·   ·  1018 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆஸ்துமா நோய் யார் யாருக்கு வரும்?

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை அன்று உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சுகாதார அமைப்பும் அதனுடன் இணைந்து, பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பணியாற்றுகின்றன. அந்த வகையில் இது குறித்து சென்னை ரெலா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக் கூறிய சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஆஸ்துமா உயிரிழப்பு இந்திய அளவில் 4.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில் அதில் பெரும்பாலான உயிரிழப்புகள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் தான் வருகிறது என மருத்துவர் பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக் கூறியுள்ளார். மக்கள் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஆஸ்துமா இருமல் சளியை சாதாரண இருமல் சளி என நினைத்து தன்னிச்சையான சிகிச்சையை மேற்கொள்கின்றனர். மேலும் பலர் மூச்சு திணரல் ஏற்படும்போது மருந்துக் கடைகளில் இருந்து Blue Inhaler-களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதன் பின்னால் இருக்கும் விளைவுகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார்.

Blue Inhaler என்றால் என்ன?:

இது ஒரு வகையான இன்ஹெய்லர் அதாவது மருந்து நிரப்பப்பட்ட அந்த இன்ஹெய்லரை நோயாளி தனது வாயில் வைத்து இழுப்பார். இப்படி செய்வதன் மூலம் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நோயாளி மூச்சு திணரல், நெஞ்சு பிடிப்பு உள்ளிட்ட பல உபாதைகளில் இருந்து விடுபடுவதுபோல் உணருவார். ஆனால் இது நிரந்தரமான தீர்வு தருமா? என கேட்டால் அது கட்டாயம் கிடையாது எனக்கூறுகிறார் மருத்துவர். இந்த salbutamol Blue Inhaler-ர் ஆஸ்துமாவிற்கான நிரந்தர தீர்வை தராது எனவும், இதனால் தற்காலிக ஆசுவாசம் பெரும் நபர்கள் மீண்டும், மீண்டும் அதை பயன்படுத்துவதாகவும் கூறினார். மருத்துவரின் ஆலோசனை இன்றி இதை தொடர்ந்து பயன்படுத்தும்போது காலப்போக்கில் ஆஸ்துமா அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாவதாகவும் மருத்துவர் பென்ஹூர் கூறியுள்ளார். மேலும், இது குறித்து 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகளும், இந்த Blue Inhaler பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு நோயாளிகளை அறிவுறுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கான சிறந்த சிகிச்சை எது?: ஆஸ்துமா நோயாளிகளுக்கான சிறந்த சிகிச்சை இன்ஹெய்லர் ஸ்டிராய்டுகள் மட்டும்தான். ஆனால் பலரும் ஸ்டிராய்டு என்ற வார்த்தையை கேட்டு பயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள தயங்குகின்றனர் என மருத்துவர் கூறியுள்ளார். இந்த இன்ஹெய்லர் ஸ்டிராய்டுகளை நோயாளிகள் பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பு பாதிப்புகள் குறைக்கப்படும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்னென்ன?

நெஞ்சு இறுக்கம்

மூச்சு திணரல்

மூச்சு விடுகையில் விசில் சத்தம்

வரட்டு இருமல்

சளி இருமல்

இவை ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகள். சரி ஒருவருக்கு ஆஸ்துமா இருக்கிறதா? இல்லையா? என்பதை எந்த வகையான மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என கேட்டபோது மருத்துவர் கூறிய பதிலை பாருங்கள்.

ஆஸ்துமா பரிசோதனைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்?: முன்பு கூறிய அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அனுகி பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட் எடுக்க வேண்டும். அதாவது நுரையீரலின் அளவு மற்றும் திறன், மார்ப்பு பகுதியில் எக்ஸ்ரே, eosinophil count மற்றும் eosinophilia, IG போன்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனைகளை நீங்கள் மேற்கொள்வதன் மூலம் அந்த நபருக்கு ஆஸ்துமா இருக்கிறதா? இருந்தால் அதன் பாதிப்பு விகிதம் எவ்வளவு என்பது உள்ளிட்ட பல தகவல்கள் இதன் மூலம் கிடைக்கப்பெறும் எனக்கூறினார். மேலும், பலரை பரம்பரை நோயாக தாக்குகிறது இந்த ஆஸ்துமா எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அலர்ஜிக்கும், ஆஸ்துமாவிற்கும் என்ன தொடர்பு?: அஸ்துமா வருவதற்கான முக்கியக் காரணம் அலர்ஜிதான் அதாவது ஒவ்வாமை. ஆரம்ப காலகட்டத்தில் ஆஸ்துமா தொடர்பான இந்த அலர்ஜி, நாசி ஒவ்வாமை போல்தான் தெரியும் என மருத்துவர் கூறியுள்ளார். இந்த அலர்ஜியானது, புழுதி, காற்று மாசு, பெர்ஃபியூம், கெமிக்கல்ஸ் உள்ளிட்டவற்றாலும் ஏற்படலாம். இதன் காரணத்தால் மூக்கில் தண்ணீர் வடிதல், அறிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் காலப்போக்கில் அந்த நபருக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஆஸ்துமாவுக்கும் அலர்ஜிக்கும் நெங்கிய தொடர்பு உண்டு. இந்த ஒவ்வாமைகள் உடலின் உள் எந்த உறுப்பை தாக்குகிறதோ அதற்கு ஏற்ற வாறு பாதிப்புகள் மாறுபடும். இது நுரையீரலை பாதிக்கும்போது அதை நாம் மூச்சுகுழாய் ஆஸ்துமா (Bronchial asthma) என கூறுகிறோம் என நுரையீரல் நிபுணர் பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக் கூறியுள்ளார்.

  • 277
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்