- · 1 friends
-

இறந்த அப்பாக்களுக்கு ஓர் இதய அஞ்சலி
அப்பாக்கள் இருக்கும் வரை - அவரே
கதாநாயகன்
இறந்து இறையுலகம் சென்றால் - அவரே
காலத்தின் நாயகன்
அப்பாக்களை இருக்கும் போது பிள்ளைகள்
பெரிதாக கொண்டாடி மகிழ்வதில்லை
ஏனெனில்
எந்த அப்பாவும் கொண்டாட்டங்களை விரும்புவதேயில்லை
ஆனால்
அப்பாக்கள் இறந்த பின் தப்பாமல் கொண்டாடி தவமிருந்து தாலாட்டுவார்கள்
அப்பாக்களின் ஞாபகங்களின் உலகம்
பேரழகானது
குழந்தையாக தோளேற்றிய நாள் தொட்டு
பருவமான பின் தோழமையாய் கொண்டாடிய
நாட்கள் ஒவ்வொன்றும்
வரலாற்று கல்வெட்டுக்களே
தன்னைப் போல் தன் பிள்ளை தோற்க கூடாது
என்பதற்காகவே
ஏரை பிடிக்க விடாது
எழுதுகோலை பிடித்து எழுத வைத்து அழகு பார்த்த அப்பாக்கள் ஒவ்வொருவரும்
காலத்தின் அதிசயமே
பிள்ளைகளுக்காக தன் தேகத்தை கரைத்து
உழைத்த அப்பாக்களின் ஞாபகங்களை
எளிதில் எந்த பிள்ளைகளும்
மறந்து கடந்து வாழ்ந்திட முடியாது
சிறு பிராய நினைவுகளின் திருவிழா கோட்டை --- ஒவ்வொரு அப்பாக்களும்
பெரும் வாழ்வின் தியாக நற் கொடை
ஒவ்வொரு அப்பாக்களும்
அப்பாக்களோடு வாழ்வோர் எளிதில்
உணர்வதில்லை
அப்பாக்களை இழந்தோர் எளிதில்
உறங்க செல்வதில்லை
நினைவுத் தோப்பில் அழகிய ஞாபக குயிலின்
சங்கீதமாய்
அப்பாவின் ஒவ்வொரு நிகழ்வும்
ஒலித்து கொண்டேயிருக்கும்
அப்பா ஓர் அழகிய பேருலகம்
அப்பா ஓர் ஆனந்த திருவுலகம்
அப்பா ஓர் அழியாத கோலம்
அப்பா மட்டுமே நினைவுகளை விட்டு அழிந்து போகாத காலம்
அப்பாவை கொண்டாடுவோர் அழகாய் வாழ்வார்---- அவரின் வேரின் விழுதுகளில்
என்றும் மலராக பூப்பார்
கதாநாயகன்
இறந்து இறையுலகம் சென்றால் - அவரே
காலத்தின் நாயகன்
அப்பாக்களை இருக்கும் போது பிள்ளைகள்
பெரிதாக கொண்டாடி மகிழ்வதில்லை
ஏனெனில்
எந்த அப்பாவும் கொண்டாட்டங்களை விரும்புவதேயில்லை
ஆனால்
அப்பாக்கள் இறந்த பின் தப்பாமல் கொண்டாடி தவமிருந்து தாலாட்டுவார்கள்
அப்பாக்களின் ஞாபகங்களின் உலகம்
பேரழகானது
குழந்தையாக தோளேற்றிய நாள் தொட்டு
பருவமான பின் தோழமையாய் கொண்டாடிய
நாட்கள் ஒவ்வொன்றும்
வரலாற்று கல்வெட்டுக்களே
தன்னைப் போல் தன் பிள்ளை தோற்க கூடாது
என்பதற்காகவே
ஏரை பிடிக்க விடாது
எழுதுகோலை பிடித்து எழுத வைத்து அழகு பார்த்த அப்பாக்கள் ஒவ்வொருவரும்
காலத்தின் அதிசயமே
பிள்ளைகளுக்காக தன் தேகத்தை கரைத்து
உழைத்த அப்பாக்களின் ஞாபகங்களை
எளிதில் எந்த பிள்ளைகளும்
மறந்து கடந்து வாழ்ந்திட முடியாது
சிறு பிராய நினைவுகளின் திருவிழா கோட்டை --- ஒவ்வொரு அப்பாக்களும்
பெரும் வாழ்வின் தியாக நற் கொடை
ஒவ்வொரு அப்பாக்களும்
அப்பாக்களோடு வாழ்வோர் எளிதில்
உணர்வதில்லை
அப்பாக்களை இழந்தோர் எளிதில்
உறங்க செல்வதில்லை
நினைவுத் தோப்பில் அழகிய ஞாபக குயிலின்
சங்கீதமாய்
அப்பாவின் ஒவ்வொரு நிகழ்வும்
ஒலித்து கொண்டேயிருக்கும்
அப்பா ஓர் அழகிய பேருலகம்
அப்பா ஓர் ஆனந்த திருவுலகம்
அப்பா ஓர் அழியாத கோலம்
அப்பா மட்டுமே நினைவுகளை விட்டு அழிந்து போகாத காலம்
அப்பாவை கொண்டாடுவோர் அழகாய் வாழ்வார்---- அவரின் வேரின் விழுதுகளில்
என்றும் மலராக பூப்பார்