குடும்பஸ்தன் படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படம் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தில் ஆந்திர இறக்குமதியான சான்வே மெக்ஹானாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது. அந்த படத்தில் எதார்த்தமான ஒரு சாதாரண குடும்பத்து மனைவியாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து, நடிகை மேகனாவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரின் இன்ஸ்டாகிராமை தேடி கண்டுபிடித்து, அவரின் போட்டோக்களுக்கு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். சுருட்டை முடி, வசீகரிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படி இருக்கும் நடிகை சான்வே மேகனா, குடும்பஸ்தன் படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருக்கிறார். ஆனால், தெலுங்கில் இவர், 'Anaganaga Oka Raju' என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. அந்த படத்தில் ஆந்திரா டூ தெலுங்கான என்ற பாலுக்கு குட்டி பாவடை போட்டுக்கொண்டு 'ஊ சொல்றியா மாமா' பாடல் சமந்தாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.
கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகளில் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைச் சார்ந்தவை என லிங்க்ட்இன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
“வேலைவாய்ப்பு பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் செயற்கை நுண்ணறிவு மாற்றி அமைத்து வருகிறது. இந்த மாற்றங்களில் முன்னிலைப் பெற பல பணியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் சூழலில், புதிய வாய்ப்புகளை கண்டறிதல் இதற்கு முன் இல்லாத அளவுக்கு முக்கியமானதாகியுள்ளது” என லிங்க்ட்இன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லிங்க்ட்இன் பயனர் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆண்டுதோறும் வெளியாகும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு அறிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் கனடாவில் மிக வேகமாக வளர்ந்த 15 வேலைவாய்ப்புகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் பட்டியல், செயற்கை நுண்ணறிவு பொறியாளர்கள், செயற்கை நுண்ணறிவு ஆலோசகர்கள் போன்ற தொழில்நுட்ப மற்றும் மூலோபாய செயற்கை நுண்ணறிவு பணிகளில் தொடர்ச்சியான வளர்ச்சியையும், கட்டமைப்பு சார்ந்த மேலாளர்கள் போன்ற பணிகளின் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது என லிங்க்ட்இன் குறிப்பிட்டுள்ளது.
இதில் சுகாதாரம், கட்டுமானம் மற்றும் விற்பனை துறைகளும் முன்னணி வேலைவாய்ப்புகளாக உள்ளன.
லிங்க்ட்இன் அறிக்கையின்படி, கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைவாய்ப்புகள் பின்வருமாறு:
1. ஏ.ஐ. பொறியாளர்கள் – செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கி செயல்படுத்துவோர்.
2. ஏ.ஐ. ஆலோசகர்கள் மற்றும் மூலோபாய வல்லுநர்கள் – நிறுவனங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவுவோர்.
3. மின்சார அமைப்பு பொறியாளர்கள் (Power Systems Engineers) – மின்சார அமைப்புகளை வடிவமைத்து மதிப்பீடு செய்வோர்.
4. ஏ.ஐ./மெஷின் லேர்னிங் ஆராய்ச்சியாளர்கள் – ஏ.ஐ. அமைப்புகளை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர். 5. மேலாளர்கள் – கட்டுமானம் மற்றும் பொறியியல் திட்டங்களை சோதித்து உறுதிப்படுத்துவோர்.
6. முதன்மை தயாரிப்பு அதிகாரிகள் (Chief Product Officers) – நிறுவனங்களின் தயாரிப்பு மேம்பாடு மற்றும் மூலோபாயத்தை வழிநடத்துவோர்.
7. கிளினிக்கல் சேவைகள் மேலாளர்கள் – சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவோர்.
8. மோசடி விசாரணை அதிகாரிகள் – நிறுவனங்களில் மோசடியை கண்டறிந்து தடுப்போர்.
9. கட்டுமான மேலாளர்கள் – கட்டுமான திட்டங்களை கண்காணித்து நிர்வகிப்போர்.
10. நிறுவனர் (Founders) – புதிய வணிக யோசனைகளை தொழில்களாக மாற்றுவோர்.
11. கார் விற்பனை மேலாளர்கள் – கார் விற்பனை நிலையங்களின் தினசரி நடவடிக்கைகளை நடத்துவோர்.
12. இதய நோய் நிபுணர்கள் (Cardiologists) – இதய நோய்களை கண்டறிந்து சிகிச்சையளிப்போர்.
13. தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் – தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை பராமரிப்போர்.
14. உளவியல் ஆலோசகர்கள் (Psychotherapists) – மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவோர்.
15. தரவுத்தள பகுப்பாய்வாளர்கள் (Database Analysts) – நிறுவனங்களில் தரவை நிர்வகித்து பகுப்பாய்வு செய்வோர்.
இந்த அறிக்கை, கனடாவில் எதிர்கால வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்ததாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
ஒரு ஊரில் ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்கு ஆட்களை சேர்த்துக் கொண்டிருந்தார்கள் BE /Mcom /MBA போன்ற படிப்பையெல்லாம் முடித்தவர்கள் கூட அந்த இன்டெர்வியுவில் தேர்வாகாமல் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் . அப்போது வெறும் SSLC (10-வது ) மட்டுமே படித்த நமது நபர் ஒருவர் மட்டும் அந்த கம்பெனிக்கு தேர்வாகின்றார்..அப்படியென்ன அவர் தேர்வில் தேறினார் என்பதை தெரிந்து கொள்ள வாருங்கள்
இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- இன்டெர்வியு செய்பவரை பார்த்து " வணக்கம் ஐயா "
இன்டெர்வியு செய்பவர் :- வணக்கம் உங்க பெயர் என்ன ?
இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- என் பெயர் சிதம்பரம்
இன்டெர்வியு செய்பவர் :- உங்க அப்பா அம்மா பெயரைச் சொல்லுங்ககள்
இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- ஏகாம்பரம் எங்கப்பா பெயர் எங்கம்மா பெயர் கனகாம்பரம்
இன்டெர்வியு செய்பவர் : உங்க தாத்தா பெயர் என்ன ?
இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- பீதாம்பரம்
இன்டெர்வியு செய்பவர் :- நீங்க எங்கிருந்து வரீங்க ?
இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :-எங்க வீட்ல இருந்துதான் வரேன்
இன்டெர்வியு செய்பவர் :- ஏம்பா கிண்டல் பண்றீயா ? உங்க வீடு எங்கேயிருக்கு ?
இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- தாம்பரம்
இன்டெர்வியு செய்பவர் :- உங்களுக்கு பிடிச்ச விளையாட்டு எது ?
இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :-" பம்பரம் " விடுறது
இன்டெர்வியு செய்பவர் :- BE /Mcom /MBA பட்டதாரிகளே இந்த இன்டெர்வியூ அட்டன் பண்ண முடியாம திரும்பி போய்ட்டாங்க நீ வெறும் SSLC படிச்சுட்டு வந்துருக்கே
இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் போங்க சார் என்னோட படிப்பு நாலெழுத்து மத்தவங்களோடது எல்லாம் வெறும் 2 இல்ல 3 எழுத்து தான் சோ என் படிப்பு தான் பெரிய படிப்பு
இன்டெர்வியு செய்பவர் :- உங்களுக்கு இந்த வேலை கிடைக்கலனா என்ன பண்ணுவீங்க ?
இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- வெளிய போய் இதே மாதிரி கம்பெனி ஆரம்பிச்சி இன்டெர்வியு நடத்தி பொழைச்சுக்குவேன் சார்
இன்டெர்வியு செய்பவர் :- வேற லாங்குவேஜ் தெரியுமா ?
:இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர்- தெரியும் சார் நான் தண்ணியடிச்சா மட்டும் அந்த பாஷையை பேசுவேன்
இன்டெர்வியு செய்பவர் :- உங்க எதிர்கால குறிக்கோள் என்ன ?
:இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- நான் உங்க சீட்ல உட்காரனும் சார் நீங்க என் சீட்ல உட்காரனும் சார்
இன்டெர்வியு செய்பவர் :- யூ ஆர் அப்பொய்ன்டெட் கங்கிராட்ஸ்
ரயில்கள் ஏற்படுத்தும் ஹாரன் ஒலியை நீங்கள் பல முறை கேட்டிருப்பீர்கள். அதை நீங்கள் நன்றாக கவனித்து இருப்பீர்கள். ஹாரன் சத்தம் சிலவேளை நீண்டதாக இருக்கும். சில நேரங்களில் குறுகியதாக இருக்கும். சில வேளை இரண்டு முறை குறுகியதாகவோ அல்லது இரண்டு முறை நீண்டதாகவோ இருக்கும். இப்படிப் பலவிதமாக கேட்கும் ரயில் ஓசைக்குப் பின்னால் பலவிதமான தகவல்கள் உள்ளன.
ரயிலானது ஒரே ஒரு ஹாரன் சத்தம் எழுப்பியபடி நகர்ந்தால் அதனை சுத்தம் செய்ய ரயில்வே யார்டுக்கு எடுத்து செல்கின்றனர் என்று அர்த்தம்.
இரண்டு முறை குறுகிய சத்தத்தை எழுப்பினால் ரயில் ஓட்டுநர் ரயில் கார்டிடம் சிக்னல் கேட்கிறார் என்று அர்த்தமாகும்.
மூன்றாவது முறை குறுகிய சத்தத்தை எழுப்பினால் ரயில் கட்டுப்பாட்டை இழந்து விட்டது என்று அர்த்தம். அந்த சமயத்தில் ரயில்வே கார்ட் உடனடியாக வேக்குவம் பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்துவார்.
நான்கு முறை குறுகிய ஹாரன் சத்தம் கேட்டால் ரயிலில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது, எனவே தொடர்ந்து அதை இயக்க முடியாது என்று அர்த்தமாகும்.
ஒரு நீண்ட மற்றும் குறுகிய ஹாரன் சத்தம் கேட்டால் ஓட்டுநர் ரயில்வே கார்டிடம் பிரேக்கை சரி செய்யச் சொல்கிறார் என்று அர்த்தம்.
இரு நீண்ட மற்றும் இரு குறுகிய ஹாரன் சத்தம் எழுப்பப்பட்டால் ஓட்டுநர் இன்ஜினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருகிறார் என்பதை அவருடைய கார்டுக்கு தெரிவிப்பதாக அர்த்தமாகும்.
மிக நீளமான ஹாரன் சத்தமானது எதிர்வரும் ஸ்டேஷனில் ரயில் நிற்காது என்று பயணிகளுக்கு எச்சரிக்கிறது.
இரு இடை நிறுத்தத்துடன் விடப்படும் ஹாரன் சத்தமானது ரயிலானது ரயில்வே கிராசிங்கை கடக்கப் போகிறது என்றும் கிராசிங்கை கடந்து செல்ல நினைக்கும் பயணிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் எழுப்பப்படுகிறது.
இரு நீண்ட மற்றும் இரு குறுகிய ஹாரன் சத்தமானது ரயில் ட்ராக் மாறப் போகிறது என்று அர்த்தமாகும்.
இரு குறுகிய மற்றும் ஒரு நீண்ட ஹாரன் சத்தமானது எழுப்பப்பட்டால் யாரோ பிரேக் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டார்கள் என்பதனை அறிவிக்கிறது.
6 முறை குறுகிய ஹாரன் சத்தம் எழுப்பப்பட்டால் ரயிலானது அபாயக் கட்டத்தில் இருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறது.
கடும் தவத்துக்குப் பிறகு கடவுள் காட்சி தந்தார்.
“இறைவா! நான் இழந்தவை அனைத்தையும் எனக்குத் திருப்பிக் கொடு! என்றேன்.
“இழந்தவை எவை என்று சொல்லு பார்க்கலாம்.....” என்றார் கடவுள்.
“காலமாற்றத்தில் இளமையை இழந்தேன்.கோலம் மாறி அழகை இழந்தேன். வயது அதிகமாக உடல் நலத்தை இழந்தேன்.இதுபோல் இன்னும் எத்தனையோ! அத்தனையும் திருப்பிக் கொடு!” என்றேன்.
சிரித்தவாறே, “கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய். உழைப்பின் பலனாய் வறுமையை இழந்தாய். உறவுகள் வந்ததால் தனிமையை இழந்தாய். நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய். இதுபோல இழந்தவையும் பல உண்டு.இவைகளையும் திருப்பித் தரட்டுமா-” என்றார் கடவுள்.
பதறிப்போய், “வேண்டாம் ஸ்வாமி!” என்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்தபோது கடவுளைக் காணோம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களில் இருந்த தடைகள் குறையும். தவறிய சில பொருள்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
ஆரோக்கிய இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். போட்டி விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்
மிதுனம்
உற்சாகமான சிந்தனைகள் மனதளவில் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிரபலமானவர்களின் தொடர்புகள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
கடகம்
உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாள் எண்ணிய சில பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதிய பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். அறக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சிம்மம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். தோற்ற பொழிவுகள் மேம்படும். நவீன கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிக்கலான செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வாகன வழியில் சில விரயம் ஏற்படும். வரவுகளில் சில இழுபறியான சூழல் ஏற்படும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபாவமும் நிலவும். சுபகாரிய பேச்சுக்களில் பொறுமை வேண்டும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விருச்சிகம்
புது விதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் தொடர்புகளால் மேன்மை உண்டாகும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தொழில் சார்ந்த செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். குடியுரிமை சார்ந்த பிரச்சனைகள் குறையும். உபரி வருமான முயற்சிகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மீகத்தில் தெளிவுகள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
கும்பம்
எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக பணிகளால் மனதில் தெளிவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். சோர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் அனுசரித்து செல்லவும். சிறு வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்ட நீங்கும். நெருக்கமானவர்களை புரிதல்கள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 13.1.2026
இன்று மாலை 05.56 வரை தசமி. பின்னர் ஏகாதசி
இன்று முழுவதும் விசாகம்.
இன்று இரவு 09.29 வரை சூலம். பின்னர் கண்டம்.
இன்று அதிகாலை 04.45 வரை வணிசை. பின்னர் மாலை 05.36 வரை பத்தரை. பின்பு பவம்.
இன்று முழுவதும் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், அர்ஜுன்லால் சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பணத்தை திரும்ப செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடகூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டுடியோ கிரீன் தரப்பில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கான டிடி-யை, பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்தியது.
இதையடுத்து மீதி தொகையையும் செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், மூன்று கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பித் தராததால் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தனேஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படத்துக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
அழகான நடிகையான பூனம் பாஜ்வா, 'சேவல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு 'துரோகி', 'தெனாவட்டு', 'ஜெயிக்கிற குதிர' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், பின்னர் தமிழில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், நீண்ட காலமாக ஹீரோயின் வேடங்களிலேயே நடிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் மலையாள சினிமாவை அதிகம் கவனம் செலுத்தி வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, வேறுவழியில்லாமல் 'ஆம்பள' திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததன் மூலம் தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் 'ரோமியோ ஜூலியட்', 'அரண்மனை 2', 'முத்தின கத்திரிக்கா', 'குப்பத்து ராஜா' போன்ற படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தார். தற்போது தமிழிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சினிமாவைத் தாண்டி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் காலையில் சொம்பல் முறிக்கும் ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அடிக்கிற குளிருக்கு அட்டகாசமான போஸ், சுண்டி இழுக்கும் அழகு என கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 12.1.2026.
இன்று மாலை 03.35 வரை நவமி. பின்னர் தசமி
இன்று இரவு 11.49 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
இன்று இரவு 09.04 வரை திருதி. பின்னர் சூலம்.
இன்று அதிகாலை 01.08 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.42 வரை கௌலவம். பின்பு வணிசை.
இன்று காலை 6.32 வரை சித்த யோகம். பின்னர் இரவு 11.49 வரை அமிர்த யோகம். பிறகு மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சார்...என்னோட bank cheque எப்போ clear ஆகும்...?
3 நாள் ஆவும்
ஏங்க...உங்க பேங்குக்கு எதிர்த்தாப்பல தான் என் பேங்க் இருக்கு...இதுக்கு 3 நாள் ஆகுமா...?
எல்லா பேங்க்குக்கும் சில ரூல்ஸ் இருக்கு ..உங்க பேங்க் பக்கத்து ரூம்ல இருந்தாலும் கூட சில ரூல்ஸ் பாலோ பண்ணனும்...
அப்படி என்னங்க பெரிய ரூல்ஸ்?
இப்ப நீங்க வெளியே போறீங்க...வழில ஒரு சுடுகாடு வருது...அதுக்கு பக்கத்துல நீங்க போகும்போது திடீர்னு உயிர் போயிருச்சுன்னா, சுடுகாடு பக்கத்திலேயே இருக்குங்றதுக்காக அப்படியே தூக்கிட்டு போய் எரிக்க முடியுமா? அதுக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்குல்ல.அதே மாதிரி தான் இதுவும்...
எதே...























