• 1011
  • More

தமிழ்பூங்கா இணையதளத்தில் இணைந்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இடுகைகளை பதிவேற்றவும். புள்ளிகளை உருவாக்கி பரிசு பெறுங்கள்.

All gift are for Ontarian only

தமிழ்பூங்கா இணையதளத்தில் இணையுங்கள். உங்கள் பூத் தோட்டங்கள், காய்கறிகள், உங்கள் சுற்றுலா போன்றவற்றின் புகைப்படங்களை நீங்கள் பதிவு செய்யலாம் . தயவு செய்து புகைப்படங்கள் உங்களது சொந்தமாக இருக்க வேண்டும், மற்ற இணையதளங்களில் இருந்து பதிவு செய்ய வேண்டாம்.  (அதற்கான புள்ளிகளைப் பெற முடியாது.).

நீங்கள் பரிசு பெற முடியும்.

Tim Horton's gift cards $10.00 for 1000 points you need.

Car wash Cards from ESSO or Shell gas station - Full was card  $15.00 Dollars valuable.   1500 points you need.

Sarees-  $50.00 dollars Valuable for 2000 points you need. 

Join now,  we gift 200 points free now.  

All gift are for Ontarian only  - not others Province or Countries. Sorry for that. 

Every time you post anything. You can see the points on your points table- click on money bar to see. Top right side of the website.

Only one gift per person.  (sample: if you get Tom Card then you can get car wash or Saree. Only one time. We will add more gift.)

If you have any question you can post here.  We wll answer this page only. not email please.

Attachments
Replies (4)
·
Added a news
·
உலகம் முழுவதும் பெரும்பாலானோர் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் மேப்ஸ் தற்போது நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த பீட்டா வெர்ஷன் விரைவில் பயனாளர்களுக்கு பயனாளிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.இந்த ஆப்பிள் மேப்ஸ் என்பது கூகுள் மேப்ஸ்க்கு சவாலை தரும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மேப் பீட்டா பதிப்பை கூகுள் குரோம் மற்றும் ஆப்பிள் சபாரி பிரவுசரில் பயன்படுத்தலாம் என்றும் இப்போதைக்கு ஆங்கில மொழியில் மட்டும் பயன்படுத்த முடியும் என்றும் பின்னாளில் உலகம் முழுவதும் பல மொழிகளில் இது அறிமுகம் செய்யப்படும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமாக மேப்ஸ் இல்லை என்ற நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனமே ஆப்பிள் மேப்ஸ் என்ற அதிகாரப்பூர்வமான சொந்த மேப்பை வெளியிட்டுள்ளது.beta.maps.apple.com என்ற இணையதளத்தின் மூலம் ஆப்பிள் மேப்ஸை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கூகுள் மேப்பில் இருப்பது போலவே டிரைவிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உள்ளது என்றும் வரும் நாட்களில் இன்னும் சில புதிய அம்சங்கள் இதில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 83
·
Added article
·
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை துவங்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்தது.இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஷால், இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசனை உள்ளடக்கிய கூட்டு முடிவு என்பதும், அந்த நிதியானது தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த, மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, நலப்பணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி உள்ளிட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.திரையுலகில் நிறைய வேலை உள்ளது என்றும் அதில் முறையான கவனத்தை செலுத்துங்கள் என்றும் இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என தெரிவித்துள்ள அவர், இதற்கு முன் திரைப்படங்களை தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் ‘தயாரிப்பாளர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களே, முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள் என்று சவால் விடுத்துள்ளார். ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி யோசியுங்கள் என நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.
  • 83
·
Added article
·
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அந்த வகையில் உருவான திரைப்படம் தான் ‘போட்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.சுதந்திரத்திற்கு முன்பு அதாவது 1943 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் குண்டுகளை வீசும் போது அதிலிருந்து தப்பிக்க யோகி பாபு மற்றும் சிலர் படகில் கடலுக்குள் செல்கின்றனர். அப்போது ஏற்படும் அனுபவங்கள் சில சண்டைகள் பிரச்சனைகள் விபரீதங்கள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை.
  • 82
·
Added a post
·
விந்தணுக்கள் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்கள் கூறும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் சில உணவுகளை தவறாமல் எடுத்துக் கொண்டால் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பச்சை காய்கறிகள், கீரைகள் குறிப்பாக முருங்கைக்கீரை சாப்பிட்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும். அதே போல் பாதாம், பிஸ்தா, ஏலக்காய் ஆகியவையும் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் ஆகியவை சாப்பிட்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும்.காய்கறி பழங்கள் என எதுவாக இருந்தாலும் பச்சை மஞ்சள் ஆரஞ்சு நிற காய்கறி, பழ வகைகளை எடுத்துக் கொண்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும் .அதே போல் பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு இந்த உணவுகள் பயனளிக்கும். குறிப்பாக வாழைப்பழம் ஆரஞ்சு போன்ற பழங்களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும் சில நாட்களுக்கு முன்பு புரதம் கார்போஹைட்ரேட் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும்.
  • 85
·
Added a news
·
தமிழ்நாடு முழுவதும் குற்றவாளிகள், விசாரணை கைதிகளை அடைத்து வைக்க 9 மத்திய சிறைச்சாலைகள், 5 மகளிர் சிறைச்சாலைகள், 14 மாவட்ட சிறைச்சாலைகள், 106 கிளை சிறைச்சாலைகள் உள்ளன. இதில் பல சிறைச்சாலைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டவை. இதில் சில பழுதடைந்து பாதுகாப்பற்றதாக உள்ளது.இவ்வாறாக பழுதடைந்த நிலையிலும், போதிய வசதிகள் இல்லாமலும் உள்ள சிறைச்சாலைகளை மூட உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மதுராந்தகம், திருத்தணி, ஆரணி, போளூர், செய்யாறு, கீரனூர், மேட்டுப்பாளையம், ராசிபுரம், கடலூர், பரமத்தி வேலூர், மணப்பாறை, முசிறி, திருமயம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள 18 கிளைச் சிறைச்சாலைகளை மூடவும், அங்குள்ள கைதிகளை மாவட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றவும் சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.இந்த பழுதடைந்த சிறைச்சாலைகள் இடிக்கப்பட்டு புதிய கிளைச்சிறைச்சாலைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 88
·
Added a news
·
இலங்கையில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருக்கும் நிலையில் அவரது பதவி காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை அடுத்து செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இலங்கைக்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இலங்கை தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் ஏற்கனவே அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் அவரை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
  • 90
·
Added article
·
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இந்நிலையில்அவர் மொழி, பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் சட்னி சாம்பார் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். பிரபல ஓட்டல் நிறுவனம் ஒன்று கையேந்தி பவன் கடை வைத்திருக்கும் யோகி பாபுவிடம் அவரின் சட்னி ரெசிப்பி கேட்டு கூட்டு சேர முயற்சிப்பதும், அதற்கு யோகி பாபுவின் ரியாக்‌ஷன் என்ன என்பதுமே டீசரில் ஜாலி மூடில் இந்த தொடரில் சொல்லப்பட்டுள்ளது.இந்த தொடரின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் தற்போது இந்த சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
  • 87
·
Added a news
·
நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் செலுத்த முடியும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது000 
  • 145
·
Added a news
·
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான நீதி நடவடிக்கைகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தடுக்கப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளாரா என வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் நீதி நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்றவும் கைதுகளை தடுக்கவும் பலர் முயற்சித்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்மேலும் பொலிஸ் மா அதிபர் பதவியில் இல்லாவிட்டாலும் நீதித் திட்டம் நிறுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
  • 147
·
Added a news
·
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார்.அதன்படி பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானதும் அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்000
  • 150
·
Added a news
·
 இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.மேலும், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது00
  • 149
·
Added a post
·
ஆரோக்கியமான தென்னிந்திய உணவு என்று வரும்போது, விருப்பங்கள் மிக அதிகம். இருப்பினும், உப்புமா, இடியாப்பம், பொங்கல், உத்தப்பம், ஆப்பம் மற்றும் காய்கறி குண்டு ஆகியவை தென்னிந்திய காலை உணவின் பொதுவான சில உணவுகள்.தென்னிந்திய காலை உணவு செரிக்க எளிதானது மட்டுமல்ல, ஏராளமான ஊட்டச்சத்து நன்மைகளையும் கொண்டுள்ளது.இது நல்ல வளர்சிதை மாற்றத்திற்கும் பங்களிக்கிறது. மேலும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், வளர்சிதை மாற்ற நோய்க்குறி அல்லது கொமொர்பிடிட்டிகளைத் தடுக்கவும் உதவுகிறது.தென்னிந்திய உணவில் ஈடுபடும் பொருட்கள் மற்றும் நொதித்தல் செயல்முறை உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், மறைமுகமாக எடை இழப்புக்கு உதவுகிறது. உங்கள் குறிக்கோள் எடை இழப்பு அல்ல, ஆனால் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என்றால், தயாரிக்க எளிதான, சுவையான மற்றும் நிலையான, சிறந்த காலை உணவு விருப்பத்தை நீங்கள் கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று நாங்கள் பந்தயம் கட்டுகிறோம்.இட்லி, தோசை மற்றும் உத்தப்பம் போன்ற பல தென்னிந்திய உணவுகளின் அடித்தளம் அரிசி மற்றும் பருப்பு – பொருத்தமான ஜோடி. அரிசி உடலுக்கு அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகிறது. இது உங்கள் நாளைத் தொடங்கத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.பயறு, மறுபுறம், தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும், இது தசை பழுது மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த கலவையானது புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் சீரான உட்கொள்ளலை உறுதி செய்கிறது. இது ஒரு சிறந்த காலை உணவாக அமைகிறது.தென்னிந்திய உணவு வகைகளின் ஒரு தனித்துவமான அம்சம் நொதித்தல் செயல்முறை ஆகும். இட்லி, தோசை போன்ற உணவுகள் இரவு முழுவதும் புளித்த மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. புளித்த உணவுகள் புரோபயாடிக்குகளாக செயல்படுகின்றன. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கின்றன. இது செரிமானத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.மஞ்சள், சீரகம், கடுகு விதைகள் மற்றும் பெருங்காயம் ஆகியவை தென்னிந்திய சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் சில. இந்த மசாலாப் பொருட்கள் வெறுமனே சுவையை அதிகரிப்பவை மட்டுமல்ல; அவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுடன் வருகின்றன. உதாரணமாக, மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. சீரகம் மற்றும் பெருங்காயம் செரிமானத்திற்கு உதவும், அதே நேரத்தில் கடுகு விதைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்.தென்னிந்திய காலை உணவில் பெரும்பாலும் பலவிதமான காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் அடங்கும், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன. செரிமான ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து அவசியம் மற்றும் இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவும்.ஆவியில் வேகவைத்தல் மற்றும் வதக்குதல் ஆகியவை விருப்பமான சமையல் முறைகள், இட்லி மற்றும் உப்புமா போன்ற உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கும். சமையலுக்கான இந்த அணுகுமுறை பொருட்களின் ஊட்டச்சத்து ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறது. அதே நேரத்தில் உணவு செரிக்க எளிதானது என்பதை உறுதி செய்கிறது.தென்னிந்திய உணவு வகைகளில் புளி, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் பயன்பாடு ஆக்சிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்களின் கூடுதல் ஊக்கத்தை வழங்குகிறது. இந்த பொருட்கள் உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றனநாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. தேங்காய், குறிப்பாக, நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (எம்.சி.டி) நிறைந்துள்ளது. இவை ஆற்றல் அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை.தென்னிந்திய காலை உணவு உணவுகள் குறைந்த கலோரி விருப்பங்களின் கலவையை கூடுதல் சுவையுடன் வழங்குகின்றன. இவை எடை இழப்பு அல்லது பராமரிப்புக்கு ஏற்றதாக அமைகின்றன. தென்னிந்திய காலை உணவுப் பொருட்களின் தனிச்சிறப்புகளில் ஒன்று அவற்றின் நொதித்தல் செயல்முறை ஆகும். நொதித்தல் ஊட்டச்சத்துக்களின் உயிர் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துகிறது. இந்த உணவுகள் ஜீரணிக்க எளிதானது மட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.கூடுதலாக, இந்த காலை உணவு விருப்பங்கள் முக்கியமாக கொழுப்பு மற்றும் கலோரிகளில் குறைவாக உள்ளன. ஆனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம். இது எடை மேலாண்மை மற்றும் எடை இழப்புக்கு உதவும் சீரான உணவை வழங்குகிறது. உதாரணமாக, ராகி தோசை மற்றும் ஓட்ஸ் உத்தப்பம் போன்ற உணவுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை வழங்குகின்றன. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும் கூர்முனை மற்றும் செயலிழப்புகளைத் தடுக்கிறது.
  • 165
·
Added a post
·
கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்க கூடாது. சொல்லப்படும் பொருள்:கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார கூடாது.உண்மையான விளக்கம்:கப்பல் விடும் அளவிற்கு செல்வம் இருந்து, பின் கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னமிடுதல் - திருட்டு (கன்னத்தில் கை ) கூடாது.
  • 246
·
Added a video
·
A person brings the e-bike battery into the lift. When the lift closes, the electro-charge of the battery turns the whole lift into a magnetic battery. Be careful and share with family and friends !!
  • 243
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆடி மாதம் 10 ஆம் தேதி மேஷம் -ராசி: வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். பிறரை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவைக்கேற்ப வரவுகள் இருக்கும். சுப காரிய பணிகளில் விவேகம் வேண்டும். மறதியால் சில செயல்களில் தாமதம் ஏற்படும். சோர்வு மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை ரிஷபம் ராசி: பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சாதகமாகும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்மிதுனம் -ராசி: குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். தவறிய முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். செலவுகளில் தன்மைகளை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சாதனை வெளிப்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்புகடகம் -ராசி: நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனை விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் வேண்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேம்படும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுசிம்மம் -ராசி:எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோக ரீதியாக அலைச்சல்கள் ஏற்படும். அரசு வகையில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை கன்னி -ராசி: நண்பர்களின் சந்திப்புகள் மகிழ்ச்சியை தரும். பிள்ளைகளின் நினைவாற்றல் மேம்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு துலாம் -ராசி: எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். உத்தியோகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : கருநீலம் விருச்சிகம்- ராசி: வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைகள் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் தனுசு -ராசி: புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதளவில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்மகரம் -ராசி:நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்குறுதி அளிப்பதில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைகும்பம் –ராசி:குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வியில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உணவு துறைகளில் சாதகமான சூழல் அமையும். சாதுரியமான செயல்பாடுகளால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தன விஷயங்களில் நிதானம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்மீனம் -ராசி: மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான வரவுகளை பற்றிய எண்ணங்கள் மேம்படும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை தரும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 256
குரோதி வருடம் ஆடி மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 26.7.2024சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 06.10 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று இரவு 07.00 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.‍https://tamilpoonga.com/s/bx_posts_photos/pkt6yex6utxpsnivxfuadc9ixmfyrzmh.jpg
  • 267
·
Added a post
·
மனைவி இறக்கும்போது, அவருக்கு வயது 45 இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால்அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டுச் சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை . அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பதுஎனக்கு போதும். அவனுக்காகப் வாழ போகிறேன். இன்னொரு துணை எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.வருடங்கள் உருண்டோடியது. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும் மகனிடம் எழுதி கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டார்.ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம் சீக்கிரமாக காலை உணவு உண்ண, மருமகளிடம் ரொட்டியில் தடவ வெண்ணெய் தருமாறு கேட்டார். மருமகளோ , வெண்ணை தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள். மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார, தகப்பன் வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார். மகன் உணவருந்தும் போது, மேஜையில் வெண்ணை கொண்டு வந்து வைத்தாள் மனைவி. ஒன்றும் பேசாமல் , மகன் தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான். அந்த வெண்ணையை பற்றிய சிந்தனையே அந்நாள் முழுதும் அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது.மறுநாள் காலையில் தன் தகப்பனைஅழைத்தான். அப்பா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான். ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க...நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம். என் பெயரில் எழுதிய அனைத்தையும் , உங்கள் பெயருக்கே மாற்றிக் கொள்ளுங்கள். இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன். மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன்,என்றான்..ஏன் இந்த திடீர் முடிவு?இல்லை அப்பா உங்கள் மதிப்பு என்னவென்று என் மனைவிக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சாதாரண வெண்ணைக்காக நீங்கள் கையேந்தும் நிலை வரக்கூடாது. ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை அவள் உணர வேண்டும். மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்...பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ATM கார்டாக இருக்கலாம்.. ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும் என்பதே இந்தக் கதையின் கருப்பொருள்.பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை.
  • 271
ஆடி தள்ளுபடி
  • 269
·
Added a post
·
அது டாட்டாவின் அலுவலகம்.டாட்டா எதேச்சையாக கேமராவில் ஒரு நபரை பார்க்கிறார். உதவியாளரை அழைத்து... யார் இந்த பையன் ஏன் உட்கார்ந்திருக்கிறார்? என கேட்கிறார்.அவர் உங்கள் அப்பாயிண்மெண்ட் கேட்டு ஒரு மாதமாக தினமும் வந்து கொண்டிருக்கிறார், என்றார் உதவியாளர். அப்படியா அடுத்த வாரம் திங்கள் காலை 9-9.15 வரை. கால்மணி நேரம் அப்பாயிண்ட்மெண்ட் கூறி விடுங்கள் என்கிறார். டாட்டா வுக்கு ஒவ்வொரு நொடியும் பணம். நேரத்தை வீணாக்க மாட்டார். அந்த இளைஞனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் தெரிவிக்கப்பட்டது. கொடுத்தது கால் மணி நேரம். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுவே எனக்கு அதிகமான நேரம் என்ற இளைஞனை ஆச்சர்யமாக பார்த்தனர்.குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. காலை 8.30 க்கு அந்த இளைஞன் உள்ளே இருந்தான். 9 மணிக்கு அனுமதிக்கப்படுகிறான். இளைஞன்: "குட் & க்ரேட் மார்னிங் சார். "டாட்டா: .."மார்னிங். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தாய்...? உடனே சொல் எனக்கு நேரமில்லை".இளைஞன்: "ஒரு Business விசயமாக உங்களிடம் பேச வேண்டும்."டாட்டா: "என்ன Business ?"இளைஞன்: "நீங்கள் உப்பு விற்க வேண்டும். "டாட்டா: "தம்பி என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கிறது.... எவ்வளவு பெரிய தொழில்களை செய்து கொண்டு உள்ளேன் என்னை உப்ப விற்க சொல்லும் அளவு அது பெரிய பொருளா...?"இளைஞன்: "சார். உப்பு சிறிய பொருள் தான். ஆனால் தினமும் பயன்படக்கூடியது. அது இல்லாமல் நீங்களோ நானோ உண்ணவே முடியாது. தினமும் பயன். அடிக்கடி வாங்கப்படக்கூடியது. நமக்கு இவ்வளவுக்கு உப்பு கிடைக்கிறது. நாம் இவ்வளவுக்கு விற்கலாம். உங்கள் டாட்டா ப்ராண்டு என்றால் மக்கள் நம்பிக்கையோடு வாங்குவார்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் இங்கு வந்தேன். டாட்டா இரண்டு நிமிடம் யோசிக்கிறார். பின் இளைஞனிடம்... "சரி வெளியே போ. காண்ட்ராகட்டில் சைன் பண்ணி விட்டு, அட்வான்ஸ் பெற்றுக்கொள். நாளை மறுநாள் முதல் நம் உப்பு வெளிவர வேண்டும்."ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது பாருங்கள். இரண்டு மணி நேரத்தில் ஒரு மிகப்பெரிய ப்ராஜக்ட்டை அதன் லாபத்தை டாட்டாவால் யூகிக்க முடிந்திருக்கறது. அதுதான் வெற்றியின் ரகசியம். எந்த ஒரு முடிவையும் உடனே காலம் தாழ்த்தாமல் எடுப்பது. ஒரு வேளை அந்த இளைஞனின் வார்த்தையை நிராகரித்திருந்தால் அவன் வேறு நிறுவனத்தை நாடியிருப்பான். வாய்ப்பு ஒரு முறை நம்மை தேடிவரும். அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது.புரிந்தவர்களுக்கு இது பாடம்.... புரியாதவர்களுக்கு இது வெறும் கதை..... புரிந்தவர்கள் வெற்றி பெறுங்கள்.
  • 272
Good Morning...பண்பும் ,வளர்ச்சியும், வெற்றியும் , பெற வேண்டும் என்றால்...மனம் தளராத தொடர் முயற்சியும் தொடர் போராட்டமும் பணிவும் இருக்க வேண்டும்.நலம் பல பெருகவும், வளம் பல உயரவும் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் .
  • 270
  • 272
  • 273
·
Added article
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய நிலையில் அடுத்தடுத்து வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் குடிநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக குடி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த வாழ்க்கையை தான் மேற்கொள்வதற்கு தனக்கு படிப்பு தான் முக்கியமாக உதவியதாகவும் முத்துக்காளை முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இளங்கலையில் அடுத்தடுத்து மூன்று டிகிரிகளை நிறைவு செய்துள்ளார் முத்துக்காளை. தன்னுடைய 58வது வயதில் 3வது டிகிரியை இவர் முடித்துள்ளார். இந்நிலையில் எதை இழந்தாலும் கல்வியை இழக்காதீர்கள் என்று நண்பர் ஒருவர் கூறியதை கேட்டு தான் குடியிலிருந்து மீண்டு படிப்பில் கவனம் செலுத்தியதாக முத்துக்காளை முன்னதாக தெரிவித்துள்ளார். மேலும் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க ஆசைப்பட்டதாகவும் இந்த வயதில் படிப்பதை பார்த்து தன்னை பலரும் கிண்டல் செய்தனர் என்றும் கூறியிருந்த முத்துக்காளை, தனக்கு கோடிக்கணக்கில் சொத்து இருந்திருந்தாலும் தான் சந்தோஷப்பட்டு இருக்க மாட்டேன் என்றும் தனக்கு கிடைத்த படிப்பு தான் தன்னை மிகப் பெரிய அளவில் உற்சாகமும் சந்தோஷமும் கொள்ள செய்தது என்றும் தெரிவித்திருந்தார்.மிகப்பெரிய அளவில் குடியால் பாதிக்கப்பட்டிருந்த முத்துக்காளை கடந்த ஆறு ஆண்டுகளாக குடி இல்லாத வாழ்க்கையை நிறைவு செய்ததை பாராட்டி அவருக்கு ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பு பாராட்டு விழா ஒன்றை நடத்தியுள்ளது. அதில் வசனகர்த்தா மற்றும் இயக்குநர் லியாகத் அலிகான் கலந்துகொண்டு நடிகர் முத்துக்காளைக்கு மெடல் அணிவித்து பாராட்டி வாழ்த்தியுள்ளார். குடியிலிருந்து மீண்டு அனைவரை போலவும் சகஜமான வாழ்க்கை வாழ்வதற்கு தனக்கு படிப்பு தான் முக்கியமான காரணமாக அமைந்ததாக முத்துக்காளை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
  • 355
·
Added article
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய படமாக மட்டுமில்லாமல் பெண்களுக்கு எதிரான அத்தனை திணிப்புகளையும் பற்றி இந்த படம் பேசுகிறது என நைஸாக அந்த சர்ச்சையில் இருந்து கழண்டுக் கொள்ளும் விதமாகவே தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பேசி வருகிறார்.நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் பற்றிய கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.ஆனால், அவர் அங்கேயும் விஜய் பேசிய வசனத்தையே மேற்கோள் காட்டி பேசியிருப்பதை நெட்டிசன்கள் மீண்டும் சோஷியல் மீடியாவில் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.பாராட்டுக்களை எப்படி சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல விமர்சனங்களையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும். ஆனால், விமர்சனங்களை கடந்து பர்சனல் மேட்டர்களில் தலையிட்டு, குடும்பத்தினர் பற்றியும் நடக்காத விஷயங்களை நடந்தது போல கதை கட்டி காசிப் பேசுபவர்கள் பற்றி என் ரெண்டு காதுக்குள் போட்டுக் கொள்ளவே மாட்டேன் என்றார். மேலும், தளபதி விஜய் சொன்னது போல, உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகி விடும்னு சொன்ன வீடியோவை பார்த்தேன். அதுதான் இதற்கு சரியான பதில் என்றார் கீர்த்தி சுரேஷ்.
  • 354
·
Added article
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய் டிவி சீரியலான நம்ம வீட்டு பொண்ணு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் 478 எபிசோட்களுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் நடிகையாக அஷ்வினி அனந்திதா நடித்தார்.அஷ்வினி அனந்திதா நம்ம வீட்டு பொண்ணு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் மாடலிங் மூலம் நடிகையாக வாழ்க்கையை தொடங்கினார். நம்ம வீடு பொண்ணு சீரியல் முடிவடைந்த நிலையில் இவர் விஜய் டிவியின் மற்றொரு சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். காற்றுக்கென்ன வேலி சீரியலில் துணை கதாபாத்திரமாக வந்த அஸ்வினிக்கு தற்போது விஜய் டிவியில் முக்கிய வேடத்தில் சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் மயில்சாமி மகனுடன் இந்த சீரியலில் இணைந்து நடிக்கிறார். அஸ்வினி முதலில் கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் சில கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார். பியாட் ஹட்கிர் ஹல்லி லைஃப் சீசன் 3, டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் பல நிகழ்ச்சிகளில் அவர் போட்டியிட்டுள்ளார்.ஹல்லியய்தா பியாடேகே பந்தா சீசன் 2 இல் அவர் இறுதிப் போட்டியாளரானார். ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டுப் பொண்ணு என்ற தமிழ் சீரியலில் அஷ்வினி, மீனாட்சியாக முக்கிய வேடத்தில் நடித்தார். அஷ்வினி மாடல் என்பதால் அடிக்கடி போட்டோஷூட்கள் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் சுற்றுலாக்கள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அங்கு சென்று புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.அஷ்வினி தற்போது விஜய் டிவியில் தங்கமகள் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது பிறந்தநாளை மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் கொண்டாடும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
  • 356
·
Added article
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படமானது, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படம் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், ரிலீஸ் எப்போது என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இதை பூர்த்திசெய்யும் வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் அடுத்தமாதம் திரைக்கு வர உள்ளது. அடுத்த மாதம் 15 ம் திகதி, சுதந்திர தினத்தன்று இப்படம் திரைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 355
·
Added a news
பிரிட்டனின் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸ்உத்தியோகத்தர்கள் பாக்கிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்குவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமூக ஊடகங்களில் பரவலாகிவரும் வீடியோவில் பொலிஸ் உத்தியோகத்தர்ஒருவர் நபர் ஒருவரின் தலையில் காலால் மிதிக்கின்றார். தரையில் நபர் ஒருவர் காணப்படுவதையும் இரு பொலிஸார் அவரை நோக்கி டேசரை நீட்டுவதையும் காண்பிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதேவீடியோவில் நபர் ஒருவரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தரையில் வீழ்த்துவதையும் கைகளை பின்பக்கமாக இழுத்து வைத்திருப்பதையும் ஒருவர் அந்த நபரை காலால் உதைப்பதையும் காணமுடிகின்றது.இந்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து பிரிட்டனில் பொலிஸார் குறித்து சர்ச்சையும் மூண்டுள்ளது. அதேவேளை பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சம்பவங்கள் இடம்பெற்றன பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தை அடுத்து வீடியோவில் காணப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்னணி பணிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளார். இந்த தாக்குதலிற்கு இனவெறியே காரணம் என மெட்ரோபொலிட்டன் பொலிசின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியான டல் பாபு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 357
·
Added a news
கனடாவின் அல்பர்ட்டாவின் மாகாணத்தில் நிலவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. காட்டுத்தீ மோசமான நிலையை அடைந்துள்ளதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. அல்பர்ட்டாவின் 176 இடங்களில் காட்டுத்தீ பரவுகை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாகாணம் முழுவதிலும் காட்டுத்தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அல்பர்ட்டா மாகாண பொது பாதுகாப்பு அமைச்சர் மைக் டெலிஸ் தெரிவித்துள்ளார். காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவிகளை வழங்குமாறு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். கனடிய ராணுவ படையினரை உதவிக்கு அனுப்புமாறும் ராணுவ வளங்களை தந்து உதவுமாறும் கோரியதாக அவர் தெரிவித்துள்ளார்.வடக்கு அல்பர்ட்டா பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, கட்டுக்கு அடங்காத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  
  • 365