கனடாவின் ஓரஞ்ச்வில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பல வாகன விபத்தில் 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் ஹைவே 10-ல், ஃபோர்த் அவென்யூ மற்றும் பிராட்வே ஸ்ட்ரீட் இடையில் இரண்டு பிக்கப் லாரிகள் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் ஒரு வாகன ஓட்டுனர் (75) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு வாகன ஓட்டுனர் சிறிய காயங்களுடன் தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து விசாரணைக்காக பல மணி நேரம் சாலை மூடப்பட்டு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த முதியவரின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
தலைமுடி கரு கருவென்று வளர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். நீண்ட, அழகான, கருமையான, அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்று நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது. குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருப்பது தனி அழகாகும்.
நாம் தலைக்கு குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றி குளிப்பதினாலும் முடி உதிர்வு ஏற்படலாம். அதிக அளவில் மருந்து சேர்க்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுத்துவதாலும், அதிக உப்பு கலந்த நீரினை பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும்.
வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் தலைமுடியை அலசுவதின் மூலம் தலை முடி உதிர்வை தடுக்கலாம். செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை குளித்து வந்தால் தலை முடி கொட்டுவது நின்று நன்கு பளப்பாக மாறும்.
தேங்காய் எண்ணெய், விளகெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.
சின்ன வெங்காயத்தை அரைத்து தலைப் பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும்.
வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும். பாதாம் எண்ணெய்யை தலையின் வேர்க்காலில் தேய்த்து நன்றாக ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும்.
கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்லை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின் குளித்து வர வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி உறுதியாகும். தலை முடிக்கு குளிர்ச்சி உண்டாகும். தலையில் உண்டாகும்
அதிகப்படியான வெப்பத்தை கட்டுப்படுத்தி முடி உதிர்வதை தடுக்கும்.
- ஜவ்வரிசி சவ்வரிசி பனை மரத்தின் தண்டுப்பகுதியில் இருந்து எடுக்கப்படும் மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, உலர்த்தி ஜவ்வரிசியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
- ஜவ்வரிசி என்பது மரவள்ளிக்கிழங்கு அல்லது பனை மரத்தின் பதநீரிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
- மரவள்ளிக்கிழங்கு மாவு, தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டு, பல்வேறு வடிவங்களில் (பந்து, சில்லு போன்ற) ஜவ்வரிசியாக மாற்றப்படுகிறது.
- மரவள்ளிக்கிழங்கை அரைத்து, மாவாக மாற்றி, தண்ணீருடன் கலந்து, பலகைகளில் பரப்பி, உலர்த்தி, பின்னர் சிறு உருண்டைகளாக உருவாகிறது.
அட நம்ப காலா பட வில்லன் தான். !! அப்படி என்ன தான் இவர் செய்தார் என்று கேட்கும் கூட்டத்திற்கு :
- மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கிட்டத்தட்ட 62 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் தாராளமாக நன்கொடை அளித்தார்.
- மராத்வாடாவில் சுமார் 112 விவசாயிகளின் குடும்பங்களை அவரே பார்வையிட்டார். அப்போது மின்துண்டிப்பு நடக்க விவசாயிகள் தங்களது செல்போன் வைத்து டார்ச் அடித்து அவரை வரவேற்றனர்
- அவரது அமைப்பு இப்போது நாக்பூர், லாதூர், ஹிங்கோலி, பர்பானி, நந்தேடு, அவுரங்காபாத் போன்ற பகுதிகளில் 700 பேருடன் (விவசாயிகளை) இணைக்க திட்டமிட்டுள்ளது.
- இவரின் அமைப்பு 2015இல் தொடங்கியதாக்கும். செப்டம்பர் 2015 இல், படேகர் நாம் அறக்கட்டளையை நிறுவினார், இது வறட்சி நிலைமைகளால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உதவி வழங்குவதற்காக செயல்படுகிறது
- இவரது அறக்கட்டளை ஏற்கனவே வெற்றிகரமாக உழவர் நலனுக்காக மக்களிடமிருந்து 22 கோடி ரூபாய் நன்கொடை வாங்கியுள்ளது.
- விவசாயிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக உலர்ந்த ஏரிகள் மற்றும் ஆறுகளை மீண்டும் நிரப்புவதே அறக்கட்டளையின் முக்கிய நோக்கம்.
இவரின் 90 சதவீத வருமானத்தை இவர் நன்கொடை மற்றும் தொண்டு செய்ய பயன்படுத்தி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
பெருங்காயம் குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. பன்றிக் காய்ச்சல் முதற்கொண்டு புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல்கொண்டது.
பெருங்காயத்தின் மணத்தை முகர்ந்து முகம் சுளித்த அமெரிக்கர்கள், ஒரு காலத்தில் அதை, `பிசாசு மலம்’ என்று ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. சமீப காலத்தில் நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப்போல, 1910-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish Flu) பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு, அதை தங்கள் கழுத்தில் தாயத்து மாதிரி அமெரிக்கர்கள் கட்டித் திரிந்தார்கள்; அதற்கு `கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டார்கள்; இது வரலாறு.
* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும்.
* நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம்.
* பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.
* குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் வந்து, அந்த சூதகக் கட்டும் அகலும்.
* குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான திரவம் (லோசியா - Lochia) வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது.
* அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது.
* சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும்.
* நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும். இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும். ஆனால், அதற்கு முன்னர் வந்திருப்பது ஜீரணம் தொடர்பான வலியா அல்லது ஒருவகையான நெஞ்சு வலியா (Unstable Angina) என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.
* இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாகப் போகும் குடல் அழற்சி நோய்களுக்கும் பெருங்காயம் பலன் தரக்கூடியது.
* குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும்.
* புற்றுநோயிலும்கூட வெந்தயத்தின் தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல்புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பகட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
80 மற்றும் 90களில் வெளிவந்த தமிழ் படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை மாதவி. ரஜினி மற்றும் கமலுடன் பெரும்பாலான படங்களில் நடித்தவர் மாதவி. இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
நடிகை மாதவி 1962ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர் இளம் வயதிலேயே நாட்டிய கலையில் கைதேர்ந்தவர் இவர். கிட்டத்தட்ட 1000 மேடையில் தனது நாட்டிய திறமையை காட்டியுள்ளார். அதன் பின்னர் தனது டீன் ஏஜில் தூரப்பு படமரா என்ற ஒரு தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் செம்ம ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னர் தனது சிறு வயதிலேயே தெலுங்கில் முன்னணி ஹீரோயின் ஆனார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் மட்டுமே 10 படங்களுக்கு மேல் நடித்தார் மாதவி.
1981ல் ரஜினிகாந்தின் தில்லு முல்லு படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் ரஜினியுடன் கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வழிந்தால், விடுதலை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஹிந்தியில் அமிதாப் பச்சனுடனும் நடித்துள்ளார். கமலுடன், ராஜ பார்வை, காக்கி சட்டை, மங்கம்மா சபதம் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார் மாதவி. மார்க்கெட் எகிற எகிற தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் ,ஒரியா என அனைத்து மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடித்தார் மாதவி.
இவரது நடிப்பிற்காக கேரளா ஸ்டேட் பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார். ஸ்வாமி ராம் என்னும் ஹிந்து மத ஆன்மீக சாமியார் ஒருவரின் போதனைகளை எப்போதும் விடாமல் கேட்பவர் மாதவி.
அவரது ஆசிரமத்திற்கு அடிக்கடி செல்வார் மாதவி. 1995ல் ஸ்வாமி ராம் கூறியதன் பேரில் ரால்ப் சர்மா என்னும் ஒரு மருத்துவ மருந்துகள் தயாரிக்கும் தொழில் அதிபரை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ரால்ப் சர்மா ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆவார். திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பினை முற்றிலுமாக நிறுத்திவிட்டார் மாதவி.
இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் மாதவி.
ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும்போது
அக்பர் கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா ?
பீர்பால் அரசே அவருக்கு ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்?
அக்பர் இல்லை ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே?
அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?
இதற்க்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்
அதை பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தோசம் பீர்பாலே பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று
ஒரிரு நாட்கள் சென்றன
அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர்
அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டிவிட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார்
பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார்
அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான்
படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிஞ்ச என்னால நம்பவே முடிலயே சொல்லும் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக
பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரியனும் என்பதற்காக அப்படி செஞ்சேன் அரசே என்றார்
அக்பர் பீர்பாலே என்ன விளையாடுறியா நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம்
பீர்பால் அரசே மன்னித்துக்கொள்க நீங்க அன்று ஒரு நாள் உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்றணுமான்னு கேட்டிங்களே ஞாபகம் இருக்கா உங்களுக்கு?
அக்பர் ஆமாம் அதுக்கும் இன்று நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் என்ன சம்மந்தம்?
பீர்பால் அரசே கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிற்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே?
எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார்
அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து அப்படி இல்லை பீர்பால் என் பேரன் மேல் அளவு கடந்த பாசம் வச்சுருக்கேன்னு உனக்கு தெரியும் நீர் திடிர்னு தண்ணீர்ல அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார்
பீர்பால் புன்னகையுடன்
அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவளோ பாசம் இருக்கும் போது அண்ட சாகசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவளோ பாசம் இருக்கும் உயிர்கள் மேல்
அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான்
அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று
நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார்
அக்பர்..... இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்
உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் உங்கள் கடவுள் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் நெகிழ்ச்சியாக
ஏற்கனவே பல முறை பலர் உபன்யாசகங்களிலும் கதைகளிலும் சொன்னது போல் அன்புக்கு பண்புக்கு நேர்மைக்கு பகவான் கட்டுண்டவன் கூப்பிட்ட குரலுக்கு யார் மூலமாவது இன்றும் உதவுபவன்
அதனால் தான் கலியில் "தெய்வம் மனித ரூபேன" என்பர்
அவனே தாய் தந்தை போல் நமக்கு இருக்கும் போது அவன் அருளாலே எல்லாம் நடக்கிறது அவனின்றி அனுவும் அசையாது என்று மட்டும் நினைப்போம்
என்றும் எப்போதும் நன்மையே நடக்கும்
"ஓம் நமோ நாராயணாய நம:"
"சர்வம் கிருஷ்ணார்பனமஸ்து"
இந்தப் படத்தில் இருக்கும் பாட்டியின் வயது 95. பெயர் சாந்தம்மா. இந்த தள்ளாத வயதில் எங்கு செல்கிறார்? ஆந்திராவில் உள்ள சென்சூரியன் பல்கலைக் கழகத்திற்கு தினமும் Medical Physics, Radiology பாடம் நடத்த சென்று வருகிறார். இவரால் 17 மாணவர்கள் Ph.D. பெற்றுள்ளனர். இவரது ஒரே இலட்சியம் உலகின் வயதான பேராசிரியர் என்று கின்ஸ்ஸில் இடம் பெற வேண்டும் என்பதே.
இவரைப்பற்றிய கூடுதல் தகவல். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜே.டி.வேன்ஸ்-ன் மனைவி உஷா வேன்ஸின் பாட்டி.
இந்த பாட்டியின் விடாமுயற்சியை நாமும் பாராட்டுவோம்.
ஒரு வியாபாரி தன் இரு புதல் வர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் ஒன்றாக வாழ்வது கண்டு திருப்தி அடைந்து கண்ணை மூடினான். இறக்குமுன் தன் மூத்த மகனைத் தனியாக அழைத்து "நீ உன் தம்பியோடு சண்டை போடாமல் அனுசரித்துக் கொண்டு போ. அவன் சுபாவம் துடுக்கானது. எனவே அவன் என்ன சொன்னாலும் செய்தாலும் பொறுத்துக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டுபோ" என அவன் கூறினான்.
தன் கணவனின் அண்ணனிடம் மாமனார் ஏதோ கூறுவதைப் பார்த்த இளையவனின் மனைவி தன் மாமனார் பணத்தை எங்கோ ரகசியமாக வைத்திருப் பதைக் கூறுகிறார் என எண்ணினாள். அவளுக்கு வெகு நாளாகவே தனிக் குடித்தனம் நடத்த வேண்டும் என்ற ஆசை. தன் கண்வனிடம் அவள் பல முறை கூறி யும் அவன் அதைக் காதில் போட் டுக் கொள்ளவில்லை.
இப்போது அவள் தன் கணவனிடம் ''பார்த்தீர்களா! பணம் வைத்த ரகசியத்தை உங்கள் தந்தை உங்கள் அண்ணனிடம் தான் சொன்னார். உங்களிடம் சொல்லவில்லை. நீங்கள் அந்தப் பணத்தில் பங்கு கேட்டு வாங்குங்கள். நாம் தனியாகப் போய் சுகமாக இருக்கலாம். இவர்களோடு சேர்ந்து கஷ்டப்படுவானேன்" என்று தினமும் கூறி வரலானாள். இது அவன் மனதிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பதியலாயிற்று.
ஏதோ ரகசியமாகச் சொன்னாராமே. அது என்ன?" என்று கேட்டான். அண்ணனும் ''நானும் நீயும் என்றும் ஒற்றுமையாக ஒன்றாகப் பிரியாமல் இருக்க வேண் டும் என்று சொன்னார்" என்றான்.
தம்பியோ "இதை நான் நம்ப மாட்டேன். சரி சரி. நான் தனியாகப் போகிறேன். என் பங்கிற்குப் பணம் கொடு" என்றான். அண்ணனும் "பணம் ஏது? அப்பா எதுவும் வைத்து விட்டுப் போகவில்லையே'' என்றான் ஆனால் தம்பியோ "எல்லாம் எனக்குத் தெரியும், அவர் புதைத்து வைத்த பணத்தில் பாதியைக் கொடு" என்றான்.
அது கேட்டு அண்ணன் திகைத்துப் போனான். பதில் பேசாமல் உள்ளே போய் தன் மனைவியிடம் "உன் நகைகளை எல்லாம் கொடு" என்று அவன் கேட்டான். அவளும் எல்லாவற்றையும் கொடுக்கவே அவற்றை அவன் எடுத்துப் போய் தன்குடும்ப நண்பரும் வட்டிக் கடைக்காரருமான விசுவநாதனிடம் "ஐயா, இந்த நகைகளை வைத்துக் கொண்டு எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுங்கள்'" எனக் கேட்டான்.
அவரும் ''பணத்திற்கு அப்படி என்ன அவசரச் செலவு?" என்று கேட்க அண்ணனும் ''இது குடும்ப ரகசியம். எப்படிச் சொல்வது?. என்றான். "இதோ பார், நானும் உன் தந்தையும் நகமும் சதையும் போல இருந்தவர்கள். நீ உன் குடும்ப ரகசியத்தை என்னிடம் சொல்லாவிட்டால் வேறு யாரிடம் சொல்லப் போகிறாய்? தயங்காதே தாராளமாக என்னிடம் சொல்" என்று கேட்டார்.
அப்போது அண்ணன் கண்ணீர் மல்க "என் தம்பி என்னை சந்தேகிக்கிறான். என் தந்தை இறக்கு முன் ஏதோ புதைத்து வைத்த பணம் பற்றி ரகசியமாக என்னி டம் கூறியதாக நினைக்கிறான். எனவே இந்த பணத்தை எடுத்து என் வீட்டுப்பின்புறம் புதைத்து விட்டு அவனிடம் சொல்லி அவனுக்கே இதைக் கொடுத்து விடப் போகிறேன். அப்போதாவது குடும்பத்திலிருந்து பிரிந்து போகாமல் இருப்பானா என்று பார்க்கிறேன்" என்றான்.
விசுவநாதனும் பணம் கொடுக்கவே அண்ணன் அதனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான். அன்றிரவே யாருக்கும் தெரியாமல் அந்தப் பணத்தை வீட்டின் பின்புறத்தில் ஓரிடத்தில்புதைத்து வைத்தான்.
மறுநாள் காலை அண்ணன் தம்பியை அழைத்து 'தம்பி! என்னை மன்னித்து விடு. நம் தந்தை கூறிய ரகசியத்தை உன்னிடம் சொல்லவில்லை எல்லாம் பணத் தாசை தான். காரணம் அவ்வளவையும் நானே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். சரிவா. பணம் புதைத்து வைக்கப்பட்ட இடத்திற்குப் போகலாம். எல்லாப் பணத்தையும் நீயே எடுத்துக் கொள்" என்றான்.
தம்பியும் "அண்ணா! எல்லாம் எனக்குத் தெரியும். அண்ணியின் நகைகளைக் கொண்டு போய்க் கொடுத்து பணத்தை வாங்கிப் புதைத்து விட்டு நம் தந்தை கூறிய ரகசியம் என்று என்னிடம் சொல்கிறீர்களே. நேற்று விசுவநாதன் என்னை அழைத்து புத்தி மதிகள் கூறி உங்களது உயரிய எண்ணத்தையும் செய்கையையும் கூறினார். எனக்கு புத்தி வந்தது. இனி ஒரு நாளும் தனியாகப் போக வேண்டும் என்று என் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கூற மாட்டேன். நம் தந்தையின் கடைசி விருப்பப்படி நாம் என்றும் ஒன்றாகவே இருப்போம்" என்றான்.
அண்ணன் ஆனந்தத்தால் அப்படியே கட்டித் தம்பியை தழுவிக் கொண்டான்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் லாபங்கள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். மறைமுகமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
தொழில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான சில வரவுகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். எதிர்ப்புகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிதுனம்
தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் வட்டத்தில் சில புரிதல் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவு பெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் தனித்தன்மையோடு செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். கருத்துக்கள் பகிர்வதில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். உடன் இருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். பணி நிமித்தமான செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
மற்றவர்களால் சில பொறுப்புக்கள் அதிகரிக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் சில மாற்றத்தை தரும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மதிப்புகள் உயரும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கன்னி
பூர்வீக சொத்துகளில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் உதவிகளை தேடுவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பு மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.நிர்வாக தொடர்பான துறைகளில் மேன்மை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை
துலாம்
துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுகளில் கவனம் வேண்டும். தடைப்பட்ட பணிகள் முடியும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் இருந்த வருத்தங்கள் குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுகளால் நிம்மதி ஏற்படும். சிக்கல்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். விருப்பமில்லாமல் மற்றவர்களின் செயல்களில் தலையிட வேண்டாம். மறைமுகமான சில விமர்சனங்கள் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
தனுசு
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த ஏற்ற இறக்கங்கள் மறையும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சொத்து விவகாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதார நெருக்கடிகள் விலகும். மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாய பணிகளில் சாதகமான சூழல் உருவாகும். உறவினர்கள் உதவியால் தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
குடும்பத்தினரின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த பணிகள் சாதகமாக முடிவு பெறும். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். பற்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
திருவாதிரை நாளில் சிவபெருமானை வணங்கும் போது விஷேஷ மந்திர ஜபம் செய்வது மிகப் புண்ணியமானதாக கருதப்படுகிறது.
1. மூல மந்திரம்
ஓம் நமசிவாய
சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரம்.
குறைந்தது 108 முறை ஜபிக்க வேண்டும்.
2. நடராஜர் மந்திரம்
ஓம் ஹ்ரீம் நடராஜாய நம:
நடனமாடும் நடராஜப் பெருமானை தியானித்து சொல்ல வேண்டிய மந்திரம்.
ஆனந்தம், ஆரோக்கியம், ஆன்மீக வளர்ச்சி கிடைக்க உதவும்.
3. திருவாதிரை தாண்டவ மந்திரம்
ஓம் அனந்த தாண்டவாய நம:
சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய தினம் என்பதால், இந்த மந்திரம் சிறப்பாக ஜபிக்கப்படுகிறது.
4. மகா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்தனம் ।
உர்வாருகமிவ பந்தநான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ॥
இந்த மந்திரம் ஜபிப்பது நோய் நிவாரணம், ஆயுள் நீடிப்பு மற்றும் ஆரோக்கியம் அளிக்கும்.
5. திருவாசகத்தில் உள்ள பாடல்கள்
திருவாதிரை நாளில் திருவாசகம் பாடுவது மிகவும் புண்ணியமானதாகும்.
குறிப்பாக “அன்புறு அருளாலே ஆதி அம்பலத்துள் ஆடிய ஆதி ஆனந்த தாண்டவன்” எனும் பாடல்கள் சிவனின் ஆனந்த தாண்டவத்தை நினைவூட்டுகின்றன.
விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 15.9.2025
இன்று காலை 07.01 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று காலை 11:55 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.
இன்று காலை 09.34 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.
இன்று காலை 07.01 வரை கௌலவம். பின்னர் மாலை 5.29 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று காலை 6.02 வரை சித்த யோகம். பின்னர் காலை 11.55 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம் :
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
ஒரு வேடன் அவனுக்கு தினமும் வேட்டையாடுவது தான் வேலை'' வேறு வேலைக்கு போக மாட்டான் அவனுக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை இருந்தது அந்த குழந்தைக்கு ஆறு வயது ஆகிறது....
ஒரு நாள் அதிகாலையில் வேட்டைக்கு போனான் வேடன். வேட்டைக்கு போனவன் வேட்டை எதுவும் கிடைக்கவில்லை. மாலை வேளையில் மன உளைச்சலுடன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.. அப்போது ஒரு வண்ணப் பறவை குளத்தில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தை பார்த்ததும் தன் வில் அம்பை எடுத்து எய்தான் இறக்கையில் அடிபட்டு பறக்க முடியாமல் விழுந்து விட்டது... வண்ணப்பறவை.
அதை வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்து இதை குழம்பு வைத்து வை நான் சாராயம் குடித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டான்..
சாராயம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான் அவன் மனைவி அந்த பறவையை குழம்பு வைக்கவில்லை ஏன் சமைக்கவில்லை?? என்று கோபமாக கேட்டான்'' நம் மகளுக்கு இந்த பறவையை ரொம்ப பிடிச்சிருக்காம். அதனால்தான் இந்த பறவையை குழம்பு வைக்கவில்லை என்றாள்..
இவனுக்கு கோபம் ஏறிவிட்டது குடிபோதையில் தன் வில்லம்பை எடுத்தான் தன் மனைவி மீது எய்தான் மார்பில் பாய்ந்து இறந்து விட்டாள்..
மனைவி இறந்தவுடன் அவன் போதை தெளிந்து விட்டது. ஊர் பெரியவர்களின் தயவோடு உடலை அடக்கம் செய்தான்.. அந்த குழந்தை அடிபட்ட பறவைக்கு மருந்து போட்டு தன் பக்கத்திலே வைத்துக் கொண்டது..
கொஞ்சம் கொஞ்சமாக அந்த புண் ஆறியது வண்ணப்பறவை பேச ஆரம்பித்தது அந்த குழந்தைக்கு பறவையை விட்டால் நமக்கு வேறு யாருமில்லை என்ற எண்ணம் மனதில் தோன்றியது...
அந்த பறவையை அன்போடு அழைத்துக் கொண்டாள். இந்த குழந்தை என்ன பேசுமோ அதை திரும்ப சொல்ல ஆரம்பித்தது அந்த வண்ணப்பறவை.
தனிமையில் இருக்கும் வேடனுக்கு ஒரு துணை தேவைப்பட்டது. ஏற்கனவே திருமணம் ஆகி கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் முடித்துக் கொண்டான் வேடன்...
வந்தவள் அந்த குழந்தையையும் அவனையும் நல்ல முறையில் கவனித்துக் கொண்டாள்.. அந்த குழந்தை அந்த வண்ணப்பறவையை நல்லா கவனித்துக் கொண்டது""
அப்போது வெயில் காலம்"" ஊரெல்லாம் அம்மை நோய் போட்டிருந்த காலம் குழந்தைக்கும் அம்மை போட்டிருந்தது.
சித்தி வேலைக்கு போய்விட்டால் அப்பா வேட்டைக்கு போய் விட்டான்.
இந்த குழந்தை மட்டும் தனியாக வீட்டிலிருந்தது அப்போது ஒரு நாகப்பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டது. நாகப்பாம்பு வந்ததை அந்த பறவை பார்த்துவிட்டது. உடனே அந்த பாம்பை கொத்திக் கொன்று விட்டது... அந்த பறவை..
வேடன் வந்து பார்த்தான் தன் மகள் அருகில் பாம்பு இறந்து கிடந்தது. தன் மகளை காப்பாற்றியது இந்த பறவை தான் என்று நினைத்துக்கொண்டான்
அதற்குப் பிறகு இவனும் அந்த பறவையின் மீது அன்பு பாசம் காட்டி வளர்ந்து வந்தார்கள்..
ஒருநாள் வேடன் வேட்டைக்கு போயிட்டு வரும் வேளையில் ஒரு புதையல் ஒன்றைக் கண்டெடுத்தான் அதை வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் அந்த புதையலை காட்டினான். பானை முழுவதும் தங்க காசுகள் இருந்து மனைவிக்கு அந்த புதையல் மீது ஆசை வந்துவிட்டது.
இந்த புதையலை எப்படியாவது நம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தால்.. அப்போது தன் அக்காவைக்கான தம்பி வந்திருந்தான்..
தன் தம்பியிடம் என் கணவர் வேட்டைக்கு போயிட்டு வரும்போது அவருக்கு ஒரு புதையல் ஒன்று கிடைத்திருக்கிறது முழுவதும் தங்க காசுகள் அதை அவர் வைத்திருக்கிறார்.
அந்த தங்கப் புதையலை நாம் எடுத்துக் கொண்டு இங்கிருந்து போய்விட வேண்டும் என்று தம்பியிடம் சொன்னாள்..
அக்கா உனக்கு இப்போது தான் திருமணம் முடிந்திருக்கிறது இப்போ எடுத்துக் கொண்டு போனால் சந்தேகம் வந்துவிடும் அதனால் சந்தேகம் வராமல் இருக்க ஒரு வழி சொல்லுகிறேன் ""கேள் நீ வேலைக்கு போகும் இடத்திலிருந்து கொஞ்சம் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்துட்டு வா''' வந்து பாலில் கலந்து அவர்கள் இருவருக்கும் கொடு.. அவர்கள் இரண்டு பேரும் இறந்து விடுவார்கள் நம் புதையலை எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று ஆலோசனை சொன்னான்..
சரி தம்பி நல்ல யோசனை தான் யாருக்கும் சந்தேகம் வாராது என்றாள்
சரி அக்கா நான் ஊருக்கு போறேன் நீ காரியத்தை முடித்து விட்டு வா என்று சொல்லி விட்டு கிளம்பினான்.. இவர்கள் இருவரும் பேசுவதை அந்த பறவை கேட்டுக்கொண்டேஇருந்தது.
அவன் சொன்னது போல வேலைக்கு போன இடத்திலிருந்து கொஞ்சம் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்துக் கொண்டால் இரவு உணவு முடிந்ததும் மூன்று டம்ளர் பால் காய்ச்சினாள்
இரண்டு டம்ளரில் பாலில் விஷத்தை ஊத்தி கொண்டு.. தனக்கு உண்டான டம்ளரை தனியாக வைத்துக் கொண்டாள்.
மனைவி வந்து இந்தாங்க பால் குடிங்க என்று கொடுத்தாள் அந்த கிளி சாப்பிடாதீர்கள் ""விஷம் ""விஷம் என்று கத்தியது!! இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் குழந்தை முதலில் பாலை குடிக்க போனது அந்த குழந்தையின் பாலை தட்டி விட்டது பறவை இவனுக்கு அப்பவும் ஒன்றும் புரியவில்லை... இவனுக்கு அந்த பறவை மீது கொஞ்சம் கோபம் வந்தது.. ஏன் இப்படி செய்கிறது என்று நினைத்தான்
அவன் வைத்திருந்த பாலை அந்த பறை குடித்தது,, குடித்ததும் கீழே விழுந்துவிட்டது பறவையின் வாயிலிருந்து நுரை தள்ளி இறந்துவிட்டது.
அதற்குப் பிறகு அவன் சுதாரித்துக் கொண்டு என்ன செய்தாய்?? என்று கேட்டான் அவள் உண்மையை சொல்லிவிட்டாள்.. அனக்கு கோபம் வந்தது இந்த புதையலுக்கு ஆசைப்பட்டு தானே என்னையும் என் மகளையும் விஷம் வைத்துக்கொள்ள பார்த்தாய்..... என் குடிபோதையில் என் மனைவியை இழந்தேன்'' என்னையும் என் மகளையும் காப்பாற்றிய பறவையை இழந்தேன். இனிமேல் நான் எதையும் இழக்க தயாராக இல்லை.. இந்தா இந்த புதையலை நீயே வைத்துக் கொள். இந்தப் புதையலுக்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்வாய் என்று கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்து விட்டான்..
இவள் ஆசைப்பட்டுது போல புதையல் கையில் கிடைத்து புதையலை தன் தம்பியிடம் காட்டினால் அவன் கண் சொக்கி போனான் அவ்வுளவும் தங்கம்..
இவ்வளவு தங்கம் இருக்கும்போது நாம் ஏன் வேலைக்கு போக வேண்டும்? என்று எண்ணி எல்லோரும் வீட்டில் உட்கார்ந்துகொண்டு வேலைக்கு போகாமல் சாப்பிட்டார்கள்..
இருந்து சாப்பிட்டால் இரும்பும் கரையும் என்று சொல்வார்கள். புதையல் குறைய ஆரம்பித்து ஆரம்பித்துவிட்டது.
அக்காவுக்கு மதிப்பு குறைந்துவிட்டது புதையல் இருக்கும் வரை அக்காவுக்கு அந்த மதிப்பு இருந்தது....
புதையல் குறைய குறைய மதிப்பு குறைந்துவிட்டது.. ஒரு நாள் அக்காவை அடித்து விட்டை விட்டு துரத்தி விட்டான்..
அதற்குப் பிறகு அக்கா தன் தவறை உணர்ந்தாள்.. புதையலுக்கு ஆசைப்பட்டு நல்ல வாழ்க்கையை இழந்துவிட்டோமே... என்று எண்ணி எண்ணி வருந்தி உடல் நலம் குன்றி இறந்து போய்விட்டாள்.
பேராசையால் வாழ்க்கையும் போய் உயிரும் போனது
- சர்வதேச அளவில் இட்லிக்கு என தனிச் சந்தை தமிழ்நாடு - ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ளது
- தமிழ்நாட்டின் ஈரோட்டில் உலகப் புகழ் பெற்ற இட்லி சந்தை ஒன்று உள்ளது. இங்கு தினசரி 20 ஆயிரம் முதல் 30,000 இட்லிகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
- ஈரோட்டின் அடையாளமாக மாறிய இட்லி சந்தை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
- ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் தினமும் இட்லிகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
- விறகு அடுப்புகளில் பெரிய இட்லிப் பானைகளில் இட்லிகள் தயாரிக்கப்படுகின்றன.
- அதுவும் முகூர்த்த நாட்களில் ஒரு லட்சம் இட்லி வரை கூட விற்பனையாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.
- ஈரோட்டின் அடையாளமாக இட்லி சந்தை மாறியுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் மாட்டுச்சந்தை ஒன்று இருந்துள்ளது. ஈரோடு கருங்காலய மாட்டுச்சந்தை மிகவும் பிரபலமானது.
- இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள். அவர்களின் பசியைப் போக்குவதற்காக இங்கு முதலில் இட்லி கடைகள் ஆரம்பிக்கப்பட்டன.
- காலையில் சந்தைக்கு வருபவர்கள் இங்கு இட்லி சாப்பிடுவதுடன் வீட்டிற்கும் பார்சல் வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். பலர் இங்கு இட்லி சாப்பிடுவதற்காகவே வர ஆரம்பித்தார்கள்.
- ஒரு கட்டத்தில் அதிகாலையில் ஆவி பறக்க சுடச்சுட இட்லிகளை சுவைத்த பிறகுதான் விற்பனையே துவங்கும் என்ற நிலை உருவானது. மக்களின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க இட்லி கடைகளும் விரிவானது.
- மாட்டுச்சந்தை இடம் மாறியபோதும் இந்தப் பகுதியில் இட்லி சந்தை தொடர்ந்து இயங்கி வருகிறது.
- இப்போது இப்பகுதிகள் முழுக்க இட்லி சந்தையாகவே மாறிவிட்டது
- இட்லி சந்தை பிரபலமடைந்ததால், ஈரோடு அருகில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடக்கும் விசேஷங்கள், கோயில் விழாக்கள், திருமணம் போன்ற பலவற்றுக்கும் காலை உணவுக்கு இங்கிருந்துதான் இட்லி சப்ளை செய்யப்படுகிறது.
- அத்துடன் ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் பெரும்பாலான ஓட்டல்களுக்கு இங்கிருந்துதான் இட்லி எடுத்துச் செல்லப்படுகிறது.
- அதிகாலை முதல் இரவு 10 மணி வரையிலும் சுடச்சுட இட்லிகள் அதற்கு பக்கவாத்தியங்களான சட்னி வகைகளுடன் கிடைக்கிறது.
- மிகவும் மென்மையான மல்லிகைப் பூ இட்லி, குஷ்பூ இட்லி, இளநீர் இட்லி, ரவா இட்லி, ஜவ்வரிசி இட்லி, சாண்ட்விச் இட்லி, மிளகு, சீரகம், கொத்தமல்லி சேர்த்த காஞ்சிபுரம் இட்லி, கப் இட்லி, மினி இட்லி என அனைத்து வகை இட்லிகளும் இங்கு கிடைக்கின்றன.
- ஆடம்பரமின்றி, பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் மேசைகளுடன், வரிசையாக சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு செயல்படுகின்றன.
கணித ஆசிரியரொருவர் கற்றுக்கொடுத்தது
1-ஒன்று
10-பத்து
100-நூறு
1,000-ஆயிரம்
10,000-பத்தாயிரம்
1,00,000-ஒரு லட்சம்
10,00,000-பத்து லட்சம்
1,00,00,000-கோடி
10,00,00,000-பத்து கோடி
1,00,00,00,000-நூறு கோடி
10,00,00,00,000-ஆயிரம் கோடி
10,00,00,00,00,000-லட்சம் கோடி
என்று.இதில் வலமிருந்து இடமாக ஆயிரம் தசமஸ்தானத்திற்கு பின்னர் இரண்டிரண்டு பூஜ்ஜியங்களுக்கு பிறகு குறியிடப்படும் இலக்கம் ஒன்றினால்(1) எண்களின் பெயர்வரிசை உயரிலக்கமாக(HIGHER VALUE DIGIT) கருதப்படும் என்றார்.
அதுவே கீழிருப்பதுபோல என்றால் மூன்று -மூன்று பூஜ்யங்களுக்கு முன்னர் சேர்க்கப்படும் இலக்கம் ஒன்றினால்(1) பெயரிடப்படும் என்கிறார்.
1,000-ஆயிரம்
1,000,000-மில்லியன்
1,000,000,000-பில்லியன்
1,000,000,000,000-ட்ரில்லியன்
1,000,000,000,000,000-குவாட்ரில்லியன்
சுருக்கமாக கூறினால் மூன்று- மூன்று பத்தின் மடங்குகளாக பெருகும் என்றார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி
ரிஷபம்
பாகப்பிரிவினைகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் கலகலப்பான சூழல்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மிதுனம்
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பணி நிமித்தமான விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
உறவினர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். மாற்றமான அணுகுமுறையால் நன்மை அடைவீர்கள். வியாபார விருத்திக்கான சூழல் சாதகமாகும். இழுபறியான வரவுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். சஞ்சலம் இல்லாத முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சிம்மம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உறவுகள் இடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்லவும். நண்பர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். வியாபார விஷயங்களில் சில புரிதல்கள் அதிகரிக்கும். தாய் மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
குடும்ப உறுப்பினர்களிடத்தில் புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அலுவலகத்தில் முயற்சிக்கு ஏற்ப மாற்றமான சூழல்கள் அமையும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
துலாம்
பேச்சுக்களில் சற்று விவேகம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிந்தனை போக்கில் தெளிவுகள் உண்டாகும். கலைத்துறையில் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
தனுசு
எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அரசு பணிகளில் இருந்து தாமதங்கள் மறையும். இழுபறியான பிரச்சனைகளுக்கு சில தெளிவுகள் கிடைக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் ஏற்படும். தொட்ட காரியங்கள் சாதகமாக முடியும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் மாற்றம் விஷயங்களில் பொறுமை வேண்டும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் மறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் புதிய வியூகங்களை செயல்படுத்துவீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் அமையும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
தனம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். நேரம் தவறி உணவு உண்பது தவிர்க்கவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 14.9.2025
இன்று காலை 09.15 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று பிற்பகல் 01.17 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று பிற்பகல் 12.28 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.
இன்று காலை 09.15 வரை பவம். பின்னர் இரவு 08.08 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று பிற்பகல் 01.17 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம் :
காலை : 06.00 முதல் 07.00 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
வட கொரியாவில், தென் கோரியா உள்ளிட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளன.
தென்கொரியாவின் பிரபல 'கே-டிராமாக்கள்' (K-Dramas) உட்பட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகித்ததற்காக, பல வட கொரியர்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர் என வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் ஜேம்ஸ் ஹீனன் தெரிவித்தார்.
இந்த 14 பக்க அறிக்கை, 2014 முதல் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வட கொரிய அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கைக்கு அனுமதியளித்த ஐ. நா பேரவையின் தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது.