காலை செய்ய வேண்டியவை
✔ 1. ஸ்நானம்
அதிகாலையில் எழுந்து புனித ஸ்நானம் செய்துகொள்ளவும்.
✔ 2. விரத சங்கல்பம்
தீபம் ஏற்றி, முருகன் படத்தை முன்னிறுத்தி இப்படி மனதில் எண்ணிக்கொள்ளவும்:
“இன்றைய சஷ்டி விரதத்தை முருகப் பெருமானின் அருளுக்காக மேற்கொள்கிறேன்.”
✔ 3. உபவாசம்
இந்த மூன்று முறைகளில் ஒன்று :
முழு உபவாசம் (தண்ணீர் மட்டும்)
பலகாரம் (பழம், பால்)
ஏகபுக்தி (ஒரு நேரம் மட்டும் சைவ உணவு)
காலை – மாலை மந்திரங்கள் & பாராயணங்கள்
காலை ஜெபங்கள்
ஓம் சரவணபவா நம – 108 முறை
கந்த சஷ்டி கவசம்
சுப்பிரமண்ய புஜங்கம்
“வேல்முருகா ஹரஹரா” – தொடர்ந்து ஜெபிக்கலாம்
மாலை ஜெபங்கள்
தீபம் ஏற்றிய பின்
“சன்னதிக்கு போகும் பாதை” பாடல்
“சுரசம்ஹார பாடல்கள்”
“வள்ளி கல்யாணம்” பாடல்கள்
பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சஷ்டி நைவேத்யம்
மாலை வழிபாடு முடிந்த பின் :
வெல்ல சுண்டல், பனங்கருப்புப் பொங்கல், பழ நைவேத்யம் இதில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.
கார்த்திகை மாத தேய்பிறை (கிருஷ்ண பக்ஷ) அஷ்டமி திதி காலபைரவர் வழிபாட்டிற்கு மிகவும் சிறந்ததும் சக்தி நிறைந்ததும் ஆகும்.
இந்த நாளில் பைரவரின் கிருபை விரைவாகக் கிடைக்கும் என்றும், தடைநீக்கம், பாதுகாப்பு, அச்சமின்மை, கர்ம நாசனம் ஆகியவற்றிற்கான மிக வேகமான பலன் கிடைக்கும் என்றும் ஆகமங்கள், ஸ்தல புராணங்கள் கூறுகின்றன.
1. காலபைரவர் – யார் ?
காலத்தை, திசைகளை, பாதையை கட்டுப்படுத்தும் பரமசிவனின் உச்ச ரூபமே காலபைரவர்.
இவர்:
திசை காவலர்
பாவநாசகர்
ரக்ஷண மூர்த்தி
வெற்றி நாயகர் (வழித் தடைகளை அகற்றுபவர்)
யமனின் அதிகாரத்தையே கட்டுப்படுத்தும் தெய்வம்
அதனால் அஷ்டமி, குறிப்பாக தேய்பிறை அஷ்டமி, பைரவர் அருளைப் பெறும் மிகச் சரியான திதி.
2. ஏன் அஷ்டமி நாள் பைரவர் வழிபாட்டிற்கு மிகச் சிறப்பு ?
அஷ்டமி திதி சக்தி, ரக்ஷை, தடைநாசனம் போன்ற ஆற்றல்கள் அதிகரிக்கும் நாள்.
தேய்பிறை நிலையின் போது மனம் இலகுவாகி தியானம், மந்திரப் பீஜம் எளிதில் செரிகிறது.
இந்த நாளில் பைரவரின் “கால ஸ்தம்பன சக்தி” மிக மேம்பட்டு இருக்கும்.
அதனால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு :
✔ தீய சக்திகளை அகற்றும்
✔ வழக்குகள், எதிரிகள், போட்டியாளர்கள் தொல்லைகளை குறைக்கும்.
✔ திசை தோஷங்களை நீக்கும்
✔ வியாபாரம் & வேலை தடைகளை அகற்றும்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
ரிஷபம்
பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். கடன் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அதிரடி மாற்றங்களால் லாபத்தை மேம்படுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்த மந்தத் தன்மை விலகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
கடன்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். தள்ளி போன காரியங்கள் சில முடியும். குடும்பத்தில் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். வருமான வாய்ப்புகள் மேம்படும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களிள் கவனம் வேண்டும். உறவுகள் வழியில் அலைச்சல் உண்டாகும். புதிய முயற்சிகள் தாமதமாகி நிறைவேறும். தொழில் சார்ந்த பயணங்கள் உண்டாகும். சிந்தனைபோக்கில் கவனம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். துணை வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றம் ஏற்படும். மனம் தெளிவு பெரும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். துணைவர் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
மனதில் நினைத்த காரியம் கைக்கூடிவரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் கௌரவம் உயரும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். சமூக பணிகளில் மரியாதையும் உயரும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழிலில் மாற்றம் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்புகள் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பெருமை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகரம்
சந்தேக உணர்வுகளால் குழப்பங்கள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். அரசு காரியங்களில் நிதானம் வேண்டும். எதையும் இரு முறை சிந்தித்து செயல்படுத்தவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
குழந்தைகள் உங்கள் குணம் அறிந்து செயல்படுவார்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தன வருவாய் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மேஷம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
ரிஷபம்
பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். கடன் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அதிரடி மாற்றங்களால் லாபத்தை மேம்படுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்த மந்தத் தன்மை விலகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
கடன்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். தள்ளி போன காரியங்கள் சில முடியும். குடும்பத்தில் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். வருமான வாய்ப்புகள் மேம்படும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களிள் கவனம் வேண்டும். உறவுகள் வழியில் அலைச்சல் உண்டாகும். புதிய முயற்சிகள் தாமதமாகி நிறைவேறும். தொழில் சார்ந்த பயணங்கள் உண்டாகும். சிந்தனைபோக்கில் கவனம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். துணை வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றம் ஏற்படும். மனம் தெளிவு பெரும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். துணைவர் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம்
மனதில் நினைத்த காரியம் கைக்கூடிவரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் கௌரவம் உயரும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். சமூக பணிகளில் மரியாதையும் உயரும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழிலில் மாற்றம் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்புகள் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பெருமை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகரம்
சந்தேக உணர்வுகளால் குழப்பங்கள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். அரசு காரியங்களில் நிதானம் வேண்டும். எதையும் இரு முறை சிந்தித்து செயல்படுத்தவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
குழந்தைகள் உங்கள் குணம் அறிந்து செயல்படுவார்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தன வருவாய் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 24 ஆம் தேதி புதன்கிழமை 10.12.2025,
இன்று இரவு 07.58 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று காலை 08.36 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
இன்று மாலை 06.30 வரை வைதிருதி. பிறகு விஷ் கம்பம்.
இன்று காலை 08.20 வரை கரசை. பின்னர் இரவு 07.58 வரை வணிசை. பின்பு பத்திரை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
மேஷம்
செயல்பாடுகளில் இருந்த தடைகள் குறையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். செலவிற்கேற்ற வரவுகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மிதுனம்
தடைப்பட்ட சில காரியங்கள் முடியும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். புதிய நட்புகள் மலரும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். செயல்களில் உள்ள மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். மற்றவர்கள் பொருட்கள் மீது ஈர்ப்புகள் ஏற்படும். விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
சிம்மம்
நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். கடன் பிரச்சனைகள் குறையும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் இடத்தில் சுமுகமாக பழகவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பயனற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார அபிவிருத்திகன வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தியை அளிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்புகள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். ஆராய்ச்சி பணிகளில் மேன்மை ஏற்படும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
மனதளவில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். பழைய உறவுகள் பற்றிய எண்ணங்கள் உருவாகும். புதிய முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். நேர்மறை எண்ணங்களோடு எதிலும் செயலாற்றவும். வியாபாரத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்து தடைகள் விலகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கும்பம்
எதிர்பார்த்த சில வரவுகள் உண்டாகும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்த சிக்கல்கள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மீனம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 9.12.2025.
இன்று இரவு 08.41 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று காலை 08.55 வரை பூசம் . பின்னர் ஆயில்யம்.
இன்று இரவு 08.23 வரை ஐந்திரம். பிறகு வைதிருதி.
இன்று காலை 09.16 வரை கௌலவம். பின்னர் இரவு 08.41 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- ஆறுமுகன் - கேட்டதை கொடுக்கும்.
- முருகன் - நினைத்ததை அளிக்கும்.
- குகன் - ஞானத்தை நல்கும்.
- குருபரன் - குருவைச் சேர்க்கும்.
- குமரன் - இளமையைக் கொடுக்கும்.
- சண்மகனே - சித்திகள் அளிக்கும்.
- சக்தி வேலன் - பெற்றோரை பேணிடச் செய்யும்.
- சரவணபவன் -தஞ்சம் அளிக்கும்.
- காங்கேயன் - பிறப்பை ஒழிக்கும்.
அவர்கள் வகுப்பிற்கு புதிதாக வந்திருந்தாள் மலர்விழி. அழகு என்றால் அப்படியொரு அழகு. அதனால் அவளுடன் நட்பு கொள்ள வகுப்பு மாணவிகள் அனைவரும் போட்டா போட்டி போட்டனர்.
மலர்விழி அழகிதானே தவிர மற்றபடி அவள் முகத்தில் சிறு புன்னகையும் இருக்காது. யாருடனும் பேச மாட்டாள். யாராவது நட்பு கொள்ள அவள் அருகில் வந்தால் வறட்டுப் புன்னகையுடன் பார்ப்பாள். அவ்வளவுதான். ஒரு சிறு பேச்சும் பேசமாட்டாள்.
படிப்பில் ஓரளவுக்கு சிறந்த மாணவியாகவே இருந்தாள்.
அவள் நிலையை ஆசிரியையும் அறிந்தார்.
"மலர்விழி, நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? நல்லாப் படிக்கவும் செய்யறே, ஆனா உன் முகத்தில் ஒரு சிறு புன்னகை இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா? அழகுக்கு அழகு சேர்த்தது போல் இருக்கும்" என்றார்.
அவருக்கும் ஒரு சிறு வறட்டுப் புன்னகையையே பதிலாக தந்தாள் மலர்விழி.
அதோடு விட்டுவிட்டார் ஆசிரியை.
“அவள் இயல்பே அப்படித்தான் போலும். நம்மால் என்ன செய்ய முடியும்?” என்று நினைத்துக் கொண்டார் ஆசிரியை.
மாணவிகளும் அவளிடம் நெருக்கம் காட்ட முயலவில்லை.
இந்த நிலையில்தான் பள்ளியின் சார்பில் ஒரு செய்முறை கண்காட்சிக்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இருபுறமும் மாணவிகள் இரண்டு இரண்டு பேராக பிரிந்து ஜோடி போட்டு வரிசையாக சென்றனர். மலர்விழி ஜோடியாக கோமதி கிடைத்திருந்தாள்.
வழியில் கோமதியும் மலர்விழியுடன் பேச பல வழிகளிலும் முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை.
அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த ராமலிங்கா மில் பஞ்சாலைக்குச் சென்றனர். அந்த ஆலை முழுவதும் சுற்றி வந்தனர்.
பஞ்சு எப்படி நூலாகிறது? பின்னர் எப்படி ஆடையாகிறது? என்பதை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தனர்.
இடையில் சாப்பிடச் சென்றனர். அந்த ஆலையின் சார்பில் மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
மாணவிகள் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டனர். கோமதி முதல் ஆளாக சாப்பிட்டு எழுந்தாள். இலையைக் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டாள்.
மலர்விழி மெதுவாகச் சாப்பிட்டாள். எல்லா மாணவிகளும் எழுந்து விட்டனர். மலர்விழி மட்டும் உட்கார்ந்திருந்தாள்.
எழுந்த மாணவிகள் மீண்டும் ஆலையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.
கோமதி மட்டும் மலர்விழி அருகிலேயே நின்றாள். அவளும் சாப்பிட்டு முடித்தாள்.
'இலையை எங்கே எடுத்துச் செல்வது?' என்று தெரியாமல் கையில் பிடித்தபடி விழித்தாள்.
கோமதி அவள் கையிலிருந்த இலையை வாங்கினாள்.
"கொண்டா நான் போய் போட்டுட்டு வர்றேன்" என்றவள் விறுவிறுவென்று குப்பைத் தொட்டியை அடைந்து அதில் போட்டு விட்டு வந்தாள்.
"வா போகலாம்" என்றாள்.
இருவரும் ஆலைக்குள் சென்றனர். அந்த நாளை ஆலையிலேயே கழித்தனர். மாணவிகள் அங்கிருந்தே வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்
ஆசிரியையிடம் விடை பெற்று அவர்களும் கிளம்பிச் சென்றனர்.
மறுநாள்.
பள்ளிக்கு வந்த மலர்விழி கோமதியைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள்.
அதைப் பார்த்த வகுப்பு மாணவிகள் அனைவரும் அதிசயப் பட்டனர்.
கோமதி அதைப் பயன்படுத்திக் கொண்டாள். மலர்விழியிடம் பேசத் தொடங்கினாள். அவளிடமிருந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பதிலாக கிடைத்தன.
இன்னும் சில மாணவிகளும் மலர்விழியிடம் நெருங்கினர். ஆனால் எல்லாரையும் விட கோமதியிடம்தான் சற்றே அதிகமாக ஒட்டிக் கொண்டாள் மலர்விழி.
சில நாட்களிலேயே மலர்விழியின் நிலையை புரிந்து கொண்டாள் கோமதி.
ஒருநாள் தன் வீட்டிற்கு மலர்விழியை அழைத்துச் சென்றாள் கோமதி.
கோமதி வீட்டில் எல்லாருமே இயல்பிலேயே கலகலப்பாக இருந்தனர். சிரிக்கச் சிரிக்கப் பேசினர். அப்பாவும், அம்மாவும் தங்கள் பிள்ளைகள் மேல் பாசத்தை வாரிவாரி வழங்கினர். மலர்விழியிடமும் அதே பாசத்தைப் பொழிந்தனர்.
அவர்கள் பாசத்தில் நெக்குருகிப் போனாள் மலர்விழி.
அன்றுதான் தன் கஷ்டத்தை முதல் முறையாக உடைத்தாள் மலர்விழி.
"நானும் உங்க வீட்டில் பிறந்திருக்கலாம்” என்றாள்.
அதன் பின்னர் தங்கள் வீட்டு நிலையையும் கூறினாள்.
மலர்விழி அவர்கள் வீட்டில் ஒரே பிள்ளை. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தினமும் சண்டைதான், அடிதடிதான். அவர்கள் சண்டையில் மலர்விழி பற்றியே மறந்து போனார்கள்.
அன்பு, பாசம், அரவணைப்பு என்று ஒரு சிறிதும் மலர்விழிக்கு கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே சோகச் சித்திரமாக அவள் வலம் வந்தாள்.
மலர்விழியின் வீட்டிற்கு ஒருநாள் சென்றாள் கோமதி. அவள் அப்பா, அம்மா இருவரும் இரு துருவங்களாக இருந்தனர்.
அவர்கள் இருவரிடமும் தனித்தனியாகப் பேசினாள் கோமதி.
"உங்கள் சண்டையால் மலர்விழி மேல நீங்க அக்கறை காட்டறது இல்லை. அது அவளோட மன நிலையை மிகவும் பாதிச்சிருக்கு. அதனால அவளோட எதிர்காலம் பாழாயிடும். நீங்க சண்டைக்காரர்களாகவே இருங்கள். ஆனால் மலர்விழி கிட்ட மட்டும் அன்பா இருங்க" என்றாள் கோமதி.
அதன் பின்னர் மலர்விழி மேல் பெற்றோர் அக்கறை காட்டினர். அவளுக்காக ஒன்று சேர்ந்தது போல் நடித்தவர்கள் நிஜமாகவே ராசியாகி விட்டனர்.
வருகிறாள். மற்ற மலர்விழி இப்போதெல்லாம் புன்னகை நிறைந்த முகத்துடன் பள்ளிக்கு மாணவிகளிடமும் நன்றாக கலகலவென்று பழகுகிறாள்.
அவள் புன்னகை முகத்தைப் பார்த்த ஆசிரியை மலர் விழியிடம்,
"ஆஹா இந்தப் புன்னகை அப்படியே உன்னை தேவதை போல காட்டுது” என்றார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பயணங்கள் கைக்கூடி வரும். எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் புரிதல்கள் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ரிஷபம்
பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியத்தை முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். பல நாட்கள் தடைப்பட்ட வருமானம் கிடைக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கடகம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பகள் கிடைக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் சிறுசிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு காரியங்களில் விழிப்புணர்வு வேண்டும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
நினைத்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாகனத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது குறைத்துக் கொள்ளவும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கன்னி
திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாடுகள் வரும். பிற இன மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மகிழ்ச்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரம் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
மனதளவில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வம் இன்மை உண்டாகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். வரவேண்டிய சில வரவுகள் தாமதமாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
மகரம்
பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களின் வருகை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மையை ஏற்படும். உத்தியோகத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நன்மை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அரசால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் தெளிவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும் எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள் வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும் உத்தியோகத்தில் பொறுமை வேண்டும் புதுவிதமான கனவுகள் பிறக்கும் கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை 8.12.2025
இன்று இரவு 9.51 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று காலை 09.39 வரை புனர்பூசம் . பின்னர் பூசம்.
இன்று அதிகாலை 01.08 வரை சுப்பிரம். பின்னர் இரவு 10.37 வரை பிராமியம். பிறகு ஐந்திரம்.
இன்று காலை 10.37 வரை பவம். பின்னர் இரவு 09.51 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று காலை 6.17 வரை சித்தயோகம். பின்னர் காலை 9.39 வரை அமிர்தயோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
மழை,
குளிர்,
வெயில் கூடலாம்.
குறையலாம்.
தேவைக்குக்கிடைக்காமல் போகலாம்.
காலநிலைகளில் மாற்றம் வரலாம். ஆனால் , பாதைகள் நீடித்த ஒன்று. பயணங்கள் முடிவதில்லை.
வாழ்க வளமுடன்
பிரபல ஹாலிவுட் நடிகர் கேரி ஹிரோயுகி தகவா (75) காலமானார். ஜப்பானில் பிறந்த கேரி ஹிரோயுகி தகவா, பல ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். தான் நடித்த ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். ‘த லாஸ்ட் எம்பரர்’, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘லைசன்ஸ் டு கில்’, ‘அமெரிக்கன் மி’, ‘ரைசிங் சன்’, ‘மார்டல் கொம்பட்’, ‘பேர்ல் ஹார்பர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசித்து வந்த அவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி காலமானார். இதை அவருடைய மானேஜர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக தெரிவித்தார்.
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. இதன் கதையினை பொன்.பார்த்திபன் எழுதியிருக்கிறார். லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, “கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத் தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் -ஸ்ரீதேவி , ரஜினி - ஸ்ரீபிரியா போல இந்த லெனின் - அஸ்மின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும்.
ஒரு காலத்தில் கதை , கதாசிரியருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார்கள். ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், டி.ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் என்று முழுமையாக அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
பிறகு கதை என்ன என்பதை விட, யார் கதாநாயகன் என்ற காலம் வந்தது. கதாநாயகர்கள் கதையை முடிவு செய்யும்படி ஆனது. இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. கதாநாயகன் தான் முடிவு செய்வார். ஆனால் இந்தத் தயாரிப்பாளர் கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகிறேன். அது படத்தின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இது முறையாக எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது.
தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துவிட்டால் நம்பி ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அது சித்திரவதையாக மாறிவிடும். இயக்குநர் சுதந்திரமாக இருந்தால் தான் அந்தப் படைப்பு சரியாக வரும்.
இந்த படத்தில் பாடியுள்ள சின்மயி ஏன் இங்கே வரவில்லை? இயக்குநர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சின்மயி ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் அவர் நடந்து கொண்டிருக்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார், வருத்தம் தெரிவிக்கிறார். ஒரு படத்தில் பாடல் பாடும் போது என்ன சூழல்? என்ன வரிகள் என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாட வேண்டும். எல்லாமும் பாடி முடித்த பிறகு வியாபாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது.
ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதாகும். சின்மயி இப்படிச் சொல்வது அந்த இயக்குநருக்கு மட்டும் அவமானம் அல்ல. ஒவ்வொரு இயக்குநருக்கும் அவமானம். அதற்காக சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்று ஒரு படம் எடுப்பது என்றால் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால் சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள். எஸ் . ஜானகி, பி. சுசீலா போன்ற பாடகிகள் எவ்வளவு பெரிய பாடகிகள். இந்தத் திரையுலகில் அவர்கள் எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள். அப்போதெல்லாம் இப்படியா நடந்தது?
குறிப்பாக இயக்குநரை, தயாரிப்பாளரை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்வது, தொந்தரவு தருவது தவறானதாகும்” என தெரிவித்தார்.




















