Sign up
தமிழ்பூங்காவில் சேர்ந்து உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். ஒவ்வொரு பதிவிற்கும் புள்ளிகள் கிடைக்கும். உங்கள் புள்ளிகளைப் பயன்படுத்தி பரிசுகளைப் பெறுங்கள்.
Added article
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Added article
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார். அவர் நடித்து வரும் ‘தில்லுக்கு துட்டு’ வகைப் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. தற்போது சந்தானம் டி டி நெக்ஸ்ட் லெவல் படத்தினல் நடித்துள்ளார். இந்த படம் மே 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் சந்தானத்துடன் யாஷிகா ஆனந்த், கஸ்தூரி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளனர்.இந்த படத்தை அவரின் நெருங்கிய நண்பர் ஆர்யா தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரைலர் இணையத்தில் கவனம் பெற்றது. இந்த படம் சென்சார் செய்யப்பட்ட நிலையில் படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Added article
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்போது படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ரஜினிகாந்துக்கு கிடைக்கும் சம்பளம் அதிர்ச்சியளிக்கிறது. அதன்படி, படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி. பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் ரஜினியின் சம்பளம். ரூ.260-280 கோடி வரை ரஜினி சம்பளமாகப் பெறுவதாகத் தகவல். லோகேஷ் கனகராஜுக்கும் அதிக சம்பளம். படத்தை இயக்குவதற்கு லோகேஷுக்கு ரூ.60 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஜெயிலர்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் 'கூலி'. தமிழ் சினிமாவின் எல்லாக் காலத்திலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக 'ஜெயிலர்' இருந்தது. உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்தது. 'கூலி'யைப் பொறுத்தவரை, பாக்ஸ் ஆபிஸ் வசூலைத் தவிர மற்ற வருவாய் வழிகளும் சன் பிக்சர்ஸுக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 'ஜெயிலர்' படத்தை விட அதிக OTT ஒப்பந்தத்தை 'கூலி' பெற்றுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
Added a news
கனடாவின், யுகான் மாகாண முதல்வர் ரஞ்ச் பிள்ளை நேற்று அவரது பதவியிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்வும் அறிவித்துள்ளார்.இந்த முடிவை எடுக்குமுன் அவர் தனது மகனுடன் யுகான் ஆற்றின் கரையில் முக்கிய உரையாடல் நடத்தியதாக கூறியுள்ளார்.“எங்களைப் போன்றவர்கள் இந்த பணியை செய்யக்கூடியவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று என் மகன் என்னிடம் கூறினார்,” என பிள்ளை கூறியுள்ளார்.ரஞ்ச் பிள்ளையின் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவி என்பது தனது வாழ்நாளிலேயே மிகப் பெரிய பெருமை என பிள்ளை குறிப்பிட்டார்.
Added a news
டொரண்டோவின் எடோபிகோ பகுதியில் காரும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒரு பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்து புதன்கிழமை பிற்பகல் 4:45 மணியளவில், கிப்லிங் அவென்யூ மற்றும் எக்லிங்டன் அவென்யூ மேற்கு சந்திப்பில் இடம்பெற்றதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.விபத்தில் பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பலத்த காயங்களுடன், தீவிர சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.விபத்தில் ஈடுபட்ட மற்ற வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்தார் என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது இந்த விபத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Added a news
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விமானநிலையம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அடுத்தடுத்த டிரோன் தாக்குதலால் மக்கள் அச்சமடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற தகவல் வெளியாகவில்லை. சம்பவத்தை அடுத்து லாகூர் விமான நிலயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலில் சேத விபரங்கள் வெளியாகவில்லை.
Added a post
சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான்.. வந்தவன் சென்னையிலேயே தங்கியதால் நாகரீகம் ரெம்ப முற்றி அல்ட்ரா மாடனாக வாழ்ந்து வந்தான்.ஒருநாள் திடீரென்று அவனுடையஅம்மா கிராமத்திலிருந்து அவன் தங்கும் ப்ளாட்டிற்கு வந்துவிட்டார்.வந்தவர் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்துசாப்பிட்டுக் கொண்டிருப்பதைகண்டார்.அம்மா கேட்டார்.."யார் இது"?சேகர் சொன்னான்..."என் ரூம் மேட்மா"அம்மா.."அப்படின்னா"??"ரூம் மேட்னா கூட வசிக்கிற பொண்ணு.. நீ சந்தேகப்படுற மாதிரி வேற ஒன்னும் இல்லைமா.. வீட்டை மட்டும்தான் ஷேர் பண்றோம்.. அவ தனி பெட்ரூம் நான் தனிபெட்ரூம்."அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய்விட்டார்..இரண்டு நாட்கள் கழித்து அவன் ரூம்மேட் சொன்னாள்; "உங்கம்மா வந்து போனதிலிருந்து தோசை கரண்டியை காணல, ஒரு வேளை உங்கம்மா எடுத்துபோயிருப்பாங்களோ?"சேகர் சொன்னான்.. "தெரியல எங்ககிராமத்து வீட்ல போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டுகேக்குறேன்"அம்மாவுக்கு கடிதம் எழுதினான்.."அன்புள்ள அம்மா, நான் நீங்க இங்கே இருந்த தோசைக் கரண்டியை எடுத்தீங்கனும் சொல்லல்ல.. எடுக்கலைனும் சொல்லல்ல.. ஆனா ஒன்னுமட்டும் உண்மை.. என் வீட்டிலிருந்து நீங்க போனதற்கப்புறம் தோசைகரண்டியை காணவில்லை.."சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது..அதை சேகர் பிரித்து படித்தான்.."அன்புள்ள மகனுக்கு.. நான் உன் கூட வசிக்கிற பொண்ணோடு தப்பா இருக்கிறேன்னும் சொல்லல்ல.. இல்லைன்னும் சொல்லல்ல.. ஆனா ஒன்று மட்டும் உண்மை.. அவ அவ பெட்ரூமில் தூங்கியிருந்தா இந்நேரம் அந்த தோசை கரண்டியை கண்டுபிடிச்சிருப்பா.."செத்தாண்டா சேகரு....!
மற்றவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். உங்களுக்கு மனநிறைவு, தெளிவு, அமைதி தரக்கூடியதை நீங்களே கண்டு உணருங்கள்! - புத்தர்
Added a post
அரபு நாடு ஒன்றிற்குச் சென்றிருந்த மாதவன், இரண்டு வருடத்தின் பின்பு விடுமுறையில் வந்தபோது, மாதவியும் அவனின் குழந்தை தனுவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அவன் நின்ற அந்த ஒரு மாதமும் அவர்கள் இருவருக்கும் அது பொற்காலமாகவே இருந்தது.அவனும் அவர்களுக்கான வீட்டைக் கட்டிக் கொடுத்திருந்தான். ஒரு சில தங்க நகைகள் கூட செய்து கொடுத்திருந்தான்.மாதவியைப் பார்த்து அயலவர்கள் பொறாமைப்படும் போதெல்லாம் உள்ளூர மகிழ்ச்சியடைந்தாள் அவள்.புதிய வீடும் புதிய நகையும் வாங்கித் தந்த கணவனை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டவள், அவன் நிற்கும் வரையில் அவனை எல்லாவகையிலும் நன்கு கவனித்துக் கொண்டாள்.இனி அடுத்த மூன்று வருடங்கள் திரும்பி வரமுடியாது என அவன் சொல்லியதால், அவனுக்குத் தேவையான பலகாரங்களையும் செய்து கட்டிக் கொடுத்தாள் மாதவி .பிரியும் நாள் வந்தபோது, தானும் பிள்ளையும் விமான நிலையம் வரை வந்து வழி அனுப்புவதாக மாதவி எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், மாதவன் மறுத்து விட்டான்.தான் போன பின்னர் இருவரும் தனியே திரும்பி வருவது ஆபத்தானது என்று சொல்லித் தானே போய் வருவதாகச் சொல்லிக் கொண்டான்.அவனும் தங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறான் என மாதவியும், அவனைக் கண்ணீர் மல்க, இறுதியாகக் கட்டிப் பிடித்து வழி அனுப்பி வைத்தாள்.அவ்வளவு நாளும் தான் கேட்பதை எல்லாம் வாங்கித் தந்த தந்தையைப் பிரிய மனமின்றி அழுது ஆர்ப்பாட்டமே செய்து விட்டிருந்தாள் தனுக்குட்டி.அவனும் மகளுக்கு இறுதியாக நிறைய முத்தங்கள் கொடுத்து, அங்கு போய் மிட்டாய் அனுப்பி வைப்பதாக அவளுக்கு ஆசை காட்டி, அவளைச் சமாதானப் படுத்தினான்.ஒருவழியாக எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு மாதவன் புறப்பட்டபோது , உருகி உருகி அழுது விடை கொடுத்தாள் மாதவி.ஒருநாள் கழிந்தபோது இன்னமும் மாதவன் போய்ச் சேர்ந்த தகவல் வரவில்லை என்பதை உணர்ந்த மாதவியின் மனம், பயத்தில் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.உடனடியாக அவனின் அலைபேசிக்கு அழைப்பெடுத்த போது, அவனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் சொல்லியது.இடையில் ஏதாவது பயணத்திட்டம் மாற்றப்பட்டு விமான நிலையத்தில் இருக்கிறாரோ ? என்ற சந்தேகம் ஏற்படவே, அடுத்த நாளும் பொறுத்துப் பார்த்தாள்.ஆனால் இரண்டு நாட் கடந்தும் அவனைக் காணவில்லை என்ற நிலையில்தான், காய்கறிச் சந்தையில் மாதவனுடன் வேலை செய்யும் குமாரின் மனைவியைச் சந்தித்தாள் மாதவி.அப்போது தனது நிலமை பற்றி விளக்கியபோது, அவளும் உடனடியாகத் தனது கணவனான குமாருக்கு அழைப்பை எடுத்த போதுதான், குமார் அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னான்.மாதவன் முகநூலில் ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும், அவளைப் பிடித்து இருப்பதாகவும் மாதவியை விவாகரத்துச் செய்து விட்டு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாகவும், இனித் திரும்பி வரமாட்டேன் என்று சொல்லி விட்டே இங்கிருந்து சென்றதாகவும் அவன் கூறினான்.குமார் சொல்லச் சொல்ல மாதவிக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வருவதாக உணர்ந்தாள். அப்படியே மயங்கிச் சரியத் தொடங்கினாள்.அவள் மயங்கிக் கீழே விழப் போவதை உணர்ந்த மங்கை, மாதவியைத் தாங்கிப் பிடித்துக் கீழே இருத்தினாள்.அங்கிருந்த யாரோ ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து, மாதவியின் முகத்தில் தெளித்தபோது, கண் விழித்த மாதவி, அழத் தொடங்கினாள்.அவளின் அழுகையைப் பார்த்த மக்கள் கூட்டம், புதினம் அறிந்து கொள்வதற்காகக் கூடியது. பின்னர் மங்கை மூலம் தகவல் அறிந்து, மாதவனைத் திடடியவாறும், மாதவியைக் கவலையுடன் பார்த்தவாறும், செல்லத் தொடங்கினார்கள்.பின்னர் ஒரு முச்சக்கர வண்டியில் மாதவியை அவளின் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் மங்கை.வீட்டிற்கு வந்த மாதவி, தனது தாயிடம் விபரத்தைச் சொல்லி அவரின் மடியில் விழுந்து அழுது தீர்த்தாள்.அதேவேளை இந்தத் தகவலறிந்த அயலவர்கள் சிலர், மனதுக்குள் மகிழ்ந்து கொண்டார்கள்."இந்த ஒரு மாதமும் புருசனும் பொஞ்சாதியும் என்ன ஆட்டம் ஆடினதுகள். இவளுக்கு இது வேணும்தான். இனிச் சாப்பிட வழியில்லாமத் திரியட்டும். அப்பதான் அடங்குவாள்....!"நீண்ட காலத்தின் பின் வந்த கணவனுடன் மகிழ்ச்சியாக இருந்தது ஒரு குற்றம் போல் அயலவர்கள் முணுமுணுத்துக் கொண்டு போனபோது, மாதவியின் மனம் சுக்குநூறாக வெடித்துக் கொண்டிருந்தது.ஆனாலும் அவளின் வேதனையைப் புரிந்து கொள்ளாமல், அவளுக்கு ஆறுதல் கூறுவது போல் அவர்கள் வந்து சென்றார்கள்.வந்தவர்கள் காணாமற் போனபோது, வெறுமையை உணர்ந்தாள் மாதவி. அப்பா இன்னொருத்தியுடன் ஓடிப் போனது கூடத் தெரியாமல் "ஏனம்மா அழுகிறீங்க...?" என்று தனுக்குட்டி கேட்டுக் கொண்டிருந்தாள்.நாட்கள் நகர்ந்தபோது, வெளியே செல்வதற்குக் கூடப் பயந்தாள் மாதவி. அதனையும் மீறி மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு வந்த பெற்றோர்களின் கேள்விகளும், அதற்குப் பதில் சொல்லியும்,பாதி செத்துப் போனாள் மாதவி.ஏதோ நடைப் பிணம் போல் ஒரு மாதம் ஓடியபோது, அவன் வாங்கித் தந்த தங்க நகையை அடகு வைத்து அடுத்த மாதத்தை நகர்த்தினாள் மாதவி.இனி இப்படியே அடகு வைத்துக் கொண்டிருந்தால் கடைசியில் பிச்சை எடுக்க வேண்டி வர வேண்டும் என எண்ணியவாறே, வேலை தேடத் தொடங்கினாள் அவள்.கிடைக்கும் கூலி வேலைகளுக்குப் போகத் தொடங்கியவள், ஆரம்பத்தில் காயங்களும் கொப்பளங்களுமாக நிறையவே துன்பப் பட்டாள்.இனி வலிகளையும் வேதனைகளையும் மகளுக்காகத் தாங்கித்தான் வாழ வேண்டும் என்பதை உணர்ந்தவளாக வறுமையிலும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் மாதவி......!கதை முற்றும்....!இது ஒரு உண்மைச் சம்பவம்!
Added a post
1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் போனில் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம்,அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.2,திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம், மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்.இது திரும்ப வருமா வராதா என.இது உங்கள் கேரக்டரை அவர் உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம்,லஞ்ச் பாக்ஸ்,குடை போன்றவைக்கும்.3,ஹோட்டலில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், மெனுகார்டில் காஸ்ட்லியாக உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள்.அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி ஆர்டர் சொல்லுங்கள் என வேண்டலாம்.4,தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்."இன்னும் கல்யாணம் ஆகலயா?""குழந்தைகள் இல்லையா?""இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?""ஏன் இன்னும் கார் வாங்கவில்லை?"இது நமது பிரச்சினை இல்லைதானே!"5,தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ,பெண்ணோ,சிறியவரோ,பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாகமாறச்செய்யும்!6,நண்பருடன் டாக்ஸியில் சென்றால் பெண் தோழியாக இருந்தாலும்..இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.7,மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்.மோசமாக இருந்தாலும், சாய்ஸில் வைத்திருக்கலாம்.8,அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்.அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.9,நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால்,மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்.அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்,10,யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்!11,பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.12,உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள். "நீங்கள் பார்க்க ஸ்மார்ட்டாக, கியூட்டாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.13,யாராவது அவர்கள் போட்டோவைக் காட்ட போனைக் கொடுத்தால் காலரியில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்.அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.14,யாரும் தனக்கு டாக்டர் அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது. போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்.அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம்,"விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறலாம்.15,நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது போனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.16,கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.17,நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால்,அவர்களின் சம்பளம்,வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்.அவர்களாகவே சொன்னால் தவிர.18,தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால்,ஸ்டைலுக்காக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்,கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது!19,யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.20,இறுதியாக ஒன்று.இதுபோன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்தரும் என்றால் பகிருங்கள்....தெரிந்து கொள்வோம் பகிர்வோம் நல்லதை பகிர்வோம் முயன்றவரை புரிந்து கொள்வோம்.
Added a post
1. உற்றார் உறவினர்களை கண்டவுடன் சில நேரங்களில் தங்களை அறியாமல் சிரித்து விடுவது அது துக்கத்தில் இருப்பவர்கள் பார்த்தால் மனவேதனை படுவார்கள்.2. மரணமடைந்தவரின் வாழ்க்கையை எதார்த்தமாக விமர்சித்து கொண்டிருப்பது.3. உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் மரணிக்க வேண்டும் ஆனால் தாங்கள் மட்டும் பல நாட்கள் இந்த உலகத்தில் வாழ்வது போலவும் மற்றவர்கள் வேகமாக மரணிப்பது போலவும் ஜம்பம் அடிப்பது.4. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான மரணத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால் சிலருக்கு அதில் உடன்பாடு இருக்காது. இருந்தாலும் அந்த சூழ்நிலையை அனுசரித்து செல்ல வேண்டும். அதைவிடுத்து அப்படி செய்யவில்லை இப்படி செய்யவில்லை என்று வீராப்பு செய்து கொண்டிருப்பார்கள்.5. தந்தை அல்லது தாய் ஓரளவு பொருளாதார உயர்வு நிலையை அடைந்து இறை நிலையை அடைந்திருந்தால் அந்த பொருளாதாரத்தை எவ்வாறு பிரித்து எடுப்பது என்று பெற்ற பிள்ளைகளும் உடன்பிறந்த சகோதரர்களும் , சகோதரிகளும் மற்றவர்களும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முக்திக்கான கடைசி கால பயணத்தை முறையாக செய்ய மாட்டார்கள்.6. இப்போது உள்ள காலத்தில் பல முறைகள் மாற்றப்பட்டுவிட்டன. இருந்தாலும் ஓர் உயிரற்ற உடல் உயிர் இருக்கும் போது பல ஆசைகள் மனதில் வைத்திருக்கும். அது பல நேரங்களில் வெளிப்பட்டு இருக்காது மரணத்திற்கு பின் தன் உடலை தன் சுற்றத்தார் தூக்கி செல்ல வேண்டும்; அவர்களே தன் இறுதிக் கடன்களை முறையாக செய்ய வேண்டும் என எண்ணி இருப்பார்கள். ஆனால் பல படித்த ஜாம்பவான்கள் வேலையாட்களை வைத்து இறுதிப் பயணத்தை முடித்து வைப்பார்கள். தாங்கள் கட்டிய வேட்டியும் சட்டையும் கசங்காமல் வருவார்கள்.7. இன்னும் சிலர் நேரம் ஆகிறது நேரமாகிறது என்று மறைமுகமாக கூறிக்கொண்டே இருப்பார்கள்.8. வாழும் காலத்தில் அந்த உயிரற்ற உடல் பலருக்கும் நன்மை செய்திருக்கும், தீமையும் செய்திருக்கலாம்; அவர்கள் மனதினுள் உணர்வை அறியாமல் வேண்டப்பட்டவர்கள் கடைசிநேர பயணத்தில் உடன் இருக்க மாட்டார்கள்.
Added a post
இரண்டு நண்பர்களில் ஒருவர், மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம். எனவே அவரை தொடர்பு கொண்டு பேசினால் அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம். காலம் செல்லசெல்ல "நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்.. அவர் நம்மை தொடர்பு கொள்ளட்டுமே" என்ற சிந்தனை உருவாகும். மேலும் சிறிது காலம் செல்லும்போது இது மற்றொரு விதத்தில் தீவிரப்படும்.அதாவது, அவர் நம்மை முதலில் தொடர்பு கொள்ளட்டும்.. பிறகு நாம் பேசுவோம் என்று நினைப்பு இருவரின் மனதிலும் பரஸ்பரம் தோன்றும்.இங்கு என்ன ஆகிறது? நட்பால் விளைந்த அன்பு வெறுப்பாக மாறுகிறது.இறுதியில் அவ்விரு நண்பர்களுக்குள் தொடர்பு இல்லாமல் போனதால், நட்பால் விளைந்திருந்த பசுமை நினைவுகள் மறந்து போகிறது.ஒருவர் மற்றொருவரை மறந்து போகிறார்.எனவே நட்பு தொடர்ந்து நீடிக்க அடிக்கடி நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்.நட்பு சிறக்க பத்து பொன் விதிகள்:1 . நட்பு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க சோதனை ஏதும் வைக்காதீர்கள்.2 . மேலும் நண்பரிடம் உதவி ஏதும் கேட்க நினைத்தால் அவரின் நிலை அறிந்து கேளுங்கள்.3. நண்பரே குறிப்பறிந்து உதவி செய்தால் அதற்கு நன்றி தெரிவியுங்கள்.4. ஆனால் அதே நேரத்தில் நாம்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறோமே என்று அவரிடமிருந்து பிரதி உதவி எதிர்பார்க்காதீர்கள்.5. நண்பர் உதவவில்லையானால் " அவருக்கு என்ன சூழ்நிலையோ,கஷ்டமோ தெரியவில்லை?" என்று நினைக்கப் பழகுங்கள்.6. உதவ முடியாத நிலைக்கு நண்பர் வருத்தம் தெரிவித்தால், அதை ஏற்றுக்கொண்டு பழையபடி நட்பை தொடருங்கள்.7. நண்பருக்கு கஷ்டம், துன்பம் என்று கேள்விப்பட்டால் அதை அறிந்து முடிந்த உதவி செய்யுங்கள். பக்கத்துணையாக நில்லுங்கள். நல் ஆலோசனை நல்குங்கள்.8 . நண்பர் தன் கஷ்டத்தை முதலில் சொல்லட்டும், பிறகு உதவி செய்யலாம் என்று இருப்பது நட்புக்கு நன்று அல்ல.9 . அதே போன்று நண்பர்களிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டால் அது பாதியாகும்.10 . அவ்வாறே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாகும்.வாழ்க நண்பர்கள் ! வளர்க நட்பு !!முயற்சிப்போமா?????
Added a post
சில தவிர்க்க இயலாத சந்தர்ப்பத்திலோ, அல்லது தேவைக்கோ உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்க நேரிடலாம். அப்போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.1. உறவினர் வீடாகவோ அல்லது நண்பர் வீடாகவோ இருப்பினும் வெறும் கையை வீசிக் கொண்டு செல்லாமல், குழந்தைகளுக்கு பிஸ்கட் அல்லது முதியவர்கள் இருப்பின் பழங்கள் வாங்கிச் செல்ல வேண்டும்.2. சரியாக சாப்பாடு நேரத்திற்கு செல்லாமல் முன்கூட்டியோ அல்லது சாப்பாடு நேரம் முடிந்த பின்னரோ செல்ல வேண்டும்.3 அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டில் எந்தவித குறையும் சொல்லாமல், அவர்களே கேட்டாலும் நன்றாக உள்ளது என்று கூறுதல் வேண்டும்.4. அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை (டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப்) பயன்படுத்த கூடாது.5. அந்த வீட்டின் படுக்கை அறையில் மிக சுதந்திரமாக நுழைந்து உறங்குதல் கூடாது.6. அந்த வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்திய, குளிக்கும் சோப்பை உபயோகித்தல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடக் கூடாது. இது அவர்களுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும்.7. அவர்கள் உபயோகப்படுத்தும் துண்டு (டவல்), சீப்பு போன்றவற்றை நாம் எடுத்து பயன்படுத்தக் கூடாது.8. அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழி தெரியாவிட்டால், நாமே விசாரித்துக் கொண்டு போய்ச் சேர வேண்டுமே தவிர, அவர்களை வந்து கூட்டிச் செல்லுங்கள் என்று கூறக் கூடாது.9. நாம் அந்த வீட்டிலிருந்து கிளம்பும் வரை அவர்களுக்கு எந்தவித அசௌகரியத்தையும் கொடுக்க கூடாது.10. நம்முடன் குழந்தைகளையும் கூட்டி சென்றால் அவர்கள் அந்த வீட்டில் எந்த பொருளையும் எடுக்காமலும், தேவையின்றி எல்லாப் பொருள்களையும் நோண்டுவதையும் கண்டிக்க வேண்டும்.
Added a post
அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழிபணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு.விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுணரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார்.இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும்.இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.இது எப்படி சாத்தியம் ஆகிறது?.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது.அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது. இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.
Added a post
பாண்டவர்கள் இராஜசூய யாகம் செய்தனர். பல நாட்டு அரசர்களும் விருந்தினராக வந்திருந்தனர்."சபையில் முதலில் பூசிக்கத் தகுதியுடையவர் யார்?" என்று ஒரு வினா எழுந்தது.பலகலை வல்லவனான சகாதேவன் எழுந்து, "ஆன்றோர்களே! அரசர்களே!""இவ்வுலகம் எவருடைய வடிவம்? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூசை பெறத் தகுதியுடையவன் ஆவாள்?"அத்தகையவன் நம்மிடையேயுள்ள கண்ணனைத் தவிர வேறு யாரும் இலர். அவருக்கே பூசை செய்வோம். அப்படிச் செய்தால், எல்லா உயிர்களுக்கும் செய்ததாகும்" என்றான்.அவன் சொல்லியதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சிசுபாலன் என்பவன் மட்டும் எதிர்த்தான்.அவன் எதிர்ப்பைக் கண்டு சினந்த அரசர் பலர் அவனைக் கொல்ல எழுந்தனர்.நிலைமை கொந்தளிப்பானதை அறிந்த கண்ணன், தன் சக்கரத்தால் சிசுபாலனை அழித்தார்.பின்னர், சகாதேவன் சொல்லியபடியே கண்ணனுக்கு முதல் பூசை செய்தனர்.கண்ணள் ஓர் இரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்த காட்சி அனைவருடைய கண்களுக்கும் விருந்தானது.இராஜசூய வேள்வியின் பிற செயல்களில் அனைவரும் ஈடுபட்டிருந்தனர்.ஒருபுறம் பல்லாயிரவருக்கு விருந்து நடந்துகொண்டிருந்தது.இரத்தின சிம்மாதனத்தில் வீற்றிருந்த கண்ணனைக் காணவில்லை. முதல் பூசை பெற்ற கண்ணன் எங்கே? என்று எல்லோரும் தேடலாயினர்.நெடுநேரம் எங்கெல்லாம் தேடியும் கண்ணன் தென்படவே இல்லை.இறுதியில் விருந்து நடந்து முடிந்த இடத்தில் கண்ணன் தென்பட்டான். விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளி அப்பாற் கொட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். முதற்பூசை பெற்ற பரம்பொருள் எச்சில் இலை எடுப்பதா என்று எல்லோரும் வியந்தனர்."கண்ணா! எச்சில் இலை எடுக்க எத்தனையோ பேர் உள்ளனரே! நீ வந்து எடுக்கலாமா? முதற்பூசை பெற்ற உன்னை எச்சில் இலை எடுக்க அனுமதிப்பது அவமதிப்பது ஆகாதா! உடனே நிறுத்து. எச்சில்பட்ட உடைகளை மாற்றிக் கொண்டு, சிம்மாதனத்திலிருந்து திருக்காட்சி தரவேண்டும்!" என்று வேண்டிக் கொண்டனர்."எச்சில் இலை எடுப்பது இழிவான செயலா? ஏவலர். எடுக்கும்போது, அக்கறையில்லாமல், இங்கும் அங்கும் ஒழுக விட்டுத் தரையைச் சேறாக்குகின்றனர். அவ்வாறு செய்தால் மறுபந்திக்கு இடையூறு நேராதா! ஆதலால், எச்சில் இலையை எவ்வாறு சிந்தாமல் சிதறாமல் எடுப்பது என்று ஏவலர்க்குச் செய்து காட்டினேன். சொல்லிக்காட்டுவதைவிடச் செய்து காட்டுவதே மிகப் பயனுடையதல்லவா?"அதுமட்டுமா? தொழிலில் ஏற்றத்தாழ்வு உண்டா? முதல் பூசை பெறுவதும் ஒரு தொழில் தான், எச்சில் இலை எடுப்பதும் ஒரு தொழில் தான். இரண்டுள்ளும் வேறுபாடு காண்பவன் மூடன். முதல் பூசை பெற்ற நான், எச்சில் இலை எடுப்பதை இழிவாகக் கருதுவேனானால் பெற்ற முதல்பூசை தகுதிக்காகப் பெற்றதாகுமா? பகட்டுக்காகப் பெற்றதாகத் தானே இருக்கும்" என்றான் கண்ணன்.கண்ணன் செயலும் வாக்கும் அவன் கூறியருளிய பகவத் கீதையின் சாரமாக அமைந்தது என்று ஞானிகளாகிய சகாதேவன் முதலியோர் பாராட்டினர்.கண்ணனுக்கு முதல்பூசை தந்தது எவ்வளவு தகுதியானது என்று எண்ணி எண்ணி இன்புற்றனர்.