இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.
ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: முன்கோபத்தை குறைப்பது நன்மை தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். ஓரளவு லாபம் பார்ப்பீர்.
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும். சக ஊழியர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.
சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன் கோபம் விலகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பர்.
கன்னி: பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊர் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். திட்டமிட்ட பணியை முடிக்க போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழல், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் அதிக லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். கையில் பணம் புரளும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
தனுசு: அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பீர். அரசால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் செல்வீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும்.
மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மதிப்பு உயரும்.
மீனம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க போராடுவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகரீதியான பயணம் அலைச்சல் தரும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை தாமதப்படுத்துவது நல்லது.
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 19 ஆம் தேதி வியாழக்கிழமை 2.4.2026.
இன்று காலை 07.57 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று மாலை 05.46 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
இன்று பிற்பகல் 02.24 வரை துருவம். பின்னர் வியாகாதம்.
இன்று காலை 07.57 வரை பவம். பின்னர் இரவு 08.24 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று காலை 06.10 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ரிஷபம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும்.
துலாம்: முரண்டு பிடித்த பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பர். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். பேச்சில் தெளிவு பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.
தனுசு: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். பூர்வீக நிலம், வீடு தொடர்பான வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
மகரம்: அணுகுமுறையை மாற்றி தடைபட்ட பணியை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். புதிய பங்குதாரர் அறிவுரை வழங்குவார். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வாகனத்தில் நிதானம் தேவை. அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். தந்தைவழி உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கிக் கடனை பைசல் செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
மகிழ்ச்சி என்பது மனதோடு
தொடர்புடையது மட்டும் அல்ல...
நம்மைச் சுற்றி இருக்கும்
மனிதர்களோடும் தொடர்புடையது...!!
வாழ்த்துகள்..!!
1-4-2026
ஏப்ரல் முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வரலாறு இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.
16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.
இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்த புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை 1.4.2026.
இன்று காலை 07.37 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று மாலை 04.37 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
இன்று மாலை 03.06 வரை விருத்தி. பின்னர் துருவம்.
இன்று காலை 07.37 வரை வனிசை. பின்னர் இரவு 07.47 வரை பத்திரை. பிறகு பவம்.
இன்று மாலை 04.37 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
Good Morning....
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற இறைவனை வேண்டுவோம்.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், இறப்பிற்கான காரணம் குறித்து மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பகவல்பூரில் இவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது உடல்நலக் குறைவா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களில் தொடர்புடைய இந்த அமைப்புக்கு தாஹிர் அன்வாரின் மறைவு பெரும் பின்னடைவாகும்.
இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் ஒவ்வொருவராக கொல்லப்பட்டு வருவது, அந்நாட்டிலுள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் சிதைந்து வருவதையே காட்டுகிறது. அசாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தளபதிகளின் தொடர் இழப்புகள், அந்த அமைப்பின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.
லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து கடந்த பல நாட்களாகவே இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனான் நாட்டுக்குள் நுழைந்தும் இந்த தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் தெற்கு லெபனானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
லெபனனில் குடியிருப்பு பகுதிகள், வணிக கட்டிடங்கள் மற்றும் எரிபொருள் நிலையம் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும் லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, லிதானி ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பல தங்களின் மீது தாக்குதல் நடத்தி சிலரை கொன்றதாக இஸ்ரேல் கூறி இருக்கிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலால் தெற்கு லெமனானின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள லெபனான் அதிபர் ஜோசப், ‘அமைதியை குலைப்பவர்களின் கை வெட்டப்படும்’ என என எச்சரித்திருக்கிறார்.
முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தின் வியாபாரம் என்பது குறுகிய வட்டத்தில்தான் இருந்தது. அதாவது தமிழ் படங்கள் தமிழ்நாட்டிலும், தெலுங்கு படங்கள் ஆந்திராவிலும், கன்னட திரைப்படங்கள் கர்நாடகாவிலும், ஹிந்தி படங்கள் வட இந்தியாவில் மட்டுமே வசூலை பெற்றுவந்தது. ஒரு கட்டத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் அளவில் டப் செய்யப்பட்டு வெளியாவது அதிகரித்துக் கொண்டே வந்தது.
தற்போது ஒரு மொழியில் உருவாகி மற்ற மொழிகளிலும் வெளியாகும் படங்களை ஏர் இந்தியா படங்கள் என்ன சொல்கிறார்கள் ஒவ்வொரு மொழியிலும் உள்ள அதிக சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் அதில் ஹீரோவாக நடிக்கிறார்கள் அதிகபட்சத்தில் உருவாக்கும் அந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகி வருகிறது. அதை பேன் இண்டியா திரைப்படம் என சொல்கிறார்கள்.
அதுவும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் பேன் இண்டியா படமாக வெளியாகி வசூலை அள்ளியது. அதன்பின் KGF, KGF2 , காந்தாரா, காந்தாரா 2, புஷ்பா, புஷ்பா 2 போன்ற பல திரைப்படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளிவந்து வசூலை அள்ளியது.
முதலிடத்தில் அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் இருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் 2070 கோடி வசூல் செய்தது. அடுத்து வரிசையாக பாகுபலி 2 - 1810 கோடியும், புஷ்பா 2 - 1742 கோடியும், துரந்தர் 1354 கோடியும், RRR 1230 கோடியும், துரந்தர் 2 - 1226 கோடியும் (ஒரு வாரத்தில்), KGF 2- 1215 கோடியும், ஜவான் 1160 கோடியும், பதான் 1055 கோடியும், கல்கி 2898 கிபி 1042 கோடியும் வசூல் செய்திருக்கிறது.
லெஜென்ட் சரவணா நிறுவனர் சரவணன் நடித்துள்ள திரைப்படம் லீடர். இந்த திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அறந்தாங்கி நிஷா ‘நான் படத்தில் லெஜென்ட் சரவணாவை திட்டியிருக்கிறேன். எனவே நான் சில நாட்களுக்கு சரவணா துணிக்கடை பக்கம் போக முடியாது. இந்த படத்தில் என் கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அப்படியே படத்திலும் இருந்தார். நான் வாயை திறந்து விடுவாரா என்னை எட்டிப் பார்த்தேன். உங்கள் கணவரிடம் ரியாக்சன் குறைவாக இருக்கிறது என இயக்குனர் சொன்னர். 10 வருடங்களாக அவரிடம் எந்த ரியாக்சனும் இல்லை. இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்.. இந்த படத்தில் நிஷாவையே ஹீரோயினாக போட்டிருக்கலா என லெஜண்ட் சரவணா யோசித்திருப்பார்’ என்று பேசினார்.
அவருக்கு பின் பேச வந்த நடிகர் விடிவி கணேஷ், ‘இங்க நிறைய பேர் பேசினாங்க.. எல்லாரும் படத்த பத்தி பேசினாங்க.. ஆனா அறந்தாங்கி நிஷா தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசினாங்க. அவங்க படத்தை பற்றி எதுவும் சொல்லல.. அவங்க ஹீரோயின் ஆக வேண்டுமா?.. விவஸ்தையே இல்லையா?. இதெல்லாம் கேட்டா நமக்கு சிரிப்புதான் வருது’ என்று பேசினார்.. அவர் பேச பேச லெஜண்ட் சரவணன் முகமே மாறிவிட்டது.. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரால்கி வருகிறது. பலமுறை சினிமா மேடைகளில் விடிவி கணேஷ் இப்படி சர்ச்சையாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்க திட்டமிட்டுள்ளதாக மாகாண முதல்வர் ஸ்கொட் மோ தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அண்மையில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு முழுமையான சமூக ஊடகத் தடை அமல்படுத்தியதை குறிப்பிட்டு, கனடாவும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என அவர் சமூக ஊடகமொன்றில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 4,000-க்கும் மேற்பட்டவர்களில் சுமார் 75% பேர், ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டதுபோன்ற தடை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த தடை, டிக்டாக், முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியுப் மற்றும் ஸ்னெப்சாட், போன்ற தளங்களில் 16 வயதிற்குட்பட்டவர்கள் கணக்குகள் உருவாக்குவதைத் தடுக்கிறது.
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இந்த விவகாரம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார். எனினும், இது குறித்து விரிவான விவாதம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஆன்லைன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் அவசியம் என்றும், சமூக ஊடகங்களுக்கான “வயது வரம்பு” குறித்த விவாதமும் அதில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரெஞ்சு-பலஸ்தீனிய உறுப்பினரான ரிமா ஹஸன் மான்ட்ரியல் மாநாடுகளில் பங்கேற்க இருந்த நிலையில் கனடாவிற்குள் பிரவேசிகக் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தாம் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதை “கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்ட மின்அனுமதி (electronic travel authorization) பின்னர் வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டதாக அவரது கட்சியான லா பிரான்ஸ் இன்ஸோமிஸ் தெரிவித்துள்ளது.
கனடிய அதிகாரிகள், முன்னதாக விசா மறுப்பு அல்லது நுழைவு மறுப்பு, மேலும் குற்றச்சாட்டு அல்லது கைது தொடர்பான தகவல்களை அவர் வெளியிடவில்லை என குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மறுப்புக்கான உண்மையான காரணம், இஸ்ரேல் நுழைவு மறுப்பு மற்றும் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு குறித்து அவர் எடுத்துள்ள வலுவான கருத்துகளே என அவரது கட்சி கூறுகிறது.
இந்த வாரம் மான்ட்ரியலில் நடைபெறவிருந்த “பலஸ்தீன ஆதரவு குரல்கள் அடக்கப்படுவது” மற்றும் “வலதுசாரி அரசியல் எழுச்சி” தொடர்பான இரண்டு மாநாடுகளில், ரிமா ஹசன் ஆன்லைன் வழியாக பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.
கனடாவின் ஹால்டன் பகுதியில், தபால் மூலம் கோக்கெயின் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புர்லிங்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது, 42 வயதான ட்ரவர் ஹேர்ட்மேன் கைது செய்யப்பட்டார்.
13 கிராம் கோக்கெயின், அஞ்சல் அனுப்புதல் தொடர்பான ஆதாரங்கள், குறுக்கு வில் (crossbow), போலி வாகன எண் பலகைகள், சுமார் 70,000 சட்டவிரோத சிகரெட்டுகள், திருடப்பட்ட பிக்கப் வாகனம் என்பன சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
4 போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், 2 குறுக்கு வில் வைத்திருத்தல் குற்றங்கள், 2 தடை செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டிய குற்றங்கள் மற்றும் வாகன அடையாள எண் (VIN) மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.







