Ads

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் புயலும் இல்லத்தில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் பெற்றோருமான பஷீர் காக்கா ஏற்றி வைத்தார்.

  • 1219
  • More
  • 525
  • More
  • 520
  • More
  • 528
  • More
  • 533
  • More
  • 533
  • More
  • 502
  • More
  • 507
  • More
  • 513
  • More
  • 524
  • More
  • 541
  • More
  • 539
  • More
  • 544
  • More
  • 535
  • More
  • 524
  • More
  • 534
  • More
  • 541
  • More
  • 547
  • More
  • 539
  • More
  • 526
  • More
Comments (0)
Login or Join to comment.
·
Added article
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெரியும்ணே என்றார் கஜபதி. அப்படியா அந்த பணத்தைக் கொடு என்று கஜபதியிடம் இருந்து பணத்தை வாங்கி தான் ட்ரைவரிடம் கொடுத்து இளங்கோவனிடம் கொடுக்க சொல்லி அனுப்பினார்கஜபதிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது அவரின் முகம் மாறுவதைக் கண்ட எம். ஆர். ராதா என்னையா ஒரு மாதிரி இருக்க என்றார்.என்னண்ணே நான் கொடுத்துற மாட்டனா அவ்வளவு நம்பிக்கை இல்லையா என்றார் கஜபதி.அதற்கு எம். ஆர். ராதா இளங்கோவன் எவ்வளவு பெரிய வசனகர்த்தா கொடிகட்டி பறந்தவரு. செட்ல ஒரு வசனத்தை மாத்தணும்னா கூட அவரைத் தேடி போய் அனுமதி வாங்கி தான் மாத்துவாங்க..அவரு ஓகோன்னு இருக்கிறப்ப நீ பாத்திருக்க அவரை நல்லா தெரியும்னு வேற சொல்ற. இப்ப அவரு நிலைமை சரி இல்லை. அவரு வீட்டை ஜப்தி செய்ய போறாங்களாம். நீ போய் பணம் குடுக்குறப்ப என்ன நினைப்பாரு நம்ம நிலைமை இப்படி ஆயிருச்சேன்னு வருத்தப்படுவார்ல.அதான் அவருக்கு தெரியாதவங்க மூலம் கொடுத்து அனுப்பிச்சேன். அவரு அவமரியாதையா நினைக்க கூடாதுல்ல என்று தெளிவு படுத்தினார்.
  • 72
·
Added article
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெரியும்ணே என்றார் கஜபதி. அப்படியா அந்த பணத்தைக் கொடு என்று கஜபதியிடம் இருந்து பணத்தை வாங்கி தான் ட்ரைவரிடம் கொடுத்து இளங்கோவனிடம் கொடுக்க சொல்லி அனுப்பினார்கஜபதிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது அவரின் முகம் மாறுவதைக் கண்ட எம். ஆர். ராதா என்னையா ஒரு மாதிரி இருக்க என்றார்.என்னண்ணே நான் கொடுத்துற மாட்டனா அவ்வளவு நம்பிக்கை இல்லையா என்றார் கஜபதி.அதற்கு எம். ஆர். ராதா இளங்கோவன் எவ்வளவு பெரிய வசனகர்த்தா கொடிகட்டி பறந்தவரு. செட்ல ஒரு வசனத்தை மாத்தணும்னா கூட அவரைத் தேடி போய் அனுமதி வாங்கி தான் மாத்துவாங்க..அவரு ஓகோன்னு இருக்கிறப்ப நீ பாத்திருக்க அவரை நல்லா தெரியும்னு வேற சொல்ற. இப்ப அவரு நிலைமை சரி இல்லை. அவரு வீட்டை ஜப்தி செய்ய போறாங்களாம். நீ போய் பணம் குடுக்குறப்ப என்ன நினைப்பாரு நம்ம நிலைமை இப்படி ஆயிருச்சேன்னு வருத்தப்படுவார்ல.அதான் அவருக்கு தெரியாதவங்க மூலம் கொடுத்து அனுப்பிச்சேன். அவரு அவமரியாதையா நினைக்க கூடாதுல்ல என்று தெளிவு படுத்தினார்.செய்யும் செயலில் தெய்வம் தோன்றும்..!
  • 88
இந்தியாவில் மிகவும் பணக்கார கடவுள் என்று மக்கள் அனைவராலும் கூறப்படும் கடவுள் திருப்பதியில் பள்ளி கொண்டிருக் கும் வெங்கடேச பெருமாள். அப்படிப்பட்ட திருப்பதி கோவில் பற்றி நீங்கள் அறிந்தி டாத சில சுவாரசியமான தகவல்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.ஏழுமலையான் சிலையில் இருந்து கழட்டப் படும் அணிகலன்கள் எப்போதுமே சூடாகவே இருக்கும்.புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமா ளுக்கு உகந்த மாதம். அந்த மாதத்தில் பெரும்பாலானோர் பெருமாளை தரிசிக்க திருப்பதி செல்வார்கள். திருப்பதி என்றால் பெருமாள் மட்டும் தான் சிறப்பு என்றில்லை. அதையும் தாண்டி சில சிறப்பான விஷயங்களும் உள்ளன.1. பெருமாளுக்கு சார்த்தப்படும் பூ, அபி ஷேகப்பால், நெய், மோர் , தயிர், துளசி இலைகள் இவை எல்லாமே ஒரு கிராமத்திலிருந்து பிரதியேகமாகக் கொண்டு வரப்படுகிறது. அந்த கிராமமே பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறது. இது திருப்பதியிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு இதுவரை யாரும் சென்றதில்லை. அனுமதித்ததில்லை. கோவில் அர்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.2. பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடி உண்மையானது என சொல்லப்படுகிறது. அதாவது பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடியின் சிலவற்றை இழந்துள்ளார். இதை அறிந்த காந்தர்வ பேரரசி நீலா தேவி இதை கவனித்து விட்டு தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு அவர் தலையில் சூடிக்கொண்டுள்ளார். அதனால் தான் பெருமாளை தரிசிக்கும் ஒவ்வொரு வரும் தங்கள் முடியை தானமாக பெருமாளுக்கு கொடுப்பதாக சொல்லப்படுகிறது.3. பலருக்கும் திருப்பதியின் பெருமாள் சிலை சன்னதியின் நடுவில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் சிலை சன்னதியின் வலது கை மூலையில் அமைந்துள்ளது.4. பெருமாளின் சிலை பின்புறம் உள்ள சுவற்றில் காதை வைத்துக்கேட்டால் கடல் அலை சத்தம் கேட்பதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் பார்க்கடலில் இருப்பது போன்ற அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக நம்பப்படுகிறது.5. பெருமாள் வீற்றிருக்கும் கருவறையில் எரியும் மண் விளக்குகள் ஒரு போதும் அணைத்ததே இல்லை என்று சொல்லப்படுகிறது. அது எப்போது ஏற்றப்பட்டது குறித்த பதிவு இல்லை என்றாலும் ஏற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை அணைந்ததே இல்லை.6. 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அங்கிருந்த மன்னன் குற்றம் செய்த தண்டனைக்காக 12 பேரை தூக்கிலிட்டு மரண தண்டனை விதித்துள்ளார். பின் அவர்கள் இறந் த பிறகு உடலை திருப்பதி கோவிலின் சுவற்றில் கட்டியுள்ளார். இதனை பொருத் துக்கொள்ள முடியாமல் பெருமாள் நேரடி யாகத் தோன்றி தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.7. விக்கிரத்தின் பின்புறம் எப்போதும் ஒருவித ஈரப்பதமும், தண்ணீர் ஊற்றபடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இது குறித்து பல ஆய்வுகள் செய்தும் அதன் காரணத்தை அறிய முடியவில்லை என்கின்றனர்.8. பெருமாளுக்கு சார்த்தப்பட்ட மலர்களை மறுநாள் காலை சுத்தம் செய்த பின் அவற்றை அர்சகர்கள் கர்பகுடி அல்லது கருவறை கூடை யில் போடுவதில்லை. மாறாக கோவிலின் பின் பக்கத்தில் அமைந்துள்ள அருவியில் கொட்டுகின்றனர். அப்படி கொட்டும் பூக்களை ஒரு போதும் அவர்கள் அங்கு பார்த்ததில்லையாம். அவை அனைத்தும் கோவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எர்பேடு என்ற கிராமத்திற்கு சென்று தேங்கி நிற்கின்றனவாம்.9. அதாவது பச்சை கற்பூரம், கற்பூரம் என எந்த வகை கற்பூரமாக இருந்தாலும் அதை ஒரு கல்லில் வைத்து தொடர்ந்து ஏற்றினால் அல்லது அதன் காற்று பட்டாலே அந்த கல் விரிசில் அல்லது பிளவை உண்டாக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் திருப்பதி சிலையில் இன்றளவும் எந்த விரிசல், பிளவுகளும் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கான எந்த அடையாளங்களுமே இல்லை என்கின்றனர்.10. திருப்பதி ஏழுமலையான் சிலையின் பின்புறமாக எப்போதும் ஈரம் கசிந்து கொண்டே இருக்குமாம். ஏன் என்ற காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கோவிலுக்குள் இருக்கும் பூசாரிகள், அந்த இடத்தினை ஈரமின்றி வைத்திருப்பதையே ஒரு வேளையாக வைத்திருக்கின்றார்கள்.
  • 91
படத்தில் இருப்பது யார் எனக் கேட்டால்,இது கடவுள் லட்சுமி என்று மின்னல் வேகத்தில் பதில்கள் பாய்ந்து வரும்.இப்படித் தான் கடவுள் லட்சுமி இருப்பார் என வரையறை செய்தவர்கள் யார்?அவர்களுக்கு எப்படி தெரியும்?லட்சுமி மட்டுமல்ல நாம் தினமும் காலண்டரில் பார்க்கும்,வீட்டு பூஜை அறைகளில் வைத்து வழிபடும் சரஸ்வதி,முருகன்,சிவன்,விநாயகர்...என சகலவிதமான இந்துக் கடவுள்களுக்கு பொருத்தமான உருவங்களைத் தந்து அவர்களை உலகறிய செய்தவர்,கோவில்பட்டி திரு.சி.கொண்டயராஜூ என்ற ஓவியர் தான்.ஓவிய மாமேதை கொண்டயராஜூ அவர்கள் 1898 ல் சென்னை மைலாப்பூரில் பிறந்தார்.இவரது தந்தை குப்புசாமி ராஜூ ஒரு தலைசிறந்த சித்த மருத்துவர்.ஆனாலும் தன் மகனை சித்த மருத்துவத் துறைக்கு இழுக்காமல்,மகன் விரும்பிய பாரம்பரிய ஓவிய கலையை கற்க வைத்தார்.ஆரம்ப நாட்களில் சென்னையில் முருகேச நாயக்கர்,சுப்பா நாயுடு போன்ற தலை சிறந்த ஓவியர்களிடம் ஓவியக் கலை கற்ற கொண்டயராஜூ,1916 ல் சென்னை மாகாண கலைக் கல்லூரியில் சேர்ந்தார்.1918 ல் முதல் மாணவராகத் தேறினார்.ஓவியக் கலைஞராக அவரது கலைப் பயணம்,பழனியப்பா பிள்ளை என்பவர் நடத்திய "ஸ்ரீ தத்துவ மீனலோசனி பால சற்குண சபா" என்ற நாடக நிறுவனத்தில் தொடங்கியது.அந்த குழு நடத்திய நாடகங்களுக்கு பின்னனி வரைந்து தரும் பணியை செய்து வந்தார்.அந்த நாடகக் குழு பல்வேறு காரணங்களால் 1942 ல் கோவில்பட்டியில் கலைந்தது.அந்த இடத்தில் கொண்டயராஜூ அவர்களுக்கு இயற்கை வேறு பாதையை உருவாக்கியது.தன்னை நம்பி தன்னுடனே இருந்து பணி செய்து வந்தவர்களுக்காக,"தேவி ஆர்ட் ஸ்டூடியோ" என்ற கலைக் கூடத்தை கொண்டயராஜூ கோவில்பட்டியில் உருவாக்கினார்.அதே கால கட்டத்தில் தான் கோவில்பட்டியில் இருந்து இருபத்தைந்து கிமீ தொலைவில் இருந்த சிவகாசியில் "லித்தோ" எனும் பிரிண்டிங் பிரஸ்கள் உருவாகத் தொடங்கி இருந்தன.லித்தோ அச்சுக் கூடங்களில் காலண்டர்கள்,பூஜைக்கான படங்கள்,வியாபாரப் பொருட்களுக்கான ரேப்பர்கள் என சகல விதமான படங்களுக்கான தேவைகளும் சூடு பிடிக்கத் தொடங்கி இருந்தன.அவர்கள் அனைவரும் கொண்டயராஜூ அவர்களைத் தான் தேடி வந்தனர்.கொண்டயராஜூவும் அவரது சீடர்களான டி.எஸ்.சுப்பையா,மு.ராமலிங்கம்,டி.எஸ்.அருணாச்சலம் போன்றவர்களும்,இவர்களுக்கு சீடர்களாக இருந்தவர்களும் வரைந்து தந்தவை தான் இன்றைக்கும் பயன்பாட்டில் இருக்கும் கடவுள் உருவங்கள்.கொண்டயராஜூ என்ற ஓவியர் வரைந்து தரும் முன்னர் தமிழ்நாட்டு வீடுகளில் பூஜை அறைகளில் கடவுள்களின் படங்கள் இல்லை,ஓவியங்கள் இல்லை.மிக அரிதாக மிகப் பெரிய செல்வந்தர்கள் இல்லங்களில் மட்டும் கேரளத்தின் ராஜா ரவிவர்மா வரைந்த கடவுள் ஓவியங்கள் இருந்தன.சில வீடுகளில் தஞ்சாவூர் ஓவியங்கள் இருந்தன.என்றைக்கு சிவகாசியில் லித்தோ அச்சுக் கூடங்கள் துளிர் விட்டு பெருகத் தொடங்கியதோ, அன்றிலிருந்து தான், கொண்டயராஜூ போன்ற ஓவியர்கள் கைவண்ணத்தில்,காலெண்டர் வடிவில்,சாமானியர்கள் வீடுகளுக்கு உள்ளும் கடவுள் படங்கள்,உருவங்கள் வந்தன.ஒரு சிலரால் மட்டுமே பார்க்க முடிந்த கடவுள் உருவங்களை,சகலருக்குமாக மாற்றியவர் ஓவியர் கொண்டயராஜூ தான்.அந்த வகையில் அதை ஒரு மாபெரும் புரட்சி என்றே கூட சொல்லாம்.இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் கலைக்காவே அர்ப்பணிக்கப்பட்ட அவரது கலை வாழ்வு,1976 ல் அவர் இயற்கையுடன் இணையும் வரையிலும் செம்மையாகத் தொடர்ந்து.காந்தி என்ற சினிமா படம் வந்த பின்பு தான் அவரைப் பற்றி உலகத்திற்கே தெரிந்ததா என்பது தெரியாது.ஆனால் ஓவிய மேதை கொண்டயராஜூ வரைந்த பின்னர் தான் லட்சுமி என்றால் வெளிர் சிகப்பு நிற சேலையில்,இளஞ்சிவப்பு நிற தாமரை மலர் மீது நின்றபடி இருப்பார்,வெள்ளைத் தாமரை மலர் மீது வெள்ளை நிற சேவையில் கையில் வீணையுடன் அமர்ந்தபடி இருந்தால் அது சரஸ்வதி,பச்சைப் புடவையில் இருந்தால் அது மீனாட்சி,வேலுடன் அழகிய முகமாக இருந்தால் அது முருகன்...என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய வந்தது என்பது வரலாறு..
  • 113
ராமேஸ்வரம் மற்றும் காசிக்கு யாத்திரை செல்வது முன்னோர்களின் பாவங்களை நீக்கும் புனித யாத்திரையாகும். பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். ராமேஸ்வரம்-காசி யாத்திரை அடைவது ஆன்மாவின் முழுமையான விடுதலையை அடைய உதவுகிறது. காசி யாத்திரை ஆன்மாவின் இறுதிக் காப்பகமாகக் கருதப்படுகிறது.இந்த யாத்திரை செய்பவர்களுக்கு தர்ம வழியில் வாழும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இப்புனித இடங்களில் வழிபாடு செய்வது நன்மைகளை வழங்கும்.ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் மற்றும் காசியில் கங்கா நதியில் நீராடுவது புனித தீர்த்தங்களின் சுத்திகரிப்பு சக்தியை அளிக்கும். தொடர்ந்து நல்ல காரியங்கள் செய்ய ஊக்கமளிக்கும்.யாத்திரை செய்வதால், ஒவ்வொருவரின் மனமும் பொழுதுபோக்கு வழிமுறையிலிருந்து வெளிவந்து ஆன்மிக சிந்தனையில் நிலைத்திருக்கும்.ராமேஸ்வரமும் காசியும் தொன்மையான இடங்களாகும். இவை தரும் ஆன்மிக அனுபவங்கள் மற்றும் சமய கதைகள் வாழ்க்கையில் பெரும் பலனைத் தரும்.மொத்தத்தில், ராமேஸ்வரம்-காசி யாத்திரை ஆன்மீகத்தை முன்னேற்றி, பாவங்களிலிருந்து விடுதலையையும், இறுதியில் மோட்சத்தையும் அடைவதற்கான வழியாகக் கருதப்படுகிறது.
  • 170
·
Added a news
கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுருதி பாபு என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின் சுசீந்திரத்தில் தனது கணவர் மற்றும் மாமியார், மாமனாருடன் வசித்து வந்த சுருதி பாபு நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தனது மாமியார் செண்பகவல்லி தன்னை கொடுமைப்படுத்துவதாக தற்கொலைக்கு முன் சுருதி பாபு தனது தாயாருக்கு அனுப்பிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.தனது கணவர் தன்னிடம் அன்பாக நடந்து கொண்டதாகவும், ஆனால் தனது மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். தன்னை பிறந்த வீட்டிற்கே திரும்ப வாழாவெட்டியாக அனுப்பி விடுவேன் என தனது மாமியார் கூறி வந்ததாகவும், தனக்கு வாழாவெட்டியாக செல்ல விருப்பமில்லாததால் இந்த முடிவு எடுத்ததாகவும் அவர் பேசியுள்ளார். 
  • 174
·
Added article
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999ம் ஆண்டு நடிகை ப்ரியா ராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு 2015ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.  இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் ப்ரியா ராமனுடன் வளர்ந்து வருகின்றனர். ரஞ்சித் மற்றும் பிரியா ராமனின் புகைப்படம் ஒன்றாக வெளியான நிலையில், ரசிகர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டதாக நினைத்தனர்.ஆனால் சீரியலுக்காக இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்திருந்தது தெரியவந்துள்ளது. தற்போது ரஞ்சித் பிக்பாஸில் விளையாடுவதைக் குறித்து பிரியா பேசியுள்ளார்.“ரஞ்சித் ஆர்வ கோளாறு கிடையாது. அவருக்கு எந்த நேரத்தில் அடிக்க வேண்டும் என்பது தெரியும். அந்த சமயத்தில் அவர் கண்டிப்பாக ஜொலிப்பார்” என்று கூறியிருக்கிறார்.
  • 177
·
Added article
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாளத்தில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் அதிகம் பிரபலம் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான்.இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஷோயா தற்போது ஒரு சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரின் லேட்டஸ்ட் பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.எல்லோருக்கும் இருக்கும் கனவு போல் ஷோயாவிற்கும் சொந்த வீடு கட்டும் ஆசை இருக்க தற்போது அது நிறைவேறியுள்ளதாக கூறி புகைப்படமும் வெளியிட்டுள்ளார். 
  • 180
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஐப்பசி மாதம் 6ஆம் தேதி  மேஷம் -ராசி: மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம் ராசி: பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரப் பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். கல்வியில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மிதுனம் -ராசி: குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உழைப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  கடகம் -ராசி: மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உற்சாகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா சிம்மம் -ராசி:சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். காப்பீடு பணிகளில் ஆதாயம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் கன்னி -ராசி: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த செயல்பாடுகள் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் கடமை உணர்வு அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு துலாம் -ராசி: உத்தியோகப் பணிகளில் ஆதரவு ஏற்படும். தடைபட்ட பணிகள் நிறைவு பெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். நெருக்கமானவர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை விருச்சிகம்- ராசி: முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம்புரியாத கற்பனைகளால் சோர்வு உண்டாகும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் தனுசு -ராசி: தள்ளிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுப காரிய எண்ணங்கள் பலிதமாகும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மகரம் -ராசி:நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கடன் பிரச்சனைகள் குறையும். செல்ல பிராணிகளிடம் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கும்பம் –ராசி:நிதானமான பேச்சுக்கள் மூலம் நன்மதிப்பு உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மீனம் -ராசி: பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். சிந்தித்துச் செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் எதிர்பார்த்த சூழல் அமையும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 220
ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 6 ஆம் தேதி புதன்கிழமை 23.10.2024சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 07.21 வரை சஷ்டி. பிறகு சப்தமி.இன்று காலை 11.48 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 240
Good Morning...
  • 271
  • 310
  • 355
  • 313
  • 329
வடமராட்சியில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியரின் கட்சி அலுவலகம்
  • 333
·
Added a news
ரஷ்யாவில் நேற்று (22) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்தார். இதன்போது குறித்த இருவரும் நட்புடன் உரையாடலில் ஈடுபட்டது வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறித்த சந்திப்பின் போது தற்போது நிலவி வரும் மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் தேவை என தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்ய உக்ரைன் மோதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து மோதல்களையும் பேச்சுவார்த்தைமூலம் தீர்க்க முடியும் என்பது தமது நிலைப்பாடு என இந்தியப் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என தாம் நம்புவதாகவும், அமைதியை ஏற்படுத்த இந்தியா எப்போதும் தயாராக உள்ளதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.00
  • 575
·
Added a news
நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங் இந்த உதவித் தொகையை உத்தியோகப்பூர்வமாகக் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. மேலும் எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் பின்பற்றக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.000
  • 579
·
Added a news
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக தபால் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 581
·
Added a news
ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா செவ்வாயன்று (அக். 22) இஸ்ரேலின் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் உளவுத் தளம் உட்பட இரண்டு நிலைகளை குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளது.ஹிஸ்புல்லாவின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இராணுவ புலனாய்வுப் பிரிவின் Glilot தளத்திற்கு எதிராக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.டெல் அவிவின் புறநகர்ப் பகுதியில் உள்ள மற்றொரு இடத்தில் ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைஃபாவில் உள்ள இஸ்ரேலிய கடற்படைத் தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தோராயமாக ஐந்து எறிகணைகள் லெபனானில் இருந்து வந்ததாகவும், அவற்றில் பெரும்பான்மையானவை இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.இதனிடையே, ஹிஸ்புல்லாவிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வங்கியொன்றின் லெபனான் கிளைகள் மீது தாக்குதல் நடத்திய ஒரு நாளுக்கு பின்னர் இஸ்ரேல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கடந்த திங்களன்று பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் 11 இஸ்ரேலிய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தது, அவற்றில் பல ஹிஸ்புல்லாவின் நிதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அல்-கார்ட் அல்-ஹசான் வங்கி கிளைகள் குறிவைக்கப்பட்டிருந்தன.இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் ஒரு வருடத்திற்கு முன்பு காசா போரின் தொடக்கத்தில் பாலஸ்தீனிய போராளிகளான ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் தொடங்கியது.லெபனான் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, தற்போதைய மோதலில் நாட்டில் 2,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 11,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இதேவேளை, போர் பதற்றம் அதிகரித்துள்ள பின்னணியில் அமெரிக்காவின் (அமெரிக்கா) வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் திங்களன்று மேற்கு ஆசியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.2023 ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி காசா யுத்தம் ஆரம்பமான பின்னர், இப்பகுதிக்கு அவர் மேற்கொள்ளும் 11ஆவது பயணம் இதுவாகும்.இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளான அரபு நாடுகளின் தலைவர்களுடன் காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது பிளிங்கன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.000
  • 581
·
Added a news
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.இதன்போது சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  • 589
·
Added a news
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.இதன்போது சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  • 588
·
Added a news
சிறந்த ஊடக கலாசாரத்தை நாட்டில் உருவாக்குவதற்காக ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை பாராட்டுதல், அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் ஜனாதிபதி ஊடக விருது இரண்டாவது வருடமாகவும் இம்முறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்,தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மூலம் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் ஊடக ஆய்வு உட்பட துறை சார்ந்த 50 விருதுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் துறை சார்ந்த நான்கு சாதனையாளர்களுக்கு நான்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.2023 ஆம் ஆண்டு செய்திகள் மற்றும் படைப்புக்களை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.அந்த வகையில் 2023 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2023 டிசம்பர் 31ம் திகதி வரை வெளியான செய்திகள், படைப்புகளை விருதுக்காக சமர்ப்பிக்க முடியும். நிறுவன பிரதானிகள் ஊடாக விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.000
  • 589
·
Added a news
யூடியூபர் இர்பான் தனது சமூக வலைதளத்தில், தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குழந்தையின் தொப்புள் கொடியை ஒரு மருத்துவர் அல்லது பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் தான் வெட்ட வேண்டும் என்றும், எந்தவித தகுதியும் இல்லாத இர்பான் வெட்டியது தவறு என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே மருத்துவத்துறை இயக்குநர் தெரிவித்திருந்தார்.மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியபோது, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது என்றும், இர்பானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல, தண்டிக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு, இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்களை காப்பாற்ற திமுக அரசு எப்போதும் நினைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
  • 1063
·
Added a post
மழை காலத்தில் நோய்கிருமிகள் அதிகமாக பரவும், அதனால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கத்தை கடைபிடிக்கவும்.  சூடான நீரை பருகுவது உடலுக்குள் கிருமிகள் அடையாமல் பாதுகாக்கும். இஞ்சி, துளசி போன்ற மூலிகைகளுடன் கஷாயம் குடிப்பது நோய்த் தடுப்பு சக்தியை மேம்படுத்தும்.தேன் மற்றும் இஞ்சி சேர்த்து தேநீர் பருகுவது குளிர் மற்றும் சளியைத் தடுக்கிறது.சாப்பிடும் போது புதிய மற்றும் சுத்தமான உணவுகளை மட்டும் உட்கொள்ளவும். சாலையோர உணவகங்களில் உணவு சாப்பிட வேண்டாம். அங்கு கிருமி தொற்று வாய்ப்பு அதிகம்.மழைக்காலத்தில் முழு உடலை மூடும் மழை கோட் மற்றும் குடை கொண்டு செல்லுங்கள். காலணிகளும் தண்ணீரில் நனையாத வகையில் தேர்வு செய்யுங்கள்.மழை நேரத்தில் சுடுமண் சூப்புகளை உட்கொள்வது, மற்றும் தங்கும் இடத்தை சூடாக வைத்திருப்பது உடல் குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும்.வீட்டினுள் ஈக்கள், கொசு போன்றவை வராமல் தடுப்பதற்காக அறையை சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருங்கள்.மழை நீரில் நனைந்தால் உடனே குளித்து, வறண்ட துணி அணிய வேண்டும். மழை நீர் உடலின் நோய்த் தடுப்பு சக்தியை குறைத்து சளி, காய்ச்சலை ஏற்படுத்தும்.
  • 1060
ஒரு சிலர் வாழ்வில் பிரச்சினை வருவதற்கு ஜாதக கட்டம் காரணமாக இருக்கலாம். நல்ல நேரம் கெட்ட நேரம் காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு பிரச்சனை வர கண் திருஷ்டியும், எதிர்மறையாற்றலும், ஏவல் பில்லி சூனியமும் காரணமாக இருக்கும்.  வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடக்கூடிய அளவுக்கு உங்களுக்கு எதிர்மறை ஆற்றலால் பிரச்சனை இருக்கிறது, என்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் எதுவும் என்னுடைய கைக்கு உட்பட்டு இல்லை என்ற கஷ்டம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். வாழ்வே சூனியம் பிடித்தது போல இருக்கிறது என்றால், இன்று மாலை இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களை பிடித்த எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகும். அதுவும் இந்த பரிகாரத்தை செய்த ஒரே நிமிடத்தில் விலகிவிடும். வீட்டில் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாடு செய்து விடுங்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி பூஜையறையில் வைத்து விட வேண்டும். பூஜை அறையில் இருந்து அந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு, வீட்டு பக்கத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள்.  துர்க்கை அம்மனுக்கு உங்கள் கையால் சிவப்பு நிறக் குங்குமத்தை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். முடிந்தால் குங்கும அர்ச்சனையும் செய்யலாம். செவ்வரளி பூக்களை மாலையாக கட்டிக் கொண்டு போய் போடுங்கள். துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.  உங்கள் கையில் எடுத்து சென்ற எலுமிச்சம் பழத்தை, உங்கள் தலையை 3 முறை சுற்றுங்கள். பிறகு உச்சந்தலையில் இருந்து உள்ளங் கால் வரை ஏற்ற இறக்கமாக மூன்று முறை, ஏற்றி இறக்கி, என்னை பிடித்த எதிர்மறை சக்தி எல்லாம் இன்றோடு என் உடம்பை விட்டு விலக வேண்டும்,  திருஷ்டி விலக வேண்டும், ஏவல் பில்லி சூனியம் விலக வேண்டும், என்று சொல்லி, கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை அந்த திரிசூலத்தில் குத்தி விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். இதை செய்துவிட்டு துர்க்கை அம்மன் முன்பாக துர்க்கை அம்மனுக்கு நேர் எதிராக மண்டியிட்டு பெண்களாக இருந்தால் மடிப்பிச்சை கேளுங்கள்.   என்ன வரம் வேண்டுமோ, கேட்டீர்கள் என்றால் நிச்சயம் அது கிடைக்கும். ஆண்களாக இருந்தால், இரண்டு கைகளையும் ஏந்தி மண்டியிட்டு வரத்தை கேட்டால், நிச்சயம் நீங்கள் கேட்ட வரத்தை துர்க்கை அம்பாள் இன்று உங்களுக்கு கொடுத்து விடுவாள்.  இந்த எளிமையான பரிகார முறையை எவர் ஒருவர் முழு நம்பிக்கையோடு செய்கிறீர்களோ, அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலால் பிரச்சனைகள் வராது. இந்த செவ்வாய் கிழமை மட்டும் அல்ல, அடுத்தடுத்து வரக்கூடிய வேறு எந்த செவ்வாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை செய்தாலும் உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.
  • 1061
·
Added article
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு, ஜேபி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது.  கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தாயை பறிகொடுத்து சோகத்தில் தவித்து வரும் நடிகர் கிச்சா சுதீப் தன் தாய் மறைவு குறித்து உருக்கமான பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில், எனக்கு பாரபட்சமின்றி அன்பு காட்டி என் வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்த மனித வடிவிலான கடவுள். என்னுடைய முதல் ரசிகை. என்னுடைய மோசமான படங்களையும் விரும்பியது என் தாய் மட்டுமே. என்னுடைய வலிகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  24 மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும், என் விடியல் என் தாயின் குட் மார்னிங் மெசேஜில் தான் ஆரம்பிக்கும். அப்படி அவரிடமிருந்து கடைசியாக வெள்ளிக்கிழமை தான் எனக்கு மெசேஜ் வந்தது. அடுத்த நாள் எனக்கு எந்த மெசேஜும் வரவில்லை.  இத்தனை வருடங்களில் எனக்கு என் அம்மாவிடமிருந்து மெசேஜ் வராமல் இருந்தது இதுவே முதன் முறை. இதையடுத்து, போன் செய்து பேசினேன் இருவரும் பிக்பாஸ் தொடர்பான சனிக்கிழமை எபிசோடுக்காக பேசிக் கொண்டிருந்தோம். அதனால் நேரம் போனதே தெரியவில்லை.  நான் பிக்பாஸ் ஸ்டேஜுக்கு செல்வதற்கு முன் என் அம்மா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்ததால்,சகோதரியிடமும், மருத்துவரிடமும் பேசிவிட்டு மீண்டும் பிக்பாஸ் மேடைக்குச் சென்றேன். பிக்பாஸ் மேடையில் சில பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டு இருந்தேன், ஆனால், என் மனதில் அம்மாவை பற்றிய எண்ணமே ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்றுக்கொண்ட வேலையை முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியால் வார்த்தைகள் அற்று முதன்முறையாக மேடையில் தவித்து நின்றேன். ஷூட்டிங் முடிந்த பின்பு நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அம்மா வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருந்தார். ஆனால், சில மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. என்னால் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  நான் ஷூட்டிங் செல்வதற்கு முன்பு என் அம்மா என்னை கட்டியணைத்து அனுப்பிவைத்தார். வந்து பார்க்கும்போது அவர் இல்லை. என் வாழ்வின் விலைமதிக்க முடியாத ஒன்று என்னை விட்டு சென்றுவிட்டது. மிஸ் யு அம்மா என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
  • 1064
·
Added article
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும் தவம் இன்றி கிடைத்த வரமே பாடல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த பாடலாக உள்ளது. நடிகர் பாலா 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வந்தனர். இவர்களுக்கு அவந்திகா என்கிற மகள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக 2016 ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். சில வருடங்கள் தனிமையில் வாழ்ந்த நடிகர் பாலா, 2021 கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரகசியமாக நடந்தது. திருமண போட்டோ வெளியான பிறகு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்தது. தற்போது இரண்டாவது மனைவியுடனும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. பாலாவின் முதல் மனைவி அம்ருதா, கடந்த வாரம் காவல் நிலையத்தில் பாலா தன்னையும், தன்னுடைய மகளையும் தினமும் வழிமறித்து தொல்லை கொடுப்பதாக புகார் கொடுத்தார். இதையடுத்து, காவல்துறையினர் பாலாவை ஆஜராகுமாறு கூறியும் அவர் ஆஜராகாததால் போலீசார் அவரை கைது செய்தனர்.தற்போது ஜாமீனில் வெளியே வந்து இருக்கும் பாலா, நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தன்னிடம் ரூ.250 கோடி சொத்து இருக்கிறது என்றும், தனது குடும்ப சொத்தில் இருந்து பங்காக இந்த ரூ.250 கோடி வந்ததாகவும், இந்த சொத்து குறித்த அறிவிப்பு வெளியானதும் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகிறது. இதனால், கேரளாவை விட்டு வேறு எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தனது ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு என்றும் பாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
  • 1068