கனடாவின் ஒண்lடாரியோ மாகாணத்தில் 30000 டொலர் பெறுமதியான டிசைனர் சன்கிளாஸ்கள் திருடிய பெண் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஒண்டாரியோவின் பிகரிங் நகரின் ஒரு மாலில் இருந்து 30,000டொலர் மதிப்புள்ள டிசைனர் சன்கிளாஸ்கள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில், டொரண்டோவைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிகரிங் சிட்டி சென்டர் மாலில் உள்ள லென்ஸ் கிராப்ட்ஸ் விற்பனையகத்திற்கு மூன்று பெண்கள் நுழைந்து, 60-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த டிசைனர் கண்ணாடிகளை கொள்ளையிட்டுள்ளனர். காவல்துறையினர் பின்னர் மூன்று சந்தேகநபர்களில் இருவரை அடையாளம் கண்டுள்ளனர்.
அதன்படி, அக்டோபர் 26 அன்று டொரண்டோவில் டுன்டாஸ் மேற்கு வீதி மற்றும் ஸ்கார்லெட் வீதி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, 25,000 டொலருக்கும் மேற்பட்ட திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 33 வயதான கரோலின் வெனிசா வோல்கர் என்பரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏனயை சந்தேக நபர்கள் தாங்களாகவே சரணடைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேன் + மிளகு தூள்
ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து பின்னர் அதில் மிளகை சேர்த்து வறுத்து நீரை ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் அதை ஆற வைத்து அன்றைய நாளில் தேவைப்படும் போது குடிக்கலாம். சுவை ஒரு மாதிரிதான் இருக்கும்,
தேவைப்பட்டால் சீனியோ அல்லது நாட்டு சர்க்கரையோ போட்டுக் கொள்ளலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . இருமலும் தொண்டை கரகரப்பும் நீங்கும்.
சளியால் சிலருக்கு சாப்பிட பிடிக்காது, ஏற்கெனவே சாப்பிட்டதும் நெஞ்சில் நிற்பது போல் இருக்கும். அஜீரண கோளாறால் அவதிப்பட்டால் மிளகுத் தூளை தேனுடன் சாப்பிடலாம். இதனால் வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து ரிலீஃப் கிடைக்கும்.
பாலில் கூட மிளகுத் தூளை கலந்து பருகலாம். இது கொலஸ்ட்ராலை கூட கட்டுப்படுத்தும் என்கிறார்கள். இதனால் இதய நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். மிளகை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சூடு ஆறியதும் தேன் கலந்து சாப்பிடலாம்.
தேனும் மிளகும் சூட்டை கிளப்பக் கூடியவை. எனவே இதை பார்த்து அளவோடு பயன்படுத்துவது நல்லது. ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாற வேண்டும் என்பதற்காக கூறப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக உண்ணவே கூடாது.
இது உடலை சுத்திகரிக்கிறது. கல்லீரலில் படிந்திருக்கும் படிவங்களை வெளியேற்றுகிறது.
மிளகு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மிளகை தண்ணீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி அதில் தேன் கலந்து குடித்தால் எடை குறையும்.
எனவே சிறிய சிறிய பிரச்சினைகளுக்கு மருந்து மாத்திரை, மருத்துவமனை என செல்லாமல் வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துங்கள்.
இது போன்ற வைத்தியக் குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன்னர் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்படி செயல்படவும்.
சோளிங்கர் கோவிலில் உள்ள நரசிம்மர் கார்த்திகை மாதம் கண் திறப்பதாக ஐதீகம் உள்ளது. அதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.
மகிமை வாய்ந்த நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர்.
ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது. அதனால்தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, யோக நரசிம்மரையும் யோக அனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். இந்த கடிகாசல மலையை தரிசித்தாலேயே பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்றவை அண்டாது.
ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தபலவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். அதிலும் கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இந்தியா - தமிழ்நாட்டில் - சென்னைக்கு அருகே அரக்கோணத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் சோளிங்கர் அமைந்துள்ளது. சோளிங்கர் பேருந்து நிலையத்திலிருந்து கொண்டபாளையம், 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதளவில் இருந்த கவலைகள் குறையும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
ரிஷபம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
நண்பர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். உயர் பொறுப்புக்கள் மூலம் மதிப்புகள் உயரும். சில அனுபவங்கள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். நம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கடகம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். உடன் இருப்பவர்கள் இடத்தில் அளவுடன் இருக்கவும். எதிலும் பெறுமையுடன் செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களை தவிர்க்கவும். கால்நடை பணிகளில் விவேகம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
சிம்மம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். சுப காரியங்கள் கைகூடும். உயர் அதிகாரிகள் இடத்தில் நன்மதிப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் வரவுகள் உயரும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கன்னி
எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்புகள் உயரும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மனதளவில் இருந்த சோர்வுகள் விலகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
துலாம்
புதிய முயற்சிகளில் எண்ணியவை ஈடேறும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேலையாட்கள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அமைதி வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். கல்வியில் இருந்த மந்த நிலை விலகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
நினைத்த காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
தனுசு
சில பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு வழியில் ஆதரவுகள் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்க திட்டமிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் இருந்த மந்தத்தன்மை குறையும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகரம்
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுகளுக்கு மதிப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கும்பம்
எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சக ஊழியர்கள் இடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். வாகன பயணங்களில் மிதவேகம் நன்று. மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். விவேகமான செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை உருவாக்கும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.11.2025,
திதி : இன்று இரவு 07.16 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று இரவு 10.45 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று காலை 07.48 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.
இன்று காலை 07.40 வரை பத்தரை. பின்னர் இரவு 07.16 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று காலை 06.14 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒரு ஊரில் ஒருவன் இருந்தான்.
நிறைய பணம் சேர்த்தான்.
அவனுக்கு சம்பாதிக்க தெரியுமே தவிர செலவு பண்ணத் தெரியாது.
மகா கஞ்சன்.
காசை கையில் எடுக்கவே மாட்டான்.
எடுத்தால் செலவு செய்ய வேண்டி இருக்குமே!
அதனால் இப்படியே அவன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்.
வயதாகிவிட்டது.
அவனுடைய மனைவி ஒரு நாள் இவ்வளவு நாளும் நீங்கள் என்னை எங்கேயுமே அழைத்துக்கொண்டு போனதில்லை.
இப்போதாவது அழைத்துக் கொண்டு போக கூடாதா என்றாள்.
எங்கே போக வேண்டும் சொல்லு என்றான்.
காசிக்கு போக வேண்டும் கங்கையில் குளிக்க வேண்டும் என்றாள் அவள்.
அதற்கு ஏன் இவ்வளவு தூரம் செலவு செய்ய வேண்டும்.
நம்ம ஊரு ஆற்றிலேயே குளிக்கலாம்.
இதுவும் புண்ணிய நதி தான்.
இங்கே குளித்தால் அங்கே குளித்த பலன் கிடைத்துவிடும் என்றான்.
சரி என்று ரெண்டு பேரும் ஆற்றங்கரைக்கு போனார்கள்.
அன்றைக்கு ஏதோ விசேஷம் நிறைய பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
கரையிலே சில புரோகிதர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.
குளிப்பதற்கு முன் அவர்களிடம் உட்கார்ந்து ஏதோ மந்திரம் சொல்லுவார்கள்.
கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
இதனால் இவன் ஆற்றங்கரையைவிட்டு கொஞ்ச தூரம் போனான்.
ஊரைவிட்டுத் தள்ளி வந்து விட்டான்.
அங்கே யாருமில்லை.
அப்பாடா என்று சந்தோஷப்பட்டான்.
குளிக்கலாம் என்று புறப்பட்டான்.
இந்த நேரம் கடவுள் பார்த்தார்.
இந்தக் கஞ்சனுக்கு ஏதாவது புத்தி புகட்டவேண்டும் என்று நினைத்தார்.
உடனே ஒரு புரோகிதர் மாதிரி உருவத்தை மாற்றிக் கொண்டு அந்த ஆள் முன்னால் வந்து நின்றார்.
இவனுக்கு அதிர்ச்சி இங்கே யாருமே இருக்க மாட்டார்கள் என்று நினைத்தால் இங்கேயும் ஒரு ஆள் வந்து விட்டான்.
என்ன செய்வது என்று யோசித்தான்.
புரோகிதர் உருவத்தில் இருந்த கடவுள் சொன்னார் இதோ பார் இன்றைக்கு விஷேட நாள் நீராடுவதற்கு முன்னாடி சங்கல்பம் பண்ண வேண்டும் என்றார்.
என்னிடம் பணம் எதுவும் இல்லை என்றான் அவன்.
பரவாயில்லை பிறகு கொடு வாங்கிக் கொள்கிறேன்.
ஆனால் எவ்வளவு கொடுப்பாய் என்பதை இப்போதே சொல்லிவிடு என்றார்.
இவன் அதிகம் யோசித்து பத்து பைசா தருகிறேன் என்றான்.
சரி என்று ஒத்துகொண்டு எல்லா கிரியைகளையும் செய்தார்.
அதன்பிறகு கணவனும் மனைவியும் ஆற்றில் குளித்தார்கள்.
கடவுள் போய்விட்டார்.
கொஞ்ச நாள் கழித்து அவன் வீட்டுக்கு கடனை வசூல் பண்ணுவதற்கு வந்தார்.
வாசலில் நின்று கொண்டிருந்த அவன் மனைவி விஷயத்தைச் சொன்னாள்.
அவன் யோசனை செய்தான்.
இப்போது வெளியில் போனால் அவனுக்கு பத்து காசு கொடுக்க வேண்டியிருக்கும்.
அதனால் எனக்கு காய்ச்சல் இன்னொரு சந்தர்ப்பத்தில் வந்து வாங்கிக் கொள்ளச் சொல் என்றான்.
அந்த அம்மா போய் சொன்னாள்.
இல்லை நான் அவரை உடனே பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தார் இவர்.
அவள் மறுபடியும் உள்ளே ஓடி விஷயத்தைச் சொன்னாள்.
இதோ பாரு எனக்கு காய்ச்சல் வந்து நான் இறந்து விட்டதாகச் சொல் என்றான் அவன்.
புரோகிதர் அப்படி என்றால் ஒரு வழியாக இறுதிச் சடங்குகளை முடித்து விட்டுப் போய் விடுகிறேன் என்றார்.
உள்ளே இருந்தவன் யோசித்தான். அந்த ஆள் என்னை விடமாட்டான். போல் இருக்கின்றது.
அதனால் ஒரு சவப்பெட்டியில் என்னை வைத்து தூக்கிக்கொண்டு மயானத்துக்கு போங்கள் பார்க்கலாம் என்றான்.
புரோகிதரும் விடுவதாக இல்லை. கூடவே நடந்து போனார் அங்கே இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு தீ வைக்கும் நேரம் இவன் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தான்.
புரோகிதர் உருவத்தில் இருந்த கடவுள் சிரித்தார்.தன் சுய உருவத்தை காட்டினார்.
அதன் பிறகு அவனைக் கூப்பிட்டார். இதோபார் ஏன் இப்படி ஓடுகிறாய் ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேள் தருகிறேன் என்றார்.
அவன் யோசனை செய்தான்.
யோசனை செய்துவிட்டு ஒரே ஒரு வரம் தான் உங்களிடம் கேட்க வேண்டும் என்றான்.
என்ன வரம் வேண்டும் கேள் என்றார் கடவுள்.
அந்த பத்து பைசா தட்சணையை தள்ளுபடி செய்து விடுங்கள் அது போதும் என்றான்.
கடவுளும் சரி என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
இது சுவாமி சிவானந்தர் சொன்ன கதை. பல செல்வந்தர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். தாங்களும் அனுபவிக்க மாட்டார்கள். அடுத்தவர்களுக்கும் கொடுக்க மாட்டார்கள். இது மாதிரியான கஞ்சர்களுக்கு இவ்வுலகமும் இல்லை. எவ்வுலகமும் இல்லை என்கிறார் சுவாமி சிவானந்தர்.
கனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிறி கற்பக விநாயகர் ஆலயத்தில் முகமூடியணிந்த நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அண்மை காலமாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற வேளையில் உள்ளே புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் உண்டியலை கொள்ளையிட்டு தூக்கிக்கொண்டு செல்லும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இவ்வாறு கொள்ளையர்கள் கொள்ளையிடும் சந்தர்ப்பத்தில் பக்தர்களும் ஆலய மதகுமாரும் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது.
திருமாகாளம் மாகாளேசுவரர் திருக்கோயில்!!
ஒருவரது உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், சிரமமில்லாமல் பிரியவும், ஆன்மா அமைதி அடையவும் வழிபட வேண்டிய திருத்தலம் ஒன்றுள்ளது.
மனிதராகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் நீண்ட காலம் வாழ வேண்டுமென்ற ஆசை உண்டு. மரணம் என்பதை வேண்டுமென்று வரவேற்பவர் யாரும் உண்டா! நாம் எல்லோருமே வேண்டாம் என்று பதறியடித்து ஓடுபவர்கள் தான். மரண பயம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது உயிரை பறித்துக் கொண்டு, மரணத்தைத் தருபவரை எமன் என்று இந்து புராணங்கள் சொல்கின்றன. மரண பயத்தை நீக்கி மனிதர்களுக்கு வாழ்வு தருபவர், முக்கண் பரமனான சிவபெருமான் தான்.
ஆனால் மனிதர்கள் தொண்ணூறு, நூறு வயதுகளைத் தொடும் போது, அவர்களால் சாதாரணமாக வாழ முடிவதில்லை. உடன் இருப்பவர் களுக்கு சுமையாக இருக்கிறார்கள். அதிலும் சிலர் மரணப்படுக்கையில் கிடக்கும் போது, உயிர் இதோ.. அதோ.. என்று பல மாதங்களாக இழுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களின் உயிர் உடனடியாகப் பிரிந்து நற்கதி அடைய வேண்டும் என்று, உடனிருப்பவர்கள் வாய்விட்டுச் சொல்லுவதை நாம் பல இடங்களில் கேட்டிருக்கலாம்.
ஒருவரது உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், அவரது இன்னுயிர் சிரமமில்லாமல் பிரியவும், ஆன்மா அமைதியடையவும் வழிபட வேண்டிய திருத்தலம் ஒன்றுள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
திருமாகாளம் :
திருஅம்பர் மாகாளம்
இத்தலம் மக்கள் வழக்கில் "கோயில் திருமாளம்" என்று வழங்குகின்றது . அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ள தலம்.
அம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற பாவம் நீங்க மாகாளி பூசித்தது; ஆதலின் இஃது "மாகாளம்" எனப்பட்டது.
சோமாசி மாற நாயனார் யாகம் செய்த பதி.
அமைவிடம்: அ/மி. மாகாளேஸ்வரர் திருக்கோயில், கோயில் திருமாளம்,
பூந்தோட்டம் (அஞ்சல்) - 609 503. நன்னிலம் (வட்டம்), திருவாரூர் (மாவட்டம்). தொடர்பு : 09486601401 மாநிலம் : தமிழ் நாடு பேரளம் - திருவாரூர் இரயில் பாதையில் பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 4-கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு கிழக்கே காரைக்கால் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘திருமாகாளம்’ என்ற அழகிய கிராமம். காரைக்காலுக்கு மிக அருகில் இருக்கிறது ‘கோவில் திருமாளம்’ என்று அழைக்கப்படும் ‘திருமாகாளம்’ திருத்தலம்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரது பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங் களில் இதுவும் ஒன்றாகும்.இந்தத் திருக்கோவிலில் உள்ள மோட்ச லிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேண்டிக் கொண்டால், கடைசி காலங்களில் படுத்தப் படுக்கையில் கிடந்தபடி மரண அவஸ்தையில் வாழ்பவர்கள், நிம்மதியாக கண்மூடுவதுடன் பிறப்பற்று சிவலோகம் செல்வார்கள் என நம்பப்படுகிறது
நாடாளுமன்ற வாளகத்திலும் இன்றையதினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நாடாளமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கும் சாணக்கியன், சண்முகம் குகதாசன் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.
நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.
“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.
பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.
அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”
யாரு கிட்ட? நீதிபதி டா! ஏமாறுவாரா?
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.
அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.
பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார்.
அவர் பணக்காரனை வந்து பார்த்தார்.
பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.
அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.
அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.
தலைவலி குணமாகி விட்டது.
சன்னியாசி கூறியது சரிதான்.
உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.
வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது.
ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே!
நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான்.
அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.
அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.
சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார்.
வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.
சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது.
காரணம் கேட்டார்.
அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.
சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.
பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி.
வணங்கி அவரை உபசரித்தான்.
“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.
“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு.
“நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி.
“பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.
“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.
ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும்.
உன் பணமும் வீணாகி இராது.
உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.
நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.
நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.
அது சாத்தியமல்ல.
மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது.
1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.
2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
3. தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
4. பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
5. துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.
6. வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.
7. உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.
8. நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்
9. பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
10. முட்டையின் வெள்ளைகரு,தேன்,மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
11. பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
12. சருமம் உலராமல் பளபளப்புடன் இருக்க, தினமும் பசும்பாலை தேய்த்துவிட்டு குளியுங்கள்.
13. .பாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகம் , கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.
14. எலுமிச்சை பழச்சாறு,பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
15. பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.
16. கொத்தமல்லி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
17. ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.
18. பூந்திக் கொட்டையைக் தண்ணீரில் ஊற வைத்து அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.
19. பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.
20. சர்க்கரையுடன் சிறிது கிளிசரின் சேர்த்துக் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.
21. தாமரை, ரோஜா, ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்.
22. முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் குறையும்.
23. எலுமிச்சை பழச்சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
24. பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
25. தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும்
ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான்.
எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கஷ்டப்பட்டு தியாகம் செய்தது நீங்களா...? அல்லது அப்பாவா...?
அதற்குத் தாய் இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கஷ்டமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். உங்க அப்பா என்னை திருமணம் செய்துகொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நீ பிறந்த பின்னர் தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி உங்களுக்காக உங்கள் நலனுக்காக, உணவு, உடை, மருந்து மற்றும் உங்கள் கல்விக்கு என பல தேவைகளுக்காக சம்பாதித்தார். நீங்களும் நானும் இந்த குடும்பமும் உன் தந்தையின் வியர்வை உருவானவர்கள்.
மகன் இதே கேள்வியை தன் தந்தையிடம் கேட்டான்.
அவரின் பதில் வேறு மாதிரி இருந்தது. உங்கள் தாயார் எவ்வளவு தியாகம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. உன்னை வளர்ப்பதற்காக அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் தான் இந்த குடும்பத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தது. என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தாள். தனக்கு தேவையான எதையும் அவள் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. உங்களுக்காக தான் என்னுடன் சண்டையிட்டிருக்கிறாள். அவளது தியாகத்தை விட நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை என்றார்.
மகன் தனது சகோதரர்களிடம் சொன்னான். நம்மைவிட இந்த உலகில் அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்க முடியாது. தந்தையின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தாயும், தாயின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தந்தையும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கம்தான்.
பெற்றோர்கள் இருவர் அல்ல, ஒரு கிரீடத்தில் இருக்கும் இரண்டு வைரக்கற்கள். அவர்களை நம்முடனேயே வைத்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் காப்போம்.
ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினை... நெட்ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விஷயத்தைச் சொன்னான்.
"டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். கீழே எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. "
டாக்டரு சொன்னாரு.. "தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒருதரம் வீதம் அஞ்சு செஷன் என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்" .
"ரொம்பத் தேங்ஸ் டாக்டர்.
எவ்வளவு பீஸ்?"
" ஓரு செஷனுக்கு 2000 ரூபாய் தான் தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுரை ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000 சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500 ரூபாய் . "
" ஓ அப்டீங்களா? சரிங்க
டாக்டர் ஐயா. வர்றேன். "
ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு ப்ளாட்பாரக் கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டர் அவனைப் பாக்கறாரு.
" அடடே என்னா தம்பி,
அப்புறம் வரவே இல்லே? "
"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு."
" ஓ.. அப்டியா, எப்படி சரியாச்சி? "
" நம்ம அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம்."
டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு. " என்ன தம்பி சொல்றீங்க?
வெவரமா சொல்லுங்க "
" அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்கன்னாரு.. அப்புடியே கட்டிலை 2000க்கு வித்துட்டு 200ரூபாய்க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே.
டாக்டர்: 😳😳😳😳
ஒரு தத்துவவாதிக்கு மூன்று பையன்கள் இருந்தார்கள். அவர் அந்த மூன்று பையன்களுக்கும் அர்த்தம் உள்ள பெயர்களை வைத்திருந்தார்.
அதாவது ஒருவன் பெயர் மேனஸ் (Manners) நல்ல பழக்க வழக்கங்களை உடையவன்.
இரண்டாவது பையன் பெயர் ட்ரபுல்ஸ் (Troubles) தொந்தரவு என்று அர்த்தம்.
மூன்றாவது பையன் பெயர். மைண்ட் யுவர் ஓன் பிசினஸ் (Mind your own business) உன் வேலையை பார்த்துக் கொண்டு செல் என்று அர்த்தம்.
இப்பொழுது இந்த அர்த்தம் உள்ள பெயர்கள் எவ்வளவு ஆபத்தானது என்பதை கவனியுங்கள்.
ட்ரபுல்ஸ் என்ற பையனை காணவில்லை.
ஆகவே மேனஸும் மைண்ட் யுவர் ஓன் பிஸ்னஸ் என்ற பையனும் காவல் நிலையத்துக்குச் சென்றார்கள்.
அங்கு சென்றதும் மைன்ட் யுவர் ஓன் பிசினஸ் மேனஸிடம் நீ கொஞ்சம் வெளியே இரு என்று சொல்லிவிட்டு காவல் நிலையத்துக்குள் சென்றான்.
உள்ளே உட்கார்ந்து இருந்த போலீஸ்காரரிடம் என்னுடைய தம்பி காணாமல் போய்விட்டான் என்று புகார் கூறினான்.
அதற்கு போலீஸ்காரர் உன்னுடைய பெயர் என்ன? என்று கேட்டார்
மைன்ட் யுவர் ஓன் பிசினஸ் என்றான் இவன்.
அந்த போலீஸ்காரன் எரிச்சல் அடைந்து உன்னுடைய நல்ல பழக்கங்கள் எங்கே போயிற்று என்ற அர்த்தத்தில் வேர் இஸ் யுவர் மேனஸ்?
என்று கோபமாக கேட்டார்.
அவன் வாசலுக்கு வெளியே நிற்கிறான் என்றான்.
நீ ஏதாவது தொந்தரவு கொடுக்க வந்திருக்கிறாயா என்ற அர்த்தத்தில் ஆர் யூ லுக்கிங் பார் ட்ரபுல்ஸ்? என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
ஆமாம் அவனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டான் இவன்.
பின்னர் போலீஸ்காரரின் நிலையை சொல்லவும் வேண்டுமோ???
மேஷம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
ரிஷபம்
பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபங்கள் மேம்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான கருவிகள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். துணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து செல்லவும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்
கடகம்
சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். வர்த்தக முதலீடுகளில் தவிர்ப்பது நல்லது. பிரயாணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நவீன கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பலவித மக்களின் தொடர்புகள் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
வரவுகளில் இருந்த இழுபறிகள் மறையும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். வீடு மனை விற்பனையில் லாபம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். எதிர்ப்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளால் அலைச்சல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
பெரியார்களின் ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உருவாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை
கும்பம்
அரசு வழியில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் சில பிரச்னைகள் வந்து செல்லும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மீனம்
அவசரமான முடிவுகளை தவிர்க்கவும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எதிர்மறை சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
வாராஹி தேவியை ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்தால், இன்னல்களும் இருக்காது. எதிரிகளும் இருக்கமாட்டார்கள். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் பலமிழக்கச் செய்வாள் என்கின்றனர் சாக்த வழிபாடு செய்யும் பக்தர்கள்.
சப்தமாதர்களில் ஒருத்தியாகத் திகழ்பவள் வாராஹி. லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியாகப் போற்றப்படுபவள் வாராஹி தேவி.சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவள். கனிவுடன் கறார் குணமும் கொண்டு செயல்படுபவள்.
‘ஜகத் கல்யாண காரிண்ய’ என்பதற்கேற்ப உலக க்ஷேமத்துக்கான அருளை வழங்குகிற வாராஹி, சப்த மாதர்களில் தலையானவள் என்கின்றனர்.
மகாகாளி, தாருகாசுரனுடன் போர் புரிந்தபோது அவளுக்குத் துணை நின்றவள் வாராஹிதேவி. யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தியாகப் போற்றப்படுகிறாள்.
சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் வாராஹியே உதவி செய்தாள். உறுதுணையாக இருந்தாள். அசுரனையும் அசுரத்தனத்தையும் அழிக்க பேருதவி புரிந்தாள்.
சிங்கத்தை வாகனமாகக் கொண்டு மூவுலகங்களையும் ஆளுபவள் லலிதா பரமேஸ்வரி. இவளின் சேனைக்குத் தலைவி வாராஹி. படைகளின் தலைவி இவள். லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ இவள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்தாள். சங்கு, சக்கரம், கதை முதலான ஆயுதங்களை ஏந்திப் போரிட்டாள். அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தியின் அம்சமான வாராஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவளாக திகழ்கிறாள்.
திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி வந்து சேர்ந்தாள் என தேவி மஹாத்மியத்தின் எட்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
வராஹ மூர்த்தியின் அம்சமே வாராஹி. நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராஹியைப் பற்றியும் அவளின் பல்வேறு வடிவங்களை பற்றியும் மந்திர சாஸ்திர நூல்கள் பலவாறுவிதமாகப் புகழ்கின்றன.
வாராஹியை பஞ்சமி திதியில் வழிபடுவது, எண்ணற்ற பலன்களையும் வலிமையையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை 27.11.2025
இன்று இரவு 08.03 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று இரவு 10.57 வரை அவிட்டம் . பின்னர் சதயம்.
இன்று காலை 09.22 வரை துருவம். பின்னர் வியாகாதம்.
இன்று காலை 08.12 வரை கரசை. பின்னர் இரவு 08.03 வரை வணிசை. பிறகு பத்தரை.
இன்று காலை 06.14 வரை மரணயோகம். பின்னர் இரவு 10.57 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்து பேசும்போது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார் கனடி பிரதமர்.
தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த G20 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, கனடா பிரதமரான மார்க் கார்னி ஊடகவியலாளர்களை சந்தித்தபோது, டிரம்பை சந்திப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்கள் ஊடகவியலாளர்கள்.
பேச்சுவார்த்தைகள் நடத்தினோம், நானும் பிஸியாகிவிட்டேன், மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசுவோம் என்று கூறினார் கார்னி.
அப்போது, கடைசியாக கார்னி எப்போது டிரம்புடன் பேசினார் என்பது குறித்து விளக்குமாறு மீண்டும் ஊடகவியலாளர்கள் கேட்க, சட்டென, எனக்கென்ன கவலை அல்லது யாருக்கு என்ன கவலை என்னும் ரீதியில், ’Who cares?’ என்று கூறிவிட்டார் கார்னி.
எதிர்க்கட்சியினர் அவரது பதில் குறித்து கடுமையாக விமர்சிக்கத் துவங்க, தற்போது தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார் கார்னி. முக்கியமான ஒரு விடயம் குறித்து பேசும்போது, நான் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானவை என்று கூறியுள்ள கார்னி, நான் கனடாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கனடியர்களுக்கு ஒரு உறுதி அளித்தேன். நான் தவறு செய்தால், அதை நான் ஒப்புக்கொள்வேன் என்று நான் கூறியிருந்தேன். அதன்படி, நான் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கார்னி.
இந்தியா-கனடா இடையே விரைவில் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த் தெரிவித்தாா்.
தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடி, கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆகியோா் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது இந்தியாவுக்கு வருமாறு காா்னிக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். இதை ஏற்றுக்கொண்ட காா்னி அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் தெரிவித்தது.
அதன் தொடா்ச்சியாக கனடாவுடன் மீண்டும் தடையற்ற வா்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தையை இந்தியா தொடங்கவுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதையடுத்து, அமெரிக்க வரி விதிப்பு, இந்தியாவுடனான வா்த்தக கொள்கை குறித்து ஊடகத்துக்கு அனிதா ஆனந்த் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், ‘அமெரிக்க வரி விதிப்பு மற்றும் இந்தியாவுடனான வா்த்தக உறவு என அனைத்திலும் புதிய வெளியுறவுக் கொள்கையை பிரதமா் மாா்க் காா்னி தலைமையிலான அரசு பின்பற்றுகிறது. உலக நாடுகள் மிகவும் பாதுகாப்பான வா்த்தக கொள்கைகளை வகுத்துள்ளன.
இந்த சூழலில் வா்த்தக நாடாக சிறப்பான செயல்பாட்டை கனடா வெளிப்படுத்துவது அவசியம். குறிப்பாக, இந்தியாவுடன் மீண்டும் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து பேச்சுவாா்த்தை தொடங்கப்படும்.
இதை விரைவாக இறுதிசெய்ய இருநாட்டுத் தலைவா்களும் ஆா்வமாக உள்ளனா். அதேசமயம் சீனாவுடன் நல்லுறவைத் தொடரவே கனடா விரும்புகிறது’ என்றாா்.














