Sign up
Added a news
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.கொழும்பில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் நாடு பாரிய நெருக்கடிக்கடியில் இருந்து மீண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அரசாங்கத்தை தற்போது பொறுப்பேற்க தயார் என குறிப்பிடும் தரப்பினர் 2022 ஆம் ஆண்டு ஓடி ஒளிந்ததை மறந்து விடக் கூடாது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நாங்கள் தோற்றுவிப்போம்.அவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள்.எந்த தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு பஷில் ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளரல்ல, அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவே மைத்திரிபால சிறிசேன,ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை தவறாக வழிநடத்தினார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.
Added a news
4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.ஞானசார தேரர் இதற்கு முன்னரும் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியமைக்காக கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Added a news
சுவிட்சர்லாந்து நிறுவனமான ஸ்டாட்லர் என்ற நிறுவனம் சமீபத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை வர்த்தக கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.இந்த ரயில் பல்வேறு சோதனைக்கு பின் ஒரு முழு ஹைட்ரஜன் டேங் நிரப்பப்பட்டு 2,803 கிமீ வரை பயணம் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளது.இதுகுறித்து ஸ்டாட்லரின் துணைத் தலைவர் டாக்டர் அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறுகையில், ‘இந்த கின்னஸ் சாதனை எங்கள் நிறுவனத்தின் சிறந்த செயல்திறனை காட்டுகிறது என்றும், இது ஒரு மகத்தான சாதனை என்றும், இன்னொரு உலக சாதனையை படைத்ததில் நாங்கள் அனைவரும் பெருமை அடைகிறோம்’ என்றும் கூறியுள்ளார்.
Added a news
மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டிட்டுள்ள நாம் தமிழர் கட்சி, 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் தென்காசியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,100, 150 கோடி கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலைக்கு நாங்கள் இல்லை என்றும் அப்படிப்பட்ட ஒரு அரசியல் செய்ய வேண்டிய நிலை வந்தால் அரசியலை விட்டு விட்டு விவசாயம் சென்று விடுவேன் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி மலர செய்ய வேண்டும் என்கிற மாபெரும் கனவோடு தான் அரசியல் களத்தில் நிற்பதாகவும் அவர் கூறினார்.இந்த நிலத்தில் நாம் அடிமை பட்டுள்ளதாகவும், நமக்கென்று எதுவும் இல்லை என்றும் ஆளுகின்றவர்கள் நம்மளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் சீமான் வேதனை தெரிவித்தார்.
Added article
நடந்தது என்ன?லீவு தராத மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனுக்கு பிறகு நகைச்சுவையில் உச்சம் தொட்டவர்கள் சந்திரபாபு மற்றும் நாகேஷ். இதில் சிறுவயதிலேயே நகைச்சுவை உணர்வுடன் இருந்த நாகேஷ் தனது வெகுளியான கேள்விகள் மூலம் பலரை கோபப்படுத்தியும் இருக்கிறார். அதே போல் சிரிக்கவும் வைத்திருக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த நாகேஷ் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டே நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார்.அப்போது ஒருநாள் நாடக ஒத்திகைக்காக லீவு வேண்டும் என்று கேட்டால் மேனேஜர் கொடுக்க மாட்டார் என்பதால் வெளியில் சொல்ல முடியாத காரணங்களால் நாளை ஒருநாள் லீவு வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை படித்த அந்த மேனேஜர், நாகேஷை திட்டி லீவெல்லாம் தர முடியாது. நாளைக்கு ஆபீஸ் வந்துவிடு என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு போய்விட்டார்.இதனால் கோபமாக நாகேஷ் நாளைக்கு நாடக ஒத்திகைக்கு போக முடியாது. ஆனாலும் இந்த மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார். இதை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்த நிலையில், மேனேஜர் கோபமாக என்னயா இது எதுக்காக இப்படி வந்துருக்க என்று கேட்டுள்ளார். சார் என்னிடம் இருந்தது 2 செட் பேண்ட் சார்ட். அதில் ஒன்றை நேற்று போட்டேன். மற்றொன்று மழையில் நனைந்து விட்டது.அந்த ட்ரெஸை போட்டால் எனக்கு ஜலதோஷம் பிடித்துவிடும். அதனால் தான் வெளியில் சொல்ல முடியாத காரணங்களுக்காக லீவு வேண்டும் என்று கடிதம் எழுதினேன் என்று சொல்ல, அலுவலகத்தில் உள்ள அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். அதன்பிறகு மீண்டும் நாடக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நாகேஷ்க்கு ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வயிற்றுவலி வந்த மாதிரி நடிக்க வேண்டும்.இதற்காக ஒன்னறை மாதங்கள் ஒத்திகையில் கலந்துகொண்ட நாகேஷ், நாடகம் நடக்கும் நாளில் பதட்டமாக இருந்துள்ளார். ஆனாலும் அவரது காட்சி வரும்போது இயக்குனர் அடுத்து நீதான் போ என்று சொல்ல, இருங்க சார் நான் என்ன சாதாரண ஆளா வயிற்றுவலி பேஷண்ட் மெதுவாத்தான் போவேன் என்று சொல்லி சென்ற நாகேஷ் இயக்குனர் சொல்லிக்கொடுத்ததை பண்ணாமல், தனக்கே உரிய பாணியில் ஒரு நிமிடத்தில் முடிய வேண்டிய சீனை சில நிமிடங்கள் தாமதமாக முடித்துள்ளார்.இந்த காட்சி அங்கு நாடகம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்திய நிலையில், நாடகத்தை முதல் வரிசையில் பார்த்துக்கொண்டிருந்த பிரபலம் ஒருவர் நாகேஷ்க்கு பரிசு வழங்கியுள்ளார். அதேபோல் திட்டுவார் என்று நினைத்த இயக்குனர் நாகேஷை கட்டி பிடித்து பாராட்டியுள்ளார். அதன்பிறகு நாகேஷ் அந்த இயக்குனரிடம் எனக்கு பரிசு கொடுத்தவர் யார் என்று கேட்க, அவர் தான் எம்.ஜி.ஆர் என்று கூறியுள்ளார்.
Added article
கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது என்று கலங்கிய பானுப்ரியா தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்ரியா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பானுப்ரியா, நடனத்திலும் சிறந்து விளங்கினார். இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபிநயா என்கிற மகளும் உள்ளார்.இவர் கடைசியாக தமிழில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்திருந்தார்.அதன்பின் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நடிகை பானுப்ரியா, தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக கூறி உள்ளார்.“எனது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த பின்னர் எனக்கு நினைவாற்றல் மிகவும் குறைந்துவிட்டது. எதையும் நியாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. மனமும் வெறுமையாகிவிட்டது. ஷூட்டிங்கில் டயலாக் மறந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக தான் இப்படி நடக்கிறது” என கூறினார்.தன்னைப் பற்றி பரவிய வதந்திகள் குறித்து அவர் பேசுகையில், நான் என் கணவனை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் பரவின. அது எதுவும் உண்மையில்லை. தற்போது என் கணவர் உயிருடன் இல்லாததால் அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன் எனது உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அப்போது நடிகை ராதா பதறியடித்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார் என பானுப்ரியா தெரிவித்தார்.தற்போது முழுநேரமும் வீட்டிலேயே இருப்பதாகவும், புத்தகம் படிப்பது, பாடல்களைக் கேட்பது, வீட்டு வேலைகளை செய்வது என தன்னை பிசியாக வைத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.அதேபோல் அவரது ஒரே மகளான அபிநயா, தற்போது லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் பானுப்ரியா கூறியுள்ளார்.
Added a post
புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா...புருஷனோட contact லிஸ்ட் ல...Super womenSweet heartDream girlPrincessLovely ladyஇந்த பேர் எல்லாம் பார்த்து வெறி ஆகிட்டா...இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு...ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா...முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட அம்மா அட்டெண்ட் பண்ணாங்க...ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவன் தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு...மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (மனைவி) அவளோட நம்பரு...நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது மகளோட நம்பரு...கடைசி நம்பருக்கு கால் பண்ணா மாமியார் நம்பரு....மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டிஅப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5000 டாலர் பணத்தையும் கொடுத்து போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்...இந்த வாரம் போய்ட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சா...வெளிய வந்த நம்மாளு Mechanic ன்னு save பண்ணி வச்சிருந்த அவன் ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்...
வரலாற்றில் இன்று பங்குனி 291886 – அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் நான்காம் பிரிவு இராணுவம் சோவியத் செஞ்சேனையினால் முற்றாக அழிக்கப்பட்டது.1945 – இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் வெடிகுண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.1947 – மடகாஸ்கரில் பிரான்சிய குடியேற்ற ஆட்சிக்கெதிராக மடகாசி எழுச்சி ஆரம்பமானது.1961 – வாஷிங்டன், டி. சி. மக்கள் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.1962 – அர்ஜெண்டினாவின் அரசுத்தலைவர் அர்த்தூரோ புரொந்தீசி இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.1971 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.1973 – அமெரிக்காவின் லாவோஸ் மீதான குண்டுத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.1974 – நாசாவின் மரைனர் 10 விண்ணுளவி புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.1974 – சீனாவின் சென்சி மாகாணத்தில் சுடுமட்சிலைப் படை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.1999 – உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர்.2004 – பல்காரியா, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, உருமேனியா, சிலோவாக்கியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.2008 – பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.2010 – மாஸ்கோ மெட்ரோ தொடருந்து நிலையத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.2013 – தன்சானியா, தாருசலாம் நகரில் 16-மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.2014 – ஐக்கிய இராச்சியத்தில் முதலாவது ஒருபால் திருமணங்கள் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.
Added a post
அச்சம் ,,,,,ஒரு மடத்தில் துறவி ஒருவர் இருந்தார். நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்று வந்தனர். சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், “எல்லாத்தீமைகளுக்கும் அச்சம் தான் அடிப்படைக் காரணம்;அச்சத்தால் வெறுப்பு வருகிறது; பகை ஏற்படுகிறது; பேராசை உண்டாகிறது; அதனால் நாம் எந்தச் சூழலிலும் அச்சப்படக் கூடாது,'' என்றார். குறுக்கிட்ட சீடர் ஒருவர்,“ஐயா! அச்சத்தால் பேராசை உண்டாகும் என்கிறீர்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,'' என்றார். அதற்கு அவர் பதில் ஏதும் சொல்ல வில்லை. அன்றிரவுவழக்கம் போலத் துறவியும், சீடர்களும் உணவு உண்ண அமர்ந்தனர். அப்போது துறவியிடம் வந்த சமையல்காரர், “மடத்தில் அரிசி தீர்ந்துவிட்டதை நான் கவனிக்கவில்லை. இருந்த அரிசியை வைத்து இரவு சமையலை முடித்து விட்டேன். நாளை நகரத்திற்குச் சென்று அரிசி வாங்கி வந்தால் தான்,சமையல் செய்ய முடியும். நண்பகலில் தான்உணவு தயாராகும். காலை உணவு சமைக்க வழி இல்லை,'' என்றார். பிறகு அவர் எல்லாருக்கும் உணவு பரிமாறினார். துறவியும், சீடர்களும் உண்டு முடித்தனர். சீடர்களைப் பார்த்து துறவி,“இன்று நீங்கள் அனைவரும் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டு உள்ளீர்கள் ஏன்'' என்று கேட்டார். “நாளை காலையில் உணவு கிடையாது என்று சமையல்காரர் சொன்னார். காலையில் பட்டினிகிடக்க வேண்டி இருக்கும். அதனால், இப்போதுஅதிகமாகச் சாப்பிட்டுவிட்டோம்,''என்றார் சீடர்களில் ஒருவன்.“நாளை காலையில் உணவு கிடைக்காது என்று அச்சம் கொண்டீர்கள். அதனால் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டீர்கள். அச்சத்தால் பேராசை வரும், என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா'' என்றார் துறவி.அச்சத்தால் பேராசை வரும் என்பதை ஒப்புக்கொண்டனர் சீடர்கள்.அனுபவம் என்பது எதை எப்படி செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. எதை எப்போது செய்யக் கூடாது என்று தெளிவாக இருப்பதாகும்.எல்லாமே தெரியும் என்று சொல்லிக் கொள்ளலாம் தவறில்லை.ஆனால்அடுத்தவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து விடக்கூடாது. அது தவறு துணிவு உங்களை உழைப்பில் உயர வைக்கும் ...பணிவு உங்களை பிறர் மனதில் உயர வைக்கும் .
Added a post
கடைசியாக எப்போது கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்?இதுவரையில்லையென்றால்முதலில்தரையில் 15 நிமிடம் உட்காருங்கள். இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது. லேசாக முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி உட்கார முயலுங்கள், இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்கமுடியாதுமுதுகுநேராகத் தான்இருக்கும்.இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு கிடைக்கும்.நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான். நாற்காலி சோபாவில் அமர்வதன் தீமைகள்.இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது.மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே ஒழிய கீழே உட்காருவது கிடையாது. இது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குட்டிச்சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான். இதனால் வலி வரும் விகிதம் குறையுமே தவிர நிற்கப்போவது கிடையாது.ஜெரென்டாலஜி, எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள். ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டு மெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது. கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல், தரையில் கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு. தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி, அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம்.*ஜெரென்டாலஜி துறை, ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து, எழ வைத்து ஆய்வு செய்தார்கள். கை, முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு.ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு.இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு. இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு அதன்பின் அவர்களை ஆன்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் தெரிந்த விசயம் பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான்.கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள். செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்.கீழே உட்காருவது நாகரீகக் குறைவு என கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, சேர்களை வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம்.சோபா, சேரில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்து போன உணர்வு. அடுத்து பின்புற வலி. காரணம் சோபாவில் உட்காருவதால் பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது. பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் முதுகுவலி, மூட்டுவலி என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள். காரணம் அவர்கள் வாழ்வதே தரையில் தான். கீழே படுத்து, உட்கார்ந்து எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும், எலும்புகளும் அத்தனை வலுவாகி விடுகின்றன. ஆனால் சோபா, மெத்தையில் படுத்து பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரீக சமூக முதியவர்களுக்கு வயதானபின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் கீழே விழுவதுதான்.ஆஸ்டியோ பெரோசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன என சொல்லுகின்றன ஆய்வுகள். சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும், புழங்குவதும் நம் ஆயுளை கூட்டி, முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி பின்புறத்தையும், முதுகுத் தண்டையும், மூட்டையும் வலுவாக்குகின்றன.அதனால் இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை எனில் இனி உட்கார்ந்து பழங்குங்கள். அப்படி உட்கார்கையில் முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் அவ்வபோது கையை வைத்து மெதுவாக கீழே அமுக்கி விடுங்கள். இது காலின் அடக்டர் (Adductor Muscle) தசைகளை பிளெக்சிபிள்(Flexible) ஆக்கி போஸ்ச்ரசை (Posture) சரி செய்யும்.சுகாசனம் செய்வோம் .. சுகமாக இருப்போம்.
Added a post
தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 16 ஆம் தேதி மேஷம் -ராசி: சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பொருளாதாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஊதாரிஷபம் ராசி: எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். புதிய நபர்களிடத்தில் கனிவுடன் பழகவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகளால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு மிதுனம் -ராசி: பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகளை மேம்படுத்திவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்கடகம் -ராசி: தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமையை கையாளவும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புசிம்மம் -ராசி: மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய வேலைக்கான வாய்ப்பு ஏற்படும். புதிய மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பணிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கன்னி -ராசி: மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்புதுலாம் -ராசி: பணிவான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். கணிதம் சார்ந்த துறைகளின் மீது ஈர்ப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்விருச்சிகம்- ராசி: தனவரவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களிடம் அதிக உரிமை கொள்வதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பச்சை தனுசு -ராசி: குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். கனிவான பேச்சுக்களால் பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மகரம் -ராசி: எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்கும்பம் –ராசி: தொழில் அபிவிருத்தி சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகளை புரிந்து கொள்வீர்கள். மனதில் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பரிவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மீனம் -ராசி: விவேகமான செயல்பாடுகளின் மூலம் நன்மதிப்பு ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
Added a post
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.3.2024
சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று மாலை 06.21 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று மாலை 06.41 வரை சுவாதி. பின்னர் அனுஷம்.
உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை
வெள்ளி காலை 10:30 AM to 12 மதியம் 3 to 4:30 PM காலை 7:30 to 9 AM
Added article
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த, ஷங்கர் இயக்கிய 2.o படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, சூர்யா தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், இறுதிச் சுற்று படத்தில் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். அதேபோல் பேட் மியான் சோட்டே மியான் என்ற படத்தில் நடித்திருக்கும் அக்ஷய்குமார், மும்பையில் இப்பட ஆடியோ ரிலீஸ் விழாவில் பங்கேற்றார். அவருக்கு அருகில் இந்தி நடிகை ஆல்யா நின்றிருந்தார். அவர் அணிந்திருந்த நீளமான ஆடை தரையில் சரிந்து கிடந்தது. அந்த அடையை கவனிக்காமல் அக்ஷய்குமார் மிதித்தபடி நின்றிருந்தார். இதனால் ஆல்யாவால் சில நிமிடங்கள் நகரமுடியவில்லை. ஆனால், அக்ஷய்குமார் அந்த ஆடையில் நின்றபடி மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது விமர்சனம் குவிந்து வருகிறது.
Added article
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’தலைவர் 171’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்தது.இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்னால் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் ஏப்ரல் 2 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் ஸ்டைலிஷ் ஆக கையில் விலங்குடன் இருப்பதை பார்க்கும் போது இந்த படத்தில் ஏதோ வித்தியாசமாக லோகேஷ் கனகராஜ் கூற வருகிறார் என்பது மட்டும் புரிய வருகிறது.
Added article
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் முதல் பாகத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். சினிமாவில் நடிப்பதை தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய ஊர்மிளா கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அதன்பின்னர், 2020 ஆம் ஆண்டு சிவசேனா கட்சியில் இணைந்தார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் நடிகை கங்கனா ரனாவத்தை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த கங்கனா ரனாவத், என்னைப் பற்றி ஊர்மிளா பேசியதைப் பார்த்தேன். தேர்தலில் போட்டியிடுவது அவ்வளவு சிரமமில்லை. ஊர்மிளா ஒரு வகையில் ஆபாச நடிகை தான். அவரது நடிப்பு திறனுக்காக அவர் அறியப்படவில்லை. அவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும்போது எனக்குக் கிடைக்காதா? என்று தெரிவித்தார். சமீபத்தில் கங்கனா ரணாவத் பாஜக சார்பில் இமாச்சர பிரதேசத்தின் மண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சமீபத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாலர் சுப்ரியா ஸ்ரீனேட்டின் தன் வலைதள பக்கத்தில் கங்கனா ரணாவத் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையானது. இதற்கு கங்கனா கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில்தான் கங்கனா ரனாவத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஊர்மிளா பற்றி பேசிய வீடியோவும் பரவி வருகிறது. இதற்கு கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆபாச நட்சத்திரம், ஆபாச நடிகை என்பது இழிவான சொல்லா. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஆபாச நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் மரியாதை பற்றி சன்னிலியோனிடம் கேளுங்கள். நான் எதையும் நியாயப்படுத்தவில்லை, கவர்ச்சி பெண் ஷூலா கி ஜவானி போன்ற வார்தைகளால் நடிகைகளுக்கு ஏற்புடையதாக இருந்தால் இதை ஏன் இழிவாக பார்க்க வேண்டும்? எந்த தனிப்பட்ட விதத்திலும் ஊர்மிளா மடோன்கரை நான் அவமதிக்க வேண்டும் என்று எண்ணவில்லை என்றார்.
Added a news
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி ஆனந்த் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் நான்காம் தேதி நீட்டித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார். இதன்மூலம் 30 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Added a news
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இதில் குளறுபடி இருப்பதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவையில் அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் கூறியதாவது: Indian Non Judical பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்காக India Court Free பத்திரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.ஐ.எம்-ல் படித்ததாக கூறும் அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை. மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
Added a news
உலகின் முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டெல் நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு 6650 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா வைரஸ் காலகட்டத்தில் கூகுள், மைக்ரோசாப்ட் உட்பட பல பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது என்பதும் சின்ன சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட பணி நீக்க நடவடிக்கையை எடுத்தது .ஆனால் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி விட்டதை அடுத்து ஒரு சில நிறுவனங்கள் அதிகமான ஊழியர்களை பணியில் அமர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை பெரிய நிறுவனங்கள் எடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சமீபத்தில் கூட பேபால் நிறுவனம் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது டெல் நிறுவனம் உலகம் முழுவதும் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வருவதாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது