Feed Item
·
Added a news

சிறந்த ஊடக கலாசாரத்தை நாட்டில் உருவாக்குவதற்காக ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை பாராட்டுதல், அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் ஜனாதிபதி ஊடக விருது இரண்டாவது வருடமாகவும் இம்முறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்,தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மூலம் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் ஊடக ஆய்வு உட்பட துறை சார்ந்த 50 விருதுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் துறை சார்ந்த நான்கு சாதனையாளர்களுக்கு நான்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

2023 ஆம் ஆண்டு செய்திகள் மற்றும் படைப்புக்களை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் 2023 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2023 டிசம்பர் 31ம் திகதி வரை வெளியான செய்திகள், படைப்புகளை விருதுக்காக சமர்ப்பிக்க முடியும். நிறுவன பிரதானிகள் ஊடாக விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

  • 615