கவிதை
Ads
Latest Poems
மன்னிப்பு
மன்னிப்பை அளித்துப்  பாருங்கள்.....மனபாரம் குறையும்...மன்னிப்பை கேட்டுப்  பாருங்கள்....பகையெல்லாம் மறையும்...மன்னிப்பை அளந்து பாருங்கள்...மனசு பூவாக மாறும்...மன்னிப்பாக வாழ்ந்து பாருங்கள்.....வசந்தம் தாலாட்டி போகும்...மன்னிப்பாரோடு இருந்து பாருங்கள்.....குதூகலம் வந்து சேரும்...மன்னிப்பை உணர்ந்து பாருங்கள்....மனசெல்லாம் லேசா தோணும்...மன்னிக்க முயன்று பாருங்கள்....முயற்சியெல்லாம் வெற்றி தரும்...மன்னிக்கவும் என சொல்லிப் பாருங்கள்....எதிரில் புன்னகை தவழும்...மன்னியுங்கள் என உரைத்துப் பாருங்கள்....எதிரில் கண்ணீர் வழிந்திடும்...மன்னிப்பின் வழியைத் தேடி பாருங்கள்....முட்டுக்கட்டைகள் முடங்கிப் போகும்...மன்னித்து வாழ்ந்துப் பாருங்கள்.....வந்த நோயும் கடந்து போகும்...மன்னிப்புடன் இணைந்துப் பாருங்கள்...
வெற்றி பாதை....
இனிமையான தருணம்இந்திய விண்கலம்விக்ரம் பதிவுதனில்வெற்றி பாதையில்...சந்திரயான்-3  அதுசந்திரனை தொட்டது...!நிலவின் ஒளியில்நிறைந்த பரவசம்...பேருவகை எதிரொலியில்பெருமையாய் பாரதம்!
கைமாறு
நம்பிக்கை வைத்தே நடந்து செல்கிறோம் ஆனால் பாதை வேறு எங்கோ திரும்பி விடுகிறது அன்பு பயணத்தில் அரவம் தீண்டி விடுகிறது பச்சோந்திகளுக்கு பழக்கப்பட்டவை அவை  அப்பாவிகள் நாம்தான் அனாதையாகி விடுகிறோம் பொய் தோரணங்களில் புதைந்து போவதால் உண்மை முகங்களை கண்டு வியந்து நிக்கிறோம் பணங்கள் குணங்களை மாற்றி விடுகிறது வசதிகள் வாய்மையை ஒழித்து விடுகிறது பகட்டும் பெருமையும் பாசத்தை அழித்து விடுகிறது போலி சேவல்களின் கூவலில் பொழுதுகள் விடியவில்லை திரோகங்கள் மட்டுமே விழித்து நிற்கிறது வசனம் பேசியவர்கள் வசதி வந்ததும் விஷமேறி விடுகிறது புதிய முகவரிகள் காணும்போது பழையவை காணாமல் போய் விடுகிறது நேர்மையாய் நடந்து பார் ஏமாளி என்பார்கள் உண்மையாய் இருந்து பார் உதவாக்கரை என்பார்கள் மனம் வைத்து பழகினாலும் குணம் காட்டி விடுவார்
சிந்திப்போம்....
குறுகிய ஆயுளில்குவியும் ஏமாற்றங்கள்கண்டு கலங்காதேகவலை கொள்ளாதேவிடிந்தால் பயணிமுடிந்தால் மெளனி
போட்டி
நீயா... நானா...நிலையாய்  போட்டியில்வெங்காயம் தக்காளிவிலைதனின் உச்சத்தில்...என்று இதன் முற்றுப்புள்ளிஎதிர்பார்ப்பில் மக்கள்...!
இன்றைய நிதர்சனம்
உச்சம் தொட்ட விலைஉட்கார்ந்திருந்தது தக்காளி...உடன் ஏறிய நிலைஉரிக்காமலேயே கண்ணில் நீர்துளிஉதிர வைத்தது சின்னவெங்காயம்...சிறு துண்டு இஞ்சியும்சில்லறைக்கு இனி இல்லை...உருண்டது அங்குமிங்குமாய்உற்சாகமாய் முட்டைகோசுஇரண்டு மாதமாய்இறங்கவில்லை அதன் மவுசு...துட்டில் மிக தூக்கலாய்துடிப்பாய் தட்டில் மிளகாய்...பரவலாய் விரிந்திருக்கும்பசுமையாய் காய்கறி அவை..வதங்கியது வியாபாரி முகம்விற்பனை களை கட்டவில்லை...!
இரட்டை குழந்தைகள்
வலிகளை வாங்குவதற்காகவே நேசங்களை செதுக்குகிறோம் ஆனால் நமக்கு கிடைப்பதோசிலைகள் அல்ல சித்திரவதைகள் பூவை வருடி விடுகிறோம் நோகாமல் இருப்பதற்காக ஆனால் அதுவோ தீ வைத்து விடுகிறது நம்மை இல்லாமல் செய்வதற்காக கவலை படுவதும் கலங்கி வாழ்வதும் நம்மோடு ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்
சுவாசம்
கல்லறை வாசங்களைபார்த்து விட்டேன்பழகி விட்டேன்போர் முனையில்பொதி செய்தகுண்டுகளாய்மனித குணங்கள்மாறக்கண்டுவெடித்து சிதறியது உள்ளம்நம்பிக்கைதும்பிக்கை இழந்தயானையாய்விழுந்து கிடக்கிறதுபள்ளத்தில்வானம் விழுந்ததாய்விரைந்து சென்றேன்அதுநீரில் நிழல் என்றதும்திரும்பி விட்டேன்அச்சு அடித்த காகிதத்தில்அடங்கி விட்டதுஉலகம்உண்மை சுமந்த படிசுற்றி திரிந்தால்தினம் விழுவது செருப்படிபோதும் என்றாகி விட்டதுவாழ்க்கைதேடல் பிழைப்பதால்கரைந்து போனஉப்பு கல்லாய்முயற்சிகள்முடங்கி விடுகிறதுஅடங்கி விட்டதுஆசைகளும் ஆர்வங்களும்ஏணிகளில்ஏரவும் பிடிக்கவில்லைதோணிகளில்கடக்கவும்பிடிக்கவில்லைகல்லறை வாசங்களைமட்டும்சுவாசித்து கொண்டிருக்கிறதுசுவாசம்
வறுமையின் பிரதிபலிப்பு
விழும் அச்சமில்லைவிரல்நுனி தாங்கிடும்...வறுமையின் உச்சம்வாழ்வின் ஆதாரம்...!
நம்பிக்கை
கூன் விழுந்த பாட்டிகூட வரும் நம்பிக்கையூட்டி...ஒன்றாய் கைகோர்த்தபடிஒற்றை கைத்தடி...!
ஏகாந்தம்
தேன்எவ்வளவு தித்தித்தாலும்தேவைகள்தீர திகட்டத்தான்செய்யும்..நியாயங்கள்சில இடங்களில்ஒரு தலை பட்சமாகிஅநியாயங்களுக்குதுணை போய் விடுகின்றது..நான்என்ற அகங்காரம்தலைவிரித்தாடினால் சேதாரம்கூடாரமடிக்கும்..அறிவாளிஎன்ற முலாம்பூசிக் கொண்டாலேபகுத்தறிவு பாடைஏறிவிடும்..எல்லாம்தெரியுமென்று தம்பட்டம்அடிப்பவனுக்கும்தன் சாவு என்று  எனதெரியாத பக்கம் ஒன்றுஇருக்கத் தான் செய்கின்றது.எவ்வளவுதான் வளைந்து கொடுத்தாலும்சில நேரங்களில்மனதை உடைத்து விடுகின்றதுநேசித்த உறவு..நான் எனது என்ற வாசனைகள் அழிவது தான் வாழ்க்கையில்உண்மையான ஏகாந்தம்…
முகங்களும் முகவரியும்
முகங்கள் வேறுமுகவரிகள் வேறுவருடும் பொழுதில்எல்லாம்ரோஜாவின் முல்லாய்காயப்பட்டு போவதேவாடிக்கைமனசாட்சி என்பவர்கள் கூடமிதிப்பதில்சுகம் காணுகிறார்கள்பாஷைபரிதாபமாக இருந்தாலும்பாசங்கள் எல்லாம்பாசாங்காய்போய் விடுகிறதுஉண்மைமுகங்களும் முகவரியும்புதைந்து விட்ட இடம்தெரியாமல்போய் விட்டது
மஹா சிவராத்திரி
அரியானை அம்பலக் கூத்தனைஅருமறையின் அகத்தானை...ஆர்வத்தினை அகம் வைத்துஅனுதினமும் போற்றும் பொழுது...அனைத்தும் தரும் திருஐந்தெழுத்து!விஸ்வநாதர் ஆட்சியாய்விசாலாட்சி அன்னையாய்...அன்னத்தின் பெருமைஅன்னபூரணி வீற்றிடலாய்...காவல் தெய்வமாய்காலபைரவர்  துணை...சிறப்பாய் கோவிலெங்கும்சிவலிங்கம் அருளாசி...பூமியில் படர்ந்திருக்கும்புண்ணியஸ்தலம் காசி
சிறகு தேவையில்லை
வீர வசனங்களில்மேடை அதிரும்வீராப்பு பேசிவீம்புடன்மீசை திருக்கிஇறங்கியதும்எப்படி என் பேச்சுஎன்பதும்தேர்தல் காலம்முடிந்தால்திருவிழாநிறைவுற்றதாய்நீ யாரோ நான் யாரோசாக்கடை அரசியலைபூக்கடையாக்கவந்தேன் என்பதும்சாக்கடைக்குள் புரண்டுசகதியுடன்எழுவதும்காக்க வந்த அரசியலாம்அடுக்கடுக்காய்வார்த்தை ஜாலங்களால்வர்ணம் பூசதேவையில்லைவென்றால் மகிழ்ச்சிசேவைக்கு வாய்ப்புகிடைத்தற்காய்தோற்றல்அதைவிட மகிழ்ச்சிபொறுப்பிலிருந்துதப்பித்ததற்காய்பறக்க தேவையில்லைசிறக்க இருந்தால்போதும்சிறகு தேவையில்லை
முகவரி தொலைக்கிறது
விடிந்தது முடிகிறதுபொழுதுமடிந்து புதைகிறதுகனவுவிடியலின் புலர்வில்மடிந்து விழுகிறதுமகிழ்ச்சி மட்டுமேஏமாற்றங்களின்கைக்குலுக்கள்கள்நம்பிக்கை துரோகங்கள்ஏமாற்றங்களின்ஏர்பிடிப்புக்கள்தினமும் சந்திக்கும்சகோதரர்கள்மாற்றங்கள் துருநாற்றங்களாய் வீசுகிறதுதிட்டாங்கள்சதி வலைகளைபின்னுகிறதுஅன்பானவர்கள்அரக்கர்களாகி விடஅதிர்ச்சி கிடங்கில்சவமாய் விழுகிறோம்வாழும் எண்ணம்வாடி விழலட்சியங்கள்மூச்சைடைத்துமுகவரி தொலைக்கிறது
அன்பு
அன்பு...
பாசம்.....
பாசம்.....
தாய்
தாயேஉன் புன்னகையில்உதிர்ந்தனமனப்புண் காயங்கள்உன் மடியில்தூங்கியகனபொழுதுகள்நினைவில் அழியாதபொக்கிசங்கள்சோறூட்டி பாலூட்டிபசியாத்திதாலாட்டு பாடிஉறங்கவைத்தஎன்னருமைத்தையேஉன் நினைவுகளில்மூழ்கி கிடக்கிறதுஇத்துப் போனஎன் இதயம்
கல்லறை மீது.....
கல்லறை மீது.....
ஆதாரம்
ஒதுக்கி கொள்வதற்காகவும்ஒதுங்கி கொள்வதற்காகவும்காரணம் தேடுகிறார்கள்சிலர்பாசங்கள் அவர்களுக்குபாதம்அப்பி வைத்தசுவடுகள் மட்டுமேதள்ளி போவதற்காய்தடயம் தேடுபவர்கள்கோபம் படுவதாயும்பழி சொல்லி போவார்கள்உலகம்மனிதர்களைமிருகங்களாய்மாற்றிக் கொண்டிருக்கிறதுமனிதத்தை களவாடிசவக்குழிக்குள்புதைத்து விடுகிறதுபிழை பிடிப்பதில்பிழைப்பு நடத்துப்பவர்கள்மனதைகொலை செய்து விடுகிறார்கள்பாவப்பட்ட சிலர்கோவப்பட்டுஅவர்களுக்குஆதாரம்கொடுத்து கொண்டிருக்கிறார்கள்
குண்டு மழை; அன்பு மழை
குண்டு மழை; அன்பு மழை
பழகி விடுகிறேன்
பழகி விடுகிறேன்
தோற்றுப் போனது!
யாருக்கும் தெரியாதுஎனக்குள்சமாதியாகிப் போன சந்தோஷங்கள்......
இடைவெளி
கூடிக் களித்த கொண்டாட்டங்கள் குலைந்து தான் போனதே....கொஞ்சிப் பேசும் மழலையையும் "கொஞ்ச"ம் அச்சமாய் நகர்ந்து தான் போனதே....மனிதனுக்கு மனிதனே எதிரியாய் நோக்கும் நிலை என்றுமே மாறாது போனதோ .....முகத்தை மறைக்கும் முகமூடியோ புன்னகையையும் சேர்த்தே மறைத்து போனதே.....எனக்கும் சமூகத்திற்கும் ஆன தொடர்புகளோ சங்கிலியில் அறுபட்ட கன்னியாய் "சமூக இடைவெளியாய் "..... 
Ads
Poems Categories
Featured Poems
அவள்
வார்த்தைகளின்ஒலி வடிவத்தைவற்ற செய்தவள்பட படப்பாய் என்றும் என்படர்ந்த மார்பினில் ஓர்இறுக்கத்தை தருபவள்சிந்திக்க சிந்திக்கஇதழினில் ஈரப்பதம் குறைந்திடஇரவெல்லாம் விழிக்க செய்பவள்
அப்பா...!
  •  · 
  •  · beesiva
காட்டிக் கொள்ளாத பூட்டிய அன்பினைஈட்டிய வெற்றிகள் கண்டு புழுகாமல்பூரிக்கும் பெரு மகன்..!பழுதாகாமல் இருந்திட விழுதான உந்தனைவிரட்டி விரட்டி படி படி என தினம்பாசப் பந்தாடியவன்.!பார்வையும் உறுமலும் உன் பார்வைக்கு விரும்பாத வில்லனாய் வெறுமனே நடிப்பால்புடம் போட்டவன்..தடம் மாறிய வேளைகளில் வேதனையால்நொந்தழுதவன்தனக்கு எட்டாத தூரங்களை எட்ட வைத்து வளர்த்தவன்.!உயர் நிலை தொட்டதும் ஓரமாய் ஒதுங்கிஈரமான வார்த்தைகளுக்குதவமிருப்பவன்.!நேசி!  பூசி!  யோசி ! வாசி அவர் வாழ்க்கை உனக்குபெரும் பாடம்..!
  •  · 
  •  · beesiva
உன்னை நான்மதிக்கிறேன்அதனால் நான்பேசாமல்இருக்கிறேன்பெண் என்றால்பெருமைக்குரியவளே!நானும் பெருமையாகபேசுவேன்நீயும் யாரையும்இகழ்ந்து பேசாதே!உன்னிடம்திறமையுண்டோ?செய்து காட்டுமற்றவர்களைபுகழ்ந்து காட்டுபுண்பட பேசாதே!நீயும் ஒரு பெண்ணே!பெண்ணின் பெருமைதாய்மையே!தாய்மையுனக்குமுண்டுதப்பாய் பேசாதே!தனித்திறமைகளைவெளிக்கொண்டு வரகளம்பலவுண்டுஆடு,விளையாடுஉன்னைப்போற்றபலர் வருவார்நீ பொறாமைகொள்ளாதே பெண்ணே!பொறாமையென்பதுவெற்றுத்தாள்இதில் ஏதாவதுஎழுதுபொறாமை நீங்கநீயும் முயற்சி செய்யாரையும் பிரிக்கநினைப்பதும்உன்னைப்பிரிவதும்இதில் மகிழ்ச்சியும்இகழ்ச்சியும்உனக்கே சொந்தம்...பத்தினியாள் செய்வினைக்குபழிவாங்க எண்ணாமல் புத்தகம்தனை எழுதிபுத்திதனைப்புகட்டுகிறேன்இப்படியும்பெண்கள் இப்புவியில்இருக்கிறார்கள்தப்பிடுங்கோ காளையரேதப்பிவி
  •  · 
  •  · beesiva
அன்பு வைப்பதாக இருந்தால் அதை உண்மையாக வையுங்கள் நடிக்காதீர்கள் பழகிவிட்டோம் என்பதற்காகவும் உதவி விட்டார்கள் என்பதற்காகவும் பாசமாய் பழகி பாசாங்கு செய்யாதீர்கள் காயத்தை விட வலி கூடியது மரணத்தை விட கொடியது பொய் நேசம் பொழிந்துவிட்டு மார்தட்டி சிரிப்பது மோசடிகள் ஆயிரம் செய்துவிட்டு போயிவிடுங்கள் பரவாயில்லை இதயத்தில் மட்டும் துரோகம் செய்து விடாதீர்கள் 
  •  · 
  •  · beesiva
வறுமைஉன்னிடம் தோழமை கொண்டால் பலபேர் உன்னை விட்டு தூரமாய் போய் விடுவார்கள்பாசம் வைத்தவர்கள் கூடபயந்து விடுவார்கள் மடியில் தூங்கியவர்கள்மறந்து போவார்கள் இதயத்தில் இருந்தவர்கள்இறங்கி விடுவார்கள்தலை குனிந்துதவம் கிடந்தவர்கள்தலை நிமிர்த்திதள்ளி விடுவார்கள்நலம் விசாரிக்கநடுங்குவார்கள்நீ உறவுகளைஉணர்ந்து கொள்வாய்உலகத்தைபுரிந்து கொள்வாய்அன்பைஅறிந்து கொள்வாய்மனிதர்கள் இப்படித்தான்என்பதைநீ பாடமாய் படித்துக் கொள்வாய்
Ads