·   ·  200 posts
  • 2 members
  • 2 friends

சிறப்பான பலனை தரும் ஐப்பசி செவ்வாய் வழிபாடு

ஒரு சிலர் வாழ்வில் பிரச்சினை வருவதற்கு ஜாதக கட்டம் காரணமாக இருக்கலாம். நல்ல நேரம் கெட்ட நேரம் காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு பிரச்சனை வர கண் திருஷ்டியும், எதிர்மறையாற்றலும், ஏவல் பில்லி சூனியமும் காரணமாக இருக்கும்.

 வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடக்கூடிய அளவுக்கு உங்களுக்கு எதிர்மறை ஆற்றலால் பிரச்சனை இருக்கிறது, என்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் எதுவும் என்னுடைய கைக்கு உட்பட்டு இல்லை என்ற கஷ்டம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்.

 வாழ்வே சூனியம் பிடித்தது போல இருக்கிறது என்றால், இன்று மாலை இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களை பிடித்த எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகும். அதுவும் இந்த பரிகாரத்தை செய்த ஒரே நிமிடத்தில் விலகிவிடும்.

 வீட்டில் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாடு செய்து விடுங்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி பூஜையறையில் வைத்து விட வேண்டும். பூஜை அறையில் இருந்து அந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு, வீட்டு பக்கத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள்.

 துர்க்கை அம்மனுக்கு உங்கள் கையால் சிவப்பு நிறக் குங்குமத்தை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். முடிந்தால் குங்கும அர்ச்சனையும் செய்யலாம். செவ்வரளி பூக்களை மாலையாக கட்டிக் கொண்டு போய் போடுங்கள். துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.

 உங்கள் கையில் எடுத்து சென்ற எலுமிச்சம் பழத்தை, உங்கள் தலையை 3 முறை சுற்றுங்கள். பிறகு உச்சந்தலையில் இருந்து உள்ளங் கால் வரை ஏற்ற இறக்கமாக மூன்று முறை, ஏற்றி இறக்கி, என்னை பிடித்த எதிர்மறை சக்தி எல்லாம் இன்றோடு என் உடம்பை விட்டு விலக வேண்டும்,

 திருஷ்டி விலக வேண்டும், ஏவல் பில்லி சூனியம் விலக வேண்டும், என்று சொல்லி, கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை அந்த திரிசூலத்தில் குத்தி விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். இதை செய்துவிட்டு துர்க்கை அம்மன் முன்பாக துர்க்கை அம்மனுக்கு நேர் எதிராக மண்டியிட்டு பெண்களாக இருந்தால் மடிப்பிச்சை கேளுங்கள்.  

 என்ன வரம் வேண்டுமோ, கேட்டீர்கள் என்றால் நிச்சயம் அது கிடைக்கும். ஆண்களாக இருந்தால், இரண்டு கைகளையும் ஏந்தி மண்டியிட்டு வரத்தை கேட்டால், நிச்சயம் நீங்கள் கேட்ட வரத்தை துர்க்கை அம்பாள் இன்று உங்களுக்கு கொடுத்து விடுவாள்.

 இந்த எளிமையான பரிகார முறையை எவர் ஒருவர் முழு நம்பிக்கையோடு செய்கிறீர்களோ, அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலால் பிரச்சனைகள் வராது. இந்த செவ்வாய் கிழமை மட்டும் அல்ல, அடுத்தடுத்து வரக்கூடிய வேறு எந்த செவ்வாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை செய்தாலும் உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

  • 87
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய