- · 17 friends
-
S

ராணி எலிசபெத்... அரச குடும்பத்தின் தலைவி அவருக்குக் கொடுக்கப் பட்ட கெளரவங்கள்
இங்கிலாந்து மக்களால் விரும்பப்படும் அரசி, உலக மக்களின் மதிப்பைப் பெற்றவர்
அவருக்குள்ள அதிகாரங்கள் (power) தெரிந்தால் வியப்பாக இருப்பதோடு கேட்க சுவையானதும் கூட.ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.இவை அவருக்குக் கொடுக்கப் பட்ட கெளரவங்கள்
உலகின் மிகப் பெரிய நில உரிமையாளர் இவதான். அரசியின் பெயரில் 6.6 பில்லியன் ஏக்கர் காணி உள்ளதாம்.
மொத்தம் 16 நாடுகளுக்கு சர்வ அதிகாரம் பொருந்திய ஏகாதிபதியாக உள்ளார்.
அவவின் அதிகாரத்தின் கீழ் உள்ளதில் குறிப்பிடத்தக்கது...இங்கிலாந்தின் கடல்பரப் பில் 3 மைல்களுக்குள் உள்ள டொல்பின்கள், திமிங்கிலங்கள் அவரால் ஆளப்படுகிறது.
லண்டன் தேம்ஸ் நதியில் இருக்கும் அன்னப் பறவைகள் அவருக்குச் சொந்தமானவை.
ஓட்டுனர் சாரதி அனுமதிப் பத்திரம் (licence) அரசியின் பெயரால் வழங்கப் படுவதால், அவருக்கு வாகனம் ஓடுவதற்கு அனுமதிப் பத்திரம் தேவையில்லை.
அரசி எந்த நாட்டுக்கும் பிரயாணப் செய்வதற்கும் passport தேவையில்லை.
அவவுக்கு இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடப் படுகின்றன. அரசியின் உண்மையான பிறந்தநாள் ஏப்பிரல் 21 உம்,
அதிகாரபூர்வ பிறந்த தினம் ஜூன் மாதம் இரண்டாவது சனிக்கிழமையும் கொண்டாடப் படுகிறது.
அரசியின் குடும்பத்திற்கு மட்டும் பிரத்தியேக ATM பகிங்காம் அரண்மனை யின் உள்ளே அமைந்துள்ளது.
பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும்,தீர்மானங்களும் அரசியின் ஒப்புதல் (கையொப்பம்) இல்லாமல் நிறைவேற்ற முடியாது.
Queen Elizabeth II இவரே அவுஸ்திரேலி யாவின் அரசியுமாவார்.
அரசிக்கு அவுஸ்திரேலிய அரசை தடை செய்து நீக்கும் அதிகாரம் உண்டு.
இங்கிலாந்தின் பிரதமரையோ, மந்திரி களையோ பதவியில் இருந்து நீக்கவும், பதவியில் அமர்த்தவும் அரசிக்கே அதிகாரம் உண்டு..
முப்படைகளின் தலைமைப் பொறுப்பை அரசியே நிர்வகிக்கிறார்.
அவரை வழக்குகளில் பதிவு செய்ய முடியாது. அத்துடன் கைது செய்யவோ முடியாது.
இந்கிலாந்தின் தேவாலயத்தின் தலைவர் இவரே. (Head of the church of England)
அரசி நாட்டிற்கு வருவாய்க் கட்டணம் ( Income tax)கட்டத்தேவையில்லை.ஆனால் அவ தானாக முன் வந்து 1992 இலிருந்துவருவாய் கட்டணம் கட்டுகிறா என்பது குறிப்பிடத்தக்கது.
இவ ஒருவருக்கே இன்னொரு நாட்டுடன் போர் தொடுக்கும் அதிகார பூர்வ அறிவிப்பை
அறிவிக்க முடியும்.
அரசியாக வாழ்வதிலும் சிலவேளை சலிப்பு தருவதாக இருக்கும் ஆதலால் அவவிக்கு பிரத்தியேக கவிஞர்கள் உண்டு.
மிகப் பெரிய அதிகாரம் உள்ளவருக்கு, மிகப் பெரிய பொறுப்புகளும் கூடவே இருக்கும்.
அம்மணி இன்றுவரை தனக்குள்ள அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாது மிக நேர்மையாக தன் கட்டுக்குள் வைத்திருப்பதால்தான்........ இன்றும் உலக மக்களால் மிக மரியாதையாக வாழ்த்தப் படுகிறார் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது உறவுகளே...!!
#படித்ததில் பகிர்ந்தது

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·