Ads
Latest Poems

- ·
- · GomathiSiva
தேன்எவ்வளவு தித்தித்தாலும்தேவைகள்தீர திகட்டத்தான்செய்யும்..நியாயங்கள்சில இடங்களில்ஒரு தலை பட்சமாகிஅநியாயங்களுக்குதுணை போய் விடுகின்றது..நான்என்ற அகங்காரம்தலைவிரித்தாடினால் சேதாரம்கூடாரமடிக்கும்..அறிவாளிஎன்ற முலாம்பூசிக் கொண்டாலேபகுத்தறிவு பாடைஏறிவிடும்..எல்லாம்தெரியுமென்று தம்பட்டம்அடிப்பவனுக்கும்தன் சாவு என்று எனதெரியாத பக்கம் ஒன்றுஇருக்கத் தான் செய்கின்றது.எவ்வளவுதான் வளைந்து கொடுத்தாலும்சில நேரங்களில்மனதை உடைத்து விடுகின்றதுநேசித்த உறவு..நான் எனது என்ற வாசனைகள் அழிவது தான் வாழ்க்கையில்உண்மையான ஏகாந்தம்…

- ·
- · GomathiSiva
முகங்கள் வேறுமுகவரிகள் வேறுவருடும் பொழுதில்எல்லாம்ரோஜாவின் முல்லாய்காயப்பட்டு போவதேவாடிக்கைமனசாட்சி என்பவர்கள் கூடமிதிப்பதில்சுகம் காணுகிறார்கள்பாஷைபரிதாபமாக இருந்தாலும்பாசங்கள் எல்லாம்பாசாங்காய்போய் விடுகிறதுஉண்மைமுகங்களும் முகவரியும்புதைந்து விட்ட இடம்தெரியாமல்போய் விட்டது

- ·
- · GomathiSiva
அரியானை அம்பலக் கூத்தனைஅருமறையின் அகத்தானை...ஆர்வத்தினை அகம் வைத்துஅனுதினமும் போற்றும் பொழுது...அனைத்தும் தரும் திருஐந்தெழுத்து!விஸ்வநாதர் ஆட்சியாய்விசாலாட்சி அன்னையாய்...அன்னத்தின் பெருமைஅன்னபூரணி வீற்றிடலாய்...காவல் தெய்வமாய்காலபைரவர் துணை...சிறப்பாய் கோவிலெங்கும்சிவலிங்கம் அருளாசி...பூமியில் படர்ந்திருக்கும்புண்ணியஸ்தலம் காசி

- ·
- · GomathiSiva
வீர வசனங்களில்மேடை அதிரும்வீராப்பு பேசிவீம்புடன்மீசை திருக்கிஇறங்கியதும்எப்படி என் பேச்சுஎன்பதும்தேர்தல் காலம்முடிந்தால்திருவிழாநிறைவுற்றதாய்நீ யாரோ நான் யாரோசாக்கடை அரசியலைபூக்கடையாக்கவந்தேன் என்பதும்சாக்கடைக்குள் புரண்டுசகதியுடன்எழுவதும்காக்க வந்த அரசியலாம்அடுக்கடுக்காய்வார்த்தை ஜாலங்களால்வர்ணம் பூசதேவையில்லைவென்றால் மகிழ்ச்சிசேவைக்கு வாய்ப்புகிடைத்தற்காய்தோற்றல்அதைவிட மகிழ்ச்சிபொறுப்பிலிருந்துதப்பித்ததற்காய்பறக்க தேவையில்லைசிறக்க இருந்தால்போதும்சிறகு தேவையில்லை

- ·
- · GomathiSiva
விடிந்தது முடிகிறதுபொழுதுமடிந்து புதைகிறதுகனவுவிடியலின் புலர்வில்மடிந்து விழுகிறதுமகிழ்ச்சி மட்டுமேஏமாற்றங்களின்கைக்குலுக்கள்கள்நம்பிக்கை துரோகங்கள்ஏமாற்றங்களின்ஏர்பிடிப்புக்கள்தினமும் சந்திக்கும்சகோதரர்கள்மாற்றங்கள் துருநாற்றங்களாய் வீசுகிறதுதிட்டாங்கள்சதி வலைகளைபின்னுகிறதுஅன்பானவர்கள்அரக்கர்களாகி விடஅதிர்ச்சி கிடங்கில்சவமாய் விழுகிறோம்வாழும் எண்ணம்வாடி விழலட்சியங்கள்மூச்சைடைத்துமுகவரி தொலைக்கிறது



- ·
- · GomathiSiva
தாயேஉன் புன்னகையில்உதிர்ந்தனமனப்புண் காயங்கள்உன் மடியில்தூங்கியகனபொழுதுகள்நினைவில் அழியாதபொக்கிசங்கள்சோறூட்டி பாலூட்டிபசியாத்திதாலாட்டு பாடிஉறங்கவைத்தஎன்னருமைத்தையேஉன் நினைவுகளில்மூழ்கி கிடக்கிறதுஇத்துப் போனஎன் இதயம்


- ·
- · GomathiSiva
ஒதுக்கி கொள்வதற்காகவும்ஒதுங்கி கொள்வதற்காகவும்காரணம் தேடுகிறார்கள்சிலர்பாசங்கள் அவர்களுக்குபாதம்அப்பி வைத்தசுவடுகள் மட்டுமேதள்ளி போவதற்காய்தடயம் தேடுபவர்கள்கோபம் படுவதாயும்பழி சொல்லி போவார்கள்உலகம்மனிதர்களைமிருகங்களாய்மாற்றிக் கொண்டிருக்கிறதுமனிதத்தை களவாடிசவக்குழிக்குள்புதைத்து விடுகிறதுபிழை பிடிப்பதில்பிழைப்பு நடத்துப்பவர்கள்மனதைகொலை செய்து விடுகிறார்கள்பாவப்பட்ட சிலர்கோவப்பட்டுஅவர்களுக்குஆதாரம்கொடுத்து கொண்டிருக்கிறார்கள்




- ·
- · GomathiSiva
கூடிக் களித்த கொண்டாட்டங்கள் குலைந்து தான் போனதே....கொஞ்சிப் பேசும் மழலையையும் "கொஞ்ச"ம் அச்சமாய் நகர்ந்து தான் போனதே....மனிதனுக்கு மனிதனே எதிரியாய் நோக்கும் நிலை என்றுமே மாறாது போனதோ .....முகத்தை மறைக்கும் முகமூடியோ புன்னகையையும் சேர்த்தே மறைத்து போனதே.....எனக்கும் சமூகத்திற்கும் ஆன தொடர்புகளோ சங்கிலியில் அறுபட்ட கன்னியாய் "சமூக இடைவெளியாய் ".....

- ·
- · beesiva
முப்பதுக்குமேல் முடி உதிர்கின்றது.நாற்பதில்பார்வை குறைகின்றது.ஐம்பதுக்குமேல் பற்கள் ஈடாடுது.அறுபதுக்குமேல் சொற்கள் வலுவிழக்கின்றது.இப்படியேஉடம்போடு வந்ததெல்லாம்சொல்லாமலேமாற்றம் காண்கையில்கூடிப் பிறந்ததுகளும்கூடப்பழகியவரும்வாழ்வோடுநிலைக்கவா போகின்றனர்..சூழ்நிலைஉடைந்த கண்ணாடி.ஒழுங்கான முகத்தையும்அவலட்சணமாக்கிபிரதிபலிக்கும்.குத்திக் காட்டும்மனிதனுக்கும்சுட்டிக் காட்டும்மனிதனுக்கும் நடுவில்நர்த்தனமாடாதுநாகரீக சிரிப்போடுநகரந்து விடு..சண்டைகள்போட்டு பேசாமல்இருந்தது அக்காலம்.சண்டைகள்வந்திடுமோ என பயந்துபேசாமல் இருப்பதுஇக்காலம்..வானிலையை விடவும்மனிதனின்மனநிலை அதிகம்மாறுது தற்காலம்..இன்னும்சொற்ப காலமேமனமே அமைதியைகாத்திடு..கூடிய மனக் குப்பைகளைகுளத்தடியைகண்டதும் மரத்தடியோரம்இறக்கிவிட்டேன்..ஈரமான இதயங்கள

- ·
- · beesiva
கணவன் மறைந்து விட கண்ணீர் அவளை மணந்துக் கொண்டது எத்தனை துன்பங்கள் அவளுக்கு மாலையாய் விழுந்தது சமூகத்தின் புறக்கணிப்பு சத்தம் இல்லாமல் அவளது குறவளையை நசித்துக் கொண்டிருந்தது சோகங்கள் சொந்தமாய் உறவாடவறுமை கோரத் தாண்டவம் ஆடியது சகுனம் பார்ப்பவர்கள் மனதை காயப்படுத்திக் கொண்டே இருந்தார்கள் எத்தனை பழி சொற்கள் அவளுக்கு வலி கொடுக்கிறது அதை போக்க வழி கூட இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் இந்த போராட்ட வாழ்க்கைபோதும் என்றாகி விட்டதுஉடைந்து விழுந்த ஒரு பூவைப் போல தினமும் நசுக்கப் பட்டு விழி ஓரமாய் கண்ணீர் கோடுகளுடன் கழிகிறது காலம்
- ·
- · beesiva
நடந்து வந்தபாதைகளெல்லாம்முள் வேலிகளேநடந்து கொண்டிருக்கும்பாதைகளெங்கனும்பள்ளமும் திட்டியுமே.இனி நடக்கபோகும் பாதைகளும்துன்பமும் துயரமும்எதிர் கொள்ளும்என்பதில் ஏமாற்றமில்லை.இலக்கினைஎட்டும் தூரம் வரைநடக்க வேண்டியதும்உன் பாதங்களேநம்பிக்கை ஒன்று தான்உனக்கு பாதணிகள்.உணர்வுகளையும்உண்மைக் கலைகளையும்மதியாதவன் குடிலில்கோபுர நினைப்புவேண்டாம்.மதிப்பவன் மனையில்சருகாயிருந்தாலும்மெருகாவாய் வீணேஉருகாதே..அன்புக்குகாலம் நேரம் கிடையாது.அதற்குபிறப்பும் இறப்பும்உருவமும் இருக்காது.உணர்வு மாத்திரமேஅதுஉண்மை விழிகளுக்கேதோன்றும் வல்லமைகொண்டது. அன்பை நேசிஅகிலம் அணைத்துக் கொள்ளும்.
- ·
- · GomathiSiva
படிகள் உனக்கு படுக்கையறை நெடியை மறந்து நுளம்புடன் போரிட்டுசுகமாய்உறங்காமல் உறங்கும் தெரு குப்பையாய்இதயம் இத்துப்போன மனித குளத்தில் உதயம் ஒன்றை தேடி உறங்குகிறாயாவிடியும் முன்பே நீ விளிக்கும் முன்பேவிரட்டியடிக்கும் மிருக கூட்டங்களின் மந்தைகள் வாழுமிடமிதுகருணையை கத்தரித்து கொடிய தீ மூட்டி நொடி பொழுதில் நொண்டியடிக்க வைக்கும் ஈன சமூகம் இது
- ·
- · GomathiSiva
இதயக் குறிப்பில்இருக்கையில்நாட் குறிப்பில்நமக்கென்ன வேலைஅன்பாய் தந்தஅன்பளிப்பைஆயுள் வரைமறக்கவும் முடியாதுஇழக்கவும் இயலாதுநிஜமான அன்புக்குநிகரேதுமில்லைஇறக்கின்ற நிமிடம்வரை இழக்காத அன்பு வேண்டும்மருந்துக்குக் கூடமறக்காத மனம் போதும்நீத்தந்த பரிசுஎனக்கிங்கே பெரிசுஇதை என்றும்மறக்காது மனசு

- ·
- · GomathiSiva
வைரஸ்வருகைஎத்தனை மிகை..அரசியல்சதுரங்கத்தில்பகடைக் காய்களாய்.வருடம்ஒன்று கடந்துகண்டேன்..மீண்டும்ஆயுள் புதுப்பிக்கஉணர்ந்தேன்அந்தநான்கு மணி நேரவாய்ப்பே..உயிர்ப்பேஉண்மைக்குஇலக்கணமே.சுமைமறந்தேன்எனையும்மறந்தேன்..எடேய்மாறாமலேநாம் நாமாக,,,அறுபதைதாண்டியும்....நீளுதடா நீளுமடாஅறிந்தவர்போற்றுவர்.நன்றி நண்பா..
- ·
- · beesiva
அப்பா மகள்உறவைப் பாடஅகராதியில்வார்த்தைகளில்லை.ஆசைப்பட்டுகேட்டதெல்லாம்அந்தக் கணமேஅடுக்கி வைப்பாரு.ஊரைசுற்றி காட்டிடவேஈருளியில்ஏத்தி செல்வாரு.கோவப்பட்டுபார்த்ததில்லைகோர முகம்அவருக்கில்லை.பார்கத் தான்நம்பியாருபாசத்திலேஎம்ஜியாரு..சொந்தக் காலில்நின்றிடவேதோட்டம் கொத்திவாழ்ந்தாரு.சத்தியத்தின்எல்லைக்குள்ளேசந்தோஷமாகவாழ வைச்சாரு.கை முழுக்ககாய்ச்சிருக்கும்காலில் பித்தவெடிப்பிருக்கும்.பள்ளிப் படிப்புமுடியும் வரைபகலிரவாகபாடுபட்டாரு.படுத்ததைநான் பார்த்ததில்லைமருந்து வாங்கிகுடிச்சதுமில்லை.மதுவுக்குஅவர் அடிமையில்லைசாது என்றால்மிகையுமில்லை.பந்தக்காலுபோடும் வரைபக்கமிருந்தேபாதுகாத்தாரு.கை பிடித்துநான் கால் மாறகட்டிப் பிடித்துகதறினாரு.சாமியைநான் பார்த்ததில்லை.என் குல சாமிஅப்பாவோடேவாழ்ந்துமுள்ளேன்.இருக்கும்வரை ப
- ·
- · beesiva
மரத்துக்கும்மனசுண்டுபகுத்து அறியும்பண்புண்டு...முறிந்ததுகிளை எனினும்ஒட்டு விலகாதஉணர்வுண்டு..துஸ்டர்கள்துண்டாடினாலும்திண்டாடாதமனமுண்டு..பண்பாட்டைமரங்களிடம்கற்போர் வாழ்வைவென்றவராவார்.தமக்காகவாழும் செயல்படும்உயிரிழந்தால்மண்ணுக்கு உரமாகும்.,உயர் செயலும்..நாமோஇதயம் பற்றிகவி படைப்போம்இரக்கம் பற்றி..?கதையளப்போம்.மனிதன் மூச்சுபோனால்பேச்சில் சவம் என்போம்.மரமோ என்றும்மரம் தான்.மாற வேண்டியதுஎங்கள் மனமேமனிதனைமரமென்றுவையாதீர்வையத்தில்ஜயம் வேண்டாம்மரமே எமக்குஅபயம்...,!
Ads
Poems Categories
மற்றவை (10)
அப்பா, தந்தை (2)
அழகு (0)
அரசியல் (1)
அனுபவம் (8)
ஆசை (1)
இறைவன் (1)
இயற்க்கை (1)
உறவு (0)
கல்வி (0)
கடவுள் (0)
காதல் பிரிவு (0)
காதலர் தினம் (0)
காத்திருப்பு (0)
காதல் (1)
சூழல் (0)
சிந்தனை (0)
தமிழ் மொழி (0)
தன்னம்பிக்கை (0)
தாய்மை (0)
தேடல் (0)
நாடு (0)
பக்தி (0)
பெண்கள், பெண்மை (1)
மழலை (0)
சமுதாயம் (4)
மொழி (0)
வெற்றி (0)
வறுமை (1)
விவசாயம் (0)
மனிதன் (0)
மனம் (0)
முத்தம் (0)
கனவு (0)
சோகம் (1)
உண்மை (0)
நம்பிக்கை (1)
தனிமை (0)
தவிப்பு (0)
குழந்தை (0)
முயற்சி (0)
ஏக்கம் (1)
மழை (0)
தத்துவம் (0)
வாழ்த்து (0)
பெண் (1)
தோல்வி (0)
திருமணம் (0)
நன்றி (0)
நட்பு (1)
பாசம் (2)
பிறந்தநாள் (0)
பிரிவு (0)
பிறப்பு (0)
மதம் (0)
விலங்கு (0)
வாழ்க்கை (0)
தீபாவளி (0)
பொங்கல் (0)
தமிழ் புத்தாண்டு (0)
புத்தாண்டு (0)
ரமலான் (0)
என் கவிதை (0)
Featured Poems

- ·
- · TamilPoonga
வார்த்தைகளின்ஒலி வடிவத்தைவற்ற செய்தவள்பட படப்பாய் என்றும் என்படர்ந்த மார்பினில் ஓர்இறுக்கத்தை தருபவள்சிந்திக்க சிந்திக்கஇதழினில் ஈரப்பதம் குறைந்திடஇரவெல்லாம் விழிக்க செய்பவள்

- ·
- · beesiva
காட்டிக் கொள்ளாத பூட்டிய அன்பினைஈட்டிய வெற்றிகள் கண்டு புழுகாமல்பூரிக்கும் பெரு மகன்..!பழுதாகாமல் இருந்திட விழுதான உந்தனைவிரட்டி விரட்டி படி படி என தினம்பாசப் பந்தாடியவன்.!பார்வையும் உறுமலும் உன் பார்வைக்கு விரும்பாத வில்லனாய் வெறுமனே நடிப்பால்புடம் போட்டவன்..தடம் மாறிய வேளைகளில் வேதனையால்நொந்தழுதவன்தனக்கு எட்டாத தூரங்களை எட்ட வைத்து வளர்த்தவன்.!உயர் நிலை தொட்டதும் ஓரமாய் ஒதுங்கிஈரமான வார்த்தைகளுக்குதவமிருப்பவன்.!நேசி! பூசி! யோசி ! வாசி அவர் வாழ்க்கை உனக்குபெரும் பாடம்..!
- ·
- · beesiva
உன்னை நான்மதிக்கிறேன்அதனால் நான்பேசாமல்இருக்கிறேன்பெண் என்றால்பெருமைக்குரியவளே!நானும் பெருமையாகபேசுவேன்நீயும் யாரையும்இகழ்ந்து பேசாதே!உன்னிடம்திறமையுண்டோ?செய்து காட்டுமற்றவர்களைபுகழ்ந்து காட்டுபுண்பட பேசாதே!நீயும் ஒரு பெண்ணே!பெண்ணின் பெருமைதாய்மையே!தாய்மையுனக்குமுண்டுதப்பாய் பேசாதே!தனித்திறமைகளைவெளிக்கொண்டு வரகளம்பலவுண்டுஆடு,விளையாடுஉன்னைப்போற்றபலர் வருவார்நீ பொறாமைகொள்ளாதே பெண்ணே!பொறாமையென்பதுவெற்றுத்தாள்இதில் ஏதாவதுஎழுதுபொறாமை நீங்கநீயும் முயற்சி செய்யாரையும் பிரிக்கநினைப்பதும்உன்னைப்பிரிவதும்இதில் மகிழ்ச்சியும்இகழ்ச்சியும்உனக்கே சொந்தம்...பத்தினியாள் செய்வினைக்குபழிவாங்க எண்ணாமல் புத்தகம்தனை எழுதிபுத்திதனைப்புகட்டுகிறேன்இப்படியும்பெண்கள் இப்புவியில்இருக்கிறார்கள்தப்பிடுங்கோ காளையரேதப்பிவி
- ·
- · beesiva
அன்பு வைப்பதாக இருந்தால் அதை உண்மையாக வையுங்கள் நடிக்காதீர்கள் பழகிவிட்டோம் என்பதற்காகவும் உதவி விட்டார்கள் என்பதற்காகவும் பாசமாய் பழகி பாசாங்கு செய்யாதீர்கள் காயத்தை விட வலி கூடியது மரணத்தை விட கொடியது பொய் நேசம் பொழிந்துவிட்டு மார்தட்டி சிரிப்பது மோசடிகள் ஆயிரம் செய்துவிட்டு போயிவிடுங்கள் பரவாயில்லை இதயத்தில் மட்டும் துரோகம் செய்து விடாதீர்கள்
- ·
- · beesiva
வறுமைஉன்னிடம் தோழமை கொண்டால் பலபேர் உன்னை விட்டு தூரமாய் போய் விடுவார்கள்பாசம் வைத்தவர்கள் கூடபயந்து விடுவார்கள் மடியில் தூங்கியவர்கள்மறந்து போவார்கள் இதயத்தில் இருந்தவர்கள்இறங்கி விடுவார்கள்தலை குனிந்துதவம் கிடந்தவர்கள்தலை நிமிர்த்திதள்ளி விடுவார்கள்நலம் விசாரிக்கநடுங்குவார்கள்நீ உறவுகளைஉணர்ந்து கொள்வாய்உலகத்தைபுரிந்து கொள்வாய்அன்பைஅறிந்து கொள்வாய்மனிதர்கள் இப்படித்தான்என்பதைநீ பாடமாய் படித்துக் கொள்வாய்
Ads