Quote of the Day

பழமொழி: அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

Google Mobile Apps
Apple Mobile Apps
Leaderboard
sivam 220
Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
·
Added a post

தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம்.

ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும்.

சங்க காலச் சோழ மன்னர் கரிகால் பெருவளத்தான் காவேரி கொள்ளிடம் நீர் போக்கைச் சரி செய்து நீர் பாசனத்தைச் சீரமைக்க காவேரியின் மீது ஓர் அணை கட்டினார்.

இந்த அணை நவீன தொழில் நுட்பத்திற்குச் சவாலாக அமைந்துள்ளது.

இதன் கட்டுமானத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை கிராண்ட் அனிக்கட் என்று பாராட்டினர்.

இக்கட்டுமானம் களிமண்ணில் புதைந்த மிகப் பெரிய பாறாங்கற்களால் ஆனது இதன் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் ஆழம் 15 லிருந்து 18 அடிவரை கொண்டது.

இது நதி நீர் வெளியேறும் பகுதியில் பாம்பு போல் வளைந்த நிலையில் கட்டப்பட்டது.

தற்போதுள்ள பெரிய கல்லணை 1806 இல் ஆங்கிலேய பொறியாளர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

பல வருடங்களாக நடந்த மிகப் பெரிய முயற்சியின் காரணமாக அடித்தளம் அமைத்து அணையின் பாதைகள் உயர்த்தப்பட்டு சாலைவசதி ஏற்படுத்தித் தந்தனர்.

இப்பணி முடிவுறும் தறுவாயில் ஏற்பட்ட சில விநோதமான நிகழ்வுகள் அங்கிருந்த பொறியாளர்களுக்கும் மற்றும் பெருமளவில் கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் வியப்பைத் தந்தன.

ஒரு நாள் காலையில் பணி ஆய்வுக்காக வந்த கீழ் நிலை அதிகாரி ஒருவர் அணையின் 19வது மதகு உடைந்திருந்ததைக் கண்டார்.

இந்த விபத்து கட்டுமானத்தில் பயன்படுத்திய பொருள்களின் தரக்குறைவு காரணமாக ஏற்பட்டது என யூகித்தனர்.

எனவே அதே கட்டுமானம் மீண்டும் ஒரு மாத காலத்தில் மிகுந்த கவனத்துடன் கட்டி முடிக்கப்பட்டது.

கட்டி முடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே சோதனையாக அந்த வளைவான மதகுப் பகுதி மீண்டும் உடைந்து விழுந்து கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது.

இதனால் வாயடைத்து நின்ற பொறியாளர்களும் கட்டுமானப் பணியாளர்களும் மீண்டும் ஏற்பட்ட அழிவைக் குறித்து விளக்கம் எதுவும் அளிக்க முடியாமல் திணறினர்.

இரண்டாவது முறையும் உடைந்து விழுந்த நிகழ்வுக்குப் பிறகு அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்த கீழ்நிலை அதிகாரி முதன் முறையாக மதகு உடைந்து விழுந்த அன்று இரவு தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிய விபரத்தை வெளிப்படுத்தினார்.

அன்றிரவு என் கனவில் ஆஞ்சநேய ஸ்வாமி தோன்றி நான் நதியின் அடியில் மணற்படுகையில் உள்ளேன்.

என்னை வெளிக்கொணர்ந்து அங்கேயே எனக்குக் கோயில் அமைக்காவிடில் இடிந்து விழுவது தொடரும் இதை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

ஆங்கிலத் தலைமைப் பொறியாளர் இதை நம்பவில்லை. அன்றிரவே மிகவும் ஆச்சரியமான விதமாக அந்தத் தலைமைப் பொறியாளருக்குத் தொடர்ந்து பயமுறுத்தும் கனவுகளாகவே வந்தன.

அவரது கனவில் குரங்குகள் அவரை நெருங்கி நகங்களால் பிறாண்டி காது செவிடாகும் படிச் சத்தம் போட்டுத் துன்புறுத்தின.

இரவு முழுவதும் ஏற்பட்ட பயங்கரமான கனவுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பொறியாளர் மறுநாள் காலையில் தன் நண்பர்கள் குழுவை அழைத்துத் தனது கனவுகளைப் பற்றி விளக்கினார்.

அந்த ஆங்கிலேய நண்பர்களும் இந்தக் கனவுகள் பற்றிய தம் அவ நம்பிக்கையைத் தெரிவித்ததோடு அவர் அந்தக் கீழ்நிலை அதிகாரி கூறிய நம்பமுடியாத கனவுகளை அடிமனத்தளவில் நம்பியதன் விளைவாகவே இது போன்று ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர்.

நண்பர்களின் வாக்கு அவருக்கு அப்போதைக்குத் தேவைப்பட்ட ஒரு சமாதானத்தைத் தந்தாலும் அந்த அமைதியும் அல்பாயுசாகவே அமைந்தது. அன்றிரவே ஆஞ்சநேயர் பொறியாளர் கனவில் தோன்றி எனக்குக் கோயில் எழுப்பாமல் நீ இந்த அணையைக் கட்டியுள்ளாய்.

நானே இந்த அணையைக் காப்பவன்.

அதனால் அந்தக் கட்டுமானத்தை இடித்துச் சுக்குநூறாக்கினேன்.

மீண்டும் நீ அணையைக் கட்டினாய் அதுவும் நான் இருக்குமிடத்திற்கு மேலாகவே அமைந்துள்ளது.

இதுவும் நிற்காது. நான் இருக்கும் இந்த இடத்தில் ஒரு வளைவை ஏற்படுத்தி என்னைக் காணும் இடத்தில் ஒரு கோவில் அமைத்தால் நீ வெற்றி பெறுவாய் என்றார்.

மறுநாள் பொறியாளர் அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி அதே இடத்தில் நதிப்படுக்கையைத் தோண்ட உத்தரவிட்டார்.

அங்கே அந்தப் பத்தொன்பதாவது மதகு அமைந்திருந்த இடத்தில் ஆஞ்சநேய ஸ்வாமியின் கற்சிற்பம் காணப்பட்டது.

அந்த ஆங்கிலேயப் பொறியாளர் தீர்மானமாக அங்கு ஒரு கோயிலைக் கட்ட உத்தரவிட்டார்.

பெரிய அளவில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது.

அணைக்கட்டும் கனவில் அவருக்குச் சொல்லப்பட்ட விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தக் கோவில் இன்றும் சென்று தரிசிக்கும் வகையிலுள்ளது பாலத்திலிருந்து இரண்டு அடுக்குப் படிகளைக் கடந்து கீழிறங்கிச் சென்றால் அந்தக் கோயிலை அடையலாம்.

  • 49
·
Added article

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விஜய் தேவரகொண்டா குறித்தும் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனாவின் இந்த திருமண பதிவு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பதிவு (போஸ்ட்) சாதனையை முறியடித்துள்ளது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி வெளியிட்ட பதிவு 20 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை புரிந்தது.

தற்போது ராஷ்மிகாவின் திருமணப் பதிவு 25 மில்லியன் லைக்குகளை பெற்று பெரும் சாதனை புரிந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த கிஷோர் மோண்டல் வெளியிட்டு, வைரலான ரீல்ஸ் 51 மில்லியன் லைக்ஸ் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு ராஷ்மிகாவின் திருமண பதிவு லைக்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • 50
·
Added a news

 மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் போரில் கனடா இராணுவம் பங்கேற்காது என்று கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த மோதலில் கனடா இராணுவமாக ஈடுபடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

இந்த நடவடிக்கைகளுக்கான இராணுவ தயாரிப்பிலும் திட்டமிடலிலும் கனடா பங்கேற்கவில்லை எனவும், எதிர்காலத்திலும் இராணுவ ரீதியாக இணைவது எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை கனடா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

  • 51
·
Added a news

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதீத பாதுகாப்புமிக்க 'பசுமை வலயத்திற்குள்' (Green Zone) நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் மற்றும் முக்கிய அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  • 51
  • 56
  • 55
  • 56
·
Added a post

ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான். அவன் பேரில் ஒரு குற்றச்சாட்டு. அரண்மனையிலிருந்து, உன்னை விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, அரண்மனை விசாரணை மண்டபத்துக்கு வந்து போ என்றது, அரசனின் ஆணை.

நம்ம பேர்ல எந்த தப்பும் இல்லையே. நாம் எந்த தவறும் செய்யலையே.... என்று நினைத்தான், அந்த ஆள். ஆனாலும் அரசாங்க உத்தரவு அதை அலட்சியம் செய்ய முடியுமா? போய்த்தான் ஆக வேண்டும். தனியாக போக அவனுக்கு தயக்கமாக இருந்தது.

துணைக்கு யாராவது வந்து, எனக்காக கொஞ்சம் வாதாடினால் தேவலை. யாரை அழைத்துக் கொண்டு போவது, என்று யோசித்தான். அவனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரை அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்தான்.

அந்த மூவரில் மிகவும் நெருக்கமான ஒரு நண்பரின் வீட்டுக்கு போய் கதவை தட்டினான். திறந்த நண்பனிடம் விஷயத்தை சொல்லி அரண்மனைக்கு அழைத்தான். என்னால் வரமுடியாது என்று சொல்லிவிட்டான், அவன். இவனுக்கு ஏமாற்றமாக போய் விட்டது. ரொம்பவும் நெருக்கமாக இருந்த இவனே இப்படி சொல்லிவிட்டானே என்று வருத்தப்பட்டான்.

சரி, பரவாயில்லை. இன்னொரு நன்பனிடம் போவோம்... என்று முடிவு செய்து இரண்டாவது நண்பனை தேடி சென்றான். இரண்டாம் நண்பனோ விஷயம் அனைத்தையும் கேட்டுவிட்டு அரண்மனை வாசல் வரைதான் நான் வருவேன். அங்கேயே நின்று கொள்வேன் அதற்கு மேல் வரமாட்டேன் என்று கூறினான். அப்படி அதுவரைக்கும் வந்து என்ன பிரயோஜனம்? கடைசி வரைக்கும் நம்ம கூட வந்து, நமக்காக வாதாடணுமே அதுதானே முக்கியம்... என்று நினைத்தான்.

அடுத்தபடியாக மூன்றாவது நண்பனிடம் போனான். அவன் அதிக நெருக்கம் இல்லை. இருந்தாலும் போனான். விபரத்தை சொன்னான். அவன் உடனே சட்டையை போட்டுக் கொண்டு "வா போகலாம்" என்று புறப்பட்டு விட்டான். விசாரணையின் போது, தன் நண்பனுக்காக வாதாடி, பரிந்து பேசி, விடுதலை வாங்கிக் கொடுத்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று நண்பர்கள் உண்டு. முதல் நபருக்கு பெயர், பணம். இரண்டாம் நபருக்கு பெயர், சொந்தம். மூன்றாம் நபர் அவன் செய்த "நற்செயல்கள்".

இறுதி பயணத்தின் போது, பணம் கூட வராது. சொந்தம், கல்லறை வரைக்கும் வரும். நற்செயல்கள் தான் கூடவே வரும். அதாவது, நமக்கு பின்னாலும் நம்மைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கும்.

மனிதன் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.

  • 57

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான்

வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான

முதல் அறிகுறி....

  • 156
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலம் பிறக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் விலகும். குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் தொடர்பான நெருக்கடிகள் சற்று குறையும். சிக்கல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

ரிஷபம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். கைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

முயற்சிகளில் இருந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த புதிய பாதைகள் புலப்படும். வியாபார பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

தொழில் நிமித்தமான திட்டங்கள் கைகூடும். குழந்தைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகப் பணிகளில் இருந்த பொறுப்புக்கள் குறையும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

பெரிய முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பணிகளில் இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

சிகை அலங்கார பணிகளில் லாபம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். தேவையற்ற வாதங்களினால் விரயங்கள் நேரிடலாம். மனதில் அந்நிய தேச பயணம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கம் இன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். துணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

துலாம்

செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனை ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் குறித்த கண்ணோட்டம் பிறக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை விலகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். விவசாய செயல்களில் பொறுமை வேண்டும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

தனுசு

வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். வரவுகளில் தாமதம் உண்டாகும். அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை அளிக்கும். வெளியூர் பயணத்தால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பயனற்ற பேச்சுகளை தவிர்க்கவும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் பிறக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். கால்நடை பணிகளில் லாபங்கள் ஏற்படும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

கும்பம்

போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மறைமுகமாக இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

மீனம்

சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மனதில் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபார தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

  • 176
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.3.2026

இன்று இரவு 07.03 வரை திரியோதசி பின்னர் சதுர்த்தசி.

இன்று காலை 08.53 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

இன்று மாலை 02.54 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.

இன்று காலை 08.18 வரை கௌலவம். பின்னர் இரவு 07.33 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=439&dpx=2&t=1772338652

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 வரை

  • 176

Good Morning

  • 171
  • 281

Good Morning

  • 280
·
Added a post

ஒரு வயதான பெண் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். அடுத்த நிறுத்தத்தில், ஒரு வலிமையான, எரிச்சலான இளம் பெண் மேலே ஏறி, வயதான பெண்ணின் அருகில் அமர்ந்து, அவளது ஏராளமான பைகளால் தாக்கினாள்.

வயதான பெண் அமைதியாக இருப்பதைக் கண்டதும், அந்தப் பெண் தன் பைகளால் அடித்தபோது ஏன் புகார் கொடுக்கவில்லை என்று கேட்டார்.

வயதான பெண் ஒரு புன்னகையுடன் பதிலளித்தார்: "உங்களுக்கு அடுத்ததாக எனது பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதால், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ ​​அல்லது அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்கவோ தேவையில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறேன்."

இந்த பதில் தங்க எழுத்துக்களில் எழுதப்பட வேண்டியது: "இவ்வளவு அற்பமான ஒன்றை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் எங்கள் ஒன்றாக பயணம் மிகவும் குறுகியதாகும்."

இந்த உலகில் நம் நேரம் மிகவும் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயனற்ற வாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவற்றால் அதை இருட்டடிப்பது நேரத்தையும் சக்தியையும் கேலிக்குரியதாகும்.

யாராவது உங்கள் இதயத்தை உடைத்தார்களா? அமைதியாய் இரு. பயணம் மிகக் குறைவு.

யாராவது உங்களை காட்டிக் கொடுத்தார்களா, மிரட்டினார்கள், ஏமாற்றினார்கள் அல்லது அவமானப்படுத்தினார்களா? ஓய்வெடுங்கள். மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம். பயணம் மிகக் குறைவு.

யாராவது உங்களை காரணமின்றி அவமதித்தீர்களா? அதை அசைக்கவும். அதை புறக்கணிக்கவும். பயணம் மிகக் குறைவு.

உங்களுக்குப் பிடிக்காத ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கருத்து தெரிவித்தாரா? ஆழ்ந்த மூச்சு விடுங்கள். அவரை / அவளை புறக்கணிக்கவும். மன்னித்து மறந்து விடுங்கள். பயணம் மிகக் குறைவு.

யாராவது எங்களை எந்த பிரச்சனையில் கொண்டு வந்தாலும், எங்கள் பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எங்கள் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. அதன் நிறுத்தத்தில் அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஒன்றாக எங்கள் பயணம் குறுகியது.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பாராட்டுவோம்.

மரியாதைக்குரியவர்களாகவும், கனிவானவர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்போம். பதிலுக்கு, நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் நிறைந்திருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் பயணம் மிகவும் குறுகியதாகும்.

உங்கள் புன்னகையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எங்கள் பயணம் மிகவும் குறுகியது ..

  • 274
·
Added a post

கங்கைக் கரையில் பண்டிதர் ஒருவர் கங்கையாற்றின் பெருமையைப் பற்றியும் அதில் நீராடுகிறவர்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்ளும் சிறப்பும் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தார். பலர். அவருடைய புராணத்தைக் கேட்டு மகிழ்ந்தார்கள். அப்பொழுது கைலாசத்தில் இருந்த கைலாசபதியைப் பார்த்துப் பார்வதி தேவி, “கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோருக்கும் பாவம் ஒழிந்து நல்ல கதி கிடைக்குமென்றால், கைலாசத்தில் அத்தனை பேர்களுக்கும் இடம் காணாதே” என்றாள்.

“அடி பைத்தியக்காரி, கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோரும் தங்களுடைய பாவங்கள் எல்லாம் போகும் என்று நம்புவது இல்லை. புராணம் படிக்கிறாரே, அவருக்குக்கூட இந்த நம்பிக்கை இல்லை. யார் உண்மையாக நம்புகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கைலாச பதவி கிடைக்கும்” என்று இறைவர் கூறினார். உடனே பார்வதிதேவி, “கங்கையில் மூழ்குகிறவர்களில் யார் உண்மையாக நம்பி மூழ்குகிறார்கள் என்றும் யார் நம்பிக்கை இல்லாமல் மூழ்குகிறார்கள் என்றும் எப்படித் தெரிந்துகொள்வது?” என வினவினாள்.

'“நான் உனக்கு அதைக் காண்பிக்கிறேன். வா, போகலாம். நாம் இருவரும் கிழவனும் கிழவியுமாக மாறி, கங்கைக் கரைக்குப் போகலாம்” என்று கூறி இருவரும் கிழ வடிவங்களை எடுத்துக்கொண்டு போனார்கள்.

இருவரும் கங்கையில் மூழ்கி நீராடும் பொழுது கைலாசபதியாகிய கிழவர் நீரோடு போய்விட்டார். பார்வதி தேவியாகிய கிழவி, “என்னுடைய புருஷனை யாரும் காப்பாற்ற மாட்டீர்களா?” என்று கதறியழுதாள்.

புராணம் படித்த பண்டிதர் அங்கே வந்தார். “அம்மா நான் உங்கள் கணவரைக் காப்பாற்றுகிறேன்” என்று சொல்லிக் கங்கையில் இறங்கினார். கிழவி அப்பொழுது, “ஒரு பாவமும் செய்யாதவராக இருந்தால்தான் அவரைக் காப்பாற்ற முடியும், இல்லாவிட்டால் முடியாது” என்றாள்.

பண்டிதருக்குத் தம் மேலேயே நம்பிக்கையில்லை. தாம் செய்த பாவங்கள் எல்லாம் அவருடைய நினைவுக்கு வந்தன. அதனால் அவர் ஒன்றும் செய்ய முடியாமல் தலை குனிந்து நின்றார். கிழவியின் ஒலக் குரலைக் கேட்டு வேறு சிலரும் அங்கே ஓடி வந்தார்கள். அவர்கள் கிழவரை மீட்கலாம் என்று நினைக்க தொடங்கிய பொழுது கிழவி “ஒரு பாவமும் செய்யாதவர்களால்தான் அவரை மீட்க முடியும்” என்றாள். அதைக் கேட்ட அவர்கள் எல்லோரும் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி நின்று விட்டார்கள்.

இந்தச் சமயத்தில் முரட்டு ஆள் ஒருவன் அங்கே வந்தான். கிழவியைப் பார்த்து, “ஏனம்மா அழுகிறாய்? உனக்கு என்ன கஷ்டம் வந்தது?” என வினவினான். கிழவி எல்லாவற்றையும் சொன்னாள். அதற்கு அந்த முரடன், தான் கிழவரைக் காப்பாற்றுவதாகக் கூறினான். அதற்கு வழக்கம்போல் கிழவி. “ஒரு பாவமும் செய்யாமல் இருந்தால்தான் உன்னால் இயலும்” என்றாள். அது கேட்ட முரடன், “நான் இப்பொழுது தான் பண்டிதர் படித்த புராணத்தைக் கேட்டேன். இந்தக் கங்கையில் ஒரு தடவை மூழ்கினால், எல்லாப் பாவங்களும் தொலையும் என்று சொன்னார். இதோ நான் ஒரு முழுக்குப் போடுகிறேன். என்னுடைய பாவங்கள் தொலையட்டும்” என்று சொல்லி முழுக்கும் போட்டான். பிறகு நீந்திச் சென்று அந்தக் கிழவரை இழுத்துக் கொண்டு வந்தான்.

உண்மையான நம்பிக்கையோடு இருந்து வந்த முரடனுக்கு முன்னாலே கைலாசபதியாரும். பார்வதி தேவியும் தங்கள் தரிசனத்தைக் காட்டி ஆசீர்வாதம் செய்தார்கள்.

கைலாசபதி பார்வதிதேவியைப் பார்த்து, “பார்த்தாயா, இத்தனை பேர்கள் இருந்தும் இந்த ஒருவனைத் தவிர மற்ற எவருக்கும் நம்பிக்கையில்லாமல் போயிற்று புராணம் படித்த பண்டிதருக்கே நம்பிக்கையில்லையே. “நம்பினோர் கெடுவதில்லை” என்பதை இந்த ஒருவன்தான் நிரூபித்தான். ஆதலால் இவன் ஒருவனுக்குத்தான் கைலாசத்தில் இடம் இருக்கும்” என்று சொன்னார்; பிறகு அவர்கள் இருவரும் மறைந்து போனார்கள்.

  • 281
·
Added a post

தர்மம் தலையை மட்டுமல்ல...ஒரு நாட்டையே காப்பாற்றும்.

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன்.

அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை.

அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது.

அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள்.

அவரது மேனேஜரோ சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாக வில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை.அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்?

மனதை திடப்படுத்திக்கொண்டு *பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என்கிறார்கள்.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்*” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, இது தான் மொத்தம் வசூலான தொகை மீதியுள்ள தொகைக்கு பின் தேதியிட்டு செக் கொடுத்து

விடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன்.

இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள். என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்து போகப்போவதில்லை… என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார்.

மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது.

இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி.

கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர்.

(இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக் கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன.

அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர்.

பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பணிக்க நன்றி தெரிவிக்கிறார்.

நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான் என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி

அவரை அணைத்துக் கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை!

பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..

காலம் குறித்து வைத்துகொண்டது....

(உண்மை சம்பவம்)

தர்ம சிந்தனையை பற்றி

அறம் வழியில் வாழ குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள், குழந்தைகள் சொல்வதை கேட்பதில்லை ஆனால் செய்வதை பார்ப்பார்கள்...

  • 282
·
Added a post

1. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

2. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

3. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

4. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

5. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

6. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

7. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

8. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

9. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

10. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

  • 280
  • 278
  • 296
  • 302
  • 300

எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட மூளை

குறைகளை மட்டுமே பார்க்கும்.

நேர்மறை எண்ணங்களைக் கொண்ட மூளை

குறைகளில் உள்ள நிறைகளைப் பார்க்கும்...

  • 299
·
Added a post

தமிழ் ஆண்டு, தேதி - விசுவாவசு, மாசி 16 (ஆங்கில தேதி : 28.02.2026)

நாள் - சம நோக்கு நாள்

பிறை - வளர்பிறை

திதி : சுக்ல பக்ஷ துவாதசி  - Feb 27 10:33 PM – Feb 28 08:43 PM

சுக்ல பக்ஷ திரயோதசி  - Feb 28 08:43 PM – Mar 01 07:09 PM

நட்சத்திரம்:

புனர்பூசம் - Feb 27 10:48 AM – Feb 28 09:34 AM

பூசம் - Feb 28 09:35 AM – Mar 01 08:34 AM

கரணம்

பவம் - Feb 27 10:33 PM – Feb 28 09:36 AM

பாலவம் - Feb 28 09:36 AM – Feb 28 08:43 PM

கௌலவம் - Feb 28 08:43 PM – Mar 01 07:54 AM

யோகம்

சௌபாக்யம் - Feb 27 07:43 PM – Feb 28 05:02 PM

சோபனம் - Feb 28 05:02 PM – Mar 01 02:32 PM

image_transcoder.php?o=sys_images_editor&h=438&dpx=2&t=1772255017

நல்ல நேரம்:

அபிஜித் காலம் - 12:08 PM – 12:56 PM

அமிர்த காலம் - 07:17 AM – 08:48 AM, 02:26 AM – 03:57 AM

பிரம்மா முகூர்த்தம் - 05:00 AM – 05:48 AM

  • 363
New People