நடிகை பார்வதியின் நற்குணம்

தங்கலான் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை பார்வதி பேசினார். மேடைகளில் அவர் அரசியல் சரித்தன்மையோடு பேசுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், இந்நிகழ்ச்சியில் அவரிடம் இன்னொரு விஷயம் மிகவும் கவனிக்க வைத்தது.

தற்போது ஆடியோ வெளியீட்டு விழா என்ற பெயரில் நடக்கும் பெரும்பாலான விழாக்கள் உண்மையில் பாடல்களை மையமாகக் கொண்டு நடப்பவை அல்ல. படத்திற்கு ஒரு விளம்பரம் தேவை; அதற்காக ஒரு நிகழ்ச்சி. இதுவே யதார்த்தம். இது எல்லோருக்குமே தெரிந்த விஷயமும்கூட!

ஆனால், பெயரளவில் மட்டும் அதன் பெயர் 'ஆடியோ வெளியீட்டு விழா'. ஆனால் பெயரளவுக்கு நடக்கும் இந்த விழாக்களில் சும்மா பெயரளவுக்கு, சம்பிரதாயத்துக்காவது இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் பற்றிப் பேசுவதுதான் அடிப்படை நாகரிகம். அறமும்கூட.

ஆனால் பெரும்பாலான படங்களின் ஆடியோ வெளியீடு அப்படி நடப்பதே இல்லை. சில நடிகர்களுக்குத் தங்கள் படத்தின் பாடலாசியர்கள் யார், யார் என்றுகூட தெரியவில்லை!

சில ஆண்டுகளுக்கு முன்பு, காலா படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக நடந்தது. சக நடிகர்கள், தயாரிப்பாளர், தவளைக் கதை, குதிரையோட்டம், நதிநீர் இணைப்பு, தத்துவம், உலகம், அறிவு, குடும்பம், பொருளாதாரம் குறித்தெல்லாம் பேசிய ரஜினி, படத்துக்குத் தொடர்பே இல்லாத நபர்கள் பற்றியும்கூட பேசினார். ஆனால் கடைசி வரை, இசை பற்றி மட்டுமல்ல; 'சந்தோஷ் நாராயணன்' என்ற பெயரைக்கூட அவர் உச்சரிக்கவில்லை. சுத்தமாகவே மறந்துவிட்டார். (நிகழ்ச்சியை நேரில் பார்க்கவில்லை; யூடியூப்பில் அப்படித்தான் உள்ளது) 'கல்யாண அவசரத்துல தாலி கட்ட மறந்த கதை' என்ற சொலவடை ஒன்று உண்டு. அந்த காலா ஆடியோ ரிலீஸ் விழா(?)வைக் கண்டபோது அதுதான் நினைவுக்கு வந்தது. கண்டிப்பாக

ரஜினி திட்டமிட்டு அதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. ஜஸ்ட் மறந்திருப்பார் அவ்வளவுதான்.

ஆனால் ரஜினி போன்ற ஓர் உச்ச நடிகரின் பட விழாவில் நடந்த அந்த சம்பவம் எவ்வளவு அபத்தமான ஒன்று என குறிப்பிடவே அதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சந்தோஷ் நாராயணனின் இடத்தில் இருந்து பார்த்தால்தான் இதை உணர முடியும்.

இப்போது பார்வதி விஷயத்துக்கு வருவோம்.

தங்கலான் ஆடியோ ரிலீஸ் விழாவில் பேச வருகிறார் பார்வதி. தமிழ் சினிமாவின் ஆடியோ ரிலீஸ் விழாக்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால், விழாவில் இசையமைப்பாளர் பற்றி ஒருவர் எப்போது வேண்டுமானாலும்கூட பேசலாம். எப்படியோ அட்லீஸ்ட் பெயரையாவது சொன்னால் சரிதான் என்ற நிலைதான் உள்ளது.

ஆனால், பார்வதி தனது பேச்சைத் தொடங்கும்போதே முதலில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குறித்து பேசிவிட்டுத்தான் மற்றவர்கள் பற்றிப் பேசவே ஆரம்பித்தார்.

நடப்பது படத்தின் ஆடியோ வெளியீடு. அந்நிகழ்ச்சியின் நாயகன்- இசையமைப்பாளர்தான். அந்த வகையிலேயே அவரை முதலில் குறிப்பிட்டுப் பேசினார் பார்வதி. அதன் பிறகே ஏனையோர் பற்றி அவர் பேசுகிறார். இத்தனைக்கும் அவர் ஒரு வளரும் இளம் நடிகைதான்!

  • 905
  • More
சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு