தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் தீவிர ஆக்ஷன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த பயிற்சியின் போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் தீவிர ஆக்ஷன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த பயிற்சியின் போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.நடிகை பூஜா ஹெக்டே மும்பை பாந்த்ரா பகுதியில் கடற்கரையை பார்த்தபடி, ரூ. 45 கோடி மதிப்புள்ள ஆடம்பர் வீட்டை புதிதாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 4000 சதுர அடி என்றும் இந்த வீட்டில் நீச்சல் குளம், ஜிம், தியேட்டர் என பல விஷயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ 45 கோடி என கூறப்படுகிறது. நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் விரைவில் குடியே இருக்கிறார் பூஜா. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் அட்லி ஆகியோரும் மும்பையில் புது வீடு வாங்கி குடியேறி வரும் நிலையில், தற்போது பூஜா ஹெக்டேவும் மும்பையில் புது வீட்டை வாங்கி உள்ளார். இவர் நடித்து வரும் படங்கள் அனைத்து தோல்விப்படமாக இருக்கும் நிலையில், தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துக்கொண்ட இவர், எப்படி 45 கோடிக்கு மும்பையில் வீடு வாங்கினார் என நெட்டிசன்கள் குதர்க்கமாக கேட்டு வருகின்றனர்.