·   ·  227 posts
  • 2 members
  • 2 friends

சந்தேகத்தை தீர்த்து வைத்த விவேகானந்தர் (குட்டிக்கதை)

ஆன்மீகம் குறித்து ஒருவனுக்கு சந்தேகம் வந்தது. யாரிடம் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் எனக் குழம்பிக் கொண்டிருந்தவன் மூளைக்குள் விவேகானந்தர் பளிச்சிட்டார்.

உடனே விவேகானந்தரை தேடிச்சென்று வணங்கி கேட்டான்,

'சாமி எனக்கு ஆன்மீகத்தில் ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது.

போன வாரம் எங்கள் கிராமத்திற்கு வந்திருந்த ஆன்மீக பெரியவர் ஒருவர் சொற்பொழிவாற்றும் போது ஒரு மனிதன் சதாகாலமும் இறைவனை நினைக்கவில்லை என்றால் அவன் பிறப்பெடுத்ததில் பயனில்லை எனச் சொன்னார்.

அடுத்த நாள் வந்திருந்த ஒரு இலக்கிய பேச்சாளர் பேசும்பொழுது மனிதன் பூமியில் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் போனால் அவன் பிறப்பெடுத்ததில் பயனில்லை எனச் சொன்னார்.

இதில் எது சரி என எனக்குத் தெரியவில்லை.

நான் சதாகாலமும் இறைவனை நினைப்பதா? அல்லது என்னுடைய கடமைகளை மட்டும் செய்வதா?

எனக்கு விளக்கம் தாருங்கள் சுவாமி'

சற்று நேரம் அவனை உற்றுப் பார்த்த சுவாமி விவேகானந்தர் அவனிடம் கேட்டார்,

'நான் உனக்கு ஒரு கதை சொல்லி அதன் முடிவில் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்கிறாயா?'

வந்தவன் சொல்கிறேன் என்பது போல் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தான்.

விவேகானந்தர் கதை சொல்ல ஆரம்பித்தார்.

'ஒரு விவசாய இடம் இரண்டு பேர் வேலை கேட்டு வருகிறார்கள்.

அவர்களில் ஒருவன் எந்த வேலையும் செய்யாமல் விவசாயின் காலடியில் அமர்ந்து அவரை புகழ்ந்து துதி பாடிக் கொண்டு பொழுதை கழிக்கிறான்.

இன்னொருவன் விவசாயியை கண்டு கொள்ளாமல் கலப்பையை எடுத்துக்கொண்டு நிலத்தில் இறங்கி நிலத்தை உழுது, களை எடுத்து, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி மடையை அடைத்து வேலை முடித்து திரும்புகிறான்.

இருவரில் வந்த விவசாயி மாலையில் யாருக்கு சம்பளம் தருவான்?'

சந்தேகம் கேட்டு வந்தவன் பளிச்சென சொன்னான்,

'நிலத்தில் இறங்கி யார் வேலை செய்தாரோ அவருக்கு தான் சம்பளம் தருவார்'

விவேகானந்தர் பதில் கேள்வி கேட்டார்,

'ஏன்..?'

வந்தவன் தயக்கத்தோடு பணிவாகச் சொன்னான்,

'என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்களே ஏன்னு என்கிட்ட கேட்கலாமா? அந்த விவசாயி வேலைக்கு ஆள் வச்சதே விவசாயத்தை பார்த்துக் கொள்ளத்தானே.

அப்படி இருக்கும்போது வந்த வேலையை விட்டுவிட்டு வெறுமனே விவசாயியை புகழ்ந்து பாடினால் விவசாயிக்கு என்ன லாபம்?

அவருடைய நோக்கம் நிறைவேறவில்லையே..!

அதனால் வயக்காட்டில் இறங்கி வேலை பார்த்தவருக்கு தான் சம்பளம் கிடைக்கும்'

விவேகானந்தர் புன்னகைத்தை படி சொன்னார்,

'நீ சொன்ன பதிலிலேயே உன் கேள்விக்கான விடையும் இருக்கிறது.

இறைவன் உன்னை பூமிக்கு அனுப்பியதே உன்னுடைய உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பூமியில் உள்ள மக்களுக்கும், இன்ன பிற உயிர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதற்காகத் தான்.

என்ன நோக்கத்திற்காக அவர் உன்னை அனுப்பினாரோ அதை நிறைவேற்றாமல் வெறுமனே இறைவனை நினைத்துக் கொண்டும், புகழ்ந்து பாடிக்கொண்டும் இருந்தால் இறைவனுடைய அருள் பார்வை உனக்கு எப்படி கிடைக்கும்?

எங்கிருந்து வந்தோமோ அங்கேயே தான் போகப் போகிறோம்.

பிரபஞ்ச கால அளவை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பூமியில் நம்முடைய மனித ஆயுட்காலம் சொற்பத்திலும் சொற்ப அளவே.

அதனால் நீ உன்னுடைய கடமைகளை செய்வதுதான் . இடையில் நேரம் கிடைக்கும் பொழுது இறைவனை நினைத்தால் போதுமானது.

அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் நீ செய்கின்ற கடமைகளிலும் நிறைந்து இருக்கிறான். அதனால் நீ கடமையை செய்தாலும் இறைவனுக்கான சேவையை தான் செய்து கொண்டிருக்கிறாய்.

உன்னுடைய கடமைகளை மட்டும் செய்ய பார்'

வந்தவன் தெளிவடைந்தான். விவேகானந்தரிடம் பணிவாக கேட்டான்,

'அப்படியானால் சதாகாலமும் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதால் எந்த புண்ணியமும் கிடையாதா?'

விவேகானந்தர் சொன்னார்,

'கண்டிப்பாக உண்டு. ஆனால் மனிதப் பிறவியில் செய்ய விட்ட கடமைகளை மறு பிறவிகளில் பல்வேறு உயிரினங்களாக பிறந்து அந்த கடமைகளை எல்லாம் தீர்க்க வேண்டி வரும்.

இறைவனை சென்றடைய நேர்வழி இருக்கும் பொழுது சுற்று வழியில் செல்ல உனக்கு விருப்பமா?'

வந்தவன் வணங்கி விடைபெற்று விவேகானந்தரிடம் சொன்னான்,

'நான் மட்டுமல்ல; இனி என் பரம்பரையே கடமையை செய்து முடித்து இறைவனை சென்றடைய நேர்வழியிலேயே நடப்போம்'

  • 174
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங