Ads

வல்லிபுரமாயவனின் இன்றைய வீதி உலா

வல்லிபுரமாயவனின் இன்றைய வீதி உலாவின்போது

  • 458
  • More
  • 380
  • More
  • 380
  • More
  • 371
  • More
  • 384
  • More
  • 389
  • More
  • 387
  • More
  • 354
  • More
  • 370
  • More
  • 362
  • More
  • 372
  • More
Comments (0)
Login or Join to comment.
Added a news 
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவின் நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், அது நிச்சயம் மூன்றாம் உலகப் போராகத் தான் இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு யாருமே எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. இது மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவைக் கடுமையாகப் பாதித்து உள்ளது. இந்த போர் சுமார் 2 ஆண்டுகளை நெருங்கும் போதிலும் எப்போது முடியும் தெரியவில்லை. 1962க்கு பிறகு இல்லாத வகையில் ரஷ்யா மற்றும் மேற்குலக நாடுகளிடையே இதனால் இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்தப் போர் ஆரம்பித்த பிறகு அணு ஆயுதப் போரின் அபாயங்கள் குறித்து புதின் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அணு ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்ற புதின், இருப்பினும் அணு ஆயுதங்களை உக்ரைன் போரில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ரஷ்யாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால் அது மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்ற அவர், அப்படி இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப் போருக்குத் தான் இட்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இதேபோன்ற கருத்தையே கூறி வரும் நிலையில், இப்போது புதினே இந்த கருத்து கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3ம் உலக போர்: ரஷ்ய தேர்தலில் வென்று 5ஆவது முறையாக அதிபராக இது தொடர்பாக புதின் மேலும் கூறுகையில், "ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளின் நேட்டோ படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப் போரில் இருந்து ஒரு படி தொலைவில் தான் இருக்கும்.. இருப்பினும், இது நடக்கவே நடக்காது என்று சொல்ல முடியாது. இங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனென்றால், நேட்டோ ராணுவ வீரர்கள் ஏற்கனவே உக்ரைனில் இருக்கிறார்கள். போர் தொடர்வது யாருக்கும் நல்லது இல்லை.. அங்கே தொடர்ந்து பல நூறு பேர் உயிரிழந்து வருகிறார்கள். போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், மேற்குலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவது போல தெரியவில்லை. பதற்றம்: மேற்குலக நாடுகள் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசுவதைத் தடுக்க வேண்டும். அவர்கள் அமைதியை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தை நடத்துவது போலத் தெரியவில்லை. அவர்கள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே பேசி வருகிறார்கள். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயாராகவே இருக்கிறோம். இதற்காக நாங்கள் எதிரிகளைக் கண்டு அஞ்சுகிறோம் என்று பொருள் இல்லை. அண்டை நாடுகளுடன் நல்லுறவு வேண்டும் என்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம். ரஷ்யாவில் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை எனச் சிலர் (மேற்குலக நாடுகள்) கூறுகிறார்கள், இது கேலிக்கூத்தாக இருக்கிறது. ரஷ்யாவில் மிகவும் நேர்மையான முறையில் தான் அதிபர் தேர்தல் நடந்துள்ளது. அமெரிக்காவில் தான் அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை. அங்கே ஜனநாயகமானது தேர்தல் நடப்பதில்லை என்றும் அரசு அதிகாரம் தனக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாக டிரம்ப் கூட கூறுகிறாரே.. அங்கு நடப்பதைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் சிரிக்கிறது" என்று அவர் தெரிவித்தார். ரஷ்யச் சிறையில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு நேரடியாக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்காத புதின், நவல்னி காலமானார் என்று மட்டும் கூறியிருக்கிறார்.
  • 18
Added a news 
சொத்துக்கள், உடமைகளுடன் கனடாவில் வாழும் ஒரு மனிதனின் வாழ்வில் "மரணசாசன பத்திரம்" (Last will & Testament) என்ற ஆவணம் எவ்வளவு இன்றியமையாததோ அதே போல் இன்னுமோர் ஆவணமும் சட்ட ரீதியாக கைச்சாத்திட்டு வைத்திருப்பது மிக முக்கியமானதாகும். அதனை "அதிகாரங்களினை தொடரும் உரிமை வழங்கும் ஆவணம்" (Continuing power attorney) என குறிப்பிடப்படும்.துரதிர்ஷ்டவசமாக தாங்கள் ஏதாவது விபத்துகளில் சிக்குண்டோ அல்லது நோய்வாய்ப்பட்டோ நிரந்தரமாக சிந்தனை செயல்களில் எவையும் தீர்மானிக்க முடியாத நிலைமைகள் அல்லது கோமா நிலைமைகளுக்குள் தள்ளப்பட்டால் தங்களின் வீடு, சொத்துக்கள், வங்கி கணக்குகள், முதலீட்டு திட்டங்கள் யாவற்றினையும் தங்கள் சார்பில் கையாளும் முழுமையான சட்ட ரீதியான அதிகாரத்தினை இன்னொருவருக்கு வழங்கும் ஆவணம் என இதனை குறிப்பிடலாம்.இவ்வாறு தாங்கள் தங்கள் சொத்துக்கள் மீது அதிகாரத்தினை தொடரும் அதிகாரம் வழங்க ஒருவரை தெரிவு செய்யும்போது தங்களுக்கு நம்பிக்கைக்குரியவராக, உண்மையானவராக, சொத்தினை அழிவு நிலைமைக்கு எடுத்து செல்லாதளவுக்கு அனுபவமுள்ளவராக, பொறுப்பெடுத்து செய்வதில் விருப்பமுள்ளவராக இருக்கவேண்டும் என ஒண்டாரியோ மாகாண சட்டமாதிபதி அமைச்சகத்தின் இணையதள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.தங்களால் நிரந்தரமாக தெளிவற்ற நிலைமைக்கு உள்ளானால் (Incapable stage of managing property) பொதுவாக தங்களின் சொத்துக்களில் அதிகாரங்களினை தொடரும் உரிமையினை தாங்கள் எவருக்கும் வழங்கலாம் என இருந்தபோதும், குடும்பத்தில் மனைவி அல்லது கணவன் மற்றும் பிள்ளைகளுக்கே அந்த அதிகாரம் வழங்குவது மரபு ரீதியான செயல்பாடாகும்.ஏனெனில் இங்கு நடந்த ஓர் உண்மை கதையினை உதாரணத்துக்கு சொல்லவேண்டும்போல் உள்ளது.அந்த நபர் திடீர் என விழுந்து தலை அடிபட்டு நிரந்தரமாக கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார். மனைவியோடு கூட்டு உரிமையாளராக இருந்த அவர்கள் குடியிருக்கும் வீடு இருவரினது கையொப்பமும் இல்லாது விற்பனையும் செய்யமுடியாது. பிரதானமான நிலையிலிருந்து வருமானத்தினை கொண்டுவரும் கணவன் திடீர் என்று நிரந்தரமாக இயலாத நிலைமைக்கு தள்ளப்பட்டதால் .......தொடர்ந்து விவரமாக அறிய  வீடியோவைப் பாருங்கள்  ‍‍https://youtu.be/AmrQ1y_fPVQ
  • 21
Added a post 
தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 6 ஆம் தேதி மேஷம் -ராசி: நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவு உண்டாகும். ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். விவசாயப் பணிகளில் ஆலோசனை வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை ஏற்படும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் ரிஷபம் ராசி: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மிதுனம் -ராசி: தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். அரசு காரியங்கள் கைகூடிவரும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்பு ஏற்படும். நட்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை கடகம் -ராசி: பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். நிறைவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு சிம்மம் -ராசி: ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு கன்னி -ராசி: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உயர் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் துலாம் -ராசி: பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் புரிதல் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புகழ் மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை விருச்சிகம்- ராசி: பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். பிள்ளைகளால் மதிப்பு மேம்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மருத்துவத் துறையில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் தனுசு -ராசி: சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். கணிதம் தொடர்பான துறைகளில் அலட்சியமின்றி செயல்படவும். ஒப்பந்தப் பணிகளில் தாமதம் ஏற்படும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். விருத்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மகரம் -ராசி: பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை கும்பம் –ராசி: தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உதவி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மீனம் -ராசி: குடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் சிறு சிறு அலைச்சல் ஏற்படும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணம் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 117
Added a post 
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.3.2024.சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.33 வரை நவமி. பின்னர் தசமி. இன்று இரவு 11.55 வரை புனர்பூசம். பிறகு பூசம். விசாகம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.. கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை செவ்வாய் மதியம் 3 to 4:30 PM காலை 9 to 10:30 AM மதியம் 12:00 to 1:30 PM
  • 121
Good Morning....
  • 127
Added a post 
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 5 ஆம் தேதி திங்கட்கிழமை 18.3.2024.சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.17 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று இரவு 10.38 வரை திருவாதிரை. பிறகு புனர்பூசம். சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். 
  • 286
Added article 
படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயது எஸ்.எஸ்.வாசன் இந்திய சினிமாவின் அந்தக் காலத்து பிரம்மாண்டம் என்றால் அது எஸ்.எஸ்.வாசன் தான். தனது தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் மூலம் பல பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்தவர். நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சம்பளத்தை அள்ளி வழங்கியவர். தான் செலவழிப்பதைப் போலவே படத்தையும் வெற்றியாக்கி அதில் பல மடங்கு லாபத்தை எடுத்து அதே சினிமாவில் மீண்டும் அடுத்தடுத்த படங்களில் தனித்துவம் காட்டியர் எஸ்.எஸ்.வாசன்.இவரின் பிரம்மாண்ட படங்களுக்கு உதாரணமாக சந்திரலேகா படம் ஒன்றே போதும். அந்தக் காலகட்டத்திலேயே ஒரே பாடலுக்காக பல நூறு துணை நடிகர்களைக் கொண்டு ஒரு டிரம்ஸ் இசைக்கும் பாடல் காட்சியைப் படமாக்கினார். மேலும் ஔவையார் படத்திற்காக பல நிஜ யானைகளை ஒரே காட்சிக்காக பயன்படுத்தினார். இப்படி பணத்தினை தண்ணீராகச் செலவழித்து தான் எடுக்கும் படங்களில் பிரம்மாண்டத்தைக் காட்டி அந்தக் கால சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டார்.தமிழ் மட்டுமல்லாது இந்தி சினிமாவிலும் எஸ்.எஸ்.வாசன் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார். 1948-ல் தொடங்கிய இவரது திரைப்பயணம் 1970 வரை நீடித்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திரையுலகையே தனது பிரம்மாண்ட செட்டுகளால் அதிர வைத்தவர்.ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய ‘மணமகள்‘ படத்திற்காக பயன்படுத்திய மெட்டைக் கேட்டு சிலாகித்துப் போயிருக்கிறார் எஸ்.எஸ்.வாசன். அப்போது தமிழில் திரைப்படங்கள் எடுப்பதை நிறுத்தி விட்டு இந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனவே அடுத்து தான் இயக்கப் போகும் இந்தி படத்திற்காக இந்த மெட்டை அதில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற என்.எஸ்.கிருஷ்ணனிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.கலைவாணரும் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியது மட்டுமல்லாமல் அந்தப் பாடலின் மெட்டு இந்தியில் சரியாக உருவாகியிருக்கிறதா என்று பாடல்பதிவின் கடைசி வரை கூடவே இருந்திருக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன். பின்னர் வீட்டுக்குச் சென்றவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு கவர் நிறைய பணத்தை எஸ்.எஸ்.வாசன் என்.எஸ்.கிருஷ்ணன் வருவதற்கு முன்பே அவர் வீட்டிற்குக் கொடுத்துவிட்டிருக்கிறார். அந்தப் பணத்தை எண்ணிய போது 15,000 இருந்ததாம். ஷாக்கான என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.வாசனிடம் எதற்கு இந்தப் பணம் என்று கேட்க, உங்களது மெட்டை எனது படத்தில் பயன்படுத்தினேன் அல்லவா அதற்கான தொகை தான் என்று கூறியிருக்கிறார். என்.எஸ்.கிருஷ்ணனும் ஒரு மெட்டிற்கு 15,000 ரூபாயா என்று ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கிறார்.
  • 295
GOOD MORNING.....
  • 296
Added a news 
தமிழ் பேசும் மக்களுக்காக காவல்துறை அவசர உதவிகளைப் பெற  107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் ரணிலின் அறிவுறுத்தலின் பேரில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் இந்த அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்கள் அதன் மூலம் தமிழ் மொழியில் காவல்துறையினரின் உதவிகளைப் பெற முடியும் என காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
  • 498
Added a post 
தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 17.3.2024. மேஷம் -ராசி: விமர்சன பேச்சுக்களால் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். தள்ளிப்போன காரியங்கள் எளிதில் முடியும். சவாலான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம் ராசி: கணவன்-மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத சில தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். பேச்சு வன்மையால் காரிய அணுகூலம் ஏற்படும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். முயற்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீலம் மிதுனம் -ராசி: உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சில பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வதால் நன்மை உண்டாகும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை கடகம் -ராசி: விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் சிம்மம் -ராசி: பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்து சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கன்னி -ராசி: செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு துலாம் -ராசி: அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் மேம்படும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தம் சாதகமாகும். போட்டிகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் விருச்சிகம்- ராசி: நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். மற்றவர்களின் பேச்சுக்களை பொறுமையாக கையாளவும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் தனுசு -ராசி: திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தந்திரமான சில விஷயங்களால் லாபம் உண்டாகும். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சமூகம் தொடர்பான விஷயங்களில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு மகரம் -ராசி: சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பாராட்டு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : ஊதா கும்பம் –ராசி: பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எழுத்துத் துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மீனம் -ராசி: நினைத்த சில பணிகளில் காலதாமதம் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். புதிய வேலைக்கான வாய்ப்பு சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். சிரமம் குறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 521
Added a post 
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 17.03.2024. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.32 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று இரவு 09.53 வரை மிருகசீரிடம். பிறகு திருவாதிரை. சித்திரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.  கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை ஞாயிறு மாலை 4:30 to 6 PM மதியம் 12:00 to 1:30 PM மதியம் 3 to 4:30 PM  
  • 531
Good Morning...
  • 536
  • 677
Added a news 
இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஓரணியில் ஒற்றுமையாக செயற்பட்டு தந்தை செல்வாவின் வழியில் செல்ல உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது குறித்து இன்று (15) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மேயர் தி. சரவணபவன் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் கூட்டம் இன்று நடைபெற்றது.இதன் போது, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து ஓரணியில் செயற்பட தீர்மானித்துள்ளோம்.தேசிய ரீதியில் தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ள செயலாளர் தெரிவு உள்ளிட்ட பிரச்சினைகளை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை கூட்டங்கள் நடைபெறும் போது அங்கு பேசி தீர்மானிக்கவுள்ளோம்.மாவட்ட கிளை என்ற அடிப்படையில் அனைத்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையுடன் செயற்படவுள்ளனர்.தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் பிறந்தநாள் நிகழ்வுகள் மற்றும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு தமிழரசுக் கட்சி புது உத்வேகத்துடன் செயற்பட உள்ளது.
  • 723
Added a news 
எமது நாட்டின் கல்வித்துறையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது, இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான பொய்யான அமைப்புகள் உருவாக்கப்பட்டு, ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் வீதியில் இறக்கப்படலாம். “சஜித்தின் இந்த முன்மொழிவுகள் இலவசக் கல்விக்கு தடையாக இருப்பதாக” புரட்சியாளர்கள் போலியான செய்திகளை உருவாக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.அரச பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குவதில் இலவசக் கல்வி பாதுகாக்கப்படுமா அல்லது அழிக்கப்படுமா என்பதை மக்கள் அறிவார்ந்த முறையில் சிந்தித்து அறிய வேண்டும். வெளிநாட்டு கொள்கைகளை கொண்டு வந்து கண்ணங்கரவின் இலவசக் கல்வியை சஜித் மாற்றியமைக்கிறார்’ என்று சொல்லும் அந்த புரட்சியாளர்களின் பிள்ளைகள் தனியார் பாடசாலைளிகளிலும், தனியார் பல்கலைக்கழகங்களிலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமது பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனங்களில் தரமான உயர்கல்வியைப் பெறும் போது, நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கும் அதே தரமான உயர் கல்விக்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கும் போது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 124 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, கடுவெலை, ஸ்ரீ சோமானந்த மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • 726
Added a news 
கனடாவின் ஒட்டாவாவின் பார்ஹேவன் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களது பூதவுடல்களுக்கும் நாளைய தினம் இறுதிக் கிரியை மேற்ள்ளப்பட உள்ளது.கனடிய பௌத்த காங்கிரஸ் இது தொடர்பில் அறிவித்துள்ளது. இந்த இறுதிக் கிரியைகள் பொது இறுதிக் கிரியைகளாக நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.ஒட்டாவா இன்பினிட்டி கொன்வென்சன் நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த விக்ரமசிங்கவின் உடல் நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 19 வயதான பேர்பியோ டி சொய்சா என்ற இளைஞரின் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி 4 சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்டனர்.கைது செய்யப்பட்ட பேர்பியோ, அலைபேசி காணொளி நேரலை வழியாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது. 
  • 719
Added a post 
தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை 16.3.2024.மேஷம் -ராசி: பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அலுவலகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பகை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்ரிஷபம் ராசி:  புதிய முயற்சிகளில் மாற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் தோன்றி மறையும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மிதுனம் -ராசி:  எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் கிடைக்கும். துன்பம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கடகம் -ராசி:  சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சேமிப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். பணிவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைசிம்மம் -ராசி: பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தொலைதூரக் கல்வியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பச்சை  கன்னி -ராசி:  உடன்பிறந்தவரிடம் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் அலைச்சல் ஏற்படும். உயர் கல்வியில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். பொருளாதாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயிர் தொழிலில் சிந்தித்துச் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்துலாம் -ராசி: வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். தேவையற்ற அலைச்சலால் உடலில் சோர்வுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புவிருச்சிகம்- ராசி:  வாழ்க்கைத் துணைவருடன் இருந்துவந்த பிரச்சனை விலகும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் தனுசு -ராசி:  உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். பகை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மகரம் -ராசி: கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்பு குறையும். உதவி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்புகும்பம் –ராசி: பணிபுரியும் இடத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். விலகி நின்றவர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு அமையும். உயர் ரக வாகனங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். பரிவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்மீனம் -ராசி: உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். திறமைமிக்க செயல்பாடுகளால் மதிப்பு உயரும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 737
Added a post 
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை 16.3.2024. சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 04.11 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று இரவு 09.37 வரை ரோகினி. பிறகு மிருகசீரிடம். அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.  கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை சனி காலை 9 to 10:30 AM மதியம் 1:30 to 3 PM காலை 6 to 7:30 AM  
  • 746
Good Morning....
  • 750
Nice art work
  • 910
  • 912
  • 945
  • 946
Good Morning...
  • 1001
  • 1005
  • 1006
Added a post 
இன்றைய ராசி பலன் –  மார்ச் 14 2024 தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 1 ஆம் திகதி மேஷம்Aries  குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் சில நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனை மேம்படும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு ரிஷபம்Taurus உத்தியோகப் பணிகளில் ஈடுபாடு குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புத்துணர்ச்சி உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மிதுனம்Gemini குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். பக்குவம் பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கடகம்Cancer வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு சிம்மம்Leo ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தடைகள் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கன்னிVirgo கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் புதிய தெளிவு ஏற்படும். புதிய நபர்களின் வருகையால் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மாற்றம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் துலாம்Libra மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடல் தோற்றப் பொலிவுகளில் மாற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை விருச்சிகம்Scorpio  புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசுSagittarius உயர் கல்வி தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம்Capricorn உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு வழியில் சில சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரப் பணிகளில் நெளிவு, சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். வாக்கு சாதுரியத்தின் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். தேர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : கருநீலம் கும்பம்Aquarius புதிய துறை சார்ந்த தேடல் ஏற்படும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : நீலம் மீனம்Pisces குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாக்குவன்மையின் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான எண்ணம் உண்டாகும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். அடமான பொருட்கள் பற்றிய சிந்தனை மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 1224
Added a post 
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை 14.3.2024. சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.02 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று இரவு 10.23 வரை பரணி. பிறகு கிருத்திகை.பூரம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 1239