Ads
கார்த்தி நடிக்கும் ‘விருமன்
கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
Empty
'மாடு மாதிரி வளர்ந்து இருக்கிறியே தவிர மண்டையில மசால் கொஞ்சம் கூட இல்லையே! உன்னை வச்சு வேலை வாங்குறதுக்குள்ள என் உசுரு போயிரும் போலிருக்கு. இனி நீ வேலைக்கு வர வேணாம். ஒழுங்கா வீட்டுக்கு ஓடிப் போயிரு'பலசரக்கு கடை முதலாளி விரட்டி விட்டதில் முகத்தில் டன் கணக்காக சோகத்தை சுமந்து வீட்டிற்கு வந்தான் நாகேந்திரன்.அவனைப் பார்த்ததுமே அவனது மனைவிக்கு புரிந்து போனது. இந்த முறையும் வேலை காலி.ஒரு மாதத்திற்குள் ஒன்பது இடத்திற்கு வேலைக்கு போன ஒரே நபர் இவனாகத்தான் இருக்கும். வேலைக்கு வைத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு வேலை செய்யச் சொன்னால் அதற்கு எதிர்மாறான வேலையை செய்யச் சொல்லி இவனது மூளை கட்டளையிடும்.விளைவு..?வேலைக்கு சேர்ந்த வேகத்தோடு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். வேலையில்லாமல் இவன் திரும்பி வருவது ஒன்றும் புதிதல்ல.தவிர அவனது கூட்டாளிகள் எல்லோரும் பிக்பாக்கெட் மன்னர்கள். அவர்களோடு சுத்துவது தான் இவனது பொழுது போக்கே. வேலைக்கு செல்லாத நாட்களில் நண்பர்களோடு எங்கு போவான் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். அவனை வேலைக்கு சேர்ப்பதற்கும் கடைக்காரர்கள் தயங்கினார்கள்.அதனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காய்கறி நறுக்கி கொண்டிருந்தவள் கண்களில் அந்த பேப்பர் விளம்பரம் பட்டது.அதில் பேங்க் செக்யூரிட்டிக்கு ஆள் தேவை என்று இருந்தது. அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு நாகேந்திரனிடம் சென்று பேசினாள்,'பேங்க் வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் வந்திருக்கு. அதனால உடனே பேங்குக்கு போயி அந்த வேலை சம்பந்தமாக விசாரிச்சிட்டு வாங்க'பேப்பர் கட்டிங்கை எடுத்துக் கொண்டு பேங்கிற்கு கிளம்பினான் நாகேந்திரன். மேனேஜரை சந்தித்து பேசினான்.மேனேஜர் சொன்னார்,'ஆள் பார்க்க வாட்டசாட்டமா தான் இருக்கே. எங்க பேங்க் செக்யூரிட்டி வேலைக்கு உன்ன மாதிரியான ஆளு தான் தேவை. உன்ன நாங்க வேலைக்கு சேர்த்துக்கிறோம். இந்த ஃபார்மை ஃபில்லப் பண்ணி கொடு'விண்ணப்பத்தை வாங்கியவன் வங்கி மேனேஜரிடம் சொன்னான்,'சார் எனக்கு சரியா எழுத வராது. தப்பு தப்பா எழுதுவேன். அதனால நீங்க கேள்வி கேட்டுகிட்டே வாங்க . நான் பதில் சொல்றேன். நீங்களே அந்த பதிலை விண்ணப்பத்துல எழுதுங்க'சரி என தலையசைத்து ஒவ்வொரு கேள்வியாக கேட்க ஆரம்பித்தார் மேனேஜர்.ஒவ்வொரு கேள்விக்கான பதில் அளித்து கொண்டு வந்தவனின் காதுகளில் மேனேஜர் கேட்ட அந்த கேள்வி பட்டது.'நீங்கள் இதற்கு முன் சிறை சென்ற அனுபவம் உண்டா?''இல்லை' என பதில் சொன்னான். மேனேஜர் எழுதினார்.'என்ன காரணம்?' என அடுத்த கேள்வி கேட்டார்.மிகுந்த சந்தோஷத்தோடு உற்சாகமாய் பதில் சொன்னான்,'காரணம் என்னன்னா... போலீசால ஒரு தடவை கூட என்னைப் பிடிக்க முடியலை'
- 7
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.விளக்கம்: ஒரு பொருள் எவ்வளவுதான் மதிப்புள்ளதா இருந்தாலும், அதுக்குரிய இடத்துலதான் இருக்கணும். தங்கத்தால செஞ்ச செருப்பா இருந்தாலும், அதை கால்லதான் போட முடியும்; தலையில வைக்க முடியாது. இது ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொருத்தருக்கும் ஒரு தகுதியும், மரியாதையும் இருக்குன்னு சொல்லுது. தகுதி மீறி ஆசைப்படறது சரியில்லை என்பதையும் இது உணர்த்துது.2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.விளக்கம்: ஒரு தடவை செலவழிச்ச பொருள் திரும்ப கிடைக்காது. தீயில போட்ட நெய் எப்படி உருகி காணாம போயிடுமோ, அதே மாதிரி ஒரு விஷயம் போயிடுச்சுன்னா, அது போனதுதான். அதனால, எதையும் கவனமா கையாளணும், வீண் விரயம் பண்ணக்கூடாதுன்னு இந்தப் பழமொழி சொல்லுது.3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.விளக்கம்: ஒருத்தரோட இயல்பான குணம், அவங்க எங்க போனாலும் மாறாது. ஒரு நாய் வேற நாட்டுக்குப் போனாலும் குறைக்கிறதையும், வாலை ஆட்டுறதையும் விடாது. அதே மாதிரி, சில பேரோட கெட்ட பழக்க வழக்கங்களோ அல்லது நல்ல குணங்களோ அவங்களோடயே இருக்கும். சூழ்நிலை மாறினாலும் அவங்க மாற மாட்டாங்கன்னு இது உணர்த்துது.4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.விளக்கம்: திருவிழா முடிஞ்சா தேர் எப்படி தன்னோட இடத்துக்குப் போயிடுமோ, அதே மாதிரி அம்மா இல்லாத பொண்ணுக்கு அவளோட பிறந்த வீடும் ஒரு அந்நியமான இடமாயிடும். அம்மா இருக்கும் வரைக்கும் பொண்ணுக்குப் பிறந்த வீடு ஒரு புகலிடமா இருக்கும். அவங்க போனதுக்கு அப்புறம் அந்த உரிமை குறைஞ்சுடும்னு இந்தப் பழமொழி சொல்லுது. இது தாய் பாசத்தையும், பிறந்தகத்தோட முக்கியத்துவத்தையும் காட்டுது.5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.விளக்கம்: கடவுள் நமக்கு வழியையும், வாய்ப்பையும் காட்டுவார். ஆனா, நாமதான் முயற்சி பண்ணி உழைச்சு சாப்பிடணும். சும்மா இருந்தா தெய்வம் கூட சாப்பாடு போடாது. நம்மளோட முயற்சிதான் நம்மள முன்னேத்தும்னு இந்தப் பழமொழி சொல்லுது. ஊக்கத்தோட உழைக்க வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துது.6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.விளக்கம்: ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும்போது, அதே மாதிரி கஷ்டத்துல இருக்கிற இன்னொருத்தராலதான் அவங்களோட வலியை முழுசா புரிஞ்சுக்க முடியும். செத்த பிணத்துக்கு பக்கத்துல இன்னொரு செத்த பிணம் அழுவுறது மாதிரி, ஒரே மாதிரியான துயரத்துல இருக்கிறவங்க ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருப்பாங்கன்னு இந்தப் பழமொழி சொல்லுது.7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.விளக்கம்: ஒரு தடவை கறந்த பால் திரும்பவும் மாடோட மடியில ஏறாது. செஞ்ச தப்பு திரும்பவும் சரி செய்ய முடியாத சில விஷயங்கள் இருக்கும். அதனால, எந்த ஒரு செயலையும் செய்றதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சு செய்யணும்னு இந்தப் பழமொழி சொல்லுது.8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.விளக்கம்: பெரிய இலக்குகளை அடைய ஆசைப்படுறவங்க, சின்ன சின்ன தடைகளை கூட தாண்ட முடியாம திணறுவாங்க. கடலைத் தாண்டுற அளவுக்கு தைரியம் இருக்குறவங்க, ஒரு சின்ன கால்வாயை தாண்டுறதுக்கு பயப்படறது முரண்பாடா இருக்கு. இது சின்ன விஷயங்களையும் அலட்சியமா நினைக்கக் கூடாதுன்னு உணர்த்துது.9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.விளக்கம்: கரும்பு இனிப்பானதா இருந்தாலும், நம்மளோட வாயில ஏதோ குறை இருந்தா அது கசக்கும். அதே மாதிரி, வெளியில நல்லா இருக்குற விஷயத்துலயும் நம்மளோட தப்பால குறை கண்டுபிடிக்க முடியும். மத்தவங்கள குறை சொல்றதுக்கு முன்னாடி, நம்மகிட்ட இருக்கிற குறையை பார்க்கணும்னு இந்தப் பழமொழி சொல்லுது.10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.விளக்கம்: கடன் வாங்கி இன்னொருத்தருக்கு கடன் கொடுக்கிறவன் ரெண்டு விதமா கெட்டுப் போவான். ஏன்னா, வாங்குன கடனையும் கட்டணும், கொடுத்த கடனும் திரும்பி வருமான்னு தெரியாது. அதே மாதிரி, மரத்துல ஏறிட்டு கை விட்டா கீழே விழுந்து ஆபத்துல சிக்குவான். இது எந்த ஒரு விஷயத்தையும் சரியா திட்டமிடாம செய்றது ஆபத்துல முடியும்னு சொல்லுது.
- 24
நாம் சில நேரங்களில் கவனக்குறைவாக இருக்கும்போது பொருட்கள் கீழே சிந்துவது சகஜம்தான். ஆனால், அவ்வாறு சிந்தும் பொருட்களுக்குக் கூட பெரியவர்களால் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.1. குங்குமம்: குங்குமம் கைத்தவறி கீழே சிந்தி விட்டால், அபசகுனம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே குங்குமம் கீழே கொட்டினால், வெற்றி மற்றும் அனுகூலம் பெறப் போகிறீர்கள் என்றே பொருள்.2. அரிசி: அரிசி கைத்தவறி கீழே கொட்டி விட்டால், குடும்ப சச்சரவு, காரியத்தடை என்று அர்த்தம். நீங்கள் ஏதேனும் புதிதாக தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால் அதில் தடை ஏற்படும். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும் என்று அர்த்தம்.3. மஞ்சள்: மஞ்சள் கீழே கொட்டினால் மங்கலம், சிறப்பு என்று பொருள். ஏதேனும் தொழில் தொடங்கப்போகிறீர்கள் என்றால், அது சிறப்பாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.4. எண்ணெய்: எண்ணெய் கைத்தவறி கீழே கொட்டிவிட்டால், அவசெய்தி, இழப்பு என்று பொருள். நீங்கள் ஏதாவது தொழில் செய்பவராக இருந்தால், அதில் பொருள் நெருக்கடி, தடை, மற்றவர்கள் உங்களை குறை சொல்வது போன்ற விஷயங்கள் நடக்கும்.5. பால்: சில சமயம் பால் காய்ச்ச எடுக்கும்போது கைத்தவறி கீழே கொட்டிவிடும். இன்னும் சில நேரங்களில் பூனை பாலை தட்டிவிட்டு விடும். அதற்கான பொருள் கலகம், தோல்வி என்பதாகும்.6. சர்க்கரை: சர்க்கரை கீழே சிந்துவதால் நல்ல பலனே சொல்லப்பட்டிருக்கிறது. சர்க்கரை தரையில் சிந்துவதால், புகழ் ஏற்படுவதோடு, நாம் செய்யும் தொழிலில் மேன்மை ஏற்படும் என்பதே பொருள்.7. தேங்காய்: தேங்காய் கைத்தவறி கீழே விழுவதால், நீங்கள் செய்யக்கூடிய செயலில் ஏற்படவிருக்கும் தடை அனைத்தும் நீங்கும், தொழில் செய்பவர்களுக்கு பண வரவு அதிகமாகும் எனப் பொருள்.8. பூக்கள்: பூக்கள் கைத்தவறி கீழே கொட்டினால் காரிய வெற்றி, பக்தி, நலம் என்று பொருள். அதாவது வாசனையுள்ள மலர்கள் கீழே கொட்டினால், செல்வம், சுகம் பெறுவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.9. உப்பு: உப்பு கீழே சிந்தினால் நல்லதல்ல என்று பெரியவர்கள் சொல்வார்கள். உப்பு மகாலக்ஷ்மியின் அம்சமாக சொல்லப்படுகிறது. எனவே, உப்பு கீழே சிந்திவிட்டால், பண விரயம், பணத்தடை ஏற்படப் போவதாகப் பொருள்.
- 74
பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர் யார், வெளியிட்ட எக்ஸ் தள பதிவின் மூலம் இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. பலுசிஸ்தானை, பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்று பலுசிஸ்தானின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ”நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, பலுசிஸ்தானியர்கள்” என்றும் ”ஐக்கிய நாடுகள் சபையும் பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 274
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,900 ஐக் கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகபட்சமாக 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் 386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் ஏழு பேர் உயிரிழந்தனர். இதனிடையே, டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் 24 ஆம் திகதிவரை விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப் படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.000
- 275
சந்தையில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கையிருப்பு நாட்டிற்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சில இடங்களில், ஒரு கிலோகிராம் உப்பு பாக்கெட் சுமார் 450-500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்பு சந்தையை அடைந்தவுடன் இந்த நிலைமை சரியாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு வருவதில் தாமதம் ஏற்பட்ட எதிர்காலத்தில் ஒரு பாக்கெட் உப்பு விலை மேலும் அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.இதனிடையே, தற்போதைய உப்பு தட்டுப்பாடு காரணமாக உப்பு இருப்புக்களை மறைத்து வைப்பவர்கள் கைது செய்யப்பட்டு, உப்பு இருப்புக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.உப்புக்கு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி நடப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.ஏற்கனவே உப்பு இருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களையும், அதிக விலைக்கு உப்பை விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடிக்க நாடு முழுவதும் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது.இதற்கிடையில், வர்த்தகர்கள் தங்கள் கடைசி உப்பு இருப்பை தற்போது விற்பனை செய்து வருவதாகவும், மேலும் உப்பு இருப்பு எப்போது கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் கூறுகின்றனர்000
- 280
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, இந்த வாரத்தினுள் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற சட்டத்தின்படி, இந்த அறிவிப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால், மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சியமைக்கப்பட வேண்டும். எனினும், தேர்தலில் முன்னிலை வகிக்கும் பல உள்ளூராட்சி மன்றங்களில் கட்சிகளுக்குத் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்படுவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் உள்ளூராட்சி நிறுவனங்களில், கொழும்பு மாநகர சபை அதிக கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 278
செம்மணி பகுதியில், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.எனினும் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாகவே, அங்கு அகழ்வாய்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ கடந்த மூன்றாம் திகதியன்று மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.000
- 280
தேசிய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவ எதிர்க்கட்சி கட்சிகளின் தலைவர்கள் நேற்று (14ஆம் திகதி புதன்கிழமை) ஒரு உடன்பாட்டை எட்டினர்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.அதன்படி, அதிகாரத்தை நிறுவவுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பெயர் பட்டியலை தயாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இன்று (15ஆம் திகதி வியாழக்கிழமை) கூடி முடிவெடுக்கவுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும், ஐக்கிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுர பிரியதர்ஷன யாப்பா, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டுக் கூட்டங்களை ஒன்றிணைக்கும் பணி முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன்படி, ஆளும் கட்சிக்கு எதிரான அனைத்து குழுக்களுடனும் கலந்துரையாடல்கள் மூலம் அதிகாரத்தை நிறுவுவதோடு கூடுதலாக இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
- 283
மூன்று ஆண்டுகளில் மொஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையிலான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் வியாழக்கிழமை (15) குறிப்பிட்டனர்.அதற்கு பதிலாக கிரெம்ளின் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை அனுப்பியது.ஞாயிற்றுக்கிழமை, “எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல்” இஸ்தான்புல்லில் உக்ரேனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த புட்டின் முன்மொழிந்தார்.புதன்கிழமை (14) தாமதமாக, கிரெம்ளின் குழுவில் ஜனாதிபதி ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறியது. ஆனால் புட்டினின் பெயர் பட்டியலில் இல்லை.கிரெம்ளினின் தூதுக்குழு அறிவிப்புக்குப் பின்னர், மத்திய கிழக்கில் மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.பங்கேற்பதற்கான விருப்பத்தை பரிசீலித்து வருவதாக அமெரிக்கத் தலைவர் முன்னதாகவே கூறியிருந்தார்.பேச்சுவார்த்தையில் புட்டின் நேரில் கலந்து கொள்வார் என்று ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் இல்லாதது, 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போரில் ஒரு பெரிய திருப்புமுனைக்கான எதிர்பார்ப்புகளைக் குறைக்கிறது.உக்ரேன் அல்லது ரஷ்யாவை விட அமைதியை அதிகம் விரும்பும் ட்ரம்பிற்கு காட்டும் ஒரு வெளிப்படையான போட்டியில், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “அவர் பயப்படவில்லை என்றால்” பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு புட்டினுக்கு சவால் விடுத்தார்.புதன்கிழமை இரவு ஜெலென்ஸ்கி துருக்கிக்குச் சென்றிருந்தபோது, புட்டின் கலந்து கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்பேன் என்று அவர் கூறியதாக உக்ரேன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புதன்கிழமை தனது இரவு காணொளி உரையில், புட்டினின் பங்கேற்பு குறித்து தெளிவு ஏற்பட்டவுடன் துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகள் குறித்து உக்ரைன் முடிவு செய்யும் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய நிலப் போரை நிறுத்த இரு தரப்பினரும் 30 நாள் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார்.உடனடி 30 நாள் போர் நிறுத்தத்தை ஜெலென்ஸ்கி ஆதரிக்கிறார், ஆனால் அத்தகைய போர் நிறுத்தத்தின் விவரங்கள் விவாதிக்கப்படக்கூடிய பேச்சுவார்த்தைகளை முதலில் தொடங்க விரும்புவதாக புடின் கூறியுள்ளார்.000
- 284
இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் இந்த இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்தக் காலகட்டத்தில், 902 போக்குவரத்து விபத்துகளும் பதிவாகியுள்ளன. இதன்போது, 1,842 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர்.கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை பல விபத்துகளுக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் கீழ் சாரதி விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன
- 284
தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கூறியுள்ளது.இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் தென்னாபிரிக்காவிலிருந்து மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். எனினும், அவர்களில் 8 பேர், எதிர்வரும் ஜூன் 11 முதல் லோர்ட்ஸில் ஆரம்பமாகும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உடனான ஆரம்ப ஒப்பந்தத்தில், இந்தியன் ப்ரீமியர் லீக் இறுதிப் போட்டி 25 ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையின் படி ஜூன் மாதம் 3ஆம் திகதியே ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.எவ்வாறாயினும், எதிர்வரும் 30 ஆம் திகதி லண்டனுக்குப் புறப்பட வேண்டியுள்ளமையினால், தமது வீரர்கள் 26 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவிக்கிறது.அதற்கமைய, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆபிரிக்க வீரர்களில் Corbin Bosch, Wiaan Mulder, Marco Jansen, Aiden Markram, Lungi Ngidi, Kagiso Rabada, Ryan Rickelton ஆகியோர், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளனர்.000
- 318
கர்மா பொல்லாதது. அதை வெல்ல யாராலும் முடியது.கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை. உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றவும் தவறுவது இல்லை.உங்கள் செயல்களுக்கான பலனை, ஏதோ ஒரு வடிவில் உங்களிடம் சேர்த்து விடும் மிகச் சிறந்த நிர்வாகிதான் கர்மா.யாரை அலட்சியம் செய்கிறோமோ, அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வரும்.நல்லது செய்தால், அந்த நன்மை பல மடங்காக நமக்கே திரும்பி வரும்.கேடு செய்ய நினைத்தால், அதே கேடு நமக்கே திரும்பி வரும்.நன்மையை மட்டும் வாழ்வில் விதைத்து, நல்லவர்களாக வாழ்தல் சிறப்பு.கெட்டவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள். கெட்டவன் தானே தன் அழிவை தேடி கொள்வான்.பூமியில் வாழும் கொஞ்ச நாள் வாழ்க்கையில் பிறர் சாபம் இல்லாமல் வாழுங்கள்.
- 318
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மனதளவில் புதிய பாதை புலப்படும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மிகப் பணியில் விருப்பம் அதிகரிக்கும். சிறு சிறு கடன் பிரச்சனைகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். அரசு பணிகளில் பொறுமை வேண்டும். விதண்டாவாதமான பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் கால விரயம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மிதுனம்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரரின் வகையில் ஆதரவு ஏற்படும். சுப காரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புகடகம்மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். கவலை மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு சிம்மம்பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்பங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பாராட்டு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்கன்னிநினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். ஊக்கம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பச்சைதுலாம்தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். உங்களின் கருத்துக்களுக்கான மதிப்பு அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம்விருச்சிகம்குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். வரவுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்களால் மதிப்பு உயரும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்தனுசுசிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் பொறுமை வேண்டும். முன் கோபமின்றி செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும். நற்செயல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்மகரம்புதிய நபர்களால் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தொழிலில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வி நிமிர்த்தமான குழப்பங்கள் குறையும். சாந்தம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புகும்பம்அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ரசனைத் தன்மையில் புதுமை உண்டாகும். அசதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம்சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நிர்வாகம் சார்ந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- 377
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை 15.5.2025.திதி : இன்று அதிகாலை 02.00 வரை துவதியை. பின்னர் திரிதியை.நட்சத்திரம் : இன்று பிற்பகல் 01.24 வரை கேட்டை. பின்னர் மூலம்.நாமயோகம் : இன்று காலை 06.02 வரை சிவம். பிறகு சித்தம்.கரணம் : இன்று அதிகாலை 02.00 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.33 வரை வணிசை. பிறகு பத்தரை.அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12..30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- 399