·   ·  2009 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆளி விதையின் மருத்துவ குணங்கள்

ஆளி விதை என்பதை சிறிய அளவில் ப்ரௌன் நிறத்தில் காணப்படும். இந்த ஆளி விதையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

ஆரோக்கியம் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடி செய்து சாப்பிடலாம், முளைக்கட்ட வைத்து சாப்பிடலாம் அல்லது உணவில் தூவி சாப்பிடலாம். இருப்பினும் இந்த ஆளி விதையை பொடி செய்து அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதினால் உடலுக்கு முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 1

ஆளி விதை மருத்துவ குணங்கள் இதைய நோய் உள்ளவர்கள், இதைய நோய் நமக்கு வராமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோர், இவர்கள் அனைவரும் அவசியம் இந்த ஆளி விதையினை தினமும் சாப்பிடுவதினால் இதைய நோய் சம்மந்தப்பட்ட எந்த நோயும் அவர்களை தீண்டாமல் பாதுகாக்கும்.

ஆளி விதையை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அவித்து சுண்டல் போல் தாளித்து சாப்பிடுவதினால் இதயத்தை பாதுகாக்கும். மேலும் மூளைக்கு சக்தியை அதிகரிக்கும்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 2

பக்கவாதம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆளி விதையை தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிட்டுவர பக்கவாதம் பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 3

ஆளி விதை பயன்கள் – சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிட்டுவர சிறுநீரகத்தில் ஏற்படு அழற்சியை குறைக்கும்.

சிறுநீரகம் ஆரோக்கியமாக பாதுகாக்கப்படும். எனவே சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிடுங்கள்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 4

மலச்சிக்கலால் அவஸ்த்தைப்படுபவர்கள் தினமும் ஆளிவிதையை சாப்பிட்டு வர. இவற்றில் இருக்கும் நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் ஆளி விதை பாதுகாக்கும். இந்த ஆளி விதையை சாப்பிட்ட பிறகு தேவையான அளவு நீரினை பார்க்கவேண்டும். இல்லையெனில் அதுவே மலச்சிக்கல் அல்லது வாயு தொல்லையை உண்டாக்கிவிடும்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 5

சில பெண்களுக்கு ஹார்மோன்கள் குறைப்பாட்டினால் முடி கூட்டுதல், உயர் இரத்த அழுத்தம், மனஉளைச்சல் இவை அனைத்தும் ஏற்படும். இப்படி பட்டவர்கள் தினமும் ஆளி விதையை ஒரு கையளவு சாப்பிட்ட்டுவர உடலுக்கு தேவையான ஹார்மோன்களை வழங்கும்.

குறிப்பாக ஆளி விதை மாதவிடாயை ஒழுங்குபடுத்தும், அந்த சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலை வலி, பதற்றம் போன்ற பிரச்சனைகளை இந்த ஆளி விதை கட்டுப்படுத்தும்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 6

இந்த ஆளி விதை மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளிவிதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

எனவே புற்று நோய் நமக்கு வராமல் இருக்க தினமும் இந்த ஆளி விதைகளை ஒரு கையளவு அவித்தோ அல்லது பொடி செய்தோ சாப்பிடுங்கள்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 7

பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மேலும் அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். கர்ப்பப்பைச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

ஆளி விதையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

ஆளி விதை மருத்துவ குணங்கள் – 100 கிராம் ஆளிவிதை 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 530 கலோரி சக்தி, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன.

இந்த மூன்று சத்துகளும் முதலில் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.

ஆளி விதை சாப்பிடும் முறை:

ஒரு கையளவு விதையை எடுத்து மிக்ஷி ஜாரில் சேர்த்து பவுடர் போல் நைசாக அரைத்து கொள்ளவும்.

இந்த பவுடரை ஒரு காத்து புகாத டப்பாவில் அடைத்து தனியா எடுத்து வைத்து கொள்ளவும். இப்பொழுத் ஒரு துண்டு இஞ்சியை இடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு டம்ளரில் மோர் எடுத்து கொள்ளவும், இந்த மோருடன் ஒரு ஸ்பூன் அரைத்த ஆளி விதையின் பவுடர் மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த மோரினை தினமும் காலை உணவு சாப்பிட்ட பிறகு ஒரு 1/2 மணி நேரம் கழித்து வந்த பானத்தை அருந்த வேண்டும். இவ்வாறு ஒரு மண்டலம் வரை அருந்துவதனால் உடல் எடை குறையும், உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆளி விதை பொடி சாப்பிடுபவர்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். இல்லையெனில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

கர்ப்பிணி பெண்கள் இந்த ஆளி விதை சாப்பிட கூடாது.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதைய நோயாளிகள் ஆகியவர்கள் அவசியம் இந்த ஆளிவிதை சாப்பிடுவதினால் நல்ல பலன் கிடைக்கும்.

முக்கிய குறிப்பு: தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் சாப்பிடுவது நல்லது..

  • 404
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங