஆனால் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் RCB அணிக்கு போட்டியில் வலுவான தொடக்கத்தை அளித்தனர்.

கோலியும் சால்ட்டும் இணைந்து நான்கு ஓவர்களில் RCB இன் ஓட்ட எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தினர். பின்னர் அவர்கள் மிடில் ஓவரில் ஆட்டமிழந்தனர்.

(பிலிப் சால்ட் 19 பந்துகளில் 30 ஓட்டம், விராட் கோலி 30 பந்துகளில் 54 ஓட்டம்)

ஆனால், ஜிதேஷ் சர்மா ஒரு நம்பமுடியாத அரைசதம் மற்றும் மயங்க் அகர்வாலுடன் ஒரு அதிரடியான கூட்டணி என்பன RCB வெற்றிக்கு காரணமாக அமைந்தது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவானார்

000

  • 16
  • More
Comments (0)
Login or Join to comment.