கவிதை
Poem of the Day
Empty
Ads
Latest Poems
சமையல்காரனின் காதல்

கண்ணே,

அன்பிற்கு நீயோர் அண்டா
பண்பிற்கு நீயோர் பாத்திரம்



பாலுடன் கலந்த சக்கரையாய்
நாம் கலந்திருக்கலாம்
நீ இல்லையென்றால் என்
வாழ்வு பாவக்காயாய் கசக்கும்



நம் காதல் கத்திரிக்காயல்ல
எளிதாய் கிடைப்பதற்கு
என்றோவது நான் நன்றாய்
சமைக்கும் நல்விருந்து
கிடைப்பதற்கு அரிது



உன்னை காணும்போது என்
நெஞ்சு சுடுபாலாய் கொப்பளiக்கிறது
வா வந்து தண்ணிர்
தெளிi 



இரவிலே என் கனவிலே
உப்புமாவை போல் என்னை
கிண்டு கிண்டுகிறாய்
பகலிலே என் நினைவினை
தேங்காயை துருவது போல்
துருவு துருவிகிறாய்



ஏலக்காய் போல் வாசம்
தூக்குகிறது நீ அருகில்
வந்தால்
பொங்கல் போல் என்மனம்
பொங்கிறது நீ என்னுடன்
பேசினால்
அரும்சுவை விருந்தாய்
அமையும் நீ தரும் சம்மதம்
"Lஎழுதியவர் யார் என்று தெரியவில்லை ஆனால்படித்துப் பாருங்கள் கரைந்து போவீா்கள்

`*"எழுதியவர் யார் என்று தெரியவில்லை ;*

*ஆனால்,*


*படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;"*


*********

தீப திருநாள் வாழ்த்துகள்

அன்பு பூத்திட

அகலினில் நெய் விட்டு...

பாசம் விரிந்திட

பஞ்சு திரி இட்டு...

விளக்கினில் படர்ந்து

வெளிச்சம் மலர்ந்து...

உள்ளத்தில் இருளாய்

உறைந்திருக்கும் இன்னல்கள்

அகன்று வெளியேறுவதாய்...

அழகான தீப ஒளிதனில்

மனம் பிரகாசமாய்

மகிழ்ச்சி பெருகட்டும்!

அழகோ... அழகு

விழா காலமிது

வரவேற்கும் குதூகலத்தில்...

வானமிறங்கி வந்து

வாழ்த்து சொல்வதில்

வண்ணக்கிளி ஒன்றிணைந்ததோ

வசீகரிக்கும் அழகினில்....!

சுலபமில்லை.!

கிடைத்தது
ஒரு நாள் தொலைந்து
போகலாம்.

பிடித்தது
ஒரு நாள் வெறுத்தும்
போகலாம்.

நிரந்தரம்
என்று ஏதுமில்லை
இவ்வுலகில்.

வெறுப்பை
விதைத்த இடத்தில் அன்பை
அறுவடை
செய்ய நினைப்பது முட்டாள் தனம்.

எந்த
உறவாயினும் சற்று கவனமாகவே
இருங்கள்.
எதிர்பார்த்த தேவைகள் கிடைக்காத
நேரத்தில்
தூக்கி எறியப்படலாம்..

உண்மையான
அன்பில் சட்டென விலகுதல்
என்பது
அத்தனை சுலபமல்ல.
நடிப்பவர்களுக்கு மட்டுமே
அது சுலபமானதாகும்.

அற்புத குழந்தை

ஆகாய கருவினிலிருந்து

அற்புதமாய் விழுந்தது

பூமழை குழந்தையது

பூமித்தாய் பொன்மடியில்...

ஓடையாய் மழலை கொஞ்சி

ஒய்யாரமாய் தவழ்ந்தோடி...

அருவியாய் இடறி விழுந்து

ஆர்ப்பரித்து எழுந்து..

அன்னநடை பயின்று

ஆறென உருமாறி...

பெருகிய வேகமதில்

பெருநதி என்றாகி...

பேருவகை கொண்டு

கடல் சேர்ந்திடும் தண்ணீரை...

கலங்காது காத்திடுவாள்

நிறைவாக தாங்கிடலாய்...

நிலமென்னும் அன்னை!

மன்னிப்பு

மன்னிப்பை அளித்துப்  பாருங்கள்.....

மனபாரம் குறையும்...


மன்னிப்பை கேட்டுப்  பாருங்கள்....

பகையெல்லாம் மறையும்...


மன்னிப்பை அளந்து பாருங்கள்...

மனசு பூவாக மாறும்...


மன்னிப்பாக வாழ்ந்து பாருங்கள்.....

வசந்தம் தாலாட்டி போகும்...


மன்னிப்பாரோடு இருந்து பாருங்கள்.....

குதூகலம் வந்து சேரும்...


மன்னிப்பை உணர்ந்து பாருங்கள்....

மனசெல்லாம் லேசா தோணும்...


மன்னிக்க முயன்று பாருங்கள்....

முயற்சியெல்லாம் வெற்றி தரும்...


மன்னிக்கவும் என சொல்லிப் பாருங்கள்....

எதிரில் புன்னகை தவழும்...


மன்னியுங்கள் என உரைத்துப் பாருங்கள்....

எதிரில் கண்ணீர் வழிந்திடும்...


மன்னிப்பின் வழியைத் தேடி பாருங்கள்....

முட்டுக்கட்டைகள் முடங்கிப் போகும்...


மன்னித்து வாழ்ந்துப் பாருங்கள்.....

வந்த நோயும் கடந்து போகும்...


மன்னிப்புடன் இணைந்துப் பாருங்கள்....

இதயங்கள் களிப்படையும்....

வெற்றி பாதை....

இனிமையான தருணம்

இந்திய விண்கலம்

விக்ரம் பதிவுதனில்

வெற்றி பாதையில்...

சந்திரயான்-3  அது

சந்திரனை தொட்டது...!

நிலவின் ஒளியில்

நிறைந்த பரவசம்...

பேருவகை எதிரொலியில்

பெருமையாய் பாரதம்!

கைமாறு

நம்பிக்கை வைத்தே 

நடந்து செல்கிறோம் 
ஆனால் பாதை 
வேறு எங்கோ 
திரும்பி விடுகிறது 



அன்பு பயணத்தில் 
அரவம் 
தீண்டி விடுகிறது 



பச்சோந்திகளுக்கு 
பழக்கப்பட்டவை அவை  
அப்பாவிகள் நாம்தான் 
அனாதையாகி விடுகிறோம் 



பொய் தோரணங்களில் 
புதைந்து போவதால் 
உண்மை முகங்களை கண்டு 
வியந்து நிக்கிறோம் 



பணங்கள் 
குணங்களை 
மாற்றி விடுகிறது 



வசதிகள் 
வாய்மையை 
ஒழித்து விடுகிறது 



பகட்டும் பெருமையும் 
பாசத்தை அழித்து 
விடுகிறது 



போலி சேவல்களின் 
கூவலில் 
பொழுதுகள் விடியவில்லை 
திரோகங்கள் மட்டுமே 
விழித்து நிற்கிறது 



வசனம் பேசியவர்கள் 
வசதி வந்ததும் 
விஷமேறி விடுகிறது 



புதிய முகவரிகள் 
காணும்போது 
பழையவை 
காணாமல் போய் விடுகிறது 



நேர்மையாய் 
நடந்து பார் 
ஏமாளி என்பார்கள் 



உண்மையாய் 
இருந்து பார் 
உதவாக்கரை என்பார்கள் 



மனம் வைத்து 
பழகினாலும் 
குணம் காட்டி விடுவார்கள்



உயிராய் நேசித்தாலும்
கொடிய 
கைமாறு செய்வார்கள் 
துரோகம் செய்பவரை மட்டும் 
தூக்கி தோளில் சுமப்பார்கள் 


சிந்திப்போம்....

குறுகிய ஆயுளில்

குவியும் ஏமாற்றங்கள்

கண்டு கலங்காதே

கவலை கொள்ளாதே

விடிந்தால் பயணி

முடிந்தால் மெளனி

போட்டி

நீயா... நானா...

நிலையாய்  போட்டியில்

வெங்காயம் தக்காளி

விலைதனின் உச்சத்தில்...

என்று இதன் முற்றுப்புள்ளி

எதிர்பார்ப்பில் மக்கள்...!

இன்றைய நிதர்சனம்

உச்சம் தொட்ட விலை

உட்கார்ந்திருந்தது தக்காளி...

உடன் ஏறிய நிலை

உரிக்காமலேயே கண்ணில் நீர்துளி

உதிர வைத்தது சின்னவெங்காயம்...

சிறு துண்டு இஞ்சியும்

சில்லறைக்கு இனி இல்லை...

உருண்டது அங்குமிங்குமாய்

உற்சாகமாய் முட்டைகோசு

இரண்டு மாதமாய்

இறங்கவில்லை அதன் மவுசு...

துட்டில் மிக தூக்கலாய்

துடிப்பாய் தட்டில் மிளகாய்...

பரவலாய் விரிந்திருக்கும்

பசுமையாய் காய்கறி அவை..

வதங்கியது வியாபாரி முகம்

விற்பனை களை கட்டவில்லை...!

இரட்டை குழந்தைகள்


வலிகளை வாங்குவதற்காகவே 
நேசங்களை செதுக்குகிறோம் 



ஆனால் நமக்கு 
கிடைப்பதோ
சிலைகள் அல்ல 
சித்திரவதைகள் 



பூவை 
வருடி விடுகிறோம் 
நோகாமல் இருப்பதற்காக 
ஆனால் அதுவோ 
தீ வைத்து விடுகிறது 
நம்மை இல்லாமல் 
செய்வதற்காக 



கவலை படுவதும் 
கலங்கி வாழ்வதும் 
நம்மோடு 
ஒட்டி பிறந்த 
இரட்டை குழந்தைகள்


சுவாசம்

கல்லறை வாசங்களை

பார்த்து விட்டேன்

பழகி விட்டேன்



போர் முனையில்
பொதி செய்த
குண்டுகளாய்
மனித குணங்கள்
மாறக்கண்டு
வெடித்து சிதறியது உள்ளம்



நம்பிக்கை
தும்பிக்கை இழந்த
யானையாய்
விழுந்து கிடக்கிறது
பள்ளத்தில்



வானம் விழுந்ததாய்
விரைந்து சென்றேன்
அது
நீரில் நிழல் என்றதும்
திரும்பி விட்டேன்



அச்சு அடித்த காகிதத்தில்
அடங்கி விட்டது
உலகம்
உண்மை சுமந்த படி
சுற்றி திரிந்தால்
தினம் விழுவது செருப்படி



போதும் என்றாகி விட்டது
வாழ்க்கை
தேடல் பிழைப்பதால்
கரைந்து போன
உப்பு கல்லாய்
முயற்சிகள்
முடங்கி விடுகிறது



அடங்கி விட்டது
ஆசைகளும் ஆர்வங்களும்
ஏணிகளில்
ஏரவும் பிடிக்கவில்லை
தோணிகளில்
கடக்கவும்
பிடிக்கவில்லை



கல்லறை வாசங்களை
மட்டும்
சுவாசித்து கொண்டிருக்கிறது
சுவாசம்
வறுமையின் பிரதிபலிப்பு

விழும் அச்சமில்லை

விரல்நுனி தாங்கிடும்...

வறுமையின் உச்சம்

வாழ்வின் ஆதாரம்...!


நம்பிக்கை

கூன் விழுந்த பாட்டி

கூட வரும் நம்பிக்கையூட்டி...

ஒன்றாய் கைகோர்த்தபடி

ஒற்றை கைத்தடி...!

ஏகாந்தம்


தேன்
எவ்வளவு தித்தித்தாலும்
தேவைகள்
தீர திகட்டத்தான்
செய்யும்..



நியாயங்கள்
சில இடங்களில்
ஒரு தலை பட்சமாகி
அநியாயங்களுக்கு
துணை போய் விடுகின்றது..



நான்
என்ற அகங்காரம்
தலை
விரித்தாடினால் சேதாரம்
கூடாரமடிக்கும்..



அறிவாளி
என்ற முலாம்
பூசிக் கொண்டாலே
பகுத்தறிவு பாடை
ஏறிவிடும்..



எல்லாம்
தெரியுமென்று தம்பட்டம்
அடிப்பவனுக்கும்
தன் சாவு என்று  
எனதெரியாத பக்கம் ஒன்று
இருக்கத் தான் செய்கின்றது.



எவ்வளவு
தான் வளைந்து கொடுத்தாலும்
சில நேரங்களில்
மனதை உடைத்து விடுகின்றது
நேசித்த உறவு..



நான் 
எனது என்ற வாசனைகள் 
அழிவது தான் வாழ்க்கையில்
உண்மையான ஏகாந்தம்…


முகங்களும் முகவரியும்


முகங்கள் வேறு
முகவரிகள் வேறு



வருடும் பொழுதில்
எல்லாம்
ரோஜாவின் முல்லாய்
காயப்பட்டு போவதே
வாடிக்கை



மனசாட்சி என்பவர்கள் கூட
மிதிப்பதில்
சுகம் காணுகிறார்கள்



பாஷை
பரிதாபமாக இருந்தாலும்
பாசங்கள் எல்லாம்
பாசாங்காய்
போய் விடுகிறது



உண்மை
முகங்களும் முகவரியும்
புதைந்து விட்ட இடம்
தெரியாமல்
போய் விட்டது


மஹா சிவராத்திரி

அரியானை அம்பலக் கூத்தனை

அருமறையின் அகத்தானை...

ஆர்வத்தினை அகம் வைத்து

அனுதினமும் போற்றும் பொழுது...

அனைத்தும் தரும் திருஐந்தெழுத்து!



விஸ்வநாதர் ஆட்சியாய்

விசாலாட்சி அன்னையாய்...

அன்னத்தின் பெருமை

அன்னபூரணி வீற்றிடலாய்...

காவல் தெய்வமாய்

காலபைரவர்  துணை...

சிறப்பாய் கோவிலெங்கும்

சிவலிங்கம் அருளாசி...

பூமியில் படர்ந்திருக்கும்

புண்ணியஸ்தலம் காசி

சிறகு தேவையில்லை


வீர வசனங்களில்
மேடை அதிரும்
வீராப்பு பேசி
வீம்புடன்
மீசை திருக்கி
இறங்கியதும்
எப்படி என் பேச்சு
என்பதும்



தேர்தல் காலம்
முடிந்தால்
திருவிழா
நிறைவுற்றதாய்
நீ யாரோ நான் யாரோ



சாக்கடை அரசியலை
பூக்கடையாக்க
வந்தேன் என்பதும்
சாக்கடைக்குள் புரண்டு
சகதியுடன்
எழுவதும்
காக்க வந்த அரசியலாம்



அடுக்கடுக்காய்
வார்த்தை ஜாலங்களால்
வர்ணம் பூச
தேவையில்லை



வென்றால் மகிழ்ச்சி
சேவைக்கு வாய்ப்பு
கிடைத்தற்காய்
தோற்றல்
அதைவிட மகிழ்ச்சி
பொறுப்பிலிருந்து
தப்பித்ததற்காய்



பறக்க தேவையில்லை
சிறக்க இருந்தால்
போதும்
சிறகு தேவையில்லை



முகவரி தொலைக்கிறது

விடிந்தது முடிகிறது

பொழுது

மடிந்து புதைகிறது

கனவு

விடியலின் புலர்வில்

மடிந்து விழுகிறது

மகிழ்ச்சி மட்டுமே

ஏமாற்றங்களின்

கைக்குலுக்கள்கள்

நம்பிக்கை துரோகங்கள்

ஏமாற்றங்களின்

ஏர்பிடிப்புக்கள்

தினமும் சந்திக்கும்

சகோதரர்கள்

மாற்றங்கள் துரு

நாற்றங்களாய் வீசுகிறது

திட்டாங்கள்

சதி வலைகளை

பின்னுகிறது

அன்பானவர்கள்

அரக்கர்களாகி விட

அதிர்ச்சி கிடங்கில்

சவமாய் விழுகிறோம்

வாழும் எண்ணம்

வாடி விழ

லட்சியங்கள்

மூச்சைடைத்து

முகவரி தொலைக்கிறது


அன்பு

அன்பு...

பாசம்.....

பாசம்.....

தாய்


தாயே
உன் புன்னகையில்
உதிர்ந்தன
மனப்புண் காயங்கள்



உன் மடியில்
தூங்கிய
கனபொழுதுகள்
நினைவில் அழியாத
பொக்கிசங்கள்



சோறூட்டி பாலூட்டி
பசியாத்தி
தாலாட்டு பாடி
உறங்கவைத்த
என்னருமைத்தையே



உன் நினைவுகளில்
மூழ்கி கிடக்கிறது
இத்துப் போன
என் இதயம்


Ads