·   ·  111 posts
  • 2 members
  • 2 friends

சந்திர வழிபாடு நாளை (9-5-2024) - பண வரவை அதிகரிக்கும்

சிவன், பார்வதி மற்றும் விநாயகரின் சிரசில் இருக்கக்கூடிய மூன்றாம் பிறையை நாம் தரிசனம் செய்யும் பொழுது இவர்கள் மூவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறையை நாம் தரிசனம் செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. சந்திர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கவும் இந்த சந்திர வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட சந்திர வழிபாடு நாளை (9-5-2024) வியாழக்கிழமை அன்று வருகிறது.

குரு பகவானுக்குரிய கிழமையாகவும் குபேர பகவானுக்குரிய கிழமையாகவும் திகழக்கூடிய வியாழக்கிழமை இந்த சந்திர தரிசனம் வருகிறது என்பதால் குரு பகவான், குபேர பகவான் இவர்களுடைய அருளும் நமக்கு ஒரு சேர கிடைத்து நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதற்கு பண வரவை அதிகரிக்கும் ஒரு அற்புதமான நாளாக தான் நாளை திகழ்கிறது. இந்த நாளை எந்த முறையில் நாம் பயன்படுத்திக் கொண்டால் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய பண தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும்.

வியாழக்கிழமை என்றாலே குரு பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. அதனால் அன்றைய தினம் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்வது மிகவும் சிறப்பு. நாளை மாலை 6:00 மணிக்கு மேல் மேற்கு திசையில் மூன்றாம் பிறை தரிசனத்தை நாம் காணும் பொழுது மஞ்சள் நிற ஆடை அணிந்திருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய நெற்றியில் மஞ்சளை வைத்திருக்க வேண்டும். இதோடு இன்னும் இரண்டு பொருட்களை நம் கையில் வைத்துக் கொண்டு சந்திர தரிசனத்தை செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பண தேவைகள் பூர்த்தியடைவதற்குரிய வழிகள் நமக்கு கிடைக்கும்.

அந்த பொருட்கள் தான் விரலி மஞ்சள் மற்றும் நாணயம். நாளை மாலை 6:00 மணிக்கு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சிறிது மஞ்சளை இழைத்து நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். பெண்களாக இருக்கும் பட்சத்தில் மஞ்சள் நிற பூக்களை தலையில் வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. பிறகு கையில் ஒரு விரலி மஞ்சளையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

அப்படி சந்திர தரிசனம் செய்யும் பொழுது நமக்கு தேவையான பண வரவு கிடைக்க வேண்டும் என்றும் வருமானம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் சந்திர பகவானை பார்த்து மனதார வழிபட வேண்டும். பிறகு இந்த ஒரு ரூபாய் மற்றும் மஞ்சளை எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு நாம் விளக்கேற்றி வைத்திருப்போம் அல்லவா அந்த தீபத்தையும் சிவபெருமானையும் பார்வதியையும் விநாயகரையும் மனதார வழிபட வேண்டும்.

சந்திர தரிசனம் செய்யும் பொழுது “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை மனதார கூற வேண்டும். இந்த ஒரு ரூபாய் மற்றும் விரலி மஞ்சள் மூன்று நாட்கள் அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். மூன்று நாட்கள் கழித்து ஒரு ரூபாய் நாணயத்தை சுப காரிய செலவிற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மஞ்சளை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். விரலி மஞ்சள் கிடைக்காத பட்சத்தில் குண்டு மஞ்சளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். குண்டு மஞ்சளை பயன்படுத்தினால் பெண்கள் அதை உரசி முகத்தில் தடவி குளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கிழமை குருபகவானிற்குரிய கிழமை ஆகவும், நேரம் குபேர பகவானுக்குரிய நேரமாக திகழ்வதால் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது இவர்கள் இருவரின் அருளையும் பரிபூரணமாக பெறுவோம் என்பதால் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பண தேவைகளும் பூர்த்தியடையும்.

  • 295
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்